புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_m10பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 04, 2019 3:45 pm

பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் Puo9Bs4OQ3qbwhh7aJnY+15a

இந்த உலகம் பேரன்பு உள்ளவர்களுக்கானது.
முதன் முதலாக  என்னிடம் பேரன்பு செலுத்தியவர்கள்
என்னுடைய அப்பா, அம்மா.

அவர்களால்தான் என்னால் சினிமா பாடலாசிரியராக
வர முடிந்தது. இப்போது என் வாழ்க்கையை முழுமையாக
வாழக் காரணமாக இருந்தவர்கள் என் பெற்றோர்.

ஏன்னா, திறனாளிகளே இந்த உலகத்தில் போராடிக்
கொண்டிருக்கும் போது என்னைப் போன்ற மாற்றுத்
திறனாளிகளின் போராட்டம் எத்தகையது  என்று
சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

அவ்வகையில் என் பெற்றோர் என்னை உதாசீனம்
பண்ணாமல் நன்றாகப் படிக்க வைத்தார்கள். நான்
வாங்கிய பட்டம்தான் சினிமாவில் பாட்டு எழுத
உதவியிருக்கிறது.

‘வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற
‘காதல் வந்தாலே மனசு ஏங்கித் தவிக்கும்' பாடல் தான்
என்னுடைய முதல் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில்
வெளிவந்தது. ‘வல்லவன்’ என்னுடைய முதல் படமாக
இருந்தாலும் என்னை  அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்
சென்ற படம் ‘பேரன்பு’.

அந்தப் படத்தில் நான் எழுதிய ‘செத்துப் போச்சி மனசு...'
என்ற பாடல் ஜனரஞ்சகமான, கவித்துவமான பாடலாசிரியர்
என்ற அடையாளத்தைக் கொடுத்தது.

என்னுடைய வாழ்க்கையில் பேரன்பு செலுத்தியவர்கள்
ஏராளம். சிம்பு, யுவன் இருவரும் சம்திங்  ஸ்பெஷல்.
இவர்களால் தான் நான் பாடலாசிரியராக வர முடிந்தது.

‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் ‘எல்லோருக்கும் வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்’ என்ற பாடல். கார்த்தி சார் நீண்ட
நாள் பழக்கம். அந்த அன்பின் காரணமாக ‘அலெக்ஸ்
பாண்டியன்’ படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வாங்கிக்
கொடுத்தார்.

இயக்குநர் சுராஜ், இசையமைப்பாளர் தேவி பிரசாத்
ஆகியோரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அந்தப் பாடல்
பட்டிதொட்டியெல்லாம் என்னைக் கொண்டு போய் சேர்த்தது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 04, 2019 3:48 pm

பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன் R4pCX2ZpToarXVmmnXcP+15a

தொடர்ந்து ‘டமால் டுமீல்’, ‘வா டீல்’, ‘தகராறு’,
‘சென்னை -2’ உட்பட ஏராளமான படங்களில்
பாடல்கள் எழுதினேன். தற்போது பிரேம்ஜி இசையில்
‘பார்ட்டி’, ஜி.வி.பிரகாஷ் இசையில் ஜெயில், இமான்
இசையில் ‘ஏஞ்சல்’ உட்பட ஏராளமான படங்களில்
பாடல் எழுதி வருகிறேன்.

இது எப்படி சாத்தியம் என்றால்... பேரன்புள்ளவர்கள்
என்னை சூழ்ந்திருப்பதால்தான் பேரன்பு உள்ள
பாடலாசிரியராக வலம் வர முடிகிறது.

சிம்பு எனக்கு வாய்ப்பு கொடுக்கும் போது சொன்ன
வார்த்தை... ‘நான் உனக்கு செய்ற உதவியை
நீ பிறருக்கு செய்துவிடு’ என்றார். என் மனசாட்சிக்கு
தெரியும். என்னளவில் அந்த வாக்கை நிறைவேற்றி
வருகிறேன்.

ஏன்னா, ஒருவரை ஒருவர் ஆதரித்தால்தான் சினிமா
அடுத்த கட்டத்துக்கு போக முடியும். நான் மட்டுமே
இருக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தால்
சினிமா அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது.

சினிமாவில் அன்பில்லாதவர்கள் அதிகம் என்று
சொல்வார்கள். கடவுள் கருணையால் நான் அந்த
மாதிரி மனிதர்களை சந்திக்கவில்லை.

வாழ்க்கை என்பது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி.
நாம் என்ன காண்பிக்கிறோமோ அதைத் தான் அது
நமக்கு காண்பிக்கும். நான் பிறருடைய வளர்ச்சியைப்
பற்றி யோசிப்பதில்லை.

என்னுடைய வேலையில் கவனம் இருந்தால் போதும்
என்ற மனநிலையில் வேலை செய்கிறேன். அந்த
வகையில் அன்பில்லாதவர்களை சந்திக்கக்கூடாது
என்பது தான் என்னுடய பிரார்த்தனை.

அடுத்து சினிமாவில் அன்பு எப்படி புரிந்துகொள்ளப்
படுகிறது என்றால் ஒருவரிடம் பேசும்போது இவர்
வாய்ப்புக்காக நம்மிடம் பேசுகிறார் என்ற
கண்ணோட்டம் உருவாவதை தவிர்க்க முடிவதில்லை.

அது கொஞ்சம் மனவருத்தமான செயல். அதுக்காகவே
சிலரிடம் பேசும் போது வாய்ப்புக்காக பேசவில்லை
என்று சொல்லிவிட்டு பேச்சை ஆரம்பிப்பேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 04, 2019 3:55 pm



நான் சொல்லும் விஷயத்தை உண்மையான அன்பாக பார்க்கும் நண்பர்கள் தான் என்னிடம் இருக்கிறார்கள். அதே சமயம் பாடலாசிரியர்களின் நிலைமையை யோசிக்க வேண்டும். இயக்குநர், இசையமைப் பாளர்களைத் தவிர நாங்கள் யாரிடம் போய் வாய்ப்பு கேட்க முடியும்.

என்னுடைய தளம் இயக்குநர், இசையமைப்பாளருடன் மட்டுமே. இயக்குநரின் தளம் நடிகர், ஒளிப்பதிவாளர் என்று இருக்கும். அப்படி... பாடலாசிரியர் ஒரு இயக்குநரிடமோ, இசையமைப்பாளரிடமோ பேசுவதை தவறாக நினைக்க முடியாது. அப்படி நினைத்தால் அங்கு அன்பு இருக்காது.

என்னை நெகிழ வைத்த அன்பு என்றால் ‘வல்லவன்’ படத்தில் அறிமுக பாடலாசிரியர் என்ற டைட்டில் கார்டு. ஏன்னா, ஆடியன்ஸாக சினிமாவை பார்ப்பதற்கும் அந்த ஆடியன்ஸ் சினிமாவில் வேலை செய்துவிட்டு தன் பெயரை சினிமாவில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. த்ரிஷா மேடம் ‘நாயகி’ படத்தில் நான் எழுதிய பாடலை முதன் முதலாக அவருடைய சொந்தக்குரலில் பாடினார். இதுபோன்ற நிகழ்வுகளை அன்பின் பரிசாக பார்க்கிறேன்.

இந்த உலகத்தில் அன்பை வெளிப்படுத் பலவழிகள் உண்டு. ஒருவரிடம் அன்பாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களுக்கு வாட்ச், பேனா என்று சின்ன சின்ன பரிசு கொடுத்து அன்பை வெளிப்படுத்தலாம். அதுபோன்ற பரிசுகள் தருகிறவர்கள் என் வாழ்க்கையில் இருக்கிறார்கள்.

நானும் தருவேன். நாம் ஒருவர் மீது அன்பாக இருக்கிறோம் என்பதை அவர்கள் கொடுக்கும் அழைப்பை ஏற்று விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் சுக துக்கங்களில் பங்கு பெறும் போதும் அன்பு பலப்படும்.

சில வருடங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து அன்பு பாரிமாறி யிருக்கிறார்கள். இப்போது எல்லோரும் பிஸியாக இருப்பதால் அதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது. ஆனால் நம்மிடம் இருக்கும் செல்போனால் அவர்களை தொடர்புகொண்டு பேசலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். இப்படி அன்பை பகிர நிறைய வழிகள் வந்துவிட்டது.

நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்து அது பேரன்பா, பெயரிளவிலான அன்பா என்று தெரியும். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் நாம் பிறரிடம் எப்படி அன்பு காண்பிக்கிறோம் என்பதைப் பொறுத்தே பிறர் நம் மீது அன்பு காண்பிக்க முடியும்.

என்னிடம் அன்பு காண்பிக்கிறவர்களைப் பற்றிய பெரிய லிஸ்ட் இருக்கிறது. சிம்பு, யுவன், உதயநிதி, இமான், தமன், அனிரூத், இயக்குநர் ராம், த்ரிஷா, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.பி.செளத்ரி, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஞானவேலு எஸ்.ஆர்.பிரபு, பத்ரி கஸ்தூரி உட்பட ஏராளமானவர்கள் என் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள்.

நான் வியந்த அன்பு என்றால் ரஜினி, கமல் இருவருடைய அன்பைச் சொல்லலாம். கொள்கை ரீதியாக அவர்கள் பிரிந்து இருந்தாலும் நட்பை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்குள் மனக் கசப்பு இருந்ததில்லை. இன்றளவும் அன்பை ஒருவர் மீது ஒருவர் பொழிந்துகொண்டிருக்கிறார்கள். அதே போல் விஜய், அஜித் அன்பும் பெரிது.

சந்திரபாபு, எம்.எஸ்.விஸ்வநாதன் அன்பு பலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது. அவ்விருவரும் சிறந்த நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். சந்திரபாபு இறந்தவுடன் அவர் உடலை எம்.எஸ்.வி. ஐயா வீட்டில் வைத்த பிறகே கல்லறையில் அடக்கம் செய்தார்களாம்.

சமீபத்தில் நான் வியந்து பார்க்கும் அன்பை வெங்கட் பிரபு குழுவில் பார்க்க முடிந்தது. அந்தக் குழுவில் இருக்கிறவர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதவர்களாக ஒருவர் மீது ஒருவர் அன்பு காண்பிக்கிறார்கள்.

அன்பின் பரிமாணம் வெவ்வெறு சமயங்களில் வெவ்வெறு விதம் வெளிப்படும். சென்னை வெள்ளம் சமயத்தில் சாதி, மதம், இனம், மொழி கடந்து எல்லோரும் வரிந்து கட்டி அன்பு காண்பித்தார்கள். அன்பு எல்லா மதத்திலும் இருக்கிறது. மிருககுணம் உள்ளவராக இருந்தாலும் அவருக்குள்ளும் அன்பு இருக்கும். அன்பு அழிவதில்லை. ஒருவருக்குள் இருக்கும் அன்பை பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல் இருப்பதும் அவரவர் மனநிலை பொறுத்து அமைகிறது.

பிறர் நம் மீது அன்பு காண்பிக்க வேண்டும் என்று விரும்பினால் முதலில் நம்மிடத்தில் அந்த அன்பு பிரகாசமாக இருக்கணும். அப்படி இருந்தால்தான் மற்றவர் மீதும் அந்த அன்பு ஆக்கிரமிப்பு செய்து அவரும் ஜொலிப்பார். அன்புக்கு எல்லை இல்லை.

இந்த உலகத்தில் எல்லை இல்லாத ஒரே விஷயம் அன்பு மட்டுமே. சக மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என்று எல்லா உயிர்களிடமும் அன்பு காண்பிக்கலாம். அன்பு உள்ளங்களால் 80 படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன். இறைவன் அருளாலும் அன்புள்ளவர்களாலும் சதம் அடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அன்புக்கு நான் அடிமை.

தொகுப்பு : சுரேஷ் ராஜா \
வண்ணத்திரை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக