புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
251 Posts - 52%
heezulia
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
18 Posts - 4%
prajai
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
5 Posts - 1%
Barushree
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_m10அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2019 7:31 pm

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! 155969_thumb
-
துப்பாக்கி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில், "அவன் செத்த 14-வது நாள் அவன் தம்பி வந்துட்டாண்டா மிலிட்டரிக்கு!' என ஒரு வசனம் வருமே. அதேபோல நிஜத்தில், மகாராஷ்ட்ராவில் தந்தைக்கு விபத்து நடந்த அடுத்த நாளே அவரது 12 வயதான மகள் விவசாயத்துக்கு வந்து, இப்போது விருது வாங்கிச் சாதித்திருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லோன்வாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் தாவுந்த் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாகத் தனது திராட்சைத் தோட்டத்தைக் கவனிக்கப் போய்விட்டார்.

அவரின் மனைவி லதாவும் மருத்துவராக ஆசைப்பட்டார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக 12-ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டார். இருவரும் சமாதானம் செய்துகொண்டாலும், தன் பிள்ளைகளைப் படிக்கவைத்து, வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு வாழ்ந்து வந்தனர்.

என்னதான் திட்டங்கள் தீட்டினாலும் வாழ்க்கை எப்போதுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஆம், இவர்களின் மகளான ஜியோத்சனா (Jyotsna) இப்போது தந்தையின் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
-
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! 20190414_140606_15056
-
விருது வாங்கிய விவசாய பெண்
-------------------------------------------------------
1998-ம் ஆண்டு ஜியோத்சனாவுக்கு 6 வயது, அவரது தம்பிக்கு ஒரு வயது. அப்போது அவரின் தந்தை ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அவர் 7 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரின் மனைவி லதா குடும்பப் பொறுப்பையும் பண்ணைப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.

அப்போது லதாவுடன் சேர்ந்து ஜியோத்சனாவும் பண்ணையைக் கவனிக்க ஆரம்பித்தார். 7 மாதங்களுக்குப் பின்னர் அவரின் தந்தை மெல்ல நடக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், விஜய் தாவுந்த் பண்ணை வேலையைக் கவனிக்க வரும்போது அதிக சிரமப்பட்டார்.

அதனால் அவரின் மனைவி லதாவும் மகள் ஜியோத்சனாவும் பண்ணை வேலைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வந்தனர். ஜியோத்சனாவுக்கு 12 வயதாகும்போதே விவசாயத்தைப் பற்றி பெரும்பாலானவற்றை அறிந்து வைத்திருந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2019 7:32 pm

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! IMG-20190321-WA0033_15333
-
பள்ளிப்படிப்பின்போதே பண்ணையைக் கவனித்துக்கொண்டே படித்தார் ஜியோத்சனா. தேர்வு நேரங்களில்கூட பண்ணையில்தான் படிப்பார். தன் தாய் தனி ஆளாகக் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல்தான் பல நேரங்களில் விவசாய வேலைகளைத் தொடர்ந்திருக்கிறார்.

2005-ம் ஆண்டு விஜய்யால் நடக்க முடிந்தது. இப்போது முழுமையாக மனைவி மற்றும் மகளுக்கு ஓய்வு கொடுத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டார். அதன் பின்னர், ஜியோத்சனா கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்துவந்தார். அந்த நேரம், 2010-ம் ஆண்டு திராட்சை அறுவடை செய்ய தயாராக இருந்தது.

அப்போது லோன்வாடி பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால், விவசாயம் முற்றிலும் சேதத்தை மகசூலாகக் கொடுத்தது.

இந்த சமயத்தில் ஒருநாள் உரம் வாங்கச் சென்றார் விஜய். உரத்தை வாங்கிக்கொண்டு கடையின் மாடியில் இருந்து இறங்கினார். அப்போது கால்தடுக்கி மாடிப்படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார்.

இம்முறை அவரது கால் நிரந்தரமாக முடங்கிவிட்டது. இனி எழுந்து நடக்க முடியாத சூழல். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் மனைவியிடம் உரத்தைக் கொடுத்து தோட்டத்தில் தெளிக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர், மனைவி கணவரை கவனித்துக்கொள்ள நேர்கிறது.

அடுத்த நொடியே யோசிக்காமல் பண்ணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ஜியோத்சனா. கணினிப் பொறியாளராக விரும்பிய அவரின் மகள், பி.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார்.

அப்போதுதான் பண்ணைக்கு நேரம் ஒதுக்கி வேலை செய்ய முடியும்
என்பதுதான் அதற்குக் காரணம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2019 7:36 pm

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! IMG-20190321-WA0028_15164
-
லோன்வாடி ஒரு சிறிய கிராமம். ஜியோத்சனா கல்லூரிக்குத் தினமும் 18 கி.மீ தொலைவில் இருக்கும் பிம்பல்கான் (Pimpalgaon) கல்லூரி சென்று படிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுவார். பண்ணையில் வேலைகளை முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்வார். மாலையில் திரும்பியவுடன் மீண்டும் அவர் பண்ணைக்குச் செல்வார். விஜய் மருத்துவமனையில் இருந்துகொண்டே ஜியோத்சனாவுக்கு டிராக்டர் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அதை முறையாகக் கேட்டு தனது பண்ணையில் இருந்த டிராக்டரை ஓட்டினார்.

முதுகலைப் படிப்பை முடித்த நிலையில் நாசிக் பகுதியில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் அவருக்கு, யாரும் கவனிக்காமல் தனது பண்ணை எப்படி இருக்குமோ என்பது பற்றிய கவலை அதிகமாகத் தொடங்கியது.

இப்போது பண்ணையைக் கவனிக்க ஆள் இல்லை. தொடர்ந்து ஒரு வருடம் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர், 2017-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு, மீண்டும் தன் பண்ணைக்கு வந்துவிட்டார். அந்த ஒரு வருடத்தில் தனக்குத் தேவையான பணத்தைச் சேமித்த ஜியோத்சனா, தன் தம்பியின் படிப்பு செலவுக்கும் வீட்டுச் செலவுக்கும் வைத்துக்கொண்டார்.

அடுத்த 6 மாதம் தனது பண்ணைக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்தார். சில நாள்கள் இரவிலும் பண்ணையில் தங்கி வேலை பார்த்தார். அவரது பண்ணைக்கு மின்சாரம் எப்போது வரும், போகும் எனச் சொல்ல முடியாது. அதனால் பண்ணையில் மின்சாரம் இருக்கும் நேரங்களில் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச முடியும்.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அவரின் தந்தை நிரந்தரமாகக் கால்களை இழந்த பின்னர், அன்றிலிருந்து, இன்று வரைக்கும் இவர்தான் விவசாயத்தைக் கவனித்து, குடும்பப் பொறுப்புகளையும் எடுத்து நடத்தி வருகிறார்.

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! 4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_15445
விருது வாங்கும் பெண்

Images Courtesy - TheBetterindia.Com

ஜியோத்சனாவின் உழைப்புக்குப் பலனாக ஆறு மாதங்களில் திராட்சைக் கொடிகள் நன்றாக வளர்ந்திருந்தன. அப்போது வேலை அதிகமாக இல்லாமல் ஜியோத்சனாவுக்கு நேரமும் கூடுதலாகக் கிடைக்க ஆரம்பித்தது.

தனால் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் பண்ணையைக் கவனிக்கத் தொடங்கினார். அந்த நேரம் திராட்சை சீஸனில் விளைச்சல் அதிகமாகக் கொடுக்க ஆரம்பித்தது.

இதன் காரணமாக 2018-ம் ஆண்டின் கிருஷிதோன் அமைப்பின் சிறந்த பெண் விவசாயி விருது (Krishithon - Best Woman farmer award) ஜியோத்சனாவுக்குக் கிடைத்தது. இப்போது ஆசிரியை, விவசாயி என இரண்டு வேலைகளைக் கைவசம் வைத்துக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார் ஜியோத்சனா.
-

துரை நாகராஜன்
நன்றி-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 9:43 am

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக