புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2019 6:59 pm

ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா 12
-
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா 12a
-
ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா 12b
-
வாழ்க்கையில் என்னை இந்தளவுக்கு உயர்த்தியது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம்தான். அந்த டைட்டிலிலேயே கட்டுரை எழுதுவது மனசுக்கு மகிழ்ச்சி. வாழ்க்கை கண்ணாடி மாதிரி. அதன் மீது கீறலோ, கல்லோ விழாதபடி பார்த்துக்கணும். இல்லையென்றால் மனவருத்தத்தை தவிர்க்க முடியாது.நான் கொஞ்சம் நேர்மையை எதிர்பார்ப்பவள்.

அதனாலேயோ என்னவோ எனக்கு நட்பு வட்டாரம் என்பது இல்லாமலே போய்விட்டது. எனக்கு இருக்கும் ஒரே நட்பு நளினி அம்மா மட்டுமே. நட்பாகப் பழகுகிறார்கள் என்று அவரிடம் அதிக உரிமையும் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

ஒரு டி.வி.சீரியலில் நடிக்கும் போதுதான் நளினி அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. முதல் நாள் சந்திப்பிலேயே என்னை மிகவும் கரிசனத்துடன் விசாரித்தார். நாளடைவில் ஓர் ஆசானாக என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டார். அவர்தான் சினிமா துறையில் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும், உடைகள் எப்படி இருக்க வேண்டும், பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லாப் பண்பு களையும் வளர்த்துக் கொள்ள உதவி செய்தார்.

இப்போது மதுமிதா என்றால் எல்லாருக்கும் தெரியுது. நளினி அம்மா என் வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கவில்லை என்றால் என்னால் இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியாது. ஒரு வேளை அவரை நான் என் வாழ்க்கையில் சந்திக்காமலேயே இருந்திருந்தால் நடிப்பு தவிர்த்து, வேறெதுவும் விவரம் தெரியாதவளாகவே இருந்திருப்பேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2019 6:59 pm

சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்திலிருந்து சமீபத்தில் நடைபெற்ற என்னுடைய திருமணம் வரை எல்லாமே நளினி அம்மாவின் வழிகாட்டுதல்படியே நடந்தது. எங்கள் இருவருக்குமிடையே அம்மாவுக்கும் மகளுக்குமான பந்தம், பாசம் இருந்தது. ஒரு தாய் தன் மகளுக்கு என்ன செய்யணுமோ அந்தளவுக்கு நளினி அம்மா என் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

வாழ்க்கையில் சில சமயம் நான் துவண்டு போகும்போது என்னையும் அறியாமல் டயல் செய்யும் தொலைபேசி எண் நளினி அம்மாவுடையதாகத்தான் இருக்கும். சோர்ந்து போகும் வேளையில் அவர் அளிக்கும் உற்சாகமான வார்த்தைகள் என் மனதுக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.

இந்தக் கலியுகத்தில் மனிதாபி மானம், பொதுநலம் என்பது சுத்தமாக மறைந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு சின்ன விபத்து என்றால் எல்லோரும் ஓடிச்சென்று காப்பாற்றுவதைப் பார்க்கலாம். இப்போது அந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதோடு இல்லாமல் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க என்ற ஈவு இரக்கமற்ற செயல்களைத்தான் பார்க்க முடிகிறது. உதவி செய்ய எல்லோரும் பயப்படுகிறார்கள். அந்த மாதிரி சமூகத்தில் நளினி அம்மாவின் நட்பு எனக்கு பெரிதாக இருந்தது.

சில சமயம் எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள்; நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன் என்று நினைப்பேன். அதுபோன்ற சமயங்களில் ‘எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க. நீதான் வித்தியாசமா இருக்கிறாய்’ என்று பதில் வந்தது. என்னுடைய சின்ன வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன்.

அண்ணன் தம்பி யாரும் இல்லை. நாங்க மொத்தம் நான்கு பெண்கள். அம்மாதான் எங்களுக்கு தைரியத்தை ஊட்டி வளர்த்தார்கள்.
வாழ்க்கை எனும் கண்ணாடியில் கல் அடி படாமல் இருக்கணும்னா நம்மை நாம் பிஸியாக வைத்துக் கொண்டாலே போதும். வீட்டு வேலையோ வெளி வேலையோ ஏதோ ஒரு வேலையில் பிஸியாக இருந்தால் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி பேசக் கூடாத விஷயங்களைப் பேசி கல் அடி வாங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அவதிப்பட்டேன். அப்போது ஒரு சீரியலும் நடித்துக் கொண்டிருந்தேன். குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. பகலில் சீரியல், இரவில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவரிடம் முதல் உதவி பெற்ற பிறகு ‘என்ன நடந்தாலும் நான் படப்பிடிப்பு போக வேண்டும்’ என்று சொல்லிவிட்டேன்.

ஏன்னா, படக்குழுவுக்கு என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் என் நோக்கம். பிரச்சனைக்கு நாங்கள் காரணம் அல்ல என்ற கடிதத்தை வாங்கிக் கொண்டுதான் மருத்துவர் டிஸ்சார்ஜ் கொடுத்தார். திட்டமிட்டபடி இரண்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டேன். அந்த சமயத்தில் சுந்தர்.சி சார் பெரிதும் பாராட்டினார்.

கல்யாண டைமில் படப்பிடிப்புக்கு அழைத்தபோது அடுத்த நாளே போகத் தயாராக இருந்தேன். அந்தளவுக்கு நான் வேலை பைத்தியம். மனோரமா ஆச்சியைவிட ஒரு படி அதிகமாக உயரம் தொடணும் என்ற லட்சியத்துடன் உழைத்து வருகிறேன். எந்தத் துறையாக இருந்தாலும் நம் மீது கல் அடி விழாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பிறரை கேள்வி கேட்க முடியும்.

எனக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. நான் என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற
உறவுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகள் இருக்கிறது. இல்லத்தரசியாக என் கடமையைச் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
அதை நான் செய்யாமல் என் வீட்டுக்காரரை கேள்வி கேட்டால் என்னைப் பார்த்து ‘நீ என்ன யோக்கியமா’ என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது. எக்காரணத்தைக் கொண்டும் கல் அடி விழாதபடிக்கு நேர நிர்வாகம், நடிப்பு, குடும்ப பொறுப்புகள் என்று எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று முன்பை விட அதிக முனைப்புடன் உழைத்து வருகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2019 7:00 pm

நளினி அம்மா எனக்கு செய்த இன்னொரு நல்ல காரியத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். பத்தடி நிலமாக இருந்தாலும் அது சொந்தமாக இருக்கணும் என்று விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அப்படி எனக்கும் ஆசை இருந்தது. நான் பண விஷயத்தில் தாம் தூம்னு செலவு செய்வேன். அதற்கு அணை போட்டது நளினி அம்மா. பணத்தை சேமிக்க கற்றுக் கொள் என்று சேமிப்பைப் பற்றி சொன்னார். நான் இவ்வளவுக்கும் அவர் ரிலேஷன் இல்லை.

இந்த உலகத்தில் கவரிங் நகை கொடுப்பதாக இருந்தாலும் யோசிப்பாங்க. அறிமுகமே இல்லாத ஒரு மார்வாடி எனக்கு சவரன் சவரனாக தவணையில் தங்கம் கொடுத்தார். அந்த மார்வாடியை நளினி அம்மாதான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு நாள் நளினி அம்மா என்னை அழைத்து நீ சொந்தமா வீடு வாங்க முயற்சி செய். சிறிது சிறிதாக தங்கம் சேர்த்து வை என்று சொன்னதோடு தனக்குத் தெரிந்த மார்வாடியை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதாமாதம் தவணை முறையில் நகை வாங்கினேன். ஆறேழு வருட சேமிப்புக்குப் பிறகு அந்த நகையை விற்று ஒரு வீடு வாங்கினேன். நளினி அம்மாவின் நம்பிக்கை வீணாகதபடிக்கு குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தி என்னுடைய நற்பெயரையும் தக்க வைத்து வருகிறேன். மார்வாடி… ‘நல்ல கஸ்டமரைக் கொடுத்தீங்க’ என்று நளினி அம்மாவிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்தாரம்.
என்னுடைய திருமண வாழ்க்கை ஆரம்பித்தபோது நளினி அம்மா சொன்ன விஷயம்… நீ உண்மை, நேர்மையை எதிர்பார்க்கக்கூடியவள். அதை எல்லாரிடமும் எதிர்பார்க்காதே. எல்லாத்தையும் சினிமாத்தனமா யோசிக்க வேண்டாம். நீ சமைத்தால் புருஷன் ருசித்துச் சாப்பிடணும் என்று நினைக்காதே. உன் அழகை வர்ணிக்கணும் என்று நினைக்காதே.

அதையெல்லாத்தையும் கனவாக நினைத்துக் கொள். கனவில் நடந்தது நிஜத்தில் நடக்கும் என்று நினைத்தால் கல் அடிதான் விழும். புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே நான் சொன்ன புத்திமதிகளை ஏற்று எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கற்றுக் கொள். விட்டு கொடுத்துப் போ. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம் என்றார். அதன்படிதான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.

ஒரு சில வீட்டுக்கு போகும் போது காப்பி கிடைக்கும் என்று நினைத்து செல்லும் போது பூஸ்ட் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். தண்ணியே தராத வீட்டில் பூஸ்ட் எதிர்பார்க்கும் போது ஏமாற்றம்தான் மிஞ்சும். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்க்காமல் கிடைக்கும் ஒரு விஷயமே எல்லையற்ற சந்தோஷத்தைத் தரும்.

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை ஏமாற்றத்தைத் தவிர்ப்பதோடு, அதாவது கல் அடியிலிருந்து தப்பிக்க உதவுவதோடு இல்லாமல் வாழ்க்கையை அமைதியாக வழி நடத்தவும் உதவியாக இருக்கும். எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் நல்லது செய்யணும். எல்லாருக்கும் நல்லதே நடக்கணும். இதுதான் என்னுடைய பிரார்த்தனை.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

நன்றி-வண்ணத்திரை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக