புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
401 Posts - 48%
heezulia
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 5:56 pm

First topic message reminder :

பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி


மண்டல புருடர் வரலாறு

இவர் தொண்டை நாட்டின்கண் உள்ள பெருமண்டூர் எனப்படும் வீரபுரத்தில் பிறந்தவர். வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் என இவரே கூறியது காண்க. வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவர் சமயம் ஆருகதம், அஃது இந்நூல் முகத்து, சொல்வகை யெழுத்தெண்ணெல்லாந் தொல்லைநா ளெல்லையாக, நால்வகையாக்கும் பிண்டிநான்முகன் - எனக் கூறியதனாலும் விளங்கும். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தவர். பல வடசொற்களுள் தமிழ் கூறியுள்ளார். இப்போது அச்சாகியுள்ள நிகண்டுகள் பலவற்றுள்ளும் இதுவே விருத்தயாப்பில் இருத்தலின் யாவரும் படித்தற்கு எளியதாக உள்ளது.



இருமை
இப்பிறப்பு, வருபிறப்பு (இம்மை, மறுமை)
இருவினை
நல்வினை, தீவினை
இருவகைத் தோற்றம்
சரம், அசரம் (அசைதல், அசையாமை)சரம் - இயங்கியற்பொருளென்றும், அசரம் - நிலையியற் பொருளென்றும் தமிழில் வரும்
இருசுடர்
சந்திரன், சூரியன் (இரண்டொளி)
இருமரபு
தாய்மரபு, தந்தை மரபு
இருவகைக் கந்தம்
நற்கந்தம், துர்க்கந்தம்
இருவகையறம்
இல்லறம், துறவறம்
இருவகைப்பொருள்
கல்விப் பொருள், செல்வப்பொருள் - பொருள் பொய்ப் பொருள் முதலாகப் பலவகைப்படினும், பெரும்பான்மை கருதி இரண்டென்றார்.
இருவகைக்கூத்து
தேசிகம், மார்க்கம் - தேசிகம் என்பது இயற்சொல் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகம் என்பர் அடியார்க்கு நல்லார். மார்க்கம் என்பது வடுகு
முப்பழம்
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்
மூவகைப்பாவபுண்ணிய வழக்கம்
செய்தல், செய்வித்தல், உடன்படல்
மும்மை
உம்மை, இம்மை, மறுமை (சென்ற பிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு)
முப்பொறி
வாக்கு, காயம், மனம்
முக்காலம்
இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம்
முத்தொழில்
படைத்தல், காத்தல், அழித்தல்
மூவிடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை (முறையே யான், நீ, அவன்) முன்னிலை முன்நிற்றலையுடையவன், படர்க்கை பேசும் விஷயம் செல்லுதலையுடைய இடம், படர்தல் - செல்லல்
மூவுலகம்
பூமி, அந்தரம், சுவர்க்கம்
முக்குற்றம்
காமம், வெகுளி, மயக்கம் காமம் - ஆசை, அஃதாவது பொருண்மேற் செல்லும் பற்றுள்ளம். வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காதபோது உண்டாவது, மயக்கம் - கோபத்தின் காரியமாகவுள்ளது. வெகுளி - வெகுள் - பகுதி, இ - விகுதி ( இம்மூன்று சொற்களுள் வெகுளி ஒன்றே தமிழ்ச்சொல் )
முச்சுடர்
சோமன், சூரியன், அக்கினி




[You must be registered and logged in to see this link.]

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 05, 2010 10:27 pm


ஐவகைவினா

அறியான்வினாவல், அறிவொப்புக்காண்டல், ஐயந்தீர்த்தல், அவனறிவுதான்கோடல், மெய்யவற்குக்காட்டல், அறிவொப்புக்காண்டல், அவனறிவு தன்னறிவுடன் ஒத்திருக்கும் பகுதியை அறிதல், அவனறிவுதான் கோடல், அவனறிவைத்தான் கொள்ளுதல்
ஐம்பூதம்

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் (ஆகாயம்- வெளி)
ஈசுரனைம்முகம்

சத்தியோசாதம், வாமம், அகோரம், தற்புருடம், ஈசானம், ஈசுவரன் ஐம்முகம் - ஈசானமூர்த்தி, படிகநிறமும் மூன்று கண்ணும் சூலம் அபயமும் உடையராய்ச் செளமியராய்ப் புருஷாகரமாய் இருப்பர், சத்தியோசாதமூர்த்தி வெண்ணிறம், வெள்ளை மாலை, வெள்ளாடை, பால்யரூபம், புன்னகை, அபயம், வாதம் உடையவர். வாமமூர்த்தி செந்நிறமும் சுரபிமாலையும் உயர்ந்த மூக்கும் கையில் கத்தி கேடயமும் சிவந்தபாகையும் உடையவர். அகோரமூர்த்தி வெண்மைகலந்த கருநிறம் காதிற் குண்டலம், மீசை, சிகை, கோரப்பல், பயங்கரமுகம், கபாலமாலை, சர்ப்பபூஷணம் முதலிய பெற்று எட்டுத்தோள்களையுடையவர், தற்புருஷமூர்த்தி நான்கு முனிவர்களைத் தந்தருள்புரிந்தவர்.
ஐவகை இசைக்கருவி

தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, கண்டக்கருவி, தோற்கருவி - முரசு முதலியன. புல்லாங்குழல் முதலியன. நரம்புக்கருவி யாழ் முதலியன, கஞ்சக்கருவி தாளம் முதலியன, கண்டக்கருவி மிடற்றால் பாடுதல்
ஐவகை வேள்வி

தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்யாகம், மாநுடயாகம். தேவயாகம் - தேவர்களைப் பூசித்தல், பிதிர்யாகம் - பிதுர்களைப் பூசித்தல், பூதயாகம் - பூதங்களுக்குப் பலிபோடுதல், மாநுஷயாகம் - அதிதி பூசை செய்தல், பிரமயாகம் - வேதம் ஓதுதல்
ஐவகைத் தாயர்

பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்
ஐவகைத் தொழில்

எண்ணல், எழுதல், இலைகிள்ளல், மலர்தொடுத்தல், யாழ்வாசித்தல்
மெய்யின் ஐவகையவத்தை

கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சீடு, நட்டுவிழுதல்
காடுதிரவியம் ஐந்து

அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி
கடல்படுதிரவியம் ஐந்து

உப்பு, பவளம், முத்து, சங்கு, ஓர்க்கோலை
நாடுபடு திரவியம் ஐந்து

செந்நெல், செவ்விளநீர், சிறுபயறு, வாழை, கரும்பு
நகர்படு திரவியம் ஐந்து

கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, யானை, அரசன்
மலைபடு திரவியம் ஐந்து

மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமப்பூ
ஐம்புலன்

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ( ஊறு - தொட்டறிதல் )




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 05, 2010 10:28 pm


மன்மதபாணம் ஐந்து

தாமரைப்பூ, மாம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ, உன்மத்தம், மதனம், மோகம், சந்தர்பம், வசீகரணம் என்பன முறையே இவற்றின் பெயர்களாம்
ஐங்கணையவத்தை

முறையே சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பனவாம் சுப்பிரயோகத்தின்றன்மை - பேச்சும் நினைவும்,
விப்ரயோகத்தின்றன்மை - மூச்செறிந்து வருந்துதல்
சோகத்தின்றன்மை - வெதுப்பும் உணவு வெறுத்தலும்
மோகத்தின்றன்மை - அழுதலும் பிதற்றலும்
மரணத்தின்றன்மை - மயக்கமும் அயர்ச்சியும்
அந்தணர்க்குரிய அறுதொழில்

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் (வேட்டல் - யாகம்செய்தல்)
அரசர்க்குரிய
அறுதொழில்

ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைக்கலம்பயிலல், போர்செய்தீட்டல்
அரசர்க்குரிய ஆறங்கம்

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
வைசியர்க்குரிய அறுதொழில்

ஓதல், வேட்டல், வேளாண்மை, வாணிகம், பசுக்காத்தல், உழவு
சூத்திரர்க்குரிய அறுதொழில்

பசுக்காத்தல், பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளையோதல், ஈதல், அந்தணா முதலியோர்க்கு அநுகூலமாகிய தொழில் செய்தல்
ஆறுசக்கிரவர்த்திகள்

அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவா, கார்த்தவீரியன்
வேதாங்கம் ஆறு

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம், சிக்ஷையானினி, முனிவர் இயற்றியது, இதன் கண் வேதசப்தங்கட்கு அக்ஷரத்தானம், உதாத்த அனுதாத்த ஸ்வரித ஞானங்கள் கூறப்பட்டுள்ளது. வியாகரணம் யானினி இயற்றியது. காத்யாயனரும் பதஞ்சலியும் வியாக்கியானம் செய்தனர். இதில் வேதசப்தங்களின் பிரகிருதி பிரத்யயஞானம் கூறப்பட்டுள்ளது. சந்தம் பிங்கலர் கர்த்தா, இதில் வேதத்திற் கூறப்பட்ட காயத்திரி முதலியவற்றின் சந்தங்களின் ஞானம் உணர்த்தப்பட்டிருக்கிறது. நிருத்தம் இதற்கு யாஸ்கமகருஷி கர்த்தா. இதில் வேதமந்திரங்களின் பொருளை அறிய அதன்கண் வந்துள்ள பதங்களின் பொருளை உணர்த்துவது, சோதிடம் ஆதித்யாதியர் கர்த்தா, இது வைதிககர்மங்களைத் தொடங்குங் காலஞானத்தையும் அதன் பயனையுங்கூறும். கற்பம் இதற்கு ஆச்வலாயனர், காத்யாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், வைகாசனர், திராஷ்யாயதனர், பாரத்வாஜர், சத்தியாஷ்டர், ஹிரண்யகேசி முதலியவர் கர்த்தாக்கள், இது யாககர்மங்களை அனுஷ்டிக்கும் வகையைக் கூறுவது.,




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 05, 2010 10:29 pm


ஆறு உட்பகை

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்
அறுவகைத்தானை

வில், வேல், வாள், யானை, குதிரை, தேர்
அறுவகைப்படை

மூலப்படை, நாட்டுப்படை, கூலிப்படை, துணைப்படை, பகைப்படை, நாட்டுப்படை
அறுவகைச் சுவை

தித்தித்தல், புளித்தல், கூர்த்தல், துவர்த்தல், காழ்த்தல், கைத்தல்
அறுவகையகச் சமயம்

சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்
அறுவகைப்புறச்சமயம்

உலோகாயதம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம், (மாயாவாதம்- வாய்வேதாந்தம் கூறுதல்) உலோகாயதம் - உலகத்தில் அநுபவிக்கும் இன்பமே சுவர்க்கம், துன்பமே நரகம், கடவுள் என்பது இல்லை என்பவா. பெளத்தம் புத்தரைக் கடவுளாகக் கொள்பவர், ஆருகதம் அருகனை வழிபடுவோர் பாஞ்சராத்திரம் ஐந்து இராத்திரியில் செய்யப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ ஆகமம்
நாட்டிற்குரிய அறுவகைச் சிறப்பு

செல்வம், விளைவு, பல்வளம், செங்கோன்மை, நோயின்மை, குறும்பின்மை
அறுவகையரசியல்

அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்
அறநிலையம்

நான்கு வருணத்தாரும் தத்தம் வருணாசிரமங்களிற் பிறழாது தங்களைக் காக்குங் காவலின் பொருட்டுக் கொடுக்கும் பொருள் கொண்டு அவரைப் பாதுகாத்தல்
மறநிலையம்

பகைத்திறந்தெறுதலும், செஞ்சோற்றுதவி யில்லோரைச் செகுத்தலும், நிறைமீட்டலுமாம்




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 05, 2010 10:31 pm


அறநிலைப்பொருள்

நீதிவழிநின்று தத்தம் நிலையினால் முயன்று பெறுபொருள்
மறநிலைப்பொருள்

பகைவர் பொருளும் தண்டத்தில் வந்த பொருளும், சூதில் வென்ற பொருளுமாம்
அறநிலையின்பம்

ஒத்த பருவமும், ஒத்த குலமுமுடைய கன்னிகையை அக்கினி முன்பாக விவாகஞ்செய்து இல்லிலிருந்து அநுபவிக்கும் இன்பம்
மறநிலையின்பம்

ஏறுதழுவலும் வில்லால் இலக்கமெய்தலும் முதலியவற்றாற் கன்னிகையை விவாகஞ்செய்தநுபவிக்கு மின்பம்
கருமபூமிக்குரிய அறுவகைத்தொழில்

வரைவு, தொழில், வித்தை, வாணிகம், உழவு, சிற்பம்
போகபூமியாவது

பதினாறு வயதுடைய நாயகனும் பன்னிரண்டுவயதுடைய நாயகியும் பத்துக்கற்பகங்களும் வேண்டிய புதிய போகங்களைக் கொடுப்பப்பெற்றுப் புணர்ந்தின்ப மநுபவித்துப் பிரியாது வாழும் பூமி, சிலர் பதினாறெனு மியாயுட் பாவையும் நாலைந்தென்றுதியாயுட்கொள் காளையும் மெய்யொவ்வுதல் என்றார்
அறுவகைப்போகபூமி

ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்
ஏழுவகைமாதர்கள்

அபிராமி, மகேசுவரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி
ஏழுவகைத்தாது

இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்
செங்கோல் மன்னவர்க்குரிய எழுவகைப்பேறு

அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, மறுமை
எழுவகைப்பிறப்பு

தேவர், மனிதர், நீர்வாழ்வன, விலங்கு, ஊர்வன, பறவை, தாவரம்
எழுவகைப்பிறப்பில் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதம் - ஊர்வன பதினொரு நூறாயிரயோனிபேதம், மனிதர் ஒன்பது நூறாயிர யோனிபேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம், விலங்கு பத்து நூறாயிர யோனிபேதம், பறவை பத்து நூறாயிர யோனிபேதம், தேவர் பதினான்க நூறாயிர யோனி பேதம், தாவரம் இருபது நூறாயிர யோனிபேதம்.




[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 6:32 am

அண்ணா உண்மையில் நல்ல தகவல்... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக