புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
48 Posts - 43%
heezulia
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
414 Posts - 49%
heezulia
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
28 Posts - 3%
prajai
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 5:57 pm

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில், கணவனின் மர்ம உறுப்பை துண்டித்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர்,சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, தம்பதி ஷேர் சிங், ௨௬ - சந்தோஷி, ௨௪. இவர்கள், ௧௦ நாட்களுக்கு முன், வேலை தேடி, ஐதராபாதுக்கு வந்தனர்.இந்த தம்பதிக்கு, ௪ வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐதராபாதில் உள்ள, 'மார்பிள்' தொழிற்சாலையில், ஷேர் சிங் வேலைக்கு சேர்ந்தார். சந்தோஷி, வீட்டிலேயே தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்தாள்.இந்நிலையில், ஷேர் சிங், நேற்று முன்தினம், போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதில், கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சந்தோஷி, கணவனின் மர்ம உறுப்பை, கூர்மையான ஆயுதத்தால் துண்டித்தாள்.ஷேர் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த, அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனையில், சேர்த்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், சந்தோஷி மீது வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷேர் சிங், நலமுடன் இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சந்தோஷி கைது செய்யப்படாத நிலையில், மருத்துவமனையில், கணவனுக்கு உதவியாக இருந்து வருகிறாள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 5:59 pm

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், தற்போது, 27 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.நீதித்துறையின் செயல்பாடு ஒளிவு மறைவற்று இருக்க வேண்டும் என்பதற்காக, நீதிபதிகள், தங்கள் சொத்து விபரங்களை, தாங்களே முன் வந்து தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில், சொத்து விபரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில், 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை, இதுவரை வெளியிட்டுள்ளனர்.தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு ஜூனில், தன் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார். அதில், தன் தாய், தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள நிலத்தை விற்றதில், 65 லட்சம் ரூபாய் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனக்கும், தன் மனைவிக்கும், சொந்தமாக வாகனங்களும் இல்லை என்றும், கடனும் இல்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.நீதிபதிகள், பானுமதி, கன்வில்கர், அசோக் பூஷண், அருண் மிஸ்ரா, என்.வி.ரமணா, எஸ்.வி.பாப்டே ஆகியோரும், தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 6:00 pm

பெங்களூரு : கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ள 11 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 7:21 pm

திருவண்ணாமலை ஆரணியில், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பணியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்குமார், 45; கல்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நித்யா, 30, மாமண்டூர் அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.கடந்த, 2016-ல், பையூர் அரசு பள்ளியில் நித்யா பணிபுரிந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில பாடம் டியூசன் எடுத்தபோது, 17 வயது பள்ளி மாணவன் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார்.இந்நிலையில், ஆசிரியை நித்யா, செங்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் ஒரு மாணவனுடன் தொடர்பு ஏற்பட்டது. மாணவர்களுடன் தனிமையில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். இரு மாணவர்களையும் தனித்தனியாக வெளியூர் அழைத்து சென்று, ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு உமேஷ்குமாருக்கு, மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.பள்ளி விடுமுறை நாளில், நித்யா வீட்டில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அவரது போனை எடுத்து பார்த்த உமேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.அதில், இரு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று,தனிமையில் இருந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.இதையடுத்து, மனைவியை பிரிந்தார் உமேஷ்குமார்.மாணவர்களுடன் நித்யா, தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். பின், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் ஆகியோர் விசாரித்ததில் உண்மை என, தெரியவந்தது.இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆசிரியை நித்யாவை, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து, நித்யாவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:18 pm

விவசாயிகளுக்கு ஏப்ரலில் 2,000 ரூபாய்
புதுடில்லி, 'விவசாயிகளுக்கு இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாய், அடுத்த மாதம் வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.'சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்; இது, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்படும்' என, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.இதற்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என, தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தை, கடந்த மாதம், 24ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.'இந்த நிதியுதவியை பெற, தகுதியுள்ள விவசாயிகள், இந்த திட்டத்தில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. கடந்த, 10ம் தேதி வரை, இந்த திட்டத்தின் கீழ், 4.74 கோடி விவசாயிகள், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, லோக்சபா தேர்தல் தேதி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில், மத்திய விவசாயத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள, 4.74 கோடி விவசாயிகளில், 2.74 கோடி விவசாயிகளுக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாய், அவர்களது வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள விவசாயிகளுக்கு, இம்மாத இறுதிக்குள், 'டிபாசிட்' செய்யப்படும்.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், இந்த திட்டத்தில், தங்கள் பெயரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு, இரண்டாவது தவணை தொகையை வழங்க, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல், 15க்குள், இரண்டாவது தவணை தொகை, 4.74 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில், டிபாசிட் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:18 pm

லோக்பால்' தலைவராக பி.சி.கோஷ் பதவியேற்பு
புதுடில்லி, நாட்டின் முதல், 'லோக்பால்' தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திர கோஷ், 66, நேற்று பதவியேற்றார்.மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட, அரசு உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் அமைப்பு, சமீபத்தில் உருவாக்கப்பட்டது. உத்தரவுலோக்பால் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஷை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.லோக்பாலில் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக, உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், திலீப் போஸ்லே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நீதித்துறை சாராத உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி, அர்ச்சனா ராமசுந்தரம், ஓய்வு பெற்ற, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி மகேந்திர சிங், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இந்திரஜித் பிரசாத் கவுதம், மஹாராஷ்டிரா முன்னாள் தலைமை செயலர் தினேஷ் குமார் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.பதவி பிரமாணம்இந்நிலையில், டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், லோக்பால் தலைவராக, பி.சி.கோஷ், நேற்று பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு, 70 வயதாகி விட்டால், அவர்களது பதவிக் காலம் முடிந்து விடும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:20 pm

ஜெயலலிதாவாக நடிக்கிறார் நடிகை கங்கணா ரணாவத்.............

மும்பை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார்.நடிகையாக, தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, பின், அரசியலுக்குள் நுழைந்து, தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர், ஜெயலலிதா. உடல் நலக்குறைவால், ௨௦௧௬ டிசம்பரில் காலமானார்.ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில், திரைப்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.தமிழில், மதராச பட்டிணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய், இந்த படத்தை இயக்குகிறார். விஷ்ணுவர்த்தன் இந்துாரி, சைலேஷ் சிங் ஆகியோர் இணைந்து, இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்துக்கு, தமிழில், தலைவி என்றும், ஹிந்தியில், ஜெயா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பிரபல பாலிவுட் நடிகை, கங்கணா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே, தமிழில் தாம் துாம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இது குறித்து கங்கணா கூறியதாவது:ஜெயலலிதா, இந்த நுாற்றாண்டின் மிகப் பெரிய வெற்றி சரித்திரத்தை படைத்தவர். திரைப்படத் துறையில், வெற்றிகரமான நடிகையாக இருந்து, அரசியலில் மிகப் பெரிய ஆளுமையாக மாறியவர். இந்த கருத்தை மையமாக வைத்தே, இந்த படம் எடுக்கப்படுகிறது. ஜெயலலிதாவாக நடிப்பதற்கு பெருமைப்படுகிறேன்.இவ்வாறு அவர்
கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:22 pm

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,கோடை காலம் துவங்குவதை அடுத்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. (மார்ச் 24,28) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. (மார்ச் 25,26,27) தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். வேலூர் ,திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி , சேலம் ,நாமக்கல் , திருச்சி ,கரூர், திண்டுக்கல்,மதுரை ஆகிய உள்மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஆய்வு மையம் கூறியுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Mar 25, 2019 9:12 pm

ஆண் வேடத்தில் வழிப்பறி இளம்பெண் அதிரடி கைது
புதுடில்லி: டில்லியில், ஆண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜனக்புரி பகுதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக, 53 வயதான பெண் ஒருவர் வந்தார்.அவர் சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பெண்ணை இழுத்து, கீழே தள்ளி, அவரது கைப்பையை பறித்துச் சென்றனர்.இது குறித்து விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் நடவடிக்கை, பெண்ணைப் போல இருப்பதாக, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இது குறித்து விசாரித்த போது, ரமன்ஜீத் கவுர், 33குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இவள், பின், ஜாமினில் வந்து, தலைமறைவானது தெரிய வந்தது.இதையடுத்து, விகாஷ்புரி என்ற பகுதியில், ரமன்ஜீத் கவுரையும், அவளுடன் இருந்த ராம்நீக் சிங், 24, என்பவனையும் கைது செய்தனர். விசாரணையில், போலீசை ஏமாற்றுவதற்காக, ரமன்ஜீத் கவுர், ஆண் வேடமணிந்து, ராம்நீக் சிங்குடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Mar 25, 2019 9:14 pm

புதுடில்லி: டில்லியில், ஆண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜனக்புரி பகுதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக, 53 வயதான பெண் ஒருவர் வந்தார்.அவர் சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பெண்ணை இழுத்து, கீழே தள்ளி, அவரது கைப்பையை பறித்துச் சென்றனர்.இது குறித்து விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் நடவடிக்கை, பெண்ணைப் போல இருப்பதாக, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இது குறித்து விசாரித்த போது, ரமன்ஜீத் கவுர், 33குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இவள், பின், ஜாமினில் வந்து, தலைமறைவானது தெரிய வந்தது.இதையடுத்து, விகாஷ்புரி என்ற பகுதியில், ரமன்ஜீத் கவுரையும், அவளுடன் இருந்த ராம்நீக் சிங், 24, என்பவனையும் கைது செய்தனர். விசாரணையில், போலீசை ஏமாற்றுவதற்காக, ரமன்ஜீத் கவுர், ஆண் வேடமணிந்து, ராம்நீக் சிங்குடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக