புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
383 Posts - 49%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
26 Posts - 3%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 7:36 pm

எதிர்க்கட்சிகளை கேள்வி கேளுங்கள்: மோடி விளாசல்
புதுடில்லி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து நமது படைகளை சந்தேகிக்கும் வகையில் பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர்களை கேள்வி கேட்க வேண்டும் என இந்தியர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்., தலைவர் ராகுலின் நம்பிக்கைக்குரியவரும், காங்., முக்கிய நிர்வாகியுமான சாம் பிட்ரோடா கடுமையாக விமர்சித்ததுடன், மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளார். சாம் பிட்ரோடா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிறதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.அதில் அவர் காங்., தலைவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர், வழிகாட்டியுமானவர் காங்.,கிற்காக பாக்., தேசிய தினத்தை கொண்டாடியும், இந்திய படைகளின் துணிச்சலான செயல்பாட்டை தவறாகவும் கூறி உள்ளார். பயங்கரவாதத்திற்கு பதில் சொல்ல காங்., தயாராக இல்லை என்பதை நாடு ஏற்கனவே அறியும். அதை காங்., மற்றும் ராகுல் குடும்ப விசுவாசியும் உறுதிப்படுத்தி உள்ளார். இது புதிய இந்தியா. பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியிலேயே, அவர்களுக்கு புரியும் வண்ணம் பதிலளிப்போம்.பயங்கரவாதிகளிடம் மன்னிப்பு கேட்பதும், நமது ராணுவத்தை கேள்வி கேட்பதும் எதிர்க்கட்சிகளின் இயற்கை குணம். காஷ்மீரை பாதுகாப்பதற்காக தங்களின் உயிரை கொடுத்தவர்களை அவமதிக்கும் விதமாக ராம்கோபால் போன்ற மூத்த தலைவர்களின் பேச்சு கண்டிக்கதக்கது. நமது வீரர்களின் குடும்பங்களின் மீது கருணையில்லாமல் உள்ளனர்.எதிர்க்கட்சிகள் நமது படைகளை மீண்டும் அவமதித்து வருகின்றன. இவ்வாறு பேசும் எதிர்க்கட்சி தலைவர்களை கேள்வி கேட்கும் படி இந்திய குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் சொல்லுங்கள், 130 கோடி இந்தியர்களும் அவர்களின் பேச்சுக்களை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இந்தியா எப்போதும் நமது படைகளின் பக்கம் திடமாக நிற்கின்றன என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 7:40 pm

மீண்டும் மோடி? மே 23ல் தெரியும்
'மத்திய அரசில், பெரிய அளவில் ஊழல் ஏதும் வெளியாகவில்லை' என்பதால் மட்டுமே, பா.ஜ.,வை மீண்டும் தேர்ந்தெடுக்க, மக்கள் தயாராக உள்ளனரா?பொருளாதார நிபுணராக இருந்தாலும், சோனியாவின் கை பொம்மையாக செயல்பட்டதாலும், முக்கியமான எந்த தருணத்திலும், வாய் மூடி மவுனியாகவே, ஆட்சியை நடத்தியதால், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் மீது, மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், கடந்த ஆட்சி காலத்தில், நாள்தோறும் வெளிவந்த ஊழல்களால், 'காங்கிரஸ் கட்சிக்கான மாற்று என்ன?' என, மக்கள் தேடினர். அந்த சமயத்தில், குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, 'டிஜிட்டல்' கதாநாயகனாக, பா.ஜ., முன்னிறுத்தியது.காங்., மீதான வெறுப்பும், கம்பீரமான தலைவர் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், மோடிக்கு பெரும் ஆதரவாக அமைந்தது. 2014 லோக்சபா தேர்தலில், 282 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை அரசாக, பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தது. மோடியும் பிரதமரானார். உண்மையாகவே, அதன்பின், இந்திய இளைஞர்கள் மத்தியில், உற்சாகம் ஊற்றெடுத்தது. அவரது பேச்சு, மக்களை கவர்ந்தது. 'துாய்மை இந்தியா, மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள், இந்தியாவின் கடைக் கோடி மக்கள் வரை சென்றடைந்து இருக்கிறது.டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் மூலம், பண பரிமாற்றம் அடுத்தகட்டத்தை நோக்கி, குதிரை பாய்ச்சலில் சென்றுள்ளது. மொபைல் போன் வழியாகவே, வங்கி, உணவு, வாகனம், கட்டணம், வரி என, அனைத்து பரிமாற்றங்களும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோடியின் ஆட்சியில், புல்லட் ரயில், மெட்ரோ ரயில் என, புதிய கட்டுமானங்கள் அதிகரித்தன. நிர்வாக முறைகேடுகள், பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளன. உலக அரங்கில், இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம், பா.ஜ., தலைமையிலான அரசின் நடவடிக்கை தான் காரணம்.அதே சமயம், மக்களுக்கு என்னென்ன அதிருப்திகள் உள்ளன என்பதையும், பா.ஜ., தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான விளக்கத்தை, வெள்ளை அறிக்கை போல வெளியிட வேண்டும்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், பல்வேறு இடைஞ்சல்களை அனுபவித்த போதும், மக்கள் அதற்கு ஆதரவளித்தனர். ஏனெனில், ஊழல்வாதிகள், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருந்தோர், அகப்படுவர் என்ற எதிர்பார்ப்பு.ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், என்ன பலன் கிடைத்தது; எத்தனை, கறுப்பு பண முதலைகள் சிக்கினர்; பொருளாதாரத்தையே சீர்குலைத்தோர் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது; எவ்வளவு கறுப்பு பணம் மீட்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு, இதுவரை, பா.ஜ., அரசு, தெளிவாக விடை அளிக்கவில்லை. இதன் காரணம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், பெரும் கறுப்பு பண முதலைகள் யாரும் பாதிக்கப்படவில்லை; அப்பாவி மக்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது தானா?
'பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், கறுப்பு பணம் வெளியே வரும்' என்றீர்கள்; ஆனால், சிறுவாடு சேர்த்து வைத்த அப்பாவி மக்கள் தான், வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்கள் முன், அவதிப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்தோர் யாரும், சிக்கவில்லை. அதேபோல, ஜி.எஸ்.டி., வரியால், நாடு முழுவதும், சிறு வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை, மறுப்பதற்கில்லை.பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் மற்றும், 'சூப்பர் மார்க்கெட்' எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால், சிறு வியாபாரிகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.பா.ஜ., ஆட்சி மீது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதில், ஊழல் நடந்திருக்கிறது என்பது மட்டும் தான். ஆனால், அதையும் நிரூபிக்க முடியவில்லை. பா.ஜ., அரசு மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது, மிக முக்கியமான, போற்றத்தக்க சாதனை தான். ஆனால் இது மட்டும் போதுமா?மோடி தலைமையிலான மத்திய அரசு, ஐந்து ஆண்டுகள், ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அவர் எழுதிய தேர்விற்கான முடிவு, மே 23ல் தெரிந்துவிடும்.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 7:47 pm

புதுடில்லி : டுவிட்டரில் பிரபலமான முதல்வர்களின் பட்டியலில் டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதலிடத்தில் உள்ளார்.அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் துடிப்புடன் செயல்படும் 6 முதல்வர்கள் மற்றும் அவர்களை பின்தொடர்வோர் பற்றிய விபரங்களை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. இதில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் இடத்திலும் (14.6 மில்லியன் பேர் பின்தொடர்வோர்), பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 2வது இடத்திலும் (4.77 மில்லியன் பேர்), ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 3வது இடத்திலும் (4.19 மில்லியன் பேர்), உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் (3.61 மில்லியன் பேர்), மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் 5வது இடத்திலும் (3.42 மில்லியன் பேர்), மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6வது இடத்திலும் (3.23 மில்லியன் பேர்) உள்ளனர்.முன்னதாக அதிக பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் 2வது இடத்தில் இருந்து வந்தார். இவரை 6.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்துள்ளனர். 2019ம் ஆண்டை பொறுத்தவரை டில்லியை சேர்ந்த மற்ற ஆம்ஆத்மி தலைவர்களின் டுவீட்களை ரீடுவீட் செய்வது, ஆம்ஆத்மி சாதனைகளை சொல்வது, மத்திய அரசை விமர்சிப்பது ஆகியவற்றிற்கு கெஜ்ரிவால் டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார். நிதிஷ்குமார் பெரும்பாலும் தனது பொதுகூட்டங்கள், அரசு விழாக்கள், விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு டுவிட்டரை பயன்படுத்துகிறார்.சந்திரபாபு நாயுடு, ஒருநாளைக்கு 25 டுவீட் வரை பதிவிட்டுள்ளார். மிக அரிதாக முதல்வர் அலுவலக மற்றும் மாவட்ட அதிகாரிகளின் பதிவுகளை ரீடுவீட் செய்துள்ளார். யோகி ஆதித்யநாத், பொது கூட்டங்கள், தனது பேச்சுக்களை மட்டுமே டுவீட் செய்துள்ளார். தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர பா.ஜ., கூட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வது, அரசு திட்டங்கள், பொதுக்கூட்ட படங்களை பதிவிடுவதற்கு டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார். மம்தா பானர்ஜி, பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்வது, தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது, பிரபலங்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஆகியவற்றிற்காக டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 23, 2019 3:10 pm

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தயார்
சென்னை : ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாக உள்ளது குறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்துவிட்டது. சூலூர் தொகுதி குறித்து விரைவில் அறிக்கை அனுப்புவோம். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிந்துள்ளன. அரவக்குறிச்சி தேர்தல் வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.தமிழகத்தில் இதுவரை 209 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் ரூ.30 கோடி ரொக்க பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ரூ.4.45 கோடி பணம் மற்றும் 94 கிலோ தங்கம் திருப்பி தரப்பட்டுள்ளது என்றார்.

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 23, 2019 5:23 pm

92 நாடுகளில் சுற்றும் பயணம் செய்து மக்கள் பணத்தை வீணடித்த உலகம் சுற்றிய வாலிபன் மீண்டும் வந்தால் ......,.
நாடு சுடுகாடாகும்....
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பெருகும்.....
சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும்.....
தமிழ் நாட்டு உரிமைகள் பறிபோகும்....
தமிழ்நாடு பாலைவனமாகும்.................
ஐ.நா சொன்னது மீண்டும் நிஜமாகும்.
மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 9:54 pm

சக்தி ௧௮ அவர்களே உம் கண்ணுக்கு உம் மனதிற்கும் அவர் உலகம் சுற்றினதாக தெரிகிறது. பிறர் கண்ணுக்கு அவர் அனைத்து நாடுகளுடனும் நடப்பு ஏற்படுத்த அந்நாட்டு வளங்களை நம் நாட்டில் கொணர அல்லும் பகலும் அயராது பாடுபடுவது நம் நாடு ஊழலற்ற நன்நாடாக விளங்க பாடுபடுவதாக சொல்கிறார்கள் .எல்லாம் அவரவர் குணத்திற்கு எண்ணத்திற்கேற்ப அவர் தென்படுவார் நல்லோர்களும் உலக நாட்டார்களும் அவரின் ஆற்றலை பாராட்டுகின்றனரே. ஏன் உமக்கு அப்படிபட்ட எதிர் சிந்தனை ......உம் பெயரை போட்டோவை ஈகரையில் பதிய துணிவில்லையா அல்லது இருட்டில் இருந்து கல்லெறிகிறீரா எப்படி கொள்வது உம்கருத்தை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 9:58 pm

தினமும் ஒரு அதிரடி!
புதுடில்லி: லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம், தங்களை பற்றிய செய்திகள், மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, பல்வேறு வியூங்களை வகுத்து வருகின்றன.இதில், பா.ஜ., தான் முன்னணியில் உள்ளது. 'தினமும், நம்மைப் பற்றிய செய்திகள் தான் அதிகம் வர வேண்டும். தினமும் செய்திகள் வந்தால் தான், நம் நினைவு மக்களுக்கு வரும்' என்பது, பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவின் அதிரடி திட்டம்.எதிர்க்கட்சி பிரபலங்கள், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஒரே நாளில், அனைவரையும் கட்சியில் சேர்க்காமல், தினமும் ஒருவரை சேர்த்தால், தினமும் செய்திகள் வருமே என, கணக்கு போட்டு, அதற்கேற்ப காய் நகர்த்தி வருகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.மற்றொரு பக்கம், புதிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகியபடி உள்ளன. நாடு முழுவதும் உள்ள, 25 லட்சம் காவலாளிகளிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசினார், மோடி; இது, அனைத்து மீடியாக்களிலும் நேரடியாக ஒளிபரப்பானது.தேர்தல் முடியும் வரை, இதுபோல், இன்னும் பல அறிவிப்புகள் வெளிவர உள்ளதாக, தகவல்கள் கசிகின்றன. மற்றொரு முக்கியமான விஷயமும், பா.ஜ., தலைவர்களிடையே கிசுகிசுக்கப்படுகிறது. 'நம் விமானப்படை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில், எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; அதற்கான ஆதாரம் உள்ளதா' என, எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றனஅல்லவா; இதற்கான ஆதாரம், ஓட்டுப் பதிவு நாளுக்கு முன்னதாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 24, 2019 10:09 pm

ஹரியானாவில் 'சீட்' கேட்கும் தமிழர்.....
லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, பலர், கட்சி அலுவலகங்களில் காத்துக் கிடக்கின்றனர். டில்லியில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில், தமிழர் ஒருவரின் முகம், அடிக்கடி தென்படுகிறது. இவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அங்கு காத்து கிடக்கிறார்.முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர் பெயர், காமராஜா. கடந்த, 29 ஆண்டுகளாக, ஹரியானாவில் சிர்சா, ரோதக் என பல இடங்களில் பணியாற்றியவர். ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச் சென்றவர், தற்போது மறுபடியும் ஹரியானாவிற்குவந்துள்ளார்.'ஒரு தமிழர், ஹரியானாவில் போட்டியிடுவதா' என்ற கேள்விக்கு, 'நான் தமிழனாக இருந்தாலும், உள்ளத்தில் ஹரியானாக்காரன்; இந்த மக்களுக்காக பணியாற்றி உள்ளேன். இப்போது, எம்.பி.,யாக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்' என்கிறார், அவர்.இவர், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியபோது, ஹரியானா மக்களிடையே பாராட்டை பெற்றவர். ஆனாலும், ஹரியானா வேட்பாளர்கள், ஜாதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, நம்ம ஊரு காமராஜாவுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் தான்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Mar 25, 2019 9:17 pm

மேட்டூர்: ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தரம் தாழ்ந்து பேசுவது அதிர்ச்சியளிக்கிறது,'' என, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேசினார்.
தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் அன்புமணி அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, மேட்டூரில் நேற்று நடந்தது.அலுவலகத்தை திறந்து, அன்புமணி பேசியதாவது:'நீட்' தேர்வு வர, காரணமாக இருந்தது, தி.மு.க., அரசு தான். அவர்கள் தான், ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கவும் காரணம். காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம், 1974ல் காலாவதியான போது, அதை புதுப்பிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்தனர்.இதனால், மேட்டூர் அணைக்கு வர வேண்டிய பெருமளவு நீரை, கர்நாடகா அணை கட்டி தேக்கி வைத்துக் கொள்கிறது.நாங்கள் வெற்றி பெற்றால், மேட்டூர் அணை உபரி நீரை, சேலம் மாவட்டத்தின் வறண்ட பகுதிக்கு திருப்ப, நிச்சயம் முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுப்பேன். சேலம், தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். தர்மபுரியில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவதுாறாகபேசினார்.ஒரு கட்சி தலைவர், மூத்த அரசியல்வாதி, இதுபோல் தரம் தாழ்ந்து பேசுவது வருத்தமாக உள்ளது. அவர் பேசி விட்டார் என்பதற்காக, நாங்களும் அதுபோல் பேசி, எங்கள் தகுதியை குறைத்து கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர்பேசினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 26, 2019 10:01 pm

புதுடில்லி: அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு படிவங்களில் கையெழுத்திடுவது யார் என்பது குறித்து, அந்த கட்சியின் முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2017 செப்டம்பரில் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில், யாருடைய கருத்தையும் கேட்காமல், அ.தி.மு.க., விதிகள் திருத்தப்பட்டன. அ.தி.மு.க., சட்ட விதிகளைத் திருத்த, பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், பொதுச் செயலர் நியமனம், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலமே நடக்க வேண்டும்.இதன்படி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு படிவத்தில், பொதுச் செயலர் மட்டுமே கையெழுத்திட முடியும்.எனவே, லோக்சபா தேர்தலில், வேட்பு மனு படிவங்களில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர், இ.பி.எஸ்., ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும்.அவர்கள் கையெழுத்திடும் வேட்பு மனு படிவங்களை நிராகரிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.





Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக