புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
2 Posts - 4%
heezulia
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 சீதை ராமன் கல்யாணம் Poll_m10 சீதை ராமன் கல்யாணம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதை ராமன் கல்யாணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:26 am

 சீதை ராமன் கல்யாணம் Tamil-Daily-News-Paper_9435236455
-
அலுத்துப் போய்விட்டது சீதைக்கு. சுயம்வரம் என்றால் என்ன? ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளில், மணமகன்கள் எல்லோரும் வரிசையாய் வீற்றிருக்க, மணமகள் அவர்கள் ஒவ்வொருவராகப் பார்த்து, அவரவர் குணநலன், பதவி, குலம் போன்ற பட்டியலிடப்பட்ட தகவல்கள் முன்மொழியப்பட, அதைக்கேட்டு, தன் மனதுக்குப் பிடித்தவரைத் தேர்வு செய்யும் ஒரு வழிதானே?

இல்லையாம்! தந்தை ஜனக மகாராஜா, அவ்வாறு தன்னை மணக்க விரும்புபவரை அழைத்து, பலப்பரீட்சை செய்து, அந்த சோதனையில் வெற்றி பெறுபவரே தனக்கு மாலையணிப்பான் என்று அறிவித்துவிட்டார். அதனால் தன்னை மணக்க விரும்பி எப்போதும் அரசகுமாரர் வந்தாலும் அப்போது அவனுக்கு பலப்பரீட்சைதான். அதாவது அரசகுமாரன் வரும்போதெல்லாம் தனக்கு சுயம்வரம்தான்.

அடிக்கடி இப்படி மேற்கொள்ளப்படும் சுயம்வரத்தால் மட்டும் சீதைக்கு அலுப்பில்லை. வருபவர்களில் யாராவது சோதனையில் வென்று, தனக்கு மாலையிடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம், அவ்வாறு மாலையிடுபவன் தன் மனதுக்கு உகந்தவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? அதாவது ஒரு பலசாலியால் தன்னை மணக்க முடியும் குணத்தால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்!

சீதை குழம்பிய மனதுடன் உப்பரிகையில் உலா வந்தாள். அரண்மனை வளாகத்திற்குள் சோதனையை மேற்கொள்ள வரும் அரசகுமாரர்களை அங்கிருந்தே பார்ப்பாள். பார்த்தவுடன் மனதில் பதியக் கூடியவர்களாக அவர்களில் யாரும் இல்லாததை உணர்ந்து வேதனைப்படுவாள். அவர்களில் யாருமே சோதனையில் வென்றுவிடக் கூடாதே என்று வேண்டிக் கொள்வாள். நல்ல வேளையாக அதுவரை அவர்கள் யாருமே பலசாலியாக இல்லை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:26 am

என்ன சோதனை அது?

விதேக நாட்டின் மன்னரான ஜனகர், ஒரு சமயம் பிரமாண்டமான யாகம் ஒன்றைச் செய்தார். சிறிதுகூட அப்பழுக்கின்றி, எந்தக் குறையும் சொல்ல இயலாதபடி நிறைவுபெற்ற அந்த மகா யாகத்தைப் பெரிதும் பாராட்டினான், வருணன். தன் பிரமிப்புக்குப் பரிசாக ஒரு தெய்வீக வில்லையும் இரண்டு அம்பறாத் தூணிகளையும் தந்தான்.

அந்த வில், சிவதனுசு! சிவபெருமானுடைய ஆசிகளைப் பெற்றது. சிறந்த, நல்லொழுக்கம் மிக்க, பெரியோரை மதிக்கும் பண்புடைய ஆற்றல் மிக்க, அதேசமயம் தேர்ந்த அடக்கமும் உள்ள வீரனால் மட்டுமே அந்த தனுசைத் தொட்டுத் தூக்க முடியும்.

அந்த சிவதனுசைத் தூக்கி, யார் நாணேற்றுகிறாரோ அந்த சுத்தமான வீரனுக்கே தன் மகள் என்று அறிவித்திருந்தார் ஜனகர்.

இப்படி ஒரு சோதனையில் வெல்பவனே தன் மருமகன் என்று அவர் நிபந்தனை விதித்ததற்கும் ஒரு காரணம் இருந்தது.

அது, சீதை ஒரு தெய்வக் குழந்தை என்பதால்தான்! ஆமாம். யாகம் செய்வதைத் தன்னுடைய தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதி அதன்படியே செய்தும் வந்தவர் ஜனகர். ஒருமுறை அவ்வாறு யாகம் செய்ய முற்பட்டு, அந்த முறைப்படி, அதற்கான இடத்தைத்தானே தேர்ந்தெடுத்து, தானே கலப்பையைப் பிடித்து நிலத்தை உழுதார். யாகம் முடிந்த பிறகுதானே அவிர்பாகம்? ஆனால், யாகத்துக்காக நிலத்தை உழுதபோதே ஜனகருக்கு அவிர்பாகம் கிடைத்துவிட்டது. அது ஓர் அழகிய பெண் குழந்தை. மண் பூசிய பொன்மேனி, மந்தஹாசச் சிரிப்போடு, பூமி தேவியே தன் இரு கரங்களாலும் அந்தக் குழந்தையைத் தாங்கி, தன்னிடம் தூக்கித் தருவதுபோல உணர்ந்தார் ஜனகர்.

அப்படியே அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டார். நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். பூமிதேவி தந்த வரம் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். அந்தக் குழந்தையை நேரே தன் மனைவியிடம் எடுத்துச் சென்றார். ‘நம் செல்வம், நம் குழந்தை’ என்று பூரிப்போடு சொல்லி, அவளிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
-
அந்தக் குழந்தையைப் பார்த்த மாத்திரத்திலேயே தாய்மை சுரந்தது அரசிக்கு. சீதை ராஜ வம்சத்து வாரிசானாள். ஜனகன் மகளானதால் ஜானகியானாள். விதேக நாட்டின் இளவரசி என்பதால் வைதேகி என்றும் மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டவள் என்பதால் மைதிலி என்றும் பலரும் அவளை வாயார அழைத்து, நெஞ்சார வாழ்த்தினார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:27 am

அந்த ஜானகிக்குத்தான் சுயம்வரம்.

அவளுடைய தெய்வீகப் பேரழகு, அவளுடைய தந்தையான ஜனகரின் விரிந்து பரந்த சாம்ராஜ்யம், அவளை மனைவியாக அடைவதால் ஏற்படக்கூடிய கௌரவம், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு, பல தேசத்து ராஜகுமாரர்கள் வில் தூக்கும் சோதனையில் தம்மை உட்படுத்திக் கொண்டு தோல்வியை மட்டும் தழுவிச் சென்றார்கள்.

சீதையின் மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. வில்லை வளைக்கும் வீரன், தன் மனதையும் வளைத்துப் போடுவானா? வீரமும் பலமும் மட்டுமே தகுதியாக இருக்கும் பட்சத்தில், பிற குணநலன்களெல்லாம் சீரழிந்த ஒருவன் தனக்கு மாலையிட்டு விடுவானோ என்ற பயமும் இருந்தது.

ஆனால் சிவதனுசு தெய்வீகம் நிரம்பியது. நல்லொழுக்கம் இல்லாதவனால் அதை அசைக்கவே முடியாது என்ற உண்மை அவளுக்குத் தெரியவில்லை.

ஏக்கத்தோடு உப்பரிகைக்கு வந்தாள். மன மாற்றத்துக்காக அரண்மனைக் காட்சிகளில் மனதை லயிக்க விட்டாள். பளிச்சென்று கண்களில் சுடரொளி. ‘அதோ, தூரத்தில் சூரியன்போல பிரகாசித்துக் கொண்டு வரும் அந்தப் பேரழகன் யார்? முன்னால் ஒரு முனிவர் வருகிறார். அவனுக்குப் பின்னால் அவனுடைய சாயலில், அடக்கத்தோடு குனிந்த தலை நிமிராமல் ஓர் இளவல். இருவருக்கும் நடுவே கண்கூசாத பிரகாசம். மனதுக்குள் மகரந்தமாக மணம் வீச வைக்கும் தோற்றம். இவனும் வில்லேந்திதான் வருகிறான். அரண்மனைக்குள் வருவானா, சிவதனுசைப் பற்றி நாணேற்றுவானா, என் கழுத்தில் மங்கல நாண் சூட்டுவானா?’

தவித்தாள் சீதை. இந்தப் புது உணர்வில் அவளுடைய கண்களும் மனமும் படபடத்தன. அக்கம் பக்கம் தன்னை வேடிக்கை பார்க்குமே என்ற நாணம் சிறிதும் இன்றி, வைத்த விழி வாங்காமல் வீரனின் மனதை ஊடுருவ முயன்றாள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:27 am

பளிச்சென்று அவளுடைய மனதில் ஒரு மின்னல். ஆமாம் அண்ணலுக்கும் அவள் மனம் பேசுவது கேட்டதோ? எண்ண அலைகள் சங்கமித்தனவோ? அதன்பலனாய் அவனும் நிமிர்ந்தான். பார்வைக் கோடுகள் ஒன்றோடொன்று சந்தித்து, கலந்து, முழுமன நினைவாக, முழு உடல் உணர்வாக நெகிழ்ச்சியூட்டிக் கொண்டன.

ஒரு விநாடிக்கும் குறைவான நேரம்தான். மனமின்றி கால்கள் பயணத்தைத் தொடர, அவன் முன்னே சென்றான். இவளும் மனமின்றி பார்வையை விழிக்குள் வாங்கி, இமைமூடி பிரார்த்தித்தாள். மூடிய விழிகளிலிருந்து கசிந்து வந்த கண்ணீர் அந்தப் பிரார்த்தனையின் யுகாந்திர தவத்தைப் புரிய வைத்தது. விசுவாமித்திரர், ராமனையும் லட்சுமணனையும் ஜனகரின் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார்.

பகலிலேயே, தூங்காமல், விழி மூடாமல், கனவில் சஞ்சரித்தாள் சீதை. தன்னைக் கண்ணோடு கண் நோக்கியவன் தன் காதலனாவானா, தன்னைக் கரம் பிடிப்பானா என்று ஏங்கித் தவித்தாள். ஆனால் சிவதனுசு என்ற நந்தி குறுக்கே நிற்கிறதே! ‘ஏ, சிவதனுசே, நான் மனதார விரும்பும் நாயகனின் கைக்குள் நீ அடங்கிவிடு. அவனுக்காக வளைந்து கொடுத்து நாணேற்றிக்கொள். இது அவனுக்காக இல்லை, எனக்காக ஆமாம், இத்தனை நாள் இந்த அரண்மனையில் உன்னுடனேயே வாழ்ந்து வருகிறேனே, உன் தங்கைக்காக. என் மனமொப்பியவருடன், இனிது நான் வாழ நீதான் வளைந்துகொடுத்து ஆசி வழங்க வேண்டும்’ என்று உளமாற வேண்டிக் கொண்டாள்.

ராமனும் மனசுக்குள் காதல் வயப்பட்டிருந்தான். ஒரு வீச்சுப் பார்வையிலேயே என்னை முற்றிலுமாக கவர்ந்துவிட்ட அவளை, இந்த தேசத்து ராஜகுமாரியை, நான் மணக்க இயலுமா?
யோசித்தபடியே சென்றவனை ஜனகர் வரவேற்றார். ஆரம்பகட்ட உபசரிப்புகள் முடிந்ததும், தன் மகள் சீதையை மணமுடிக்க, தான் வைத்திருக்கும் நிபந்தனையையும் சொன்னார். பலபேர் வந்து முயன்று தோற்ற கதைகளையும் சொன்னார்.

ராமன், தன்னை அங்கே அழைத்து வந்திருந்த தன் குரு விசுவாமித்திரரைப் பார்த்தான். அவர் மனசுக்குள் சிரித்துக்கொண்டார். ‘தெரியாமலா உன்னை இங்கே அழைத்து வந்தேன், ராமா? நீ மணமுடிக்கும் நாள் வந்துவிட்டது. உன் தகுதிக்கும் அழகுக்கும் பண்புக்கும் ஏற்ற பெண்ணை உன்னுடன் இணைத்து வைக்க வேண்டிய என் பொறுப்பும் முடிய வேண்டும். ஆமாம், ஒரு பொய் சொல்லச் சொல்லி அரிச்சந்திரனையும், அவன் மனைவி சந்திரமதியையும் பிரித்து வைத்து பாவம் தேடிக் கொண்டேனே... அதற்கு பிராயச்சித்தம்தான் இது.’

தன் நினைவோட்டத்திலிருந்து விடுபட்ட முனிவர் ராமனைப் பார்த்து சம்மதமாகத் தலையசைத்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:28 am


தம்பி லட்சுமணனைப் பார்த்தான், ராமன்.

‘அண்ணா, உங்கள் கண்ணுக்குள்ளும் மனசுக்குள்ளும் புகுந்த காரிகையை, உங்கள் மீது காதல் கணை வீசியவரை, இந்த சிவதனுசில் நாணேற்றி வெல்லுங்கள்’ என்று கண்களாலேயே தன் விருப்பத்தைச் சொன்னான். அண்ணன் ஆணையிட்டால் தன்னாலேயே அந்த தனுசில் நாணேற்றிவிட முடியும். ஆனால் அது அண்ணன் புகழுக்கு இழுக்கு உண்டாக்குமே என்றுதான் வாளாவிருந்தான். சீதையைக் கண்டபிறகு அண்ணனின் பழகு முறையில் ஏற்பட்டிருந்த வெட்கம் கலந்த மாற்றத்தை அவனால் உணர முடிந்தது. ஆகவே வெற்றி நாயகனாக இத்தருணத்தில் விளங்க வேண்டியவன் அண்ணனே என்று முடிவுக்கும் அவன் வந்திருந்தான்.

ராமன் சிவதனுசைப் பற்றினான். அது ஏற்கெனவே சீதையின் மானசீக வேண்டுகோளை செவி மடுத்திருந்ததோ? மிக எளிதாக அவனுடைய கைக்குள் குழைந்து நின்றது. நிமிர்த்திய தனுசின் கீழ் முனையைத் தனது வலது பாதத்தால் பற்றிக் கொண்டான் ராமன். மேல் முனையை வருடியபடி அதில் நாணைப் பூட்டினான். மேல் முனை நெகிழ்ந்தது. அண்ணலின் திரு முடியையும் அவனுடைய கருணை ததும்பும் விழிகளையும் பார்த்துப் பரவசப்பட்டிருந்தது தனுசு. ஆனால், இதென்ன, தன்னுடைய கீழ்முனைக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறது!

ஆமாம்... ராமனின் பாதம் பட அதுதான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ராமனின் முடியைக் கண்டு மகிழ்ந்தாலும் அவனுடைய அடியையும் காணும் ஏக்கத்தில் அப்படியே வளைந்து குனிந்து, மிக மிகக் குனிந்து, பாக்கியம் பெற்ற தன் கீழ்முனையைப் பார்க்க... ‘படீர்’ என்ற வெடிச்சத்தத்துடன் தனுசு முறிந்தது. ‘போதும், இந்தப் பிறவியில் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி ஒரு பிறவி வேண்டேன்’ என்ற நிறைவு அந்த ‘படீரி’ல் தெரிந்தது. அப்படியே இரண்டாக உடைந்து ராமன் பாதத்திலேயே விழுந்து சரண மோட்சம் அடைந்தது.

வையகமே மகிழ்ந்தது. சீதைக்குப் பொருத்தமானவன். அவனை அவள் மணப்பதில்தான் எல்லோருக்கும் எவ்வளவு சந்தோஷம்! ஜானகி, ஜானகி மணாளனானாள். மூவுலகத்தாரும் மலர் சொரிந்து வாழ்த்த, ராமன் சீதையின் கைத்தலம் பற்றினான்.
-
நன்றி- தினகரன் (ஆன்மிகம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக