புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
115 Posts - 42%
heezulia
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
7 Posts - 3%
sugumaran
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
3 Posts - 1%
manikavi
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
366 Posts - 49%
heezulia
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
25 Posts - 3%
prajai
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என் நிழல் நீயடி Poll_c10என் நிழல் நீயடி Poll_m10என் நிழல் நீயடி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நிழல் நீயடி


   
   

Page 1 of 2 1, 2  Next

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Tue Jan 15, 2019 10:51 pm

என் நிழல் நீயடி
அத்தியாயம் -1
நகரின் மத்தியில் அமைந்துள்ள  தனியார் மருத்துவமனை வெள்ளை தேவதைகளாய் செவிலியர்கள் உலா வர அமைதியான மெல்லிய குளிரோடு கூடிய அறையில் உரிய மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சுவாசித்து கொண்டு கொடுக்கபட்ட மருந்துகளின் விளைவால் உறக்கத்தின் பிடியில் இருந்தார் ஸ்ரீதரன்
நேர் எதிராக துளியும் ஊனுறக்கமின்றி கண்களில் உயிரை தேக்கி கொண்டு இறைவனிடம் கணவனின் உயிரை யாசித்தபடி நின்றிருந்தார் கலாவதி . அவருக்கு அருகே தன் தாயின் கரம் பற்றியபடியே ஆறுதல் சொல்லியவாறு நின்றிருந்தான் சரத்.கொஞ்சம் தள்ளி டாக்டர்களிடம் ஸ்ரீதரின் உடல் நிலை குறித்து விவாதித்து கொண்டிருந்தார் குமார்
இங்க பாருங்க குமார் இப்போ பேஷண்ட் இருக்குற உடல் நிலையில அவருக்கு அதிக கவலையோ இல்ல அதிக வேலயோ குடுக்க கூடாது அது மட்டுமில்லை அவருக்கு இது முதல் ஹார்ட் அட்டாக் வேற சரியான நேரத்துல கொண்டு வந்ததுனால எங்களால காப்பாத்த முடிஞ்சது அவரோட கவலை என்னனு கேட்டு அத தீர்த்து சந்தோஷமா வெச்சுக்க பாருங்க
ஒரு நாள் அப்செர்வேஷனுக்கு அப்புறம் அவரை டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம் இந்த ஹாஸ்பிட்டல் பில் எல்லாம் இன்ஷுரன்ஸ் ல கிளைம் ஆயிடுச்சு அதுனால பில்லை  பத்தி கவலை படவேண்டாம் நைட் யாராவது ஒருத்தர் துணைக்கு படுத்தா போதும் தயவு செஞ்சு மத்தவங்களை வீட்டுக்கு போக சொல்லுங்க என்றனர்
கலாவதியிடம் வந்த குமாரோ ஏம்மா ஷியாமுக்கு சொல்லியாச்சா? என கேட்க சொல்லியாச்சு அவன் உடனே கிளம்பி வரேனு சொல்லிருக்கான் வர வேண்டிய நேரம்தான் நாந்தான் நேரா ஹாஸ்பிட்டலுக்கே வரசொல்லிருக்கேன் என்று சொல்லி வாய மூடவில்லை நமது ஹீரோ ஷியாம் ஓடி வந்தான்
வந்தவன் சரத்திடம் என்ன ஆச்சு சரத் இப்போ எப்படி இருக்கு என கேட்க குமார் டாக்டர் சொன்னதை எல்லாம் சொல்லி ஷியாம் உங்கப்பாவும் நானும் ரொம்ப வருஷமா  ப்ரெண்ட்ஸ் ஒரே காலனில அடுத்த அடுத்த வீட்டுல வேற குடியிருக்கோம் அவன் ரொம்ப நல்லவன்பா இனிமேலாவது உன் பிடிவாதத்த விட்டு அவனை அப்பானு பழைய மாதிரி கூப்பிடு
சரி அங்கிள் நீங்க சரத்தையும் அவங்கம்மாவயும் வீட்டுல விட்டுடுங்க அவங்க ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வரட்டும் நான் இங்க நைட் துணை இருந்துட்டு அவரை காலையில வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் அங்க வெச்சு பேசிக்கலாம்
கண்ணீருடன் பேச முயன்ற கலாவதியின் முகம் கூட பார்க்கவில்லை ஷியாம் சரத்தும் குமாரும் சமாதானபடுத்தி அழைத்து செல்ல தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசி விட மாட்டானா? என திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டுக்கு சென்றார் கலாவதி
சீரான உறக்கத்தில் இருந்த ஸ்ரீதரனின் முகத்தை பார்த்தபடியே அருகே அமர்ந்திருந்தான் ஷியாம் இரவு பணியில் இருந்த நர்ஸ் வந்து தன் வழக்கமான சோதனைகளை முடித்த உடன் அவனை பார்த்து சார் எவளோ நேரம் தான் இப்படியே உக்காதிருப்பீங்க போய் நீங்க எதாவது சாப்பிட்டுட்டு வாங்க சார் ஆபிசுல இருந்து நேரா இங்க  வந்த மாதிரி தெரியுது நீங்க வரவரைக்கும் நான் பெரியவரை பத்திரமா பாத்துக்கறேன் என சொல்ல அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு கேண்டீனுக்கு கிளம்பினான்
கிளம்பிய அவனை அந்த வாசலைக்கூட தாண்ட விடாமல் தடுத்தது அந்த உருவம் மெல்லிய குரலில் உனக்குதான் மாத்து ட்ரெஸ் சாப்பாடு எல்லாம் கொண்டு வந்திருக்கேன் உனக்காக எங்க வீட்டுல செஞ்சது யார் மேலயோ இருக்குற கோவத்தயெல்லாம் சாப்பாட்டுல காட்டாம ஒழுங்கா சாப்பிடு காலேல காபி டிபனோட வந்து பாக்குறேன் மவனே சாப்பிடாம இருந்தேனு வெச்சுக்க என்ன பத்தி தெரியுமுல என சொல்லிவிட்டு பின்னல் அசைந்தாட திரும்பி சென்றாள் அந்த தேவதை
அதுவரை இருந்த சோகம் மறைந்து மெல்லிய குறுநகையுடன் அவள் குடுத்த உணவை பெற்று கொண்டு திரும்பினான் விசித்திரமாக பார்த்த நர்ஸூக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி அனுப்பி விட்டு அவள் சொல்லியபடி உடை மாற்றிக் கொண்டு உணவையும் உண்டு முடித்தான்
சேரில் உட்கார்ந்தவாரே தன் தகப்பனை பார்த்துகொண்டிருந்த ஷியாம் மெல்ல கண் அயர்ந்தான் திடுக்கிட்டு கண் விழித்து பார்க்கையில் பொழுது புலர்ந்திருந்தது ஸ்ரீதரனும்  கண்விழிக்க துவங்கினார் மெல்ல கண் திறந்து பார்க்கையில் ஷியாமை கண்டு நம்பமாட்டதவராக எழ முயற்சி செய்தார் உடனே அவரின் தோள் பற்றி படுக்க வைத்துவிட்டு நர்சை அழைத்து அவரின் உதவியுடன் காலை கடன்களை முடிக்க வைத்தான்
தம்பி எப்போ பா வந்தே ? மத்தவங்க எல்லாம் எங்கே? என ஸ்ரீதரன் கேட்க ஷியாம் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் எல்லாரும் வீட்டுல இருக்காங்க அங்கிள் என்று பதில் கொடுத்தபடி அவரிடம் வந்தாள் சந்தனா
பேருக்கு ஏற்றபடி பாலில் சந்தனமும் கலந்ததுபோல நிறத்துடன் நெற்றியில் திருநீற்றின் கீற்று துலங்க இடையை தாண்டி ஆடிய பின்னலோ கருநாகமென நீண்டிருந்தது குறுகுறுவென சதிராட்டம் ஆடும் கருவிழிகளின் குறும்பு மின்னும்  மொத்தத்தில் அழகும் புத்திசாலிதனமும் குறும்பும் மின்னும் தேவதை பெண் இவள்
மெல்லிய புன் முறுவலுடன் உள்ளே வந்தவளை வா என தலையசைத்து அழைத்தார் ஸ்ரீதரன் என்னம்மா சவுண்ட் சரோஜா வரும் போதே ஊரை கூட்டாம வரமாட்டியா? உனக்கு  சந்தனானு பேர் வெச்சதுக்கு சைரன் நு பேர் வெச்சிருக்கலாம் என வம்பிழுத்தபடியே வந்தான் ஷியாம்.
நற நற வென பல்லை கடித்தவாறே  அங்கிள் உங்க பையன எங்கிட்ட வம்பு வெச்சுக்க வேணாமுனு சொல்லுங்க இல்ல நடக்குறதே வேற என சொல்ல அவளை தாண்டி அவன் சென்ற பார்வை யாரையோ தேடியது ம்ம் என கனைத்த சந்தனாவோ ஷியாம் நீங்க தேடுற ஆள் கீழ வண்டிய பார்க் பண்ண போயிருக்கு என காதை கடிக்க மெல்ல அசடு வழிந்தவாரே வந்திருக்காளா ? என கேட்டான்
நீ வந்ததுக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் அம்மணி வீட்டுல இருக்குமா ? நல்லா கேக்குறான் பாரு கேள்விய? போதும் லிட்டர் கணக்குல வழியுது தொடை என சந்தனா ஓட்ட எல்லாரும் சிரித்தனர் .மெல்லிய புன்முறுவலுடன் அந்த அறையில் நுழைந்த சக்தியின் கண்கள் ஷியாமிடம் நிலைத்தது அவளின் பார்வைக்கு பதில் பார்வை வீசியபடியே சந்தனாவிடம் ஆமா உன் கைல என்ன அது பேக்?
எல்லாம் உனக்கு பிடிச்சதுதான் காலேலயே எந்திரிச்சு செஞ்சு எடுத்துட்டு வந்தோம் என சந்தனா சொல்ல யாரு இத  நீ செஞ்சே இத நான் நம்பனும் என ஷியாம் கேட்க நேத்து ராத்திரி மட்டும் நான் கொண்டு வந்து கொடுத்த உடனே சாப்பிட்ட அப்போ தெரியலயா யாரு செஞ்சதுனு என சந்தனா எகிற பசி ருசியறியாதுனாலும் அதை பாத்த உடனே நீ செஞ்சது இல்லனு புரிஞ்சு போச்சு அதனால தான் தைரியமா சாப்பிட்டேன் என்று வாரினான் ஷியாம் உன்னை என்ன பண்றதுனுனே தெரியல? நீ மட்டும் என்னிக்காவது எங்கிட்ட மாட்டு அன்னைக்கு உன்னை குர்பானி குடுத்துடறேன் என்றாள் சந்தனா
பேச்சின் இடையே அவர்கள் கொண்டு வந்திருந்த காலை உணவை காலி செய்தனர். பின்னர் கிளம்பிய பெண்கள் இருவரும்  ஸ்ரீதரிடம் சொல்லி கொள்ள அவர்களை வாசல் வரை வந்து வழிஅனுப்பினான் ஷியாம் .போய் ஸ்கூட்டிய எடுத்துட்டு வரேன் என சந்தனா கிளம்ப வேண்டாம் பா இத பிடி நானே எடுத்துட்டு வரேன் என சாவியை பிடுங்கி கொண்டு ஓடினாள் சக்தி
ஷியாம் என்ன ஆச்சு உங்களுக்குள ? நான் உனக்கும் அவளுக்கும் பொதுவான ப்ரண்ட் எனக்கு தெரியும் நீயும் அவளும் எவள்ளவு உயிருக்கு உயிரா காதலிச்சீங்கனு இதோ இப்பொ கூட அவங்க அப்பாகிட்ட மட்டும்  சொல்லிட்டு உன்னை பார்க்க ஓடிவந்திருக்கா ? வந்ததுலேர்ந்து பாக்கறேன் ஒரு வார்த்தை கூட ரெண்டு பேரும் பேசிக்க மாட்டேங்கறீங்க  
சந்து இத நீ அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாமே? என ஷியாம் கேட்க
ஹீம் அவளா கல்லுல இருந்து கூட நார் உறிச்சிரலாம் அவகிட்ட இருந்து  உன்னை பத்தி ஒரு விஷயத்த கறந்துட முடியுமா ? சரியான கல்லுளி மங்கியாச்சே வெக்கம் கெட்டு போய் கேட்டும் பாத்தேன் எனக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும் அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சமாச்சாரம் மாதிரி அதை ஏண்டி கேக்குறே? என சொல்லிட்டா என சொல்லி முடிக்கவும் வண்டியுடன் சக்தி வரவும் சரியாக இருந்தது சக்தியை கண்டவுடன் சந்தனா ஓட கண்கள் மின்ன தன்னிடம் விழியால் விடை பெற்றவளை  கண்டு சிலையாய் நின்றான் ஷியாம்

ஷியாம் மற்றும் சரத்தின் துணையுடன் வீட்டுக்கு வந்த ஸ்ரீதரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கலாவதியும் சீதாவும் (குமாரின் மனைவி) கைத்தாங்கலாக கூட்டிகொண்டு வந்த தகப்பனை அமர செய்துவிட்டு கூட வந்த குமாரிடம் அங்கிள் நான் மாடிக்கு போய் ப்ரெஷ் ஆயிட்டு வரேன் ஊருக்கு கிளம்பற ஏற்பாட்ட பாக்கணும் என் சொல்லியவாறே மாடியேற எத்தனித்த ஷியாமை நில்லுப்பா நாங்களும் இங்க இருக்கோம் நாங்க சொல்றதயும் கேட்டுட்டு மாடிக்கு போயேன் என்றார் பரதன் (சக்தியின் அப்பா)
உனக்கும் என் பொண்ணுக்கும் நிச்சயம் முடிஞ்சு ஆறு மாசமாச்சு  அன்னைக்கு எதோ சின்ன சண்டை நடந்துச்சுனு நீ உன்னை பெத்தவங்களோட பேசாம இருக்குறதும் என் பொண்ணு உன் கூட பேசாம இருக்குறதும் நல்லா இல்ல தவிரவும் ஊரரிய உனக்கு நிச்சயம் பண்ண பொண்ண இன்னொருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதும் கஷ்டம் உன்னை பெத்தவங்கள கேட்டா அவன் சரினா இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்க ரெடிங்கறாங்க என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லிட்டு ஊருக்கு நீ கிளம்பிக்கோ இது வரைக்கும் நான் பொறுமையா இருந்ததே உன் அப்பா என் நெருங்கிய ப்ரெண்ட்கறதுனாலதான் என பொரிய
அடிபட்ட விழிகளுடன் அவரை பார்த்தான் ஷியாம் அங்கிள் உங்க பொண்ணுக்கு சம்மதம் நா நான் நாளைக்கே தாலி கட்ட ரெடி ஆனா நான் இப்போ ஊருக்கு போறது என் வேலைய பெங்களூர் ப்ரஞ்ச் ல இருந்து சென்னைக்கு மாத்திக்கிட்டு வரத்துக்குதான்
என்னைக்கு உங்க பொண்ணு என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வராளோ அன்னைக்கு  தான் என்னை பெத்தவங்களோட நான் பேசுவேன் அதிகபட்சமா இந்த மாச கடைசியில இந்த ஊருக்கு வந்திருவேன் நீங்களும் பாரதி ஆண்டியும் பேசி முடிவெடுத்துட்டு எங்க வீட்டுல சொல்லுங்க என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்
பரிதாபமாக ஸ்ரீதரனை பார்த்த பரதனோ கிளம்பறேன் பா என சொல்லிவிட்டு கிளம்ப நில்லுங்கண்ணா என ஒலித்தது கலாவதியின் குரல் அண்ணா இன்னைக்கு ஜனவரி 1 வர 26ம் தேதி நல்ல முகூர்த்த நாள் அன்னைக்கு கல்யாணத்துக்கு ரெடியாயிக்கங்க என் மருமக கேட்டுகிட்ட படி நான் பாரதிகிட்ட வந்து பேசி சரி பண்ணறேன் என்றாள்
எப்படி பாத்தாலும் நான் பாரதிய பேசுன விதம் தப்புதான் தப்பு பண்ண நான் அதை சரி பண்ணறதுதான் நியாயம் என்று சொல்லியபடியே வாசலை பார்த்தாள் அந்நேரம் கணவனை காண அங்கு வந்த பாரதியோ கலா பேசியதை கேட்டு வேண்டாம் கலா இப்படியெல்லாம் பேசாதே அப்படியென்ன நடந்திருச்சு நீ வருத்தபட நமக்குள்ளே ஆயிரம் இருக்கும் அதை கேள்விகேட்க நம்மை கட்டுனவங்களுக்கே உரிமை இல்ல இதுல நாம பெத்ததுங்க தலையிட்டதே மகா தப்பு இத காரணம் காட்டி சண்டை  வேற போடுதுங்க பாரு இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது நீ வருத்த படாதே நீ சொன்ன மாதிரி வர ஜனவரி 26 கல்யாணம் நடக்கும் அந்த சக்தி கழுதைகிட்ட நான் பேசிக்கறேன் என சமாதான படுத்தினாள் அப்படியென்ன இவங்களுக்குளே சண்டைனு கேக்குறீங்களா நட்பூஸ் அத அடுத்த எபிசோடுல சொல்றேனே

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Tue Jan 15, 2019 10:52 pm

சொந்தங்களே இதோ என் அடுத்த படைப்பு . இதை வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை பதிப்பிக்கிறேன் . உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர் பார்க்கிறேன் நன்றி

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Tue Jan 22, 2019 10:45 am

அத்தியாயம் -2
ஆறு மாதத்துக்கு முன் சக்தி ஷியாம் நிச்சயதார்த்தம் நடந்த அந்த நாளில் துவங்கிய பிரச்சனை இது அதை அறிந்து கொள்ள நாமும் அந்த நாளைக்கு செல்வோமா ?
முகம் முழுவதும் வெட்கம் பூசியபடி கன்னா கதுப்புகளில் இளம் ரோஜாக்கள் பூத்திருக்க சக்தி அமர்ந்திருந்தாள் கல்லூரி நண்பர்கள் கலாட்டா செய்துகொண்டிருக்க அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியபடி தன்னவளை பார்வையாலயே தின்று கொண்டிருந்தான் ஷியாம். சரத் அங்கும் இங்கும் பொறுப்பாக அலைந்து கொண்டிருக்க அவனை பின் தொடர்ந்த கண்ணையும் மனதையும் கட்டு படுத்தமுடியவில்லை சந்தனாவால்.
மெல்ல நிகழ்ச்சிகள் முடிவடைந்து குடும்பத்தினர்களும் நண்பர்களும் மட்டுமே அமர்ந்திருந்தனர் சீதாவும் சந்தனாவும் வீட்டுக்கு செல்ல புறப்பட அவர்களை விட்டுவிட்டு வர சென்றான் சரத் ஒரு முக்கிய பணி நிமித்தமாக குமார் வெளியூர் சென்றுவிட சரத் அந்த பொறுப்பை ஏற்றுகொண்டான்
அங்கே நுழைந்த வயதான தம்பதிகளை வாங்க என வரவேற்று அழைத்து சென்றாள் பாரதி அவர்களை கண்ட கலாவதியின் முகமோ வெளுத்தது மின்வெட்டாக ஸ்ரீதரின் பார்வையயை சந்தித்த போது அவர் அவர்களை எதிர்பார்த்தது போலவே நடந்துகொள்ள கண்மண் தெரியாத கோபம் வந்தது கலாவதிக்கு
எதிர்கால தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தப் பின் சாப்பிட்டுவிட்டு வரும் வரை பொறுமையாக இருந்த கலாவதி அவர்கள் முன் போய் நின்று எதுக்காக இங்க வந்தீங்க என் நிம்மதிய கெடுக்கவா? என கத்த சத்தம் கேட்டு கூடியவர்கள் ஒன்றும் புரியாமல் முழிக்க சட்டென அங்கு வந்த பாரதிய பாத்து நீதான் இவங்களை கூப்பிட்டயா? என கேட்டாள் ஆமாம் என பாரதி சொல்லி முடிப்பதற்குள் கலாவதியின் கை பாரதியின் கன்னத்தில் இடியென இறங்கியது பதிலுக்கு என்ன செய்யுறா கலா? என கத்தியவாறே வந்த ஸ்ரீதரன் ஓங்கி கலாவை அடித்துவிட அனைவரும் விக்கித்து நின்றனர் அவங்கள கூப்பிட்டது பாரதி மட்டுமில்ல நானும் தான் ஆனா உனக்கு தெரிஞ்சா சங்கடபடுவாயேனு மறைச்சோம் அவளோதான்
தன் உயிர் தோழியின் கைகளால் அடி வாங்கிய அவமானம் தாங்காமல் உள்ளே ஓடிய பாரதி அழுகையினூடே சுயநினைவை இழக்க துவங்க அவளை சமாதான படுத்த உள்ளே ஒடிய பரதனின் மற்றும் சக்தியின் அலறல் அனைவரையும் அங்கே இழுத்து வந்தது உடனடியாக செயல்பட்டு டாக்டர் வந்து பார்த்தபின் சாதாரண மயக்கம் என சொல்லிவிட்டு சென்றார்
ஒவ்வொருவராக பாரதியை வந்து பார்த்துவிட்டு செல்ல கடைசியில் வந்தார் கலாவதி அவள் வந்த நேரம் பாரதி கண்விழிக்க துவங்க அவரிடமும் பரதனிடமும் மன்னிப்பு கேட்டாள் கலாவதி இருக்கட்டும்மா நீ என்ன வேணுமினா அடிச்ச எதோ கோபம் கைய மீறிடுச்சு பரவாயில்லை இத இதோட விட்டுடுவோம் என பரதன் கூறினார்
அனைவரும் உறங்க செல்ல கனத்த மனதுடன் அடுத்தடுத்து நாட்களும் சென்றது ஒரு நாள் மதியவேளையில் வந்த தொலைபேசி தகவல் பாரதியையும் கலாவதியையும் உலுக்கி போட்டது ஆம் அந்த முதிய தம்பதிகளின் மரண செய்திதான் அது செய்தி கேட்டு அம்மா என பாரதி கூவ ஐயோ அத்தை என அலறினாள் கலாவதி
இரண்டு குடும்பங்களும் உடனே அங்கே செல்ல ஐயரின் வழிகாட்டுதலின் படி இறுதிசடங்குகள் ஏற்கனவே பங்காளிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தது கிட்டதட்ட கொள்ளி வைக்கும் நேரத்துக்கு சென்றபோது யார் கொள்ளி வைப்பது என்ற தகராறும் நடந்து கொண்டிருந்தது. யாரும் வைக்கவேண்டாம் இதோ இருக்கான் அவங்க பேரன் என ஸ்ரீதர் ஷியாமை கைகாட்ட
மெல்ல ஷியாமின் அருகில் வந்த பரதன் ஷியாம் இங்க எதுவும் பேசாதே நாங்க சொல்றபடி செய் நீ இப்போ கொள்ளி போட போறது உன் அப்பாவ பெத்த தாத்தா பாட்டிக்குதான் அதுவும் உன் அப்பா உயிரோட இல்லை அதனாலதான் என சொல்ல அதிர்ச்சி தாங்காது திகைத்து நின்றான் ஷியாம். இயந்திரகதியில் ஷியாமால் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு பெரியவர்கள் கரையேற்றபட உன் அப்பா உயிரோட இல்ல என பரதன் சொன்னதில் இருந்து குழப்பத்திலிருந்த ஷியாமோ தனிமை தேடி தவித்தான்
ஷியாம் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய அந்த நேரமும் வந்தது இறுதிக்காரியங்கள் நிறைவடைந்த அன்று வந்த அவர்களின் வக்கீல் பெரியவர்களின் உயிலை படித்தார் அதன்படி அந்த வீடு நிலங்களை விற்று வரும் பணம் ஷியாமை சேரும் எனவும் நகைகள் பண்ட பாத்திரங்கள் அனைத்தும் விற்று வரும் பணம் யாவும் தங்கள் மகளான பாரதியை சேருமெனவும் குறிப்பிட்டிருந்தனர் தாங்கள் உயிரோடு இருந்த போது செய்த தவறுகளுக்கு கலாவதியிடமும் ஸ்ரீதரனிடமும் மன்னிப்பு கேட்டிருந்தனர் .உயிலை படித்த வக்கீலோ சார் பெரியவங்க இருந்த போதே எல்லாம் ஏறத்தாழ முடிச்சி வெச்சிருக்காங்க நீங்க எப்போ கிளம்பரீங்கனு தெரிஞ்சா அதுக்கு தகுந்தமாதிரி ஏற்பாடு செய்யலாம் என்றார்
அதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்த ஸ்ரீதரன் வக்கீல்சார் பத்து நாளைக்குள்ள நாங்க கிளம்பற மாதிரிதான் இருக்கும் நீங்க இதுக்குள்ள எல்லா ஏற்பாடும் முடிச்சுக்குங்க தம்பிகிட்ட நான் பேசிக்கறேன் அன்று மாலை ஷியாமிடம் வந்த ஸ்ரீதர் வாப்பா நம்ம அப்படியே நடந்துட்டு வரலாம் என கூப்பிட அவர் எதோ தன்னிடம் தனியாக பேசவிரும்புகிறார் என புரிந்து கொண்டவன்
அவருடன் இணைந்து நடக்க துவங்கினான் அந்த ஊரின் ஆற்றங்கரைக்கு வந்த இருவரும் அமைதியாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர் மெல்ல பேசத்துவங்கிய ஸ்ரீதர் என்னப்பா எல்லாம் மர்மமா இருக்கா ? ஆமாம் உங்களை இதுவரைக்கும் அப்பானு தான் கூப்பிட்டு இருக்கேன் எங்கிட்ட போய் நான் உனக்கு அப்பா இல்ல அதனால உன் தாத்தா பாட்டிக்கு கொள்ளி வை அப்பிடினு சொன்னா எப்படி இருக்கும் ? இங்க பாரு ஷியாம் இவளோ உணர்ச்சி வசப்பட கூடாதுப்பா மொதல்ல என்ன நடந்தது நு தெரிஞ்சுகோ
நான் உங்க அப்பா எல்லாரும் இதே ஊரை சேந்தவங்கதான் உங்கப்பாவுக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருந்தது அவனை கண்ட்ரோல் பண்ண முடியாத உங்க தாத்தாவும் பாட்டியும் கல்யாணம் பண்ணா திருந்திடுவானு நினைச்சாங்க
உள்ளூருல யாரும் பொண்ணு கொடுக்க முன்வாராததால வெளியூர்ல பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க அப்போ தெரிஞ்ச தரகர் மூலமா தான் யாருமே இல்லாத அனாதையா இருந்த உங்கம்மாவ பத்தி தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சாங்க உங்கம்மா நல்ல அழகு மட்டுமில்ல குணவதியும் கூட கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே தன் புருஷன பத்தி தெரிஞ்சுகிட்ட அவங்க அவரை திருத்த முயற்சி பண்ணாங்க நடுவுல கொஞ்ச நாள் நல்லா போச்சு உங்க அத்தை பாரதிக்கும் கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போயிட்டாங்க
எனக்கும் சொந்த ஊரிலேயே டீச்சர் வேலை கிடைச்சு வந்தேன் எங்கப்பா உங்க தாத்தாவோட வயலுல தான் வேலை பார்த்து இருந்திருக்கார் அவர் இறந்ததுக்கு அப்புறம் எங்கம்மா என்னை இந்த ஊரை விட்டே கூட்டிகிட்டு போய்ட்டாங்க மறுபடியும் இந்த ஊருக்கு வந்த சந்தோஷத்துல எனக்கும் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருந்த வேளை அந்த சமயம் எனக்கு ஒரு வரன் கூடி வந்தது வேற யாரும் இல்லாததால உங்க தாத்தாவை போய் பாத்து பெண் பார்க்க அழைச்சிட்டு வந்தாங்க
பெண் பாத்து நிச்சயம் வரைக்கும் வந்தது. நிச்சயம் முடிஞ்சு ஊருக்கெல்லாம் கல்யாண பத்திரிகை வினியோகம் பண்ணிக்கிட்டு இருந்தோம் அப்படி ஒரு நாள் ராத்திரி வினியாகம் முடிஞ்சு வந்தப்ப உங்கம்மா நடுவழில மயக்கம் போட்டு விழுந்து கிடந்தத பாத்தேன் உடனே பக்கத்துல்ல இருந்த ஆஸ்பத்திரில சேத்துட்டு உங்க வீட்டுக்கு தகவல் சொல்ல போனேன் உங்கப்பாவையும் காணாம உங்க தாத்தாவும் பாட்டியும் தவிச்சுக்கிட்டு இருந்ததால மனசு கேட்க்காம எங்கம்மாவை உங்கம்மாவுக்கு துணைக்கு வெச்சிட்டு உங்கப்பாவ தேடிப்போனோம் நானும் உங்க தாத்தாவும் அங்க உங்கப்பா குடிபோதயில கள்ள சாரயத்தை குடிச்சிட்டு இறந்து கிடந்தார்
அவர் கூட வெளில போன உங்கம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு வழில பாத்த பழைய நண்பனோட சரக்கு அடிக்க போயிருக்கார் உங்கப்பா நடுராத்திரில தனியா வந்த உங்கம்மாவ நாலு ரவுடிங்க துரத்த தப்பிச்சு ஓடி வந்த போதுதான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க என்ன பார்த்த உடனே ரவுடிங்க ஓடிட்டாங்க உங்கப்பாவோட இறுதி காரியம் முடிஞ்ச உடனே என் கல்யாணத்தை நடத்த நினைச்சபோது தான் எனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு வீட்டுல அந்த பொண்ணுக்கு கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணுற விஷயம் உங்க அத்தை மூலமா தெரிய வந்தது கல்யாணத்த நிறுத்திட்டேன் இந்த ஊர்லேந்தும் மாற்றலாகி போயிட்டேன்
கொஞ்ச நாள் கழிச்சு உங்க தாத்தா பாட்டிய பாக்க வந்த போதுதான் உங்கம்மா கர்ப்பமா இருக்கறதும் நான் உங்கம்மாகிட்ட சகஜமா பேசுனத வெச்சு அவங்களையும் என்னையும் சேத்து வெச்சு உங்க தாத்தா பாட்டி சந்தேக பட்டதும் தெரிய வந்தது உங்க அத்தை மூலமா புரிய வெக்க முயற்சி பண்ணப்போ பிரச்சனை பெருசாகி ஊர் பஞ்சாயத்து கூட்டிட்டாங்க
பஞ்சாயத்துல தன் செல்வாக்கை உபயோகபடுத்தி உங்கம்மாவையும் எங்க குடும்பத்தையும் ஊரை விட்டே தள்ளி வெச்சார் உங்க தாத்தா எங்கம்மாவையும் கூப்பிட்டு பேசுனதுல எங்கம்மா அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வாடானு சொல்லிட்டாங்க வேற வழி இல்லாம தான் நான் உங்கம்மா கழுத்துல தாலி கட்டினேன்
நீ பிறந்ததுக்கப்புறம் உன்னை முதல்ல கைல வாங்கினேன் பாரு அன்னையில இருந்து உன்னை என் மூத்தமகன் நு நினைச்சிருக்கேன் நீ பிறந்து கொஞ்ச நாளைக்கு அப்புறமா உங்க அத்தை என்ன வந்து பாத்தாங்க அவங்க சொல்லித்தான் உங்க தாத்தாவோட நல்ல குணம் எனக்கு தெரிஞ்சது
தன் மகனோட சாவினால இந்த சின்ன பொண்ணோட வாழ்க்கை பாதிக்க பட கூடாது நு நினைச்சிருக்கார் அதுமட்டுமில்லாம அன்னைக்கு துரத்திக்கிட்டு வந்த ரவுடிங்களால உங்கம்மாவுக்கு எதுவும் ஆகல அப்படிங்கறது தெரிஞ்சது நான் ஒருத்தன் தான் என்னை தவிர வேற யாரூம் உங்கம்மாவை நல்ல படியா பாத்துக்க முடியாதுனு தோணி போச்சு அதுனாலதான் எங்கம்மா சம்மததோட இப்படி செய்திருக்கார் நு தெரிஞ்சது
அதுக்கப்புறம் கலாவுக்கு தெரியாம நானும் போய் உங்க தாத்தா பாட்டிய பாத்துட்டு வர ஆரம்பிச்சேன் அப்படி ஒருநாள் போயிட்டு வரும்போது தான் ரோட்டோரம் இருந்த குப்பை தொட்டில ஒரு குழந்தை அழற சத்தம் கேட்டு எட்டி பாத்தேன் அங்க இருந்த குழந்தைய எடுத்துகிட்டு வந்து கலாகிட்ட கொடுத்து வளர்க்க சொன்னேன் சந்தோஷமா அவ ஒத்துக்கிட்டதும் என்னை ஒரு கேள்விகூட கேக்காததும் என் மனசை அசைச்சுடுச்சு கலாகிட்ட எல்லா உண்மையயும் சொல்லி மன்னிப்பு கேட்டேன் அதுக்கு அமைதியா அவ நீங்க போயிட்டு வரது எனக்கு தெரியும் என் கோபமெல்லாம் எனக்கு அவங்க மறுமணம் பண்ணிவெக்க நினைச்சதுல இல்ல அவங்க பிள்ளை பத்தி தெரிஞ்சும் நான் அனாதைங்கற ஒரு காரணத்தால அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சேங்களே அதுதான்.அவங்க பொண்ணா இருந்தா அப்படி பண்ணி இருப்பாங்களா?அதை கூட மன்னிச்சிருவேன் மறுமணம் பண்ணிக்க சம்மதிக்கலன போது என் மேல களங்கத்த பூசுனாங்களே அதை என்னால மன்னிக்க முடியாது சொல்லிட்டா
உங்க மாமா பரதன் உன் தாத்தா பாட்டியோட பொறுப்பை எடுத்துகிட்டார் என் கூட ஸ்கூலுலதான் அவரும் வேலை பாத்தார் குமாரும் நானும் ஏற்கனவே நல்ல ப்ரெண்ட்ஸ் இப்போ இங்க உன்னை கூட்டிகிட்டு வந்தது கூட அவங்களுக்கான இறுதிகாரியம் செய்ய மட்டும்தானே தவிர இந்த சொத்து விஷயத்துல நீ என்ன முடிவு எடுக்கறயோ அதுக்கு நான் ஆதரவு தருவேன் என சொன்னார்
எல்லாம் கேட்டு பின் யோசனையாக இருந்த ஷியாம் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தெளிந்த முகத்துடன் இருந்தான் பிறகு பரதனை கூப்பிட்டு மாமா எனக்கு இந்த சொத்து வேண்டாம் என்னைக்குமே எனக்கு அப்பா ஸ்ரீதரன் தான் என சொல்ல அங்கு வந்த பாரதி தம்பி என் அண்ணன் பண்ண தப்புக்கு எங்க அப்பா அம்மா என்ன பண்ணுவாங்க அவங்களை நிராகரிக்காதீங்க என சொல்ல அதுவரை அமைதியாக இருந்த கலாவோ வேண்டாம் பாரதி உங்கப்பா அம்மாவால நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என் பேருல அநியாயமா களங்கம் சுமத்தினாங்க அதை இப்பொ கூட நான் மறக்கலை
உங்க அண்ணன் பிள்ளைக்குதான் உன் பொண்ணை குடுக்கனுமுனு நீ நினைச்சா இப்போவே நம்ம சம்மந்தத்தை முடிச்சுக்கலாம் என சொல்ல சிலையாக நின்றாள் பாரதி டக்கென்று முன்னே வந்த சக்தியோ போதும் அத்தை எங்க அம்மா நினைச்சதுல தப்பொண்ணும் இருக்கறதா எனக்கு தெரியல உங்களை மறுமணம் செஞ்சுக்க வெக்க தாத்தா பாட்டி போன வழி தப்பா இருக்கலாம் ஒருத்தங்க இறப்போட அவங்கள பத்தின கெட்டத மறந்திடனும் ஆனா நீங்க அத இன்னமும் மனசுல வெச்சுக்கிட்டு உங்களுக்கு சப்போர்ட்டா இருந்த எங்கம்மாவ பேசிட்டீங்க இதுக்கு அப்புறமும் நான் உங்க வீட்டுக்கு எப்படி மருமகளா வருவேன்?
ஷியாமை நேருக்கு நேராக பார்த்து நீயும் நானும் காதலிச்சது எல்லாருக்கும் தெரியும் நான் உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதே சமயம் இனி உங்கம்மா எங்கம்மா கிட்ட தானா வந்து பேசாம உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் வாங்கம்மா கிளம்பலாம் என இழுத்து சென்றுவிட்டாள்
அம்மா உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்துதான் நான் சொத்து எதுவும் வேண்டம்னு முடிவெடுத்தேன் மேல நான் பேசி முடிக்கறத்துக்குள்ள அவ ஏன் மா இப்படி சொன்னீங்க ? என் உயிர் அம்மா அது தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுவீங்க நு நான் நினைக்கல எனக்கு நீங்க எவளோ முக்கியமோ அவளும் அவளோ முக்கியம் இனி நான் உங்க கூட பேசனுமுனா அது சக்திக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் இப்போ நான் கிளம்பறேன் என கிளம்பி விட்டான் விக்கித்து நின்றாள் கலா அவளை சமாதான படுத்தி ஊருக்கு அழைத்து வருவதற்க்கும் வேலை கிடைத்து ஷியாம் பெங்களூர் செல்வதற்க்கும் சரியாக இருந்தது
முதலில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் ஷியாமின் பிடிவாதத்தாலும் பாரதியின் நல்ல மனதாலும் இளகிய கலா கடைசியில் ஸ்ரீதரின் உடல்நிலையால் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார் கல்யாணத்துக்கு பின் ஷியாம் சக்தி வாழ்வு மலருமா?
தொடரும்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 22, 2019 6:56 pm

நீங்கள் ரசித்த கவிதை இதில் முன்னோடியாக வரவில்லையே.
அதைத்தான் நான் விரும்பி படிப்பேன்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 23, 2019 10:44 am

ரோட்டோரம் இருந்த குப்பை தொட்டில ஒரு குழந்தை அழற சத்தம் கேட்டு எட்டி பாத்தேன் அங்க இருந்த குழந்தைய எடுத்துகிட்டு வந்து கலாகிட்ட கொடுத்து வளர்க்க சொன்னேன்

இந்த குழந்தை யார்



ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Wed Jan 23, 2019 6:45 pm

அந்த குழந்தை யாரென அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் ஐயா

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Wed Jan 23, 2019 6:46 pm

தனி தொகுப்பாக கவிதைகள் மட்டும் பதிவிடுகிறேன் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 23, 2019 8:57 pm

ANUBAMA KARTHIK wrote:தனி  தொகுப்பாக  கவிதைகள்  மட்டும் பதிவிடுகிறேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1292052


வரவேற்கிறோம் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Wed Jan 23, 2019 9:48 pm

T.N.Balasubramanian wrote:
ANUBAMA KARTHIK wrote:தனி  தொகுப்பாக  கவிதைகள்  மட்டும் பதிவிடுகிறேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1292052


வரவேற்கிறோம் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1292059 நன்றி

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Tue Jan 29, 2019 10:33 am

அத்தியாயம் -3

கெட்டி மேளம் முழங்க மங்கையவள் சங்கு கழுத்தில் மங்கல நாண் கட்டி தன்னவள் ஆக்கி கொண்டான் ஷியாம் . சுற்றி நின்ற பெரியவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு மங்கல அக்ஷதை தூவினர் ஆனால் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய காதலர்களோ குழப்பத்தில் இருந்தனர் விடுமுறை நாள் என்பதாலும் ஷியாமின் நண்பர்கள் சக்தியின் தோழியர் என இளமைப்பட்டாளம் கல்யாணமண்டபத்தை கலகலக்க வைத்து கொண்டிருந்தனர்
நண்பர்களின் சீண்டல்களுக்கு தக்கபடி பதில் கொடுத்து கொண்டிருந்த ஷியாமின் கண்கள் நொடிக்கொருதரம் சக்தியை வருடி சென்றது சக்தியின் அருகில் இருந்த சந்தனாவின் விழிகள் இதனை குறும்புடன் நோட்டமிட்டன அவள் ஷியாமின் அருகில் இருந்த சரத்தை பார்த்து சரத் மண்டபத்துல எங்கயோ தண்ணி லீக்கேஜிருக்கு போல வா போய் பார்த்துட்டு வரலாம் என கூப்பிட அவளின் கிண்டலை புரிந்து கொண்ட சக்தியும் ஷியாமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் புரிந்து கொள்ளாத சரத் உண்மையென நம்பி கிளம்பினான்
உக்காரு சரத் சந்தனா பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறா என வாரினான் ஷியாம் . பதிலுக்கு சந்தனாவோ யாரு நாங்க பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குரோமா? இங்க உள்ளதுக்கே வழிய காணோமாம் இதுல பாயாசம் வேற கிடைச்சிட்டாலும் என நொடித்தாள்
அது வரை சுவாரசியமாக உரையாடலை கவனித்த சக்தி விஷயம் புரிந்து ஷியாமின் முகத்தை பார்க்க அவனோ கண் இமைத்து ஆம் என்றான் மாலை வரவேற்பும் களைக்கட்டியது ஒன்று போல சேலை அணிந்து சந்தோஷ முகத்துடன் வளைய வந்தனர் பாரதியும் கலாவதியும் வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து கம்பீரமுகத்துடன் இருந்தனர் ஸ்ரீதரும் பரதனும் என்னம்மா கல்யாணம் உங்களுக்கா இல்ல உங்க பசங்களுக்கா? என குமாரும் சீதாவும் கலாய்தபடி வர அங்கே ஒயாத சிரிப்பலை எழுந்தது
தாய் தந்தையை கண்ட சந்தனா அவர்களுடன் போய் ஒட்டிக்கொள்ள அப்போது வாசலில் வந்த ஒரு விருந்தாளியை வாசலுக்கே சென்று வரவேற்று கூட்டி வந்தான் சரத் அந்த பெண்ணை கண்ட மறுகணம் ஸ்ரீதரனின் முகம் இருண்டது .ஸ்ரீதரின் முகம் போன திசையில் பார்த்த கலாவும் பேரதிர்ச்சி அடைந்தார் .சில வினாடிகளிலேயே முகத்தை சமநிலைக்கு கொண்டு வந்த இருவரும் தங்களுக்குள் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துகொண்டனர் .
எதோ வேலை இருப்பது போல மெல்ல நழுவிய ஸ்ரீதரும் கலாவதியும் அந்த பெண்மணி கிளம்பி செல்லும் வரை அவரின் கண்களில் படாமல் கண்ணாமூச்சி காட்டியபடி இருந்தனர் மேடையில் இருந்தபடி இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்ட சக்திக்கு மனதில் எதோ விவகாரமாக பட சரத்திடம் வந்தவர் குறித்து விசாரிக்க துவங்கினாள்
அவர் தானும் ஷியாமும் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி என்றும் ஷியாமை வாழ்த்தவே வந்ததாகவும் கூறினான் அவர் சென்றவுடன் வெளியே வந்த ஸ்ரீதரன் மற்றும் கலா முகத்தில் தென்பட்ட நிம்மதி இவர்களுக்கு இடையே எதோ ஒன்று உள்ளது என்று சக்திக்கு அறிவுறுத்தியது
கூட்டம் குறைந்த பின் கலாவதியை தேடி சென்ற சக்தி தான் கண்டது குறித்து கேட்க பதில் சொல்லமுடியாத நிலையில் இருந்த கலாவோ சக்தியிடம் இதோ பாருமா இது உனக்கு தேவை இல்லாத விஷயம் இப்போதான் உன் கழுத்துல தாலி ஏறிருக்கு அதுக்குள்ள தேவை இல்லாம கேள்வி கேக்குற வேலை வெச்சுக்காதே உனக்கு எது தேவையோ அதை உன்கிட்ட கட்டாயம் நாங்க சொல்லுவோம் என கடிந்து பேச
ஏற்கனவே தன் தாயை கலாவதி கோபித்து கொண்டதிலும் கல்யாணத்தை நிறுத்த சொன்னதிலும் அவர்மீது வருத்ததிலிருந்த சக்தி இப்போ கொந்தளித்து விட்டாள் என்ன அத்தை பேசுறீங்க உங்க பையன் எப்போ என் கழுத்துல தாலி கட்டினாரோ அப்பேலேர்ந்து இந்த வீட்டுல நானும் ஒருத்தி . இங்க இனி நடக்கபோற நல்லது கெட்டது எல்லாமும் எனக்கும் தெரியனும் ஒண்ணு நீங்க சொல்லுங்க இல்ல ஷியாம் கிட்ட நான் கேட்டு தெரிஞ்சுக்கறேன் என்று சொல்ல கோபத்தில் இருந்த கலாவோ போம்மா போய் கேளு நீ என்னதான் கேட்டாலும் இதுபத்தி அவன் ஒரு வார்த்தை பேச மாட்டான் என சொல்லி விட்டு விடு விடுவென சென்றுவிட்டாள்
திருமணம் என்ற பெயரில் இருவரும் ஒன்றாக சேர்ந்த பின்னர் தன்னவனை தனியே சந்திக்க அலங்கார பதுமையென தயாரானாள் சக்தி மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளியபடி ஷியாம் மீது கொண்ட காதலே மனதில் நிறைந்திருந்தது மற்றதை ஒதுக்கிவிட்டு அவனுடன் இல்லறம் நடத்த தயாரானாள் சக்தி உள்ளே வந்த பின் அவள் அழகை அள்ளி பருகியபடி அசையாது நின்றிருந்தான் ஷியாம்
மெல்ல சுயநினைவுக்கு வந்த ஷியாமிடம் சக்தி தான் மனதில் உள்ளதை பேசத் துவங்கினாள் அவளின் சந்தேகத்தை கேட்ட ஷியாமுக்கோ அதற்கான விடை தெரியாதது அவமானமாய் இருக்க அதை காட்டிக்கொள்ளாது அவளின் கவனத்தை திசை திருப்ப முயன்றான் கலாவதியின் வார்த்தைகளின் தாக்கம் ஏற்படுத்திய விளைவால் ஷியாம் தன்னிடம் இருந்து விஷயத்தை மறைப்பதாகவே நினைத்தாள் சக்தி அதன் விளைவு அங்கே அவர்களுக்குள் வாக்கு வாதம் மூண்டது
போதும் ஷியாம் வந்ததுலேந்து கேக்குறேன் எனக்கு சரியா பதில் சொல்லாம நீங்க நடந்துக்கறது நல்லா இருக்கா?
ஏன் சக்தி டென்ஷன் ஆகுறே ? இதுல என்ன இருக்கு ? இன்னைக்கு நமக்கு முதலிரவு எத்தனை நாளா உன்னை கல்யாணம் பண்ணனும்னு கனவு கண்டு இன்னைக்குதான் அது நடந்திருக்கு இப்பொ நம்ம வாழ்க்கைய பத்தி பேசுரத விட்டுட்டு சும்மா சும்மா தேவை இல்லாதத பத்தி பேசிகிட்டு இருக்குறே? என ஷியாம் கேட்க
ஷியாம் உங்கம்மாவும் இத எனக்கு தேவை இல்லாத விஷயம் நு சொன்னாங்க நீங்களும் இப்பொ அப்படியே சொல்லறீங்க எப்போ நான் உங்களுக்கு பொண்டாட்டியானேனோ அப்பவே நம்ம குடும்பத்துல நடக்குற நல்லது கெட்டதுக்கு எனக்கும் பங்கு உண்டு பீளிஸ் ஷியாம் சொல்லுங்க என்ன நடக்குது யார் அவங்க ? அவங்கள பாத்த உடனே ஏன் அத்தையும் மாமாவும் பயப்படனும் என சக்தி கெஞ்ச அவளின் தீவிரத்தை உணர்ந்த ஷியாம் அவளை அமர வைத்து பேசத்துவங்கினான் சக்தி நீ இதுல இவளோ தீவிரமா இருப்பேனு நான் நினைக்கல
.
அவங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கு தெரியாது ஆனால் அதை அம்மா அப்பாகிட்ட கேக்க முடியாது எங்கம்மாவை பொறுத்தவரைக்கும் அவங்க விருப்பபடலேனா தலைகீழா நின்னா கூட அவங்க வாயிலிருந்து விஷயத்த வாங்க முடியாது அப்பாவோ அம்மா பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டார் கொஞ்சம் பொறுமையா இரும்மா எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம் அதுக்கு உனக்கு என்ன உதவி வேணுமுனாலும் நான் செய்யறேன் என உறுதியளித்தான்
மறுநாள் காலை விழித்து எழுந்த ஷியாம் தன் பக்கத்தில் கண்டது காலி படுக்கையை தான் அவனுக்கு முன்னாடியே எழுந்து வந்த சக்தியை எதிர் கொண்டது கலாவதியும் பாரதியும் தான் முந்தைய நாள் நடந்த வாக்கு வாதங்களின் சுவடு எதுவும் இன்றி மலர்ந்த முகத்துடன் இருந்த கலாவதியை பார்த்த சக்தி ஆச்சரியப்பட்டாள்.
கலைந்த தலையும் சேலையும் ஆயிரம் கதைகள் சொல்ல அனுபவபட்ட தாய்மாரோ தங்கள் மக்களின் வாழ்வு மலர்ந்து விட்டதை புரிந்து கொண்டனர் தன் தாயின் முகத்துக்கு இணையாக கலாவதியின் முகமும் மலர்ந்திருப்பதை கண்ட சக்தி அவரின் கோபம் போய் விட்டதை உணர்ந்தாள்
சக்தி போய் குளிச்சிட்டு சாமி கும்பிட்டு விளக்கேத்திட்டு வாம்மா என பாரதி சொல்ல இரு பாரதி இன்னமும் பொழுது விடியல இங்க பாரு பனி எப்படி கொட்டுதுனு போம்மா போய் முகம் கை கால் கழுவிட்டு வந்து காபி குடிசிட்டு வா வெந்நீர் ரெடியானதுக்கப்புறம் குளிக்கலாம் ஷியாம் எழுந்திருசிருந்தா அவனுக்கும் காபி எடுத்துட்டு போ என சொல்லியவாறே அவ்விடம் விட்டு நடந்தார் கலா
குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு வந்த சக்தியை தேடி வந்த ஷியாம் சக்தி வேலைக்கு எத்தனை நாள் லீவு போட்டுருக்க என வினவினான் இல்ல ஷியாம் கல்யானத்துக்கு முன்னாடியே நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் எனக்கு அந்த வேலை செட் ஆகலை இனிமேதான் வேற வேலைதேடணும் உனக்கு சொல்லாம செஞ்சுட்டேன் பா தப்பா எடுத்துக்காதே
ஹே ஆங்ரி பேர்ட் இதுக்கெல்லாம் கோச்சுக்குவேனா நான் .
என்னது ஆங்ரி பேர்ட் ஆ எப்பொலேர்ந்து இந்த பட்ட பேரு வெச்ச ஷியாம் என சக்தி வினவ அத்தையும் அம்மாவும் சண்டை போட்ட உடனே அதுக்கு என்கிட்ட பேசம இருந்த பாரு அதுலேருந்துதான்
வரலாமா என குரல் கொடுத்துகொண்டே அங்கே வந்தாள் சந்தனா போச்சுடா என முணுமுணுத்து கொண்டே வாம்மா சைரன் எங்க இந்த பக்கம் வந்தே இது உனக்கு நடுராத்திரி ஆச்சே என ஷியாம் கேட்க
இங்க பாரு சக்தி உன் புருஷன் கிட்ட சொல்லிவை எப்போ பாரு என்ன சைரன் சைரன் நு கூப்ப்ட்டுகிட்டு இருக்கான் அப்புறம் இதுக்கும் சேத்து பின்னாடி வருத்தபட வேண்டிருக்கும் என கொதிக்க அது நடக்குறப்ப பாத்துக்கலாம் இப்போ நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு எங்க இந்தபக்கம் காலங்காத்தால காத்து வீசுது என மறுபடியும் ஷியாம் கலாய்க்க
அத நான் சொல்றேன் ஷியாம் என்றபடி ஆஜரானான் சரத் குட்மார்னிங் அண்ணி ஒரு நிமிஷம் வந்து ஷியாம் பக்கத்துல நில்லுங்க என சேர்த்து நிக்க வைத்து விட்டு அவர்கள் கைகளில் இருவரும் சேர்ந்து ஒரு கவரை திணித்தனர் அதை கையில் வாங்கிய ஷியாமும் சக்தியும் பிரித்து பார்க்க அவர்கள் சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்தில் போய் வரவும் மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்ல அங்கு தங்க , ஊர் சுற்ற உண்ண என அனைத்து வசதிகளும் கொண்ட ஹனிமூன் செல்வதற்க்கான பேக்கேஜ் அதுவும் இன்றே கிளம்ப ஏற்பாடு செய்திருந்தனர் அதை கண்டு திகைத்த முகத்துடன் நிமிர்ந்த ஷியாமை கண்டு குறும்பாக நகைத்த சந்தனா இப்போ ஏன் தெரியுதா என் காத்து இந்த பக்கம் வீசிச்சுனு ?
அப்பொ இது உன் வேலையா ? என ஷியாம் கேட்க
இது என் வேலை மட்டுமில்ல உன் தம்பியும் இதுல பார்ட்னர் அதுனால எங்கள மொறைக்காம காலா காலத்துல கிளம்பற வழிய பாருங்க என சந்தனா விரட்ட இல்ல அத்தை மாமா கிட்ட சொல்லாம எப்படி என சக்தி தயங்க அங்கு வந்த கலாவும் ஸ்ரீதரும் எங்க ரெண்டுபேருக்கும் சொல்லிட்டு தான் அவங்க இத ஏற்பாடு பண்ணாங்க ஸோ போய் தயக்கமில்லாம கிளம்புங்க என சொன்னார்கள்
யாருக்கிட்ட என கெத்து காட்டியபடியே சந்தனா சிரிக்க இளையவளின் குறும்பை ரசித்தபடியே அந்த இடம் விட்டு நகர்ந்தனர் மூத்த தலைமுறையினர்
சரி வா சக்தி ரெடியாகி வரலாம் என கூப்பிட்ட படியே சென்றான் ஷியாம் எல்லாம் வருவா நீ முன்னாடி போ இந்தோ இப்போ அனுப்பிவைக்குறேன் என் சந்தனா சொல்ல சிரித்தவாரே நகர்ந்தனர் ஷியாமும் சரத்தும்
அவர்கள் சென்றபின் தன் தோழியை சீண்ட எண்ணி ஆமா நாங்க இங்க வந்த போது யாரோ ஆங்ரி பேர்ட தேடிக்கிட்டு இருந்தீங்களே நீயும் சக்தியும் எங்கே பா ? என கேட்டாள் தனக்கு தன் கணவன் வைத்த செல்ல பெயரை சொல்லி தன் தோழி கிண்டல் செய்ய வெட்கத்தால் முகம் சிவந்த சக்தியோ சொல்ல மாட்டேன் போடி என சொல்ல
இப்போ நீ சொல்லல ஆள் வெச்சு அடிப்பேன் தெரியுமில்ல?
ஹாங் எல்லாம் தெரியும் போடி இந்த வீட்டுல உன் கையாள் யாருனு எனக்கு தெரியும் ஆளு வெச்சு அடிக்கற முகரய பாரு உன் ஆளு அதுகெல்லாம் சரிவர மாட்டாரு என சக்தி சொல்ல இப்போது முகம் சிவப்பது சந்தனாவின் முறைஆயிற்று
வெட்கத்தில் சிவந்த தன் தோழியின் முகத்தை பார்த்த சக்தியோ ஹனிமூன் முடிச்சுட்டு வந்து உன்னை வெச்சு செய்யறேன் சந்து என ராகம் பாடிவிட்டு சென்றாள் இவர்கள் நினைத்ததெல்லாம் இனிதே நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்
தொடரும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக