புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
55 Posts - 32%
i6appar
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
3 Posts - 2%
prajai
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
55 Posts - 32%
i6appar
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
3 Posts - 2%
prajai
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_m10தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 14, 2019 6:11 pm

அவசியம் படியுங்கள் அற்புதமான பதிவு இது.........

நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்.......

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,

தேரோட்டி
பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர்
உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,

உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,

"உத்தவரே,

இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன்.

உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,

சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,

புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.

அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.

"பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு;

நீ வாழ்ந்து காட்டிய வழி
வேறு !

நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில்,

நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு.

அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.

நிறைவேற்றுவாயா ?" என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:

"கண்ணா !

முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.

உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த
ஞானியான நீ

'உற்ற நண்பன் யார்’

என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று,

தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை?

போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு
நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை.

தருமன்
செல்வத்தை இழந்தான்,

நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.

சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது,

நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.'

திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப் பணயம் வைத்து ஆடு.

இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போது தான் சென்று,

'துகில் தந்தேன்,

திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,

எஞ்சிய
மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,

எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்
படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?

ஆபத்தான இது போன்ற
சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத,

நீ எப்படி ஆபத்பாந்தவன் ?

நீ செய்தது நியாயமா!தருமமா ?'

என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று,

மகாபாரதம் படித்த
நம் அனைவரின் உள்ளத்திலும் எழும் மனவலியோடு உணர்வு மிகுந்த கேள்விகளே இவை.

நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார்.

"உத்தவரே !

விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி.

துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை.

அதனால்தான் தருமன் தோற்றான்"

என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க,

கண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.

'பணயம்
நான் வைக்கிறேன்.

என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம்.

தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக

என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'

என்று சொல்லியிருக்கலாமே

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?

நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?

அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா ?

போகட்டும்.

தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது
மன்னித்து விடலாம்.

ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.

'ஐயோ ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே !

ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !

அவன் மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’

என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.

நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,

தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,

என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !

அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ?

இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய,

என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை !

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,

'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்’

எனக் குரல் கொடுத்தாள்.

பாஞ்சாலி.

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும்
சென்றேன்.

அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.

இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"அருமையான விளக்கம் கண்ணா !

அசந்து விட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை.

உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா ?"
என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

"அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ?

நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு
வரமாட்டாயா ?"

புன்னகைத்தான்,

கண்ணன்.

"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை.

நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே,

நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !

அது தான் தெய்வ தர்மம்" என்றான்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!

அப்படியானால்,

நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.

நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.

அப்படித்தானே?"

என்றார் உத்தவர்.

உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக
உணர்ந்து பாருங்கள்.

நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை
நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான்
உங்களால் தவறுகளையோ,

தீவினை செயல்
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான்,

எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது
செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.

எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,

அதுதான் அவனது
அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,

இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?"
என்றான்,

ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

ஆகா! ஆகா!

எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!

பகவானைப் பூஜிப்பதும்,

பிரார்த்தனை செய்வதும்,

அவனை
உதவிக்கு அழைப்பதும்,

ஓர் உணர்வுதானே !

"அவனின்றி ஓர்
அணுவும் அசையாது"

என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும் ?

இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

மொத்தத்தில் இறைவன் நமக்கு உணர்த்துவது யாதெனில் என்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதுதான்

(படித்ததில் பிடித்தது ) ராதே கிருஷ்ணா! ராதே ராதே! ராம் ராம்! ???? ????

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக