புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 30, 2018 7:46 am

 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! TN_120119180016000000


எட்டயபு ரத்தினில் உதித்திட்ட பாரதி
என்றும் மறைவதில்லை - அவன்
தொட்ட சிகரங்கள் தாண்டிஎப் புலவனும்
பயணந் தொடரவில்லை

விட்டஇ டத்தினைத் தொட்டுத் தொடரவோர்
ஆயுள் போத வில்லை - அவன்
வீரியப் பாடலில் ஆயிரஞ் சூரியன்
விதிவிலக் கேயில்லை!

இந்திய தேசத்து எல்லைகடந்தவன்
எங்கும் போனதில்லை - உலக
எல்லைகள் நீத்தவன் யாத்த கவிதைக்குப்
பிரபஞ்சம் போதவில்லை!

"வந்தே மாதரம்' என்கிற சொல்லுக்கு
மாநிலம் தாயானாள் - கவி
இந்திரன்ஆகிய ரவீந்த்ர னுக்குமே
பாரதி தாயானான்!

சந்திர மண்டலச் சக்திய ளந்திட
யந்திரக் கவிபுனைந்தான் - தெருச்
சந்திபெ ருக்கிபொய்ச் சாத்திரக் குப்பையைப்
போக்கிடுந் தமிழ்வனைந்தான்!

எந்தக் கவியிந்த பாரதிபோல் - இந்தப்
பாரினில் தோன்றியுளார்? - இவன்
சந்தக் கவிகேட்க தெய்வங்கள் முன்வந்து
இவனிடம் நின்றதையா!

சொந்தக் கவலைகள் சோகங்கள் துயரங்கள்
சொல்லி யழுததில்லை - பிஜித்
தீவினில் சோதரி யார்படுந் துயர்கண்டு
சொன்னதற் கீடு இல்லை!

சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று
அன்னையைச் சரண்புகுந்தான் - அந்த
அன்னையோ "அனுதினம்
என்னைநீ பாடெ'ன்று
இவனைச் சரண்அடைந்தாள்!

"உப்புக்கும் கேவலம் புளிக்குமோ என்மனம்
ஏங்கித் தவிக்குமெனில் - நானினி
நாத்திக னாவேன்' எனச்சூ ளுரைத்துத்
தெய்வத்தை எச்சரித்தான்!

எல்லை தனக்கெதும் இல்லையெனத் தமிழ்
இவன்வழி கண்டதையா! - புவி
எங்கும் நிறைந்த பரம்பொருளே வந்து
இவன்கவி யானதையா!

அல்லா யெஹேவா இயேசுவைப் போற்றி
அருட்கவி பாடியவன் - தெய்வம்
ஆயிர முண்டெனப் பொய்க்கதை
சொன்னோரைப்
பாடலால் சாடியவன்!

காக்கை குருவியைச் சாதியாய்க் கொண்டவற்
கேதுத னிச்சாதி? - அண்டங்
காக்கப் பிறந்தவன் பாரதி வகுத்ததே
உலகத்துக் குயர்நீதி!

ஆக்கப் பணிக்கவன் வகுத்திட்ட திட்டங்கள்
ஆயிர மாயிரமே! - அதை
அனுதினஞ் செய்திடில் பாரதம் உலகினில்
வல்லர சாகிடுமே!

"தனியொரு மனிதனுக் குணவிலை யெனிலிந்த
ஜகத்தினை யழி'ப்பதற் கோர்
கவிக்கணை படைத்தவன் பசிப்பிணி போக்கவும்
தமிழைச் சமைத்தவன்காண்!

புவிக்கெலாம் முதல்வன்நம் கவிக்கெலாம் இறைவன்
பாரதி ஒருவன்தான் - அவன்
அடிக்கடி நமக்குளே வெடிக்கும்
பல்பிரிவினை போக்கிடும் தலைவன்காண்!

மனைவியைத் தெய்வமாய், தெய்வத்தை மனிதமாய்ச்
செய்திட்ட மாகவிஞன்! - புவி
மக்களே நாம்தொழும் தெய்வங்கள் எனப்புது
வேதஞ்சமைத்த தவன்!

மின்னலைக் கையினில் ஏந்தி யிடியினைப்
பாடலாய் ஆக்கியவன் - கவி
சொன்னதால் வானமே பூமியாய் வந்திடக்
காற்றினை ஏவியவன்!

காலனை யோர்கணப் பொழுதில்உ தைத்திடும்
கால்பந் தாக்கியவன் - அவன்
ககன வெளிதனிற் கோள்களை ஓச்சியே
கைப்பந் தாடியவன்!

நாற்பது வயது வரும்வரை கூடஇம்
மண்ணி லிருக்கவில்லை - ஆனால்
நாற்றிசை புகழ்ந்திடும் அவன்தமிழ் வாழ்வது
என்றும் மரிப்பதில்லை!

முத்தத்தின் ஈரத்தில் வான்மழை தந்தவன்
மீட்டிய பாடல்களில் - புவி
மொத்தமும் விடுதலை சொத்தெனக் கொண்டினி
மானுடம் வாழுமடா!
-
--------------------------------------

- கிருங்கை சேதுபதி
நன்றி- தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 30, 2018 8:35 am

Code:

மனைவியைத் தெய்வமாய், தெய்வத்தை மனிதமாய்ச்
செய்திட்ட மாகவிஞன்! - புவி
மக்களே நாம்தொழும் தெய்வங்கள் எனப்புது
வேதஞ்சமைத்த தவன்!



சூப்பருங்க சூப்பருங்க
அற்புதமான படைப்பு.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 30, 2018 6:43 pm

அருமையான பகிர்வு.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக