புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
21 Posts - 70%
heezulia
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 3%
viyasan
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
213 Posts - 42%
heezulia
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
21 Posts - 4%
prajai
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_m10 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 3:11 pm

 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் 12chmbn%20%20cheliyan%20art
-


‘அரூபமாக மறைந்துபோகும் சக்தி உங்களுக்கு கிடைத்தால்
என்ன செய்வீர்கள்?’ என்று ஒரு இணைய இதழ் பலரிடமும்
வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. 90 சதவீதம் பேர் சொன்ன
பதில் திகைப்பூட்டுகிறது.

‘வங்கியைக் கொள்ளையடிப்பேன்’,
‘பாரில் போய் மூக்கு முட்டக் குடிப்பேன்’,
‘நண்பனின் மனைவியை அடைவேன்’,
சூதாட்ட விடுதிக்குள் போய் பணத்தை அள்ளுவேன்’,
‘பெண்கள் ஹாஸ்டலுக்குள் போய் இளம்பெண்களிடம்
தகாது நடப்பேன்’,
‘அதிகாரத்தைக் கைப்பற்ற கொலை செய்வேன்’ என
தவறான வழிகளில் ஈடுபடவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வயது வேறுபாடின்றி, ஆண் பெண் பேதமின்றி, தாங்கள்
அரூபமாக முடிந்தால் அடக்கிவைக்கப்பட்ட ஆசையை
வெளிப்படுத்துவேன் என்றுதான் பதில் கூறியுள்ளனர்.
குற்றம் செய்யத் தயாராகவே மக்கள் இருக்கிறார்கள்.

கடவுள் மீதான பயம், சட்டம் மீதான பயம், தண்டனை
மீதான பயம் என, பயம்தான் அவர்களைத் தடுத்து
வைத்திருக்கிறது என்பதுதான் நிஜமா?

அதிநவீன தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி
சகலரையும் எளிதாக குற்றங்களில் ஈடுபட வைக்கிறது.
செல்போன்களால் இவ்வளவு குற்றங்கள் உருவாகும் என
யாராவது கற்பனை செய்திருப்பார்களா, என்ன?

‘சுய ஒழுக்கம் என்ற ஒன்றே இன்று தேவையற்றதாகி
விட்டதா?’ என்ற கேள்வி எழுகிறது. சுய ஒழுக்கத்துடன்
வாழ்பவனை உலகம் பரிகாசம் செய்கிறது. அசடு என
அடையாளப்படுத்துகிறது.

ஆனால், சுய ஒழுக்கத்தைத் தவிர வேறு என்ன கவசம்
ஒரு மனிதனைக் காப்பாற்றிவிட முடியும், சொல்லுங்கள்!
-
----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 3:11 pm





எது ஈடுபட வைத்தது?

பிஹாரில் ஒரு விவசாயி, அவரது மகன்,
அவனது நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு மாணவியை
வன்புணர்ச்சி செய்துவிட்டார்கள் என டைம்ஸ் தொலைக்
காட்சி செய்தி ஒன்றில் காட்டுகிறார்கள்.

விவசாயிக்கு 60 வயதிருக்கும். அவரது மகனுக்கு
35 வயதிருக்கும். தந்தையும் மகனும் சேர்ந்து செய்கிற
செயலா இது? அவர்கள் கேமராவை பார்த்துப் பேசும்
போது, கண்களில் குற்ற உணர்ச்சியே இல்லை.

அந்த ஆளின் மனைவியோ, மகளோ, பேத்தியோ இந்தச்
செய்தியைப் பார்க்கும்போது என்ன ஆவார்கள்?
எது இந்த விவசாயியை பாலியல் குற்றத்தில் ஈடுபட
வைக்கிறது. வெறும் உடல் இச்சை என்பதை மட்டும்
ஒப்புக்கொள்ளமாட்டேன்.

அவரால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்ட மாணவி
அவரது பேத்தி வயது கொண்டவள்தானே.
அது ஏன் அவரது புத்தியில் உறைக்கவே இல்லை?

ரயிலில், பேருந்தில், பொதுவெளியில் என எங்கேயும்,
எவரும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தயங்குவதே
இல்லை. சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு
வீடியோவை ஒரு நண்பர் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.

ஸ்கூட்டியில் வரும் ஒரு பெண், அடைத்து சாத்தப்பட்ட
கடையின் முன்னால் இருந்த சிமென்ட் பேக்குகளை,
யாருமில்லை என்ற காரணத்தால் திருடிப் போகிறாள்.

ஆனால், ரகசிய கேமரா அவளைப் பதிவு செய்துவிட்டது.
திருட்டில் ஈடுபடும் அந்த பெண்ணுக்கு 20 வயதே
இருக்கக்கூடும். அவளிடம் சிறு தயக்கம்கூட இல்லை.
சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லா குற்றங்களும்
அரங்கேற்றமாகிவிடுமா என்ன?

பின்பு எதற்கு இத்தனை நீதி நூல்கள், அறங்கள்.
ஞானமொழிகள்?
-
-----------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 3:12 pm

உதாரணமாக ஒரு கதை

அறம் பற்றிய விவாதம் ஒன்றை மேற்கொள்ளும்போது
பிளேட்டோவின் சகோதரன் கிளாக்கோன் ஒரு கதையை
உதாரணமாகச் சொல்கிறான்.

கிரேக்கத்தில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் இருந்தான்.
மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வது, இரவில் வீடு
திரும்பி, கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக
உறங்குவது என அவனது வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

ஒருநாள் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுக்
கொண்டிருந்தபோது, ஒரு பாறையின் அடியில் இருந்து
ஒரு புதையலைக் கண்டெடுத்தான். அது ஒரு பெட்டி.
திறந்து பார்த்தால் உள்ளே ஒரு மோதிரம் இருந்தது.

அதை கையில் மாட்டிக்கொண்டான். அந்த மோதிரம்
எப்படிப்பட்டது? யாருடையது என எதையுமே அவன்
ஆராயவில்லை.

ஒருநாள் அவனது மந்தையில் இருந்து ஒரு ஆடு தப்பி
ஓடிவிட்டது. அதை தேடிக்கொண்டுப் போகும்போது,
கையில் அணிந்திருந்த மோதிரத்தைத் தற்செயலாக
தேய்த்தான்.

மறுநிமிஷம் அவன் அரூபமாக மறைந்துவிட்டான்.
ஆஹா! இது மாய மோதிரமாக இருக்கிறதே என
மகிழ்ந்தபடியே தனது ஆட்டை எளிதாக தேடிக் கண்டு
பிடித்துவிட்டான்.

மாயமோதிரம் கைக்கு வந்தபிறகு, தான் அரூபமாகி
விட்டால் யாராலும் கண்டுபிடிக்க முடியாதே என்று
நினைத்த அவன், உல்லாச வழிகளைத் தேடி ஈடுபடத்
தொடங்கினான்.

ஒருநாள் அரண்மனையில் நடக்கும் விருந்துக்கு ஆடு
கொண்டுபோக வேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது.
அரண்மனைக்குள் நுழைந்த அவன் மாய மோதிரத்தின்
உதவியால் அரூபமாகி அந்தப்புரத்துக்குள் நுழைந்தான்.

மகாராணியின் அழகைக் கண்டு மயங்கி, அவளது
படுக்கையில் அரூபமாக உடன் படுத்துக்கொண்டான்.
யாரோ தன்னை அணைப்பதை அவள் உணர்ந்தபோதும்,
ஆள் உருவம் தெரியவில்லை. தனது கற்பனையோ
என நினைத்து அவள் உறங்கிவிட்டாள்.

அவளை எப்படியாவது மயக்கிவிட நினைத்த இடையன்,
தனது உருவத்தை வெளிப்படுத்தி தனது மாய மோதிரத்தின்
சக்தியைப் பற்றி எடுத்துச் சொன்னான்.

அதைக் கேட்ட மகாராணி, ‘‘நீ இந்த மாய மோதிரத்தைக்
கொண்டு அரூபமாகி மன்னரின் அறைக்குப் போய்
அவரைக் கொன்றுவிடு. பின்பு நீயும் நானும் இன்பமாக
வாழலாம்’’ என்றாள்.

அதன்படியே இடையனும் அரூபமாக மன்னரின் அறைக்குச்
சென்று அவரைக் கொலை செய்கிறான். யார் கொன்றது
என ஒருவராலும் கண்டறிய முடியவில்லை.

தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, மகாராணியை
அடைந்த அவன் நாட்டுக்கே அரசனாகிவிடுகிறான்.

ஒரே ஒரு மாயசக்தி கிடைத்தால் போதும், எல்லாத்
தவறுகளும் அரங்கேற்றப்பட்டுவிடுகின்றன என்ற
உண்மையை எடுத்துச் சொல்கிறது இக்கதை.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 3:12 pm




மாய மோதிர ஏக்கம்

இந்த கதையைப் பற்றி விவாதிக்கும் சாக்ரடீஸ்,
‘உலகில் எல்லா மனிதர்களும் இதுபோன்ற ஒரு மாய
மோதிரம் தனக்கு கிடைக்காதா என ஏங்குகிறார்கள்’
எனக் கூறுகிறார்.

உண்மையில் இப்படி ஒரு மோதிரம் கிடைத்துவிட்டால்,
எந்த தவறையும் மனிதர்கள் துணிந்து செய்வார்கள்.
அரூபமாக சென்று நன்மைகள் செய்யலாமே என
நினைப்பவர்கள் வெகு சொற்பமே.

சுய ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே
போதிக்கப்பட வேண்டியது என பண்பாடு நினைக்கிறது.

ஆனால், அது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது
என்பதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
எது சுதந்திரம், எது கட்டுப்பாடு என்பதை புரிந்து
கொள்வதில் நாம் தவறு இழைக்கிறோம்.

எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பது
அராஜகம் இல்லையா? அதை எப்படி சுதந்திரம் என
அழைக்கமுடியும்?

பண்பாட்டின் பெயரால் ஒடுக்கப்பட்ட விஷயங்களை
நாம் விலக்கிவைக்கலாம். ஆனால், சுய ஒழுக்கம் என்பதே
முட்டாள்தனமானது என நினைப்பதை ஏற்கமுடியாது.

ஸ்வீடிஷ் இயக்குநரான இங்க்மர் பெர்க்மன் இயக்கிய
‘வெர்ஜின் ஸ்பிரிங்’ படத்தில் ஒரு இளம்பெண் அழகான
ஆடை அணிந்து தேவாலயத்துக்குப் போகிறாள்.

வழியில் 3 இடையர்கள் அவளுடன் சந்தோஷமாகப்
பேசிக்கொண்டு துணைக்கு வருகிறார்கள். ஒரு வெட்ட
வெளியைக் கடக்கும்போது திடீரென அவர்கள் முகம்
மாறுகிறது. அவள் தனியே இருக்கிறாள் என்பதை
உணருகிறார்கள்.

உடனே அவள் மீது பாய்ந்து அவளுடன் வல்லுறவு
கொண்டு, கொன்றுவிடுகிறார்கள்.

ஒளிரும் தேவதை போன்ற அந்த பெண் ஏன் கொல்லப்
படுகிறாள்? குற்றம் நம் மனதில் ஒளிந்தே இருக்கிறதா?
படத்தில் அந்தப் பெண் இறந்துபோனதும் ஒரு நீரூற்று
தோன்றுகிறது. அதுதான் சாட்சி.

அது மனசாட்சியின் அடையாளம். அவள் இறந்து
போயிருக்கலாம். ஆனால், அவளுக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு நியாயம் கேட்டே அந்த நீருற்று எழுகிறது.

யாரும் அறியாமல் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும்
இப்படி ஒரு நீரூற்று பொங்கவே செய்யும்.
அதுவே உலகின் நியதி!
-
-----------------------------------
தி இந்து


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 7:01 pm

Code:

அதன்படியே இடையனும் அரூபமாக மன்னரின் அறைக்குச்
சென்று அவரைக் கொலை செய்கிறான். யார் கொன்றது
என ஒருவராலும் கண்டறிய முடியவில்லை.

தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, மகாராணியை
அடைந்த அவன் நாட்டுக்கே அரசனாகிவிடுகிறான்.

ஒரே ஒரு மாயசக்தி கிடைத்தால் போதும், எல்லாத்
தவறுகளும் அரங்கேற்றப்பட்டுவிடுகின்றன என்ற
உண்மையை எடுத்துச் சொல்கிறது இக்கதையில்

தனிமனித ஒழுக்கம் தான் முக்கியம்
என்பதை ஆழமாக அறிவுறுத்தி கூறியது
அருமையிலும் அருமை.
 குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் 3838410834  குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் 103459460  குற்றத்தின் விதை - எஸ்.ராமகிருஷ்ணன் 1571444738

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Dec 02, 2018 7:34 pm

அருமையான கட்டுரை
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக