புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
21 Posts - 70%
heezulia
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
1 Post - 3%
viyasan
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
21 Posts - 4%
prajai
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூண்டில் கலை! Poll_c10தூண்டில் கலை! Poll_m10தூண்டில் கலை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டில் கலை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 10:37 pm


இரண்டாவது தளத்தில் இருந்த, 'ஏசி' அறையில், தன் எதிரே இருந்த, 'சி சி டிவி' கேமராக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார், நாதன். 'அடிமட்டத்திலிருந்து எவ்வளவு உயர்ந்திருக்கிறோம்...' என்று யோசித்தபோது, அவருக்குப் பெருமையாக இருந்தது. இவ்வளவு பெரிய, 'சூப்பர் மார்க்கெட்'டுக்கு இன்று, அதிபதி.

சட்டென்று அவர் கவனம், அந்த சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்தில் நின்றிருந்த, ஓர் இளைஞன் மீது பதிந்தது. 
வாங்கும் பொருட்களை போட்டுக் கொள்வதற்காக, கடையில் இருந்த கூடையை, அவன் எடுத்து வரவில்லை. அப்படியானால், மிகக்குறைவான பொருட்களைத் தான் வாங்குவான். 

ஆனால், அவன் ஆங்காங்கே நின்றதையும், சந்தேகத்துடன் சில பொருட்களைப் பார்த்ததையும், எதையோ ஒத்துக் கொள்ளாததுபோல் அதிருப்தியுடன் தலையசைத்ததையும் கேமராவில் பார்த்தபோது, நாதனின் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.
'இவனது உடல் மொழி வித்தியாசமாக இருக்கிறதே...' 

அந்த இளைஞன், ஒரு, 'ஷேவிங் பிளேடை' மட்டுமே எடுத்து, கடை மேனேஜரை அணுகி, எதையோ கேட்டான். மேனேஜர் மறுப்பதும், அந்த இளைஞன் ஆக்ரோஷத்துடன் பேசுவதும் புலப்பட்டது. 
தரை தளத்துக்கு வந்த நாதன், மேனேஜரை கேள்விக்குறியுடன் பார்த்தார். 

''ஒண்ணுமில்லை சார்... இவன், உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னான்... அதெல்லாம் இப்போ முடியாதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்,'' என்றார். 
அந்த இளைஞனின் முகத்தில் கடுமை அதிகமானது. 

''சொல்லுங்க சார்... நான் எந்தவிதத்தில் உங்களுக்கு உதவலாம்?'' என, கேட்டார் நாதன். 

''நீங்க உதவ வேண்டாம்... நான்தான் உங்களுக்கு உதவியாக சில ஆலோசனைகளைச் சொல்லலாம்ன்னு நினைத்தேன்... முதலில் உங்கள் மேனேஜரை மாற்றுங்கள் அல்லது அவரது நடவடிக்கையை மாத்திக்கச் சொல்லுங்கள்... 

''நீங்கள் இருக்கும்போதே,​'இல்லை' என்று சொல்கிறார்... நீங்கள் மரியாதையாக, 'சார்...' என்று என்னைக் கூப்பிட்டீர்கள்... வாடிக்கையாளர் எந்த வயது கொண்டவராக இருந்தாலும், மரியாதையாகக் கூப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், உங்கள் மேனேஜர், என்னை, 'இவன்' என்று குறிப்பிடுகிறார்,'' என்றான். 

நாதனுக்குக் கோபம் வரவில்லை. அந்த இளைஞனிடம், ஏதோ விஷயம் இருப்பதாக, அவரது வியாபார மூளைக்கு பட்டது. 
''உங்க ஆலோசனைகள சொல்லுங்க,'' என்றார், புன்னகையுடன். 

''குழந்தைகளுக்கான சாக்லெட்களையும், மிட்டாய்களையும் எதற்காக மேல் பகுதியில் வைத்திருக்கிறீர்கள்?''
''அப்போதுதான் குழந்தைகள், அவற்றை எடுத்து சாப்பிட மாட்டார்கள். கடைக்குள்ளேயே தின்று விட்டால், பெற்றோர் அதற்கான தொகையை, 'பில்'லில் சேர்க்காமல் போகலாம்,'' என்றார், மேனேஜர் கர்வமாக.

''முட்டாள்தனம்...'' என்ற அந்த இளைஞன், பின், ''பொதுவாக சாக்லெட்களை பெற்றோர் தாமாகவே வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். குழந்தைகள் அவை வேண்டுமென்று கேட்கும் போது தான் வாங்கித் தருவர். 

''எனவே, குழந்தைகளின் பார்வையில் படும்படி கீழ்பகுதியில்தான் அவையெல்லாம் இருக்க வேண்டும். பணம் செலுத்தும் பகுதிக்கு அருகில் இவற்றையெல்லாம் வைத்தால், குழந்தைகள் அவற்றை எடுத்து சாப்பிட்டால், தெரிந்து விடும்... கணக்கில் சேர்க்கலாம்!'' என்றான், இளைஞன். 


தொடரும்......................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 10:38 pm


நாதனுக்கு அந்த இளைஞனின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது. 

''சார்... இன்றைக்கு, கடையில் ஏன் கூட்டம் இல்லை?'' 

'உனக்கெதற்கு இந்த​வேண்டாத வேலை...' என்பது போல், மேனேஜரின் முகம் கடுமை காட்ட, நாதன் பொறுமையாக பதிலளித்தார்... 
''தம்பி... பொதுவாக, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் இங்கே அதிகம் பேர் வருவதில்லை.''

''அதாவது, அவர்களை அந்த நாட்களில் இங்கே வரவழைக்க, நீங்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதில்லையோ,'' என்றான், அந்த இளைஞன்.

''என்ன முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்... அந்த நாட்களில் வந்தால், நிதானமாக பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்க வேண்டுமா?'' என்று கேட்டார் நாதன். 

''அந்த இரண்டு நாட்களில் வந்தால், எல்லா பொருட்களுக்கும், 5 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கலாமே... 'பீட்ஸா' விற்கும் கடைகளில் கூட, இப்படியெல்லாம் செய்கின்றனரே... நம் மக்களுக்கு தள்ளுபடி என்றால் தனிப் பிரியம்.

''ஆடி மாதம் ஆகாதது. துணிமணிகளை அப்போது வாங்கவே கூடாது என்று இருந்த நிலைமை மாறி, ஆடி தள்ளுபடியில் வாங்கலாம் என்று காத்திருக்கும் நிலை வந்திருப்பதை எல்லாம், நீங்கள் யோசிக்கவே மாட்டீங்களா?'
'
''தம்பி... என்ன பண்றீங்க?'' 

''வேலை தேடிக்கிட்டிருக்கேன். ஆனால், அதுக்காக எந்த சம்பளத்துக்கும் நான் ஒத்துக்குவேன்னு நினைக்காதீங்க... நாணயமா நடந்துக்குவேன்... ஆறே மாசத்தில், உங்க​ வியாபாரத்தை இரட்டிப்பாக்கும் அளவுக்கு யோசனைகளை என்னால் சொல்ல முடியும்!'' 
'சாமர்த்தியம்தான்... முயற்சிக்கலாமே...' என்று தோன்றியது நாதனுக்கு. இளைஞனின் குரலில் முழு நம்பிக்கை தெரிந்தது. அது, கர்வமாகப் படவில்லை. 

ஆறு மாதங்களில் இல்லையென்றாலும், 10 மாதங்களில் வியாபாரம் இரட்டிப்பானது. கஜா என்ற அந்த இளைஞனின் ஆலோசனைகள், இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன என்பது, நாதனுக்குப் புரிந்தது. 

உண்மையாகவே உழைத்துக் கொண்டிருந்தான், மேனேஜர், கஜா. 

''சார்... வாஸ்துப்படி, பணம் வாங்குமிடத்தை வடகிழக்கிலே வைப்பது நல்லது. இன்றைய ரொட்டியை எல்லாம் நேற்று வந்த, ரொட்டிக்கு பின்னாலே வையுங்க. 

''ஒண்ணு வாங்கினா இன்னொண்ணுன்ற மாதிரி அறிவிப்புகளை, கடைக்குள்ளே வச்சா போதாது... வாசலிலே வைக்கணும்! மழைக்காலம் சார்... குடைகளைப் பாதுகாப்பாக வாங்கி வைக்க, வாசலிலே ஒருத்தரைப் போட்டுடலாம்... 'டோக்கன்' கொடுக்கட்டும்...'' என, பல மாற்றங்களை செய்தான்.

இந்நிலையில் ஒருநாள், ''முதலாளி... ரெண்டு தெரு தள்ளி, நானே ஒரு, 'சூப்பர் மார்க்கெட்' துவங்கலாம்ன்னு இருக்கேன்... வங்கியில், கடன் கொடுப்பதாக கூறினர்... நல்லா வருவேன்னு நம்பிக்கை இருக்கு... உடனே இல்லே, நாலு மாசம் கழிச்சுதான் துவங்கப் போறேன்... அதுக்குள்ளே, நீங்க வேற மேனேஜரை பார்த்துக்குங்க!'' 
கஜாவை உற்றுப் பார்த்தார், நாதன். 

''இந்த வியாபாரத்திலேயே, நீ கூட்டு சேரலாமே... லாபத்தில், 20 சதவீத பங்கை நீ எடுத்துக்கலாம்!'' 
கஜா, யோசிப்பது தெரிந்தது. 


தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 10:39 pm


''என்னப்பா... மனசில்லையா... அதுக்கு மேலே உன் இஷ்டம். சரி, நம்ம கடையிலே வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துப் போட்டுக்க, 'டிராலி' வச்சிருக்கோமில்லையா... அது இங்கே அதிகமாகவே இருக்கு... நீ வேணா உன் புதிய கடைக்கு,10 'டிராலி'யை எடுத்துக்க... என் அன்பளிப்பு,'' என்றார். 

அப்போதும் கஜா, பதில் பேசாததால், நாதன் வேறொரு சந்தேகத்தை எழுப்பினார்.

''உன் அத்தனை, யோசனைகளையும் என்னிடம் சொல்லி, இந்த, 'சூப்பர் மார்க்கெட்'டை மிக நல்ல நிலைக்கு மாற்றியிருக்கே... அப்ப எப்படி என்னை விட அதிகமாக நீ, 'பிசினஸ்' செய்ய முடியும்?''

''நான் புதுசா ஆரம்பிக்கிற, 'சூப்பர் மார்க்கெட்'டில் நீங்களும் பங்கு வகிக்கலாம் சார்... 60 -- 40. அதாவது, லாபத்திலே, 40 சதவீதம் உங்களுக்கு. ஆனால், 60 சதவீதம் முதல் போடுவது, நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அப்புறம் சார், நீங்க, 'டிராலி'யைப் பற்றிச் சொல்லும்போது, எனக்கு ஒரு யோசனை தோணிச்சு...

''புதுக்கடையிலே பெரிய அளவிலான, 'டிராலி'க்களைத்தான் பயன்படுத்துவேன்... அப்போதான் வாடிக்கையாளர்கள் அதிகப் பொருட்களை வாங்குவாங்க... இல்லேன்னா, 'டிராலி நிரம்பிடுச்சு'ன்னு வேறெதையும் வாங்க மாட்டாங்க... ஏற்கனவே எடுத்து வச்சதில், கொஞ்சத்தை எடுத்து, வேறு பொருளை வைப்பாங்க... சார், நான் சொன்ன, 60 - 40 ஏற்பாடு, உங்களுக்கு, ஓ.கே.,வாங்கறதை, இன்னும் ஒருவாரத்திலே சொல்ல முடியுமா?'' என்றான், கஜா; நிறுத்தி நிதானமாக.

நாதனுக்கு கொஞ்சம் திகைப்பும், அதிக வியப்பும் ஒரு சேர எழுந்தன. தான் முன்னுக்கு வந்த கதையை யோசித்தார். இவன், 'இவன், என்னை மாதிரியே தான்; ஆனா, புதுவிதமா யோசிக்கிறான்...'

கஜாவின் கையைக் குலுக்கியபடி தலையசைத்தார். அந்த தலையசைப்பு, அவர் ஏற்றுக் கொண்டதை அறிவித்தது.

அருண் சரண்யா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Nov 26, 2018 11:40 pm

கதை மிகவும் அருமை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக