புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண் கணித ஜோதிடமும் மனித வாழ்க்கையும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மனித வாழ்க்கை, கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் முன்னோர்கள் தங்கள் தீர்க்கமான ஆய்வின் பயனாகக் கண்டறிந்துள்ளார்கள். புவியின் இயக்கத்திற்கும், மனித வாழ்வுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விண்ணுலகே உலவும் கிரகங்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பல வகையிலும் மனித வாழ்வுடன் தொடர்பு கொண்டிருப்பது உணரப்பட்டது. பொதுவாக நமது பாரத நாட்டைவிட மேலை நாடுகளில் இந்த எண் கணித சாஸ்திரமானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.
எண் கணித சாஸ்திரம் பிரதானமான பலன்களுக்கு காரணமாக அமைகிறது. என்று கூறிவிட முடியாது. அதாவது ஜெனன கால ஜாதகம் சரியாக இல்லாமல், எண் கணிதத்தைக் கொண்டு பெயரைத் நன்கு வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடுமா?.. அமைவதற்கு வாய்ப்பில்லை! அதாவது மழை பெய்யும் பொழுது குடை பிடிப்பதைப் போன்றும், வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதைப் போன்றும் இந்த எண் கணித சாஸ்திரமானது மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிறது.
எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன. அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.
மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும், எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம். எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நமது புலன் உணர்வுகளை ஐம்புலன்கள் என எண்ணிக்கைக்குள் முன்னோர்கள் அடக்கினர். மேலும் பஞ்ச பூதம், பஞ்சலோகம், பஞ்சநதி, ஸப்த ஸ்வரங்கள்,ஸப்த நாடி என்றெல்லாம் எண்களின் அடிப்படையில் சிறப்பாகப் பேசப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தின் ஆதாரமான பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் என்று அறிந்துள்ளோம். அதேபோல் ஒன்பது கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள், 108 நட்சத்திர பாதங்கள் என்ற கணித அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரமே இயங்குகிறது. இதேபோன்று ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் எண்கள் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது தேசத்திலிருந்து இந்த கலைச் செல்வங்களைக் கற்று சென்ற மேல்நாட்டு அறிஞர்கள் சிரம்மெடுத்து அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சிகள் பல நடத்தி பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.
இத்தகைய அறிஞர்களில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மனித வாழ்க்கை, கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் முன்னோர்கள் தங்கள் தீர்க்கமான ஆய்வின் பயனாகக் கண்டறிந்துள்ளார்கள். புவியின் இயக்கத்திற்கும், மனித வாழ்வுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விண்ணுலகே உலவும் கிரகங்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பல வகையிலும் மனித வாழ்வுடன் தொடர்பு கொண்டிருப்பது உணரப்பட்டது. பொதுவாக நமது பாரத நாட்டைவிட மேலை நாடுகளில் இந்த எண் கணித சாஸ்திரமானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.
எண் கணித சாஸ்திரம் பிரதானமான பலன்களுக்கு காரணமாக அமைகிறது. என்று கூறிவிட முடியாது. அதாவது ஜெனன கால ஜாதகம் சரியாக இல்லாமல், எண் கணிதத்தைக் கொண்டு பெயரைத் நன்கு வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடுமா?.. அமைவதற்கு வாய்ப்பில்லை! அதாவது மழை பெய்யும் பொழுது குடை பிடிப்பதைப் போன்றும், வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதைப் போன்றும் இந்த எண் கணித சாஸ்திரமானது மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிறது.
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" என்பது பழமொழி.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழுமுயிர்க்கு"
இது குறள் நெறி கூறும் அறிவுரை.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழுமுயிர்க்கு"
இது குறள் நெறி கூறும் அறிவுரை.
எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன. அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.
மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும், எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம். எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நமது புலன் உணர்வுகளை ஐம்புலன்கள் என எண்ணிக்கைக்குள் முன்னோர்கள் அடக்கினர். மேலும் பஞ்ச பூதம், பஞ்சலோகம், பஞ்சநதி, ஸப்த ஸ்வரங்கள்,ஸப்த நாடி என்றெல்லாம் எண்களின் அடிப்படையில் சிறப்பாகப் பேசப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தின் ஆதாரமான பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் என்று அறிந்துள்ளோம். அதேபோல் ஒன்பது கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள், 108 நட்சத்திர பாதங்கள் என்ற கணித அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரமே இயங்குகிறது. இதேபோன்று ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் எண்கள் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது தேசத்திலிருந்து இந்த கலைச் செல்வங்களைக் கற்று சென்ற மேல்நாட்டு அறிஞர்கள் சிரம்மெடுத்து அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சிகள் பல நடத்தி பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.
இத்தகைய அறிஞர்களில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எண் -8- சனி
பொதுவான குணநலன்கள்
அளவுக்கு மிஞ்சின மனோசக்திகளும், தெளிந்த அறிவும், சதா யோசனையிலும் ஆழ்ந்திருப்பார். மனதில் உற்சாகம் இருக்காது. எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பர். சுகங்களை அனுபவிக்க மாட்டார். தன்னம்பிக்கை குறைவு. கஷ்டங்களை விரும்பக் கூடியவர். பிறரை எளிதில் நம்பமாட்டார். தனிமையை விரும்புவார். எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பர். கஞ்சத்தனம் உண்டு. தம்மை உலகிலேயே ஒரு தனி மனிதராகவே கருதுவர். மிகச்சில நண்பர்களையே பெற்றிருப்பர். நண்பர்களால் ஆதாயமில்லை. வாழ்வதற்குப் பயந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுவர். சிறு வயதிலேயே வியாதி உண்டு. இவர் வாழ்க்கையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 8,17,26,35,44,53,62 ஆகிய வயதுகளில் சரும வியாதியால் அவதியுறுவர். அடிக்கடி விபத்துக்குள்ளாவார். பிறர்புரியும் குற்றத்திற்குக்கூட இவர்கள் தண்டனை அனுபவிக்கக்கூடியவர். மிக்க நல்லவராகவும், மேதாவியாகவும் இருந்தாலும், இவருக்கு அருகிலிருப்போர் இவரைப் புரிந்துகொள்வதில்லை. பிறர் உதவியை எதிர்ப்பார்க்க மாட்டார். எதிர்பாராமல் பழகுவார். பொதுவாக மிதமான மஞ்சள் நிறத்துடைய சரீரத்தைப் பெற்றிருப்பர். கை நகங்கள் சிவந்திருக்கும்.
நிறமும்-இரத்தினமும்
கருநீல வர்ணமும், அடர்ந்த பச்சை ஆகிய வர்ணங்கள் அதிர்ஷ்டகராமானது. நீலக்கல்லும், இந்திர நீலமும் அதிர்ஷ்ட இரத்தினங்கள் ஆகும்.
எட்டு வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்
இவ்வெண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டகரமாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் அருள் வேண்டும்.
8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்.
8- ம் தேதி
அமைதியான வாழ்க்கையை விரும்பவர். பலகாரியங்களைச் சாதிக்க முயற்சி செய்வார்கள். வேதாந்தம் இவர் மனதைப் பிடித்து இழுக்கும். பல அரிய காரியங்களைச் சாதிக்கப் பலர் துணையைத் தேடுபவராவார். பொதுநலச் சேவை செய்வதில் விருப்பம் இருக்கும். உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஆழ்ந்த அக்கறை இருக்காது.
17- ம் தேதி
செல்வந்தராவதற்குக் கடின முயற்சி செய்வர். சரீர சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மோசமான வழியில் பணம் சேர்ப்பர். செலவாளி, எந்தக கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார். வாழ்க்கையின் பிற்பாதி யோகம், சிக்கனமாக வாழத் தெரியாது. தம்மால் இயன்றளவு பிறருக்கு உதவ முயற்சி செய்வார்கள்.
26- ம் தேதி
துரதிஷ்டசாலி, இளம் வயதிலேயே பெற்றோர்களை இழப்பர். சிறு வயதிலேயே கஷ்டங்களும். முன்னேற்றத் தடையும் ஏற்படும். முன்னேற்ற எண் இல்லை. சிறப்பான கல்வி வசதி அமைவதற்கில்லை.ஆனால் அனுபவத்தில் கல்விமான் போல் இருப்பார்கள்.
பெயரெண் எட்டு வரும் எண்களின் பலன்கள்
பெயரெண்-8
ஆன்மீக வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தையடையவர், வெற்றி தாமதமாகக் கிடைக்கும். எதிர்பாராத ஆபத்துக்கள் உண்டு. அதிர்ஷ்டக் குறைவான பலன்களே ஏற்படும், பல இடையூறுகளைத் தாண்டினாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. வாழ்வின் பிற்பாதி ஓரளவு நன்மை பயக்கும்.
பெயரெண்- 17
அசுரத்தன்மை உண்டாக்கும். பல்வேறு கஷ்டம், சோகம் உண்டு. தோல்வியைக் கண்டு கலங்காதவர், பிற்கூறு வாழ்க்கையில் புகழ் கிடைக்கும். உடல் வலிமையும் மன உறுதியும், படைத்தவர், போர்ப்படை, போலீஸ் போன்ற துறைகளில் இருப்பவர்.
பெயரெண் – 26
வயோதிகத்தில் வறுமையும், நோயும் உண்டு. நண்பர்களால் பெருத்த கஷ்டம், தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். கொலை செய்யக்கூடிய விரோதிகள் உள்ளவர். பணம், பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். ஆனால் இளம் வயதில் சற்று சாதகமான வாழ்க்கை அமையும்.
பெயரெண்- 35
நண்பர்களால் நஷ்டம், எதிர்பாராத விபத்து ஏற்படும். தீய வழியில் பொருளீட்டுவர். தீராத வயிற்றுவலி உண்டாகும். அநாவசிய ஆடம்பரச் செலவு செய்பவர்கள். வாழ்வும், தாழ்வும், இவர்களுக்கு மாறிமாறி ஏற்படும். இவர்கள் ஒரு சமமான வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ முடியாது.
பெயரெண்-44
சுலபமாக பணம் சம்பாதிக்க உதவுபுரியும். அரசாங்க விரோதமும், சிறைவாசமும் நிச்சய ஏற்படும். சிறைக்கு வெளியே சுக வாழ்க்கை உண்டு. சிறைப்படாவிடில் உடலில் நோய் ஏற்படும். தொழில் முயற்சிகளின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். அல்லது வியாபாரத்தின் மூலம் செல்வம் சேரும். அதிகச் செலவாளி.
பெயரெண்- 53
ஆரம்பத்திலேயே வெற்றி, தோல்வி உண்டு. பிரபலமான வாழ்க்கை, நன்மையான காரியங்களைச் செய்து புகழடையவர். விருந்து உண்பதில் பிரியப்படுவர், நிதானமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும். அவசரமும், ஆத்திரமும் இவர்களின் விரோதியாகும்.
பெயரெண்- 62
புகழும் வெற்றியும் சுக வாழ்க்கை தரும். வாழ்க்கையின் இடையே பேராபத்தும் தோல்வியும் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கை சுகமிராது. ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெறுவார்கள். இவர்களுக்குப் புகழ் சேருமளவிற்குப் பொருள் சேராது.
பெயரெண்- 71
வாழ்க்கையில் பிற்பாதி வெற்றியும், செல்வமும் தரும். பலருக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவார். இயந்திரங்களின் மூலமாகவோ, வெளிநாட்டுத் தொடர்பு மூலமாகவோ சிறப்படைய முடியும். குடும்ப வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும்.
பெயரெண்- 80
தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர். வாழ்க்கையே ஆபத்துக்களால் சூழப்பட்டு பயம் நிறைந்தது போல் எண்ணி வாழ்க்கை நடத்துவர். பரபரப்பூட்டும் சாகஸங்கள் செய்து புகழ் பெறுவர். விளையாட்டுத் துறையில் இருக்க வாய்ப்புண்டு. துணிச்சல் அதிகமாக காணப்படும்.
பெயரெண்- 89
ஆரம்பத்தில் சிரமங்கொடுக்கும். சொத்துக்கள் ஆபரணங்கள் உண்டு. பெண்கள் இவர்களை விரும்புவர். அழகும், ஐஸ்வர்யமும் உண்டு. பயமற்ற வாழ்க்கை உண்டு. வாழ்க்கையின் ஆரம்பத்தில் நோயினால் சிரமப்படுவர். கல்வியின் மூலம் பெரிய பட்டங்களைப் பெறுவார். மருத்துவத்துறையில் இருப்பவர்கள் ஆவார்.
பெயரெண்- 98
கஷ்டங்களும், தீராத நோயும் உண்டு, சிரமப்பட்டாவது வாழ்க்கையின் பிற்பாதி புகழ்பெறுவர். சிறந்த நூல்களை எழுதுவதன் மூலம் பிரசித்தி பெறுவர். கல்வித் துறையில் சாதனைகள் புரிந்து புகழ் பெறக்கூடும்.
பெயரெண்- 107
பிரசித்தியும், வெற்றியும் தரும். ஸ்திரீகளால் சிக்கல் ஏற்படும். செல்வம் ஏற்பட்டாலும் சுகம் இல்லை. கீர்த்தி உண்டு. செல்வாக்கு ஏற்படும். உலகப் பிரசித்திப் பெறும் அளவிற்கு உயர்த்தக்கூடும். அயல்நாடுகளில் அரசாங்கம் தொடர்புடைய பெரும் பதவிகளில் இருப்பார்கள்.
பொதுவாக எட்டாம் எண்ணில் பெயர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட காலம்
5,14,23 ஆகிய தேதிகள் நன்மை தரும்.
8,17,26 ஆகிய தேதிகள் துரதிஷ்டமானவை.
தொழில்
உயர்வான விஷயங்களைப் போதிப்பது, பஸ் போக்குவரத்து, லாரிகள், சுரங்கப்பொருட்கள், கம்பளித்துணி, இரும்புச் சாமான்கள், ஆயுதங்கள், சோப்பு, எண்ணெய் தயாரிக்கும் மில், அச்சுக்கூடம், போலிஸ் இராணுவம், அலுவலக உதவியாளர், எடுபிடி, ஏவலாளர் விளையாட்டுத்துறை, நகைப்பட்டறை, இரும்புப் பட்டறை, மீன், இறைச்சி, வியாபாரம், மதுக்கடை நடத்துதல், வாகனங்களைப் பழுது பார்த்தல், தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றின் மூலம் பொருளீட்டலாம்.
பொதுவாக 1,4,5,6 எண்காரர்களைத்தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம், 1,4,8 எண்காரர்கள் உதவுவார்கள்.
பொதுவான குணநலன்கள்
அளவுக்கு மிஞ்சின மனோசக்திகளும், தெளிந்த அறிவும், சதா யோசனையிலும் ஆழ்ந்திருப்பார். மனதில் உற்சாகம் இருக்காது. எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பர். சுகங்களை அனுபவிக்க மாட்டார். தன்னம்பிக்கை குறைவு. கஷ்டங்களை விரும்பக் கூடியவர். பிறரை எளிதில் நம்பமாட்டார். தனிமையை விரும்புவார். எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பர். கஞ்சத்தனம் உண்டு. தம்மை உலகிலேயே ஒரு தனி மனிதராகவே கருதுவர். மிகச்சில நண்பர்களையே பெற்றிருப்பர். நண்பர்களால் ஆதாயமில்லை. வாழ்வதற்குப் பயந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுவர். சிறு வயதிலேயே வியாதி உண்டு. இவர் வாழ்க்கையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 8,17,26,35,44,53,62 ஆகிய வயதுகளில் சரும வியாதியால் அவதியுறுவர். அடிக்கடி விபத்துக்குள்ளாவார். பிறர்புரியும் குற்றத்திற்குக்கூட இவர்கள் தண்டனை அனுபவிக்கக்கூடியவர். மிக்க நல்லவராகவும், மேதாவியாகவும் இருந்தாலும், இவருக்கு அருகிலிருப்போர் இவரைப் புரிந்துகொள்வதில்லை. பிறர் உதவியை எதிர்ப்பார்க்க மாட்டார். எதிர்பாராமல் பழகுவார். பொதுவாக மிதமான மஞ்சள் நிறத்துடைய சரீரத்தைப் பெற்றிருப்பர். கை நகங்கள் சிவந்திருக்கும்.
நிறமும்-இரத்தினமும்
கருநீல வர்ணமும், அடர்ந்த பச்சை ஆகிய வர்ணங்கள் அதிர்ஷ்டகராமானது. நீலக்கல்லும், இந்திர நீலமும் அதிர்ஷ்ட இரத்தினங்கள் ஆகும்.
எட்டு வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்
இவ்வெண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டகரமாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் அருள் வேண்டும்.
8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்.
8- ம் தேதி
அமைதியான வாழ்க்கையை விரும்பவர். பலகாரியங்களைச் சாதிக்க முயற்சி செய்வார்கள். வேதாந்தம் இவர் மனதைப் பிடித்து இழுக்கும். பல அரிய காரியங்களைச் சாதிக்கப் பலர் துணையைத் தேடுபவராவார். பொதுநலச் சேவை செய்வதில் விருப்பம் இருக்கும். உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஆழ்ந்த அக்கறை இருக்காது.
17- ம் தேதி
செல்வந்தராவதற்குக் கடின முயற்சி செய்வர். சரீர சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மோசமான வழியில் பணம் சேர்ப்பர். செலவாளி, எந்தக கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார். வாழ்க்கையின் பிற்பாதி யோகம், சிக்கனமாக வாழத் தெரியாது. தம்மால் இயன்றளவு பிறருக்கு உதவ முயற்சி செய்வார்கள்.
26- ம் தேதி
துரதிஷ்டசாலி, இளம் வயதிலேயே பெற்றோர்களை இழப்பர். சிறு வயதிலேயே கஷ்டங்களும். முன்னேற்றத் தடையும் ஏற்படும். முன்னேற்ற எண் இல்லை. சிறப்பான கல்வி வசதி அமைவதற்கில்லை.ஆனால் அனுபவத்தில் கல்விமான் போல் இருப்பார்கள்.
பெயரெண் எட்டு வரும் எண்களின் பலன்கள்
பெயரெண்-8
ஆன்மீக வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தையடையவர், வெற்றி தாமதமாகக் கிடைக்கும். எதிர்பாராத ஆபத்துக்கள் உண்டு. அதிர்ஷ்டக் குறைவான பலன்களே ஏற்படும், பல இடையூறுகளைத் தாண்டினாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. வாழ்வின் பிற்பாதி ஓரளவு நன்மை பயக்கும்.
பெயரெண்- 17
அசுரத்தன்மை உண்டாக்கும். பல்வேறு கஷ்டம், சோகம் உண்டு. தோல்வியைக் கண்டு கலங்காதவர், பிற்கூறு வாழ்க்கையில் புகழ் கிடைக்கும். உடல் வலிமையும் மன உறுதியும், படைத்தவர், போர்ப்படை, போலீஸ் போன்ற துறைகளில் இருப்பவர்.
பெயரெண் – 26
வயோதிகத்தில் வறுமையும், நோயும் உண்டு. நண்பர்களால் பெருத்த கஷ்டம், தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். கொலை செய்யக்கூடிய விரோதிகள் உள்ளவர். பணம், பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். ஆனால் இளம் வயதில் சற்று சாதகமான வாழ்க்கை அமையும்.
பெயரெண்- 35
நண்பர்களால் நஷ்டம், எதிர்பாராத விபத்து ஏற்படும். தீய வழியில் பொருளீட்டுவர். தீராத வயிற்றுவலி உண்டாகும். அநாவசிய ஆடம்பரச் செலவு செய்பவர்கள். வாழ்வும், தாழ்வும், இவர்களுக்கு மாறிமாறி ஏற்படும். இவர்கள் ஒரு சமமான வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ முடியாது.
பெயரெண்-44
சுலபமாக பணம் சம்பாதிக்க உதவுபுரியும். அரசாங்க விரோதமும், சிறைவாசமும் நிச்சய ஏற்படும். சிறைக்கு வெளியே சுக வாழ்க்கை உண்டு. சிறைப்படாவிடில் உடலில் நோய் ஏற்படும். தொழில் முயற்சிகளின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். அல்லது வியாபாரத்தின் மூலம் செல்வம் சேரும். அதிகச் செலவாளி.
பெயரெண்- 53
ஆரம்பத்திலேயே வெற்றி, தோல்வி உண்டு. பிரபலமான வாழ்க்கை, நன்மையான காரியங்களைச் செய்து புகழடையவர். விருந்து உண்பதில் பிரியப்படுவர், நிதானமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும். அவசரமும், ஆத்திரமும் இவர்களின் விரோதியாகும்.
பெயரெண்- 62
புகழும் வெற்றியும் சுக வாழ்க்கை தரும். வாழ்க்கையின் இடையே பேராபத்தும் தோல்வியும் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கை சுகமிராது. ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெறுவார்கள். இவர்களுக்குப் புகழ் சேருமளவிற்குப் பொருள் சேராது.
பெயரெண்- 71
வாழ்க்கையில் பிற்பாதி வெற்றியும், செல்வமும் தரும். பலருக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவார். இயந்திரங்களின் மூலமாகவோ, வெளிநாட்டுத் தொடர்பு மூலமாகவோ சிறப்படைய முடியும். குடும்ப வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும்.
பெயரெண்- 80
தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர். வாழ்க்கையே ஆபத்துக்களால் சூழப்பட்டு பயம் நிறைந்தது போல் எண்ணி வாழ்க்கை நடத்துவர். பரபரப்பூட்டும் சாகஸங்கள் செய்து புகழ் பெறுவர். விளையாட்டுத் துறையில் இருக்க வாய்ப்புண்டு. துணிச்சல் அதிகமாக காணப்படும்.
பெயரெண்- 89
ஆரம்பத்தில் சிரமங்கொடுக்கும். சொத்துக்கள் ஆபரணங்கள் உண்டு. பெண்கள் இவர்களை விரும்புவர். அழகும், ஐஸ்வர்யமும் உண்டு. பயமற்ற வாழ்க்கை உண்டு. வாழ்க்கையின் ஆரம்பத்தில் நோயினால் சிரமப்படுவர். கல்வியின் மூலம் பெரிய பட்டங்களைப் பெறுவார். மருத்துவத்துறையில் இருப்பவர்கள் ஆவார்.
பெயரெண்- 98
கஷ்டங்களும், தீராத நோயும் உண்டு, சிரமப்பட்டாவது வாழ்க்கையின் பிற்பாதி புகழ்பெறுவர். சிறந்த நூல்களை எழுதுவதன் மூலம் பிரசித்தி பெறுவர். கல்வித் துறையில் சாதனைகள் புரிந்து புகழ் பெறக்கூடும்.
பெயரெண்- 107
பிரசித்தியும், வெற்றியும் தரும். ஸ்திரீகளால் சிக்கல் ஏற்படும். செல்வம் ஏற்பட்டாலும் சுகம் இல்லை. கீர்த்தி உண்டு. செல்வாக்கு ஏற்படும். உலகப் பிரசித்திப் பெறும் அளவிற்கு உயர்த்தக்கூடும். அயல்நாடுகளில் அரசாங்கம் தொடர்புடைய பெரும் பதவிகளில் இருப்பார்கள்.
பொதுவாக எட்டாம் எண்ணில் பெயர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட காலம்
5,14,23 ஆகிய தேதிகள் நன்மை தரும்.
8,17,26 ஆகிய தேதிகள் துரதிஷ்டமானவை.
தொழில்
உயர்வான விஷயங்களைப் போதிப்பது, பஸ் போக்குவரத்து, லாரிகள், சுரங்கப்பொருட்கள், கம்பளித்துணி, இரும்புச் சாமான்கள், ஆயுதங்கள், சோப்பு, எண்ணெய் தயாரிக்கும் மில், அச்சுக்கூடம், போலிஸ் இராணுவம், அலுவலக உதவியாளர், எடுபிடி, ஏவலாளர் விளையாட்டுத்துறை, நகைப்பட்டறை, இரும்புப் பட்டறை, மீன், இறைச்சி, வியாபாரம், மதுக்கடை நடத்துதல், வாகனங்களைப் பழுது பார்த்தல், தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றின் மூலம் பொருளீட்டலாம்.
பொதுவாக 1,4,5,6 எண்காரர்களைத்தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம், 1,4,8 எண்காரர்கள் உதவுவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எண்-9- செவ்வாய்
பொதுவான குணநலன்கள்
போராடவே பிறந்தவர், இவர் அறிவு மிகுந்தவர். மனப்போராட்டம் உண்டு. சாகசம், வீரச்செயல்கள், சூழ்ச்சி செய்வதில் பிரியம் இருக்கும். உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவர். வாயச்சண்டை உடையவர். ரணங்களும், தழும்புகளும் இவரைக் கவரும். சாந்தி, சமாதானத்தில் ஈடுபாடில்லை. தன் இஷ்டப்படி நடப்பவர். அறிவுடையவர், எதிரிகள் அதிகம் கொண்டவர். இராஜதந்திரி, கோபம் அதிகமிருக்கும். முரட்டுத்தனம் அடக்கி ஆளுதல், வளைந்து கொடுக்காத தன்மை ஏற்படும். சிறிய காரியங்களுக்குக்கூட உயிரைப் பணயம், வைப்பர். மனோ தைரியம் மிக்கவர். தனது எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவர். தளராத உறுதி கொண்டவர். இராசயனம், வைத்தியம், முதலிய சாஸ்திரங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். நற்பலன்களை அரிதாகச் செய்யக்கூடியவர். பிறர் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்று எண்ணுவர். பணம் சம்பாதிப்பதைவிடச் சண்டை போடுவதிலேயே ஆர்வம் இருக்கும். பிறரை இம்சிப்பதில் ஆனந்தமடைவர். இவர் தீராத ஸ்திரீ மோகமுடையவர். மிருக சுபாவங்களே மனதில் குடிகொண்டிருக்கும். அபூர்வமான கனவுகள் மூலம் திருவருள் கிட்டும். ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யும் கடவுளை வழிபடுவர். இவர் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளாதது நல்லது. பெருத்த தேகம், பலசாலி, தொடைகள், மார்பு, வயிறு முதலிய பாகங்களில் வலிமை பெற்றிருப்பர் பொதுவாகப் பராக்கிரமசாலிகளாவார். தேகப்பற்று உண்டு.
நிறமும்- இரத்தினமும்
சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணம் அதிர்ஷ்டகரமானது. பவளம் இவர்களின் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.
ஒன்பது வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்
9,18,27 தேதியில் பிறந்தவர்கள் இந்த எண் ஆதிக்கம உடையவர்கள். .
9- ம் தேதி
செயற்கரிய காரியங்களைச்செய்வர். மோசமான லட்சியங்களுடையவர். எல்லா எதிர்ப்புகளையும் தனது சாமர்த்தியத்தால் வென்று வெற்றியடைவர். இவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளைப் பராக்கிரமத்தால் சமாளித்துத் தங்கு தடையின்றி வாழ்வில் முன்னேறுவார்.
18- ம் தேதி
சுயநலவாதி, அவசரப்பட்டுப் பிறர் விவகாரங்களில் சிக்கிக்கொள்வர். எல்லோருடனும் மனக்கசப்பை உண்டுபண்ணும், கோபம், பிடிவாதமுண்டு, காதலில்கட்டாயம் தோல்வி, இவர்களின் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் ஆவார்கள்.
27-ம் தேதி
நற்காரியங்களில் ஈடுபட்டுக் புகழ்பெறுவர். யோசனை எல்லாம் வெற்றி தரும். இவர்களின் அறிவே வெற்றி தரும். ஆனால் சாந்தமானவர்கள். ஆழ்ந்த யோசனையும் தளராத உழைப்பும் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்வர்.
பெயரெண் ஒன்பது வரும் எண்களின் பலன்கள்
பெயரெண்-9
அறிவையும், ஆற்றலையும் குறிக்கும். நீண்ட பிரயாணத்தில் ஆர்வம், எதிர்ப்புகளைத் தகர்த்து வெற்றியடைவர். ஈடு இணையற்ற ஆற்றலைக் கொண்டு உயர்ந்த பதவிகளை இவர்கள் வகிப்பவர்கள்.
பெயரெண்-18
கஷ்டங்களையும் தாமத்தையும், சூழச்சியையும் ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும், சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். சுயநலம், பொறாமை, வஞ்சகம் உண்டு. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெயரெண்- 27
தெளிவான அறிவையும், ஓய்வில்லாத உழைப்பையும் செல்வ விருத்திகயையும் அதிகாரப் பதவிகளையும் குறிக்கும். போலீஸ், இராணுவம் போன்ற துறையில் இருப்பர். அதிர்ஷ்டமான எண், உழைப்பு என்ற சாதனத்தை வைத்தே இவர்கள் வாழ்க்கையில் உயர்வு நிலையை எட்டுவார்.
பெயரெண்- 36
சாமானியரையும், பிரசித்தராக்கிவிடும், தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்ல நேரிடும். பொருளாதார மேம்பாடு உண்டு. விசுவாசமில்லாதவரால் சூழ்ந்திருப்பர். குடும்ப வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்தும். எதிர்பாராத நிலையில், திடீரென்று வாழ்வில் உயர்வு நிலையைப் பெறுவர்.
பெயரெண்- 45
பெரிய பதவி கிடைக்கும். வாக்கு சாதுர்யம், எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய காரியம் செய்வர். தொழிலில் நிகரில்லா ஸ்தானத்தை அடைவர். நோய்கள் அடிக்கடி வரும். மிகுந்த சகிப்புத் தன்மையுடன், சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவர்.
பெயரெண்- 54
படிப்படியான வெற்றியும், முன்னேற்றத்தையும் தரும். வாழ்க்கையின் முற்பாதியில் புகழும், செல்வமும் தரும். பேராசை உண்டு. சுதந்திரமில்லா வாழ்க்கை தரும். இவர்கள் வாழ்வில் வெற்றியும், தோல்வியும் கலந்த கலப்படமான சூழ்நிலையே ஏற்படும்.
பெயரெண்- 63
புத்தி நல்ல விஷயங்களில் செல்லாது. திருடர்களாவர். அதிர்ஷ்டகரமான எண் இல்லை. வாழ்க்கையில் செல்வமும், சிறப்பான அந்தஸ்தும் கெட்ட நண்பர்களால் கிட்டும். தீய குணங்களும் தீய நண்பர்களும் அமைவார்கள்.
பெயரெண்- 72
சிறப்பான எண் ஆகும். சிரமப்பட்டுப் பெரிய பதவி அடைவர். புகழ் நிலையான ஐஸ்வர்யம் உண்டு. நிலையான செல்வத்தைச் சிரமப்பட்டு அடைந்து விடுவார். ஓய்வு ஒழிச்சலற் உழைப்பாற்றலைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவார்.
பெயரெண்- 81
எதிர்ப்புகள் அதிகம் காணப்படும் உள் மனப் போராட்டங்களும், குடும்பத்தில் அமைதியின்மையும் உடைய எண்ணாகும். பலவிதக் கஷ்டங்களை அளிக்கவல்லது. எதிரிகளாலும், வழக்குகளாலும் சிரமத்தை கொடுக்கும் எண்ணாகும்.
பெயரெண்- 90
தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளக் கடைசி வரைப் போராடுவர். புகழ் உண்டு. அருள் நாட்டம் உடையவருக்கு இந்த எண் சிறப்பில்லை. இவர்களைச் சுற்றிக் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கட்டிடத் தொழிலிலோ, அரசாங்கத் தொழிலிலோ மிகவும் சிறப்பாக முன்னேறுவார்கள்.
பெயரெண்- 99
புத்தி தவறான வழியில் செல்லும், எதிரிகளால் தாக்கப்படுவர். வாழ்க்கைப் போக்கு மாறிய வண்ணம் இருக்கும். நிலையான வாழ்க்கை அமையாது. கஷ்டங்களை மாறிமாறி அனுபவிக்க வேண்டி இருக்கும்.
பெயரெண்- 108
பெரிய பதவியும், காரிய சித்தியும் எண்ணியபடியே எல்லாம் முடியும். நல்ல முயற்சிகளையும்,அதற்கு ஒத்த பலன்களையும் தருவதால் இது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த எண் ஆகும். மந்திரி பதவி போன்ற அரசுத் தொடர்புடைய மகிமைமிக்கப் பதவிகளில் அமரக்கூடிய அம்சம் இவர்களுக்கு உண்டு. பொதுவாகப் பெயரெண் ஒன்பது வரும்படி பெயர் வைக்கும்பொழுது 18,54,63,81,99 ஆகிய எண்களில் பெயர் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட காலம்
5,14,23,9,18,6,15,24,30 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.
2,11,20,29,19 ம் தேதிகளும் துரதிஷ்டமான தேதிகள் ஆகும்.
மற்ற தேதிகள் மத்திமமான பலன் தருபவையாகும்.
தொழில்
கட்டிடங்கள் கட்டுதல், இஞ்சினியரிங் தொழில்கள், இரும்புச் சாமான்கள் உற்பத்தி செய்தல், இயந்திர வியாபாரம், யுத்தம், அதிக சாகசம், விளையாட்டுத்துறை, அரசியல் பதவிகள், பொறியியல், தொடர்பான துறைகள், போலீஸ், இராணுவம், அரசு உத்யோகம், இராசயனம், சுரங்கத்தொழில், வேதியியல் கூடம், இரத்தப் பரிசோதனை நிலையம், மருத்துவம், அறுவை சிகிச்சை, ஆயுதங்கள் தயாரித்தல், விற்றல், இயந்திரங்களைப் பழுது பார்த்தல், விவசாயம், ரியல் எஸ்டேட்,கமிஷன் ஏஜெண்ட், அச்சுக்கூடம், டிராவல்ஸ், விஞ்ஞானம், பொதுநலச்சேவை அறக்கட்டளை நடத்துதல், கட்டுமானப்பணிகள், ஸ்தபதி, சிற்பங்கள் செய்பவர். வெளிநாட்டு அனுகூலம் போன்றவற்றின் மூலம் லாபம் ஈட்டலாம். இவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும் போட்டி ஏற்பட்டால் தான் இவர்களின் திறமை வெளிப்படும். இந்த எண் காரர்கள் 3,5,6,8,9 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். 2-ம் எண் தீமையுண்டாக்கும்.
பொதுவான குணநலன்கள்
போராடவே பிறந்தவர், இவர் அறிவு மிகுந்தவர். மனப்போராட்டம் உண்டு. சாகசம், வீரச்செயல்கள், சூழ்ச்சி செய்வதில் பிரியம் இருக்கும். உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவர். வாயச்சண்டை உடையவர். ரணங்களும், தழும்புகளும் இவரைக் கவரும். சாந்தி, சமாதானத்தில் ஈடுபாடில்லை. தன் இஷ்டப்படி நடப்பவர். அறிவுடையவர், எதிரிகள் அதிகம் கொண்டவர். இராஜதந்திரி, கோபம் அதிகமிருக்கும். முரட்டுத்தனம் அடக்கி ஆளுதல், வளைந்து கொடுக்காத தன்மை ஏற்படும். சிறிய காரியங்களுக்குக்கூட உயிரைப் பணயம், வைப்பர். மனோ தைரியம் மிக்கவர். தனது எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவர். தளராத உறுதி கொண்டவர். இராசயனம், வைத்தியம், முதலிய சாஸ்திரங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். நற்பலன்களை அரிதாகச் செய்யக்கூடியவர். பிறர் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்று எண்ணுவர். பணம் சம்பாதிப்பதைவிடச் சண்டை போடுவதிலேயே ஆர்வம் இருக்கும். பிறரை இம்சிப்பதில் ஆனந்தமடைவர். இவர் தீராத ஸ்திரீ மோகமுடையவர். மிருக சுபாவங்களே மனதில் குடிகொண்டிருக்கும். அபூர்வமான கனவுகள் மூலம் திருவருள் கிட்டும். ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யும் கடவுளை வழிபடுவர். இவர் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளாதது நல்லது. பெருத்த தேகம், பலசாலி, தொடைகள், மார்பு, வயிறு முதலிய பாகங்களில் வலிமை பெற்றிருப்பர் பொதுவாகப் பராக்கிரமசாலிகளாவார். தேகப்பற்று உண்டு.
நிறமும்- இரத்தினமும்
சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணம் அதிர்ஷ்டகரமானது. பவளம் இவர்களின் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.
ஒன்பது வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்
9,18,27 தேதியில் பிறந்தவர்கள் இந்த எண் ஆதிக்கம உடையவர்கள். .
9- ம் தேதி
செயற்கரிய காரியங்களைச்செய்வர். மோசமான லட்சியங்களுடையவர். எல்லா எதிர்ப்புகளையும் தனது சாமர்த்தியத்தால் வென்று வெற்றியடைவர். இவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளைப் பராக்கிரமத்தால் சமாளித்துத் தங்கு தடையின்றி வாழ்வில் முன்னேறுவார்.
18- ம் தேதி
சுயநலவாதி, அவசரப்பட்டுப் பிறர் விவகாரங்களில் சிக்கிக்கொள்வர். எல்லோருடனும் மனக்கசப்பை உண்டுபண்ணும், கோபம், பிடிவாதமுண்டு, காதலில்கட்டாயம் தோல்வி, இவர்களின் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் ஆவார்கள்.
27-ம் தேதி
நற்காரியங்களில் ஈடுபட்டுக் புகழ்பெறுவர். யோசனை எல்லாம் வெற்றி தரும். இவர்களின் அறிவே வெற்றி தரும். ஆனால் சாந்தமானவர்கள். ஆழ்ந்த யோசனையும் தளராத உழைப்பும் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்வர்.
பெயரெண் ஒன்பது வரும் எண்களின் பலன்கள்
பெயரெண்-9
அறிவையும், ஆற்றலையும் குறிக்கும். நீண்ட பிரயாணத்தில் ஆர்வம், எதிர்ப்புகளைத் தகர்த்து வெற்றியடைவர். ஈடு இணையற்ற ஆற்றலைக் கொண்டு உயர்ந்த பதவிகளை இவர்கள் வகிப்பவர்கள்.
பெயரெண்-18
கஷ்டங்களையும் தாமத்தையும், சூழச்சியையும் ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும், சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். சுயநலம், பொறாமை, வஞ்சகம் உண்டு. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெயரெண்- 27
தெளிவான அறிவையும், ஓய்வில்லாத உழைப்பையும் செல்வ விருத்திகயையும் அதிகாரப் பதவிகளையும் குறிக்கும். போலீஸ், இராணுவம் போன்ற துறையில் இருப்பர். அதிர்ஷ்டமான எண், உழைப்பு என்ற சாதனத்தை வைத்தே இவர்கள் வாழ்க்கையில் உயர்வு நிலையை எட்டுவார்.
பெயரெண்- 36
சாமானியரையும், பிரசித்தராக்கிவிடும், தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்ல நேரிடும். பொருளாதார மேம்பாடு உண்டு. விசுவாசமில்லாதவரால் சூழ்ந்திருப்பர். குடும்ப வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்தும். எதிர்பாராத நிலையில், திடீரென்று வாழ்வில் உயர்வு நிலையைப் பெறுவர்.
பெயரெண்- 45
பெரிய பதவி கிடைக்கும். வாக்கு சாதுர்யம், எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய காரியம் செய்வர். தொழிலில் நிகரில்லா ஸ்தானத்தை அடைவர். நோய்கள் அடிக்கடி வரும். மிகுந்த சகிப்புத் தன்மையுடன், சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவர்.
பெயரெண்- 54
படிப்படியான வெற்றியும், முன்னேற்றத்தையும் தரும். வாழ்க்கையின் முற்பாதியில் புகழும், செல்வமும் தரும். பேராசை உண்டு. சுதந்திரமில்லா வாழ்க்கை தரும். இவர்கள் வாழ்வில் வெற்றியும், தோல்வியும் கலந்த கலப்படமான சூழ்நிலையே ஏற்படும்.
பெயரெண்- 63
புத்தி நல்ல விஷயங்களில் செல்லாது. திருடர்களாவர். அதிர்ஷ்டகரமான எண் இல்லை. வாழ்க்கையில் செல்வமும், சிறப்பான அந்தஸ்தும் கெட்ட நண்பர்களால் கிட்டும். தீய குணங்களும் தீய நண்பர்களும் அமைவார்கள்.
பெயரெண்- 72
சிறப்பான எண் ஆகும். சிரமப்பட்டுப் பெரிய பதவி அடைவர். புகழ் நிலையான ஐஸ்வர்யம் உண்டு. நிலையான செல்வத்தைச் சிரமப்பட்டு அடைந்து விடுவார். ஓய்வு ஒழிச்சலற் உழைப்பாற்றலைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவார்.
பெயரெண்- 81
எதிர்ப்புகள் அதிகம் காணப்படும் உள் மனப் போராட்டங்களும், குடும்பத்தில் அமைதியின்மையும் உடைய எண்ணாகும். பலவிதக் கஷ்டங்களை அளிக்கவல்லது. எதிரிகளாலும், வழக்குகளாலும் சிரமத்தை கொடுக்கும் எண்ணாகும்.
பெயரெண்- 90
தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளக் கடைசி வரைப் போராடுவர். புகழ் உண்டு. அருள் நாட்டம் உடையவருக்கு இந்த எண் சிறப்பில்லை. இவர்களைச் சுற்றிக் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கட்டிடத் தொழிலிலோ, அரசாங்கத் தொழிலிலோ மிகவும் சிறப்பாக முன்னேறுவார்கள்.
பெயரெண்- 99
புத்தி தவறான வழியில் செல்லும், எதிரிகளால் தாக்கப்படுவர். வாழ்க்கைப் போக்கு மாறிய வண்ணம் இருக்கும். நிலையான வாழ்க்கை அமையாது. கஷ்டங்களை மாறிமாறி அனுபவிக்க வேண்டி இருக்கும்.
பெயரெண்- 108
பெரிய பதவியும், காரிய சித்தியும் எண்ணியபடியே எல்லாம் முடியும். நல்ல முயற்சிகளையும்,அதற்கு ஒத்த பலன்களையும் தருவதால் இது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த எண் ஆகும். மந்திரி பதவி போன்ற அரசுத் தொடர்புடைய மகிமைமிக்கப் பதவிகளில் அமரக்கூடிய அம்சம் இவர்களுக்கு உண்டு. பொதுவாகப் பெயரெண் ஒன்பது வரும்படி பெயர் வைக்கும்பொழுது 18,54,63,81,99 ஆகிய எண்களில் பெயர் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட காலம்
5,14,23,9,18,6,15,24,30 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.
2,11,20,29,19 ம் தேதிகளும் துரதிஷ்டமான தேதிகள் ஆகும்.
மற்ற தேதிகள் மத்திமமான பலன் தருபவையாகும்.
தொழில்
கட்டிடங்கள் கட்டுதல், இஞ்சினியரிங் தொழில்கள், இரும்புச் சாமான்கள் உற்பத்தி செய்தல், இயந்திர வியாபாரம், யுத்தம், அதிக சாகசம், விளையாட்டுத்துறை, அரசியல் பதவிகள், பொறியியல், தொடர்பான துறைகள், போலீஸ், இராணுவம், அரசு உத்யோகம், இராசயனம், சுரங்கத்தொழில், வேதியியல் கூடம், இரத்தப் பரிசோதனை நிலையம், மருத்துவம், அறுவை சிகிச்சை, ஆயுதங்கள் தயாரித்தல், விற்றல், இயந்திரங்களைப் பழுது பார்த்தல், விவசாயம், ரியல் எஸ்டேட்,கமிஷன் ஏஜெண்ட், அச்சுக்கூடம், டிராவல்ஸ், விஞ்ஞானம், பொதுநலச்சேவை அறக்கட்டளை நடத்துதல், கட்டுமானப்பணிகள், ஸ்தபதி, சிற்பங்கள் செய்பவர். வெளிநாட்டு அனுகூலம் போன்றவற்றின் மூலம் லாபம் ஈட்டலாம். இவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும் போட்டி ஏற்பட்டால் தான் இவர்களின் திறமை வெளிப்படும். இந்த எண் காரர்கள் 3,5,6,8,9 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். 2-ம் எண் தீமையுண்டாக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|