புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
14 Posts - 70%
heezulia
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
8 Posts - 2%
prajai
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
4 Posts - 1%
mruthun
அஷ்டலட்சுமி Poll_c10அஷ்டலட்சுமி Poll_m10அஷ்டலட்சுமி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டலட்சுமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:15 pm

அஷ்டலட்சுமி 12039504_960273957347337_8473156630984514112_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa2-2
-
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு (எல்லா)வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் பெற வேண்டிய வளங்களாக உடல் நலம், குழந்தைகள், வேலைவாய்ப்பு, பணம், செழிப்பு, தைரியம், பொறுமை மற்றும் அறிவு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

மேற்கூறிய வளங்களுக்கு அதிபதிகளாக ஆதிலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி மற்றும் வித்யாலட்சுமி ஆகிய திருமகளின் எட்டு வடிவங்கள் அஷ்டலட்சுமி என்று போற்றப்படுகின்றன.

ஆதிலட்சுமி

இந்த அம்மையே மகாலட்சுமி என்றும் அழைக்கப்படுகின்றாள். ஆதி என்பதற்கு மூலாதாரம் மற்றும் என்றும் நிலைத்திருப்பவள் (நித்தியமானவள்) என்பது பொருளாகும்.

இவ்வம்மையே பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது.

இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கீரிடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு கரத்தில் தாமரை மலரும், மற்றொரு கரத்தில் வெள்ளைக் கொடியும் மற்ற இரு கைகள் அபயவரத முத்திரைகளுடன் காணப்படுகின்றன. தாமரைப்பூவில் அமர்ந்து மலர் தோரணங்களால் சூழப்பட்டவள்.

இத்தேவியை வழிபட நோயில்லா வாழ்வும், தடை தாமதம் இல்லாத காரிய வெற்றியும், நினைத்ததை விட சிறப்பான பலனும், என்றும் வளங்களை நிலைத்திருக்கும் தன்மையையும் வழங்குவாள்.

சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தை செல்வத்தை வழங்குபவள்.

இவ்வம்மை ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கிறாள். இத்தேவியின் இருகரங்களில் கலசமும், கத்தி மற்றும் கேடையங்களை மற்ற இரு கரங்களிலும் கொண்டு ஒரு கையால் குழந்தையை அணைத்தபடி மற்றொரு கையில் வரத முத்திரையுடன் காட்சியளிக்கிறாள்.

இவ்வம்மையை வழிபட வாழ்வின் முக்கியச் செல்வமான குழந்தைச் செல்வத்தை வழங்குகிறாள். அத்துடன் நல்ல குடும்பம், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் ஆகியோரையும் வழங்குகிறாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:16 pm

கஜலட்சுமி
இவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான்.

கஜம் என்றால் யானை என்று பொருள். பெரும்பாலான
வீடுகளின் நிலைப்படிகளில் இத்தேவியைக் காணலாம்.
வெந்நிற மேனியுடைய இவ்வமையின்
இரு புறங்களிலிருந்தும் இரு யானைகள் தங்கக் கலசங்களில்
நீர் தெளித்து வழிபடுகின்றன.


இத்தேவி வெள்ளைப் பட்டு உடுத்தி நான்கு கரங்களைக் கொண்டு அருளுகிறாள். பின்னிரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி முன்னிரு கைகளால் அபயவரத முத்திரையுடன் காணப்படுகிறாள்.

இத்தேவியை வழிபட அவர்களுக்கு இராஜபோகத்தை அருளுவாள். உயர்ந்த அரச பதவி, உயர் அதிகாரப்பதவி ஆகியவை இவளை வழிபடக்கிடைக்கும்.

மேலும் நமக்கு தேவையான வாகனங்களையும், பசு, ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் நமக்கு கொடுக்கின்றாள். நம் வாழ்க்கைப் பயணம் எளிதாக இருக்க இத்தேவியின் அருள் அவசியமாகும். நம் வாழ்விற்கான சகல சௌபாக்கியங்களையும் அருளுகிறாள்.

தனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது பொன்னினைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம்; நம்மில் பலரால் விரும்பப்படுவது. இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவி செல்வம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் வருமானம் ஆகியவற்றை அருளுபவள்.

இவ்வம்மை சிவப்பு பட்டு உடுத்தி எட்டு கரங்களுடன் பொன்னிறமாகக் காட்சியளிக்கிறாள். இவ்வம்மையின் திருக்கரங்கள் சங்கு, சக்கரம், வில், அம்பு, அமிர்தக்கலசம், வெற்றிலை, தாமரை ஆகியவற்றைக் கொண்டும் மற்றொரு கரம் தங்கக்காசுகள் விழுந்த வண்ணம் உள்ள அபய முத்திரையுடனும் காணப்படுகிறது.

இவ்வம்மையை வழிபட தர்ம வழியில் நமக்குத் தேவையான செல்வத்தை அளித்து பொருள் வளத்துடன் சுபிட்ச வாழ்வு கிடைக்கும். நமக்கு மகிழ்ச்சியான செல்வச் செழிப்பான வாழ்க்கையை வழங்குவாள்.

தான்யலட்சுமி

இவ்வம்மையே எங்கும் செழுமை நிறைந்திருக்கக் காரணம் ஆவாள். இவளின் அருளாலே உலகில் பசிப்பிணி நீங்குகிறது. இவள் தானியங்கள், உணவுகள், ஊட்டச்சத்துகள், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிபதி.

இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.

இத்தேவி பச்சை வண்ணப்பட்டுத்தி ஆறுத்திருக்கரத்துடன் காட்சியளிக்கிறாள். தமது திருக்கரங்களில் தண்டாயுதம், வாழைக்குலை, கரும்பு, நெற்கதிர் ஆகியவற்றைக் கொண்டு அபயவரத முத்திரையுடன் காட்சியளிக்கிறாள்.

பசிப்பிணி போகவும், உலகம் செழிக்கவும், உணவுகள்
மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் இவ்வம்மையை
வழிபட வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:18 pm

விஜயலட்சுமி
இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். நம் வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். இவ்வம்மையின் அருட்பார்வையாலே நம்மால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். வெற்றி, தைரியம், நம்பிக்கை, பயமின்மை ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.

இவ்வன்னை சிவப்புப் பட்டு அணிந்து எட்டுத்
திருக்கரங்களுடன் சிம்மாசனத்தில் செங்கோல்
செலுத்தும் ராஜவடிவத்துடன் அருள்பாலிக்கிறாள்.


தனது கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தாமரை, பாசம் ஆகியவற்றைக் கொண்டும் மற்ற இரு கரங்களால் அபயவரத முத்திரைக் காட்டியும் காட்சியளிக்கிறாள்.

இவ்வம்மையை வழிபட ஒருவர் தன்வாழ்வில் தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை கிடைக்கப் பெற்று தோல்வி இல்லா வெற்றியைத் தொடர்ந்து பெறுவர். வாழ்க்கைப் பாதையில் வெற்றி பெற இவ்வன்னையை வழிபடுவோம்.

வீரலட்சுமி
இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவளுக்கு உண்டு.

பொறுமை, மூளைஉபயோகம், திட்டமிடல், காரிய நோக்கம்
ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.

இத்தேவி சிவப்பு பட்டு உடுத்தி எட்டு கரங்களுடன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள். தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வில், பாணம், சூலம், கபாலம் ஏந்தியுள்ளாள். மற்ற இரு கரங்களிலும் அபயவரத முத்திரை கொண்டு காட்சியளிக்கிறாள்.

இத்தேவியை வழிபட எந்த ஒரு காரியமும் அதன் நோக்கத்தோடு திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட்டு நிறைவேற‌ அருள்புரிவாள்.

வித்யாலட்சுமி
இவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருளுவாள்.

இத்தேவி வெண்பட்டு உடுத்தி நான்கு கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்து இருப்பாள். தனது இரு திருத்திருங்கரங்கில் தாமரை மலர்களை ஏந்தியும் மற்ற இரு கைகளால் அபயவரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறாள்.

பல்வேறு வகையான திறனைகளை வளர்த்துக் கொண்டு தடையில்லாத அறிவினையைப் பெற நினைப்பவர்கள் இவ்வன்னையை வழிபட வேண்டும்.

மும்பை மற்றும் சென்னை நகரங்கில் உள்ள அஷ்டலட்சுமி கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மேலும் பல கோவில்களில் அஷ்டலட்சுமிகள் தனிசன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

எட்டு வடிவங்களில் உள்ள அஷ்டலட்சுமிகளை வழிபட்டு வாழ்க்கையில் எல்லாவித நலங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
-

வாட்ஸ் அப் பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக