புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_m10குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 21, 2009 6:39 am

குழந்தைக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சினைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன


எடை குறைவாகப் பிறத்தல்

நன்கு போஷிக்கபட்ட கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் என உலகளவில் வரையருக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை கர்ப்பக்காலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம்.





குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்


1. குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள்


  • கர்ப்ப காலம் முடிவடைவதற்கு முன் அதாவது 37 வார கர்ப்பத்தின் போதே குழநதை பிறப்பதாகும். கர்ப்பத்தில் இக்குழைந்தைகளின் வளர்ச்சி நன்கு இருக்கலாம்-அதாவது உடல் எடை, உடல் நலம் மற்றும் வளர்ச்சி எல்லாம் சாதாரணமாக எந்த பாதிப்பின்றி இருக்கலாம். பிறந்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு சரியான பராமரிப்பு அளிப்பதன் மூலம் குழந்தை தேவையான வளர்ச்சி அடையும்



2. குறித்த காலத்தில் பிறந்தாலும் அளவில் சிறியதாக காணப்படுதல்.

குறித்த காலம் முடிவுற்ற பின்னர் அல்லது அதற்கு முன்னதாக குழந்தை பிறக்கலாம். அவைகளின் எடை மிக குறைந்து காணப்படும் அவற்றின் எடை கருவளர்ச்சியினைப் பொறுத்து அமைகிறது. இதற்கு பொதுவாக சில காரணங்கள் காணப்படுகின்றன. அவையாவன, கருவிலிருக்கும் குழந்தைக்கும், நஞ்சுக் கொடிக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகள், தாய்க்கு சத்துப் பற்றாக்குறை, இரத்தக் குறைவு, மிக இளம் வயதில் கர்ப்பமாகும் தாய், பல முறைத் தாய்மை அடைதல், தாய்க்கு மலேரியா நோய் ஏற்படுதல் போன்றவை ஆகும்.




குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பை தவிர்த்தல்


குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதை தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.

  • குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும்
  • கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இனங்கண்டறிய வேண்டும்.
  • கர்ப்ப காலத்தின் போது, மற்றக்காலங்களை விட சத்தான உணவ உட்கொள்ள வேண்டும். எல்லா ஊட்டப் பொருட்களும் கொண்ட சமன்செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். கூடுதலான ஊட்டப்பொருட்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக்ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
  • இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளி காலம், அதற்கு தேவையான கருத்தடை முறைகள் போன்றவற்றை கைக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
  • பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகள் மேம்படுத்தப் படவேண்டும்.




ஊட்டச்சத்து குறைபாடு


ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். புரதச்சத்து மற்றும் சக்தி குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.

  • குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.
  • 5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.
  • பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.
  • பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
  • கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
  • சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.




தொற்றும் தன்மை கொண்ட நோய்கள்


பொதுவாக சிறுவர்களில் அதிகளவு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. அவற்றில் வயிற்றுப்போக்கு (அ) பேதி, திடீரென சுவாச உறுப்பகளில் ஏற்படும் தொற்று நோய்கள், அம்மை நோய்கள், குன்னிருமல் (பெட்ரூஸிஸ்), தொண்டை அடைப்பான், இளம்பிள்ளை வாதம், டெட்டானஸ் மற்றும் எலும்புருக்கு போன்றவையும் அடங்கும்.




விபத்துக்கள் மற்றும் விஷப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள்


இவை வீடு, சாலைகள் மற்றும் பள்ளிகளில் சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடியவை. தீக்காயங்கள், காயங்கள், தண்ணீரில் முழ்கிவிடுதல், விஷப்பொருட்களை உட்கொள்ளுதல், கீழே விழுந்து காயமடைதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன.




குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் (குழந்தை நலன் பராமரிப்பு)


குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தை கருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.
ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. பெண் குழந்தை நலன் பராமரிப்பு என்பது கரு சிசுவாக உருவெடுப்பதிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நடக்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது.

குழந்தை பராமரிப்பு பணியின் நோக்கம் என்பது கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும்.

  • ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவது
  • அவர்களுடைய வளர்ச்சி சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் மாறுபாடான வளர்ச்சி கண்டறியப்பட்டு அதற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
  • ஏற்படுகிற சுகவீனங்கள் கண்டறியப்பட்டு நோயின் தன்மை மோசமான நிலையை அடையாதவண்ணம் எந்த தாமதமும் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
  • நன்கு பயிற்சி பெற்ற நபர்களைக்கொண்டு பராமரிக்கப் படுகிறார்களா.
  • தாய் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்கள் கல்வியறிவு பெற்றவர்களா மற்றும் குழந்தையின் நலனை மேம்படுத்துவதற்கான குழந்தையின் நலனில் அக்கறை எடுக்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா.




வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது.


குழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும். இதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவற்றை நாம் அறியலாம். அதோடன்றி குழந்தை வளரும் போது பொதுவான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும் காணப்படுகிறது. மாறுபட்ட வளர்ச்சி காணப்பட்டால் அதனை சரிசெய்ய குடும்பத்திலும் மற்றும் சுகாதார மையங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைச் செய்யவும் உதவியாயிருக்கிறது.




குழந்தையின் வளர்ச்சி


குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.
சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.




எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை. மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.


உயரம் - உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.


தலை மற்றும் மார்பின் சுற்றளவு - குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.


நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு - குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.


அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு
குழந்தையின் உடல் வளர்ச்சியோடு கூட மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் இவற்றைக் கூட கண்காணிப்பது அவசியம். இவற்றைவிட வளர்ச்சிக் குறியீடுகள் பயன்படுத்தி, குழந்தையின் உடல், மன, புத்தி வளர்ச்சியைக் கணக்கிட, சுகாதார நலப் பணியாளர்கள் தாயையும், பிற குடும்ப நபர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 21, 2009 6:40 am

விருத்தசேதனம் / சுன்னத்து (ஆண்குறியின் நுனித்தோலை நீக்குதல்)



பிறந்த ஆண்பிள்ளைகளின் ஆண்குறியின் முனையில், உறை அல்லது தொப்பி போன்ற நுனித்தோல் காணப்படும். விருத்த சேதனத்தின் போது, ஆண்குறியின் முனைப்பகுதி வெளியில் தெரியும் வண்ணமாக, நுனித்தோல் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்படும்.

குழந்தைக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் Image_preview

  • குழந்தை பிறந்த இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் விருத்தசேதனம்/சுன்னத்து செய்வது மிக நல்லது. ஆனால் பொதுவாக இந்த முறையானது பிள்ளை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் செய்யப்படும். (அநேக வேலைகளில் பிறந்த 48 மணி நேரத்திற்குள்ளும் செய்யப்படும்)
  • குறைப்பிரசவத்தில் பிறந்தக் குழந்தைகள் மற்றும் உடல் நலக் குறைவு உள்ள குழந்தைளுக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டப் பிறகே சுன்னத்து செய்யப்படும்
  • ஆண்குறியில் பிரச்சனை உள்ள குழந்தைகட்கு, அப்பிரச்சனை அறுவைசிகிச்சை முறையில் சரிசெய்தப் பிறகே விருத்த சேதனம் செய்யப்படுகிறது. ஏனெனில், விருத்தசேதனத்தின் போது நீக்கப்படும் நுனித்தோலானது சில சமயங்களில், குறைபாடுடன் உள்ள ஆண்குறியினைச் சரிசெய்ய பயன்படும்.





விருத்தசேதனம் பண்ணப்பட்ட ஆண்குறியினை பராமரித்தல்



  • ஒவ்வொரு முறை குளிப்பாட்டும் போதும் பதமான சுடுதண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவவேண்டும்.
  • குழந்தைகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தாவண்ணம் அவர்களை கவனமாக பராமரிக்க வேண்டும்
  • நுனித்தோல் எடுக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போடப்பட்டிருப்பின் தேவையின் அடிப்படையில புதியக் கட்டினை போட்டுக்கொள்ளலாம்
  • விருத்தசேதனத்தின் போது ஏற்படும் காயம் ஆற 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். அதுவரை அப்பகுதி ரணமாக அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

- தொடர்ந்து இரத்தக்கசிவு இருத்தல்
- ஆண்குறியின் முனை சிவப்பாக மாறி 3 நாட்களில் இது மிகவும் மோசமாகும் போது.
- காய்ச்சல் இருந்தால
- நோய் தொற்று வந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதாவது சீழுடன் கூடிய சிவப்பு நிற சிறு பிளவைகள் போன்றவை இருந்தால்.
- விருத்தசேதனம் செய்த 6 முதல் 8 மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிக்கவில்லை என்றால்.



www.indg.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக