புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_c10 
30 Posts - 88%
heezulia
டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2018 11:57 am


சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கொசு வலை பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்களை தமிழக சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு வகையான காய்ச்சல் பரவி வருவதால் அதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், குறிப்பாக சென்னை கொளத்தூர் மேற்குத் தெருவைச் சேர்ந்த 6 வயது நிரம்பிய தீக்ஷா, தக்ஷண் ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தது, பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

200 பேர் பாதிப்பு: இது குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 23,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், சுகாதாரத் துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை தமிழகம் முழுவதும் 2,400 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

20,000 பணியாளர்கள்: சுகாதாரத் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிகப் பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250-300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எலைசா முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் 31-இல் இருந்து 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு சாதனங்களும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 27 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ரத்தப் பரிசோதனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிலரும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044 24350496, 044 24334811, 94443 40496, 87544 48477 என்ற எண்களில் இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.



டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக