புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
2 Posts - 4%
prajai
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
2 Posts - 4%
சிவா
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
1 Post - 2%
viyasan
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
1 Post - 2%
Rutu
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
2 Posts - 15%
Rutu
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி


   
   

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 22, 2018 11:34 pm

First topic message reminder :


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 277927208083201
















தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:15 am


நம்முடைய ஆசாரியர்களான ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்யும் அநேக கிரந்தங்களை அநுக்கிரஹம் பண்ணியிருக்கிறார்கள். ஸெளந்தர்ய லஹரியைத் தவிர, ‘ஆனந்த லஹரி’, ‘தேவி புஜங்கம்’, ‘த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்’, ‘த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்’ – இந்த மாதிரி பெரிய ஸ்தோத்திரங்களும் ‘அன்ன பூர்ணாஷ்டகம்’, ‘அம்பாஷ்டகம்’ மாதிரி சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களும் தேவீபரமாகச் செய்திருக்கிறார். இவைகளை நாம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். அம்பாளின் அநுக்கிரஹ வெள்ளத்தில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருக்கலாம். பரம அற்புதமான வாக்கிலே இவை அமைந்திருக்கின்றன. ஆனாலும், இவற்றைச் செய்த ஆசார்யாளோ துளிக்கூடக் கர்வப்படாமல், எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளை நிரம்பவும் விநயத்தோடு துதிக்கிறார்கள். தமக்கு அவளுடைய அநுக்கிரஹத்தை கோருகிற யோக்கியதை கொஞ்சம்கூட இல்லை என்கிற நைச்சியமான எண்ணம் தொனிக்க அநேக இடங்களில் பேசுகிறார். ‘ஸெளந்தர்ய லஹரி’யில் குறிப்பாக இரண்டு இடங்களில் இந்த அதிவிநயமான மனோபாவம் நம் மனஸைத் தொடுகிற மாதிரி வெளியாகியிருக்கிறது. இவற்றில் ஓரிடத்தில் (த்ருசா த்ராகீ யஸ்யா) அம்பாளின் கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார்: மற்றதில் (த்ருதீனாம் மூர்த்தானோ) அவளுடைய சரணாரவிந்த ஸ்பரிசத்தை வேண்டுகிறார். அம்பாளுடைய கடைக்கண் வீச்சைத் தம்மீது திருப்புமாறு கேட்கிறபோது, ‘என்னையும்கூட (மாமபி) கடாக்ஷித்து அருள்வாயம்மா’ என்று கேட்டுக்கொண்ட மாதிரியே, மற்றைய இடத்திலும் “என் சிரஸிலும்கூட (மமாபி சிரஸி) உன் திருவடிகளை வைத்து அநுக்கிரஹம் பண்ணு தாயே” என்கிறார். இரண்டு இடங்களிலும் இந்த ‘அபி’ என்ற சொல்லையே பிரயோகம் செய்திருக்கிறார். தமக்கும்கூட அவளது அநுக்கிரஹம் வேணும் என்று சொல்வதிலிருந்தே, நியாயப்படி பார்த்தால் நமக்கு அதைப் பெற தகுதி இல்லை என்று நினைப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ‘எந்த யோக்கியதையும் இல்லாமலே உன் அருளைக் கேட்கிறேனம்மா’ என்று சொல்லாமல் சொல்கிறார்.

ஞானத்திலாகட்டும், பக்தியிலாகட்டும், புத்தியிலாகட்டும், வாக்கு வன்மையிலாகட்டும், காரிய சக்தியிலாகட்டும், கருணையிலாகட்டும், நம் ஆச்சாரியாளைப்போல பூரண யோக்கியதை உள்ளவர்கள் அவருக்கு முந்தியும் இல்லை, பிந்தியும் இல்லை. அப்படியிருந்தாலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக, நாம் அடக்கத்துடன் எப்படி அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று, நமக்குச் சொல்லிக் கொடுக்கிறமாதிரி மாமபி, மமாபி (என்னையும்கூட கடாக்ஷி! எனக்கும்கூட திருவடியைத் தா) என்கிறார்.

யோக்கியதை இல்லாமல் கேட்கலாமா என்றால் நியாயப்படி அது சரியில்லைதான். ஆனால், நிறைய அநியாயங்களைப் பார்க்காமல், நல்லதையே செய்துகொண்டிருக்கிற அன்பு மயமான வஸ்துக்களும் இருக்கின்றனவே என்று எடுத்துக் காட்டுகிறார். “நல்ல பூர்ணிமை நிலை ராஜாவின் நிலை முற்றத்தில் மட்டுமா விழுகிறது? காட்டிலே இருக்கிற கள்ளிப் புதர்மேலேகூடத்தானே அமிருதமாகப் பொழிகிறது! சந்திரிகை எப்படி யோக்கியதை பார்க்காமல், சகல இடங்களிலும் சமமாக விழுந்து குளிர்ச்சியும் பிரகாசமும் தருகிறதோ, அப்படியே உன் கடாக்ஷ வெள்ளமானது தகுதி வாய்ந்த உத்தம அதிகாரிகளின் மேல் மட்டுமில்லாமல் என் மேலும்கூட விழுந்து என்னையும் ஸ்நானம் பண்ணி வைக்கலாகாதா? ஞானத்தின் பிரகாசத்திலும் காருண்யத்தின் குளிர்ச்சியிலும் என்னை முழுக்கக்கூடாதா?” என்கிறார். ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்ற சுலோகத்தில்.

இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது “வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ, அந்தப் பாதங்களை என் சிரஸிலும்கூட வைப்பாய் அம்மா” என்கிறார்.

இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், ‘நியாயம் – அநியாயம் என்பவை காரிய – அகாரியங்களை எடை போடுகிறபோதுதான். தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை. நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்” என்கிறார் (தயயா தேஹி சரணௌ)

வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு. உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது. முன்பே நான் ஞானாம்பிகையையைப் பற்றிச் சொல்கிறபோது கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லியிருக்கிறேன். தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது, அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது. இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது. அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல் ரொம்பவும் அடங்கி ‘மமாபி’ “எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா” என்கிறார்.

ஒவ்வொரு காரியத்துக்கும் நேராக, முக்கியமான ஒரு பலன் இருப்பதோடு, வேறு சில பலன்களும் ஏற்படுகின்றன. இந்தப் பலன்களை உத்தேசிக்காவிட்டாலும்கூட, அவை பாட்டுக்கு உண்டாகி விடுகின்றன. கேநோபநிஷத்தில் அம்பாளைப் பற்றிச் சொல்லியிருப்பதில் இப்படியே ஞானோபதேசம் என்கிற நேர் உத்தேசத்தோடு, வேறு ஒரு பிரயோஜனமும் நமக்குக் கிடைக்கிறது. இது ஆத்ம ஞானத்துக்கோ அம்பாள் தத்துவத்துக்கோ சம்பந்தமில்லாதது என்றாலும்கூட, இதிலும் ஒரு முக்கியத்துவம் நவீன காலத்தவர்களுக்கு இருப்பதால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன்.

இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர், ‘புராண காலத்தில்தான் பரமேசுவரன், பார்வதி, விஷ்ணு, பிள்ளையார் முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள். ஆனால் இங்கே கேநோபநிஷத்திலோ, ‘ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. ‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில், மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது. இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள். ‘ஸ்திரீ’ என்று சொன்னதால் ஆண், பெண் கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை ‘உமா’ என்று சொன்னதோடு நில்லாமல் ‘ஹைமவதி’ என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும் உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது. (ஹிமவானின் புத்திரி ஹைமவதி; பர்வத ராஜனின் புத்திரி பார்வதி). இன்றைய இந்து மதத்தின் மூர்த்தி வழிபாடு புராண காலத்திற்கு முற்பட்டது. அது உபநிஷத் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கு அழுத்தமான உட்சான்று (internal evidence ) கேநோபநிஷத்தில் கிடைக்கிறது.

உபநிஷத்தில் ஞானம் தந்தவளாகச் சொல்லப்பட்ட அம்பாளின் பாதத்தைத் தம் தலையில் வைக்குமாறு, ஆசாரியாள் பிரார்த்திக்கிறார். இங்கே அம்பாளே குரு ஸ்வரூபிணி என்பது உறுதியாகிறது. குரு பாதுகை எப்போதும் சிரஸில் இருந்து கொண்டிருப்பதாக மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவ்விடத்தில் எப்போதும் குருவின் திருவடி தீஷை கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.




தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:15 am


ஞான குருவாக கேநோபநிஷத்தில் தோன்றி, வேத முடிவுக்கு அணிகலனாகத் தன் பாதங்களை வைத்திருக்கிறாள் அம்பிகை. அந்தப் பாதங்களுக்கு உள்ள மற்ற மகிமைகளையும் இந்த சுலோகத்தில் ஆசார்யாள் கூறுகிறார். பெரியவர்கள், மகான்கள், ஆசாரியார்கள் ஆகியோரின் பாதங்களுக்கு ஜலம் வார்த்து உபசாரம் செய்ய வேண்டும். ஷோடசோபசாரம் என்கிற பதினாறு உபசாரங்களில், பாதங்களில் ஜலம் விடுவதைப் ‘பாத்யம்’ என்பார்கள். அம்பாளுக்குப் ‘பாத்யமாகப்’ பசுபதியின் ஜடையிலிருந்து கங்கா தீர்த்தம் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கிறதாம். சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியாக இருக்கப்பட்ட அவளுடைய சரண கமலங்களில், பூத லோகங்களுக்கெல்லாம் பிரபுவானதால் பசுபதி என்று பேர் படைத்த ஈசுவரனும் நமஸ்கரிக்கிறான் என்பது தாத்பரியம். ஈசுவரன் அப்படி இவள் பாதத்தில் தலையை வைத்து நமஸ்கரிக்கும்போது அவனுடைய ஜடையிலிருந்து கங்கா ஜலம் பாதத்தில் விழுமல்லவா? இதைத்தான் ‘பாத்யம்’ தருவதாகச் சொல்கிறார். ஈசுவரனுக்கு அந்த பிரபுத்வ சக்தியும் மூலமான பிரம்ம சக்தியிடமிருந்துதானே உண்டாயிற்று? அதனால் அவருங்கூட அகம்பாவமில்லாமல் இங்கே வந்து நமஸ்கரிக்கிறார்.

‘உத்தம ஸ்திரீகள் பாதங்களில் லாக்ஷாரஸம்’ என்கிற செவ்வரக்குக் குழம்பைப் பூசியிருப்பார்கள். அம்பாள் பாதத்தை அலங்கரிக்கவோ வேறு சிவப்பு ஜோதி ஒன்று இருக்கிறது என்கிறார். ‘ஹரி’ எனப்படும் சாக்ஷாத் நாராயணனின் சிரஸில் குடியிருக்கிற சூடாமணியின் பிரகாசமே, அம்பாளின் பாதத்துக்கு லாக்ஷாரஸமாக இருக்கிறது’ என்கிறார் ஆசார்யாள். ஜகத் பரிபாலன கர்த்தாவான மகாவிஷ்ணு அவரது பரிபாலன சக்தியும் பராசக்தியிடமிருந்தே வந்தது என்பதால் அடக்கத்தோடு அவளுடைய சரண கமலங்களில் நமஸ்கரிக்கிறார். அப்போது அவருடைய சிரோ பூஷணம் அம்பாளுக்குப் பாத பூஷணமாகிறது. மஹாவிஷ்ணுவின் கிரீடத்திலே டால் அடிக்கிற சிவப்பு மணி அம்பாளின் பாதத்தில் செங்குழம்பு பூசின மாதிரி இருக்கிறது.

தேவர்கள், ஸ்ரீ மகாவிஷ்ணு, பரமேசுவரன் எல்லோரும் அகம்பாவமே இல்லாமல் ஆராதனை செய்த அம்பாள், நம் அகம்பாவத்தைப் போக்கி ஞான அநுக்கிரஹம் செய்ய வேண்டும். அதற்கு வழியாக, அவளுடைய சரணார விந்தங்களை நம் ஆச்சார்யாள் போல நாமும் தியானம் செய்ய வேண்டும்.

அம்பாளுடைய பதிவ்ரத்தியப் பணிவைப் பல இடங்களில் சொன்ன ஆசார்யாள், இங்கே அவளை ஈஸ்வரனே நமஸ்கரித்ததாகச் சொல்கிறாரே என்றால், இது எல்லாமே லீலைதான். இருவரும் ஒன்றேதான். ஒரு பாவத்தில் இவள் நமஸ்கரிக்கிறாள். இன்னொன்றில் அவர் நமஸ்கரிக்கிறார். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அவரே சாந்தமான ஸத்வஸ்துவாகவும், இவளை சக்திமயமான சித்தாகவும் விசேஷிப்பது வழக்கம்.

‘ஸெளந்தர்ய லஹரி’யின் முதல் சுலோகத்திலேயே அம்பாளுடைய இந்த அபாரமான சக்தியை ஆசார்யாள் சொல்கிறார். (சிவ: சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேசுவரனான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால்தான் காரியம் செய்வதற்குத் திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்குக்கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்குக் கிடையாது” என்கிறார். தன்னைத் தவிர வேறு ஏதுமே இல்லாததால், எதையும் அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது பிரம்மம். இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்துவிட்டன. பிரம்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க சூரியன், நக்ஷத்திரங்களிலிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற எலெக்ட்ரான் வரையில் எல்லாம், எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனஸோ கேட்கவே வேண்டாம். எப்போது பார்த்தாலும் அசைவுதான். இத்தனை அறிவுகளும் அசைவுகளும் எப்படியோ பிரம்மத்தில் வந்துவிட்ட மாதிரி இருக்கின்றன! அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும் அதன் சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சார்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. மாயா – எது இல்லையோ அதுவே – மாயா. நமக்கு மாயையைப் போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்; அவளேதான். இருந்தாலும் விசேஷமாகச் சில ரூபங்களில் தியானித்தால் நம் மனசு லயிக்கிறது. எல்லா ரூபத்துக்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிறவளே பிராண சக்தியாக, மூச்சுக்காற்றாக இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி எல்லாம் அவள் வடிவம்தான். ‘மனஸ்தவம்’ என்கிற சுலோகத்தில் ஆசார்யாள் இதையெல்லாம் சொல்கிறார்.

இதற்கு முன் சுலோகத்தில் (சரீரம் த்வம்) இரவும் பகலும் அம்பாளின் ரூபங்கள்தான் என்பதை ஆசாரியாள் சொல்கிறார். தாயார் குழந்தைக்குப் பால் கொடுக்கிற மாதிரி சூரியன் சந்திரன் என்கிற இரண்டால் லோகத்துக்கு உணவு அளிக்கிறாள் என்கிறார். சூரியனிடமிருந்துதான் தாவரப் பிரபஞ்சம் க்ளோரோஃபில் உண்டாக்குகிறது. தாவரத்தைச் சாப்பிட்டோ, அல்லது தாவரத்தைச் சாப்பிடுகிற பிராணிகளைச் சாப்பிட்டோதான் எல்லோரும் உயிர் வாழ்கிறோம். (அசைவ உணவு உண்கிறவர்களும் தாவரத்தைச் சாப்பிடும் ஆடு, மாடு, பன்றி போன்றவைகளின் ஊனைத்தான் உண்பார்கள். மாம்ஸ பக்ஷிணிகளான நாய், பூனை, புலி, சிங்கம் இவற்றின் ஊனை உண்பதில்லை). சூரியன் தாவரங்களை வளர்க்கிற மாதிரி, சந்திரன்தான் மூலிகைகளை விசேஷமாக வளர்க்கின்றான். அம்பாள் சூரிய வெப்பத்தாலும், சந்திரனின் நிலவாலும் உலகம் முழுவதற்கும் தன் பாலைப் பொழிகிறாள் என்று இதையே ஆசார்யாள் சொல்கிறார். இதெல்லாம் அவளுடைய ரூபங்கள்.

நம் முதுகெலும்புக்குக் கீழிருந்து சிரசு உச்சிக்கு யோக சாஸ்திரப்படி குண்டலினி சக்தியை எழுப்பிக் கொண்டு போகிற போது அம்பாள் தாமரைத் தண்டை உடைத்தால் வருகிற நூலிழை மாதிரி அத்தனை மெல்லியதாக மேலெழும்பிப் போகிறாள் என்று மந்திர சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. “பிஸதந்து தநீயஸீ” என்று இதையே ஸஹஸ்ர நாமமும் சொல்கிறது. இத்தனை சூக்ஷமமாக இருந்தாலும் அதுவே கோடி சூரியப் பிரகாசமாக இருக்கும்; அதே சமயத்தில் உஷ்ணம் துளிக்கூட இல்லாமல் கோடி சந்திரன் மாதிரி குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த ரூபங்களைத் தவிர சகல சப்தமாகவும், வாக்காகவும் இருக்கிறாள். விசேஷமாக மந்திர சப்தங்களாக இருக்கிறாள். இதெல்லாமுமே சூக்ஷ்ம ரூபங்கள்.

நம் போன்ற சாதாரண ஜனங்களுக்காக ஸ்தூலமாகவே லலிதா, துர்க்கா, புவனேசுவரி என்று பல ரூபங்களில் இருக்கிறாள். இந்த ரூபங்கள் நம் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி புண்ணிய க்ஷேத்திரங்களில் பரமாநுக்கிரஹம் பண்ணி வரும் விக்கிரஹங்களாக உள்ளன.

வடக்கே ஹிமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கன்யாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாக்ஷியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாக்ஷியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும் காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்த்ய வாஸினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு, எப்போதும் அநுக்கிரஹம் பண்ணி வருபவள் அவளே!



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:16 am


அம்பாள் கருணாமயமானவள், அருளே உருவானவள் என்கிறோம். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் அவளை ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்’ (அவ்யாஜ கருணாமூர்த்தி) என்று சொல்லியிருக்கிறது.

ஆனால் லோகத்தில் கணக்கு வழக்கே இல்லாமல் கஷ்டங்களும் இருக்கின்றன. எனக்குத்தான் தெரியும். ஜனங்களுக்கு எத்தனை தினுசான கஷ்டங்கள் இருக்கின்றன என்று. என்னிடம் வருகிறவர்களெல்லாம் ஏதாவது கஷ்டத்தைச் சொல்கிறார்கள். பூஜை, புனஸ்காரம், க்ஷேத்திராடனம், தீர்த்தாடனம் செய்கிறவர்களுக்கும் சொல்லி முடியாத கஷ்டங்கள் வருகின்றன. இந்தச் சமயத்தில் சில பேர் ரொம்பவும் மனசு வெதும்பி ‘ஐயோ! நான் இத்தனை பூஜை பண்ணினேனே, பக்தி வைத்தேனே, அம்பாள் எனக்குக் கஷ்டத்தையேதானே கொடுத்துக் கொண்டிருக்கிறாள்! கருணாமூர்த்தி, கருணாமூர்த்தி என்று அவளைச் சொல்கிறீர்களே, என் விஷயத்தில் அவளுக்குக் கண் இல்லையே’ என்று துக்கப்படுகிறார்கள். அம்பாளிடம் கோபம்கூட அடைந்து விடுகிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் கஷ்டம் தருவதே அம்பாளின் கருணைதான்; பார்க்கப்போனால் இதுதான் பெரிய கருணை என்று தோன்றுகிறது.

நாம் இப்போது செய்கிற நல்லதை மட்டும் நினைத்துப் பார்த்து நமக்குக் கஷ்டம் வருவது நியாயமா என்று பிரலாபிக்கிறோம். தெய்வத்தை நொந்து கொள்கிறோம். ஆனால் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் ஒவ்வொருத்தரும் நல்லது மட்டும்தானா செய்திருக்கிறோம்? நம்மை நாமே அலசிப் பார்த்துக் கொண்டால் நாம் எத்தனை தப்புகள் பண்ணியிருக்கிறோம். காரியத்தில் செய்யாவிட்டால்கூட மனஸினால் எத்தனை மகாபாவங்களைப் பண்ணியிருக்கிறோம் என்பது தெரியும். இதெல்லாம் இப்போதைய – அதாவது இந்த ஜன்மத்து – விஷயம். இதற்கு முன் ஜன்மங்களில் நாம் என்ன செய்தோம் என்பது தெரியாது. இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்கிறது அம்பாள் போட்ட சட்டம். பூர்வ ஜன்மங்களில் வினையை விதைக்கிறோம்; அதற்கு அவள் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம். வாஸ்தவத்தில் நம் தோஷங்கள், பாவம் நமக்குப் பூரணமாகத் தெரிந்துவிட்டால் அம்பாள் நமக்குத் தருகிற இத்தனை கஷ்டமும்கூடப் போதாது என்றுதான் ஆகும். அப்போது நாமே பச்சாதாபப் படுவோம். ‘இத்தனை கஷ்டத்துக்கிடையில் அவளை நினைத்துக் கதிமோக்ஷம் தேடிக் கொள்கிற வழி கொடுத்திருக்கிறாளே! இது அதிகப்படி (Extra) கருணை அல்லவா! நமக்கு லாயக்கு இல்லாவிட்டாலும் அவளாகப் பொழியும் கருணையல்லவா! இதைப் புரிந்து கொண்டு சந்தோஷப்படாமல், அவளையே குறை சொல்வது எத்தனை அநியாயம்? ஏற்கனவே பண்ணின தப்பெல்லாம் போதாது என்று, அவளையே குறை சொல்கிற இந்தப் பெரிய தப்பையும் பண்ணுகிறோம்!’ என்று உணருவோம்.

குழந்தை மண்ணைத் தின்கிறது. அம்மாக்காரி அதன் கைகளைத் துணி போட்டுக் கட்டுகிறாள். அதற்கு மகா கோபம் வருகிறது. ‘அம்மாவாம், அம்மா! கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி’ என்று நினைக்கிறது. காரணம் இல்லாமலா அம்மா கட்டிப் போட்டாள்? குழந்தையைப்பற்றி அவளுக்கு இல்லாத அக்கறையா? குழந்தை தனக்குத் தானே சத்ருவாக இருந்துகொண்டு, அம்மாவை சத்துரு என்று நினைக்கிறது.

நாம் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் என்னென்ன புரட்டுக்கள் புரட்டினாலும், வாஸ்தவத்தில் இந்தக் குழந்தை மாதிரிதான் இருக்கிறோம். நம்முடைய பழைய தப்புக்கு அவள் தண்டனை தருவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. நமக்கு அந்த சக்தி இல்லை. கட்டிப் போட்டுவிட்டாள் என்று குற்றம் சாற்றுகிறோம். குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி நம் அதே பழைய தப்புகளைப் பண்ணாமலிருப்பதற்காகத்தான் கஷ்டம் என்கிற கட்டை ஜகன்மாதா போட்டிருக்கிறாள். கஷ்டம் வந்தால், ‘நாம் பூர்வத்தில் பண்ணின பாவத்தாலேயே இது வந்தது; ஆனபடியால் இந்த ஜன்மத்தில் தப்பு பண்ணினாலும் இதுமாதிரியே கஷ்டங்கள் இனியும் வந்து கொண்டேயிருக்கும்; அப்படித் தப்புப் பண்ணாமலிருக்க புத்தி தர வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பதுதான் நமக்கு விமோசனம் என்று தெளிய வேண்டும்.

நாம் நல்லது என்று நினைக்கிற சௌக்கியங்களை அம்பாள் தருகிறபோது மட்டும் கருணை என்று நினைக்கிறோம். அவற்றைப் பெற நமக்கு யோக்கியதை இல்லாதபோதுகூட அவள் அநுக்கிரஹிப்பதால் இதை காரணமில்லாத கருணை என்கிறார்கள். கஷ்டமோ ஒரு காரணத்துக்காக உண்டான கருணை. நாம் பூர்வத்தில் செய்த தப்பு அதற்குக் காரணம். இந்த மாதிரி இனிமேல் செய்யக்கூடாது என்று உணர்த்துவதற்காக, நம்மை நாமே நல்லவர்களாக்கிக் கொள்வதற்காக கஷ்டத்தைத் தருகிறாள். நல்லது என்று நாம் நினைக்கிற சௌக்கியங்களால் பலவிதமான அனர்த்தங்களும் நமக்கே உண்டாகலாம். எனவே, நமக்கு சௌக்கியம் தந்து நல்லதைச் செய்கிற கருணையைவிட, நம்மையே நல்லவர்களாக்கிக் கொள்ளச் செய்வதைக் காரணமாகக் கொண்டு கஷ்டத்தைத் தரும் கருணைதான் விசேஷமானது என்று எனக்குத் தோன்றுகிறது. காரணமில்லாமல் நல்லதைக் கொடுப்பது அவளுடைய ஸ்வபாவமான கருணை என்றால், நம்மைச் சோதித்துத் திருத்த வேண்டும் என்ற காரணத்தோடு அவள் கஷ்டத்தைக் கொடுக்கிறாளே, இந்தக் காரணக் கருணை அதைவிட உயர்ந்தது என்று தோன்றுகிறது. நாம் கொஞ்சம் கொஞ்சம்தான் பார்க்கிறோம். இதற்கு முந்தியோ பிந்தியோ நமக்குத் தெரியவில்லை. அதனால் இந்தச் சின்ன இடைவெளிக்குள் ஏற்படுகிற கஷ்டத்தைப் பார்த்து நமக்குக் கெடுதல் என்று நினைத்து விடுகிறோம். முக்காலமும் தெரிந்து பார்த்தோமானால், அவள் நமக்குக் கொஞ்சம்கூடக் கெடுதலே செய்வதில்லை என்று புரியும்.

கழுதை மேலே உப்புப் பொதி போட்டுக்கொண்டு ஒருத்தன் வேற்று ஊர் சந்தைக்குப் போனான். அந்தக் காலத்தில் உப்பு மூட்டையை மாட்டு மேலே, கழுதை மேலேதான் போட்டுக்கொண்டு போவார்கள். அப்படி போனான் இந்த வியாபாரி. போகிறபோது வழியில் திடீரென்று மழை பிடித்துக்கொண்டு வெளுத்துக் கட்டி விட்டது. உப்புப் பொதி என்ன ஆகிறது? எல்லாம் கரைந்து போயிற்று. வியாபாரிக்கு ஸ்வாமி மேலே மகா கோபம் வந்துவிட்டது. ‘ஏழை என் வயிற்றில் இந்தத் தெய்வம் அடித்துவிட்டதே. கருணையில்லாத சாமியை இனிமேல் கும்பிடுவதில்லை’ என்று முடிவு பண்ணிவிட்டான். வீட்டுக்குத் திரும்ப நடையைக் கட்டினான், வருகிற வழி காட்டு வழி. இருந்தாலும் இவன் மாதிரி பல வியாபாரிகள் கூட வந்த தைரியத்தில் காட்டு வழியாக வந்தான். காட்டிலே திருடர்கள் இவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு மறைந்திருந்தார்கள்.

சந்தையிலே விற்பனை நடத்தி வியாபாரிகள் நிறையப் பணம் கொண்டு வருவார்கள்; துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருக்கிற பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொள்ளலாம்’ என்று திருடர்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்களிடம் வியாபாரிகள் எத்தனை பேர் இருந்தாலும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் நடுநடுங்கிப் போனார்கள். அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. வெடிமருந்து கெட்டித்துத்தான் அதை வைத்து சுடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஆளே அகப்பட்டாலும் சரி; இல்லாவிட்டாலும் அவரவரும் உடைமைகளைப் போட்டுவிட்டுத் திக்குக்கு ஒருத்தராக ஓடி விடுவார்கள். எப்படியானாலும் திருடர்களுக்கு வேட்டைதான்! இன்றைக்கும் இப்படி மருந்து போட்டுச் சுட்டார்கள். ஆனால் மருந்து வெடிக்கவேயில்லை. பெரிதாக மழை பெய்திருந்தது அல்லவா? தோட்டாவாக இருந்தால் எந்த மழைக்கும் ஈரம் தாக்காது. மருந்து அப்படியில்லை. ஈரம் ஜாஸ்தியானால் வெடிக்காது. துப்பாக்கியால் சுட்டதெல்லாம் வெறும் புஸ்வாணமாயிற்று. இப்போது ஆயுத பலம் இல்லாத திருடர்களுக்குப் பயம் எடுத்தது. வியாபாரிகள் பணத்தை போட்டுவிட்டு ஓடுவதற்குப் பதில், திருடர்களே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். முதலில் சொன்னேனே, அந்த வியாபாரிக்கு இப்போதுதான் தெய்வத்தை நிந்தித்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. ‘மழை வந்ததால் உப்புதான் போச்சு; மழை வராவிட்டால் உயிரே போயிருக்கும். இந்த மழையினால் சின்னக் கஷ்டத்தைத் தந்து, அதே காரணத்தினால் பெரிய கஷ்டத்திலிருந்து தப்புவித்தாய். உன் கருணையை என்னவென்று சொல்வது?’ என்று ரொம்பவும் மனசு உருகி வேண்டிக் கொண்டான். இப்படிக் கதை.

முந்தி என்ன, பிந்தி என்ன என்று தெரியாமல் கஷ்டம் வருகிற சமயத்தை மட்டும் பார்க்கிறோம். அம்பாளுக்குக் கருணை இருந்தால் ஏன் கஷ்டம் வருகிறது என்று கேள்வி போடுகிறோம். முந்தி நாம் செய்த கர்மம், பிந்தி நமக்கு இந்த கஷ்டத்தாலேயே வரப்போகிற நன்மை இவை மட்டும் தெரிந்துவிட்டால் நாம் இப்படிச் செய்யமாட்டோம். அது தெரியாதபடி மனிதனை வைத்திருக்கிறாள். அதுவும் அவள் விளையாட்டுத்தான்.

இதெல்லாம் தெரியாதபோதே மநுஷ்யனுக்கு இத்தனை, ஆணவம், அகங்காரம் இருக்கிறதென்றால் திரிகாலமும் தெரிந்தால் இவனுடைய அதிக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இவன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்றே இப்படி வைத்திருக்கிறாள். ஆனால் இந்த ஸ்திதியிலும் கூட ‘நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை’ என்பதையாவது நாமே தெரிந்து கொள்ளலாம். முக்காலமும் தெரிந்த மகான்கள் சொல்வதை நம்பலாம். சகல ஜகத் வியாபாரமும் காரண காரிய ரீதியில் சட்டம் போட்ட மாதிரி நடக்கிறதைப் பார்த்தே, ‘நம் மநுஷ்ய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும்; நாம் கஷ்டப்படுகிறோம் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்; இனிமேல் இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றால் அவள்தான் கதி’ என்று புத்தி பெறலாம்!

அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக, சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள்தான்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:16 am


பரப்பிரம்மத்தின் சக்திதான் அம்பாள். ஒரு வஸ்துவின் சக்தி அந்த வஸ்துவோடு இரண்டறக் கலந்த விஷயம். வஸ்து இல்லாமல் அந்த சக்தி இல்லை. சக்தி இல்லா விட்டால் அந்த வஸ்துவும் இல்லை. ஆனபடியால் பிரம்மமேதான் சக்தி. பிரம்மத்தை ஈசுவரன் என்றால் அந்த ஈசுவரனோடு இரண்டறக் கலந்திருக்கிறவள் அம்பாள். பூவும் வாசனையும் தனித்தனியாய் இருக்க முடியுமா? பால் வேறு, அதன் வெளுப்பு வேறு என்று இருக்க முடியுமா? தேன் வேறு, அதன் தித்திப்பு வேறு என்று பிரிக்க முடியுமா? இப்படியே ஈசுவரனில் பிரிவறத் தோய்ந்திருக்கிறாள் அம்பாள். பரமேசுவரனும் பராசக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்றாயிருக்கிற ஆதி தம்பதி; சகல சிருஷ்டிக்கும் தந்தையும் தாயும் அவர்கள் தாம்.

தாய் வேறு, தந்தை வேறு என்று ஒரேடியாகப் பிரித்துச் சொல்ல முடியாமல், அம்மையப்பனாக, தாயுமானவராக இருக்கிற ஸ்வரூபம் அது. இரண்டும் இரு ரூபமாக இல்லாமல் ஒன்றாகக் கலந்த சிவ – சக்திகளே அர்த்தநாரீசுவரத் திருக்கோலம். நமக்கு அம்மா, அப்பா என்று இரண்டு ரூபங்கள் அநுக்கிரஹத்துக்கு வேண்டியிருக்கின்றன. நம்மைக் கண்டித்து உபதேசித்து ஞானத்தைக் கொடுக்கிற தகப்பனார் வேண்டும். நம்மிடம் எப்போதும் அன்பு கொண்டு ரக்ஷிக்கிற தாயாரும் வேண்டும். ஆனால் அவர்கள் வேறுவேறாகப் பிரிந்திருந்தாலோ தத்வ ரீதியில் சரியாக இல்லை. இதனால்தான் ஈசுவரனும் அம்பாளும் ஒரே ரூபத்தில் ஒரே சரீரத்தில் ஒரு பாதி அவர் மறுபாதி இவள் என்று அர்த்தநாரீசுவரராக ஆவிர்பவித்திருக்கிறார்கள்.

‘சம்பு என்கிற சத்தியம் அருவமானது; அதன் உருவமே நீதான்’ (சரீரம் த்வம் சம்போபுன்னகை என்று நம் ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்கிறார். அரூபம் ரூபமானதே அவளது சக்தியால்தான். ஆனாலும் சுத்த ஞான மயமாக இருக்கப்பட்ட அம்பாளின் பிரம்மம், அதன் அநுக்கிரஹ ரூபமான அம்பாள் இரண்டையும், தந்தையாகவும், தாயாகவும் பார்க்க வேண்டும்போல் நமக்கு ஆசையாக இருக்கிறது. இதற்காகத்தான் பரமேசுவரனுக்கும் ஒரு சகல ரூபம் இருக்கிறது. அப்புறம் தாயார், தகப்பனார் என்று முழுவதும் பிரிந்து விடாமல் ஒரு பொது ரூபமும் நமக்கு வேண்டியிருக்கிறது. இதற்காகவே இவரும் சேர்ந்து வலப்பாதி பரமேசுவரனாகவும் இடப்பாதி அம்பாளாகவும் அர்த்தநாரீசுவர ரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஸிடிவ், நெகடிவ் என்கிற இரண்டாக ஒரே எலெக்ட்ரிஸிடி இருப்பதுபோல் ஒரே பரம சத்தியம் அர்த்தநாரீசுவர ரூபம் கொண்டிருக்கிறது.

அர்த்தநாரீசுவரக் கோலத்தைப் பார்க்கிறபோது, பிறப்புக்குக் காரணமான காமனைத் தகனம் செய்த நெற்றிக் கண்ணில் பாதி சம்பந்தம் அம்பாளுக்கு இருக்கிறது. இறப்புக்குக் காரணமான காலனை உதைத்து ஸம்ஹாரம் பண்ணின இடது காலோ முழுக்கவும் அவளுடையதாக இருக்கிறது. இதிலிருந்து, ஜனன மரணச் சூழலிலிருந்து ஜீவனை விடுவிக்கிறவள் அவள்தான் என்று தெரிகிறது.

சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவை என்பதையறிந்து, ஸ்வாமி அம்பாள் இருவரிடத்திலும் ஒரே போன்ற பக்தி வைக்க வேண்டும். ஒருத்தரை ஒதுக்கி மற்றவரிடம் மட்டும் பக்தி வைத்தால் போதாது என்பார்கள். இரண்டு பேரிடமும் சேர்ந்து அன்பு வைக்கிற போதுதான், அவர் அவளுக்கு ஆதாரமாக இருக்கப்பட்ட அவளுடைய பதி, அவள் அவரை விட்டு நீங்க முடியாத அவளுடைய சக்தி என்கிற ஞானம் நீங்காமல் இருக்கும். இருவரில் ஒருவரை ஒதுக்கிவிட்டால் இந்த ஸதி – பதி உறவு மறந்துபோய், பக்தி விபரீதமாகிறது. சூர்ப்பனகை சீதையைத் துவேஷித்து ராமரிடம் மட்டும் வைத்த அன்பும், ராவணன் ராமரைத் துவேஷித்து ஸீதா தேவியிடம் மட்டும் வைத்த அன்பும் விபரீதமாகி காமமாக ஆயின என்று உங்களுக்குத் தெரியும். பலனும் விபரீதமாகவே ஆயிற்று. இப்படி விபரீத பலன்கள் இல்லாமல், பூரண அநுக்கிரஹம் வேண்டுமானால், அம்பாளும் ஈஸ்வரனும் அர்த்தநாரீசுவரராக இருப்பதை எந்நாளும் மறக்காமல் பக்தி செலுத்த வேண்டும். அவர் ‘மாதொரு பாகன்’, அவள் ‘பாகம் பிரியாள்’ என்பதை நினைவு கொண்டு இருவரிடமும் அன்பு வைக்க வேண்டும்.

அர்த்த நாரீசுவர ரூபத்தில் எந்த இடது பக்கம் அம்பாளுடையதாக இருக்கிறதோ, அதுவே சங்கர நாராயண மூர்த்தத்தில் மஹாவிஷ்ணுவுடையதாக இருக்கிறது. இதிலிருந்து அம்பாளேதான் மஹாவிஷ்ணு என்றாகிறது. திருவையாற்றில் உள்ள ஈஸ்வரனைப் பற்றித் துதிக்கிறபோது, அவருக்கு ஹரியைத்தவிர வேறு பத்தினி இல்லையென்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.

‘அரியலால் தேவியில்லை

ஐயன் ஐயாறனார்க்கே’

அம்பாளும் மஹாவிஷ்ணுவும் ஒன்றேதான் என்கிற தத்துவத்தையே புராண ரீதியில் சொல்கிறபோது அவளை நாராயண ஸஹோதரி என்கிறோம்.

அர்த்தநாரீசுவரர் ஆகட்டும், சங்கர நாராயணர் ஆகட்டும், இரண்டிலும் வலது பக்கம் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனே இருக்கிறார். வலது என்பதை எலெக்ரிஸிடியில் பாஸிடிவ் என்று வைத்துக்கொண்டால் இடப்பக்கம் நெகடிவ் ஆகிறது. பாஸிடீவ் சக்தி ஒரு மையக்கருவாக (Nucleus) இருக்க, நெகடிவ் சக்தி அதைச் சுற்றி அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருப்பதாக அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, ஆனால் காரியமேயில்லாமல் இருக்கிற நிர்குணமான பிரம்மத்தை மையமாக, ஆதாரமாகக் கொண்டு உலகத்தை எல்லாம் சிருஷ்டித்து நடத்திக் காரியத்தைச் செய்து வருகிற சகுணமான சக்தி இயங்குவது பாஸிடிவைச் சுற்றி நெகடிவ் சுழலுகிறதுதான். இதுவே ஆராதனைக்காக ஒரு மூர்த்தியாக வருகிறபோது, மத்திய நியூக்ளியஸ் – சுற்றி வருகிற சக்தி என்றில்லாமல் வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு கூறுகளாக திவ்ய ஆகாரம் (வடிவம்) எடுத்துக் கொள்கிறது. இதில் வலது பாஸிடிவ், செயலில்லாத ஆதார பிரம்மம்; இடது நெகடிவ், சகல காரியங்களுக்கும் மூலமான பிரம்மத்தின் சக்தி. இடது கூறு அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில், ஸ்திரீ ரூபமாகி அம்பாளாயிருக்கிறது; சங்கர நாராயண வடிவத்தில் புருஷ ஆகாரம் கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவாக இருக்கிறது.

திருமங்கையாழ்வார் பெருமாளைப் பற்றிப் பாடுகிற போது,

‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து’

என்கிறார். பெருமாள் தமக்கு வலப் பாதியில் ஈசுவரனை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், ஈசுவரனின் இடப்பாகத்தில் பெருமாள் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

கார்யமில்லாமல், கேவல ஞான மயமாக இருக்கிற பிரம்மத்தைப் பரமேசுவரன் என்றால், சகல ஜகத் காரணமாகிற மாயா தத்வத்தையும், இதிலிருந்து விடுவிக்கிற காருண்யத்தையும் அம்பாள் என்றோ மகாவிஷ்ணு என்றோ சொல்கிறோம். பரமேசுவரனுடைய சக்தி அவள்; ஸாக்ஷாத் நாராயணனே அவள்.

இதைப் பௌராணிகமாகச் சொல்கிறபோது, அவளை ஈஸ்வரனுக்குப் பத்தினி என்றும், மஹாவிஷ்ணுவுக்குத் தங்கை என்றும் பார்க்கிறோம்; அம்பாளை ‘சிவ சக்தி ஐக்ய ரூபிணி’ என்று சொல்லி முடிக்கிற லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இன்னோர் இடத்தில் ‘பத்மநாப ஸகோதரி’ என்று கூறியிருக்கிறது. அம்பாளைத் தவிர வேறெந்த தேவதா பேதத்தையும் பாடாத ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், தம் கீர்த்தனங்களிலெல்லாம் அவளை ‘சியாம கிருஷ்ண சஹோதரி’ என்றே அழைத்து, இதையே தம் முத்திரையாக வைத்திருக்கிறார்.

கிருஷ்ணாஷ்டமியின் போதே யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்த விஷ்ணு மாயை அவள்தான். ஸ்ரீராம நவமியின் போதோ அவள் ஞானாம்பிகையாக அவதரித்த வஸந்த நவராத்திரி நிகழ்கிறது. விஷ்ணு அவதரித்த போதே இவளும் அவதரித்தாள் என்றால் இரண்டும் ஒன்று அல்லது உடன்பிறப்புகள் தானே!

ஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொப்பனம் கண்டு, அதைப் பாசுரமாகப் பாடியிருக்கிறாள். அதிலே வைதிகப் பிராம்மண சம்பிரதாயப்படி, தனக்கு நாத்தனார் கூரைப் புடவை கட்டி மாலை போட்டு முகூர்த்தப் பந்தலுக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறபோது, கிருஷ்ணனின் சகோதரியான அம்பாளே இப்படி நாத்தனார் ஸ்தானம் வகித்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

‘மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான்!’

(அந்தரி என்றால் அம்பாள்)

இப்படி அம்பாளை ஒரு பக்கம் ஈசுவரனோடு அபேதமாகவும், இன்னொரு பக்கம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவோடு அபேதமாகவும், ஒருத்தருக்குப் பத்தினி, இன்னொருத்தருக்கு சகோதரி என்று பாவித்துப் பழகிவிட்டால், அப்புறம் ஈஸ்வரனுக்கும் பெருமாளுக்குமிடையே உசத்தி – தாழ்த்தி செலுத்தவே மாட்டோம். சைவ, வைஷ்ணவம் பிணக்கு அறுந்தே போகும்.

காரியமில்லாத நிலையில் இருக்கிற ஒரே வஸ்து காரியமாகிறபோது பல ரூபங்களாகிறது; இந்த ரூபங்களிடையே ஒன்றுக்கொன்று உசத்தி – தாழ்த்தி இல்லை; அதே மாதிரி இந்த ரூபங்களுக்கும் இவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கப்பட்ட ஒரே ஸத்யத்துக்கும் இடையிலும் வேறுபாடே இல்லை. இந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால், நம் மதத்தில் சண்டை, சச்சரவு, அபிப்பிராய பேதம், பிணக்கேயில்லாமல் ஆகும். ஈசுவர பத்தினியாகவும், பத்மநாப ஸஹோதரியாகவும் இருக்கிற அம்பாள்தான் இந்த சமரஸ பாவனையை நமக்கு அநுக்கிரஹிக்க வேண்டும்.

அம்பிகையின் ரூபங்கள் பல தினுசாக கோயில்களில் இருக்கின்றன. அதிலே ஒன்று சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக இருக்கிற துர்க்கை. சிவன் கோயில்களில் கர்ப்பக்கிருஹத்தைச் சுற்றி விநாயகர், தக்ஷிணா மூர்த்தி, மஹாவிஷ்ணு (அல்லது லிங்கோத்பவர்), பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்திகள் இருக்கின்றன. இவர்களில் தக்ஷிணாமூர்த்திக்குப் பத்தினி கிடையாது. இது அம்பாளின் சம்பந்தமில்லாமல் ஸ்வச்சமாகத் தான் மட்டுமே ஸ்வாமி இருக்கிற கோலம். இப்படியே துர்க்கைக்கும் பதி ஸ்தானத்தில் எவரையும் சொல்லத் தெரியவில்லை. தனி அம்பாளாக அவள் இருக்கிறாள். தக்ஷிணாமூர்த்தியின் கைகளில் ஜபமாலையும், சுவடியும் இருக்கும். இவர் வெள்ளை வெளேர் என்று இருப்பார். இதே மாதிரி ஒரே வெளுப்பாக ஜபமாலையும், சுவடியும் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்திரீ தேவதை ஸரஸ்வதி. சகோதரர்கள் ஒரேமாதிரி இருக்கிறார்கள். அதனால் ஸரஸ்வதி சிவனின் சகோதரி. இருவரும் ஞான மூர்த்திகள். பிரம்மா தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். அவரது வர்ணம் உருக்கிவிட்ட தங்கத்தின் நிறம். இதேமாதிரி ஸ்வர்ண வர்ணத்தோடு தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. பிரம்மா பிரஜைகளை சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார் என்றால், லக்ஷ்மியோ ஐசுவரியத்தைப் பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.

இப்போது புருஷ சம்பந்தமில்லாமல் தனியாக இருக்கிற அம்பாளான துர்க்கையம்மன் எப்படியிருக்கிறாள்? நீலமேக சியாமளமாக இருக்கிறாள். கையிலே சங்கும் சக்கரமும் வைத்திருக்கிறாள். மகிஷாசுரன் போன்ற பல ராக்ஷதர்களை சம்ஹரித்திருப்பவள் இவள்தான். இதையெல்லாம் பார்த்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவே இவளுடைய சகோதரர் என்று சொல்லாமலே புரியும். இதே வர்ணம், இதேமாதிரி சங்கு சக்கரம், அசுரர்களை சம்ஹரிப்பதற்காக என்றே திரும்பத் திரும்ப அவதாரங்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடமே காணப்படுகின்றன. பரம கருணையினால் இருவரும் இப்படி துஷ்ட நிக்ரகம் செய்கிறார்கள். இந்த மாயப் பிரபஞ்சத்தை லீலா விநோதமாக நடத்துவது இந்த இருவரும்தான். மாயோன், மாயோன் என்றே அவரைச் சொல்வார்கள். இது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெயர். மாயாவி, மாயா நாடக சூத்திரதாரி என்று புராணங்கள் சொல்லும். அவளையோ மஹாமாயை என்றே சொல்கிறோம். மற்ற சகோதர ஜோடிகளைவிட இந்த இரண்டு பேரும் ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறார்கள் – ஒன்று என்றே சொல்லிவிடலாம்போல்! மேலே நான் சொன்ன துர்க்கைக்கு ‘விஷ்ணு துர்க்கை’ என்றே பேர் இருக்கிறது. லோகத்திலும் அம்பாள் விஷ்ணுவின் சகோதரி என்பது சகலருக்கும் தெரிந்திருக்கிற அளவுக்கு ஸரஸ்வதி சிவசகோதரி என்பதோ, லக்ஷ்மி பிரம்மாவின் சகோதரி என்பதோ பிரசாரமாயிருக்கவில்லை.

மாயம் செய்வதை முக்கியமாக பெண்பாலாகவே கருதுவது மரபு. மஹாவிஷ்ணுவிடத்தில் இந்த அம்சம் தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர் அமிருதத்தைப் பங்கீடு பண்ணினபோது மோஹினியாக அவதாரம் பண்ணினார். இவர் அம்பாளின் இன்னொரு ரூபம் என்பதற்கு ரொம்பவும் பொருத்தமாக மோஹினியைப் பரமேசுவரனே கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். விஷ்ணு க்ஷேத்திரங்களில் ஜகத் பிரசித்தமாக இருக்கிறது திருப்பதி. வேங்கடரமண ஸ்வாமியைப் பார்த்தாலும் ரொம்ப அம்பாள் சம்பந்தமாக இருக்கும். அங்கே பெருமாளுக்குப் புடவைதான் உடுத்துகிறார்கள். சுக்ரவாரத்தில் அபிஷேகம் பண்ணுகிறார்கள். மற்றப் பெருமாள் கோயில்களில் கருடன் இருக்கிறது பல இடங்களில். இங்கு மட்டும் சிம்மங்கள் இருக்கின்றன. சிம்மம் அம்பிகையின் வாகனம்.

அம்பாளும், மகாவிஷ்ணுவும், பரமேசுவரனும் மூன்று ரத்தினங்கள். “ரத்ன த்ரய பரீக்ஷா” என்றே ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். இந்த மூன்றும் ஒரே பரம சக்தியத்தின் மூன்று ரூப பேதங்கள்தான். அம்பாள் மற்ற இரண்டு பேரோடும் பிரிக்க முடியாமல் சம்பந்தப்பட்டிருக்கிறாள். ஒருத்தருக்குப் பத்தினியாகவும் இன்னொருத்தனுக்கு ஸகோதரியாகவும் இருக்கிறாள். இந்த மூன்று மூர்த்திகளிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காத பக்தி வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிற சத்தியம் (Truth) சிவம் என்றும், அதுவே பலவாகத் தெரிகிறதற்குக் காரணமான சக்தி (Energy) அம்பாள் அல்லது விஷ்ணு என்றும் புரிந்து கொண்டு பக்தி செலுத்த வேண்டும்.

அம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன். இப்போது உங்களுக்குத் தெரியாத ஒரு கதை சொல்கிறேன். ராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்தத் தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசீதாஸர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாஸ ராமாயணம் என்றெல்லாம் பல இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த விஷயம் இருக்கிறது.

அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈசுவரனே ஸீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம். ‘மரகதமணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை ‘மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாஸர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் ‘மரகதச்சாயே’ என்று மீனாக்ஷியைப் பற்றிப் பாடுகிறார்.

சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரத்தைத் தாண்டி மூல காரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருத்தருக்குப் பத்தினியாகிப் பார்வதியாக இருக்கிறபோது பச்சையாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள். பரமேசுவரன் ஸீதா தேவியானார்.

பழைய காலத்தில் சின்ன வயசிலேயே குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்வார்கள். அப்போது ஹோமம் முதலிய கர்மங்களால் குழந்தைகளுக்கு அலுப்புத் தட்டிவிடப் போகிறதே என்று குஷிப்படுத்துவதற்காக விளையாடல், ஊஞ்சல், நலங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் போது கல்யாணப் பெண்ணுக்கு ஆண் வேஷமும், மாப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். இந்த மாதிரி, லோகத்தில் ராக்ஷஸ பயத்தைப் போக்கி விளையாட்டாக ஊர்வலம் வருவதற்கு அம்பாள் ராமனாகவும், ஈசுவரன் ஸீதையாகவும் வேஷம் போட்டுக் கொண்டார்கள். இது ஒருத்தருக்கும் தெரியாது. ஸ்ரீராமனும் ஸீதையும்கூட இதை மறந்தே போனதுபோல் இருந்தார்கள். ஆனால் ரொம்பவும் உணர்ச்சி வேகம் ஏற்பட்டால் மனஸின் அடியிலே எங்கோ மறைந்திருப்பதுகூட வெளியிலே வெடித்துவிடுகிறது அல்லவா? இப்படி ஒரு கட்டம் ராமாயணத்தில் வருகிறது.





தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:17 am

ஸ்ரீராமன் ஸீதையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிக்கொண்டு வந்துவிடுகிறது. “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதால் பெண்டாட்டியை அழைத்துப் போக மறுக்கிறாரே, இவரும் ஒர் ஆண் பிள்ளையா” என்று ஸ்வாதினத்தில் அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள்.

“உம்மை மாப்பிளையாக வரித்த என் பிதா ஜனகர் நீர் புருஷ வேஷத்தில் வந்திருக்கிற ஒரு ஸ்திரீ (ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே!” என்று ராமனைப் பார்த்து சண்டை போடுகிறாள் ஸீதா தேவி. இது சாக்ஷாத் வால்மிகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூக்ஷ்மமாக ஞாபகப்படுத்திவிட்டாள் ஸீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவிற்கு வந்தது. ராக்ஷஸ சம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்ததும், அதற்கு அநுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக ஸீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.

இவரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய ராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாஸத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாஸத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈஸ்வரனைக் கட்டிக் கொள்ள அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஒடி வந்தான். மகா சிவ பக்தனாதலால் அவனுக்குக் தன்னுடைய ஈசுவரன்தான் ஸீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப்போச்சு என்கிற கோபத்தில், இப்போது அவள் தலையீடு இருக்கக்கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு ஸீதையை தூக்கி வந்து அசோக வனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராக்ஷஸ அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் ராவணனுடைய அன்பு விகாரப்பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது துளி தெரிந்தது. ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனே ராவணன், ‘இவன் யார்? நந்தியம் பெருமானா?’ என்று நினைக்கிறான். ‘கிமேஷ பகவான் நந்தீ?’ என்பது வால்மீகி ராமாயண வசனம். ஸீதா ராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட ஹநுமாரைப் பார்த்ததும் கைலாஸத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல ராவணன் பேசுகிறான்.

அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும்! ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம் அம்பாளின் ஸ்திரீ ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே; இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களை சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயண சகோதரி என்று சொல்வதற்குப் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.

ஆசைகள் அத்தனை அனர்த்தத்துக்குக் காரணம். ஆசைதான் காமம் என்பது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் குரோதம், சோகம் எல்லாம் உண்டாகின்றன. காமத்தில் பிறப்பு உண்டாகிறது. குரோதத்தால் நம்மை நாமே கொன்று கொள்கிறோம். எனவே ஜனன மரணத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மைக் காமமும் குரோதமும் அண்ட விடக்கூடாது. மழை ஜலம் உள்ளே புகவொட்டாமல் நல்ல டஃபேடோ குடைத்துணி காப்பாற்றுகிறது. அதை ‘வாட்டர் ப்ரூஃப்’ என்கிறோம். இதே மாதிரி நமக்குக் காம ப்ரூஃபாக, க்ரோத ப்ரூஃபாக, சோக ப்ரூஃபாக ஒரு கவசம் இருக்கிறதா என்றால், இருக்கிறது.

அம்பாளின் கிருபைதான் அந்தக் கவசம். நமக்கு ரொம்பப் பணம் இருக்கலாம். செல்வாக்கு இருக்கலாம். ‘பவிஷு’ கியாதி இருக்கலாம். அழகு ஆரோக்கியங்கள் இருக்கலாம். இவையெல்லாம் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைத்ததாக நாம் சொல்லிக் கொள்ளலாம். ஓரளவுக்கு அப்படி சொல்வது வாஸ்தவம்தான். ஆனாலும் ஆசையும், வெறுப்பும், பயமும், துக்கமும் மனஸிலிருக்கிற வரையில் இதுகள் எல்லாம் கிடைத்துத்தான் என்ன? ஆனபடியால் உண்மையில் அம்பாள் அநுக்கிரஹம் இருப்பதற்கு அடையாளம் நம்மை, ஆசையும், துவேஷமும், பயமும் அழுகையும் தொடாமல் இருப்பதுதான்.

துவேஷம், பயம், அழுகை அவைகளுக்கும் மூலக்காரணம் ‘நான், நான்’ என்று ஒன்றிடம் ஆசைதான்; காமம்தான். எனவே காமம் ஒன்று தொலைந்தால் போதும். அத்தனை அனர்த்த பட்டாளமும் தொலைந்து போனதாக ஆகிறது. அதன்பின், இந்த உலகத்தில், இந்தச் சரீரத்தில் நாம் இருக்கிற போதே மோக்ஷ ஆனந்தம்தான்.

காமேசுவரி என்றும் காமாக்ஷி என்றும் பெயர் படைத்த பராசக்தியை மனமுருகிப் பிரார்த்தித்தால் அவள் நம் காமத்தை அடியோடு துவம்ஸம் செய்துவிடுகிறாள். காமேசுவரி தான் பஸ்பமாகிவிட்ட காமனை மறுபடி உண்டாக்கியவள். அதன்பின் காமதகனம் செய்த பரமேசுவரனுக்குக் காமம் பொங்குகிற மாதிரி தன் கண்களில் பிரேமை பொங்கப் பார்த்தவள்தான் காமாக்ஷி. இவளுடைய அநுக்கிரஹத்தால் நமக்குக் காம ஜயம் ஏற்படுமென்றால் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிறது. ஆனால் முரண் இல்லை. பரப்பிரம்ம லோகப் பிரக்ஞையே இல்லாமல் இருந்துவிட்டால், மாயா லோகத்தில் மாட்டிக்கொண்டிருக்கிற நாம் எப்படி விடுபடுவது? நம்மை விடுவிக்கவே அதற்குக் காருண்யம் உண்டாகிறது. இந்தக் காருணையைத்தான் பரமேசுவரனுக்கு உண்டான காமம் என்று சொல்கிறோம். இந்தக் கருணை உணர்வு அவருக்குப் பிறப்பதற்குக் காரணமாக இருந்த சக்தியை காமாக்ஷி என்கிறோம். ஸமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற காமம் தவிர, வேறு ஒரு ஆசையும் இல்லாத பரம அன்பு லீலை அது.

காமனை எரித்த பரமேசுவரனின் பாதியாக அவள் இருப்பதால் – நெற்றிக் கண்ணில் பேர்பாதி அவளுடையது – அவள் ஜீவப்பிரபஞ்சத்தின் காமத்தை பஸ்பமாக்குகிறாள். “சிவனுக்குக் காமமூட்டிய நீயே பக்தர்களின் காமத்தை நாசம் செய்கிறாய்” என்று மூகர் அடிக்கடி சொல்வார்.

காம தகனம் செய்த சிவத்தின் சக்தி என்பதால் காமத்தை அவள் எரிக்கிறாள். நாராயண சகோதரியாகவும் இருக்கிறவள் அவள். நாராயணனோ சாக்ஷாத் மன்மதனின் பிதாவாக இருக்கிறார். பலபேருக்குப் பிரம்மா மகாவிஷ்ணுவின் பிள்ளை என்பது மட்டுமே தெரியும். ஆனால் மன்மதனுக்கும் அவர் பிள்ளைதான். மோஹினியாக வந்தபோது அவர் பரமேசுவரனிடமே ஐயப்ப சாஸ்தாவை ஒரு புத்திரனாகப் பெற்றார். சிவ – சக்தி சேர்ந்து பிறந்த சுப்ரமண்யர் போன்றவர் சிவ – விஷ்ணு சேர்ந்து ஜனித்த ஐயப்பன். எனவே பரம ஞானமூர்த்தியாக இருக்கிறார். ஆனால் பிரம்மாவோ ஜன்மாவுக்குக் காரணமாக இருக்கிறார். ஒரு ஜந்து ஜனிக்கக் காரணமாக இருக்கிற காமத்தைத் தூண்டுகிறவனே மஹாவிஷ்ணுவின் இன்னொரு பிள்ளையான மன்மதன். சகல ஜீவராசிகளையும் காமத்தில் தள்ளி ஆட்டிப்படைக்கிற வல்லமை அவனுக்கு இருக்கிறது!

எரித்த காமனை மறுபடியும் உயிர்ப்பித்த காமாக்ஷி காமத்தைப் போக்குகிறாள் என்றேன். இதே மாதிரி காமனைப் படைத்தவர் மஹாவிஷ்ணு என்றால், நம் காமங்கள் போக அவர் அநுக்கிரஹிப்பாரா? நிச்சயம் அநுகிரஹிப்பார். ஸ்ரீராமன் யார்? மஹாவிஷ்ணுவின் அவதாரம். ‘ராமன்’ என்று சொன்னால் அங்கே காமன் வரமாட்டான், என்கிறோம். ராம ராம ராம என்று சொல்லிச் சொல்லியே காமாதி அறுபகைகளை ஒழித்த மகான்கள் பலர் உண்டு. அவரும் காமனும் அப்பா – பிள்ளையாயிற்றே, ஏன் இப்படி என்று கேட்கலாம். அப்பாவிடம் பிள்ளைக்கு உள்ள அபரிமித மரியாதையாலேயே, அவர் இருக்கிற இடத்துக்கு வரமாட்டான். அங்கே தன் வாலைச் சுருட்டிக் கொண்டுவிடுவான். துளஸீதாஸர் இப்படித்தான் வேடிக்கையாகப் பெரிய தவத்தைச் சொல்கிறார். சிவபெருமானிடம் பயத்தினால் அவரது அடியார்களைக் காமன் நெருங்க மாட்டான். மஹாவிஷ்ணுவிடம் மரியாதையினாலேயே அவரது பக்தர்களிடம் தன் கைவரிசையைக் காட்ட மாட்டான்.

நர நாராயணர்கள் என்பதாக மஹாவிஷ்ணு இரட்டை அவதாரம் செய்தார். இவர்கள் பத்ரிகாச்ரமத்தில் தபஸ் செய்தபோது, தபசைக் கலைக்க தேவலோக அப்ஸரஸ்கள் வந்தார்கள். அப்போது நரனுக்கு மகா கோபம் வந்தது. பகவானின் அம்சமாயினும் ‘நரன்’ என்ற பேருக்கு ஏற்றபடி, இவருக்கு மநுஷ்ய சுபாவத்தினால் கோபம் வந்துவிட்டது. “ஹும்” என்று ஓர் உறுமல் போட்டார். அந்த ஹுங்தாரத்தினால் எங்கே பஸ்பமாகிவிடுவோமா என்று பயந்து, அப்ஸரஸ்கள் அவரைவிட்டு, நாராயணர் தபஸ் செய்கிற இடத்துக்கு ஒடி வந்தார்கள். இங்கே வந்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். நாராயணருக்கோ கொஞ்சம்கூடக் காமமே கிடையாது. அது மட்டுமில்லை. நரர் மாதிரி இவருக்குக் கோபமும் கிடையாது. எனவே சிரித்துக் கொண்டு விளையாட்டாகத் தமது தொடையைத் தட்டினார். நாராயணின் தொடையிலிருந்தே ஊர்வசி (ஊரு-தொடை) தோன்றினாள். அவளுடைய ஒப்பில்லாத ரூப லாவண்யத்தைக் கண்டு, தேவலோக நாட்டிய ஸ்திரீகள் வெட்கி, ‘இவரிடம் நம் சக்தி பலிக்கவே பலிக்காது’ என்று உணர்ந்தார்கள். அப்ஸரர்களும் வெட்கும்படியான அத்தனை பெண்ணழகைக் தமக்குள் வைத்துக்கொண்டே அவர் பரம பரிசுத்தமான தபஸ்வியாக இருந்திருக்கிறார்! அவரையே ஆதாரமாகக் கொண்டு, இவரிடமிருந்தே பிறக்கிற அழகு தன் கைவரிசையை அவரிடமே காட்ட முடியுமா? இதுதான் தாத்பரியம்.

அதே மாதிரி, பிரம்மாவும், மன்மதனும் விஷ்ணுவிடமிருந்து வந்ததாலேயே அவர் ஜன்மத்தை, காமத்தைப் போக்குகிற சக்தி படைத்தவராக இருக்கிறார்.

நாராயண சகோதரியான அம்பாள் சிவனின் சக்தியாகக் காமனைப் பொசுக்கினாள். அவளே எரிந்துபோன காமனுக்குப் புனர்ஜன்மா கொடுத்து அவனைப் படைத்தாள். அவனை ஆக்க, அழிக்க இரண்டுக்கும் அவள் சக்தி பெற்றவள் என்பதிலிருந்து அவன் அவள் ஆக்கத்திலிருக்கிறவன்தான் என்றாயிற்று. எனவே, அவனுடைய அடியார்களை அண்டமாட்டான். இதனால்தான் காமாக்ஷியை உபாஸிப்பவர்கள் காம ஜயம் செய்கிறார்கள்.

நாம் ஏதாவது கெடுதல் வந்தால் ‘சிவா சிவா’ என்கிறோம். கேட்கக்கூடாததைக் கேட்டால் ‘சிவா சிவா’ என்று காதைப் பொத்திக் கொள்கிறோம். மூகரோ ரொம்பவும் நல்லதாக இருக்கிற ஓர் அதிசயத்தைப் பார்த்து, ‘ஆஹா ஆஹா’ என்று சொல்வதற்குப் பதில் ‘சிவ சிவ’ என்கிறார்.

சிவசிவ பசயந்தி ஸமம்

ஸ்ரீகாமாக்ஷி கடாக்ஷிதா: புருஷா:

ஸ்ரீகாமாக்ஷியம்மாளின் கடாக்ஷத்தைப் பெற்றவர்கள் விஷயத்தில் எத்தனை அதிசயங்கள் நடந்துவிடுகின்றன. “சிவ சிவ” என்கிறார். என்ன அதிசயம் என்றால், ‘நமக்கு எல்லாம் வேறு வேறாகத் தெரிகிறபோது அவர்களுக்கு எல்லாம் சமமாகத் தெரிகிறதே!’ என்று வியக்கிறார்.

சமத்துவம் சமத்துவம் என்று இந்தக் காலத்தில் வாய்ப்பேச்சில் நிறையச் சொல்கிறோம். ஆனால் ஞானமில்லாமல், வெறும் பாலிடிக்ஸாகச் சொல்கிறோம். காரியத்தில் இது முக்கால்வாசி பொய்யாகவே இருக்கிறது.

காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவனுக்கோ அத்வைத ஞானமே சித்தித்து விடுகிறது. அவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஒரே பரம்பொருள்தான். சத்தியமான சம தரிசனம் அவனுக்குத்தான் இருக்கிறது.

அவனுக்குக் காடும் வீடும் ஒன்றாகிவிட்டது என்கிறார் மூகர். அவனுக்குக் குரோதம் என்பது கொஞ்சம்கூட இல்லை. எனவே மித்திரனும் சத்துருவும் சமமாகி விட்டார்களாம்!

காமமும் அவனை விட்டு அடியோடு அகன்றுவிட்டது. யுவதியின் சிவந்த உதடும், மண்ணாங்கட்டியும் அவனுக்கு சமமாகிவிட்டன என்கிறார் மூகர்.

‘லோஷ்டம் ச யுவதி பிம்போஷ்டம்’

என்று பிராஸம் போட்டு அழகோடு சொல்கிறார்.

லோஷ்டம் – மண்ணாங்கட்டி; ஓஷ்டம் – உதடு (உதடு பெரிதாகித் தொங்கிக்கொண்டிருக்கிற பிராணிதான் ஓஷ்ட்ரம்; இதுவே தமிழில் ஒட்டை, ஒட்டகம்); ‘பிம்பம்’ என்றால் கோவைப் பழம்; ‘பிம்போஷ்டம்’ – கோவைப்பழம் மாதிரிச் சிவந்த உதடு.

கீதையில் பகவான் “யோகீ ஸம லோஷ்டாச்ம காஞ்சன” என்று சொன்னதை நினைப்பூட்டுகிற மாதிரியே, மூகரும் சொல்கிறார். பொன்னாசையை வைத்து, ‘பொன்னும் மண்ணும் யோகிக்குச் சமம்’ என்றான் பகவான். மூகர் பெண்ணாசையை வைத்துப் பேசுகிறார்.

எத்தனை காமம், குரோதம், சோகம், பயம் இவற்றை உண்டு பண்ணுகிற வஸ்துவும் அம்பாளை உபாஸிக்கிறவனைக் கொஞ்சம்கூட அசைக்காது.

காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.

ஆரம்ப நிலையில் அவள் வேறு என்றே பாவிக்கலாம். அப்போது அவளுடைய சரணாரவிந்தங்களையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவளைப் பிரார்த்தித்தபடி இருக்க வேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அவளிலேயே கரைக்க வேண்டும்.

நாம் கொஞ்சம் பிரயாசைப்பட்டாலும் போதும். அவளே நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி ரக்ஷிப்பாள். நமக்கும் அவளுக்கும் இருக்கிற வேறுபாட்டையும் தகர்த்துக் தானாகவே ஆக்கிக் கொள்வாள்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:17 am


நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின்கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது. தானிய ஸம்ருத்தி (செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிக்ஷம் செய்து கொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை. என்ஜினீயர் அணை கட்டலாம். ஆனால், மழையை பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேசுவரியை எல்லோரும் மனஸாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்துத் தானிய ஸம்ருத்தியை அநுக்கிரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.

நம்முடைய ஆசார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூர்ணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார்.

அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, “கருணையின் பற்றுக்கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேசுவரியே பிச்சை போடு” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.

‘பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ

மாதா அன்னபூர்ணேச்வரீ’

‘தேஹி – போடு’ என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்திருக்கும்! தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதரபோஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம்கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், “ஒரு சக்கரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலிக் கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்” என்றான். உடனே ஆச்சார்யாள், “சக்கரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்” என்று தனது சிரசையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈஸ்வர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று. அது வேறு விஷயம். இப்போது நான் அந்தத் கதையைச் சொல்ல வரவில்லை. ஆச்சாரியாளுக்குக் கொஞ்சம்கூட அஹங்கார மமகாரமே கிடையாது. தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் “பிக்ஷாம் தேஹி – பிச்சை போடு” என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில், ‘எனக்குப் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு’ என்கிறார். எனவே தேஹி – பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.

அதோடு, தனக்கு என்றே வேண்டிக்கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

அன்ன பிக்ஷை மட்டும் பிரயோஜனமில்லை. முடிவில் ஞானமில்லாமல் வெறுமே தின்று தின்று ஊனை வளர்த்துப் பிரயோஜனமில்லை. கையில் க்ஷீரான்ன (பால் சோற்று)ப் பாத்திரமும், கரண்டியும் வைத்துக்கொண்டு அன்புருவாக உணவுபோடும் அன்னபூரணி இந்த ஞானத்தையும் விசேஷமாக அநுக்கிரஹிக்கிறாள். ஞான வைராக்கியப் பிச்சையைத்தான் ஆதிசங்கரரும் முடிவாகக் கேட்கிறார்.

காஞ்சி காமாக்ஷியில் அன்னபூர்ணேசுவரியும் அடக்கம். காமாக்ஷி இருநாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாள். அதில் அன்னதானம் ஒன்று. காமக்கோட்டத்தில் அன்னபூரணி சந்நிதி இருக்கிறது. காஞ்சியில் ஓண காந்தன் தளியில் இருக்கும் ஸ்வாமியைப் பாடும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், ‘காமக்கோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும்போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?’ என்று கேட்கிறார்.

வாரிரும் குழல்வாள் நெடுங்கண்

மலைமகள் மதுவிம்மு கொன்றைத்

தாரிருந் தடமார்பு நீங்காத்

தையலாள் உலகுய்ய வைத்த

காரிரும் பொழில்கச்சி மூதூர்க்

காமகோட்டம் உண்டாக நீர்போய்

ஊரிடும் பிச்சைகொள் வதென்னே

ஒண்காந்தன் றளியுளீரே!

சரீரம், ஆத்மா இரண்டுக்கும் உணவூட்டி வளர்க்கிற அன்னபூரணேசுவரியைத் துதித்து சமஸ்த ஜீவர்களுக்கும் துர்பிக்ஷம் நீங்கப் பிரார்த்திப்போம்.

பாபம் செய்ததற்குத் தண்டனையாக துர்பிக்ஷத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு காமாக்ஷியேயான அன்னபூரணி கருணை பாலிக்கிறாள். பசி என்பது பாபிக்கும் வரக்கூடாது. கேரளத்தில் செருக்குன்னம் என்று அன்னபூர்ணா க்ஷேத்திரம் இருக்கிறது. அங்கே சேவார்த்திகளுக்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்கள். அதுமட்டுமில்லை; ராத்திரி வேளையில் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு சோற்று மூட்டையைக்கட்டி வைக்கிறார்கள். இராக்காலத்தில் அந்தப் பக்கமாகப் பசியோடு போகிற திருடர்களும்கூடப் பசியாற வேண்டும் என்று இந்த ஏற்பாடு.

இத்தனை கருணையோடு ஓர் அம்மா இருக்கிறபோது, இன்றைக்கு லோகத்தில் இவ்வளவு துர்பிக்ஷை இருக்கிறது என்றால், அதிலிருந்து நாம் எத்தனை பாபம் செய்திருக்கிறோம் என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். “சரக ஸம்ஹிதை”யில் ஆத்ரேயர் சொல்வதாக வருகிறது; ஒரு தேசத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ ஆட்சியில் இருக்கப்பட்டவர்கள் தர்மம் தவறி நடந்தால் அவர்களைச் சேர்ந்த ஜனங்களும் இதே போக்கை அநுசரிக்க வேண்டியதாகிறது. இப்படி அதர்மம் ரொம்பவும் பரவுகிறபோது தேவர்கள் இவர்களைக் கைவிட எண்ணுகிறார்கள். (தேவர்கள் என்றால் இயற்கைச் சக்திகளை நடத்துகிற ஈசுவரனின் அதிகாரிகள்). உடனே ருதுக்கள் மாறுகின்றன. மழை சரியாகப் பெய்வதில்லை. பெய்தாலும் காலம் தவறி, இடம் தவறி, அளவு தவறிப் பெய்யும். பருவக் காற்று முறைப்படி வீசுவதில்லை. வியாதிக் கிருமிகள் அதிகமாகின்றன. பயிர் பச்சைகளின் செழிப்புப் போகிறது. உணவுப் பதார்த்தங்களில் துர்பிக்ஷம், கிடைக்கிற கொஞ்சத்திலும் தோஷங்கள், கெட்ட காற்று, வியாதி இவற்றால் தேசம் பாழாகிறது.

இம்மாதிரி உலகத்துக்கு ஏற்படும் துர்பிக்ஷத்திலிருந்து நம்முடைய தப்பையே புரிந்துகொண்டு திருந்தப் பிரயாசை எடுத்தோமாயின், அன்னபூர்ணியே அன்னபிக்ஷை, ஞான பிக்ஷை எல்லாம் போடுவாள். அவள் சரீரமே ஞானமயமானது. ‘அ’விலிருந்து ‘க்ஷ’வரையிலான எல்லா அட்சரங்களுமே உருவான மந்திர மாத்ருகா ரூபிணி அவள் என்கிறார் ஆசாரியாள்.

‘ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ.’

இப்படிப்பட்ட சரீரம் படைத்தவளாதலால் நம் சரீரத்தை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கிற பிக்ஷையைப் போட்டு ஞானம் தருவாள்.

அது எப்படிப்பட்ட ஞானம் என்பதைத்தான் ஆச்சார்யாள், அன்னபூர்ணி ஸ்துதியின் கடைசியில் சொல்கிறார். அந்த நிலையில் பரமேசுவரனே தகப்பனாகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளுக்கும் சகோதரர்களாகி விடுவார்கள். மூவுலகமும் சொந்த வீடாகிவிடும். இது இப்போது நிறையப் பேசப்படுகிற தேச ஐக்கியப்பாட்டைவிட எத்தனையோ படி மேலே! சர்வதேச ஐக்கியப்பாட்டுக்கும் மேலே! மூன்றுலக ஐக்கியப்பாடு. பக்தி இருந்தால், பராசக்தி ஒருத்தி இருக்கிறாள் என்ற பயமும் பக்தியும் இருந்துவிட்டால், எல்லோரும் அவள் குழந்தைகள்தான் என்கிற சகோதர பாவம் தானாகவே வந்துவிடும். இதற்குப் பிரசங்கம் வேண்டாம், திட்டம் வேண்டாம், பிரசாரம் வேண்டாம்.

அநாதி காலமாக இப்படித்தான் பிரத்தியக்ஷத்தில் ஐக்கியம் இருந்திருக்கிறது. ஸ்வாமிக்காகத் தெற்கத்திக்காரன் காசிக்குப் போனான். ஸ்வாமிக்காக வடக்கத்திக்காரன் ராமேசுவரத்துக்கு வந்தான். ஐக்கியப்பாடு (Integration) என்கிற பேச்சு இல்லாமலே, ‘சகோதர சகோதரிகளே’ என்ற பிரசங்கம் இல்லாமலே, மத உணர்ச்சியால் ஐக்கியமாக, ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்து வந்தோம். இதோடுகூட அறிவாளிகளின் மட்டத்திலோ சகல சாஸ்திரங்களுக்கும் பொது பாஷையாக இருந்த ஸம்ஸ்கிருதம் தேசத்தின் நாலு கோடிகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருந்தது. இப்போது ‘ஸெக்யுலர்’ நாகரிகத்தில் மதத்தை விட்டாயிற்று. ஸம்ஸ்கிருதத்தையும் ஒரு மாதிரி தீர்த்துக் கட்டிவிட சகல யத்தனங்களும் நடக்கின்றன – நான் இங்கேயுள்ள நம்மவர்களை மட்டும் சொல்லவில்லை. ஹிந்திக்காரர்களும் இந்த கைங்கரியத்தில் நன்றாகவே காரிய ரீதியில் செய்து வருகிறார்கள். இடைக்காலத்தில் ஒரு பொது இணைப்பாக (Link) வந்த இங்கிலீஷையும் விரட்டிவிடப் பார்க்கிறார்கள்.

பாஷை விஷயம்கூட இரண்டாம் பட்சம்தான். பக்தியை வளர்த்துவிட்டால் போதும். அப்புறம் என் மாகாணம், என் ஜாதி, என் பாஷை என்று நமக்குள்ளேயே சண்டைகள் ஒரு காலும் வராது. ஐக்கியப் பிரசங்கம் அதிகமான இப்போதுதான் நமக்குள்ளேயே ஒரு சீமைக்காரன் இன்னொரு சீமைக்காரனுக்கு தண்ணீர் தர மாட்டேன், தானியம் தரமாட்டேன் என்று பிரிந்து பிரிந்து நிற்கிறான். மாகாணத்துக்கு மாகாணம் எல்லைச் சண்டை வந்திருக்கிறது. பாஷையின் பேரால், ஜாதியின் பேரால் ஏற்கெனவே கொடுமை நடந்ததாக இப்போது கிளப்பி விட்டிருக்கிற பிற்பாடுதான் வாஸ்தவத்தில் பாஷைச்சண்டை, ஜாதிச்சண்டை எல்லாம் வந்திருக்கின்றன. இத்தனைக்கும் மூலக்காரணம், மத உணர்ச்சி, பக்தி போனதுதான். ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கட்டிப் போட்ட மதமும் பக்தியும் போனதும் சமூகத்திலேயே கட்டுவிட்டுப் போய்விட்டது. எனவே இப்போது சர்வரோக நிவாரணியும் பக்திதான். உண்மையான ஈசுவர பக்தியானது, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரணமிக்கும். அப்புறம் பரஸ்பர சகாயத்தைத்தவிர வேறெதற்கும் இடமே இராது. அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அதுவே அறிவு. ‘அறிவான தெய்வமே’ என்றார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் – அன்பேயான அறிவை – அன்னபூரணி நமக்கெல்லாம் பிக்ஷை போடப் பிரார்த்திப்போம். ஆதி ஆசார்யாள் செய்த பிரார்த்தனையும் இதுதான்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே |

ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:18 am


தாயன்பைப்போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பை பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம். ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்’ என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில் ‘துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு! ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.

குழந்தையாகப் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக் கொள்கிறோம். ஆகாரம் தருவதிலிருந்து சகலத்துக்கும் அவள்தான் குழந்தைக்குக் கதியாக இருக்கிறாள். வயது ஏறுகிற சமயத்தைவிட பால்யத்தில்தான் தாயார், குழந்தை இருவருக்கும் பரஸ்பர அன்பு மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் மனித இனத்தைவிடப் பசுக்குலத்திடம்தான் இந்த அன்பு நிரம்பித் ததும்புகிறது. கன்று “அம்மா!” என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்த்துதான் மநுஷ்ய ஜாதியே, “அம்மா” என்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும் “அம்மா” என்றே தாயாரைச் சொல்கிறார்கள். மலையாளத்தில் “அம்மை” என்பார்கள். ஸம்ஸ்கிருதத்தில் “மா” என்றும் “அம்பா” என்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில் “மா”, “மாயி” என்கிறார்கள். இங்கிலீஷ் “மம்மி”, “மம்மா” எல்லாமும் கன்று குட்டியின் ‘அம்மா’விலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.

இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்பவாஸம். வேறே அம்மாள் வருவாள். இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது. இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள். கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதார விந்தத்தில் நிறைந்த அன்பு வைப்பதே ஜன்மா எடுத்ததன் பிரயோஜனம். ஜன்ம நிவிருத்திக்கும் அதுவே வழி. அதாவது, உயிர் சரீரத்தை விட்டபின் இன்னொரு சரீரத்தில் புகாமல் பேரானந்தத்தில் கரைவதற்கும் அந்த அம்மாதான் கதி.

நமக்கு இருக்கிற சக்தி எல்லாம் அவளுடையதுதான். ஒரே அகண்ட பராசக்திதான், கண்டம் கண்டமாக, துண்டு துண்டாக ஆகி இத்தனை ஜீவராசிகளிடமும் துளித்துளி சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம் ‘சொந்த’ முறையில் எதையும் சாதித்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளவும், அகம்பாவம் கொள்ளவும் நியாயமே இல்லை. நாம் எதைச் செய்திருந்தாலும் எல்லாம் அவள் கொடுத்த சக்தியால்தான் நடக்கிறது. இதை உணர்ந்து அகம்பாவம் சிறிதும் இல்லாமல் அவளிடம் சரணாகதி செய்தால் ஒரே அம்மாவான இவள் இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள். எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகலோகத்தில் வித்தை, செல்வம், தேககாந்தி முதலிய தந்து, பின்பு ஞானத்தில் பழுத்துப் பரமானந்தத்தைபப் பெறும்படி அருள் புரிவாள். பரம ஞான அத்வைத ஆனந்தம் நமக்குக் கிடைத்து, நாம் அந்த ஆனந்தமாகவே ஆகிவிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது அவள் நம் கர்மாவைத் தீர்த்து, என்றைக்கோ ஒருநாள் தரப்போகிற நிலை. அது கிடைக்கிறபோது கிடைக்கட்டும். அதுவே கிடைக்கவில்லையே என்ற குறை இப்போது நமக்கு வேண்டாம். இப்போது நமக்குப் பரம அன்பு அம்மாவான அம்பாள் இருக்கிறாள். அவளுடைய அன்பை நினைத்து அவளிடமும் நாமும் அன்பைச் செலுத்துவதற்கு இப்போதே நமக்குச் சாத்தியமாகிறது. இதிலுள்ள ஆனந்தத்துக்கு மேல் நமக்கு எதுவும் வேண்டாம். அம்பாள் தியானத்தைவிட நமக்கும் நம் மாதிரியே அவளை அம்மாவாக்கிக் கொண்ட சகல லோகத்துக்கும் நிறைவான இன்பம் வேறில்லை. சகல லோகமும் சமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க அன்பே உருவான சாக்ஷாத் அம்பிகையை எப்போதும் ஆனந்தமாக நினைத்துக் கொண்டிருப்போம்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:20 am


ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||

ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.

சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.

இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்’ சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.

பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம். (ideal)

ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.

அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்’ என்போம். கன்னடச் சீமையில் அவரே ‘ஹநுமந்தையா’. சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.

ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.

‘ராம், ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.

இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேணும்.

அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||

தெய்வத்தின் குரல் முதல் பகுதி முற்றும்


மூலம்:kamakoti.org




தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 23, 2018 4:57 am

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 103459460 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 3838410834 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 3838410834 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 3838410834
-
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 Anmega-palan-07

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 23, 2018 12:25 pm

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 3838410834 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 3838410834 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 3838410834 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 103459460 தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 19 1571444738
இதை மிக பொறுமையாக நிதானமாக படிக்க வேண்டும்
இதில் பல விசயங்கள் பொதிந்துள்ளது
நன்றி சிவா பெரிய அற்புத்ததை பதிவிட்டு உள்ளீர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக