புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
75 Posts - 58%
heezulia
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
70 Posts - 58%
heezulia
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி


   
   

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 22, 2018 11:34 pm

First topic message reminder :


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 277927208083201
















தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:58 am


பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமான ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.

‘எங்கே கட்டியிருக்கிறான், கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே’ என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம்; அப்படியும் அது பலிதமாகவில்லை; இச்சமயத்தில், ‘முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது? காரியம் ஜயிக்கவில்லை’ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். ‘பந்தம்’ என்பதுதான் ‘கட்டு’. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.

கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது? அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை வெளுவெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதான் பசுவுக்குத் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.

இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போடாவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது ‘நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு’ என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற ‘ப்ளானு’க்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டு இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று பேசுகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமோ!

பசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈசுவரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் – இப்போதே கெடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம்; கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிருப்போம்.

நம்முடைய க்ஷேமத்துக்காக, நமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். ‘எப்பொழுது அவிழ்த்து விடுவீர்?’ என்று அவரைக் கேட்டால், ‘ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன்’ என்கிறார்.

குழந்தை விஷமம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் ‘ஆசை’ என்ற விஷமம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம புத்தி போய் விட்டால் அப்புறம் கட்டமாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால்தான் பலருக்குப் பலவிதக் கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போய்விட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை; அவிழ்த்து விடுவார்.’

கட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய்விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம்.

ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை?
‘தேவதாம் அன்யாம் உபாஸதே’

என்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, ‘இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் ‘பசு’ என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. ‘தான் பூஜிக்கிற தேவதை தனக்கு அந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் ‘பசு’ என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.

அதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.

‘ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்? இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிற கர்மத்தைச் செய்யத்தான் வேண்டும் என்கிறாரே? இந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா?’ என்று உங்களுக்குத் தோன்றும்.

இதற்குப் பதில் சொல்கிறேன்: ஆசை வாய்ப்பட்டுச் செய்கிற கர்மங்களின் கட்டை அவிழ்ப்பதற்கே சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது. அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. அப்போது என்ன செய்வார்கள் தெரியுமா? அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் ‘தொள தொள’ என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.

சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல; கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும்.

ஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக மநுஷ்ய காரியம், தேவகாரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூக காரியங்கள் எல்லாம் கூட நின்றுவிடலாம்.

இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது தேவதைகளுக்கெல்லாம் இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு; தெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு.) * மனிதன் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேதான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால் அப்புறம் அது பிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா? மனிதனின் ஆசையெல்லாம் நின்று விட்டால், எந்த தேவதையின் அநுக்கிரகமும் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹுதி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்ததாகப் பார்க்கிறோம்.

இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், ‘தேவனாம் ப்ரியன்’ என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. ‘தேவனாம் ப்ரியன்’ என்றால் ‘தேவதைகளுக்கு இஷ்டமானவன்’ என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச் சொல் போலத் தோன்றும். ‘தேவனாம் ப்ரிய அசோக்’ என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடோ, அவனே ‘தேவனாம் ப்ரியன்’.

பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும் கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.

ஞானியில்லை என்றால், ‘தேவனாம் ப்ரியர்’களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத ஆத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீருகிற காலம் வரைக்கும் மட்டுமே போக போக்கியங்களைத் தருகிற இடம். புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவலோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்துக்காவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா? அதுவும் இல்லை. தேவதைகளுகக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம்? நாம் ‘நரகவாஸீனாம் ப்ரியர்’களாகவே இருக்கிறோம் – நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.

துஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆகவேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவலோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்தி தந்து ஞானத்துக்கு வழிகோலும்.) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) – பாசம் (கயிறு) – பதி (ஈசுவரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பதி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.

சைவ சித்தாந்தத்தில் பசு – பதி – பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் – பிரம்மம் – மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு – பாசம் என்ற பதங்களையே ‘ஸெளந்தர்ய லஹரி’ சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம த்வத் பஜனவான்

(அம்பிகே! உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, பாசம் என்கிறவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமாநந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:58 am


“ஸ்வாமி ஒருவர்தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?” என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிஹாஸம் செய்கிறார்கள்.

ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான் நாம் பேச்சு வழக்கில் ‘தெய்வம்’, ‘தெய்வம்’ என்கிறோம். தெய்வம் என்றால் ‘விதி’ என்றே அர்த்தம். விதி என்பது ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலன்தான். ஆனால் நாம் ‘ஸ்வாமி’ என்ற அர்த்தத்திலேயே தெய்வம் என்ற பதத்தை உபயோகிக்கிறோம். அதோடு, அந்த தெய்வமும் தேவர்களும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு, ‘முப்பத்து முன்று கோடி தெய்வமானது’ என்று நாமும் மற்ற மதஸ்தர்களோடு சேர்ந்துக் கொண்டு கேலியாக எண்ணுகிறோம்.

தெய்வம் (ஸ்வாமி) வேறு. தேவர்கள் வேறு. ஸ்வாமி ஒருவர்தான் என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாக சிருஷ்டிக்கிறார். விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார். ருத்திரனாக சம்ஹாரம் செய்கிறார்.

உண்மையில் இவர்களும் வேறு வேறு இல்லை. கோர்ட்டுக்குப் போகும்போது தாசில்தார் ஸுட் போட்டுக் கொண்டிருக்கிறார். பூஜை செய்யும்போது அவரே பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார்; பத்தினி அகத்தில் இல்லாமல் அவரே சமைக்க நேர்ந்தால் அப்போது துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொள்கிறார். நாம் சாமானிய ஜீவர்கள். வேலைக்குத் தக்கபடி உடுப்பை மட்டும் மாற்றிக் கொள்கிறோம். சர்வ சக்தனான ஸ்வாமி வேலைக்கு ஏற்ப ரூபத்தையும் மாற்றிக் கொள்வார். பார்க்கப் போனால் சரீரம் என்பதே ஆத்மாவுக்கு ஒரு உடுப்பு மாதிரிதான். கீதையில் பகவான் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

அல்ப சக்தர்களான நமக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வேஷங்கள் ஏற்படுகின்றன. சர்வ சக்தரான ஸ்வாமி ஒரே சமயத்தில் பல காரியங்களில் ஈடுபட்டுப் பல வேஷங்களையும் போடுவார். நாம் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறோம்; ஸ்வாமி ஒரே சமயத்தில் சகல வேலையும் செய்வதால் எல்லோ வேஷமும் போட்டுக் கொண்டிருக்கிறார். இவற்றை வெவ்வேறு தெய்வ வடிவங்களாகச் சொல்கிறோம். இந்த தெய்வ ரூபங்களில் மகாவிஷ்ணு, ஈசுவரன், அம்பாள், விக்நேசுவரர், ஸுப்ரம்மண்யர் போன்றவர்கள் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு மாதிரி காரியம் மட்டும் செய்தாலும்கூட அவர்களுக்கு உள்ளுக்குள் தாங்கள் முழுமுதல் ஸ்வாமிதான் என்று தெரியும். அதனால் அவர்கள் பக்தர்களுக்கு மோக்ஷபரியந்தம் எல்லா அநுக்கிரஹங்களும் செய்வார்கள்.

ஆனால், தேவர்கள் யாவரும் இப்படி முழு ஸ்வாமியாகத் தங்களைத் தெரிந்து கொண்டிருக்கிற தெய்வ வரிசையைச் சேர்ந்தவரல்ல.

அவர்கள் யார் என்று சொல்கிறேன்:

ஸ்வாமி சிருஷ்டித்துள்ள எண்ணி முடியாத அண்டங்களில் இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் இருக்க இடம், உண்ண உணவு முதலியன வேண்டியிருக்கின்றன. ஆகாயம், காற்று, தீ, நீர், மண் இந்த பஞ்ச பூதங்களைப் பலவிதங்களில் கலந்தே அவர் இத்தனை பிராணிகளுக்கும் வாழ்வுக்கான உபகரணங்களைத் தந்திருக்கிறார். ஆறே சுவைக்குள் அடங்கும் சரக்குகளை வைதத்துக்கொண்டு நாம் ஆயிரக்கணக்கான பட்சண தினுசுகளைச் செய்வது மாதிரி, ஐந்தே பூதங்களைப் பலவிதங்களில் கலந்து எல்லா உயிர்களுக்கும் ஜீவனோபாயம் தருகிறார் ஸ்வாமி.

பஞ்சபூதங்களும், அவற்றின் தினுசான கலவை (Mixture)களும் பிராணிகளுக்கு ஹிதமாக அமைந்து அவர்களை ரக்ஷிக்க வேண்டும். இவ்விதம் அவற்றை நமது வாழ்வுக்கு அநுகூலமாக்கித் தரும் பொறுப்பை ‘தேவர்கள்’ என்ற இனத்துக்கு ஸ்வாமி அளித்திருக்கிறார். இப்போது மநுஷ்ய இனம், பக்ஷி இனம், விலங்கினம், தாவர இனம் என்று சொல்கிறோமல்லவா? அது மாதிரி ஒரு ஜீவராசிதான் தேவர்கள். லௌகிகமாகப் பிராணிகளை ரக்ஷிக்கும் ராஜா அல்லது ராஜாங்கம், பல அதிகாரிகளை வைத்துக் கொண்டு ரக்ஷணம் தருவது போல், தேவர்கள் என்ற அதிகாரிகளைக் கொண்டு சர்வ லோகங்களையும் ஆண்டு ரக்ஷணம் செய்கிறார் ஸ்வாமி. ஒரு ராஜா அல்லது ராஜாங்கம் பஞ்ச பூதங்களில் தனக்குரிய பூமி, கடல் பிரதேசம், வானவெளி இவற்றைக் காப்பாற்றத் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை இவற்றை வைத்திருப்பது போல், ஈசுவரனும் பஞ்ச பூதங்களைக் காப்பாற்ற தேவர்களின் சைன்னியத்தை வைத்திருக்கிறார். நமது ராஜாங்கத்தில் சைன்னியத்தைத் தவிர, நீர்ப்பாசனம், மராமத்து, போக்குவரத்து இவற்றுக்கெல்லாம் அதிகாரிகள் இருப்பதுபோல், ஈசுவர சாம்ராஜ்யத்திலும் ஜனங்களுக்குத் பஞ்ச பூதங்களை அநுகூலமாக்கித் தருவதற்காகப், பலவிதமான தேவர்கள் அதிகாரம் வகிக்கிறார்கள். நம் உலகில் ஜல சப்ளை விஷயத்தைக் கவனித்து, வெள்ளம் வந்தால் வெட்டி விடவும், வறட்சி பாதிக்காமல் அணை கட்டவும் என்ஜினீயர்கள் இருக்கிறார்களல்லவா; ஆனால், ஜலத்தை இவர்களே சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமி தான் சிருஷ்டிக்கிற ஜலத்தை லோகங்களில் பங்கீடு செய்ய எஞ்சினீயர்களுக்கெல்லாம் என்ஜினீயராக வருணனை வைத்திருக்கிறார். இதே மாதிரி நெருப்பைக் கவனித்து அதை மக்களுக்கு அநுகூலமாக்குபவன் அக்னி, காற்றைபப் பிராணிகளுக்கு அநுகூலமாக்கித் தருபவன் வாயு. இப்படிப் பல தேவர்கள். அவர்களுக்கெல்லாம் அதிபதி இந்திரன்.

உயிரினங்களில் பல வகைகளை நாம் நேருக்கு நேர் கண்ணால் பார்க்கிறோம். நாம் மனித இனம். இன்னும் விலங்கினம், புள்ளினம், தாவர இனம் என்று பலவற்றைப் பார்க்கிறோம். சிருஷ்டியில் கீழே போகப் போகப் கிரியா சக்தி அதிகம். யானை, சிங்கம் போன்ற பலம் மனிதனுக்கு இல்லை. ஒரு குருவியைப் போலவோ, தேனீயைப் போலவோ கூடுகட்ட இவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவற்றைவிட மனிதனுக்கு ஞான சக்தி அதிகம். கிரியா சக்தி, ஞான சக்தி இரண்டுமே மிக அதிகமாகப் படைத்த உயிரினத்துக்குத் தேவர்கள் என்று பெயர். மனிதர்களுக்குள்ளேயே நீக்ரோ இனம், மங்கோல் இனம் (race) என்றெல்லாம் இருப்பதுபோல் தேவர்களுக்குள்ளும் கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், ஸித்தர், சாரணர், ஸாத்யர், கந்தர்வர் என்று பலவகைகள் உண்டு. தேவர்களை ஊனக் கண்ணால் பார்க்க முடியவில்லை. அதனால், இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. காற்று கண்ணுக்குத் தெரியாதது போல், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால், விசிறிக்கொண்டால் காற்றை நாம் அநுபவிப்பதுபோல், கர்மாநுஷ்டானங்களைச் செய்தால் தேவர்களின் அநுக்கிரகத்தை அநுபவத்தில் நிச்சயமாகப் பெறலாம்!

நாம் கர்மாநுஷ்டானம் செய்வதற்கும், தேவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்பீர்கள். சொல்கிறேன்; ராஜாங்கம் நியமித்துள்ள அதிகாரிகளுக்கு ராஜாங்கம் சம்பளம் தருகிறது. ஆனால், சம்பளம் தருவதற்கு ராஜாங்கம் எங்கிருந்து பணம் பெற்றது? பிரஜைகளிடமிருந்துதான் வரியாகப் பெறுகிறது. அப்படியே ஸ்வாமி நம்முடைய கர்மாநுஷ்டானங்களிலிருந்தே தேவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பிரித்துத் தருகிறார். நமக்கு பஞ்ச பூதங்களை அநுகூலமாக்கித் தரும் தேவர்களுக்குப் பிரதியாக நாம் யாகம், யக்ஞம் செய்து ஆகாரம் தருகிறோம். கர்மாநுஷ்டான வரி செலுத்தினாலே தேவ அதிகாரிகளின் சகாயத்தைப் பெற முடியும். பலவிதமான உயிரினங்களில் புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் எத்தனை வித்தியாசம் இருக்கிறது? மனிதனுடைய பழக்கங்களைப் புழு புரிந்து கொள்ள முடியுமா? அப்படியே தேவர்களின் வழிமுறைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது. தேவ வகையைச் சேர்ந்தவர்களுக்கு நம்மைப்போல் மூப்பு, மரணம் இவை இல்லை. அவர்களுக்கு நம்மைவிட சக்தி மிகவும் அதிகம். இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே ஆஹுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.

உயிரனத்தின் உச்சி நிலையில் உள்ள இந்தத் தேவர்களுக்கு மூன்று ரூபங்கள் உண்டு. தேவலோகத்தில் ஒவ்வொரு தேவதையும் திவ்ய சரீரத்துடன் இருப்பதை ஆதி தைவிக ரூபம் என்பார்கள். மனிதர்கள் தபஸினால் பெரிய சக்தி பெற்றுவிட்டால், இந்த தேவ ரூபங்களைப் பார்த்துப் பேச முடியும். தேவர்கள் தேவ லோகத்தில் ரூபத்துடன் இருப்பது மட்டுமல்ல; நம் பூலோகத்திலேயே பஞ்ச பூதங்களில் கரைந்தும் அரூபமாக இருப்பார்கள். இதற்கு ஆதி பௌதிக ரூபம் என்பார்கள். எல்லா ஜலத்திலும் வருணனின் ஆதி பௌதிக ரூபம் கரைந்திருக்கிறது. எனவே எங்கே நாம் ஜலத்தை அசுத்தம் செய்தாலும் அவனுக்குத் தெரிந்துவிடும். நம் ராஜாங்க அதிகாரிகளுக்கும், ஈசுவரனின் அதிகாரிகளான தேவர்களுக்கும் இது பெரிய வித்தியாசம். நாம் பெட்டிஷன் கொடுத்தால்தான் ராஜாங்க அதிகாரிகளுக்குக் குற்றம் தெரியும். ஆனால், எந்த இடத்தில் எந்தப் பாபம் செய்யப்பட்டாலும், அது ஆங்காங்கு கரைந்திருக்கிற குறிப்பிட்ட தேவதைக்கு உடனே தெரிந்துவிடும். நம் உடம்பிலேயே ஒருவர் கிள்ளினால், இன்னொருவன் பெட்டிஷன் கொடுத்தா அது நமக்குத் தெரிய வேண்டும்; அதுபோல!

நிலம் முழுவதற்கும் ஒரு தேவதை. நீர் நிலம் முழுவதற்கும் ஒரு தேவதை; இப்படியே நெருப்பு, காற்று ஒவ்வொன்றுக்கும் ஒன்று. இவற்றில் எதற்கு எங்கே நாம் அபசாரம் இழைத்தாலும் அந்தந்த தேவதைக்கு அது தெரிந்துவிடும் என்று சொன்னால், ‘இதெல்லாம் ஜடவஸ்துக்களாகத்தானே தெரிகின்றன? இவற்றுக்கு எங்கே உயிர் இருக்கிறது? சாஸ்திரம் வெறும் புரளிதான் பண்ணுகிறது’ என்று தோன்றலாம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நம் சரீரம் இருக்கிறது. இதற்குள்ளேயே பாக்டீரியாக்கள், நாக்குப் பூச்சி மாதிரி சில கிருமிகள், புழுக்கள் உண்டாகி நம் மாமிஸத்தைத் தின்றே ஜீவிக்கின்றன. இவை எங்கே ஹிம்ஸை செய்தாலும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் இப்படி நமக்குத் தெரியும் என்பது அந்தப் கிருமிக்குத் தெரியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? நாம் நிலத்தையும் நீரையும் பற்றி நினைக்கிற மாதிரி, அது அதனளவில், ஒரு உலகம் மாதிரி பெரிசாக இருக்கிற நம் சரீரத்தையும் சமுத்திரம் மாதிரி இருக்கிற நம் ரத்தத்தையும் வெறும் ஜடவஸ்துக்கள் என்றும், இவற்றுக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ளாமலே இருக்கலாம். இப்படித்தான் நாம் பூதேவி உண்டா? வருணன் என்கிற சமுத்திர ராஜா உண்டா? என்று கேட்பதும். நம் சரீரத்தில் எங்கே ஒரு கிருமி கெடுதல் செய்தாலும் நாம் மருந்து சாப்பிட்டு அதை ஒழித்து விடுகிறோம். நாம் பஞ்ச பூதம், விருக்ஷம், பர்வதம் என்று எதற்குக் கெடுதல் பண்ணினாலும், அதற்குறிய தேவதைகள் நம்மைத் தங்களுடைய சொந்த சக்தியாலேயே தண்டிப்பார்கள். ஸர்வேச்வரன் அவர்களுக்கு அப்படிப்பட்ட சக்தி தந்திருக்கிறான். உடனே ஸ்தூலமாக வந்து தண்டிக்காமல், பிற்பாடு எப்போதோ தண்டிப்பதால் நமக்கு இது தெரியவில்லை.

ஆத்யாத்மிகம் என்றும் தேவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ரூபம் உண்டு. அதாவது அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்றபடி, பிராணிகளின் ஒவ்வொர் அங்கங்களிலும் ஒவ்வொரு தேவதை தங்களுக்கு வாஸஸ்தானம் வைத்திருக்கிறார்கள். சூரியன் நம் கண்ணில் இருக்கிறான். அக்னி நம் வாக்கில் இருக்கிறான். இந்திரன் நம் கையில் இருக்கிறான். இப்படியே எல்லா தேவதைகளுக்கும், நம் சரீரத்திலேயே இருப்பிடம் இருக்கிறது. மனிதன் இழைக்கிற குற்றங்களுக்கு ஆளாகும் பஞ்ச பூதங்களில் இருப்பதோடு, குற்றம் செய்கிற மனிதனின் அங்கங்களுக்குள்ளும் தேவர்கள் இருப்பதால், அவர்களை ஏமாற்றவே முடியாது. தர்மங்களை மீறாமலும், கர்மங்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டும் நாம் இருக்கிறவரையில்தான் அவர்கள் நம்மை ரக்ஷிப்பார்கள். இல்லாவிட்டால் சிக்ஷிக்கவே செய்வார்கள்.

தேவதை என்பவனும் ஓர் உயிர்தான். நமக்கு ஆகாரம் இல்லாவிட்டால் எப்படிக் கஷ்டமோ, அப்படித்தான் தேவர்களுக்கும் நாம் ஆகாரம் தராவிட்டால் கஷ்டம். அதனால்தான் வைதிக கர்மாநுஷ்டானங்கள் குறைந்போதெல்லாம், அவர்கள் ஸ்வாமியிடம் முறையிட்டதாகவும், ஸ்வாமி அவதரித்ததாகவும் புராணங்கள் பார்க்கிறோம்.

தேவர்களைப் பற்றி இன்னுமே சில நூதன விஷயங்கள் சொல்கிறேன். தேவதைகளுக்கு வேத அத்யயனம், யக்ஞம் முதலிய கர்மாநுஷ்டானங்கள் கிடையாது. ஏன் தெரியுமா? நாம் தேவதைகளைக் குறித்து வேத ஸூக்தங்களை ஓதுகிறோம். யாகங்கள் செய்கிறோம். தேவதைகள் யாரைக் குறித்து இவற்றைச் செய்வார்கள்? நாம் இந்திரனையும், சூரியனையும் உபாஸிப்பதுபோல், இந்திரனும், சூரியனும் தங்களையே உபாஸித்துக் கொள்ள முடியாதல்லவா? அதனால்தான் அவர்களுக்கு வைதிக கர்மாவில் அதிகாரமில்லை.

வேதத்தை நம் போல் அத்யயனம் செய்யாவிட்டாலும், அவர்களுக்கு வேதம் தானாகவே தெரியும். அதனால்தான், நம் வேத மந்திரத்தைச் சொன்னால் அநுக்கிரகம் செய்ய வந்துவிடுகிறார்கள். மீன் குஞ்சுக்குப் பிறவியிலேயே நீந்தும் சக்தி இருப்பதுபோல், தேவர்களுக்குப் பிறவியிலேயே வேத ஞானம் உண்டு. இதனால் அவர்களுக்கு ‘ஸ்வயம் பிரதி பாதித வேத’ ர்கள் என்று ஒரு பெயர் உண்டு.

தேவர்களும் ஆத்ம விசாரம் செய்து அத்வைத ஞானத்தை அடைந்து பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம். கர்மமும் உபாஸனையும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கும் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் உண்டு என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

ஸ்வாமி என்கிற பரமேசுவரன் இல்லாத இடம் இல்லை. நமக்குள் இருக்கும் பரமேசுவரன் தேவர்களுக்குள்ளும் இருக்கிறான். ஆனால், நமக்குள் ஈசுவரன் இருப்பதை நாம் உணராதது போலத்தான் தேவர்களிலும் பெரும்பாலோர் இருக்கிறார்கள். நம்முடைய அதிகாரிகளில் பெரும்பாலோருக்கு ராஜாவை (அல்லது ராஷ்டிரபதியை) நேரில் தெரியாதல்லவா? இப்படியேதான் தேவர்களிலும் பலருக்குப் பரமேசுவரனைப் பற்றித் தெரியாது. ஆத்ம விசாரம் செய்தால் நமக்கு ஈசுவரனே நம்மில் நாமாக இருப்பது தெரியும். அதற்குப் பிறகு தேவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. அப்போது எல்லாக் காரியமும் நம்மை விட்டுவிடும். ஆனால், அதுவரை தேவர்களை உத்தேசித்த கர்மங்களை நாம் செய்யத்தான் வேண்டும். நம் பூர்வ கர்மா தீர்ந்து, சித்த சுத்தி உண்டாவதற்கே, தேவதைகளை உத்தேசித்த வேத கர்மாக்களை நாம் செய்தாக வேண்டும்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:58 am


அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராஸுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.

அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தியிருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.

இந்த லிங்கோத்பவர் யார்?

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன

ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்

ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்

பூர்ணேந்து வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்

ருத்ராநுவாகான் ஜபன்

த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்

விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது? பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.

மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. “பூர்ணேந்து” என்று சுலோகத்தில் வருவது, ‘பூரண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட “ஸகள” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருதம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.

ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.

லிங்கம் ஏன் வட்டவடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.

சரியான வட்டமான (circle) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. “பிரபஞ்சமே ‘எல்லிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீளவட்டமாகத்தான் இருக்கிறது” என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால் அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்யரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை, அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.

அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்ரியாகும்.

அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானார். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. ‘நான் கண்டு விட்டேன்’ எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.

பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, ‘என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்’ என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ‘ஆசுதோஷி’ என்று ஒரு பெயர் இருக்கிறது. ‘ஆஷுடோஷ் முகர்ஜி’ என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள். ஆசுதோஷிதான் ‘ஆஷுடோஷ்’ என்றாயிற்று. ‘ஆசுகவி’ என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.

சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:59 am


குணங்கள் மூன்று விதம். ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை. ஸத்வம் என்பது ஸமநிலை, சாந்தம், அன்பு. அதன் நிறம் வெண்மை. வெள்ளை வெளேரென்று வஸ்துவைப் பார்த்தாலே மனஸில் ஏற்படுகிற பரிசுத்த மலர்ச்சிதான் ஸத்வம். ரஜஸ் என்பது வேகம். இதில் நல்லது கெட்டது என்ற இரண்டும் கலந்து இருக்கும். இதன் நிறம் சிகப்பு அல்லது செம்மஞ்சள். செக்கச் செவேல் என்று இருப்பதில் அழகும் உண்டு. கண்ணைக் குத்துகிற மாதிரி பயப்படுகிற தினுசும் உண்டு. உதய சூரியனையும் செம்பருத்தியையும் பார்த்தால் சிவப்பே அழகாயிருக்கிறது. ரத்தத்தைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. தமஸ் என்பது முழுக்கவும் கெட்ட குணம். சோம்பல், தூக்கம் எல்லாம் இதைச் சேர்ந்தவை. இதன் நிறம் கறுப்பு. அதாவது அஞ்ஞான இருள் மயமானது.

ஸத்வ – ரஜோ – தமோ குணங்களில்தான் எல்லா மனிதர்களும் கட்டுண்டு கிடக்கிறோம். எல்லாம் ஒரே பரமாத்மாவிடமிருந்து வந்ததால், ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றுக்கும் ரூபகமாக பரமாத்மாவின் மூன்று மூர்த்தி பேதங்களைச் சொல்கிறார்கள்.

ஜனனம் என்பதில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கிறது. காம வேகத்தினால்தான் பிறப்பு உண்டாகிறது. எனவே, சிருஷ்டிக்கெல்லாம் காரணமாயிருக்கிற பிரம்மாவை பரமாத்மாவின் ரஜோ குணமூர்த்தி என்று வைத்தார்கள்.

அதில் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை. பிரம்மா மஞ்சள் சிவப்பாக இருக்கிறவர்.

பரிபாலனம் செய்து ஸத்வ குணத்தால் நடப்பது, மகா பாவம் செய்கிற நமக்கு, ஒருவேளை சோறு பெறக்கூட லாயக்கில்லை. அப்படியிருந்தும் ஈ எறும்பிலிருந்து சகல ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கும்படி செய்து ரக்ஷிப்பவர் மஹாவிஷ்ணு. இவரை சத்வ மூர்த்தி என்று வைத்தார்கள்.

ஸம்ஹாரம் என்பது அழிப்பது. அழிக்கிற குணம் தமஸைச் சேர்ந்தது. இதனால்தான் ஸம்ஹாரமூர்த்தியாகிய சிவனைத் தமோ மூர்த்தி என்கிறார்கள்.

இதிலிருந்துதான் சைவ – வைஷ்ணவப் பிணக்குயாவும் வந்தது போலிருக்கிறது. மஹாவிஷ்ணுவின் பரிபாலனத்தை ஸத்வம் என்று சைவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ‘இந்த நிலையற்ற இகலோக வாழ்க்கையைப் பரிபாலிப்பது என்பது மனிதனை மேலும் மேலும் அஞ்ஞானத்தில் தள்ளுகிற காரியம்தான். இதில் ஸத்வம் இல்லை. சிவன்தான் அஞ்ஞானம் நீங்க ஞானோபதேசம் செய்கிறவர். இந்த ஞானபதேசத்துக்குப் பக்குவமாக இல்லாதவர்களைக்கூட, அவர் பரமக்கிருபையோடு அவ்வப்போது கர்மக் கட்டிலிருந்து விடுவித்து, ஓய்வு தருவதற்கே சம்ஹாரம் செய்கிறார். பிறவிகளுக்கு நடுவே சம்ஹாரத்தின் மூலம் விச்ராந்தி தருகிற கருணாமூர்த்தியே சிவபெருமான். இத்தொழில் தமஸ் அல்ல. ஸத்வமே. ‘பரதெய்வமான பரமேசுவரன் ஆக்ஞைப்படிதான் விஷ்ணு பரிபாலனம் செய்கிறார்’ என்று சிவ பக்திர்கள் சொல்கிறார்கள். வைஷ்ணவர்களோ, ‘மஹா விஷ்ணு இவ்வுலகத்தைப் பரிபாலனம் பண்ணுவார். ஆனால் அது மட்டுமில்லை. அவரே பரமபதமான மோக்ஷமும் தருவார்; அவரே முழுமுதற் கடவுள்; பரமசிவன் அவருக்குக் கீழ்ப்பட்டுத்தான் சம்ஹாரம் செய்கிறார் என்கிறார்கள்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற நாம் எல்லோரும் சைவரும் அல்ல; வைஷ்ணவரும் அல்ல; நமக்கு ஸ்மார்த்தர் என்று பெயர். ஸ்மிருதிகள் என்கிற தர்ம சாஸ்திரங்கள் சொல்வதை அநுசரிக்கிறவர்களே ஸ்மார்த்தர்கள். நமக்கு சிவன் விஷ்ணு இன்னும் மீதமுள்ள எல்லாத் தெய்வமுமே ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு ரூபங்கள்தான். இதில் ஏற்றத் தாழ்வே இல்லை.

இப்படி நாம் சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா? தங்கள் தங்கள் தெய்வத்தின் தொழிலைச் சொல்லி இதுதானே ஸத்வ மூர்த்தி என்று கேட்கிறார்கள். ஸத்வமூர்த்தியைத்தான் வழிபட வேண்டும்? இதனால்தான் இரு கட்சிக்காரர்களும் ஏகமனதாக ரஜோ குணமூர்த்தி என்று வைத்துவிட்ட பிரம்மாவுக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை.

நாம் நடு நிலையில் நின்று யோசித்துப் பார்ப்போம். பிரம்மாவின் தொழில் ரஜஸ்; நிறமும் ரஜஸ்!. அவர் வசிக்கிற தாமரையும் சிவப்பாக ரஜோ சம்பந்தமாகவே இருக்கிறது. ஆனால் சிவனையும், விஷ்ணுவையும் பாருங்கள். பரிபாலனம் என்கிற ஸத்வத் தொழிலைச் செய்கிற விஷ்ணு வெளுப்பாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இவரோ கரியவராக இருக்கிறார். இது தமஸின் நிறம். அதோடுகூட இவர் ஆதிசேஷன் மேல் நீள நெடுகப் படுத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டிருக்கிறார். தூக்கமும் தமஸைச் சேர்ந்தது தான்.

சிவனைப் பார்ப்போம். அழிவு என்கிற தமோ துணத்தொழிலைச் செய்கிற இவர் கருப்பாக இல்லை! ‘சுத்த ஸ்படிக ஸங்காசம்’ என்றபடி சுத்த ஸத்வ வெள்ளையாயிருக்கிறார். இவர் இருக்கிற பனிமலையான கைலாஸமும் அப்படியே இருக்கிறது. விபூதிப்பூச்சு, ரிஷப வாகனம் எல்லாம் ஒரே வெளுப்பு. இவர் தூங்கவில்லை. ஒன்று சாந்த தக்ஷிணா மூர்த்தியாக இருக்கிறார். அல்லது நடராஜனாக ஆனந்தக் கூத்தாடுகிறார். இதெல்லாம் ஸத்வமாகவே இருக்கிறது.

இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? சிவனும் விஷணுவும் தனித்தனியாக ஸத்வமூர்த்தி, தமோ மூர்த்தி என்று பிரிந்திருக்கவில்லை. இருவரிடமும் ஸத்வம், தமஸ் இரண்டும் கலந்திருக்கின்றன. ஒருவர் ரூபத்தில் தமஸ், காரியத்தில் ஸத்வம்; இன்னொருத்தர் ரூபத்தில் ஸத்வம், காரியத்தில் தமஸ்; காரிய ஸத்வத்தை வைத்து வைஷ்ணவர் விஷ்ணுவை வணங்குகிறார்கள். ஸ்வரூப ஸத்வத்தால் சைவர் சிவனையே தெய்வமாககக் கொண்டாடுகிறார்கள். பட்சபாதமில்லாமல் யோசித்தால், இரு குணங்களும் இரு மூர்த்திகளிடமும் கலந்திருப்பதால் ஸாராம்சத்தில் இரண்டும் ஒன்றே என்று தெரியலாம். இரண்டையும் அன்போடு பக்தி செலுத்தி வழிபடலாம்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:59 am


எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறு வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிறபோது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதிலும் ஒரு ரஸம் இருக்கத்தான் செய்கிறது. பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (Unity in diversity) நம் மதத்தின் ஸாரம். இப்படியே சிவன், விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபகமாக வைத்துக் கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத்தான் செய்கிறது.

இப்படிச் செய்யும்போது, சிவனை எல்லாவற்றுக்கும் அடிப்படையான, ஏகவஸ்துவான ஞானமாக பாவிக்கலாம்; அந்த ஏக வஸ்துவை நானாவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம். அதாவது சிவத்தைப் பரப்பிரம்மமாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணுவும் சகோதரர்கள் என்று சொன்னாலும், அவர்கள் ஒன்றேதான் என்பது பரம ஞானிகளின் அநுபவம். “அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறார். சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.

இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:’ என்றுதான் ஸஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்கிற வாக்கும் இருக்கிறது. உலக பரிபாலனம் விஷ்ணுக்குரியது என்று சொல்கிறோம். உலகத்திலே இருக்கிற ஆனந்தங்களை, உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் தோன்றுகிறது. ஹரி கதை, ஹரி நாம சங்கீர்த்தனம் என்றெல்லாம் சொல்வது போல ஹர கதை, ஹர கீர்த்தனம் என்று சொல்வதில்லை. கதை பாட்டு இந்த ஆனந்தமெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். ‘பாகவதர்’ என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும் பொதுவாக, ‘பாகவதர்’ ‘பாகவதம்’ என்றெல்லாம் சொன்னால் விஷ்ணு பக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக்கொள்கிறோம். பிரபஞ்ச சௌந்தரியங்களையெல்லாம் வைத்துப் பூஜை, பக்தி, பஜனை, கதை செய்வதெல்லாம் விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.

ஆனால் இந்தப் பிரபஞ்சத்தை விட்டு, இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை. பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வாக்கு தோன்றியிருக்கிறது. பலவாகக் காண்கிறது போனால் ‘ஸர்வம்’ போய் விடும். ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது ‘ஸர்வம்’ என்ற வார்த்தைக்கு இடம் ஏது? அங்கே அந்த ஏகத்தை அநுபவிக்கிறவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகத்தும் அடிபட்டுப் போச்சு! சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால்தான் “சிவமயம்” என்றே சொல்கிறார்கள்.

VIBGYOR- என்ற ஏழு நிறங்களில் வெளுப்பும் சேரவில்லை. கறுப்பும் சேரவில்லை. உண்மையில் வெள்ளைச் சிவன், கரிய திருமால் இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில் (லௌகிகத்தில்) சேராதவர்கள்தான்.

எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால் அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும். நியூஸ் பேப்பரைக்கூடக் கொளுத்திவிட்டு உடனே அணைத்துவிட்டால் அது முழுக்கக் கறுப்பானாலும், அந்தக் கறுப்புக்குள்ளேயே அதைவிடக் கறுப்பாக எழுத்துக்களும் தெரியும். துணியும் இப்படியே மடிப்புகூடக் கலையாமல் நெருப்பில் கருகுவதுண்டு. முழுக்க நீற்றுப்போய் உருவம் இழப்பதற்கு முற்பட்ட நிலை இது. இதுதான் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’. இந்த நிலையில் ஜகத் இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்து போய்விட்டன. உணர்ச்சிகள் ஆனந்தம் எல்லாம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிகமாக இல்லாமல் தெய்விகமாக பக்தி ரூபத்தில் இருக்கின்றன. யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். எரிகிற வஸ்துக்கள் முதலில் கறுப்பானாலும், கடைசிவரையில் எரித்தால் எல்லாமே வெள்ளை வெளேரென்று நீறாகின்றன. இதுதான் ‘சிவமயம்’.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:00 am


எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் பளிங்காக, வைரமாக ஆகிறது. உலகம் இருந்தபோதிலும் அதன் மாயை நம்மை தொடாமல் எல்லாம் விஷ்ணுமயமாகத் தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் எரிந்து கரியாகப் போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் இதனாலேயே கருமாலாக இருக்கிறார். கரி வைரமாகிறது போன்ற நிலைக்கு – ஸ்படிகமாகிற நிலைக்கு – சுத்த ஸ்படிக ஸங்காசமான பரமேசுவரன் தெய்வமாக இருக்கிறார். கரியும் வைரமும் வேறு வேறு அல்ல. இதுவேதான் அதுவாயிருக்கிறது. மஹா விஷ்ணுவும் பரமேசுவரனும் ஒருத்தரேதான். உலகத்தின் ஆசாபாசங்கள், இவற்றுக்குக் காரணமான மாயை ஆகியவற்றின் நானாவிதமான வர்ண ஆட்டங்கள் இருவரிடத்திலும் இல்லை. மஹாவிஷ்ணுவின் கறுப்பு, சிவனின் வெளுப்பு இரண்டுமே ஸயன்ஸ்படி ஏழு வர்ணங்களில் சேரவில்லை. சத்தியமான தத்துவம் மாயையால் வேறு விதமாக மாறித் தெரிகிறபோதுதான் வர்ணங்கள் உண்டாகின்றன. இருப்பதைப் பொய்யாக மாற்றிச் சொல்வதை இங்கிலீஷில் Coloured Version என்றே சொல்கிறார்கள் அல்லவா? கலர் வந்துவிட்டால் பொய்க்கு வந்துவிட்டோம் என்று அர்த்தம். கலர்களில் சேராத கறுப்பு விஷ்ணுவிடம் வெள்ளை சிவனிடமும் மனத்தை வைக்கிற வரையில் சத்தியத்தோடேயே ஒட்டிக் கொண்டிக் கொண்டிருக்கிறோம்.

இறுதியான வெண்மைக்கு அடையாளமாகவே கரியையும் எரித்த பின் கிடைக்கிற விபூதிச் சாம்பலைச் சைவர்கள் தரிக்கிறார்கள். என்றும் நிற்பது எதுவோ அதுவே நீறு; திருநீறு. விஷ்ணு மயமான உலகத்துக்கு அடையாளம் மண், மரம், செடி, கொடி எல்லாமே மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து முடிவில் மட்கி மடிகிறபோது மண்ணே ஆகின்றன. எனவே மண்ணும் முடிவான நிலைக்கு அடையாளமாக இருக்கிறது. இதனால்தான் வைஷ்ணவர்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். திருநீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைத்தான் காட்டுகின்றன. ஹரி-ஹர பேதம் இல்லாதது போல், அவர்களுக்குரிய சின்னங்களிலும் பேதமில்லை. ஜகத்தில் இருந்துகொண்டே மேல் நோக்கிப் போட்டுக் கொள்கிறார்கள். எல்லாம் சமமாகி விட்ட சிவயோக நிலையில், விபூதியை உயரவாட்டில் போடாமல் நெற்றியில் குறுக்கே தரித்துக் கொள்கிறார்கள்.

சிவனுக்கும் திருமாலுக்குமிடையே பேதம் கற்பிப்பது கொஞ்சம்கூடச் சரியில்லை. வைஷ்ணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் உயர்ந்த பக்தி நிலையில் இரண்டையும் ஒரே ஸ்வரூபமாகக் கண்டு பாடியிருக்கிறார்கள். “பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து” என்று ஆழ்வார் பாடினால், அதை அப்படியே எதிரொலிக்கிற மாதிரி, “குடமாடியை இடத்தே கொண்டு” என்று சைவத் திருமுறை பாடுகிறது. (கோபிகைகளோடு குடத்தை வைத்துக்கொண்டு நர்த்தனம் செய்த கிருஷ்ண பரமாத்மாத்தான் குடமாடி.)

தமிழ்நாட்டில் ஆதிகாலம் முதற்கொண்டு இந்த ஸமரஸ பாவம் இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் ஆகிய இரண்டுக்கு மட்டும் ‘திரு’என்ற கௌரவ அடைமொழி சேர்த்துத் திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம். குழந்தையாக இருந்தபோதே இந்த ஸமரச உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான் அவ்வைப்பாட்டி ஆத்திச்சுடியில் ‘அரனை மறவேல்’ என்றும், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்றும் உபதேசம் செய்கிறாள்.

ஒரே தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு வழிபடுவதே சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகத் தோன்றலாம். இதில் நியாயம் உண்டு. இதனால் இன்னொரு மூர்த்தியைத் தாழ்வாக எண்ணக்கூடாது. தங்கள் இஷ்ட தெய்வத்தையே, பரம்பரையாக வந்த குலதெய்வத்தையே உபாஸிக்கலாம். ஆனால் அப்போதும், ரூபமற்ற பரமாத்மாவையே நாம் இந்த ரூபத்தில் வழிபடுகிறோம். எனவே இந்த மூர்த்தி பரமாத்மாதான். அந்த பரமாத்மா மற்ற ரூபங்களும் எடுத்துக் கொள்ள முடியும்; அதாவது ‘நம் தெய்வமேதான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய மற்ற தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது’ என்ற அறிவும் ஏற்படவேண்டும். நம் தெய்வமே தான் மற்ற தெய்வங்களாகவும் உள்ளது என்று நினைத்துவிட்டால், நமக்கு அந்த ரூபங்களில் பிடிப்பு உண்டாகாவிட்டாலும்கூட, அவை நம் தெய்வத்தை விடத் தாழ்ந்தது என்ற எண்ணம் வரவே வராது. சமயச் சண்டைகளும் உண்டாகாது. எல்லோரும் ஒரே பரமாத்மாவின் குழந்தைகளாக அன்போடு ஐக்கியப்படுவதற்காக ஏற்பட்ட மதத்தில், தெய்வங்களின் பெயராலேயே சண்டையும், துவேஷமும் உண்டாகிற நிலை மறைந்து, ஸெளஜன்யமும், சாந்தியும் நிலவும்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:00 am


சிவபெருமான், திருமால் இரண்டு பேரையும் உபாஸிப்பதற்கு நீண்டகாலமாக ஒரு விதி இருக்கிறது. லோக விவகாரங்களை நாம் அழகாக, தர்மமாக நடத்துவதற்கு ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையும், இந்த வியாபாரங்களிலிருந்து மனஸைத் திருப்பி ஆதார வஸ்துவில் ஒடுங்குவதற்கு சம்ஹார மூர்த்தியான பரமேசுவரனையும் தியானிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கேற்ப வெளியிலே பார்த்தாலும் மஹாவிஷ்ணுதானே திருபுவன சக்கரவர்தியாக இருக்கிறார்! பரமேசுவரனோ ஆண்டியாக பிச்சாண்டியாக இருக்கிறார். இருவரிடமும் இருக்கிற சொத்துக்களைக் கொஞ்சம் கணக்கெடுத்துப் பார்ப்போம். சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ, தும்பைப்பூ, ஊமத்தை, மண்டைஒடு, யானைத்தோல், பாம்பு – இவைதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விலை கொடுக்கமாட்டார்கள். விலைபோகாத வஸ்துக்கள்தான் சிவனிடம் உள்ளன. மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலங்கள், முக்தா ஹாரங்கள், பீதாம்பரம், கௌஸ்துப மணி எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கும் எவரும் விலை நிர்ணயிக்க முடியாது. சிவனிடம் உள்ளதற்கு விலை மதிப்பு இல்லை. (valueless); விஷ்ணுவிடம் உள்ளதோ விலைமதிக்க முடியாதது (invaluable). எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணுவிடம் ஐசுவரிய தேவதையான மஹா லக்ஷ்மியே இருக்கிறாள். பரமசிவனிடம் இருக்கும் அம்பாளுக்கோ ‘அபர்ணா’ என்று பெயர். ஓர் இலை (பரணம்) கூட இல்லாதவள் என்று அர்த்தம். இலையைக்கூட உண்ணாமல் பரம தியாகியாகத் தபஸ் செய்தவள் அபர்ணா.

இதிலிருந்து லோகமெல்லாம் தர்மத்தோடு சந்தோஷமாக இருப்பதற்கு மஹாவிஷ்ணுவையும், வைராக்கியம் வருவதற்குப் பரமேசுவரனையும் ஆராதிப்பதில், பொருத்தம் இருப்பது தெரியும். மகாவிஷ்ணுவால் ஞானம் தரமுடியாது என்றோ, பரமேசுவரனால் லோக வியாபாரம் நன்றாக நடக்க அநுக்கிரகிக்க இயலாது என்றோ அர்த்தமில்லை. இரண்டு மூர்த்திகளை வழிபடுகிறபோது, இப்படி இரண்டு விதங்களில் ஆராதிப்பது ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரிடம் சித்த ஒருமைப்பாடு (ஐகாக்ரியம்) கொள்வதற்கு உதவும்.

இந்த அடிப்படையில்தான் விடியற்காலையில் ஒவ்வொருவரும் எழுந்தவுடன் ‘ஹரிநாராயண ஹரிநாராயண’ என்று கொஞ்ச காலமேனும் ஸ்மரணம் செய்ய வேண்டும் என்றும், சாயங்காலத்தில் ‘சிவ சிவ’ என்று சிறிது பொழுதேனும் ஸ்மரிக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள். வெகு சுலபமான சாதனம். எல்லோரும் இதை அவசியம் செய்ய வேண்டும்.

காலையில் லோகம் முழுக்கத் தூக்கத்திலிருந்து விடுபட்டு மலர்ச்சி அடைகிறது; சூரியன் பலபல என உதிக்கிறான்; உலக காரியங்கள் எல்லாம் தொடங்குகின்றன. எனவே குளிர்ந்த வைகறைப் போதில் நீருண்ட மேகம்போல் குளிர்ந்த ஜகத் பரிபாலகரான விஷ்ணுவின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மாலையில் அவரவரும் வேலை முடித்து வீடு திரும்புகிறார்கள். மாடுகள் கொட்டிலுக்கு திரும்புகின்றன. பட்சிகள் கூட்டுக்குத் திரும்பிவிடுகின்றன. சூரியனும் மலைவாயில் இறங்குகிறான். இப்படி லோக வியாபாரங்கள் ஒடுங்கத் தொடங்குகிற அந்தப்போதில், நம் ஆட்டங்களையெல்லாம் ஒடுக்கி அமைதி தருகிற ஞானமூர்த்தியான பரமேசுவரனின் நாமாவை உச்சரிக்க வேண்டும்.

அண்டம் பிண்டம் இரண்டும் அடிப்படையில் ஒரே சரக்கானதால், வெளி உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. உலகில் அருணோதயத்துக்கு முன்பு பட்சி ஜாலங்கள் விழித்துக்கொண்டு கூவத் தொடங்குகிற வேளையில், ‘லோகமெல்லாம் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற எண்ணத்தை மனஸில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு, ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனைத் தியானிப்பது எளிதில் கைவரும். இதேபோல் வெளியுலகம் ஒடுங்கித் தன்மயமாகி, இருள் கவிந்து வருகிற அந்தி வேளையில், இந்திரியங்களை ஒடுக்கி, சாந்தமாக சிவபெருமானின் தியானத்தில் அமிழ்வது சகஜமாகவும் சுலபமாகவும் இருக்கும்.

நம்முடைய மனோபாவத்தைப் பொறுத்து, இப்படி இரண்டு விதத்தில் உபாஸித்தாலும் இரண்டு மூர்த்திகளும் ஒன்றேதான் என்ற நினைப்பு போகக்கூடாது. காலையில் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு சந்தியாவந்தனம் செய்த அதே மனிதர், பகலில் ஸுட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்குப் போகிறார். வெவ்வேறு காரியங்களுக்காக வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டாலும் ஆசாமி ஒருத்தர்தான். ஸ்வாமியும் ஒருத்தர்தான்.





தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:00 am


சிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.

“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.

அந்த கோயிலுக்குத்தான் அந்த வைஷ்ணவர் நுழைந்த பிறகு ஈசுவரன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஓடி வந்திருக்கிறார். அதனால், “ஏன் ஐயா பொய் சொல்கிறீர்? அது ஈசுவரன் கோயில்” என்று சொன்னாராம்.

“இல்லவே, இல்லை. நீர்தான் பொய் சொல்கிறீர். அது பெருமாள் கோயில்தான். வேண்டுமானால் உள்ள வந்து பாரும்” என்று அவர் சொல்ல, “இப்போதுதான் நான் பார்த்தேன் என்று இவர் சொல்ல, கடைசியில் கிழவர் “பந்தயம் கட்டும்;எதற்காகப் பொய் சொல்கிறீர்? ” என்று ஸ்ரீவைஷ்ணவரிடம் அடிதடிச் சண்டைக்குப் போய் விட்டாராம்.

இதற்குள் ஊரில் இருந்தவர்களுக்கு இது தெரிந்து, அவர்களுக்குள் மத்தியஸ்தம் செய்துவைக்க வந்தார்கள்.

“எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கவேண்டும்? எல்லோரும்தான் போய் எது மெய்யென்று பார்க்கலாமே?” என்று ஊர் ஜனங்கள் சொன்னார்கள்.

“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.

“வராவிட்டால் விட முடியாது. எப்படி நான் சொல்வது இவர் பொய் என்று இவர் பார்க்காமல் சொல்லலாம்? யார் பொய் என்று பார்த்துவிட வேண்டும்” என்று அந்தக் கிழவர் வீம்பு பண்ணிக் கொண்டு, விடமாட்டேன் என்று மல்லுக்கு நின்றார்.

கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்.

வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

அதைப் பார்த்தவுடன், ‘அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே – மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.

கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:01 am


மஹாவிஷ்ணு மீனாக்ஷியை ஸுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். மதுரையில் இந்த ஐதிஹ்யம் சிற்பத்தில் வெகு அழகாக இருக்கிறது. அம்பாள் பத்மநாப சகோதரியாகவும், பரமேசுவர சக்தியாகவும் இருப்பதை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது இந்தச் சிற்பம். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நம் மனஸில் சைவ வைஷ்ணவ பேத பாவம் போயே போய் விடும்.

பிரம்மத்தில்தான் ஸர்வ சக்தியும் இருக்கிறது. அந்த சக்தியால்தான் சகல பிரபஞ்ச காரியங்களும் நடக்கின்றன. பிரம்மமே பரமேசுவரன்; சக்தியே அம்பாள்; அந்தச் சக்தியால் ஜகத்தை எல்லாம் பரிபாலிக்கிறவரே மஹா விஷ்ணு என்று பிரித்துச் சொன்னாலும், இவர்களும் கடைசியில் ஒருவருக்கொருவர், வித்தியாசமே இல்லாதவர்கள்தான் என்று தெரிகிறது. பிரம்மம், அதன் சக்தி, அந்தச் சக்தி செய்கிற காரியம் எல்லாம் வேறு இல்லை அல்லவா?அநேக தெய்வங்களுக்குள் தங்களுடைய பரமாத்ம ஸ்வரூபத்திலேயே எப்போதும் இருக்கிற மும்மணிகள் – ரத்ன த்ரயம் – இம்மூவரே என்று அப்பைய தீக்ஷிதர் நிலைநாட்டியிருக்கிறார்.

சாந்தமாக இருக்கிற பிரம்மம் சிவன், காரியங்கள் செய்து பரிபாலிக்கிறவர் மகாவிஷ்ணு என்று சொன்னாலும், இப்படிப்பட்ட வித்தியாசம் கற்பிப்பதுகூட முழுக்கச் சரியில்லை என்று உணர்த்துகிற வகையில் இரண்டு ராஜாக்களைப் பார்க்கிறோம். ஒருத்தர் ரங்கராஜா, மற்றவர் நடராஜா. ரங்கராஜா இருக்கும் ஸ்ரீரங்கத்தைத்தான் வைஷ்ணவர்கள் ‘கோயில்’, ‘கோயில்’ என்று சொல்கிறார்கள். அதே மாதிரி சைவர்களின் ‘கோயில்’ என்றால் அது நடராஜா இருக்கிற சிதம்பரம்தான். இந்த இரண்டு மஹா க்ஷேத்திரங்களில் உள்ள ரங்கராஜா, நடராஜா இரண்டு பேரும் தென்திசையையே பார்த்துக் கொண்டிருப்பது விசேஷம். தெற்கு யமனின் திக்கு. நமக்கு மரண பயமில்லாமல் நம்மை அமரமாக்குகிற மூர்த்திகளாதலால் யமனுக்கு எதிர் முகம் காட்டுகிறார்கள்.

ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம்.

சபையில் நர்த்தனம் செய்வதுதான் பொருத்தம். ஆனால் இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர்தான் நர்த்தனம் செய்கிறார். சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று நாம் சொல்கிற சிவன்தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையோ திருவரங்கத்தில் பரம சாந்தமாக உறங்குகிறார். சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது? முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும்கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக பராசக்தி எடுத்துக்கொண்ட பல தோற்றங்கள்தான். அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து பிரிந்து இருப்பதாக நினைக்கக்கூடாது. இதைத்தான் இரண்டு ராஜாக்களும் நமக்கு உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும் அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இரண்டு சபைகளில் நடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார்; ஆட்டி வைத்துப் பரிபாலிக்க வேண்டியவரோ தூங்குகிறார்.

தெற்கே பார்த்துக்கொண்டிருக்கிற இன்னொருத்தர் தக்ஷிணாமூர்த்தி. இவர் பரமஞான மூர்த்தி. காரியமேயில்லாத ஏகவஸ்துவான சாக்ஷாத் பிரம்ம ஸ்வரூபம். அவருடைய சித் (ஞான) சக்திதான் அம்பாள். அந்த சைதன்யம்தான் சிவ விஷ்ணுவாக, மும்மூர்த்திகளாக, முப்பத்து முக்கோடி தேவதைகளாக, புல், பூண்டு, பசு, பட்சி, மநுஷ்யர்கள் உட்பட சகலமாகவும் ஆகியிருக்கிறது. இவற்றிலே குறிப்பாக பாரத தேசம் சிவபெருமான், திருமால் இவர்களை முழுமுதல் கடவுளாக வழிபடுவதால், நாம் பேத புத்தி இல்லாமல் இவ்விருவரையும் வழிபட வேண்டும். நாம் மனஸில் எந்நாளும் மறவாமல் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால்,

பராசக்தியின் மற்றொரு உருவமே திருமால்; பராசக்தியை விட்டுப் பிரிக்க முடியாத ஆதாரப் பொருளே சிவன்.

எல்லாவற்றுக்கும் உள்நின்று இயக்குகிற அந்தச் சக்தியை நாம் பக்தி செய்தால், தாயாக வந்து ஞானப்பால் கொடுத்து நம்மை ரக்ஷிக்கிற அம்பாளாகிறாள்.

அவளது அநுக்கிரகம் இல்லாவிட்டால், நாம் சவத்துக்குச் சமம்தான். நாம் செய்கிறதாக நினைக்கிற சகல காரியங்களுக்கும், எண்ணங்களுக்கும் அவள் தருகிற சக்திதான் காரணம். எவருக்குமே நம் சக்தியினாலேயே காரியங்களைச் செய்துகொள்கிறோம் என்று அகம்பாவம் படக் கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நம்மை நடத்தி வைக்கும் அந்தப் பராசக்தியை நினைத்து, நாள்தோறும் ஒரு நிமிஷமாவது, ‘என் சிறு சக்தி உன்னிடமிருந்து தெறித்த ஒரு திவலைதான்; இதை உன் சித்தப்படியே நடத்திவையம்மா’ என்று அர்ப்பணம் பண்ணுவோம்.

இதுவே மநுஷ்ய குணங்களில் முதலாவதாகச் சொல்லப்படுகிற நன்றி;

இதே பூஜை;

இதே ஸ்நானம் – அகம்பாவ அழுக்கைத் துடைத்து நம் உயிரைச் சுத்தமாக்குகிற ஸ்நானம்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 1:01 am


பரமேசுவரனும் ஸ்ரீமந் நாராயணனும் ஒரே வஸ்து; இரண்டல்ல. பெயர் வேறு. உருவம் வேறு, வேலை வேறு. ஆனால் உள்ளேயிருக்கப்பட்ட வஸ்து ஒன்றேதான். ஸ்ரீசங்கர பகவத் பாதர்களின் அபிப்பிராயம் இதுதான். கேள்வியும் பதிலுமாக ‘ப்ரச்னோத்தர ரத்னமாலிகா’ என்று அவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். ப்ரச்னம் – கேள்வி. (இப்போது அந்தப் பிரச்னை இந்தப் பிரச்னை என்கிறோமே. ‘பிரச்னை’ என்பது ‘ப்ரச்னம்’ தான்) உத்தரம் – பதில். ப்ரச்னம் உத்தரம் (கேள்வி பதில்) இரண்டும் சேர்த்து ப்ரச்னோத்தரம். மாலை மாதிரி கேள்வியையும் பதிலையும் தொடுத்துக் கொடுக்கிறார் ஆசார்யாள். ‘பண்டிதர்களுக்கு இது ரத்னமாலை’ என்று பிரச்னோத்தர ரத்னமாலிகாவை அநுக்கிரகித்திருக்கிறார்.

அதில் ஒரு கேள்வி: பகவான் யார்?

அதற்குப் பதில்: சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கிற ஒருவன். சங்கர நாராயணாத்மா ஏக:

இதிலிருந்து ஆசார்யாள் மனஸில் சிவன், விஷ்ணு என்ற பேதபாவம் கொஞ்சம்கூட இல்லை என்றாகிறது.

இதே மனோபாவத்தில்தான் அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள் எல்லோரும், ஒவ்வொரு காரியத்தையும் ‘பரமேசுவரப் பிரீதிக்காக’ என்ற சங்கல்பத்துடன் ஆரம்பித்து, முடிவில் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று பூர்த்தி பண்ணுகிறோம். ‘பரமேச்வர பிரீத்யர்த்தம்’ என்று தொடங்கி, ‘ஜனார்த்தன: ப்ரீயாதாம்’ என்று முடிக்கிறோம். ஒருத்தன் பிரீதிக்கு என்று ஆரம்பித்ததை இன்னொருத்தன் பிரீதிக்கு என்று எப்படி இருக்க முடியும்? இரண்டும் ஒன்றாகவே இருப்பதால்தான் முடிகிறது. பேர்தான் வேறு வேறு.

தீவிர வைஷ்ணவர்களைக் கேட்டால், விஷ்ணுதான் கடவுள்; சிவன் மற்ற ஜீவராசிகளைப் போல் என்பார்கள். இதே மாதிரி வீர சைவர்களைக் கேட்டால், சிவன் முழு முதல் தெய்வம். விஷ்ணு ஜீவகோடியைச் சேர்ந்தவர்தான் என்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரது சித்தாந்தப்படியும் சிவன் அல்லது விஷ்ணுதான் எல்லா ஜீவராசிகளின் இருதயத்துக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். இப்படி வைத்துக் கொண்டாலும் ஒன்று சிவன் விஷ்ணுவின் இருதயத்தில் இருக்கிறார்; அல்லது விஷ்ணு சிவனின் இருதயத்தில் இருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் தங்கள் ஸ்வாமியை இருதயத்தில் வைத்துக் கொண்டிருக்கிற அந்த இன்னொருவரையும் பூஜிக்கத்தானே வேண்டும்.?

சித்தாந்தம் எனறு கட்சி பேசாமல் நடுநிலையிலிருந்து பேசக்கூடிய மகாகவியான காளிதாஸன், பாணன் முதலியவர்களுடைய வாக்கைப் பார்த்தால், ஒரே வஸ்துதான் பல தேவதைகளாக வந்திருக்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரியும்.

‘ஒரு மூர்த்திதான் உள்ளது. அதுவே மூன்றாகப் பிரிந்தது. இவை ஒன்றுக்கொன்று சமம். ஒன்று உயர்ந்தது – மற்றது தாழ்ந்தது என்றில்லை’ என்கிறார் காளிதாஸன்.

ஏகைவ மூர்த்தி: பிபிதே த்ரிதா ஸா

ஸாமான்யமேஷாம் ப்ரதமா வரத்வம்

பாணரும் இப்படியே சொல்கிறார். “எந்த ஒன்றே ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்கிற பிரம்மாவாகவும், ஸத்வ குணத்தால் பரிபாலிக்கிற விஷ்ணுவாகவும், தமோ குணத்தால் பிரளயத்தை உண்டாக்கும் ருத்திரனாகவும் இருக்கிறதோ, அந்தப் பிறப்பற்ற ஒன்றை – முத்தொழிலுக்கும் காரணமாக, மூன்று வேத ரூபமாக இருக்கிற முக்குண மூலத்தை நமஸ்கரிக்கிறேன்” என்கிறார். *

ரஜோஜுஷி ஜன்மனி ஸத்வவ்ருத்தயே

ஸ்திதௌ ப்ரஜானாம் ப்ரளயே தம: ஸ்ப்ருசே |

ஆஜாய ஸர்க்க ஸ்திதி நாச ஹேதவே

த்ரயீமயாய த்ரிகுணாத்மனே நம: ||

ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற வீம்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி திறந்த மனஸோடு பார்க்கிற மகாகவிகள் இருவர் இப்படிச் சொல்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் விஷயத்தில் இவர்கள் சொல்கிற ஐக்கியம் அத்தனை தேவதைகளுக்கும் பொருந்தும்.

அநுபவ சிகரத்திலிருந்து பேசிய மகான்கள் தங்களுக்கென்று ஓர் இஷ்ட தெய்வம் இருந்தாலும்கூட, மற்ற தேவதைகளும் அதுவேதான் என்று தெளிவாகக் கண்டு கூறியிருக்கிறார்கள். ‘மகேசுவரனுக்கும் ஜனார்த்தனனுக்குமிடையே வஸ்து பேதம் துளிக்கூட இல்லாவிட்டாலும் என் மனசு என்னவோ சந்திரனைச் சிரஸில் சூடிய சிவபெருமானிடம்தான் விசேஷமாக ஈடுபடுகிறது’ என்று ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் கூறுகிறார். ‘நான் சைவன்தான்; சிவபஞ்சாக்ஷர ஜபம் செய்கிறவன்தான். இருந்தாலும் காயாம்பூ நிறத்து கோபிகாரமணனிடமே என் சித்தம் லயிக்கிறது’ என்கிறார் ‘கிருஷ்ண கர்ணாம்ருத’த்தில் லீலாசுகர்.

இஷ்ட தெய்வம் என்று ஒன்று இருக்கலாம். ஆனால் அதுதான் எல்லாமாயிருக்கிறது என்பதால், அதுவேதான் மற்ற தெய்வங்களுமாயிருக்கிறது என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்துக் கொண்டதற்காக இன்னொன்றை நிந்திக்கக்கூடாது. விஷ்ணுதான் கடவுள், சிவன் ஒரு ஜீவன் – அல்லது சிவன்தான் கடவுள், விஷ்ணு ஒரு ஜீவன் – என்றால்கூட, ஒரு மூர்த்தியிடம் துவேஷம் பாராட்ட இடமில்லை. ஒருத்தர் ஸ்வாமி, இன்னொருத்தர் பக்தர் என்றாலும் பக்தருக்குரிய மரியாதையைச் செய்யத்தானே வேண்டும்? சிவன் விஷ்ணுவுக்குப் பக்தன்; அல்லது சிவனுக்கு விஷ்ணு பக்தன் என்றே சொல்கிறார்களே தவிர, இருவருமே பரஸ்பரம் துவேஷித்துக் கொள்ளும் விரோதிகள் என்று யாரும் சொல்லவில்லையே. அப்படியிருக்க அவர்களில் ஒருவரை நாம் ஏன் துவேஷிக்க வேண்டும்?

ஒரு புராணத்தில் சிவன் விஷ்ணுவை நமஸ்கரிக்கிறார்; இன்னொரு புராணத்தில் விஷ்ணு சிவனை நமஸ்கரிக்கிறார் என்பதால் இவர்கள் சின்னவர்களாகிவிடவில்லை. சிவனை நமஸ்காரம் பண்ணு என்று சிவனே சொல்லாமல், விஷ்ணு அதை நமக்குக் காரியத்தில் உபதேசிக்கிறார்; இப்படியே நமக்கு விஷ்ணு பக்தி உண்டாக்கவே, சிவன் விஷ்ணுவைப் பூஜிக்கிறார். ஜனங்களின் விதவிதமான ருசிக்குத் தகுந்த மாதிரி ஒரே பரமாத்மா வேறு வேறு ரூபத்தில் வருகிறார். அவரவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியால் இந்த மூர்த்தியை நமஸ்காரம் பண்ணுகிறார். பகவானைப் பூஜிக்கிற மாதிரியே பாகவதர்களையும் பூஜிக்க வேண்டும் என்று வைஷ்ணவர்கள் சொல்கிறார்கள். சிவனைப்போலவே சிவனடியாரையும் வழிபட வேண்டும் என்று சைவர்களும் சொல்கிறார்கள். எனவே, இவர்களில் ஒருத்தர் இன்னொருத்தரைப் பூஜை செய்வபரையும் நாம் நமஸ்கரிக்கத்தான் வேண்டும்.

முன்னே சொன்ன ‘ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா’வில் இன்னோரிடத்தில் ‘மேலான தெய்வம், பரதேவதை எது?’என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கும் ‘சித்சக்தி’ என்று பதில் சொல்கிறார் ஸ்ரீ ஆசார்யாள். சித்சக்தி என்பது தான் பரப்பிரம்மத்தின் பேர் அறிவு. அதுதான் அத்தனை தேவதைகளுமாயிற்று. அதுவே நமக்கு நல்லறிவு தரும் ஞானம்பிகை. அந்த ஞானாம்பிகைதான் நமக்கு எல்லா விதமான பேத புத்தியும் போவதற்கு அநுக்கிரகிக்க வேண்டும்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக