புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
14 Posts - 70%
heezulia
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
8 Posts - 2%
prajai
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_m10F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:00 pm




காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.

குற்றம் எந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்ததோ அந்த காவல் நிலையத்தில் மட்டுமே புகார் கொடுக்கப்படவேண்டும் ஒரு வேலை தவறுதலாக வேறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், அந்த காவல் நிலைய அதிகாரி முறையான காவல்நிலைய எல்லையை தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும். கொலை செய்துவிட்டு முண்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

குற்றங்கள், பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Cognizable Offences), பிடியாணையுடன் மட்டுமே கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Non Cognizable Offence) என்று இரண்டாக சட்டத்தால் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே காவல்துறை அதிகாரிகள் குற்றம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கையை(FIR) CrPC பிரிவு 154 ன்கீழ் பதிவு செய்யமுடியும்.

காவல் நிலையத்திற்கு, ஒரு குற்றச் சம்பவம் தொடர்பான தகவலானது எழுத்து மூலமாக நேரடியாக கொடுக்கப்படவேண்டும். வாய்மொழியாக புகார் கொடுத்தால் அதை காவல்துறை அதிகாரி எழுத்தால் எழுதி புகார்தாரருக்குப் படித்துக் காட்டி கையெழுத்துப் பெறவேண்டும்.

புகாரில் தேதி, சம்பவ நேரம், சம்பவ இடம், சம்பவம் எப்படி நடந்தோ... அதை அப்படியே குறிப்பிடவேண்டும். புகாரில் சொல்லப்பட்ட குற்றச் சம்பவம் இந்திய சட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது குற்றமாக இருக்கவேண்டும். சில சமயங்களில் புகார் கொடுக்கும் பொழுது சட்டப்பிரிவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புகார் எழுதுபவர் அல்லது புகாரை எழுத உதவி செய்பவர் புகாரில் சங்கதிகளை கூட்டியோ குறைத்தோ எழுதுவார்கள். இது தவறா? சரியா? என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

புகார் கொடுப்பவருக்கு உடனடியாக இலவசமாக முதல் தகவல் அறிக்கை நகல் கொடுக்கப்படவேண்டும்.



முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு குற்றம் சம்பந்தமாக காவல்நிலையத்திற்கு வரும் முதல் தகவல் பற்றிய அறிக்கையாகும்

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தபின்பு தான் புலன்விசாரணை தொடங்கவேண்டும்

புகாரை பதிவு செய்யும் காவல்அதிகாரியே புலன் விசாரணையையும் செய்யக்கூடாது என்பது பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் நடைமுறை. அவ்வாறு செய்தால் உண்மையை கண்டறிய முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பே புலன்விசாரணை சில வழக்குகளில் தொடங்கிவிடுகிறார்கள் காரணம் காவல்நிலையத்திற்கு வந்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு புலன்விசாரணை செய்வது போதைபொருட்கள் கடத்தல் வழக்கு நடைமுறைகளில் சாத்தியம் இல்லை.



முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த அதிகாரி அதன் ஒரிஜினலை நீதிமன்றத்திற்கு உடனடியாக அனுப்பவேண்டும்.

ஒரு நகலை புலன் விசாரணை அதிகாரிக்கு, புலன் விசாரணைக்காக அனுப்பவேண்டும்.

ஒரு நகலை மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு நகலை புகார் கொடுப்பவருக்கு கொடுக்கவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் நீதிமன்றத்தின் மூலமாக இலவசமாக கொடுக்கப்படும்.

ஒரு குற்றவழக்கை தொடங்கி வைப்பதே இந்த முதல் தகவல் அறிக்கை தான் ஒரு குற்றத்திற்கு ஒருமுறை தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். ஒரே நேரத்தில் அல்லது தொடர்ச்சியாக ஒரே நபர்களால் செய்யப்பட்ட ஒரே வகையான அல்லது பல்வேறு வகையான குற்றங்களை ஒருங்கிணைத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். குற்றத்தை செய்தவரே காவல் நிலையத்தில் நேரடியாக சென்றும் புகார் கொடுக்கலாம்.



முதல் தகவல் அறிக்கை அந்தந்த மாநில மொழியில் பதிவு செய்யப்படும்.

ஒரே குற்றத்திற்கு இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாது. மத்திய புலனாய்வு அமைப்பிற்கு ஒரு வழக்கு, புலன்விசாரணைக்கு மாற்றப்படும் போது அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் அப்பொழுது அதற்கு வேறு ஒரு எண் கொடுக்கப்படும்.

முதல்‌ தகவல் அறிக்கைக்கு கொடுக்கப்படும் வரிசை எண்ணிற்கு
குற்ற எண் (crime nunber) என்று பெயர். முதல் தகவல் அறிக்கை அச்சிட்ட
படிவத்தில் இருக்கும்.

ஓடும் ரயிலில் குற்றம் நடந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வசதியாக ரயிலிலேயே ரயில்வே அதிகாரியிடம் முதல் தகவல் அறிக்கையின் படிவம் இருக்கும்.

முதல் தகவல் அறிக்கையை மட்டுமே வைத்து ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிட முடியாது. இந்திய சாட்சிய சட்டத்தின் படி முதல் தகவல் அறிக்கையை சாட்சியங்களை முரண்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

முதல் தகவல் அறிக்கை தவறாக, கவனக்குறைவாக சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலன்விசாரணை அதிகாரிக்கு தெரியவந்தால் நீதிமன்றத்தில் CrPC 173 ன் படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்பொழுது முதல் தகவல் அறிக்கையை முடிவுக்கு கொண்டுவரலாம்.

முதல் தகவல் அறிக்கையை தகுந்த காரணமின்றி பதிவு செய்யாமல் மறுப்பு தெரிவிக்க காவல் அதிகாரிக்கு அதிகாரமில்லை. புகாரில் கையெழுத்திட மறுக்கவும் புகார்தாருக்கு உரிமையில்லை.

பொய்யாக முதல் தகவல் அறிக்கை வேண்டும் என்றே குற்றச்சம்பவம் எதுவும் நடக்காமல் சம்பவம் நடந்ததாக புனைந்து பதிவு செய்யப்பட்டால் அதற்கு காவல்துறை அதிகாரியும் உடந்தையாக இருந்தால் புகார்தாரர் மற்றும் காவல்துறை அதிகாரி மீது குற்றநடவடிக்கை தொடரமுடியும்.



காவல் நிலையத்தில் மட்டுமே ஒரு குற்ற வழக்கு சம்பந்தமாக புகார் கொடுக்க முடியும் என்பதல்ல, நீதிமன்றங்களிலும் புகார் கொடுக்கலாம்.

சில குற்றங்களை பொருத்து நீதிமன்றத்தில் மட்டுமே புகார் கொடுக்க முடியும் என்று சட்டம் தெளிவாக இருக்கும் போது நீதிமன்றத்தில் மட்டுமே புகார் கொடுக்கமுடியும்.

உதாரணமாக காசோலை மோசடி வழக்கை மாற்று முறை ஆவணச் சட்டத்தின் படி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யவேண்டும். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாது.

அவதுறு செய்துவிட்டதாக குற்றவழக்கு நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யமுடியும்

நீதிமன்றங்களில் மட்டுமே தாக்கல் செய்யப்படும் புகார்களை காவல்நிலையங்களில் தாக்கல் செய்யமுடியாது. ஆனால் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களை காவல்துறையினர் ஏற்க மறுக்கும் பொழுது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முடியும்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200 குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் கொடுப்பதை வரையறுக்கிறது.

நீதிமன்றத்தில் புகார் கொடுக்கும் போது நீதிமன்றம் அந்த புகாரை காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடுவது உகந்தது என கருதினால் குற்றம் நடந்தாக கருதப்படும் எல்லைக்குட்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு புலன் விசாரணைக்கு உத்தரவிடலாம்.CrPC56(3)

காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தால் புலன்விசாரணைக்கு உத்தரவிடும் புகார்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்

நீதிமன்றத்தில் குற்றவழக்கு யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கட்டாயம் இல்லை. புகார் கொடுப்பவர் நேரிடையாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்.

நீதிமன்றத்தில் குற்றவழக்கு தாக்கல் செய்வது என்பது ஒரு திறமையான கலை. சட்டமும் சங்கதிகளும் சரியாக பொருந்தக்கூடியதாக புகார் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கு திறமையான வழக்கறிஞரின் உதவி கட்டாயம் தேவை.

ஒவ்வொரு வழக்கறிஞர் அலுவலகமும் ஒரு காவல் நிலையத்தை போல தான் ஒரு சட்ட அலுவலகம் ஆகும், ஆனால் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் நிறைய விதவிதமான குற்றங்கள் தினம்தோறும் நடந்துவருகிறது அனைத்து வகையான குற்றங்களுக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு போதிய பயிற்சியும் சட்டறிவும் இல்லை என்றே சொல்லலாம்.

[thanks]Lr. எம்.ரஹ்மத்துல்லா B.A.B.L., வழக்கறிஞர், மேட்டுப்பாளையம்[/thanks]



F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 14, 2018 10:05 pm

அன்பரே ஓர் பொய் புகார் செய்து FIR போட்டதை நானே பார்ட் இன்பர்சனாக
ஆஜராகி வழக்கை தள்ளுபடி செய்தேன் .சம்பந்த பட்ட காவல்துறை ஆய்வரை
சாட்சி கூண்டில் ஏற்று விசாரனை செய்யவைத்தார் நடுவர் .இப்படி பொய் வழக்கு
பதிவுசெய்த ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி உயர் அலுவலருக்கு
புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டு வருகின்றனர்.
ஏட்டளவில் சட்டம் உள்ளதே தவிர எல்லாம் பணம் படை ஆள்பலம் பார்த்தே
சட்டம் செயல்பட செய்கின்றனர். அத்தி பூத்தாப்போல ஒரிரு நீதி மான்கள்
இல்லாமல் இல்லை ஏன் என்றால் மழை பெய்யனும் அதனால் இறைவன்
அப்படி ஓரிரு நபர்களை படைத்துள்ளான் என்லாம். நல்ல கருத்தை பதிவு
செய்துள்ளீர் அன்பரே F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ? 3838410834


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக