புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
285 Posts - 45%
heezulia
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
20 Posts - 3%
prajai
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_m10சீமராஜா - திரைவிமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமராஜா - திரைவிமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:42 am

சீமராஜா - திரைவிமர்சனம் 1536657866-3325

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டதாகவும், மாஸ் ஓப்பனிங் வசூல் பெரும் நடிகர் என்ற பெயரை எடுத்துவிட்ட சிவகார்த்திகேயனின் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்

திருநெல்வேலி அருகேயுள்ள சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா பரம்பரையில் வந்த நெப்போலியனின் மகன் தான் சீமராஜா சிவகார்த்திகேயன். மற்ற ராஜாக்கள் போலவே எடுபிடுகளுடன் ஊர் சுற்றி திரியும் ராஜாவான சிவகார்த்திகேயனுக்கு பக்கத்து ஊராகிய புளியம்பட்டியை சேர்த்த சமந்தாவை பார்த்தவுடன் காதல் வருகிறது. சிங்கம்பட்டிக்கு புளியம்பட்டிக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் காதல் கைகூடியதா? என்பதே இந்த படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் காமெடியை அள்ளி அள்ளி வழங்கியுள்ளார். இருபது நிமிட பிளாஷ்பேக் காட்சி தவிர முழுக்க முழுக்க காமெடிதான். இதனால் ஒருசில காட்சிகளில் அவர் சீரியஸாக நடித்தாலும் அதுவும் சிரிப்பு காட்சியாகவே தெரிகிறது.

சமந்தாவின் அழகும் நடிப்பும் இன்னும் அவர் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் இருப்பார் என்பதை உறுதி செய்கிறது. இயல்பான நடிப்பு, கிராமத்து காஸ்ட்யூம் என சமந்தா இந்த படத்திலும் ஸ்கோர் பெறுகிறார்.

சூரியின் வழக்கமான வசன உச்சரிப்பு எரிச்சலை தந்தாலும், காமெடி இந்த படத்தில் நன்றாக எடுபடுகிறது. 'நாக சைதன்யாவே வந்தாலும் சமந்தாவை தூக்காமல் விடமாட்டேன் என்று சூரி பேசும் வசனத்தின்போது தியேட்டரில் நல்ல கலகலப்பு. அதேபோல் ஊருக்குள் சிறுத்தை புகுந்த காட்சியில் சூரியின் காமெடி அட்டகாசம்

சிம்ரனின் நடிப்பை பார்க்கும்போது நான் திரைப்படம் பார்க்கின்றோமா? அல்லது சீரியல் பார்க்கின்றோமா? என்ற சந்தேகம் வருகிறது. அதிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் சற்றும்
பொருந்தவில்லை. கர்ண கொடூரமாக உள்ளது.

வில்லனாக லால் நடித்துள்ளார். 'சண்டக்கோழி' படத்தில் அற்புதமாக நடித்த நடிகரை இந்த படத்தில் வீணடித்துள்ளனர். அதேபோல் நெப்போலியன் நடிப்பும் இந்த படத்தில் எடுபடவில்லை.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பிரமாதம் என்று சொல்ல முடியாது. பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. பாலசுப்பிரமணியன் கேமிரா, கிராமத்து அழகை அழகாக காட்டுகிறது. இந்த படத்தின் தேவையில்லாத காட்சிகளை எடிட்டர் விவேக் ஹர்சன் கட் செய்திருக்கலாம். ஆனால் அப்படி கட் செய்வதென்றால் முதல் பாதி முழுவதையும் கட் செய்ய வேண்டும்

இயக்குனர் பொன்ராம் இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் தராமல் முழுக்க முழுக்க காமெடியை வைத்தே ஓட்டிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். முதல் பாதி படத்தை பார்க்காமலே இந்த படத்தின் கதை என்ன என்பதை கூறிவிடலாம். முதல் பாதியில் மருந்துக்கு கூட ஒரு வரி கதை கூட இல்லை. இரண்டாம் பாதியில் ஓரளவு கதை தொடங்குகிற போது திடீரென ஒரு மொக்கையான பிளாஷ்பேக் வந்து படத்தின் கொஞ்சம் இருந்த விறுவிறுப்பையும் போக்கி விடுகிறது. ஒரு கேவலமான போர்க்காட்சியை படத்தில் வைத்துவிட்டு 'பாகுபலி'க்கு இணையான போர்க்காட்சி உள்ள படம் என விளம்பரப்படுத்தியதுதான் பெரிய காமெடி

விவசாயிகளின் நிலைமை, நிலம் கையகப்படுத்துதல், வளரி என்ற ஆயுதத்தை முதல் முதலில் பயன்படுத்தியது தமிழன் தான் போன்ற சில காட்சிகள் மட்டும் படத்தின் ஹைலைட். மற்றபடி சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த படம் ஒரு சொதப்பல் ராஜா தான்
[thanks]வெப்துனியா[/thanks]




சீமராஜா - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 14, 2018 7:20 am

சீமராஜா - திரைவிமர்சனம் Pvb4lRT0SEC2tp18rQXV+42002538020_07420af3dc_b_14023
-
சமந்தாவைக் காதலிக்க வைப்பதற்காக சிவகார்த்திகேயன்
போடும் ராமர் வேடம், புறாக்களைக் கண்டுபிடிப்பதற்காக
போடும் வாட்ச் விற்பவர் வேடம், நாயைப் புலி என்று
நம்பவைக்கும் காட்சிகள் என அத்தனையும் ரிப்பீட் என்பதால்
சலிப்பை வரவழைக்கின்றன.

வரலாறு பேசும் கடம்பவேல் ராஜா குறித்த காட்சிகள்
படத்தில் செயற்கையாக உள்ளன.

இதற்கெல்லாம் காரணம் திரைக்கதை என்ற அம்சத்தைப்
பற்றி பொன்ராம் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதுதான்.

பார்த்த படங்களில் இருந்து பழக்கப்பட்ட காட்சிகளே மறுபடி
மறுபடி வருவதால் மசாலா படத்தின் அத்தனை டெம்ப்ளேட்களும்
அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கதாபாத்திரப் படைப்பில் கனத்தைக் கூட்டி, திரைக்கதையில்
கவனம் செலுத்தியிருந்தால் 'சீமராஜா' சிரிக்கவும், ரசிக்கவும்
வைத்திருப்பான்.
-
-------------------
தமிழ்,தி இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2018 4:19 am

“சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!


பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட தொடர் விடுமுறை என்பதால் படத்தின் முதல் கட்ட வசூல் (opening collection) அபாரமாக இருக்கும் என்பதைத் தவிர, படம் வசூல் ரீதியாகக் தோல்வி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண படமாக இதே காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் ‘யூ-டர்ன்’ அற்புதமாக இருக்கிறது என அந்தப் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு சீமராஜாவின் வசூலைப் பாதிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

முதலாவதாக சீமராஜா படம் முழுக்க சிவகார்த்திகேயனை ஏதோ சூப்பர் ஸ்டார் அளவுக்கு, வழக்கமாக விஜய் படங்களில் காட்ட முற்படுவதுபோல் காட்ட இயக்குநர் பொன்ராம் முயற்சி செய்திருக்கிறாரே தவிர, அந்த அக்கறையை கதையிலோ, திரைக்கதையிலோ காட்டவில்லை.

விளைவு? முதல் பாதி படம் முழுக்க ஒரே மொக்கை நகைச்சுவையாக சிவகார்த்திகேயனும், சூரியும் படத்தை நகர்த்த முற்படுகிறார்கள். பொன்ராமின் முந்தைய படங்களில் (வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்) வித்தியாசமான திரைக்கதையின் சூழலும், சம்பவங்களின் பின்னணியும் நகைச்சுவைக் காட்சிகள் எடுபடுவதற்கு உதவி புரிந்தன.

ஆனால், இதிலோ படம் தொடங்கியது முதல் பகைமை பாராட்டும் பக்கத்து ஊர் பெண்ணை விரட்டி விரட்டி சிவகார்த்திகேயன் காதலிப்பதையே திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை படங்களில் இந்த மாவையே அரைப்பார்களோ தெரியாது.

சமந்தா சிலம்பம் சுற்றுகிறார் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. வழக்கம்போல் அழகு பொம்மையாக வந்து போகிறார்.



அடுத்ததாக, இடைவேளைக்குப் பின்னரும் அதே காதல் கதைதான் தொடர்கிறது. அந்தக் கால மன்னராக சிவகார்த்திகேயன் வருவதும், அந்தக் காட்சிகளில் பாகுபலி அளவுக்கு தொழில்நுட்பத்துடன் சண்டைக் காட்சிகள் அமைத்ததும், தேவையில்லாத செலவை ஏற்படுத்தும் திணிப்பு. விவசாய நிலங்களை மேம்பாட்டுக்காக விற்பனை செய்வது என்ற தமிழ் நாட்டின் முக்கியமான நடப்புப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் படக்குழு அதை எத்தனையோ நிகழ்கால சம்பவங்களைக் கொண்டு வடிவமைத்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்கள்.

மீண்டும் நெப்போலியனைப் பார்க்கும் போது, நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனால் அவரை காமெடியாகவும் இல்லாமல், சீரியசாகவும் இல்லாமல் காட்டி, அவரது கதாபாத்திரத்தையே சொதப்பி விட்டார்கள்.

சமந்தாவைக் கவர சிவகார்த்திகேயன் மாறுவேடங்களில் வருவதும் எம்ஜிஆர் காலத்துப் படங்கள் அளவுக்கு மிகப் பழைய உத்திகள். எந்த காலகட்டத்தில் வாழ்கிறீர்கள் பொன்ராம்?



படத்தின் ஒரே ஆறுதல் – கவர்கின்ற அம்சம் – சிம்ரன்! வயதானாலும் கவர்ச்சி குறையவில்லை அம்மணிக்கு. ஆனால், அவர் சில காட்சிகளிலேயே வருவதும், ஒரே மாதிரியான லம்பாடி சண்டை வசனங்களையே திரும்பத் திரும்பப் பேசுவதும் பெரும் குறை. அவரது கதாபாத்திரத்தை இன்னும் நன்கு செதுக்கியிருந்தால், படத்திற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும், படையப்பாவின் நீலாம்பரி, ரம்யா கிருஷ்ணன் போல! அவருக்கு இணையாக வரும் வில்லன் லால் அதட்டலாகப் பேசுகிறாரே தவிர, சிம்ரனுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

படத்தை இரசிக்க வைக்கும் இன்னொரு அம்சம் சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் வழங்கியிருக்கும் ஒளிப்பதிவு. குறையில்லாமல் செய்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு ஆறுதல் பாடல்களும், பின்னணி இசையும்! டி.இமான் நன்றாக உழைத்திருக்கிறார். பாடல்கள் எங்கேயோ கேட்ட தாளத்தை மீண்டும் கேட்பது போல் இருந்தாலும், பிரபலமாகிவிட்டன. பின்னணி இசையில், அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயனைக் காட்டும் காட்சிகளில் ஓவரான சத்தம்! அதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

சூரிக்கு கதாநாயகனோடு இணைந்து வரும் வழக்கமான வேடம் என்றாலும், மனதில் ஒட்டவில்லை! வசனகர்த்தாவும், இயக்குநரும் இணைந்து மொக்கை நகைச்சுவை சம்பவங்களை அமைத்திருப்பதால் சூரியால் சோபிக்க முடியவில்லை. அவருக்கு 3 பெண்டாட்டிகள் என்று ஒரே காட்சியில் காட்டிவிட்டு பின்னர் அதை வைத்தே சில வசனங்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவையில்லாத இணைப்பு! ஒரு காட்சியில் தனது கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பைக் காட்டி கைத்தட்டல் வாங்குகிறார் சூரி.

சிவகார்த்திகேயனுக்கு ஒரு செய்தி! சாதாரண நிலையிலிருந்து இந்த அளவுக்கு உயர்ந்த நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது! கதைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத – கதாநாயகனை பந்தாவாகக் காட்டும் ‘சீமராஜா’ போன்ற படங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களை இன்னொரு ராமராஜனாக்கி விடுவார்கள்!

படம் பார்க்கலாமா என்ற இரசிகர்களின் கேள்விக்கு…

சிவகார்த்திகேயனுக்காக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படம் பார்த்து விட்டு பின்பு ஏன் பார்த்தோம் என்று திட்டப் போகிறீர்களா? அல்லது பார்க்காமலே தவிர்த்து விட்டு நிம்மதியாக இருக்கப் போகிறீர்களா?

இரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.


-இரா.முத்தரசன்





சீமராஜா - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக