புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_m10 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளையார் தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 13, 2018 4:25 pm

 பிள்ளையார்  தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும். Large_101449399
-

ஒருவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், ஒவ்வொரு
விதமான பரவசம்... ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி...
ஒவ்வொரு விதமான உன்னதம்... ஒவ்வொரு விதமான நிறைவு....
இந்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்?
-
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான கேள்வி...
சந்தேகம்.. கோபம்.. வாக்குவாதம்... சிறுபிள்ளைச் சண்டை..
என்றெல்லாம் மனநிலை இருந்தாலும், திரும்பி வரும் போது
மனசெல்லாம் வானவில் வசந்தமும், கண்ணெல்லாம்
நட்சத்திர நேசமும் ததும்பி வழியும் பாக்கிம் எத்தனை
பேருக்கு வாய்க்கும்?
-
அவருடனான பிரார்த்தனையில் எனது குரல் கேட்கும்.
அவருடனான தியானத்தில் அவரது குரல் கேட்கும்.
எனக்கு அவர் தருகின்ற அசரீரி கேட்கும். எனக்கு அவர்
காட்டுகின்ற அக்கறையும் கேட்கும். இன்னும் இன்னுமாகச்
சொல்லலாம்.

சின்னஞ்சிறுமியாக அவரைப் பார்த்த அந்த குழந்தைப்
பொழுதில் எனக்குள் ஒரு வியப்புச் சிரிப்பு தான்
தோன்றியது. ''தொப்பைச்சாமி'' என்ற கிளுகிளுப்பு
எனக்குள்.

அப்புறம் பத்து வயதில் அவருக்கு படைக்கப்படும்
மோதகம், கொழுக்கட்டை இதெல்லாம் எனது ஈர்ப்புக்கான
விஷயங்களாகின. அப்புறம் பருவ வயதில் பாடல்கள்
மூலம் அவரோடு நெருங்கினேன்.

''மங்கலம் அருள்வாய் கணபதியே! உன்
மலரடி பணிந்தோம் குணநிதியே!''
''ஆனை முகத்தினை ஐந்து கரத்தினை
ஓதும் அடியார்க்குக் குறையில்லையே....''


''நாளும் துணை வரும் தும்பிக்கை நாதனை
நம்பிக் கை தொழுதால் நலம் வருமே....''

இந்தப் பாடல்களால் அவரோடு அதிகமாக ஒன்றுதல்
தோன்றியது. ஒருங்கிணைப்பு தோன்றியது.
இந்தப் பாடலை விடவும் இன்னுமொரு பிரார்த்தனையை
எனது அவ்வைப்பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!''


இந்த நாலு வரி தான் நான் இதுவரைக்கும் என்
களஞ்சியத்தில் சேர்த்திருக்கும் சொல்மணி.
எனது பொக்கிஷம்.

ஏதோ கொஞ்சம் நஞ்சமாக ஒரு கை அளவாக இல்லை
என்றாலும் ஒரு சிட்டிகை அளவுக்காவது பேசவும்,
எழுதவும், சிந்திக்கவும், பாராட்டவும், வாழ்த்தவும்,
ஆசீர்வதிக்கவும், வார்த்தைத் தமிழ் வாய்த்திருக்கிறது
என்றால் அதற்கான மூலம் - இந்தப் பிள்ளையார்சுழி தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 13, 2018 4:28 pm


சிறுவயதில் ''உ'' என்று பிள்ளையார்சுழி போட்டு
எழுதத் துவங்கிய பொழுதில் எனக்குத் தெரியவில்லை.
இன்றைக்கு அந்த பிள்ளையார்சுழியால் என்
வாழ்க்கைச்சுழி இப்படி நிறையும் என்பது தெரியாத
வயது அது. அறியாத வயது அது.

பிள்ளையார் எளிமையானவர். ஆனால் வலிமையானவர்.
குளத்தங்கரையில் இருப்பார். கோயிலிலும் இருப்பார்.
அருகம்புல் போதும் என்பார். ஆடம்பரம் வேண்டாம்
என்பார்.

சாணி உருண்டையைப் பிடித்து வைத்தாலும் ஏற்றுக்
கொள்வார். இருபது அடி உயரத்தில் ஆசியாவிலேயே
மிகப்பெரிய ஒற்றை கிரானைட் கல் திருவுருவமாக
சமைத்தாலும் ஏற்றுக் கொள்வார்.

1993ம் ஆண்டு தான் இந்த திருக்கோயில் - புலியகுளம்
விநாயகர் அருள்பாலிக்கும் திருத்தலமானது.

14டன் எடையுள்ள ஒற்றை கிரானைட் கல் திருவுருவமான
பிள்ளையாரை ஒவ்வொரு நாளும் வணங்கியது தான்
கோயம்புத்தூர் மக்களின் நிம்மதிக்கும், கோயம்புத்தூரின்
சுபிட்சத்துக்கும் ஒற்றைக் காரணம்.

ஒவ்வொரு நாளும் புலியகுளம் பிள்ளையாருக்கு
கொண்டாட்டத் திருவிழா தான். வண்டி, வாகனங்கள்
புதிதாக வாங்கி, முதல் பூஜைக்கு இங்கு தான்
வருவார்கள். வாழ்க்கையின் நிறைவான தருணங்கள்,
வாழ்க்கையின் சரிவான தருணங்கள்,
வாழ்வின் மகிழ்ச்சி, வாழ்வின் இகழ்ச்சி, எந்தச்
சூழலையும் சரிசமமாக உணரும் மனப்பக்குவம் இவர்
நமக்குத் தரும் பேரருள்.

அதே போல- ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதான பேரருள்
பெருவிளக்கம் ஈச்சனாரி பிள்ளையார் கோயில்.
பொள்ளாச்சி -கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில்
காக்கும் கடவுளாக ஜொலிப்பவர் அவர்.

''ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே...


இந்த பாடலும் பிள்ளையாரின் வித்தியாசமான யானை
முகமும் எனக்கான வசீகரமாகச் சிறுவயதில் வாய்த்தன.
ஆனால் இப்போது புரிய ஆரம்பிக்கிறது ஒரு பூடகம்.

பிள்ளையாரின் தொப்பை நம் மனசில் பெருத்துச் சுரக்க
வேண்டிய கருணையைச் சொல்கிறது. தானமும்,
கருணையும் பொங்கிப் பெருகி மானுடம் மேம்பட
வேண்டும் என்பதன் குறியீடாக அமைந்துள்ளது.

பிள்ளையாரின் ஒற்றைத் தந்தம் கூர்மையான அறிவும்,
இலக்கும் நமக்கு அவசியம் என்பதன் குறியீடு. அவரது
அங்குசம் நமது ஞானம். நம்மைக் காக்கும் குறியீடு அது.

சரி. யானை எப்படி மூஞ்சுறு மீது பயணிக்க முடியும்?
என்கிற சிறுபிள்ளைத்தனமான எனது பழைய கேள்விக்குப்
பதில் இப்போது உணர்கிறேன். மூஞ்சுறு தன்னைக் கட்டிப்
போடும் அனைத்தையும் அறுத்து எறியும்.

அது போல ஆசை, கோபம், மோகம், பொறாமை, குரோதம்
எல்லாவற்றையும் நாம் அறுத்தெறிந்தால் யானை போல
பிரம்மாண்டமான ஞானம் பெறலாம்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்,
மும்பை சித்தி விநாயகர் கோயில் என்று பிள்ளையார்
தரிசனம் மூலமாக நமது விடியலின் சவுந்தர்யம்
பூரணமாகும். வாழ்வு பொலிவு பெறும்.
-
--------------------------
ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி-தினமலர் (ஆன்மிகம்)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக