புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 06, 2018 8:32 am


-
இளம் பாடலாசிரியர்களில் இளையகம்பனை நான்
அவசியம் குறிப்பிட வேண்டும். அவர் பச்சையப்பன்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவரை
நன்கறிவேன். மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர்.

வெண்பா விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார்.
இன்றைய இளம்பாடலாசிரியர்களில் பிழையில்லாமல்
வெண்பா எழுதக் கூடிய கவிஞர்கள் நானறிந்தவரை
இவரைத் தவிர எவருமிலர்.
-
1982 -ஆம் ஆண்டில் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில்
நான் எழுதிய தொடர் கட்டுரையை அவர்தான் அந்த
அலுவலகத்திற்குச் சென்று கட்டுரைகளைப் படியெடுத்துக்
கொண்டு வந்து கொடுத்தார்.

அது "என் பாடல்கள் சில பார்வைகள்' என்ற தலைப்பில்
புத்தகமாக வெளிவந்தது. ஆகவே அவர் எனது அன்புக்கும்
நன்றிக்கும் உரியவர்.
பல கவியரங்கங்களில் என் தலைமையில் பாடியிருக்கிறார்.
-
திருவண்ணாமலைப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிற
அம்மன் கோயிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும்
பாட்டெழுத வேண்டுமென்று அழைத்துப் போனார்.

அவர் சொன்னார் என்பதற்காக நான் பாடல் எழுதினேன்.
ஆனால் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை.
ஆனாலும் அவர்களால் இயன்ற ஒரு தொகையை எனக்குக்
கொடுக்க வந்தபோது அதை இளைய கம்பனிடமே
கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு
மிகவும் வேண்டியவர். இவர் பாடல் எழுதிய முதல்
திரைப்படம் "உன்னைக்கொடு என்னைத் தருவேன்'
என்ற படம்.

இது 2000-த்தில் வெளிவந்தது.
சூப்பர் குட் பிலிம்ஸ் செüத்திரி தயாரித்த படம்.
--


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 06, 2018 8:33 am


இதயத்தைக் காணவில்லை - அது
தொலைந்தும் நான் தேடவில்லை
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இந்நாள் அனுபவம் புதுசு புதுசு
--

எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அவர் எழுதிய முதற்பாடல்.
இந்தப் படத்தை இயக்கியவர் கவி. காளிதாஸ்.
படம் சுமாராக ஓடியது. பாடல் பிரபலமானது.

இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் "மாயி'
இதில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இரண்டுமே பிரபலமான பாடல்கள்.
எஸ்.ஏ. ராஜ்குமார் தான் இதற்கும் இசை.
படமும் நுறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
--
ஓலெ ஓலெ ஓலெ
ஓலெக் குடிசையில்
ஓட்டகம் வந்திருச்சா
ஊசி ஊசி ஊசி முனையிலே
கப்பலும் வந்திருச்சா
-
மீசை இருக்கிற மாமா - என்
ஆசை இருக்காதா
பூத்துக் கிடக்குது ரோசா - என்
வாசம் அடிக்காதா
என்ற பாடல் ஒன்று.
-
நிலவே வான்நிலவே வான்நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதைஇவள்
வாழ்க்கை யென்று கூறு
-
என்ற பாடல் மற்றொன்று.
இது சரத்குமார் நடித்த படம்.
-
அன்பாலயா நிறுவனம் தயாரித்த "தைப் பொறந்தாச்சு'
என்ற படத்தில் தேவா இசையில்
-
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
மலரே மலரே ராகம் தேடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
நட்சத்திரமே கூடவா
அக்காமகளைப் பாடவா
நான் பாடும் பாடல் அவளல்லவா
-
என்ற இவரது பாடலும் பிரபலமான பாடல்.
படமும் நூறுநாள் ஓடியது. நடிகர் பிரபு நடித்த படம் இது.
-
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் கமலஹாசன்
நடித்த "தெனாலி' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல்
பிரபலமான பாடல்.
படமும் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் பாடல்
இதுதான்.
-
தெனாலி தெனாலி - இவன்
பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி தெனாலி - இவன்
பயந்தா ஊருக்குப் பல ஜோலி
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
"தூத்துக்குடி' என்ற படத்தில் பிரவின்மணி இசையில்
இவர் எழுதிய பாடல் எல்லாராலும் பாடப்படுகிற
பாடலாக மட்டுமல்ல இளைஞர்களை ஈர்க்கும்
பாடலாகவும் இயங்குகிறது.
-
கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துப்புட்டா
மனச்சாட்சி தொலைச்சுப்புட்டா
குண்டூசி மீசை குத்தி
மேலுதடு காய மாச்சு
கிறுக்குப்பய பல்லுக்குப்பட்டு
கீழுதடு சாயம்போச்சு
-
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 06, 2018 8:34 am


நடிகர் விஜய், சிம்ரன் நடித்த "உதயா' படத்தில்
-
பெண் : கெட்டி மேள கெட்டிமேளச் சத்தத்திலே
பூக்கும்பூ என்ன என்ன?
ஆண் : மல்லிகைப் பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மலைப்பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மழலைப் பூ
பெண் : இல்லை இல்லை
என்று தொடங்கி
-
ஆண் : பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது
என்று முடியும் பல்லவி.
-
இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதுவும் இளைய கம்பன் எழுதிய பாடல்தான்
இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். இது எழுதி
இசையமைத்த பாடல்.
-
சபேஷ் முரளி இசையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில்
"சமுத்திரம்' படத்தில் இவர் எழுதிய
-
கண்டுபிடி கண்டுபிடி
கள்வனைக் கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி - ஒரு
சேலை நூலையே கொண்டு - இந்தச்
சீனச் சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு - நீ
காதல் ஊழல் செய்தாயே
-
என்று வித்தியாசமாக எழுதிய பாடல் பலரைக் கவர்ந்து
நிற்கும் பாடல். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரணி ஆகியோர்
இசையிலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார்.

இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை
எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திரைப்பாடல்களுக்காகப்
பல்வேறு தனியார் விருதுகள் பெற்றுள்ளார்.

எம்பில் ஆய்வுக்காகவும், டாக்டர் பட்ட ஆய்வுக்காகவும்
இவர் கவிதை நூல்களைச் சில மாணாக்கர்கள் ஆய்வு
செய்திருக்கின்றனர். அமைதியும் அடக்கமும் உள்ள
கவிஞர் இவர்.
-
----------------------------


படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக