உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!by mohamed nizamudeen Yesterday at 11:58 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் போதை மீள்வது எப்படி?
+2
SK
சிவா
6 posters
மொபைல் போதை மீள்வது எப்படி?
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள் என அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களைப் பயன்படுத்துகிறார்கள். `அதீதமான மொபைல் பயன்பாட்டால் ஒருவருக்கு உடலளவிலும் மனதளவிலும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்’ என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. கண் எரிச்சல், தலைவலி போன்ற உடலளவில் உண்டாகும் பாதிப்பை நாம் எளிதில் உணர்ந்துகொள்கிறோம். ஆனால், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வளவு எளிதாக நாம் உணர்வதில்லை. இந்தப் பிரச்னையை மருத்துவரீதியாகக் கையாளும் வழிகளை விளக்குகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
“அண்மைக் காலமாக இதுபோன்ற பாதிப்பை இளம்பருவத்தினரிடையே அதிகமாகக் காண முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடிவு செய்துவிட்டால், முதலில் மொபைலில் எவற்றையெல்லாம் தேவையில்லாமல் பயன்படுத்துகிறோம் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிடுவது முக்கியமானது. மொபைல் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலலாம். ஆரம்பநிலையில், மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி சுயக்கட்டுப்பாடு மூலமாகவே இதிலிருந்து மீண்டுவிட முடியும். தூங்கும்போதும் தேவையில்லாத நேரத்திலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவது நல்லது.
இரவு உறங்கப்போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிட வேண்டும். சில பெற்றோர், குழந்தைகள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பதற்காக ஸ்மார்ட்போனில் கேம்களையோ, அவர்கள் ரசிக்கும்படியான வீடியோக்களையோ ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களை அறியாமலேயே குழந்தைகளை மொபைலுக்கு அடிமையாக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் கையில் முடிந்தவரை மொபைலைக் கொடுக்காமல் தவிர்ப்பதே சிறந்தது. அப்படிப் பயன்படுத்தினாலும் அவர்களைக் கண்காணிக்கவேண்டியது மிக அவசியம். மனதளவில் பாதிப்பு அதிகமானால், மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
“அண்மைக் காலமாக இதுபோன்ற பாதிப்பை இளம்பருவத்தினரிடையே அதிகமாகக் காண முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடிவு செய்துவிட்டால், முதலில் மொபைலில் எவற்றையெல்லாம் தேவையில்லாமல் பயன்படுத்துகிறோம் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிடுவது முக்கியமானது. மொபைல் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலலாம். ஆரம்பநிலையில், மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி சுயக்கட்டுப்பாடு மூலமாகவே இதிலிருந்து மீண்டுவிட முடியும். தூங்கும்போதும் தேவையில்லாத நேரத்திலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவது நல்லது.
இரவு உறங்கப்போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிட வேண்டும். சில பெற்றோர், குழந்தைகள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பதற்காக ஸ்மார்ட்போனில் கேம்களையோ, அவர்கள் ரசிக்கும்படியான வீடியோக்களையோ ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களை அறியாமலேயே குழந்தைகளை மொபைலுக்கு அடிமையாக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் கையில் முடிந்தவரை மொபைலைக் கொடுக்காமல் தவிர்ப்பதே சிறந்தது. அப்படிப் பயன்படுத்தினாலும் அவர்களைக் கண்காணிக்கவேண்டியது மிக அவசியம். மனதளவில் பாதிப்பு அதிகமானால், மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?
* திரையில் தோன்றும் நோட்டிஃபிகேஷன்கள் நம் கவனத்தை மொபைல் பக்கம் திருப்பக்கூடும். எனவே, அவற்றை ஆஃப் செய்துவிடுவது நல்லது. இரவில் தூங்கும்போது ‘Do Not Disturb’ வசதியைப் பயன்படுத்தலாம்.
ஆப்களும் உதவும்!
மொபைல் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நிறைய ஆப்கள் இருக்கின்றன. இவற்றின் மூலமாக மொபைலில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிய முடியும். மொபைலிலிருக்கும் அடிப்படை வசதிகளை மட்டும் பயன்படுத்த அனுமதித்துவிட்டு மற்றவற்றை லாக் செய்யும் வசதிகளும் சில ஆப்களில் இருக்கின்றன. இந்த ஆப்களில் நேரத்தை செட் செய்துவிட்டால், அந்த நேரத்தில் மற்ற ஆப்களைப் பயன்படுத்த முடியாமல் தடை செய்துவிடும்.
தனிமையைத் தவிர்க்கலாம்!
நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருப்பது மொபைல்போனைப் பயன்படுத்தத் தூண்டக்கூடும். எனவே, முடிந்தவரை தனிமையைத் தவிர்க்கவும்.
அந்த 60 நிமிடங்கள்
ஒரு மனிதன் காலையில் எழுந்த பிறகான 60 நிமிடங்களும், இரவு தூங்குவதற்கு முன்பான 60 நிமிடங்களும் மிக முக்கியமானவை. காலைப் பொழுதின் முக்கியமான நிமிடங்கள்தாம் நம் அன்றைய நாளைத் தீர்மானிக்கின்றன, இரவில் நம் தூக்கத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, அந்த நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். காலையில் 60 நிமிடங்களை உடலுக்குப் புத்துணர்வூட்டவும், இரவில் மனதை அமைதிப்படுத்தவும் செலவழிக்கலாம்.
உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்!
`இந்த நேரத்தில் மொபைலைப் பயன்படுத்தக் கூடாது’ என்று முடிவெடுப்பதோடு, அதற்கான நேரத்தை ஒதுக்கவும் வேண்டும். அந்த நேரத்தில் `அவசரத் தேவையின்றி மொபைலைப் பயன்படுத்துவதில்லை’ என்று முடிவெடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம்.
சோஷியல் மீடியா பயன்பாடு
மொபைலைப் பயன்படுத்தத் தூண்டுவதில் சோஷியல் மீடியாவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இது தவிர மொபைலில் இருக்கும் என்டர்டெயின்மென்ட் ஆப்களும் நம் கவனத்தைத் திசை திருப்பக்கூடும். `மொபைலை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்’ என்ற சந்தேகம் எழுந்தால், சோஷியல் மீடியா தொடர்பான ஆப்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அவற்றிலிருந்து விலகிவிடுவது நல்லது.
பேஸிக் மாடல் பெஸ்ட்!
மொபைல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பேஸிக் மாடல் மொபைலுக்குத் திரும்புவது. நிரந்தரமாகச் சாத்தியமில்லை என்றாலும், சில நாள்களுக்காவது ஒரு மாறுதலுக்காக வசதிகள் குறைவாக உள்ள பேஸிக் மாடல் மொபைல்களைப் பயன்படுத்தலாம்.’’
மொபைல் அடிக்ஷன் பாதிப்பை எப்படிக் கண்டறியலாம்?
* மொபைல்போன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டால் பதற்றமடைவது.
* மொபைலைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் கோபம் வருவது.
* அடிக்கடி தேவையில்லாமல் மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* ஏதாவது செய்திகளைக் தேடிக்கொண்டே இருப்பது.
* மகிழ்ச்சியோ, துக்கமோ உடனே மொபைலைக் கையில் எடுப்பது.
* இரவில் அடிக்கடி மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* மொபைல் அடிக்கடி ரிங் ஆவதைப்போல உணர்வது.
* குடும்பத்தினரிடமிருந்து மொபைலை மறைத்துவைக்க விரும்புவது.
* மொபைலைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் கோபம் வருவது.
* அடிக்கடி தேவையில்லாமல் மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* ஏதாவது செய்திகளைக் தேடிக்கொண்டே இருப்பது.
* மகிழ்ச்சியோ, துக்கமோ உடனே மொபைலைக் கையில் எடுப்பது.
* இரவில் அடிக்கடி மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.
* மொபைல் அடிக்கடி ரிங் ஆவதைப்போல உணர்வது.
* குடும்பத்தினரிடமிருந்து மொபைலை மறைத்துவைக்க விரும்புவது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
பயனுள்ள பதிவு தல
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
நல்ல பயனுள்ள செய்தி.
அமல் படுத்துவது அவரவர் மன உறுதியை பொறுத்தது.
ரமணியன்
அமல் படுத்துவது அவரவர் மன உறுதியை பொறுத்தது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் சில நேரம் வேலைக்கு செல்லும்போது போனை மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுவேன் . அன்று எனக்கு ரொம்ப பிரீயாக இருக்கும். போன் இருந்தால் தான் அடிக்கடி எடுத்து பார்க்கச் சொல்லும்.
நான் சில நேரம் வேலைக்கு செல்லும்போது போனை மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுவேன் . அன்று எனக்கு ரொம்ப பிரீயாக இருக்கும். போன் இருந்தால் தான் அடிக்கடி எடுத்து பார்க்கச் சொல்லும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 601098
இந்த பதிவில் நான் சொன்ன தீர்வு போல முயற்சி செய்தால் பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த பதிவில் நான் சொன்ன தீர்வு போல முயற்சி செய்தால் பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
ஆம் அக்கா, போன் இல்லாமல் வெளியில் சென்றால் நிம்மதியாகச் சென்று வரலாம்.ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி
நான் சில நேரம் வேலைக்கு செல்லும்போது போனை மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுவேன் . அன்று எனக்கு ரொம்ப பிரீயாக இருக்கும். போன் இருந்தால் தான் அடிக்கடி எடுத்து பார்க்கச் சொல்லும்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
SK wrote:பயனுள்ள பதிவு தல
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா
குழந்தைகள் போன் பயன்படுத்துவது ஒரு வகையில் நன்மையாகத்தான் உள்ளது.
என் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரே டேப்பில் பதிந்து கொடுத்திருந்த ஏபிசிடி மற்றும் ரைம்ஸ் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1275916சிவா wrote:SK wrote:பயனுள்ள பதிவு தல
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா
குழந்தைகள் போன் பயன்படுத்துவது ஒரு வகையில் நன்மையாகத்தான் உள்ளது.
என் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரே டேப்பில் பதிந்து கொடுத்திருந்த ஏபிசிடி மற்றும் ரைம்ஸ் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
Sent from Topic'it App
ஆம் அண்ணா இப்போது பல ரைம்ஸ், நிறங்கள் , அல்பபெட்ஸ் சரியாக சொல்கிறாள் என் கவலை
குனிந்தே பார்ப்பதால் கழுத்து வலி
தொடர்ந்து பார்ப்பதால் பார்வை குறைபாடு வரக்கூடாது என்பது தான்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
நீண்ட நேரம் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
Sent from Topic'it App
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மொபைல் போதை மீள்வது எப்படி?
அறிவிப்பு அவசியமான ஒன்றே.. நன்றி நல்ல சேதி>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|