புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
6 Posts - 46%
heezulia
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_m10அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Dec 18, 2009 1:25 pm

[You must be registered and logged in to see this image.]அப்துல் கலாமின் அலை அடிக்கடி வீசுகிறது. ஏன் தெரியுமா? அவர் ஒரு
சரித்திரம் மட்டுமல்ல. சமுத்திரமும் கூட!! அவர் எப்போதும் சொல்லும்
விஷயங்கள் போலவே எப்போதாவது சொல்லும் விஷயங்களும் மிகவும் முக்கியம். தன்
வாழ்க்கை சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து அவர் வெளிப்படுத்தும் அந்த
ரகசியங்களை


சிந்தித்தால் இந்தியா வல்லரசாகும் வரை பொறுக்காமல் நாம் வல்லவர்களாய் வளரலாம்.
இதோ… கலாமின் அந்த மந்திர வாசகங்களிலிருந்து வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரங்களை உணர்வோம்.. வாருங்கள்!!
“கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்”.
இது அப்துல்கலாமின் அறைகூவல்களில் ஒன்று.
இந்த வாசகத்தை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து பாருங்கள்.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எதனை விடவும் நாம் பெரியவர்கள் என்று எத்தனை
முறை உணர்ந்திருக்கிறோம்??
தோல்விகள் வந்தால் துவள்கிறோம். சரிவுகள் வந்தால் சரிகிறோம்.
இழப்புகள் வந்தால் இடிகிறோம். இந்த மனநிலையிலிருந்து மீள்வது எப்படி?
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
கடந்தகாலச் சறுக்கல்கள் பலவற்றின் போது பலமாகப் பதறியிருக்கிறோம்.
ஆனால் நாம் பயந்த அளவுக்கு அடி பலமாக இல்லை. அதிலிருந்து
மீண்டிருக்கிறோம். சிலரை வாழ்வில் இழந்திருக்கிறோம். அதற்குப் பிறகும்
வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாயின?
கடவுளின் குழந்தை என்பதால் நமக்கு நேர்ந்த பல விஷயங்களை விடவும் நாம் பெரியவர்கள். எனவே இந்த மீட்சிகள் நமக்கு நிகழ்ந்திருக்கின்றன.
வேலைக்குத் தொடர்ந்து பேருந்தில் போகிற ஒரு மனிதர் பேருந்தின்
இடிபாட்டில் நசுங்கி பிதுங்கி, தாங்கவே முடியாமல் தவணை முறையில் இரு சக்கர
வாகனம் வாங்குகிறார். வெய்யிலிலும் மழையிலும் பயணம் செய்யும்
சோதனையிலிருந்து மீண்டுவர நான்கு சக்கர வாகனம் வாங்குகிறார். தனக்கு
நேரும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய சவால்களின் போதும், அதைவிடத் தான் பெரியவர்
என்கிற உணர்வு தெரிந்தோ தெரியாமலோ உந்தித்தள்ள தன் வாழ்வை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்.
ஆனால் கண்ணுக்குத் தெரிந்த பெரிய சிக்கல்கள் வருகிறபோது மனிதர்கள்
அச்சத்தாலும் பீதியாலும் தங்கள் அடிப்படையான பலங்களை மறக்கிறார்கள்.
அவர்களே தோல்வி வயப் படுகிறார்கள். எந்தப் பிரச்சினையை விடவும் நாம்
பெரியவர்கள் என்று மட்டையடியாக நம்புவது தலைக்கனம். “கடவுளின் குழந்தை
என்பதால்…” என்ற விழிப்புணர்வு, நம்பிக்கையின் வெளிப்பாடு. நம் சக்தியை
உணர்ந்து, அதே நேரம் நம்மினும் பெரிய சக்தியின் வழிகாட்டுதலையும்
உணர்வதால் பணிவு கலந்த நம்பிக்கையாய் இந்த நல்லுணர்வு பரிணமிக்கிறது.
அப்படியானால், கடவுளின் குழந்தை நாம் என்கிற உணர்வுடன் சவால்களை
சந்திப்பது எப்படி? இதற்கும் கலாம் சொல்லும் ரகசியமே கைகாட்டுகிறது.
“நம்மைப் படைத்த கடவுள், நம் மனங்களிலும் ஆளுமைகளிலும் மகத்தான
சக்திகளையும் திறமைகளையும் பொதித்து வைத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து,
வெளிக்கொணர்ந்து செயல்படுத்த பிரார்த்தனை வழிவகுக்கிறது” என்கிறார்
அப்துல் கலாம்.
பிரார்த்தனை என்பதற்கு ஆங்கிலத்தில் இன்வோகேஷன் என்றொரு சொல் உண்டு.
உள்முகமாய்த் திரும்புதல் என்பதே இதன் பொருள். தனக்குள் பொதிந்திருக்கும்
தெய்வீக சக்தியையும் ஆற்றலையும் தேடிக் கண்டடைதலே பிரார்த்தனை.
ஆன்மீகத்தில் ஆழ்ந்த பலரும் ஆற்றல் பொருந்திய ஆன்ம வீரர்களாகப்
பரிமளித்திருக்கிறார்கள். “நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்” என்று
முழக்கமிட்ட திருநாவுக்கரசரானாலும் சரி. அன்றாடம் பிரார்த்தனைக்
கூட்டங்கள் நிகழ்த்தி தன் ஆன்மபலத்தைப் புதுப்பித்து அந்நியர்களை அலறச்
செய்த காந்தியடிகளானாலும் சரி. பிரார்த்தனையின் பொருளுணர்ந்து செய்தவர்கள்
இவர்கள்.
நம்மில் பலருக்கு பிரார்த்தனை என்றால் கடவுளுக்குக் கோரிக்கை மனு
கொடுப்பது என்பதாகத்தான் பொருள். கோயில்களில் பலரின் பிரார்த்தனைகள்
மூன்று வாசகங்கள்தான் என்பார் சத்குரு ஜகி வாசுதேவ். “அது கொடுப்பா! இது
கொடுப்பா! காப்பாத்துப்பா!” என்ற மூன்று வாசகங்களுடன் வழிபடப் போகிறவர்கள்
அநேகம் என்பது அவரின் கருத்து.
பிரார்த்தனையை நம்மிடம் இருக்கும் பலங்களைக் கண்டுணரும் மார்க்கங்களாக
ஆக்கித் தருபவை யோகம், தியானம் ஆகியவை. நவீன உலகில் இவை செல்வாக்கு பெற்று
வருவது மிகவும் ஆக்கபூர்வமான அம்சம்.
இந்த வரிசையில் கலாம் சொல்லும் சொல்லும் இன்னொரு வாழ்க்கை ரகசியம்.
நம் குழந்தைகள் நலனை மனதில் கொண்டது. “நம் குழந்தைகளின் நாளைகளுக்காக,
நாம் நம் இன்றுகளைத் தியாகம் செய்வோம்” என்கிறார் கலாம்.
நம்மில் பலருக்கு குழந்தைகளை கவனிப்பதென்றால்.. அவர்களை மருத்துவரிடம்
அழைத்துப் போவதும் டியூசனுக்கு அழைத்துப் போவதும்தான். அவர்களின்
விருப்பங்கள், திறமைகள், தேடல்கள் ஆகியவற்றுக்காக நேரத்தையும் கவனத்தையும்
செலவு செய்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.
இந்தச் சின்ன விஷயத்தில் தொடங்கி நாளைய தலைமுறைக்காக மரம் வளர்ப்பது,
விலங்குகளை காப்பது போன்ற விழிப்புணர்வுகள் வரை அடுத்த தலைமுறைக்காக
ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை.
இன்று குழந்தைகள் நலன் கருதி தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட தியாகம்
செய்யப் பலரும் தயாராக இல்லை. கலாம் சொல்லும் இந்த ரகசியம் காலத்தின்
கட்டாயம்.
இதுபோல் பலவற்றில் ஈடுபடுகிற மனிதர்கள் கூட காலப்போக்கில்
சோர்வடைகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “என்ன செஞ்சு என்ன?
நம்ம செயல்களுக்கு யாருமே துணை கிடையாது” என்பதுதான். இந்த சலிப்பாலேயே
பலரும் தங்கள் சிறகுகளை சுருக்கிக் கொள்கிறார்கள். இதற்கு அப்துல்கலாம்
சொல்லும் சூத்திரம் மிக அற்புதமானது. “ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். நாம்
யாருமே தனியாக இல்லை. இந்த பிரபஞ்சமே நம்முடன் நட்பு கொண்டிருக்கிறது.
கனவு காணவும் செயல்படவும் தயாராய் இருப்பவர்களுக்கு மொத்தப் பிரபஞ்சமே
துணை நிற்கிறது” என்கிறார் கலாம்.
பிரபஞ்சத்தை விட பெரிய சக்தி நமக்குத் துணையாக வரமுடியுமா என்ன?
நம்முடைய சக்தியை உணர்ந்து, நம்முடைய கடமையை அறிந்து நம்முடைய இலக்குகளை
நோக்கி உழைத்தால் வாழ்க்கை வசப்படும் இதுவே கலாம் சொல்லும் வெற்றி
ரகசியம்!! பெயர் பொறாமை.



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Fri Dec 18, 2009 3:52 pm

"கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்"

ஆம் , நாம் ஒவ்வொரு முறை பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது ,அதிலேய உழன்று,வருத்தப்பட்டு , பிரச்னைக்கான தீர்வு காண மறுக்கிறோம் . சற்றே பிரசனைகளை விட்டு வெளியே நின்று அதை எதிர் நோக்கின் , தீர்வுகள் வெகு எளிதாய் கிடைக்கும் என்பதை நம்மில் பலர் உணரவில்லை . கடவுள் நம்மால் தாங்க கூடிய பிரசனைகளை மட்டுமே நமக்கு தருகிறார் .நமது பலத்தை நமக்கு காட்ட எத்தனிக்கிறார் அவ்வளவே .

“நம்மைப் படைத்த கடவுள், நம் மனங்களிலும் ஆளுமைகளிலும் மகத்தான
சக்திகளையும் திறமைகளையும் பொதித்து வைத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து,
வெளிக்கொணர்ந்து செயல்படுத்த பிரார்த்தனை வழிவகுக்கிறது”

பிராத்தனை என்பது நம் மனதுக்கு நாமே தரும் ஊக்க மருந்தினை போன்றது . எண்ணங்கள் வலுப்படும் பொது அவை செயல்கள் ஆகின்றன .

“நம் குழந்தைகளின் நாளைகளுக்காக,நாம் நம் இன்றுகளைத் தியாகம் செய்வோம்”

குழந்தைகள் நம்மிடம் எதிர்ப்பது ,நாம் அவர்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும் என்பதுதான் . அதை செய்து விட்டாலே போதும் . அவர்களை மிகச்சரியான வழியில் அழைத்து செல்ல இயலும் . அதற்காக நாம் தொலைகாட்சியை தியாகம் செய்தாலே போதும் .

“ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். நாம்
யாருமே தனியாக இல்லை. இந்த பிரபஞ்சமே நம்முடன் நட்பு கொண்டிருக்கிறது.
கனவு காணவும் செயல்படவும் தயாராய் இருப்பவர்களுக்கு மொத்தப் பிரபஞ்சமே
துணை நிற்கிறது”

தனி ஒரு மனிதனில் தோன்றும் எண்ணமே பல சரித்திரங்களை புரட்டி போட்டு இருக்கிறது , இங்கே எவரும் தனிமையில் இல்லை . நீங்கள் நிகழ்த்த போகும் சாதனைக்காக நீங்கள் யோசிக்க தனித்து விட பட்டுள்ளீர்கள் . நீங்கள் சாதிக்க தொடரும் பொது ,இவ்வையகமே உங்கள் பின்னல் ,உறுதுணையாக வரும் என்பதை மறவாதீர்.


அருமையான உன்னதமான வரிகள் தோழி அபி மிக்க நன்றி .

இதில் எனக்கு தோன்றிய கருத்துகளையும் பதிவிட்டுளேன் , தவறெனில் மன்னிக்கவும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 18, 2009 5:46 pm

நல்ல தகவல்.. [You must be registered and logged in to see this image.]

நல்ல வழிக்கட்டி அப்துல் கலாம் ஜயாவை சொல்லாம்... [You must be registered and logged in to see this image.]
நன்றி அபி& செந்தில் குமார்.... [You must be registered and logged in to see this image.]

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Dec 18, 2009 10:29 pm

நல்ல தகவல்.நன்றி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Dec 22, 2009 8:28 pm

அருமையான பதிவு, நன்றி அபி!



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக