புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:54 pm

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! 1eacc210
கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வடலூர் வழியாகச் செல்லும் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழைமையான காளி கோயில் அருகே கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடைக்கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியை ஆத்தூர் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா.கோமகன் ஆகியோர் கண்டறிந்தனர்.
காளி கோயில்: வடலூர் காளி கோயிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பமானது 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட நீள் செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
சிலையின் தலைப் பகுதியானது ஜடாமகுடத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் கல்மணிகளால் அழகுபடுத்தப்பட்ட நெற்றிச் சுட்டியும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஹாரம் போன்ற அணிகலன்களும், கைகளில் காப்பும், மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீர சங்கிலியும் காணப்படுகிறது. மேலும், கொற்றவையின் முகம் நீள் வட்ட வடிவில் சதைப் பற்றுடன் சாந்த நிலையில் காட்சியளிக்கிறது. இந்தச் சிற்பத்தின் தோள் பகுதி அகன்றும், இடை சிறுத்தும் உள்ளது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:55 pm

கொற்றவையின் வலது கரங்கள் மேலிருந்து கீழாக சக்கரம், வாள், கபாலம் போன்றவைகளை தாங்கி உள்ளன.
ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்கள் சங்கு, வில், கேடயம் போன்ற ஆயுதங்களை தாங்கியவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முதுகுப்புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது.
கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக் கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, எருமைத் தலை மீது ஒரு காலை நிலையாக ஊன்றியும், மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறும் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது.
இந்தச் சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப் பாணியும், உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப் பாணியின் தாக்கமும் உள்ளதால் இதன் காலம் கி.பி. 9 - 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தங்களது கலைப் பாணியில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப் பாணியை உருவாக்கினர் என்பதற்கு இந்தச் சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:56 pm

கட்டடப் பகுதிகள்: வடலூர் காளி கோயிலில் இருந்து கிழக்கு - மேற்காக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டுப் பகுதி கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து 27 ஷ் 17 ஷ் 7 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் வெளிப்பட்டன. இதே அளவுள்ள செங்கல்கள் தாராசுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன. மேலும், காளி கோயிலின் கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப் பகுதி வெளிப்பட்டது. இதில் 24 ஷ் 12 ஷ் 4 செ.மீ. அளவுள்ள செங்கல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதே அளவுள்ள செங்கல்கள் பழையாறை அகழாய்விலும் கண்டறியப்பட் டுள்ளன. மேலும், தரைத் தளத்தை ஒட்டியவாறு வடக்கு - தெற்காக 2 அடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளத்திலிருந்து இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற பானையோடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளன. மேலும் காளி கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு செய்ததில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:56 pm

சோழர் கால நாணயங்கள்: வடலூர் காளி கோயிலின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வில், மண்ணின் மேற்பரப்பிலிருந்து இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட 12 செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்களின் முன் பகுதியில், நிற்கும் மனித உருவமும் அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே "ஸ்ரீராஜராஜ' என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை ஈழக்காசு என்று அழைப்பர்.
இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டது. கி.பி. 985 முதல் கி.பி.1014-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மாமன்னராக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இந்தப் பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை, கீழூர் ஆகிய கிராமங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
மேலும் வடலூரைப் போன்று அதைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய், சந்தவெளிப்பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக