புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 8%
heezulia
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:02 pm


  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு 201805231506593038_Shoot-at-Tuticorin-today-One-killed-5-people-were-injured_SECVPF
--

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து பலர்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ
மனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில்
பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய
எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை
கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும்
கலைத்தனர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி
வருபவர்களிடம் மதுரை டிஐஜி பிரதீப்குமார் பேச்சுவார்த்தை
நடத்தினார். தற்போது தூத்துக்குடி கலவரத்தில்
உயிரிழந்தோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும்
பணி தொடங்கியது.

4 நீதிபதிகள் முன்னிலையில், 6 பேர் கொண்ட மருத்துவக்குழு
பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி
தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார்
கண்ணாடிகள் உடைந்தன.

அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்
பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள்
குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு
மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2 முறை வானை
நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு
வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து
தப்பியோடினர் போராட்ட மக்கள்.

சாலையோரமிருந்த வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும்
பதட்ட நிலையை அடைந்துள்ளது. பின் வந்த தீயணைப்பினர்
போராடி தீயை அணைத்தனர்.

வாகனம் தீ வைக்கப்பட்டதையொட்டி தூத்துக்குடி
பிரையண்ட் நகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 50க்கும்
மேற்பட்ட வாகனத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர்.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொது
இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம்
எச்சரிக்கை செய்தனர்.

தூத்துக்குடி அண்ணாநகரில் போராட்டக்காரர்கள் மீது
துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர்
உயிரிழந்துள்ளார்.
-
---------------------------
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:05 pm

‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கடும் கண்டனம்

-
‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
என முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கண்டனம்
தெரிவித்து உள்ளார்.
-
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் நாம்
அனைவரும் விழித்துக்கொள்வதற்காக நிகழ்ந்ததாக
இருக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான வழியில்
போராட்டம் நடத்திய மக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டு
இருக்கிறார்கள்.

இது வேதாந்தாகுழுமத்தின் ஆப்ரேஷன். குஜராத் மாடல்
போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் இருக்கிறது.
சங்பரிவார் அமைப்புகளுக்காக, அதிமுக தன்னுடைய
மன்னிப்புகளை கேட்டுக்கொள்வது போல் தெரிகிறது
என குறிப்பிட்டு உள்ளார்.
-
-------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:05 pm

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு 201805231940564170_Tuticorin-incident-should-be-a-wakeup-call-for-all-of-us_SECVPF

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:08 pm

கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை
பயன்படுத்தியது ஏன்? ஸ்டாலின் சரமாரி கேள்வி
-



சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய
மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற
போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி
சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு
வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதில் துப்பாக்கி சூடு
விவகாரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம்
சாட்டப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
வரிசையான கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பி உள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது
யார்? கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை
பயன்படுத்தியது ஏன்? எந்த சட்டத்தின் கீழ் இது
அனுமதிக்கப்பட்டது?

அபாயகரமான காயங்களை தவிர்க்கும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்
புல்லட்கள் பயன்படுத்ததாதது ஏன்? துப்பாக்கி சூடு நடத்துவதற்கு
முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்?.


ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை
பாதுகாக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்ததாது ஏன்?

மாநில உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான்
துரதிஷ்டவசமான உயிரிழப்பிற்கு காரணம் என கூறுவது மிக
சரியானதா? உளவுத்துறை போலீஸ் மற்றும் முதல்-அமைச்சகத்திற்கு
நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா?

11 தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதில் பொறுப்பு
யார்? சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்த டிஜிபி மீது
தமிழக அரசு நடவடிக்கையை எடுக்குமா?

இவ்விவகாரத்தில் ஒட்டுமொத்த சம்பவத்தில் தன்னுடைய பொறுப்பு
குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிப்பாரா? ஸ்டெர்லைட்
போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா? என வரிசையான கேள்விகளை
மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளார்.
-
------------------------
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:11 pm


துப்பாக்கி சூடு: ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய
ப.சிதம்பரம் என்ன பதில் சொல்ல சொல்லப்போறிங்க
- சுப்பிரமணியசாமி

-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட்டில்
சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம்
பதில் சொல்ல வேண்டும் என பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியசாமி
கேட்டுள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் ப.சிதம்பரம்
இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதற்காக சம்பளமும் வாங்கி
இருக்கிறார் என்பதற்கான எல்லா ஆவணங்களும் உள்ளன.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பதில் சொல்ல
வேண்டும் என சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:14 pm



போராட்டம் குறித்து வதந்திகள் சமூக
வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்
இணைய சேவையை முடக்கி வைக்க, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.

இன்று மே-23-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரையில் 5 நாட்கள்
மொபைல் போனிலும் இணைய சேவையை துண்டிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:18 pm

தூத்துக்குடி:2 ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணை
--
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து
விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் தூத்துக்குடியில்
முகாமிட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி
மற்றும் டேவிதார் ஆகியோர் தூத்துக்குடி சென்றுள்ளனர்.
-
---------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:20 pm


தூத்துக்குடியில் கமல் மீது வழக்குப்பதிவு


தூத்துக்குடி :
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று
வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு
சென்று கமல் சந்தித்தார்.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற
நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
-
-----------------------
தினமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக