புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
Page 19 of 19 •
Page 19 of 19 • 1 ... 11 ... 17, 18, 19
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P100bnew](https://image.vikatan.com/av/2016/10/ytjjzj/images/p100bnew.jpg)
"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P100a](https://image.vikatan.com/av/2016/10/ytjjzj/images/p100a.jpg)
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
"வீரயுக நாயகன் வேள் பாரி"
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P100bnew](https://image.vikatan.com/av/2016/10/ytjjzj/images/p100bnew.jpg)
"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P100a](https://image.vikatan.com/av/2016/10/ytjjzj/images/p100a.jpg)
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
"பறம்பின் குரல்" என்றென்றும் ஒலிக்கும்.. ஆனால் "முற்றும்" என வார்த்தையை மனம் ஏற்க மறுக்கின்றது ...
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
வேள்பாரியின் காவியம் நீண்ட காலத்துக்கு மறக்காது. உயிர் உள்ள வரை நெஞ்சத்தின் எதாவது ஒரு மூலையில் கண்டிப்பாக இருக்கும்.
முடிவு மிகச்சிறப்பாக உள்ளது.
இப்பெரும் காவியத்தை எழுதிய சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முடிவு மிகச்சிறப்பாக உள்ளது.
இப்பெரும் காவியத்தை எழுதிய சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
- பிரபாகரன் ஒற்றன்பண்பாளர்
- பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 1f62d](https://2img.net/i/fa/twemoji/36x36/1f62d.png)
- மல்லிகார்ஜுன்புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 08/10/2018
எமது ஊண் கடந்து உயிர் கலந்த வேள் பாரி முடிந்தது கண்டு கண்ணிர் சிந்துகிறேன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
1990-ம் ஆண்டில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, மதுரை தியாகராயர் கல்லூரி ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. ‘மாமூலனார்’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சங்கப் புலவர் மாமூலனாரின் படைப்புகளைத் தெரிந்துகொள்ள தொகைநூற்களுக்குள் நுழைந்தேன். மாமூலனாரின் கவிதைகளின் தனித்துவத்தைக் கண்டறியும் தேடல் நெடுநாள் நீடித்தது. சுமார் 120 பக்க ஆய்வுக் கட்டுரையை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரையே பரிசினைப் பெற்றது.
பரிசும் அது ஏற்படுத்திய மகிழ்வும் சிறிது காலத்திலேயே உதிர்ந்துவிட்டன. ஆனால், சங்க இலக்கியத்துக்குள் முழுமையாக மூழ்கிக்கிடந்த அந்த நாள்களும் அது உருவாக்கிய மனஉலகமும் தழைத்துக்கொண்டே இருந்தன. கடலைச் செடியைப்போல ஒவ்வொரு கவிதைக்குள்ளும் எத்தனையோ கதைகள் செழித்துக் கிடக்கின்றன. கதைகளின் பேருலகமே சங்கக் கவிதைகள்தாம் என்று தோன்றியது.
சுமார் பத்தாயிரம் ஆண்டுக் கால நினைவுகளின் தொகுப்பு சங்க இலக்கியம் என்று மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். இப்பெரும் நினைவுப் பரப்புக்குள் நுழைந்தால், வெளிவருதல் எளிதல்ல. நீர் எவ்வளவு விரைவாக ஓடினாலும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுதல் அதன் விதி. அப்படித்தான் சங்க இலக்கியத்துக்குள் நாம் ஓடி மறைவதும்.
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P40a_1543390318](https://2img.net/h/image.vikatan.com/thadam/2018/12/mgqwyz/images/p40a_1543390318.jpg)
நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் சங்க இலக்கியத்தைப் படித்துக்கொண்டிரு ந்தபோது, ஆச்சர்யமான குறிப்பொன்று கண்ணிற்பட்டது. ‘சங்கக் கவிதைகளில் அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்திய புலவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மாமூலனார்; மற்றொருவர் பரணர்’.
சங்க இலக்கியம் சார்ந்த எனது பயணத்தில் இலக்கியம், வரலாறு, ஆய்வு எனும் மூன்று புள்ளிகளும் தற்செயலாக இணைந்தே தொடங்கியுள்ளன. கல்லூரிக் காலத்தில் தொடங்கிய இப்பயணம், வெவ்வேறு கோணங்களில் விரிவடைந்தது. சங்க இலக்கியம் பற்றிய மிகச்சிறந்த ஆய்வுகள் எனது சிந்தனையை மேலும் வளர்த்தெடுத்தன. அவற்றில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டியவர்கள்
பேரா.கைலாசபதியும் பேரா.சிவத்தம்பியும் ஆவர். சங்க இலக்கியத்தை அணுக வேண்டிய அடிப்படைப் பார்வையை என்னுள் உருவாக்கிய மூலவர்கள் இவர்களே.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ்விலக்கியம், 1887-ம் ஆண்டில் சி.வை.தாமோதரனார் கலித்தொகையைப் பதிப்பித்ததிலிருந்து அச்சு யுகத்துக்குள் நுழைந்தது. அடுத்த சில பத்தாண்டுகளில் சங்க இலக்கியம் அனைத்தும் அச்சேறின. அஃது அன்றைய அறிவுலகத்தில் பெருந்தாக்கத்தை உருவாக்கியது. குறிப்பாகச் சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட மன்னர்கள், புலவர்கள் பற்றிய செய்திகள் முதன்முறையாகப் பொதுச்சமூகத்துக்குத் தெரியவந்தன. இந்தப் பின்னணியில்தான் 1906-ம் ஆண்டு ரா.இராகவைய்யங்கார் ‘பாரி என்ற வள்ளலின் வரலாறு’ எனும் தலைப்பில் செந்தமிழ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றினை எழுதினார். பாரியைப் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரை இதுவே.
சங்க காலத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்ட பாரி, நவீன கால உரைநடைக்குள் வந்துசேர்ந்தான். அடுத்த சில ஆண்டுகளில், திருக்கோவிலூரில் பெண்ணையாற்றங்கரையிலுள்ள வீரட்டானேச்சுரர் கோயிலில் கல்வெட்டு ஒன்றை கோபிநாதய்யர் கண்டறிந்தார். அதுவும் ‘செந்தமிழ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பாரி மகளிரை மணமுடித்துக் கொடுத்த பின், கபிலர் தீப்பாய்ந்து இறந்த செய்தியைச் சொல்லும் கல்வெட்டு அது. ராஜராஜ சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது.
அதாவது, சங்க காலத்தில் வாழ்ந்த பாரி, கபிலரைப் பற்றி அவர்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ராஜராஜ சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது. அதற்குப் பின், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அது கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பானது, தமிழ் அறிஞர்களுக்குப் பேரூக்கத்தைக் கொடுத்தது. பாரி, கபிலர் ஆகியோர் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரலாற்று ஆதாரமாக இக்கல்வெட்டு பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1913-ம் ஆண்டு வேளிர் வரலாற்றை மு.இராகவையங்கார் எழுதினார். 1915-ம் ஆண்டு, வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சியை நா.மு.வேங்கடசாமி நாட்டார் வெளியிட்டார்.
அதன்பின், கபிலரின் வரலாற்றை 1921-ம் ஆண்டு நா.மு.வேங்கடசாமி நாட்டாரும் 1936-ம் ஆண்டு வேங்கடராஜுலு ரெட்டியாரும் எழுதினர். இப்படியாக பாரி, கபிலரின் வரலாறுகள் எழுதப்படத் தொடங்கின.
தொடக்கக் காலத்தில் ரா.இராகவையங்கார், கி.வா.ஜகந்நாதன், ஐயன்பெருமாள், கு.ராஜவேலு, அ.மு.பரமசிவானந்தம் ஆகியோர் பாரியைப் பற்றிய நூல்களை எழுதினர். இந்நூல்கள் அனைத்தும் 1960-ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இவர்கள் காலத்தில் சங்க இலக்கியம் பற்றி விரிவான ஆய்வுகள் வெளிவரவில்லை. சங்க இலக்கியம் பொதுவெளியில் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட அறிமுக நூல்களே இவை. ரா.இராகவைய்யங்காரின் படைப்பு மட்டுமே இவற்றில் விதிவிலக்கு.
அதன்பின், ஐம்பதாண்டுக் காலம் உருண்டோடிவிட்டது. இக்காலத்தில், சங்க இலக்கியம் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அகராதிகளும் பொருட் களஞ்சியங்களும் வெளிவந்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் தொல்லியல், மானுடவியல் ஆய்வுகள் சங்கப் பாடல்களைப் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் செல்கின்றன.
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P40_6_1543390332](https://2img.net/h/image.vikatan.com/thadam/2018/12/mgqwyz/images/p40_6_1543390332.jpg)
இனக்குழு சமூகவாழ்வு முடிந்து, உடமைச் சமூகம் மேலெழுகின்ற காலத்தை மிகத் துல்லியமாகவும் மிக விரிவாகவும் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம். எண்ணற்ற இனக்குழுக்கள், அவற்றின் அடையாளங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பேசும் சங்க இலக்கியமானது, ஒருகட்டத்தில் வேந்தர்கள், வேளிர்கள் என்ற இரு புள்ளியில் வந்து நிற்கிறது. அதன்பின், வேளிர்களை வென்று மூவேந்தர்கள் மட்டுமே நிலைகொள்கின்றனர்.
இரு சமூக அமைப்புகள், அவை உருவாக்கிய இரு வகையான விழுமியங்கள் இவற்றுக்கு இடையில், பல நூறு ஆண்டுகள் நடந்த மோதல்களைச் சங்க இலக்கியப் பரப்பெங்கும் பார்க்க முடியும். இம்முரண்பாடுகள் உக்கிரத்தோடு மோதிய நிகழ்வின் பேரடையாளம்தான் வேள்பாரி. ஒருவகையில் வேள்பாரி, சங்க இலக்கியக் காலத்தின் மையக் குறியீடு என்றே சொல்ல முடியும்.
இரு சமூக அமைப்புகளும் அதனதன் குணத்துடனும் தன்மையுடனும் அதனதற்கேயுரிய விழுமியங்களுடனும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இம்மோதல், தமிழ் நிலமெங்கும் நடக்கிறது. இம்மோதலின்மூலம் அடுத்தகட்டத்துக்குச் சமூகம் தன்னை உருமாற்றிக்கொள்கிறது. அம்மாற்றம் நிகழும்போது, தன்மீது ஒட்டியிருந்த பொன்துகள்களையும் உதிர்த்துவிட்டுத்தான் நகர்கிறது.
சமூக வரலாறு உதிர்த்துவிட்டு நகர்ந்த அந்தப் பொன்துகள்கள், அப்படியே மண்ணுள் புதையுண்டு மங்கிவிடுவதில்லை. ஒளிமின்னும் அந்தப் பொன்துகள்களை இலக்கியம் தனதாக்கிக்கொள்கிறது. மானுட அறிவுச் சேகரத்தின் வசீகர ஒளியை அது என்றென்றும் மங்கவிடாமல் பாதுகாக்கிறது. சமூக அசைவியக்கங்களையெல்லாம் கடந்து, காலத்தின் நெற்றிப்பட்டயத்தில் அதைப் பொறித்துவைத்து அழகுபார்க்கிறது.
அதனால்தான் பாரி, அழிந்த சமூக அமைப்பின் அடையாளமாக இல்லாமல், அழியக் கூடாத மனிதப் பண்பின் பேரடையாளமாக என்றென்றும் போற்றப்படுகிறான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றில், நூறு, இருநூறு ஆண்டுக்கால இடைவெளியில் ஏதாவது ஒரு புலவன் பாரியைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டே இருந்திருக்கிறான்.
இவ்வறிவு மரபின் தொடர்ச்சிதான் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’.
- சு.வெங்கடேசன், ஓவியம் : பிரேம் டாவின்ஸி
பரிசும் அது ஏற்படுத்திய மகிழ்வும் சிறிது காலத்திலேயே உதிர்ந்துவிட்டன. ஆனால், சங்க இலக்கியத்துக்குள் முழுமையாக மூழ்கிக்கிடந்த அந்த நாள்களும் அது உருவாக்கிய மனஉலகமும் தழைத்துக்கொண்டே இருந்தன. கடலைச் செடியைப்போல ஒவ்வொரு கவிதைக்குள்ளும் எத்தனையோ கதைகள் செழித்துக் கிடக்கின்றன. கதைகளின் பேருலகமே சங்கக் கவிதைகள்தாம் என்று தோன்றியது.
சுமார் பத்தாயிரம் ஆண்டுக் கால நினைவுகளின் தொகுப்பு சங்க இலக்கியம் என்று மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். இப்பெரும் நினைவுப் பரப்புக்குள் நுழைந்தால், வெளிவருதல் எளிதல்ல. நீர் எவ்வளவு விரைவாக ஓடினாலும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுதல் அதன் விதி. அப்படித்தான் சங்க இலக்கியத்துக்குள் நாம் ஓடி மறைவதும்.
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P40a_1543390318](https://2img.net/h/image.vikatan.com/thadam/2018/12/mgqwyz/images/p40a_1543390318.jpg)
நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் சங்க இலக்கியத்தைப் படித்துக்கொண்டிரு ந்தபோது, ஆச்சர்யமான குறிப்பொன்று கண்ணிற்பட்டது. ‘சங்கக் கவிதைகளில் அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்திய புலவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மாமூலனார்; மற்றொருவர் பரணர்’.
சங்க இலக்கியம் சார்ந்த எனது பயணத்தில் இலக்கியம், வரலாறு, ஆய்வு எனும் மூன்று புள்ளிகளும் தற்செயலாக இணைந்தே தொடங்கியுள்ளன. கல்லூரிக் காலத்தில் தொடங்கிய இப்பயணம், வெவ்வேறு கோணங்களில் விரிவடைந்தது. சங்க இலக்கியம் பற்றிய மிகச்சிறந்த ஆய்வுகள் எனது சிந்தனையை மேலும் வளர்த்தெடுத்தன. அவற்றில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டியவர்கள்
பேரா.கைலாசபதியும் பேரா.சிவத்தம்பியும் ஆவர். சங்க இலக்கியத்தை அணுக வேண்டிய அடிப்படைப் பார்வையை என்னுள் உருவாக்கிய மூலவர்கள் இவர்களே.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ்விலக்கியம், 1887-ம் ஆண்டில் சி.வை.தாமோதரனார் கலித்தொகையைப் பதிப்பித்ததிலிருந்து அச்சு யுகத்துக்குள் நுழைந்தது. அடுத்த சில பத்தாண்டுகளில் சங்க இலக்கியம் அனைத்தும் அச்சேறின. அஃது அன்றைய அறிவுலகத்தில் பெருந்தாக்கத்தை உருவாக்கியது. குறிப்பாகச் சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட மன்னர்கள், புலவர்கள் பற்றிய செய்திகள் முதன்முறையாகப் பொதுச்சமூகத்துக்குத் தெரியவந்தன. இந்தப் பின்னணியில்தான் 1906-ம் ஆண்டு ரா.இராகவைய்யங்கார் ‘பாரி என்ற வள்ளலின் வரலாறு’ எனும் தலைப்பில் செந்தமிழ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றினை எழுதினார். பாரியைப் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரை இதுவே.
சங்க காலத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்ட பாரி, நவீன கால உரைநடைக்குள் வந்துசேர்ந்தான். அடுத்த சில ஆண்டுகளில், திருக்கோவிலூரில் பெண்ணையாற்றங்கரையிலுள்ள வீரட்டானேச்சுரர் கோயிலில் கல்வெட்டு ஒன்றை கோபிநாதய்யர் கண்டறிந்தார். அதுவும் ‘செந்தமிழ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பாரி மகளிரை மணமுடித்துக் கொடுத்த பின், கபிலர் தீப்பாய்ந்து இறந்த செய்தியைச் சொல்லும் கல்வெட்டு அது. ராஜராஜ சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது.
அதாவது, சங்க காலத்தில் வாழ்ந்த பாரி, கபிலரைப் பற்றி அவர்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ராஜராஜ சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது. அதற்குப் பின், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அது கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பானது, தமிழ் அறிஞர்களுக்குப் பேரூக்கத்தைக் கொடுத்தது. பாரி, கபிலர் ஆகியோர் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரலாற்று ஆதாரமாக இக்கல்வெட்டு பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1913-ம் ஆண்டு வேளிர் வரலாற்றை மு.இராகவையங்கார் எழுதினார். 1915-ம் ஆண்டு, வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சியை நா.மு.வேங்கடசாமி நாட்டார் வெளியிட்டார்.
அதன்பின், கபிலரின் வரலாற்றை 1921-ம் ஆண்டு நா.மு.வேங்கடசாமி நாட்டாரும் 1936-ம் ஆண்டு வேங்கடராஜுலு ரெட்டியாரும் எழுதினர். இப்படியாக பாரி, கபிலரின் வரலாறுகள் எழுதப்படத் தொடங்கின.
தொடக்கக் காலத்தில் ரா.இராகவையங்கார், கி.வா.ஜகந்நாதன், ஐயன்பெருமாள், கு.ராஜவேலு, அ.மு.பரமசிவானந்தம் ஆகியோர் பாரியைப் பற்றிய நூல்களை எழுதினர். இந்நூல்கள் அனைத்தும் 1960-ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இவர்கள் காலத்தில் சங்க இலக்கியம் பற்றி விரிவான ஆய்வுகள் வெளிவரவில்லை. சங்க இலக்கியம் பொதுவெளியில் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட அறிமுக நூல்களே இவை. ரா.இராகவைய்யங்காரின் படைப்பு மட்டுமே இவற்றில் விதிவிலக்கு.
அதன்பின், ஐம்பதாண்டுக் காலம் உருண்டோடிவிட்டது. இக்காலத்தில், சங்க இலக்கியம் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அகராதிகளும் பொருட் களஞ்சியங்களும் வெளிவந்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் தொல்லியல், மானுடவியல் ஆய்வுகள் சங்கப் பாடல்களைப் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் செல்கின்றன.
![வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 19 P40_6_1543390332](https://2img.net/h/image.vikatan.com/thadam/2018/12/mgqwyz/images/p40_6_1543390332.jpg)
இனக்குழு சமூகவாழ்வு முடிந்து, உடமைச் சமூகம் மேலெழுகின்ற காலத்தை மிகத் துல்லியமாகவும் மிக விரிவாகவும் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம். எண்ணற்ற இனக்குழுக்கள், அவற்றின் அடையாளங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பேசும் சங்க இலக்கியமானது, ஒருகட்டத்தில் வேந்தர்கள், வேளிர்கள் என்ற இரு புள்ளியில் வந்து நிற்கிறது. அதன்பின், வேளிர்களை வென்று மூவேந்தர்கள் மட்டுமே நிலைகொள்கின்றனர்.
இரு சமூக அமைப்புகள், அவை உருவாக்கிய இரு வகையான விழுமியங்கள் இவற்றுக்கு இடையில், பல நூறு ஆண்டுகள் நடந்த மோதல்களைச் சங்க இலக்கியப் பரப்பெங்கும் பார்க்க முடியும். இம்முரண்பாடுகள் உக்கிரத்தோடு மோதிய நிகழ்வின் பேரடையாளம்தான் வேள்பாரி. ஒருவகையில் வேள்பாரி, சங்க இலக்கியக் காலத்தின் மையக் குறியீடு என்றே சொல்ல முடியும்.
இரு சமூக அமைப்புகளும் அதனதன் குணத்துடனும் தன்மையுடனும் அதனதற்கேயுரிய விழுமியங்களுடனும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இம்மோதல், தமிழ் நிலமெங்கும் நடக்கிறது. இம்மோதலின்மூலம் அடுத்தகட்டத்துக்குச் சமூகம் தன்னை உருமாற்றிக்கொள்கிறது. அம்மாற்றம் நிகழும்போது, தன்மீது ஒட்டியிருந்த பொன்துகள்களையும் உதிர்த்துவிட்டுத்தான் நகர்கிறது.
சமூக வரலாறு உதிர்த்துவிட்டு நகர்ந்த அந்தப் பொன்துகள்கள், அப்படியே மண்ணுள் புதையுண்டு மங்கிவிடுவதில்லை. ஒளிமின்னும் அந்தப் பொன்துகள்களை இலக்கியம் தனதாக்கிக்கொள்கிறது. மானுட அறிவுச் சேகரத்தின் வசீகர ஒளியை அது என்றென்றும் மங்கவிடாமல் பாதுகாக்கிறது. சமூக அசைவியக்கங்களையெல்லாம் கடந்து, காலத்தின் நெற்றிப்பட்டயத்தில் அதைப் பொறித்துவைத்து அழகுபார்க்கிறது.
அதனால்தான் பாரி, அழிந்த சமூக அமைப்பின் அடையாளமாக இல்லாமல், அழியக் கூடாத மனிதப் பண்பின் பேரடையாளமாக என்றென்றும் போற்றப்படுகிறான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றில், நூறு, இருநூறு ஆண்டுக்கால இடைவெளியில் ஏதாவது ஒரு புலவன் பாரியைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டே இருந்திருக்கிறான்.
இவ்வறிவு மரபின் தொடர்ச்சிதான் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’.
- சு.வெங்கடேசன், ஓவியம் : பிரேம் டாவின்ஸி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Pasupathi_Kபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 28/10/2016
பதிவுகளுக்கு நன்றி. தயவு செய்து அனைத்து பாகங்களையும் தொகுத்து மின்னூலாக PDF வடிவில் பதிவிடவும்.
- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
அன்புடன்
மிக மிக உன்னத பதிவு
மணிரத்தினம் பொன்னியின் செல்வனை எடுப்பதை விட வீர நாயகன் வேல் பாரியை எடுக்கலாம்
ராம்
மிக மிக உன்னத பதிவு
மணிரத்தினம் பொன்னியின் செல்வனை எடுப்பதை விட வீர நாயகன் வேல் பாரியை எடுக்கலாம்
ராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301108kram wrote:அன்புடன்
மிக மிக உன்னத பதிவு
மணிரத்தினம் பொன்னியின் செல்வனை எடுப்பதை விட வீர நாயகன் வேல் பாரியை எடுக்கலாம்
ராம்
@ரா.ரமேஷ்குமார்
ரமேஷ், நீங்கள் அனுப்பிய மின்னுலை படித்துக் கொண்டிருக்கிறேன்...(1000 பக்கங்கள் முடித்து விட்டேன் ரமேஷ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1299223ARR wrote:மிக அற்புதமான தொடர்! பதிவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு மலைக்க வைக்கிறது!
பாராட்டுகள் ரமேஷ்குமார்!
நன்றி நண்பரே..
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
வேள்பாரி தற்போதைய இனைய யுகத்தில் பல புதிய வாசகர்களை உருவாக்கியது என்றால் மிகை அல்ல.. முன்பு எல்லாம் ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் என கேட்பவர்களுக்கு மறுமொழி “பொன்னியின் செல்வன்” ஆனால் இப்பொழுது எல்லாம் “வேள்பாரி”யே என்மட்டில்…
![:sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f60e.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 19 of 19 • 1 ... 11 ... 17, 18, 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 19
|
|