புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
60 Posts - 48%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 08, 2018 7:23 am

இரவின் பிடி உதிரும்போது வேந்தர்படையின் ஆற்றல் முற்றிலும் உதிர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் பாரியின் திட்டம். மூன்று பாசறைகளையும் தனித்தனியாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் போதே வேந்தர்களின் சிறப்புப் படைகளின் மீது இடியெனத் தாக்கும் போர் உத்தியை வகுத்திருந்தான் பாரி. குலங்கள்வாரியாகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டன. சோழர் பாசறையிலும் பாண்டியர் பாசறையிலும் இருந்து உயிர்பிழைத்து வருகிறவர்களை எதிர்கொள்ள, வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தது விண்டனின் தலைமையிலான படை.

போர்க்களத்தில் வேந்தர்படை வீரர்கள் கவசப் பாதுகாப்போடு அனைத்துவிதமான ஆயுதங்களையும் கைக்கொண்டு போரிடும்போதே, பறம்பு வீரர்களையும் எதிர்கொள்வது மிகக்கடினம். ஆனால் இப்போதோ, இரவில் பேரச்சத்தோடு கைகளில் ஓரிரு ஆயுதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு ஓடிவருகிறவர்கள், விண்டன் தலைமையிலான பறம்புப்படையை எப்படி எதிர்கொள்ள முடியும்?

பின்னால் துரத்தும் பேராபத்திலிருந்து தப்பிப்பிழைக்கவே வீரர்களின் பெருங்கூட்டம் ஓடிவந்தது. அவர்களாக வந்து ஈட்டிகளில் பாய்ந்து மாய்வதைப் போலத்தான் கணக்கே இல்லாமல் மாய்ந்துகொண்டிருந்தனர். எதிர்நிலையில் நின்ற விண்டன் தாக்கவேயில்லை. ஆனால், அழிக்க மட்டும் செய்தான். அழிவு கணக்கேயில்லாமல் நடந்துகொண்டிருந்தது.

பல்லாயிரம் மணிகள் கோக்கப்பட்ட மாலை ஓர் இடத்தில் அறுந்தவுடன் மொத்தமும் மண்ணில் உருள்வதைப் போலத்தான் படையின் கட்டுக்கோப்பு அறுந்த கணத்தில் பல்லாயிரம் தலைகள் மண்ணில் உருண்டுகொண்டிருந்தன.

விண்டனின் தலைமையில் வந்தவர்கள், ஆறு இடங்களில் தனித்தனியாக நின்றிருந்தனர். வர வர வெட்டிச்சரிக்கும் வெறியோடு நின்றவர்களை நோக்கி அணலிகளால் விரட்டப்பட்டவர்கள் இடைவிடாது வந்துகொண்டிருந்தனர். அச்சத்தோடு பாய்ந்து வருபவர்களுக்கு முன்னால் தனது கூரிய ஆயுதங்களை ஏந்தி நின்றான். பட்டுப்போன இலையை கழுமர முனையால் குத்துவதுபோலத்தான் அந்தப் பேரழிவு நடந்தது. துளியளவு ஆற்றல்கூட இல்லாமல் அஞ்சி ஓடிவரும் கூட்டம் அவன் உருவாக்கியிருந்த பொறிக்குள் கணக்கேயில்லாமல் விடியும் வரை விழுந்துகொண்டேயிருந்தது.

இதே நேரத்தில் சேரனின் பாசறையைத் தாக்க உதிரனின் படைக்கு உத்தரவிட்டிருந்தான் பாரி. சுமார் எட்டாயிரம் வீரர்கள் இருந்த பாசறையை நள்ளிரவு உதிரனின் தலைமையிலான படை சுற்றிவளைத்தது. மழை கொட்டிக்கொண்டிருந்த போதும் கொம்பூதி முழக்கமிடச் சொன்னான் உதிரன். தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தாக்கக் கூடாது. எனவே, தக்குதலுக்கு ஆயத்தமாகச்சொல்லி அழைத்தான்.

அந்த நேரத்தில் மூஞ்சலிலிருந்து கிழக்குத்திசை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தனர் வேந்தர்கள். மெய்க்காவல் படையினர் மிகுந்த கவனத்தோடு முன்னும் பின்னுமாக அணிவகுத்துச் சென்றனர். பந்த ஒளி இல்லாததால் அடர் இருட்டில் பயணப்படவேண்டியிருந்தது. மழையும் விடாது பொழிந்துகொண்டிருந்தது. சரியான திசை வழியில் வேந்தர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்பதால், மையூர்கிழார் முன்னால் போய்க்கொண்டிருந்தார்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83d_1541249327

ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் ஒவ்வொருவிதமாக இருந்தது. குலசேகரபாண்டியன் தனது பாசறை வீரர்கள் பாதுகாப்போடு வெளியேறியி ருப்பார்காளா என்ற சிந்தனையிலே இருந்தான். செங்கனச்சோழன் தங்கள் படைவீரர்களைக் காப்பாற்ற வழி என்ன என்ற சிந்தனையில் இருந்தான். பறம்பின் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை எழுவனாற்றில் அறிந்தவன் அவன். அவனது உடல் நடுக்கத்தை உள்ளுணரச்செய்துகொண்டிருந்தது. ஆனால், சோழவேழனும் பொதியவெற்பனும் எந்த நிலையிலும் பாரியைக் கொன்றழிக்காமல் இந்த நிலம்விட்டு அகன்றுவிடக் கூடாது என எண்ணியபடி இருந்தனர்.

கருங்கைவாணனின் சிந்தனை முழுவதும் உறுமன்கொடியைப் பற்றியதாக இருந்தது. `இவ்வளவு நேரத்தில் அவன் அமைச்சர்களை அழைத்து வந்திருக்க வேண்டுமே. ஏன் இன்னும் வரவில்லை’ என்று நினைத்தபடியே குதிரையை விரைவுபடுத்தினான். யாரையாவது அனுப்பி நிலைமையை அறிந்துவரச் சொல்லலாமா எனத் தோன்றியது. குதிரையை விரைந்து செலுத்தி முன்னால் போய்க்கொண்டிருந்த மையூர்கிழாரிடம் வந்து கேட்டான், ``உறுமன்கொடி இன்னும் வந்துசேரவில்லை. அமைச்சர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லையே!’’

``இதில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.’’

கருங்கைவாணன் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான், ``உறுமன்கொடி பெருவீரன். அவனை எளிதில் வீழ்த்திவிட முடியாது.’’

``தளபதிகள் வீரத்தோடு இருந்து என்ன பயன்? வேந்தர்கள் கூர்மதியோடு இருக்க வேண்டுமல்லவா!’’

``ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’

``நாம் மூஞ்சலைக் கடந்து ஒரு காதத்தொலைவு வந்த பிறகு அமைச்சர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடலாமா? இத்தனை நாள் போருக்குப் பிறகும் எதிரியின் வேகத்தையும் வலிமையையும் இவர்கள் என்னதான் புரிந்துகொண்டார்கள்?’’

``அதற்காக, அமைச்சர்கள் மூவரையும் அப்படியே விட்டுவிட முடியுமா?’’

``ஏன் முடியாது? மறதியும் கவனக்குறைவும் தவிர்க்க முடியாதவை. அதன் விலை அமைச்சர்களாக இருந்தாலும் கலங்காது முடிவெடுக்க வேண்டும். ஒருவரின் தளபதியை இன்னொருவர் சிக்கவைத்துவிடுவார் என்ற பதற்றத்தில் மூவரும் மாறி மாறி மற்றவர்களைச் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களோடு நின்றிருக்க வேண்டிய இழப்பில் உறுமன் கொடியையும் சேர்த்து விட்டார்கள். இதே நிலை நீடித்தால் நிலைமை படுமோசமாகி விடும்.’’

``ஏன் நம்பிக்கையிழந்து பேசுகிறாய்?’’ மழையையும் மீறி கேட்டது கருங்கைவாணனின் குரல்.

``போர்க்களத்தில் இரண்டே இரண்டு செயல்கள்தான் உண்டு. ஒன்று, தாக்கி அழிப்பது. இல்லையெனில், தப்பிப் பிழைப்பது. நாம் முதல்கட்டத்தின் இறுதிநிலைக்கு வந்துவிட்டோம். எனவே, இரண்டாம் கட்டம் பற்றிய சிந்தனை தானாகவே மேலெழுகிறது’’ என்று கூறிய மையூர்கிழார் தொடர்ந்து சொன்னார், ``உறுமன்கொடி கொல்லப்பட்டிருந்தால் அடுத்து ஒரு பொழுதுக்குள் நாம் தாக்கப்படுவோம்.’’

``அப்படியா சொல்கிறாய்? எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வர வாய்ப்பிருக்கிறது?’’

``அதுதான் தெரியவில்லை. எனது கணிப்புப்படி இந்நேரம் சோழப்படையும் பாண்டியப் படையும் பேரழிவைக் கண்டிருக்க வேண்டும். உதியஞ்சேரல் தன் தளபதி துடும்பனை அனுப்பி, அவனது பாசறையில் இருக்கும் வீரர்களை வெளியேற்றும்படி கூறியுள்ளான்.’’

``இல்லையே. துடும்பன் நம்முடன்தானே இருந்தான்.’’

``மூஞ்சலிலிருந்து புறப்படும் போது நம்முடன் இருந்தான். இடையில் அவனைப் பாசறைக்கு சேர வேந்தர் அனுப்பிவைத்து விட்டார்.’’

சொல்லும்போது இடியோசை யால் நிலம் நடுங்கியது. மிக அருகில் விழுந்திருக்க வேண்டும். குதிரைகள் மிரண்டு கனைத்தன.

``நாம் இப்போது எந்தத் திசையில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்? எது பாதுகாப்பானது?’’ எனக் கேட்டான் கருங்கைவாணன்.

குதிரையை மழையின் தன்மைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவு படுத்தியபடியே மையூர்கிழார் சொன்னார், ``உண்மையைச் சொல்வதாக இருந்தால் எனக்கு எதுவும் புரிபடவில்லை. பறம்பில் வாழும் பதினான்கு குடிகளும் கீழிறங்கிவிட்டன என்ற பிறகு, நாம் எந்தத் திசையில் பயணப்படுவது என்றே விளங்கவில்லை.’’

``பாரி எந்தப் பக்கம் இறங்கியிருப்பான் என்பதை சிறிதும் முன்னுணர முடியவில்லையா?’’

``முடியவில்லை. இருளின் எல்லாத் திசைகளிலும் பறம்புவீரர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல பறம்பின் படையணி எல்லாவற்றுக்குள்ளும் பாரி இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்’’ சொல்லும்போது உடல் உள்ளுக்குள் நடுங்கி மீண்டது. இருளெங்கும் பாரியால் நிரம்பியிருந்தது.

``அப்படியென்றால், நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?’’

``இப்போது இடியோடு இறங்கிய மின்னல் ஒளியில் எதிரிகள் நமது கூட்டத்தைத் தெளிவாகப் பார்த்திருப்பார்கள். எனவே, நம்மை நோக்கி அவர்கள் விரைந்து வர வாய்ப்புண்டு.’’

``நாம் ஏதாவது ஒரு மறைவிடத்தில் தங்க முடியாதா? இன்று இரவை மட்டும் கழித்து விட்டால் போதும், காலையில் நிலைமையை வேறுவிதத்தில் எதிர்கொண்டுவிடலாம்.’’

``நானும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மறைவிடம் என்று ஏதுமில்லை. எனது அரண்மனைக்குப் போவதாக இருந்தால் நாமே ஆபத்தில் போய்ச் சிக்கிக்கொள்கிறோம் என்று பொருள். ஏனெனில், வடதிசையில் காரமலைக்கு மிக அருகில் உள்ளது எனது அரண்மனை. இந்நேரம் பறம்புவீரர்கள் அங்கு இறங்கியிருப்பார்கள்’’ என்று சொன்னவர், குதிரையை விரைவுபடுத்தியபடி, ``எனக்குத் தெரிந்த ஒரே வாய்ப்பு மிக விரைவாகப் பயணப்பட்டு காட்டாற்றைக் கடப்பதுதான்’’ என்றார்.

``அங்கு என்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது?’’

``இந்த மழைக்கு, காட்டாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். மேடான பகுதியின் வழியே நான் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு அழைத்துச் சென்றுவிடுவேன். அக்கரையில் செவ்வரிமேட்டின் பக்கம் போய்விட்டால் போதும், நாம் இரவில் எந்தவித ஆபத்து குறித்தும் அச்சப்படத் தேவையில்லை.’’

``ஏன்... எதிரிகள் அங்கு வர மாட்டார்களா?’’

``மலைமக்கள் அச்சப்படுகிற ஒரே பொருள் நீர் மட்டும்தான். மலைமக்களின் பெரும்பான்மையோருக்கு நீச்சல் தெரியாது. அடர்கானகத்தின் இருள் கண்டு சமவெளி மக்கள் எப்படி பயம்கொள்கிறார்களோ, அதேபோல்தான் நீரைக் கண்டால் சற்று தள்ளியே நிற்பது மலைமக்களின் இயல்பு. எனவே, இரவில் காட்டாற்றுக்குள் இறங்க மாட்டார்கள்’’ என்றான்.

சொல்லி முடிக்கும்போது வேந்தர்படையின் குதிரைகள், இதுவரை இல்லாத வேகத்தில் ஆற்றின் திசைவழி நோக்கிப் பாயத் தொடங்கின.

அதே காலத்தில் சேரனின் பாசறையின் மீது உதிரனின் தாக்குதல் தொடங்கியது. கொம்போசை ஊதி வீரர்களுக்கு தாங்கள் வந்துள்ளதைத் தெரியப்படுத்தியதும் பாசறைத் தளபதி உடனே எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானான். அப்போதுதான் சேரர் படைத் தலைமைத் தளபதி துடும்பன் வந்து சேர்ந்தான். உதியஞ்சேரலின் கட்டளைபடி பாசறையைவிட்டு உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டான்.

``எதிரிகள் கொம்போசை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் பாசறையைவிட்டு வெளியேற உத்தரவிட்டால் நிலைமை விபரீதமாக மாறும். ஒரு பக்கம் எதிரிகளைத் தடுக்க எதிர் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்போம். இன்னொரு பக்கம் வெளியேறிக்கொண்டிருப்போம். மழை பெய்து கொண்டிருப்பதால் தெளிவான உத்தரவை எல்லோருக்கும் வழங்கிவிட முடியாது. நள்ளிரவில் கூடாரத்துக்குள் தூங்கிக் கொண்டிருக்கிற பலருக்கும் நிலைமையை விளக்குவது எளிதல்ல. எனவே, இரண்டு செயல்களால் பெரும்குழப்பம் உருவாகும். பறம்புவீரர்களை எதிர்த்து முழுக்கவனத்தோடு தாக்குதல் தொடுப்போம். பொழுது விடிந்த பிறகு நாம் பாசறையைவிட்டு வெளியேறுவோம்’’ என்றான் பாசறைத் தளபதி.

அதிக அளவு வீரர்கள் கூடாரங்களைவிட்டு வெளியேறத் தொடங்கியதும் பறம்புவீரர்கள் தாக்குதலைத் தொடங்கினர். பின்னிரவு நேரத்திலும் மழையின் வேகம் குறையவில்லை.

இரவு நேரத்தில் பாசறையின் மீதான எதிரிகளின் தாக்குதலைச் சரியாகக் கையாள வில்லை என்றால் பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை தளபதி நன்கு அறிவார். எனவே தனது நிலையை வலியுறுத்தினார்.

பாசறைத் தளபதிக்கு, இந்தப் பாசறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் மட்டுமே தெரியும். ஆனால், துடும்பனுக்கு மொத்தச் சிக்கலும் தெரியும். வேந்தர்கள், மூஞ்சலைவிட்டு வெளியேறிவி ட்டனர்; பாதுகாப்பான இடத்துக்கு விரைந்துகொண்டிருக்கின்றனர். பாண்டியப் படையும் சோழப்படையும் பேரழிவுக்குள்ளாகின. அந்த நிலையில் சேரர்படை மட்டும் பாசறையில் இருந்தால் அது பேராபத்தாகும். எனவே, ஒரு பகுதி வீரர்களை இழந்தாலும் நாம் இந்த இடத்தைவிட்டு அகல்வதே பாதுகாப்பானது. இதை பாசறைத் தளபதிக்கு விளக்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே, துடும்பன் வேந்தரின் கட்டளை என்று மறுசொல்லுக்கு வழியில்லாதபடி உத்தரவைப் பிறப்பித்தான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83e_1541249360

பாசறைத் தளபதியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து வாதிட்டான். ஆனால், நிலைமை கைமீறிக்கொண்டிருந்தது. இறுதியில் பாசறைத் தளபதி சொன்னான், ``சரி, நான் மேற்குப் பகுதியில் நின்று எதிரிகளைத் தாக்கும் படைக்குத் தலைமை ஏற்கிறேன். நீங்கள் வெளியேறும் படையை கவனத்தோடு கொண்டுசெல்லுங்கள்’’ என்றான். தன் பாசறை வீரர்களைக் காக்க அவன் இறுதி வரை எடுத்துக்கொள்ளும் முயற்சியைக் கண்டு மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றான் துடும்பன்.

மேற்குத் திசையில் பறம்பின் தாக்குதல் வலிமையானதாக இருந்தது. பாசறைத் தளபதியின் தலைமையில் சேரப்படையினர் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் எதிரிகளை பின்னுக்கு நகர்த்த முடியவில்லை. அதற்குக் காரணம், பறம்புவீரர்கள் இருளுக்குள் எந்த இடத்தில் நின்று அம்பெய்துகின்றனர் என்பதை, சேர வீரர்களால் மதிப்பிட முடியாததே. இருளின் எல்லா திசைகளில் இருந்தும் அவர்களின் அம்புகள் பாய்ந்துவந்தன. வேந்தர்களின் படைவீரர்கள், பெரும்பாலும் தங்களின் வில்லுக்கு, பட்டுநூல் நாணினைத்தான் பயன்படுத்தினர். அது மழைநீரில் ஈரமானால் போதுமான இழுவை விசையை உருவாக்காது. ஆனால், பறம்பின் வீரர்கள் பயன்படுத்துவதெல்லாம் மான் முடியும் எருமை முடியும் கொண்டு திரிக்கப்பட்ட நாண். எனவே, அது மழைநீரால் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகாது. பறம்புவீரர்கள் பாசறையின் மீது அலையலையாய் அம்புகளை விடுத்துக் கொண்டிருந்தனர்.

மழைப் பொழிவுக்கு இடையிலும் அம்புகள் கூடாரத்தைத் தொடர்ந்து தாக்கின. பாசறைக்குள், உத்தரவில் ஏற்பட்ட குழப்பத்தால் பெரும் பாலானோர் தாக்குதலை எதிர்கொள்ளாமல் கிழக்குத்திசையில் வெளியேறத் தொடங்கினர்.

உதிரனின் தாக்குதல் திட்டத்தின் கூர்முனைப் பகுதி மேற்குத்திசை அன்று. அதாவது மேற்குத்திசையில் நள்ளிரவில் பேரோசையை எழுப்பியபடி தாக்குதல் தொடுத்தால் அச்சப் பட்டு வெளியேறும் படை கிழக்குத் திசையில்தான் பாய்ந்து செல்லும். எனவே, கிழக்குத் திசையில் பொருத்தமான மூன்று இடங்களில் தங்களின் மூன்று குடிகளை நிறுத்தியிருந்தான் உதிரன். காய்ந்த புளியமரங்கள், வாகைமரங்களின் கொப்புகள் முண்டுகள் எல்லாவற்றின் மீதும் பறம்புக் குடிகள் ஆயத்தநிலையில் காத்திருந்தனர்.

சேரர்படை வீரர்கள் வரத் தொடங்கிய பிறகு, கிழக்குத்திசை மரங்களிலும் மறைவுகளிலும் இருந்து தாக்குதல் தொடங்கியது. வாளும் ஈட்டியும் சவளக்குந்தமும் பெருங்குந்தமும் இடைவிடாது குத்தித் தீர்த்தன. சகதியில் மிதித்துகொண்டே இருப்பதுபோல குத்துவாள்கள் இறங்கிக்கொண்டே இருந்தன. வல்லயக் கம்புகளின் சிறு மணியோசை திரும்பும் திசையெல்லாம் கேட்டது. பேய்மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள், பீறிடும் மனிதக்கதறல் கேட்டு பொடவுக்குள் பதுங்கின.

சேரனால் அழித்தொழிக்கப்பட்ட மூன்று குடிகளின் தாக்குதலால் இப்போது சேரர்படை, பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பாண்டியப்படையும் சோழப்படையும் அணலி தாக்குதலுக்கு அஞ்சி ஓடிவந்ததைப்போல சேரர்படை ஓடிவரவில்லை. எதிரிகள் தாக்குகின்றனர். பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்ற உணர்வோடு ஆயுதங்களை கைக்கொண்டபடிதான் ஓடிவந்தனர். ஆனால், மழையும் இருட்டும் அவர்களை எதிர்த்து நிற்கும் பறம்புவீரர்களை சரியாகக் கண்டுணர முடியாமல் செய்துவிட்டன.

முன்புறம் தனது படை நினைத்துப்பார்க்க முடியாத அழிவை அடைந்துகொண்டிருக்கிற செய்தி துடும்பனுக்கு எட்டியது. `எதிரிகளின் பொறியில் மாட்டிவிட்டோமோ!’ எனத் துடித்துப்போனான் துடும்பன். `பாசறைத் தளபதி சொன்ன எச்சரிக்கை சரியாகிவிட்டதே!’ எனக் கருதி, தாக்குதல் நடக்கும் கிழக்கு முனைக்கு விரைந்தான். அவன் வரும்போது அழிவுற்ற அவன் படைவீரர்கள் மலையெனக் குவிந்து கிடந்தனர். இருட்டில் அவனுக்குக் காட்சிகள் எவையும் புலப்படவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்டவர்களின் மூச்சிரைப்பு, பேய்க்காற்றுபோல மழையையும் விஞ்சி கேட்டது. என்ன இது என்று மிரண்டு நிற்கையில், வெட்டி இறங்கியது ஒரு மின்னல்.

அந்த ஒளியில் தொலைவில் நின்றிருந்த உதிரன், துடும்பனை அறிந்தான். தடியங்காட்டுப் போர் தொடங்கியதிலிருந்து வேந்தர்களின் விற்படைக்குத் தலைமை தாங்குபவன் துடும்பன். எனவே, அவனது முகம் மனதில் ஆழப் பதிந்திருந்தது. வந்து நிற்பது அவன்தான் என அறிந்ததும், உருவிய வாளோடு பாய்ந்தான் உதிரன்.

வீசிய வாளோடு உதிரன் வருவது அறிந்து வாளோடு அவன் மீது பாய்ந்தான் துடும்பன். இரண்டு வாள்களும் முழுத்திறனோடு குறுக்கிட்டு வெட்டின. வெட்டிய கணத்தில் மின்னல் ஒளி முற்றாக மறைந்து இருள் நிலைகொண்டது. வேந்தர்படையினர் பயன்படுத்தும் வாளின் பிடி யானைத் தந்தத்தால் ஆனது. காயத்துக்குள் கங்குபட்ட கணத்தில் உச்சந்தலைக்கு ஏறும் அதிர்சூடுபோல வாளின் கைப்பிடி அதிர்வை உள்ளுக்குள் கடத்தியது. பறம்பினர் பயன்படுத்தும் வாளின் பிடி எருமைக்கொம்பால் ஆனது. அது வாளின் அதிர்வைக் கடத்தாது. உதிரனின் வாள் மோதிய கணத்தில் ஏற்பட்ட அதிர்வை துடும்பனின் கை உச்சந்தலையில் உணர்ந்தது. அப்போது கை தளர்ந்து, பிறகு மீண்டும் இறுகியது. அப்படி இறுகும்போது அவனது தலையைச் சீவிக் கடந்துகொண்டிருந்தது உதிரனின் வாள்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Mon Nov 12, 2018 1:45 pm

வணக்கம்
பாரி களம் இறங்க வேண்டும் அனல் தோற்க கூடாது .
அப்படி தோற்றலும் நேருக்கு நேர் தோற்கவேண்டும்
ஆனல் அப்படி நடப்பது போல் தோன்றவில்லை
எப்படியானாலும் இதை எதிர்கொள்ளவேண்டும்
ஒரு நல்ல வீரனை, விவேகி, தமிழனை இழக நேரிடும்


































ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 15, 2018 9:42 am

சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,

பொழுது விடிந்தது. கதிரவனின் ஒளிக்கீற்று எங்கும் பரவியது. இரலிமேட்டின் பெரும்பாறையின் மீது அடுக்கிவைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடல்கள் மீது மழைநீர் படாமலிருக்க, கிடுகுகளால் ஆன படல்களைக்கொண்டு மேல்மறைப்புகளை உருவாக்கியிருந்தனர். உடல்களின் தலைமாட்டில் வாரிகையன் உட்கார்ந்திருந்தார். வலதுபக்கக் கீழ்த்திசையில் முறியன் ஆசான் இருந்தார். இடதுகோடியில் ஆயுதப் பொறுப்பாளனான முதுவேலன் இருந்தான். இவர்கள் மூவரைத் தவிர மற்ற எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டார்கள். வயதானவர்கள், இதுநாள் வரை போருக்குத் தேவையான பணிகளை மட்டுமே செய்துகொண்டு இரலிமேட்டிலும் நாகக்கரட்டிலும் இருந்தனர். நேற்று மாலையோடு போர் முடிந்துவிட்டது. அதன் பிறகு நடக்கத் தொடங்கியது அழித்தொழிப்புதான். அறம்பிறழ்ந்தவர்களை அழித்தொழிக்கும் அறச்சீற்றம்தான். அதில் யாவரும் பங்கெடுக்கலாம் என்பதால் வயதானவர்களும் கீழிறங்கினர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83b_1542117739

நேற்று தாக்குதலுக்கான சொற்களைப் பாரி அறிவித்த கணத்திலிருந்து பன்மடங்கு பணியாற்றினர் முதுவேலனும் முறியன் ஆசானும். பறம்பில் உள்ள அத்தனை பேரும் ஒரே நேரத்தில் கீழிறங்கித் தாக்கவேண்டுமென்றால், அனைவரிடமும் போதுமான அளவுக்கு ஆயுதங்கள் இருக்க வேண்டும். யார் யார் எந்தப் பக்கம் போகப்போகிறார்கள்; அவர்கள் தாக்கவேண்டிய எதிரிகளின் படை அமைப்பு எப்படி என்று பேசி முடிவெடுத்து ஆயுதங்களைக் கொடுத்தனுப்பவெல்லாம் நேரமும் சூழலுமில்லை. பரப்பப்பட்டுக் கிடந்த சூளூர் வீரர்களின் குருதியை உடலில் பூசியபடி எழுந்து வந்த பறம்பு வீரர்கள், கைகளில் சிக்கியவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். முதுவேலனால் ஒருகட்டத்துக்குமேல் வழிமுறை செய்ய முடியவில்லை. குகைகளின் கடைசி எல்லை வரை அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் ஒன்றுவிடாமல் கொடுக்கப்பட்டுவிட்டன. ஒற்றை அம்புகூட மிச்சம் இல்லாமல் அனைத்தும் பயன்பாட்டுக்குப் போய்விட்டன. ஆனாலும் அவன் மனதில் கவலை இருக்கத்தான் செய்தது.

இறங்கித் தாக்கி எதிரிகளைக் கூண்டோடு அழிக்கும் முடிவைப் பாரி சொன்னவுடன் தயங்கி நின்றவன் முதுவேலன்தான். அழித்தொழிப்புப் போருக்காக மலையை விட்டுக் கீழே இறங்கிவிட்டால் வேலை முடிந்த பிறகுதான் திரும்பி வர முடியும். வேந்தர்களின் படையில் இப்போதைய நிலைமையில் நாற்பதாயிரம் பேர் இருக்கக்கூடும். அவர்களை முழுமையாக அழித்தொழிக்கும் அளவுக்கு நம் வீரர்களின் கையில் போதுமான ஆயுதங்கள் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடம் வில் - அம்பு மட்டுமே தேவையான அளவு இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதலில் அதிகம் பயன்படுபவை அருகில் இருந்து தாக்கும் ஆயுதங்கள்தான். குறிப்பாக வாள் வகைகள்.

அனைத்து வீரர்களும் ஒன்றுக்கும்மேற்பட்ட வகை ஆயுதங்களை வைத்துக்கொண்டு இறங்குவதுதான் சரியான நடவடிக்கையாகும். ஆனால், ``அவ்வளவு ஆயுதங்கள் கைவசம் இல்லை’’ என்று முதுவேலன் சொன்னான். ஆயுதங்கள் போதுமான அளவு இல்லை என்பதால் எதிரிகளை அழிக்காமல் விடமுடியாது. `மாற்று என்ன?’ எனச் சிந்தித்தபோதுதான் வாரிக்கையன் அணலியை இறக்கும் ஆலோசனையைச் சொன்னார். அவர் அதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முறியன் ஆசான் இருள்வேலமரத்தின் சிவப்புப் பிசினை எடுத்துவர தன் மாணவர்களை அனுப்பிவிட்டார். எதிரிகளின் இரண்டு பாசறைகளில் இருக்கும் எண்ணற்ற வீரர்களின் மீது முதல்கட்டத் தாக்குதலை இந்தப் பூச்சி இனங்கள் நடத்தட்டும். அதிலிருந்து தப்பி வருகிறவர்களை மட்டும் ஆயுதங்களால் தாக்கினால் போதும் என்று முடிவெடுக்கப்பட்டது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83a_1542117777

அதன்படி பாண்டிய, சோழப் பாசறைகளிலிருந்து தப்பி வருகிறவர்களைத் தாக்கப்போகும் விண்டன் தலைமையிலான வீரர்களுக்கு மிகக் குறைவான ஆயுதங்களே கொடுக்கப்பட்டன. இரண்டு பாசறைகளிலும் சுமார் இருபதாயிரம் வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்து இருளுக்குள் ஓடிவருகிறபோது வாளையும் ஈட்டியையும் அவர்களை நோக்கி மடக்கிப் பிடிப்பதே போதுமானது. அதற்கு ஏற்பவே ஆயுதங்கள் கொடுத்தனுப்பப்பட்டன.

அதேபோல சேரனின் படையை நோக்கி உதிரன் தலைமையிலான வீரர்கள் அனுப்பப்பட்டனர். பின்னிரவில் மேற்குத் திசையிலிருந்து தாக்குதல் தொடுத்து அவர்களை வெளியேற்றும் நிலையை உருவாக்கினால் கிழக்குத்திசையில் அழித்தொழிப்பு வேலையைச் செய்ய முடியும் எனக் கணித்து அதற்கு ஏற்ப ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன.

நடுவில் மூஞ்சல் நோக்கிச் சென்ற முடியன் தலைமையிலான குழுவுக்குத்தான் அனைத்து வகையான ஆயுதங்களும் தேவைப்பட்டன. மூவேந்தர்களைச் சுற்றி நிற்கும் சிறப்புப் படைகளையும் நீலனைச் சிறைப்பிடித்து நிற்கும் கவசப்படையையும் எதிர்கொள்வதற்கான முழுமையான அளவு ஆயுதங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. ஆனாலும் அவ்வளவு ஆயுதங்கள் இல்லை. இரவாதனின் வீரமரணம், அந்த இரவில் ஆயுதங்களே இல்லாமல்கூட போரிடும் வலிமையை ஒவ்வொரு பறம்புவீரனுக்கும் வழங்கியிருந்தது. எனவே, முதுவேலன் என்ன கொடுக்கிறானோ அதை வாங்கிக்கொண்டு வீரர்கள் புறப்பட்டனர்.

எதிரிகள் மூஞ்சலில் சேகரித்துவைத்திருந்த நஞ்சின் வகைகளைப் பற்றி அலவன் மூலம் அறிந்திருந்த முறியன் ஆசான், அதற்கான மாற்றை உருவாக்கியிருந்தார். இறுதிக்கட்டத் தாக்குதலில் எதிரிகள் அதைப் பயன்படுத்தக்கூடும் எனக் கருதிய அவர், மூஞ்சலைத் தாக்கப்போகும் முடியனின் படைக்கு மட்டும் அவற்றைக் கொடுத்தார். ஒரு கடலைச்செடியில் எண்ணற்ற கடலைகள் இருப்பதுபோல் கொத்துக்கொத்தாக அந்தக் கிழங்குகள் இருந்தன. ``போகும்போதே அந்தச் சிறுகிழங்கை ஆளுக்கு ஒன்றெடுத்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார்.

இதில் முதுவேலனையே வியக்கவைத்தவர்கள் திரையர்கள்தாம். ``இறங்கித் தாக்க பாரி அனுமதி அளித்ததே போதும்; எங்களுக்கு எந்த ஆயுதமும் தேவையில்லை’’ என்று சொல்லிப் புறப்பட்டான் காலம்பன். ஆனால், முதுவேலன், அவர்களை மறித்து ஒவ்வொரு வீரனுக்கும் கேடயம் ஒன்றும் நடுவகை வாள் ஒன்றும் கொடுத்தனுப்பினான்.

இவை தவிர ஆறுகுடியினர் தட்டியங்காட்டுப் பக்கமும் வெங்கல்நாட்டின் பக்கமும் மலையை விட்டுக் கீழிறங்கினர். வேந்தர்படையின் வீரர்கள் நிலப்பகுதியில் எங்கு குறுக்கிட்டாலும் வெட்டி வீழ்த்தப் புறப்பட்ட படை இது. அவர்கள், காட்டில் கிடைக்கும் அனைத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடியவர்கள்.

இவை நடந்துகொண்டிருக்கும்போதே செய்தி கேள்விப்பட்டு காரமலையின் உச்சியில் இருந்த அரிமான்கள் இரலிமேட்டுக்கு வந்தனர். இதுவரை அவர்களை இரலிமேட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லியிருந்தான் பாரி. ஆனால், அவசரம் கருதி கூவல்குடியினர் மூலம் உச்சிமலையில் இருந்த அணலிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டான் முடியன். அவர்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு விரைவாக அடர்குகைக்குள் இருக்கும் அணலிகளைப் பிடித்துக் கீழிறங்க முடியாது.

அந்த உத்தரவு மூலமே பேராபத்து உருவாகியுள்ளதை அரிமான்கள் உணர்ந்தனர். உடனடியாக அந்தக் குலத்தலைவனுக்குச் செய்தி சொல்லப்பட்டு, அவன் இரலிமேட்டுக்கு வந்துசேர்ந்தான்.

பறம்புவீரர்கள் எல்லோரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கீழிறங்கிய பிறகு அரிமான்குலத் தலைவன் வந்தான். கிடத்தப்பட்ட வீரர்களின் உடல்களைப் பார்த்துக் கொதிப்பேறிய நிலையில் ``எங்களைப் போர்க்களத்துக்கு அனுமதி’’ என்று பாரியின் கைகளைப் பிடித்து மன்றாடினான்.

``எந்நிலையிலும் நீங்கள் போர்க்களம் புகுவதை ஏற்க முடியாது’’ என்று உறுதியாக மறுத்தான் பாரி.

அரிமான்களோடு சேர்த்து பறம்பில் தஞ்சமடைந்த நான்கு குடிகளுக்கு, பாரி இறுதிவரை அனுமதியளிக்கவில்லை. மிகக் குறைந்த மனிதர்கள் மட்டுமே வாழும் அந்த அரிய குடிகள் இயற்கையின் ஆதிரகசியங்களைக் காத்துவருகிறார்கள். இந்தப் போர், மனிதர்களுக்கு இடையே நடக்கிறது. இதில் நிகழும் எந்தவொரு மரணமும் இயற்கைக்கு பாதிப்பை உருவாக்கிடாது. ஆனால், இந்த நான்கு குடிகளில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பச்சைமலைத் தொடருக்கும் அதில் உள்ள உயிரினங்களுக்கும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்கிறவர்கள். எனவே, பாரி இறுதி வரை அனுமதி கொடுக்கவில்லை.

``அப்படியென்றால், இந்தப் போரில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா?’’ எனக் கேட்டான் அரிமான்குலத் தலைவன்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83c_1542117816

``நீங்கள் எடுத்துவந்த அணலிகள்தான் இந்தப் போரில் முக்கியப் பங்காற்றப்போகின்றன. அவற்றை நீங்களே எதிரிகளின் பாசறையைச் சுற்றிக் கீழிறக்கிவிட்டு வாருங்கள். அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கியமான பணியையும் உங்களுக்குக் கொடுக்கப்போகிறேன்’’ என்றான்.

``என்ன?’’ என்று கேட்டான் அரிமான்குலத் தலைவன்.

``நான் கீழிறங்கப்போகிறேன். நான் சென்ற பிறகு என் தோழன் கபிலனை அழைத்துச் சென்று பாதுகாத்துவைத்திருங்கள்’’ சொல்லி முடித்த வேகத்தில் அந்த இடம் விட்டு அகன்றான் பாரி. அரிமான்குலத் தலைவனோ, இந்த உரையாடலைச் சற்றுத் தொலைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கபிலரோ, பதிலேதும் சொல்வதற்கு எந்த இடமும் தரவில்லை பாரி.

குகை விட்டுக் கீழிறங்கிய வேகத்தில் அவனோடு சிறுபடை இணைந்தது. பாரிக்கான ஆறு வகை ஆயுதங்களையும் அந்தப் படை வீரர்கள் கைகளில் வைத்திருந்தனர். மூவேந்தர்களின் பாசறைத் தாக்குதலையும் மூஞ்சலில் நடக்கும் தாக்குதலையும் ஒருங்கிணைத்துச் செய்தியைப் பரிமாற, கூவல்குடி வீரர்கள் உடன் இருந்தனர். பாரி மலையை விட்டுக் கீழிறங்கும்போது, மற்ற அனைவரும் தங்களுக்கான இடத்தை அடைந்துவிட்டனர். முடியனின் ஈட்டி, உறுமன் கொடியைக் குத்தித் தூக்கிக்கொண்டிருந்தபோது பாரி நாகக்கரட்டிலிருந்து சமவெளியை வந்தடைந்தான்.

பாரி முற்றிலும் எதிர்பாராதது, கொட்டித் தீர்க்கும் பெருமழையை. மழையின் வேகம், நிலத்தை நடுக்கமுறச் செய்தது. மழை பறம்புவீரர்களின் வேகத்தைச் சற்று மட்டுப்படுத்தும் அதேநேரம், தாக்குதலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும், எதிரிகளுக்கு அச்சமூட்டும் இன்னோர் ஆயுதமாக அது மாறும் எனக் கணித்தபடியே முன்னகர்ந்தான். மணல்வெளியில் செவ்வெறும்புகள் சாரைசாரையாக ஊடறுப்பதுபோல இருள்வெளியில் பறம்பு வீரர்கள் கூட்டம் கூட்டமாய் முன்னேறிக் கொண்டிருந்தனர். பாரி முன்னகர்ந்து உள்ளே வந்துகொண்டிருந்தபோது விண்டனின் தாக்குதல் தொடங்கிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. பாண்டியப்படையும் சோழப்படையும் நிலைகுலையத் தொடங்கிவிட்டதை உறுதிப் படுத்தினான். கூட்டைக் கலைத்தால் போதும் பாதி அழிவை அது தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும். வேந்தர்படை தன் அழிவைத் தானே நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அதற்கு உதவி செய்துகொண்டிருந்தான் விண்டன். உதிரன் சேரப்பாசறையைச் சுற்றி நிலைகொண்ட செய்தியும் வந்தது.

ஆனால் பாரி முற்றிலும் எதிர்பாராதது, மூஞ்சலை வேந்தர்கள் கைவிடுவதற்கு வெகுநேரம் முன்னரே நீலனை இடம் மாற்றிவிட்டார்கள் என்பது. முடியன் அனுப்பிய செய்தி பாரியை வந்தடைந்ததும் உடனடியாக மூஞ்சலை நோக்கி விரைந்தான். தப்பி வெளியேறிக்கொண்டிருக்கும் மூவேந்தர்களையும் தாக்கி அழிக்கப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தான் முடியன். அவன் அவ்வாறு செய்துவிடக் கூடாது என்பதற்குத்தான் விரைந்து வந்தான் பாரி. உறுமன்கொடியைக் கொன்றழித்த வேகத்தில் வேந்தர்களைக் கொன்றழிக்க விரைந்துகொண்டிருந்த முடியனைத் தடுத்து நிறுத்தினான் பாரி. ``நீலனை எந்த இடத்துக்குக் கொண்டுபோயுள்ளனர் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதன்பிறகு வேந்தர்களைத் தாக்கி அழிப்போம்’’ என்றான்.

பாரியின் சொல்லை ஏற்க முடியாமல் திணறியது முடியனின் மனம். ஆனாலும் நீலன் குறித்த சிந்தனை மனதை மாற்றியது. `மழை கொட்டும் இந்த இரவில் நீலனை எங்கு கொண்டுபோயிருப்பர்; எங்கே போய் அறிய முடியும்?’ எனச் சிந்தித்தபடி திகைத்து நின்றான் முடியன்.

சட்டென வேட்டூர்பழையனின் நினைவு வந்தது. அந்தக் கிழவன் இந்நேரம் இருந்திருந்தால் இந்த மண்ணின் ஒவ்வோர் அசைவையும் சொல்லிவிடுவார். மையூர்கிழாரைப் பற்றியும் வெங்கல்நாட்டைப் பற்றியும் அவரளவுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை. அவருக்கு அடுத்து இந்த நிலத்தை நன்கு அறிந்தவன் நீலன். அவனும் இல்லை என நினைத்தபோது, ஆறு ஊர்க்காரர்களின் நினைவுவந்தது. உடனே வீரர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அவ்விடம் விரைந்தான்.

முடியனுடன் இருந்த பெரும்பகுதி வீரர்களோடு பாரி மூவேந்தர்களைப் பின்தொடர்ந்தான். ``பறம்பின் அனைத்து குடிகளும் கீழிறங்கிவிட்டன. பாதுகாப்புக்கு எங்கே போவது என்று எனக்குப் புரியவில்லை’’ என்று கருங்கைவாணனிடம் மையூர்கிழார் புலம்பிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால்தான் பாரி வந்துகொண்டிருந்தான். வெட்டி இறங்கும் மின்னல் ஒளியில் முன்னால் போகிறவர்களைப் பார்த்தபடி தாக்குதல் எதுவும் தொடுக்காமல் நிதானமாக வந்துகொண்டிருந்தான் பாரி.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 15, 2018 9:46 am

தன்னுடன் இருக்கும் படைவீரர்களுக்கு உத்தரவு கொடுத்தால் போதும், அடுத்த மின்னல் ஒளிபாய்ச்சும்போது முன்னால் போகிற எவனும் உயிரோடு மிஞ்ச மாட்டான். ஆனாலும் நீலனைப் பற்றிய உறுதியான செய்தியைத் தெரிந்து கொள்ளாமல், `இவர்களைத் தாக்கினால் விளைவு கைமீறிப் போய்விட வாய்ப்புள்ளது’ என நினைத்தான். அந்தக் கணத்தில் அவனது மனம் தேக்கனை நினைத்தது. தனது கைக்கெட்டும் தொலைவில் மூவேந்தர்களும் அஞ்சி ஒடுங்கியபடி சென்றுகொண்டிருக்கிறார்கள். தாக்க முடிவெடுத்தால் ஒருவன்கூட தப்ப முடியாது. ஆனால், நீலன் என்ன ஆவான்; வேந்தர்கள் கொல்லப்பட்ட பிறகு நீலனை உயிரோடு மீட்க முடியுமா என்ற குழப்பத்தில் தாக்கும் முடிவைத் தள்ளிப்போட்டபடி நகர்ந்தான் பாரி. தான் எடுக்கும் இந்த முடிவு சரியானதா என்ற ஐயம், போர்க்களத்தில் முதன்முறையாகப் பாரிக்கு ஏற்பட்டது. பறம்பு தோன்றியதிலிருந்து இதுவரை நடந்திராத ஒன்று, இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பாரி உட்பட பறம்புவீரர்கள் அனைவரும் பறம்பின் எல்லையை விட்டு வெளியேறியுள்ளனர். புதிய நிலத்தில் கைக்கெட்டிய எதிரியை விட்டுப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

பாரியின் மனம் தேக்கனைத் தேடியது. தேக்கனால் எதிரியின் வலிமையைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அப்படிக் கணிக்க முடியாத நிலையில் எதிரிகளின் வலிமையின்மையைக் கண்டறிந்துவிடுவான். வலைக்குச் சிக்காதது வாய்க்குச் சிக்கும் என்பதில் அவன் எப்போதும் தெளிவாக இருப்பான். எந்த நிலையிலும் தேக்கனின் ஒற்றைச்சொல் குழப்பத்தைப் போக்கித் தெளிவை உருவாக்கும். அந்தக் கணம் தேக்கனின் குரலுக்காகப் பாரியின் மனம் ஏங்கி அடங்கியது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83d_1542117852

ஏக்கத்தினூடே தேக்கனின் சொல் என்னவாக இருந்திருக்கும் எனச் சிந்தித்தான். ``வேந்தர்களை அழிப்பதல்ல; நீலனை மீட்பதே முதற்பணி’’ என்றது ஆழ்மனதுக்குள் எதிரொலித்த தேக்கனின் சொல். எடுத்த முடிவில் துணிந்து நடந்தான் பாரி.

பாரி எந்தப் பக்கம் இறங்கியிருப்பான் என்பது தெரியாத குழப்பத்தில் மையூர்கிழார் திணறிக்கொண்டிருக்கும்போது, வேந்தர்களின் பிடரியில் மூச்சுக்காற்று படும் தொலைவில்தான் பின்தொடர்ந்துகொண்டிருந்தான் பாரி. மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியது. பாரி தனது பின்தொடர்தலில் இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டான். நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் மேலும் குறைந்தது. இருள்நீங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் செல்லும் வேந்தர்படையின் வேகமும் அதிகமானது. வேறு முடிவெடுக்க முடியாத நிலையில் பின்தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தான் பாரி.

மழை முழுமுற்றாக நின்றது. இருளின் அடர்த்தி மேலும் குறையத் தொடங்கியது. பின்னால், தொடர்ந்து வருவதை வேந்தர் படையினர் அறிய நேர்ந்தால் அச்சத்தில் உடனடியாகத் தாக்குதலில் ஈடுபடுவார்கள். தாக்குதல் தொடங்கிவிட்டால் எதிரிகளின் படை முற்றாக அழியும். ஆனால், நீலனை மீட்கும் முயற்சியில் ஆபத்து உருவாகும். எனவே, இடைவெளியை மேலும் அதிகப்படுத்தியபடி வந்தான் பாரி. முடியனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. மழை நின்று இருள் குறையத் தொடங்கியது.

இடைவெளியை நன்கு அதிகப்படுத்திய பாரி வேந்தர்படையினர் முன்னகர்ந்த திசையில் வந்து சேர்ந்தபோது, காட்டாறு ஒன்று குறிக்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது. எதிரிகள் காட்டாற்றைக் கடந்து அக்கரையில் ஏறிக்கொண்டிருந்தனர். அதிர்ந்தான் பாரி. இந்த இடத்தில் இப்படியோர் ஆறு ஓடுவது அவனுக்குத் தெரியாது. மலை விட்டு இறங்கும் ஆறுகள் சமவெளியில் இவ்வளவு உள்வாங்கிய நிலத்தில் எவ்விடம் ஓடுகின்றன என்பது பறம்புவீரர்கள் யாருக்கும் தெரியாது. எதிர்த்திசையைப் பார்த்தபடி அதிர்ச்சியுற்று நின்றான் பாரி. இடைவெளியை அதிகப்படுத்தியது, வேந்தர்படை முழுமுற்றாக ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வசதியாகிவிட்டது.

கைநழுவிவிட்டதோ என்று மனம் பதைத்தது. வானில் ஒளி கசிந்து பரவிக்கொண்டிருந்தது. அப்போதுதான் முடியன் வந்து சேர்ந்தான். ``நேற்றிரவு மழை தொடங்குவதற்குச் சற்று முன்பே கொட்டடியில் நின்றிருந்த யானைகளைக் காட்டாற்றுக்கு அப்பால் இருக்கும் கோட்டைக் காவலுக்கு அனுப்ப உத்தரவு வந்ததாம். எனவே, ஆற்றுக்கு அப்பால் இருக்கும் கோட்டையில்தான் நீலனை வைத்திருப்பார்கள் என்று காராளி சொன்னான்’’ என்றான் முடியன்.

அடுத்து என்ன செய்யலாம் என்று பாரி சிந்திக்கத் தொடங்கும்முன் முடியன் சொன்னான், ``தந்தமுத்தத்துக்காரர்களுக்குச் செய்தி அனுப்பிவிட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள்.’’

``சரியான முடிவு’’ என்றான் பாரி.

எதிரிகள் ஆற்றைக் கடந்துவிட்டனர் என்பது முடியனுக்கும் அதிர்ச்சியை உருவாக்கியது. ஆனால், பாரியைவிட சரியான முடிவை யாரும் எடுக்க முடியாது என அவனுக்குத் தெரியும். எனவே, பாரியின் அடுத்த உத்தரவை எதிர்பார்த்தான்.

``கொஞ்சம் பொறு. பொழுது நன்கு விடியட்டும்’’ என்றான் பாரி.

பாசறைகளிலிருந்து அணலிகளின் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்தவர்கள், விண்டன், உதிரன் ஆகியோரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவற்றிலிருந்தும் தப்பிப்பிழைத்தவர்கள் நிலமெங்கும் சுற்றித்திரியும் பறம்பின் இதர குடிகளிடம் சிக்கி மாண்டனர். அதிலும் தப்பியவர்கள் வெகுசிலரே. அவர்கள் கிழக்குப்புறமாக நகர்ந்து ஆற்றைக் கடந்து அக்கரை ஏறினர். வேந்தர்படையினர், தங்களின் மூன்று பாசறைகளிலிருந்தும் தப்பிவருகிறவர்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், மழை நின்றதும் நிலமெங்குமிருந்து மேலெழுந்தது கதறல்களின் பேரோசை.

பகலின் நான்காம் நாழிகை முடியும்போது ஒளியால் நிரம்பியிருந்தது நிலம். செவ்வரிமேட்டில் இருந்த வேந்தர்கள், எதிர்ப்புறத்தில் காட்டாற்றுக்கு அப்பால் ஆற்றைக் கடக்க முடியாமல் திணறியபடி நிற்கும் பறம்புப்படையை முழுமையாகப் பார்த்தனர். இரவு முழுவதும் நடந்த தாக்குதலால் அச்சம் உறைந்திருந்தது. ஆனால் பகலின் ஒளி, அச்சத்தை நீக்கத் தொடங்கியது.

மூன்று பாசறைகளில் இருந்த பல்லாயிரம் பேர், கொன்றழிகப்பட்டுவிட்டனர். மிஞ்சி இக்கரைக்கு வந்து சேர்ந்துள்ளவர்கள் சில ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால், பறம்புவீரர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் நின்றது நம்பிக்கையை உருவாக்கியது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83e_1542117890

மலைமக்கள் ஆற்றினுள் கால் வைக்க அஞ்சுவார்கள் என்பதைக் கண்ணுக்கு முன்னால் பார்த்தபடி இருந்த கருங்கைவாணன், மையூர் கிழாரைப் பாராட்டினான். பேரழிவிலிருந்து தளபதிகள் மீண்டுள்ளனர். செவ்வரிமேட்டில் இருக்கும் வேந்தர்படை வீரர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தாண்டாது. ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட படை, இறுதியில் இவ்வளவுதான் மிஞ்சியுள்ளது. ஆனாலும் மையூர்கிழாரும் கருங்கைவாணனும் நம்பிக்கையோடு போய் வேந்தர்களிடம் சொன்னார்கள்.

``எதிரிகள் ஆற்றைக் கடக்க வழியின்றி அக்கரையில் நிற்கிறார்கள். அது முக்கியமல்ல; அக்கரையில் நிற்பவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். சில நூறு பேர்தான் இருப்பார்கள். எனவே, இதற்குமேல் நாம் பின்வாங்க வேண்டியதில்லை. நாம் நல்ல மேட்டுநிலத்தில் இருக்கிறோம். அவர்கள் ஆற்றைக் கடக்கும்போது இங்கிருந்து தாக்கினால் ஒருவனும் உயிர்தப்ப முடியாது’’ என்றனர்.

இரவெல்லாம் பிழைத்தோடிவந்த அச்சம் எளிதில் மனம் விட்டு அகலவில்லை. ஆனாலும் ஆற்றைத் தாண்ட முடியாமல் தேங்கி நிற்கும் சிறு கூட்டத்தைப் பார்த்ததும் இயல்பாக மனதுக்குள் நம்பிக்கை உருவானது. முதன்முறையாகப் பறம்புப்படை நிலப்பரப்பின் கீழ்நிலையிலும், வேந்தர்படை நிலப்பரப்பில் மேல்நிலையிலும் இருந்தனர்.

`எப்படியும் அவர்கள் நீலனைக் காப்பாற்ற ஆற்றைக் கடக்க முயல்வர். அது அவர்களை முழுமுற்றாக அழிக்கும் வாய்ப்பை நமக்கு வழங்கும். எனவே, இதைத் தவறவிடக் கூடாது’ என குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது. ``நம் படையணிகளை ஒழுங்குபடுத்திக்கொள்’’ என்றார்.

முதல் நாள் இரவு நடந்த பேரழிவிலிருந்து மறுநாள் காலை மீண்டு மேலேறியது வேந்தர்படை. பறம்பின் படை இவ்வளவு சிறியது என்பதை வேந்தர்படையின் ஒவ்வொரு வீரனும் முழுமையாகப் பார்த்தான். பலிவாங்கும் உணர்வும், சிறுத்திருக்கும் எதிரிகளின் கூட்டமும் அவர்களின் நம்பிக்கையை மேலெழுப்பின. இரவெல்லாம் தாக்கி அழிக்கப்பட்டதனால் உருவான வெறி அவர்களை மூர்க்கம் கொள்ளவைத்தது. கருங்கைவாணன், உத்திகளை வகுத்தான்.

ஆற்றின் மேற்குத்திசையில் அப்படியே நின்றிருந்தான் பாரி. நிலமெங்கும் இருந்த பறம்புவீரர்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு வந்துசேர்ந்தனர். இருள்வேட்டை முடிவுற்றது. பகலின் பாய்ச்சலுக்காகப் பாரியின் உத்தரவை எதிர்பார்த்து நின்றிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு, ``நெட்டீட்டிகளை வீசச் சொல்’’ என்றான் பாரி.

சொல்லி முடிக்கும்போது பறம்பின் ஈட்டிகள் ஆற்றுநீருக்குள் எதிர்க்கரை வரை சரசரவெனக் குத்தி இறங்கின. வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று வரிசைகளாக போதிய இடைவெளியோடு ஈட்டிகள் எறியப்பட்டன. ஈட்டிகள் குத்தி நிற்பதை வைத்து நீரின் ஆழத்தைக் கணித்தனர். எந்த இடத்தில் பள்ளம் அதிகம் என்பதை அறிந்து, அதற்கு முன்னும் பின்னுமாக சில ஈட்டிகளை எறிந்து ஆழமற்ற பகுதியையும் கண்டுகொண்டனர். ஈட்டிகள் இழுபடும் தன்மைகொண்டு நீரின் வேகம் அறிந்தனர்.

அடுத்து உள்ளிறங்குவதற்குப் பாரி உத்தரவிடுவான் என எதிர்பார்த்து ஆற்றின் அருகில் போய் நின்றான் உதிரன். ஆனால், பாரி அதற்கு ஆயத்தமாக இல்லை. நீரில் இறங்கி அக்கரையை அடைந்துவிடலாம். ஆனால், எதிரிகள் மேட்டின்மீது நிற்கிறார்கள். உயரத்திலிருந்து அவர்கள் தாக்குதல் தொடுத்தால் பறம்பின் பக்கம் இழப்புகள் அதிகமாகும். எனவே, மாற்றுவழியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய கணமே, `நேரம் அதிகமானால் நீலனை மீட்கும் வாய்ப்பு குறைந்துவிடுமோ!’ என்றும் தோன்றியது. வீரர்கள் அனைவரும், பாரி வந்துவிட்டதால் மீட்டே தீருவான் என்ற நம்பிக்கையோடு நின்றனர். அவர்களுக்கு எதிரில் ஓடும் ஆறோ, உயர்ந்து நிற்கும் மேடோ ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனால், பாரிக்கு எல்லாம் பொருட்டாக இருந்தன. எந்த வீரனையும் இழந்துவிடக் கூடாது என்ற கவனமும் நீலன் மீதான சிந்தனையுமாக மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டிருந்தான்.

அப்போது இடதுபுறம் வெகுதொலைவிலிருந்து கூவல்குடியின் ஓசை கேட்டது. என்னவென்று பார்த்தனர். தந்தமுத்தத்துக்காரர்கள் நான்கு யானைகளோடு ஆற்றங்கரைக்கு வந்து நின்றனர். உள்ளே இறங்குவதற்கான அனுமதியைக் கேட்டது அந்த ஓசை. ``ஆற்றுக்குள் இறங்கு. ஆனால், அக்கரையில் ஏறாதே’’ என்றது பாரியின் பதில். குறிப்போசையாக இங்கிருந்து எழுப்பப் பட்டது.

இது நடந்துகொண்டிருந்தபோது ஆற்றின் வலதுபுறத்தைக் கைகாட்டி ``அங்கே பாருங்கள்’’ என்றான் முடியன்.

ஒரு காதத் தொலைவில் ஒரு கூட்டம் ஆற்றுக்குள் இறங்கி அக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கியது. உற்றுப்பார்த்துவிட்டு முடியன் சொன்னான், ``திரையர்கள் இறங்கிவிட்டார்கள்.’’

முடியன், உதிரன், விண்டன் மூவரும் பாரியிடம் சொன்னார்கள், ``இனியும் நாம் காலம் தாழ்த்த வேண்டாம். ஆற்றைக் கடந்து மேலேறும்போது நம்மில் சிலர் சாகவேண்டியிருக்கும். ஆனால், எதிரிகளால் வலுவான தாக்குதலை நடத்திவிட முடியாது. நம்முடைய வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது. எனவே, ஆற்றைக் கடக்க உத்தரவு தாருங்கள்’’ என்றனர்.

பாரியிடமிருந்து பதிலேதுமில்லை. `மிகச்சில வீரர்களிடம் மட்டுமே குதிரை இருக்கிறது. மேட்டின் மீதிருந்து வீசப்படும் ஆயுதத்தின் வேகம் வலிமையானது. எதிரிகள், நாம் ஆற்றில் இறங்கியவுடன் தாக்குதலைத் தொடங்கிவிடுவர். சில இடங்களில் கழுத்து வரை ஆழம் இருக்கும் பகுதியை நாம் கடந்தாக வேண்டும். அப்போது நம்மீது நடக்கும் தாக்குதலால் இழப்பு மிக அதிகமாகும்’ என்று சிந்தித்தபடி வேறு வழி பற்றி எண்ணங்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

வேந்தர்படையில் செவ்வரிமேட்டின்மேல் நின்றிருந்த தளபதி உசந்தன் இடதுபுறமாக ஆற்றை நோக்கிக் கைகாட்டி ``சிலர் ஆற்றைக் கடக்கிறார்கள்’’ என்றான்.

எல்லோரின் பார்வையும் அங்கே போனது. ஐம்பது, அறுபது பேர்கொண்ட சிறு படை ஒன்று ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. ``ஒருவன்கூட நமது கரையில் கால் வைக்கக் கூடாது. வெட்டி வீசுங்கள்’’ என்றான் மையூர்கிழார்.

வீரர்களை அழைத்துக்கொண்டு உசந்தன் செல்ல ஆயத்தமானபோது, ``நானே போகிறேன்’’ எனச் சொல்லி, தனது படையோடு கருங்கைவாணன் விரைந்தான்.

எதிரிப்படைகளில் இருநூறு பேர்கொண்ட படைப்பிரிவு திரையர்களை நோக்கிப் போவதைப் பாரி உள்ளிட்ட அனைவரும் மேற்குக் கரையிலிருந்து பார்த்தபடி நின்றிருந்தனர். முடியன் மீண்டும் சொன்னான், ``காலம் தாழ்த்த வேண்டாம். உள்ளிறங்குவோம்.’’

பாரியின் கண்கள் ஆற்றுநீரையே பார்த்துக்கொண்டிருந்தன. கரையோரத்தில் நீரின் எதிர்த்திசையில் சிற்றலைகள் எழும்பி அமுங்கின. என்ன இது என்று கவனித்தபோது காற்று, நீரின் மேல்தளத்தை சீவியபடி வீசியது.

அதன் திசையையும் தன்மையையும் உணர்ந்த பாரி `இது காற்றல்ல; காற்றி. இந்நேரம் நம்மில் யாராவது குளவன்திட்டில் இருந்திருக்க வேண்டும்’ என்று எண்ணிய கணத்தில் தலைக்குமேல் எண்ணிலடங்காத சுருளம்புகள் பறந்துகொண்டிருந்தன. எதிர்த்திசையில் செவ்வரிமேட்டின் உச்சியில் நின்றிருந்த வேந்தர்படையின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான சுருளம்புகள் குத்தி இறங்கின.

அதிர்ந்து திரும்பினான் பாரி. வெகுதொலைவில் சின்னதாய்த் தெரிந்தது குளவன்திட்டு. இகுளிக்கிழவன் உச்சியில் நின்று சிரிப்பதுபோல அவன் மனக்கண்ணில் தோன்றியது.

``எப்படி இவ்வளவு தொலைவில்?’’ என்று உதிரன் கேட்டபோது முடியன் சொன்னான், ``அவர்கள் ஐந்து வயதிலேயே குறி தவறும் அம்புகளை எய்து முடித்துவிடுவர். இது காற்றி. குளவன்திட்டில் எவ்விடமிருந்து வீசினாலும் அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்’’ என்று சொல்லி முடிக்கும் முன் பாரியின் உறுமல் காற்றையும் உலுக்கியது.

இந்தச் சொல்லுக்காகக் காத்திருந்த பறம்புப் படை, காட்டாற்றுக்குள் பாய்ந்து இறங்கியது. வேந்தர்படையினர் சுருளம்புகளால் தாக்கப்பட்டு பின்னோக்கி ஓடத் தொடங்கியபோது, பறம்புப்படை ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. இடதுமுனையில் நான்கு யானைகளின் மீது அமர்ந்தபடி தந்தமுத்தத்துக்காரர்கள் அக்கரையில் ஏறியபோது வலதுகோடியில் மேலேறிய திரையர்களைக் கருங்கைவாணன் படை தாக்கத் தொடங்கியது.

பல்லாயிரம் சுருளம்புகள் இப்படி வந்து இறங்கும் என யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. தட்டியங்காட்டில் பறம்புவீரர்கள் யானைப்போர் நடத்தாததற்குக் கானவர் செய்த கைம்மாறு இது. சுருளம்புகள் காற்றியால் தூக்கிவரப்பட்டதால் அவற்றின் வேகம் பல மடங்கு இருந்தது. செவ்வரிமேட்டின் முன்பகுதிச் சரிவில் நிறுத்தப்பட்டிருந்த வேந்தர்படை வீரர்கள் சுருளம்புகளுக்காகவே அணிவகுத்து நிறுத்தப்பட்டதுபோல் நின்றிருந்தனர். நினைத்துப்பார்க்க முடியாத இந்தத் தாக்குதலால் வேந்தர்படை சிதறியது.

காற்றியின் தாக்குதலுக்குச் சற்று முன்னதாகக் கருங்கைவாணன், இடதுபுறம் ஆற்றில் இறங்கிய எதிரிகளைக் கொன்றழிக்கப் போய்ச்சேர்ந்தான். கரையேறும் மனிதர்களின் உருவ அமைப்பைப் பார்த்ததும் முன்னால் விரைந்து சென்ற வீரர்களின் குதிரைகள் தேங்கத் தொடங்கின. இந்நிலையில்தான் சுருளம்புகள் படையின் மீது இறங்கின. தாக்கப்பட்ட வீரர்களின் பெருங்கூச்சல் காதத்தொலைவுக்கு அப்பால் இருக்கும் கருங்கைவாணனைத் திகைக்கவைத்தது. காற்றில் பறந்துவந்த அம்புகளை அவன் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் கண்களின் முன்னால் அவனுடைய படைவீரர்கள் தூக்கி வீசப்பட்டுக்கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் இருக்கும் வரை பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. மேலேறிய ஒவ்வொருவனும் மூன்று ஆள் உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். அவர்களின் அடியில் குதிரைகள் மடங்கி விழுந்தன. முட்டைகளின் மீது பாறை விழுவதைப்போல அவர்களின் மீது திரையர்களின் தாக்குதல் இருந்தது. இருநூறு பேர்கொண்ட வேந்தர்படை கண நேரத்துக்குள் உருக்குலைந்தது. என்ன நடக்கிறது என்று கருங்கைவாணன் நிதானிப்பதற்குள் அவனது குதிரையை அடித்து வீழ்த்தினான் ஒருவன். அவனது முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என எண்ணிக்கொண்டிருக்கும்போது மண்ணில் உருண்டுகொண்டிருந்தான் கருங்கைவாணன்.

விழுந்த வேகத்தில் விரைந்து எழுந்தவன், இடுப்பில் இருந்த வாளை எடுக்கப்போகும்போது ஓடிவந்தவன் இடது தோள்பட்டையோடு முட்டித் தூக்கி எறிந்தான். அவன் முட்டிய வேகத்தில் தோள்பட்டை எலும்பு நொறுங்கியது. முட்டியவன் திரையர் குலத்தலைவன் காலம்பன் என்று கருங்கைவாணனின் மனம் உணர்ந்தபோது, அவனை நெஞ்செலும்போடு அடித்து வீழ்த்தினான் காலம்பன். யானையின் தாக்குதலுக்கு இணையானதாக இருந்தது அந்த அடி. கீழே விழுந்தவனின் மூக்கிலிருந்து குருதி கொப்புளித்தது. காலம்பன், விழுந்து கிடந்தவனின் அருகில் வந்தான். தன் குலம் அழித்தவனைக் காணும்போது உருவாகும் வெறி கட்டுக் கடங்காததாக இருந்தது. அப்போது காலம்பன் எழுப்பிய உக்கிரமேறிய ஓசை செவ்வரிமேட்டில் இருந்த பாரிக்குக் கேட்டது.

ஆற்றிலிருந்து மேடேறிக்கொண்டிருந்த பாரி, என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தான். வேந்தர்படையினரிடமிருந்து திரையர்கள் எதையோ பிடுங்கி எறிவது தெரிந்தது. எதிரிகளின் ஆயுதங்களைப் பிடுங்கி எறிகிறார்களோ என்று ஒரு கணம் தோன்றியது. அவை ஆயுதங்கள் அல்ல; பிய்த்து எறியப்படும் மனித உறுப்புகள்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்




வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83f_1542117916

வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.

www.facebook.com/groups/500337410392609/

www.twitter.com/Vikatanvelpari




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Nov 15, 2018 6:43 pm

முடிவு நெருங்க நெருங்க மனம் படபடக்கிறது

poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Mon Nov 19, 2018 10:12 pm

பகிர்தமைக்கு  நன்றி!! வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 1f60d

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 22, 2018 9:13 am

சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,

முழுப்படையுடன் ஆற்றைக் கடந்து செவ்வரிமேட்டின் உச்சியில் ஏறி நின்றான் பாரி. எதிர்ப்புறம் பறந்து விரிந்துகிடந்தது நிலப்பரப்பு. எங்கும் எருக்கும் நெருஞ்சியும் விளைந்துகிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேடுபள்ளம் எதுவும் இல்லாமல் வானின் விளிம்பு வரை சமமாய்க் கிடக்கும் மண்ணை வாழ்வில் முதன்முறையாகப் பார்த்தான் பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83b_1542793274

அந்த நிலத்தின் வடதிசை ஓரத்தில் இருக்கும் கோட்டையைச் சுற்றி எண்ணற்ற யானைகள் நின்றிருந்தன. அங்கிருந்து தென்திசையில் மிகத் தொலைவில் வேந்தர்படை நின்றுகொண்டிருந்தது. கோட்டையிலிருந்து மிக விலகி ஏன் நிற்கிறார்கள் எனப் புரியவில்லை. யானைப்படையால் சூழப்பட்ட கோட்டைக்குள் நீலன் இருக்கிறான் என்பது உறுதிப்பட்டது. ஆனால், அந்த இடத்தைவிட்டு காதத்தொலைவு தள்ளி பெரும்படை நிற்கிறது. `ஏன் இந்த உத்தி?’ என்று சிந்தித்தபடி நின்றான் பாரி.

காற்றில் வந்த சுருளம்புகளின் தாக்குதலால் செவ்வரிமேட்டில் முன்நிலையில் நின்ற வேந்தர்படை வீரர்கள் முற்றிலுமாக அழிந்தனர். இரண்டாம், மூன்றாம் நிலையில் இருந்தவர்கள் அப்படியே உள்வாங்கி நெடுந்தொலைவைக் கடந்து உள்நிலத்துக்கு வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்து நிலைகொள்ளும்வரை பறம்புப்படை செவ்வரிமேட்டுக்கு மேலே வந்துசேரவில்லை. ஆற்றைக் கடப்பதற்கு, நினைத்ததைவிட அதிக நேரமாகியிருக்கிறது. அது வேந்தர்படைக்கான வாய்ப்பாக அமைந்தது.

மிக நீண்டநேரம் கழித்து செவ்வரிமேட்டுக்கு மேலேயேறிய பறம்புப்படை பாய்ந்து முன்னேறி வராமல் அப்படியே நின்றது. தொலைவிலிருந்து அதை மையூர்கிழாரும் வேந்தர்களும் உற்றுக்கவனித்தபடி இருந்தனர்.

`நாம் வெகுதொலைவு உள்ளே வந்துள்ளோம். ஆனால், நாம் வந்த இந்தத் தொலைவுதான் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டுகிறது. உள்நிலப்பரப்புக்குள் வர அவர்களுக்குத் தயக்கமும் மிரட்சியும் இருப்பதை அவர்களின் செயல் வெளிப்படுத்துகிறது’ என்று கருதினர்.

மையூர்கிழார் சொன்னார், ``இதுதான் நாம் முதன்முதலில் போர்க்களத்துக்காகத் தேர்வுசெய்த இடம். முடத்திருக்கண் இங்கேதான் திசைவேழரை அழைத்துவந்தான். ஆனால், நமது திட்டத்துக்கு எதிராகச் செயல்பட்ட திசைவேழர், அவர் தேர்வுசெய்த தட்டியங்காட்டிலேயே செத்தொழிந்தார். வெங்கல்நாட்டின் பெருந்தெய்வம் வெண்ணிறை மாடச்சி குடிகொண்டுள்ள நிலம் இது. மலைக்காட்டில் உள்ள தீயசக்திகளை நிலத்தில் அண்டவிடாமல் மனிதர்களையும் மாட்டினங்களையும் காக்கும் மாடச்சியின் நிலத்துக்கே நாம் வந்து சேர்ந்துள்ளோம். இங்குதான் பாரியின் அழிவு நிகழப்போகிறது. காட்டுப்புலிகள் நாட்டுமாடுகளை வேட்டையாடிய காலம் முடிந்துவிட்டது. நாம் திருப்பித் தாக்கி அவர்களை முழுமுற்றாக அழித்தொழிக்க தெய்வம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், வேந்தர்கள் மூவருக்கும் வெற்றி உறுதி’’ என்றார்.

இதுவரை பேசியதுபோல் அல்லாமல், இப்போது தெய்வத்தை துணைக்கு அழைத்துப் பேசினார். மனிதனின் எந்த முயற்சியின் வழியேயும் கிடைக்காத நம்பிக்கை, தெய்வத்தின் பெயரால் ஏற்படுகிறது. வேந்தர்கள் மறுப்புச்சொல் ஏதும் சொல்லவில்லை. அடுத்த கணமே தனது திட்டத்தைக் கூறலானார் மையூர்கிழார். அவரது வேகமும் வெறியும் முன்னிலும் கூடுதலாக இருந்தன. காரணம், வேந்தர்கள் மூவரும் மனதளவில் போரை கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர் என்பதை அவர் அறிவார். மூவேந்தர்களும் இந்த நிலம்விட்டு அகன்று தங்களின் தலைநகரங்களுக்குப் போய்விடுவார்கள். ஆனால், இனி தானோ, தனது நாடோ இங்கு இருக்க இயலாது. அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. மீதம் இருப்பதும் இன்றைய பகலுக்குள் முடிந்துவிடும். எனவே, கிடைக்கும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி, பாரியை அழிக்க வேண்டும் என நினைத்தார்.

``கண்ணுக்கு முன்னால் இருப்பது பறம்பின் சின்னஞ்சிறிய படை. நமது திட்டத்தால் அவர்களை மூன்றாகப் பிரிப்போம். வடதிசையில் யானைகளால் பாதுக்காக்கப்படும் கோட்டையைச் சுற்றி மாகனகன் தலைமையிலான படை நின்றுகொண்டிருக்கிறது. நானும் அரசகுல மாவீரர்களான சோழவேழனும் பொதியவெற்பனும் வலிமையான படையோடு நடுவில் இந்த இடத்திலேயே அணிவகுத்து நிற்கிறோம். சிறப்புக் கவசப்படை வீரர்களோடு மூவேந்தர்களும் தென்கோடியில் பாதுகாப்புடன் நில்லுங்கள். எதிரிகள் மூன்று கூறுகளாகப் பிரிந்தே ஆவார்கள். மூன்றாகப் பிரிந்தால் ஒரு கூட்டத்தில் முந்நூறு பேருக்குமேல் இருக்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய மாவீரர்களாக இருந்தாலும் நமது வலிமையால் அவர்களை எளிதில் வீழ்த்த முடியும். அவர்களில் முக்கியமானவர்கள், யானைப்படையைத் தாக்க வடக்குக் கோட்டையை நோக்கிப் போவார்கள். அப்போது நாங்கள் அவர்களைச் சுற்றிவளைத்துத் தாக்கி அழிப்போம்’’ என்றான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83a_1542793306

மையூர்கிழாரின் திட்டம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தார் குலசேகர பாண்டியன். `ஆற்றில் இறங்கியவர்களை அழிக்கப் போன கருங்கைவாணன், இன்னும் வந்துசேரவில்லை. நாம் மிகவும் உள்ளே தள்ளிவந்துவிட்டோம். எஞ்சியிருக்கும் படைவீரர்களில் பெரும்பாலானோர் சேர வீரர்களே. இப்போது தாக்குதல் வேண்டாம் என முடிவெடுத்தால் உதியஞ்சேரல் உடனடியாகப் பிரிந்துவிடுவான். நமது நிலைமை மிகவும் வலிமை குன்றியதாக மாறிவிடும். நாம் தப்பிப்பதே கடினமாகிவிடும். எனவே, மையூர்கிழாரின் ஆலோசனையை ஏற்று நம்பிக்கையோடு போரிடுவதாக முடிவெடுப்போம். அப்போதுதான் படையை ஒன்றுபடுத்தி நிறுத்த முடியும். போரின் போக்கிற்கேற்ப அடுத்தகட்டத்தை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். ஏனென்றால், இது வெங்கல்நாட்டின் எல்லைப்பகுதி. இதற்கு கீழ்ப்பகுதியில் இருப்பது ஊறல்காடு. அதுபற்றி மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது. யாராலும் அதற்குள் நுழைந்து வெளியேற முடியாது. நாம் எளிதில் தப்பிக்கலாம்’ என மனதில் எண்ணியபடி மையூர்கிழாரின் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி கொடுத்தான் குலசேகரபாண்டியன்.

செங்கனச்சோழனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது. இவ்வளவு பேரழிவுக்குப் பிறகும் எப்படி எதிர் நின்று தாக்கும் முடிவை எடுக்கிறார் குலசேகரபாண்டியன் என்பது விளங்கவில்லை. `கோட்டைக்குள் இருக்கும் நீலனை வெட்டி வீசச் சொல்லிவிட்டு, நாம் பாதுகாப்பாக இந்த இடம்விட்டு நீங்கலாம்’ என்று நினைத்தான். ஆனால், அதைச் சொல்லும் நிலையில் சூழல் இல்லை. அவன் தந்தை சோழவேழன், மையூர்கிழாரைவிட பெருஞ்சினத்தோடு பிரிக்கப்பட்ட படைக்குத் தலைமையேற்றுப் போய்க்கொண்டிருந்தார்.

இதே குழப்பம் உதியஞ்சேரலுக்கும் இருந்தது. ஆனால், `சமவெளியில் நன்றாக உள்ளே வந்துவிட்டதால் பாரி இவ்வளவு தொலைவு மலையைவிட்டு விலகிவர மாட்டான். எனவே, படையை மூன்றாகப் பிரிப்பது சிறந்த உத்தி’ என நினைத்தான். அதேபோல `முந்நூறு யானைகளால் காக்கப்படும் கோட்டையைத் தாக்க, அவர்களால் கொண்டுவர முடிந்தது நான்கு யானைகள் மட்டுமே. மீதி யானைகள் வந்துசேர்வதற்குள் போர் முடிந்துவிடும்’ எனச் சிந்தித்தான் உதியஞ்சேரல். முக்கியமாக, குலசேகரபாண்டியன் வேறு பக்கம் போகாமல் தங்களோடு இங்கே இருப்பதற்கு ஒப்புக்கொண்டதால், இந்தத் திட்டத்தின் மீது வேறு ஐயம் எதுவும் தோன்றவில்லை.

கருங்கைவாணன் வந்துசேரும் வரை மூவேந்தர்களின் கவசப்படையின் முன் தளபதியாக உசந்தன் நிற்பது என முடிவானது. ஏறக்குறைய தன் வீரர்களை முழுமுற்றாக இழந்து நிற்கும் செங்கனச்சோழன், சோழப்படைத் தளபதி உசந்தன் தனது அருகில் இருப்பதை ஆறுதலாக உணர்ந்தான்.

மையூர்கிழார் திட்டப்படி, போதுமான இடைவெளியோடு வேந்தர்படை மூன்றாகப் பிரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான வீரர்களோடு பொதியவெற்பன், சோழவேழன் ஆகியோரோடு நடுவில் இருக்கும் படையில் வீறுகொண்டு நின்றார் மையூர்கிழார்.

செவ்வரிமேட்டில் ஏறிய பறம்புப்படை, ஏதும் செய்யாமல் அப்படியே அங்கு நின்றது. முன்னேறுவதா அல்லது திரும்புவதா என்ற குழப்பத்தில் அவர்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதேநேரம் அவர்கள் வராமல் நாம் முன்சென்று தாக்க வேண்டாம் என்ற முடிவோடு இருந்தார் மையூர்கிழார்.

மேட்டுநிலம் ஏறியவுடன் எதிரிகளை நோக்கி முன்னேறாமல் படையை அப்படியே நிறுத்தியிருந்தான் பாரி. எதிர்களின் படை மீண்டும் பிரிந்து விலகுவதைப் பார்த்தான்.

வடகோடியில் யானைப்படையால் சூழப்பட்ட கோட்டை இருந்தது. தென்கோடியில் கவசம் அணிந்த குதிரைவீரர்கள் நிறைந்த சிறுபடை இருந்தது. இவை இரண்டுக்கும் இடையே தனக்கு நேரெதிராக வெகுதொலைவில் பெரும்படை ஒன்று அணிவகுத்து நின்றது. காலாட்படை வீரர்களால் நிறைந்துள்ள அந்தப் படையில் ஆங்காங்கே குதிரையில் சில வீரர்கள் நின்றனர். அவர்கள் அணிந்துள்ள கவசங்களின் தன்மையைவைத்து அவர்கள் தளபதிகளாகவோ, வேந்தர்களாகவோ இருக்க வாய்ப்புண்டு எனக் கருதினான் பாரி. இடதுபக்கம் ஆற்றைக் கடந்து நான்கு யானைகளோடு மேலேறிய தந்தமுத்தத்துக்காரர்களுக்கு, சிறிது கால இடைவெளி தேவைப்பட்டது. அதற்கான நேரத்தைக் கணித்த
படி திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தான் பாரி.

`பறம்புநிலம்விட்டு வெகுதொலைவு வந்துள்ளோம். நாகக்கரட்டின் மேல் நின்று குறிப்புணர்த்தியதுபோல இப்போது எதையும் செய்ய முடியாது. நீலனை மீட்க இதுவே இறுதித் தாக்குதல். பறம்பின் மிக வலிமையான வில்வீரர்களிடம் மிகக் குறைவான அம்புகளே உள்ளன. எதிரிகள் நம்மை மூன்றாகப் பிரித்து எளிதாகத் தாக்கி அழிக்க நினைக்கிறார்கள்’ என எண்ணியபடி பாரி சொன்னான், ``கோட்டைக்குள் இருக்கும் நீலனை மீட்பதே முதற்பெரும் வேலை. தந்தமுத்தத்துக்காரர்களின் தாக்குதல் தொடங்கியவுடன் மின்னல் வேகத்தில் செயல்படவேண்டும். எல்லா வகைகளிலும் நமது வலிமையான தாக்குதல் அங்கு நிகழவேண்டும். எனவே, முடியனும் உதிரனும் திறன்மிக்க வீரர்களோடு வடதிசைக்குப் போங்கள். விண்டன் சிறிய அளவிலான குதிரைவீரர்களை அழைத்துக்கொண்டு தென்கோடியில் இருக்கும் கவசப்படையைத் தாக்கட்டும். காதத்தொலைவுக்கு அப்பால் ஆற்றின் கரையிலிருந்து வந்துகொண்டிருக்கும் காலம்பன், அவனோடு இணைந்துகொள்ளட்டும். அதுவரை விண்டன் நிதானமான தாக்குதலை நடத்தட்டும். நடுவில் இருக்கும் இந்தப் பெரும்படையை நான் எதிர்கொள்கிறேன்’’ என்றான் பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83c_1542793476

அதிர்ந்தான் முடியன். ``நடுவில்தான் எதிரிகளின் வலிமைமிகுந்த படை அணிவகுத்து நிற்கிறது. அப்படியிருக்க, எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்த வீரர்களோடு பறம்புத்தலைவன் தனித்துப்போவது சரியல்ல’’ என்றான்.
``இப்போது முக்கியம், நீலனை மீட்பது. நீயும் உதிரனும் அந்தக் கோட்டையை நோக்கி முழு வேகத்தோடு முன்னேறுங்கள். நடுவில் நிற்கும் இந்தப் பெரும்படை உங்களை நோக்கி வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றான். முடியன், உதிரன், விண்டன் மூவரும் இதை ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் உதிரனோ, விண்டனோ பாரியை மறுத்துப் பேச முடியாது. முடியன் மீண்டும் சொல்ல வாயெடுத்தபோது ``அங்கே பார்’’ என்றான் பாரி. அவன் கை நீட்டிய வடதிசையை அனைவரும் பார்த்தனர்.

கொண்டுவந்த நான்கு யானைகளில் மூன்று யானைகளை முன்னங்கால்களை மண்டியிடவைத்து நிறுத்தினர் தந்தமுத்தத்துக்காரர்கள். ஒரு யானை மிகவும் பின்னால் நின்றுகொண்டிருந்தது. ``வேலை தொடங்கிவிட்டது. உடனே அவ்விடம் போ’’ என்றான் பாரி. அதன்பிறகு பேச இடம் ஏதுமில்லை. தங்களுக்கான வீரர்களோடு முடியனும் உதிரனும் அந்த இடம் விரைந்தனர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83d_1542793499

கோட்டையைச் சுற்றி முந்நூறு யானைகளை அணிவகுத்து நிறுத்தியிருக்கும் அல்லங்கீரன், தன் எதிரிகள் மூன்று யானைகளை மண்டியிடவைத்துக்கொண்டிருப்பதை உற்றுப்பார்த்தான். அவனது யானைப்படைக்குப் பின், பெருந்தளபதி மாகனகன் தனது சிறப்பு வீரர்களோடு நின்றிருந்தான். சிறுவயது முதல் யானைப்போரில் பயிற்சிகொண்டு இணையற்ற பெருவீரனாக வளர்ந்தவன் அல்லங்கீரன். யானைப்படையின் தளபதியாக நீண்டகாலம் இருந்த அவன், வயதானதால் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டான். ஆனாலும் யானைகளின் மீதிருந்த காதலால் கட்டுத்தறியின் காவலனாகப் பொறுப்பேற்று அந்தப் பணியைச் செய்துவந்தான். எதிர்பாராமல் தட்டியங்காட்டுப் போரின் கடைசி நிலையில் மூவேந்தர்களின் யானைப்
படைக்கு அவன் தலைமை தாங்கும் நிலை உருவானது. வாழ்வு முழுவதும் யானைப்போரிலே கழித்த அல்லங்கீரன், எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தான். ஆனால், ``போரிடவேண்டிய எதிரிகளோ மூன்று யானைகளை மட்டுமே கொண்டுவந்து மண்டியிடவைத்து ஏதோ சடங்கு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்ன இதுவென்று புரிவில்லை’’ என அலுத்துக்கொண்டான்.

தந்தமுத்தத்துக்காரர்கள், மூன்று யானைகளையும் முன்புறக் கால்களை மடித்து மண்டியிடவைத்தபடி, அவை ஒவ்வொன்றின் பின்புறக் குதத்திலும் வட்டவடிவ நீள்மூங்கிலைச் செருகினர். தாங்கள் குடுவையில் கொண்டுவந்த மூலிகைச் சேர்மானத்தை அதில் ஊற்றினர். அப்போது முன்புறம் நின்றிருந்தவர்கள் நெல்லிக்காய் அளவு உருண்டைகளை யானைகளின் அடிநாக்கில் வைத்தனர்.

தொலைவிலிருந்து அதைப் பார்த்த பாரி, தாக்குதலைத் தொடங்கும் நேரத்தைக் கணித்து உத்தரவிட்டான். குரல் கேட்ட கணம் விண்டன் குதிரைவீரர்களோடு தென்கோடியில் இருக்கும் கவசவீரர்களைத் தாக்க விரைந்தான். இருபுறமும் வீரர்கள் பிரிந்தவுடன், இருக்கும் சின்னஞ்சிறு படையைக்கொண்டு முன்னே நிற்கும் வேந்தர்படையை நோக்கி முன்னேறத் தொடங்கினான் பாரி.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 22, 2018 9:18 am

தனது திட்டப்படி எதிரிகள் மூன்றாய்ப் பிரிந்துவிட்டனர் என்பதைப் பார்த்த கணம், வெற்றிக் கூச்சலிட்டார் மையூர்கிழார். அது வீரர்களுக்கும் பெருந்தினவைக் கொடுத்தது. வெகுதொலைவிலிருந்து சின்னஞ்சிறு கூட்டம் முன்நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தது. வருகிறவர்களை உருத்தெரியாமல் அழிக்கவேண்டும் எனக் காத்திருந்தனர் பொதிய வெற்பனும் சோழவேழனும்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83e_1542793536

விண்டன், தென்கோடியை நோக்கி குதிரையை விரட்டிக்கொண்டிருந்தான். முடியனும் உதிரனும் தந்தமுத்தத்துக்காரர்களை வந்தடைந்தனர். கணநேரம்கூட காலம் தாழ்த்தாமல் உள்நுழையவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை, தங்களிடம் பாரி கொடுத்துள்ளான் என்னும் எண்ணமே சற்றே பதற்றத்தைக் கொடுத்தது. மிகமிகக் குறைந்த வீரர்களுடன் எதிரிகளின் பெரும்படையைத் தாக்க பாரி முன்னேறிக்கொண்டி ருப்பது பதற்றத்தை மேலும் அதிகமாக்கியது. நீலனை மீட்டவுடன் விரைந்துபோய் பாரியோடு இணைய வேண்டும் எனத் துடிப்பேறி இருந்தான் முடியன்.

மூலிகைச்சாறு முழுவதும் ஊற்றப்பட்டவுடன் மூங்கிலை உருவி எடுத்தனர். மண்டியிட்ட முன்னங்கால்கள் மேலெழுந்தன. ஒவ்வொரு யானைக்கு அருகிலும் அவை ஒவ்வொன்றின் காலின் பெருநகக்கணுவை மிதித்தபடி வாய்க்குள் கையை விட்டு நாக்கைப் பிடித்துக்கொண்டு சரியான பொழுதுக்காகக் காத்திருந்தனர், அந்தந்த யானையின் பாகன்கள். அச்சமென்பது துளிகூட இல்லாதவன் மட்டுமே செய்யக்கூடிய வேலை இது.

யானைக்கு மதம் உண்டானால் காடு தாங்காது என்பது, பொதுவழக்கு. ஆனால், குட்டமதம், சரளமதம், உள்மதம் என்று மூன்று வகை மதங்கள் உண்டு. இந்த மூன்று வகை மதங்களையும் பிற யானையைக்கொண்டும் பாகன்களைக்
கொண்டும் மாற்று நஞ்சைச் செலுத்தியும் அடக்கலாம். ஆனால், இந்த மூன்றுக்கும் அப்பால் நான்காம் வகை மதம் ஒன்று உண்டு. அதன் பெயர், எரிமதம். அந்த வகை மதம் கண்டால், அந்த யானையை எதிர்கொள்ள எந்த உயிராலும் முடியாது. தனது நிழலையே கொல்ல விரும்பும் மதம் அதுதான். மதம்பிடித்த மற்ற யானைகள் பிளிறினால், அந்தக் காட்டில் மனிதன் எங்கு இருந்தாலும் பிளிறல் கேட்ட கணத்தில் கைகால்கள் தானே பின்னிக்கொள்ள கீழே விழுவான். பிளிறலின் அதிர்வு மனிதனின் உள்ளியக்கத்தை நிலைகுலையச்செய்துவிடும். ஆனால், எரிமதம் கண்ட யானையின் பிளிறலைக் கேட்டால் யானையே கால்கள் பின்னி கீழே விழும்.

தந்தமுத்தத்துக்காரர்களால் யானைக்கு நான்கு வகையான மதத்தையும் உருவாக்க முடியும். மதமே யானையின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும். மதமே யானையின் மிகச்சிறந்த குணம். அந்தக் குணத்தை யானைக்கு வரவழைப்பது தந்தமுத்தத்துக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த செயல்.

யானைகளின் நாக்கைப் இறுகப் பிடித்திருந்த ஒவ்வொருவனும், அது பெருகும் வேகத்தைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கினர். முதலில் எரிமதம்கொண்ட யானையின் நாக்கு பெருகும். பிறகு அதன் முகம், கன்னம், துதிக்கை ஆகிய மூன்றும் பெருகும். நாக்கு பெருகி முடித்து முகம் பெருகத் தொடங்கும் முன், அதன் தன்மை உணர்ந்து அனைவரும் விலக வேண்டும்.

நாக்கு பெருக்கத் தொடங்கியவுடன் அதிலிருந்து கையையும் காலின் பெருநகக் கணுவிலிருந்து தமது காலையும் ஒரே நேரத்தில் விலக்கிக்கொண்டு ஓசை எழுப்பியபடி அந்த இடம்விட்டு மூன்று பாகன்களும் ஓடத் தொடங்கினர்.

பாகன்கள் விட்டுவிலகிய கணம், மூன்று யானைகளும் தங்களுக்கு எதிரில் திரண்டிருக்கும் யானைக்கூட்டத்தை நோக்கி ஓடத் தொடங்கின. எரிமதத்துக்கான சேர்மானம், உடல் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது.

மிகச்சில வீரர்களை மட்டுமே கொண்டிருந்த பாரி, எதிரே நிற்கும் வேந்தர்படையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். எவ்வளவு முயன்றும் போரைத் தவிர்க்க முடியவில்லை. கடந்த ஆறு நாளாக எவ்வளவு முயன்றும் போரை முடிக்க முடியவில்லை. இன்றோடு எல்லாம் முடிவுக்கு வரவேண்டும். இனி பச்சைமலைத் தொடரை நோக்கி வேந்தர்களின் வேற்கம்புகள் ஒருபோதும் நீளக் கூடாது என்ற முடிவோடு முன்னோக்கிச் சீறிக்கொண்டிருந்தான் பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83f_1542793565

எரிமதம் கண்ட யானைகள், தமது காதுகள், முகம், வால் ஆகிய நான்கையும் நிலைகொள்ளாமல் ஆட்டின. பிளிறல் தொடங்கும் முன்பு நடக்கும் செயல் இது. தங்களை நோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் மூன்று யானைகளின் மீதும் பாகன்கள் இல்லை. ஆயுதங்கள் ஏந்திய வீரர்களோ, முகப்படாமோ கவசமோ இல்லாமல் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், `தன்மையும் வேகமும் மிகவும் மாறுபட்டதாக இருக்கின்றனவே!’ என அல்லங்கீரனுக்குத் தோன்றியது. எனினும், வெறும் மூன்று யானைகளால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்துடன் அவற்றின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்.

அதே மனநிலையோடுதான் மையூர்கிழார் நின்றுகொண்டிருந்தார். மூன்றாகப் பிரிந்த பறம்புப்படையின் மிகச்சிறிய பகுதி மட்டுமே தங்களை நோக்கி வருகிறது. `வரும் படையில் குதிரைகளும் இல்லை; வில்வீரர்களும் இருப்பதுபோல் தெரியவில்லை. பிறகு, எந்த நம்பிக்கையில் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்ற சிந்தனையில் நின்றுகொண்டிருந்தார்.

அதுவரை தந்தத்தின் மேலே துதிக்கையை முறுக்கியபடி ஓடிவந்துகொண்டிருந்த யானைகள், இப்போது துதிக்கையை இருபக்கமும் முழுமையாக வீசத் தொடங்கின. தலையை மறுத்து ஆட்டி, அதைவிட வேகமாக காதுகளை ஆட்டத் தொடங்கின. யானையை, மனிதனால் விரைவாக நடக்கவைக்க மட்டுமே முடியும்; ஒருபோதும் ஓடவைக்க முடியாது. ஏனென்றால், ஓடும் யானையின் மீது தூசுகூட நிற்காது; அப்புறம் மனிதனால் எப்படி அமர முடியும்? யானை ஓடும் நிலத்தில் புற்கள் மீது புள்ளினம் அமராது. யானை ஓடி மனிதன் பார்ப்பது மிகமிக அரிது. மனிதன் பார்த்ததெல்லாம் பாகன்கள் யானையை விரைவாக நடத்திச்செல்வதை மட்டும்தான். போர்க்களத்திலும் அந்தக் காட்சிதான் தென்படும்.

ஆனால், இப்போது அவர்களின் கண்களுக்கு எதிரில் வந்துகொண்டிருக்கும் யானைகள் விரைவாக நடந்துவரவில்லை. நிலம் அதிர வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பரப்பில் யானைகளின் ஓட்டத்தை முதன்முறையாகப் பார்க்கின்றனர். அவற்றின் முதுகெலும்பு வளைவுகள் எம்பி இறங்கின. பார்த்துக்கொண்டிருந்த அல்லங்கீரனுக்கும் அவர்களின் யானைகளின் மீது இருக்கும் பாகன்களுக்கும் கண்களில் நடுக்கம் துளிர்க்கத் தொடங்கியது.

பாரியைத் தொடர்ந்து சிறுபடை வந்துகொண்டிருந்தாலும் அவனைச் சுற்றி ஓடிவந்த ஐவர், பாரிக்கான ஆயுதங்களோடு ஓடிவந்தனர். பாரியால் எதிரில் நிற்கும் மொத்தப் படையையும் அழித்தொழிக்க முடியும் என பறம்புவீரன் ஒவ்வொருவனுக்கும் தெரியும். ஆனால், எந்த ஆயுதத்தால் எப்படிப்பட்ட தாக்குதலை நடத்தப்போகிறான் என்பதைக் காண, உடன் ஓடிவரும் வீரர்கள் ஆர்வத்தோடு இருந்தனர்.

ஒருவன், மூவிலைவேலினைப் பெருங்கட்டாகத் தூக்கி வந்துகொண்டிருந்தான். இன்னொருவன், கண்டரக்கோடரிகளை ஏந்திக்கொண்டு வந்தான். வாள் வகைகளையும் வில்அம்பு வகைகளையும் இருவர் எடுத்து வந்தனர். இவர்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதங்களை எடுத்துவந்தனர். ஆனால், இவர்கள் நால்வரைவிட பின்தங்கி ஐந்தாவதாக ஒருவன் வந்துகொண்டி ருந்தான். காரணம், அவன் தூக்கிவந்த ஆயுதம். அதன் பெயர் எறுழ்தடி.

அது தடிவகையைச் சேர்ந்த ஆயுதம். அதன் தலையில் இரும்புக் களிமண்ணை உருக்கி உருளையாய் வார்த்திருப்பர். அந்த உருளையின் நடுப்பகுதியில் முளைவிடும் விதையளவு இரும்பினால் ஆன மழு எம்பி இருக்கும். தடிவகை ஆயுதமெல்லாம் தாக்கி அழிக்கும் தன்மையைக்கொண்டவை. ஆனால் எறுழ்தடி, தாக்கும் ஆயுதமன்று; சிதைக்கும் ஆயுதம். பாறையோ, பெருமரமோ, எதுவாக இருந்தாலும் எறுழ்தடியால் ஓரடி அடித்தால் சிதைந்து நொறுங்கும். இணையற்ற வலிமைகொண்ட மாவீரர்களால் மட்டுமே கைக்கொள்ள முடிகிற ஆயுதம் அது.

வேந்தரின் படையை நெருங்கின யானைகள். எரிமதம் கண்ணைக்கட்டியது. கருவிழியைச் சுற்றியுள்ள வெண்மை மறைந்து தேன்நிறம் எய்தியது. தேன்நிறம் எரியத் தொடங்கியது. உடலுக்குள் ஏதேதோ நிகழ்ந்தன. கும்பத்தின் உச்சியில் இருக்கும் மயிர்க்கற்றைகள் தீக்கொழுந்துபோல் மேலெழுந்தன. பருத்து வீங்கிய துதிக்கையைச் சுழற்றியபடி தலை உயர்த்திப் பிளிறத் தொடங்கின. பத்து யானையின் பிளிறல் ஒரு மத யானையின் பிளிறலுக்குச் சமமல்ல. பத்து மதயானையின் பிளிறல் ஒரு எரிமத யானையின் பிளிறலுக்குச் சமமல்ல. காற்றெங்கும் பறக்கும் பறவைகள் கிடுகிடுத்தபோது ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக மூன்று யானைகள் விடாது பிளிறின. நேற்றிரவு இறங்கிய இடிகளின் மொத்த ஓசையும் ஒன்றாய் இறங்கிக்
கொண்டிருந்தது. எரிமதப் பிளிறலின் பேரோசை, வேந்தர்படை யானைகளின் உள்நரம்புகளை அதிரச்செய்தது.

படைக்கு அருகில் வந்ததும், ஆயுதத்தை வாங்க பின்னால் வந்துகொண்டிருப்பவனை நோக்கி கையை நீட்டினான் பாரி. ஒருவன் மூவிலை வேலையும் இன்னொருவன் கண்டரக்கோடரியையும் தர முன்வந்தனர். அவற்றை மறுத்து, இறுதியாக வந்துகொண்டிருந்தவனிடம் இருந்து எறுழ்தடியை வாங்கினான் பாரி.

வேந்தர்படையின் நடுவில் நின்றிருந்த மையூர்கிழார், `காததூரத்துக்கு அப்பால் இருக்கும் யானைப்படையின் பிளிறல் ஓசை, இதற்கு முன் கேட்டிராத அளவு இருக்கிறதே!’ என்ற நடுக்கத்தோடு பார்த்துவிட்டுத் திரும்பினான். திரும்பிய கனம் யானையின் தும்பிக்கையால் அடித்து வீசப்படும் மனிதர்களைப்போல, தனது படையின் முன்கள வீரர்கள் நாலா புறமும் வீசப்பட்டனர்.

எரிமத யானைகள் அருகே வரும்போது, வேந்தர்படை யானைகள்மேல் இருந்த பாகன்களையும் வீரர்களையும் வீசி அடித்துவிட்டு வெறிகொண்டு ஓடின. எந்த ஓர் உயிரினமும் தன் உயிர்காக்கும் செயலை உச்ச ஆற்றலோடுதான் நடத்தும். சிதறிய படையில் ஒன்றையொன்று சரித்துக்கொண்டு மேலேறியபடி ஓடின யானைகள்.

யானைகளே சரிந்து விழும்போது மனிதர்களால் என்ன செய்ய முடியும்? அல்லங்கீரன் எக்கணம் தூக்கிவீசப்பட்டான் என்பது தெரியவில்லை. மிதி பட்டு நசுங்கியபோது அவனது விழியொன்று உருண்டோடியது.

கட்டுத்தறிக்குப் பழகிய யானைகள் காட்டுயானைகளின் முன் நிற்காது. இவை, காட்டுயானைகள் மட்டுமல்ல; எரிமதம்கொண்ட யானைகள். இவற்றின் பிளிறல்கள் மற்ற யானைகளின் நினைவுப்புலனில் இருக்கும் ஆதி அச்சத்தை விடாது கிளறுபவை. அந்த ஓசையை கணநேரம்கூட அவற்றால் கேட்க முடியாது. ஆனால், எரிமத யானைகளோ விடாது பிளிறக்கூடியவை. ஆயிரம் வீரமுண்டா வாத்தியங்களை ஒன்றாய் இசைத்தாலும் இவற்றின் பிளிறல் ஓசைக்கு முன்னால் அவற்றின் ஓசை சிறுத்து ஒடுங்கும்.

வேந்தர்படையைத் தாக்கி முன்னேறினான் பாரி. உன்மத்தம் ஏறிய யானையின் தாக்குதலைவிட வலிமையானதாக இருந்தது அது. எறுழ்தடியால் தாக்கப்பட்டவர்கள் யானை மிதித்தால் எப்படி உருத்தெரியாமல் ஆவார்களோ, அப்படி ஆனார்கள். அடிவாங்கிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டவனைத் தாண்டி அவனது தசைகள் போய் விழுந்தன. அதைப் பார்த்த மற்ற வீரர்கள் மிரண்டு ஓடத் தொடங்கினர்.

பிளிறலோடு முன்னேறி வந்த எரிமத யானைகளின் வேகம் கண்டு மற்ற யானைகளால் ஓட முடியாது. விரட்டிவந்த வேகத்தில் முன்னால் சென்ற யானை ஒன்றின் பின்கால் சப்பையில் அடித்தது. அடிவாங்கிய கணமே கமுக்கட்டை உடைந்து கீழே விழுந்தது அந்த யானை. விழுந்த யானையின் காலைப் பிடித்து தூக்கிச் சுழற்றியது எரிமத யானை ஒன்று.

கண்ணுக்கு அப்பால் தூக்கிவீசப்படும் வீரர்களைப் பார்த்து பொதியவெற்பனும் சோழவேழனும் நடுங்கிப்போயினர். என்ன நடக்கிறது என்பதை அறிய, மையூர்கிழார் சற்றே முன்னேறி வந்தார். சிதையும் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களை உச்சரித்தபடி வேகமாக முன்னேறி வந்தவர், அருகில் நெருங்கியதும் எதிர்ப்பட்ட காட்சியைக் கண்டு உறைந்து நின்றார். எறுழ்தடியைச் சுழற்றிக்கொண்டு முன்னேறியவன் பறம்பின் தலைவன் பாரி.

அவனைப் பார்த்த கணம், நினைவின் புலனுக்குள் மூழ்கிக்கிடந்த ஆதி அச்சம் பீறிட்டு மேலே வந்தது. உள்நரம்புகள் அதிரத் தொடங்கின. அவனது கைகளால், நடுக்கத்தை மீறி ஆயுதத்தை இறுகப்பற்ற முடியவில்லை. அவனது உள்ளியக்கம் நிலைகுலைந்துகொண்டிருந்தது.

தட்டியங்காட்டில் எத்தனையோ முறை பறம்புத்தளபதிகளிடம் தப்பிப்பிழைத்தவன், பாரியின் எதிரே நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த வேகத்தில் நான்கு எட்டு முன்னோக்கிப் பாய்ந்தான் பாரி. பாயும் வேகத்தில் எறுழ்தடி காற்றைக் கிழித்து முன்னகர்ந்துகொண்டிருந்தது.

ஆட்டுக்குட்டியைப்போல யானை ஒன்று தூக்கி வீசப்படுவதை, தென்கோடியில் நின்றிருந்த வேந்தர்கள் மூவரும் பார்த்தனர். அந்த ஒரு காட்சி, அவர்களுக்குச் சொல்லவேண்டிய எல்லாவற்றையும் சொல்லியது. கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்ட முந்நூறு யானைகளும் சிதைக்கப்பட்ட புற்றிலிருந்து வெளியேறும் கறையான்களைப்போல ஓடிக்கொண்டிருந்தன. குலசேகரபாண்டியன், தனது இரண்டாம் திட்டத்துக்கு ஆயத்தமாகத் தொடங்கினான். `ஊறல்காட்டை நோக்கி வந்துவிடு’ என தன் மகனுக்குச் செய்தியைக் கூற மூன்று வீரர்களை மையப்படையை நோக்கி அனுப்பினான்.

வடகோடியில் நின்றிருந்த வேந்தர்படையைத் தாக்க அனுப்பப்பட்ட விண்டன், கடும்தாக்குதலை நடத்தினான். ஆனால், முன்னின்ற கவசப்படை வீரர்கள் மீது தனது சிறுபடையால் பெரும்பாதிப்பை உருவாக்க முடியவில்லை. ஆனாலும் காலம்பனின் வருகையைக் கணித்து அதற்கேற்ப தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.

எரிமத யானையின் தந்தத்துக்கு வேந்தர்படை யானை எதுவும் சிக்கவில்லை. ஆனால், பாரியின் எறுழ்தடிக்குச் சிக்கினார் மையூர்கிழார். நடுங்கும் கைகளோடு பாரியின் மீது வாள்கொண்டு தாக்குதல் தொடுக்க அவன் முற்பட்டபோது, எரிமத யானையின் காலில் கட்டெறும்பின் தலை நசுங்குவதைப்போல் எறுழ்தடியால் நசுங்கியது மையூர்கிழாரின் தலை.

குலசேகரபாண்டியன் பின்புறமாக நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தான் செங்கனச்சோழன். உசந்தன் தலைமையிலான நமது கவசப்படை வலிமையாக நின்று போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், கருங்கைவாணன் இன்னும் வந்துசேரவில்லை. சூழலின் மொத்தமும் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. யானைப்படை சிதைந்த கணமே நமது திட்டம் முழுமையும் தோல்வியடைந்துவிட்டது. தான் தப்பிப்பது மட்டுமே இப்போதைய தேவை என உணர்ந்தான் செங்கனச்சோழன். ஆனால், அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த சோழவீரர்களோ மிகமிகக் குறைவானவர்களே. அவர்களின் உதவியால் பாதுகாப்பாக அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது. அதுவும் அவனால் குதிரையில் உட்கார்ந்த நிலையில் விரைந்து செல்ல முடியாது. எழுவனாற்றில் ஏற்பட்ட தாக்குதலால் அந்நிலையை அடைந்தான். போதிய வீரர்கள் சூழவிருந்து தப்பித்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்ற நிலையில் தனது குதிரையை உதியஞ்சேரலை நோக்கிச் செலுத்தினான்.

யானைப்படை சிதைந்ததைப்போல நடுவில் நின்றிருந்த பெரும்படையும் சிதையத் தொடங்கியது. மையூர்கிழாரின் தலையை நசுக்கித் தூக்கி வீசினான் பாரி. அத்துடன் அந்தப் பெரும்படை, ஈரக்குலை நடுங்க உயிர்பிழைக்கும் ஓட்டத்தைத் தொடங்கியது. பாரியைச் சுற்றி நின்றவர்கள் தொலைவில் நிற்கும் சோழவேழனையும் பொதியவெற்பனையும் அடையாளம்காட்டினர்.

யானைப்படை சிதறிய வேகத்தில் கோட்டை அருகில் இருந்த வீரர்களை நோக்கி முடியனும் உதிரனும் பாய்ந்து முன்னேறினர். இந்தப் போரின் மிக முக்கியமான பணியே இனிதான் இருக்கிறது. சிறு கவனப்பிசகோ, வேகக்குறைவோ இருந்துவிடக் கூடாது. துல்லியமான தாக்குதலுக்கு ஆயத்தநிலையில் குதிரையில் விரைந்து கொண்டிருந்தனர் முடியனும் உதிரனும்.

உதியஞ்சேரலிடம் கைகள் குவித்துக் கேட்டான் செங்கனச்சோழன், ``என்னை, இந்த இடம்விட்டு பாதுகாப்பாய் வெளியேற்று.’’

மூன்றாம் நிலையில் நின்ற வேந்தர்படையில் அதிகம் இருப்பவர்கள் சேரவீரர்களே. அதனால்தான் உதியஞ்சேரலிடம் உதவி கேட்டான். ஆனால், உதவியாகக் கேட்காமல், ``இதை நீ செய்வதற்கு கைம்மாறாய் நான் உனக்கு ஒன்று தருகிறேன்’’ என்றான்.

``போர்க்களத்தின் கடைசிக் கணத்தில் உயிர்பிழைக்கத் தப்பிச்செல்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் எனக்கு என்ன தந்துவிட முடியும்?’’ எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

தனக்கு அருகில் நின்ற வேளக்காரப்படையைச் சேர்ந்த வீரனை நோக்கி செங்கனச்சோழன் கையை நீட்ட, அவனோ பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஓலைச்சுவடியின் கட்டொன்றை எடுத்துக் கொடுத்தான். அதை, உதியஞ்சேரலை நோக்கி நீட்டினான் செங்கனச்சோழன்.

`என்ன இது?’ என்று உதியஞ்சேரல் கேட்கும்முன் செங்கனச்சோழன் சொன்னான், ``பச்சைமலையில் உள்ள பதினான்கு வேளிர்குலங்களும், தங்களின் விலைமதிப்புமிக்கச் செல்வங்களை காலம்காலமாக பாழி நகரில்தான் சேமித்துவைக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த இடமும் அதற்கான குறிப்புகளும் மாறப்போவதில்லை. அந்த இடம் எங்கு இருக்கிறது என்ற குறிப்பை, காடர்களைக்கொண்டு அறிந்தேன். மிகத் துல்லியமான இந்தக் குறிப்பின் அடிப்படையில் தான் நான் எழுவனாற்றின் மேல்முனை வரை சென்றுவிட்டேன். ஆனால், அதன் பிறகு பாரியால் தாக்கப்பட்டு எனது படை அழிந்தது. காடர்கள் உருவாக்கிய அந்தக் குறிப்பு இந்த ஏட்டில் இருக்கிறது. இந்தப் போரில் வெற்றிபெற்றால், இதை பாண்டியனுக்கு வழங்கலாம் என்றிருந்தேன். ஆனால், போருக்குத் தலைமைதாங்கிய குலசேகரபாண்டியனோ நம்மிடம் சொல்லாமலேயே இந்தக் களம்விட்டு அகன்றுகொண்டிருக்கிறார். இனி, இது சேரர்களுக்குச் சொந்தம். என்னிடம் இன்னொரு படி இருக்கிறது. என்றைக்கானாலும் அந்தச் செல்வத்தை சேரனோ, சோழனோதான் கைப்பற்ற வேண்டும்’’ என்று சொல்லி அதைக் கொடுத்தான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83g_1542793618

உதியஞ்சேரலுக்கு மெய் சிலிர்த்தது. ``இது முன்னமே கிடைத்திருந்தால் இந்தப் போர்க்களத்துக்கே நான் வந்திருக்க மாட்டேனே!’’ என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போது காலம்பனின் பெருங்குரல் கேட்டது. கருங்கைவாணன் மாண்டுவிட்டான் எனத் தெரிந்த கணமே வேந்தர்களின் கவசப்படை நிலைகுலையத் தொடங்கியது. அந்தக் கணத்தில் விண்டன் எறிந்த ஈட்டி உசந்தனைக் குத்தித்தூக்கியது.

படை சிதறத் தொடங்கினாலும் சோழவேழன் தப்பி வெளியேற முயலவில்லை. அவன் பாரியை எதிர்கொள்ளவே முனைந்தான். பொதியவெற்பனும் அதே மனநிலையோடு பாய்ந்து முன்னேறினான். நாக்கைத் துருத்தி பல்லைக் கடித்தபடி விரைந்து வந்தான் சோழவேழன். ஓங்கிய எறுழ்தடியை நிறுத்திவிட்டு கண்டராக்கோடரியை வாங்கினான் பாரி.

யானைப்படையை பறம்பினர் முழுமையாகச் சிதறச்செய்துவிட்டனர் எனத் தெரிந்ததும், தளபதி மாகனகன் தனக்கு வழங்கப்பட்ட இரண்டாம் திட்டத்தை நிறைவேற்றும் முடிவுக்கு வந்தான். கோட்டைக்குள் இருக்கும் நீலனின் தலையை வெட்டி வீசிவிட்டுத் தப்பி வெளியேறுவதுதான் அந்தத் திட்டம். மாகனகன் தனது குதிரையைத் திருப்பி உட்கோட்டைக்குள் நுழைய நினைக்கும்போது உதிரனின் விற்படையினரின் அம்புகள் சீறிப்பாய்ந்தன. கணநேரத்துக்குள் கணக்கில்லாத அம்புகள் முழுவிசையோடு இறங்கின. மாகனகன் உள்ளே நுழைந்து நீலனை வெட்டிவிட்டுச் செல்வோமா அல்லது இப்போதே தப்பிச் செல்வோமா என ஒரு கணம் சிந்தித்தான். அப்போது முடியன் மின்னல் வேகத்தில் கோட்டையை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான்.

தமக்கு முன்னால் மொத்தப் படையையும் அழித்துக்கொண்டிருக்கும் பாரியை வீழ்த்தும் வெறியோடு சோழவேழனும் பொதியவெற்பனும் சூழந்து தாக்க முற்பட்டபோது, அவர்களின் தாக்குதலைத் தடுக்க எந்தவித முயற்சியும் பாரி செய்யவில்லை. அந்தத் தாக்குதல் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றியது. சோழவேழன் வீசிவந்த வாளை கண்டராக்கோடரியால் தட்டிவிட்ட வேகத்தில் அவன் கழுத்தில் கொடுத்து வாங்கினான் கோடரியை. கண்டராக்கோடரியின் கூர்மை, மலைவேம்பின் முண்டையே வெட்டி இறங்கக்கூடியது.

அறுத்து இழுக்கப்பட்ட கோடரியின் வேகத்தில் சோழவேழனின் தலை கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்தது. தனது குதிரைக்கு முன்னால் உருண்டு வந்த சோழவேழனின் தலையைப் பார்த்து மிரண்ட பொதியவெற்பன், தான் என்ன செய்யலாம் எனச் சிந்தித்தக் கணத்தில் அவனது நெஞ்சுக்குழிக்குள் இறங்கியது கண்டராக்கோடரியின் கைப்பிடி முனை.

வெளியில் நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் ஒரு வீரன்கூட கோட்டைக்குள் நுழையக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தான் உதிரன். அவன் வீசிய அம்புகள் கோட்டைவாயிலின் அருகே ஒருவரையும் நிலைகொள்ளச் செய்யவில்லை. அதையும் மீறி மாகனகன் உள்ளே நுழைய முயன்றான்.

குதிரையில் பாய்ந்து வந்துகொண்டிருந்த முடியனின் கண்கள், கோட்டை வாசலில்தான் நிலைகுத்தி இருந்தன. மாகனகன் கோட்டைக்குள் நுழையும் கணத்தில் அவனது கவசத்தைத் துளைத்துக்கொண்டு உள்நுழைந்தது முடியனின் ஈட்டி. வேந்தர்களின் கடைசி முயற்சியை பறம்பின் குடிமுடியன் குத்திச்சாய்த்தான்.

காலம்பன் பெரும் உறுமலோடு வந்து கவசப்படையைத் தாக்க முயலும்போது வேந்தர்கள் மூவரும் வெளியேறி இருந்தனர்.

முடியன் முழுவேகத்தோடு உள்ளே நுழையும் வரை அவனுக்குப் பின்னால் இருந்த உதிரனின் படை, இடைவிடாது அம்புகளைப் பாய்ச்சியபடி இருந்தது. நடுவில் நின்ற படை முற்றிலுமாகச் சிதறி ஓடிக்கொண்டிருந்தபோது, முடியன் கோட்டைக்குள் நுழைந்தான்.

நுழைந்த கணம் அவன் எழுப்பிய சீழ்க்கை ஓசை, எங்கும் எதிரொலித்தது.

பாரியும் காலம்பனும் விண்டனும் தங்களை எதிர்த்து நிற்கும் வீரர்கள் யாரும் இல்லாத களத்திலிருந்து சீழ்க்கை ஓசை கேட்ட கோட்டையை நோக்கி ஓடிவரத் தொடங்கினர்.

இந்த ஓசைக்காகக் காத்திருந்த தந்தமுத்தத்துக் காரர்கள் தனியே நிறுத்தியிருந்த நான்காம் யானையை, கோட்டை நோக்கி அழைத்துச் சென்றனர்.

பகலின் பதினைந்தாம் நாழிகை. கதிரவனின் வெப்பக்கதிர் நிலமெங்கும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. காணும் இடமெல்லாம் எருக்களை இலைகளும் நெருஞ்சி இலைகளும் குருதியை ஏந்தியிருந்தன.

எங்கும் மனிதக்கதறல் எதிரொலித்தது. குத்திச் சாய்க்கப்பட்ட குதிரைகளும் யானைகளும் ஈனக்குரலில் ஒலியெழுப்பின.

எரிமதம்கொண்ட யானையாலும் எறுழ்தடி கொண்ட பாரியாலும் நடுங்கிய நிலம், உச்சிப்பொழுதில் நிலைகொள்ளத் தொடங்கியது.

நான்காம் யானை, கோட்டையைவிட்டு வெளியேறத் தொடங்கியது. அதன் கழுத்தில் தந்தமுத்தத்துக்காரன் உட்கார்ந்திருந்தான். முதுகில் இலவம்பஞ்சால் சிறு நார்கொண்டு பின்னப்பட்ட விரிமெத்தையின்மேல் நீலன் அமர்ந்திருந்தான். அவன் பின்னே, முதுகின் மேல்நிலையில் பாரி அமர்ந்திருந்தான்.

நீலனின் இடதுகாலின் காயம் மிக வலிமையானதால், முழுப்பிடிமானமும் கிடைக்கவில்லை. யானையின் அசைவுக்கு ஏற்ப பின்னால் அமர்ந்திருந்த பாரியின் இடதுதோளில் சாய்ந்தபடி இருந்தான் நீலன்.

யானையைத் தொடர்ந்து முடியன், காலம்பன், உதிரன், விண்டன் ஆகியோரும் பறம்புவீரர்களும் ஏந்திய ஆயுதங்களோடு வந்துகொண்டிருந்தனர்.

தகிப்பேறிய கண்களும் சீற்றம் குறையாத முகமுமாக இருந்த பாரிக்கு, நீலன் தோளில் சாய்ந்த கணத்திலிருந்து வெப்பம் குறையத் தொடங்கியது. செந்தேன் நிறத்தில் எரிந்துகொண்டிருந்த அவனது கண்கள் வெண்மைகொள்ளத் தொடங்கின. எரிமதம் இறங்கத் தொடங்கியது.

அவர்களுக்கு முன்னே கிழக்கும் மேற்குமாக நீண்டுகிடந்த பச்சைமலைத் தொடர், தன் பிள்ளைகளுக்காகக் கைவிரித்துக் காத்திருந்தது. நடந்துகொண்டிருந்த யானையின் தந்தத்தின் மீது தும்பி ஒன்று வந்து அமர முயன்றது.

குனிந்து அதைப் பார்க்க முயன்ற பாரி, பறவை ஒன்றின் மாறுபட்ட ஓசையைக் கேட்டு தலைநிமிர்ந்து பார்த்தான்.

அவனது தலைக்கு மேலே காரமலையை நோக்கி ஓசையெழுப்பியபடி பறந்து கொண்டிருந்தது கருங்கிளி.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்




வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83k_1542793656

வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.

www.facebook.com/groups/500337410392609/

www.twitter.com/Vikatanvelpari




வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P83h_1542793689

அன்பு வாசகர்களே!

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘வேள்பாரி’ தொடர் குறித்த உங்கள் கேள்விகளை velpari@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டு அனுப்பவும். தேர்வாகும் கேள்விகளுக்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன் பதிலளிப்பார்.







புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 29, 2018 7:18 am

சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,

இன்று முழுநிலவு நாள். கொற்றவையின் கூத்துக்களம் நோக்கிப் பறம்புமக்கள் குவியத்தொடங்கினர். குருதியாட்டுவிழா தொடங்கவிருந்தது. போரின் இழப்புகளை வெற்றியின் மகிழ்வுகொண்டு மேவும் விழா இது. போர்த்தெய்வமான கொற்றவை தனது பசியாறி மகிழ்ந்திருப்பாள். அவளின் மகிழ்வை பறம்புநாட்டுப் பெண்களின் மகிழ்வாக மாற்றுவதே இத்திருவிழா.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48e_1543310879

மூவேந்தர்களுக்கு எதிராகப் போர் தொடங்கும்முன் கொற்றவைக்கு நீராட்டுவிழா நடந்தது. அவ்விழாவின்பொழுது நிறைசூல்காரியின் வயிற்றில் உள்ள கருவுக்கு வாக்களித்தாள் கொற்றவை. இம்மண்ணை அடுத்த தலைமுறைக்குக் காத்தளிப்பேன் என்று அவள் சொல்லிய சொல் இன்று மலர்ந்துள்ளது. வாக்கினைக் காத்தளித்த கொற்றவைக்கு நன்றிகூறும் பெருவிழா இது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48b_1543310902

இழப்பையும் வலியையும் கண்ணீரையும் கடந்தால் மட்டுமே மேடேறி வந்து நன்றி சொல்ல முடியும். இக்காடு காக்கப்பட்டது; இப்பறம்பு காக்கப்பட்டது. நிலமெல்லாம் காக்கப்பட்டதன் அடையாளமாய்ச் சிலிர்த்து நிற்கின்றன. இவ்வளவும் காக்கப்பட்ட நிலையில் எனது இழப்பை நினைத்து மட்டுமே வருத்தப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. இக்காப்பிற்கானதே அவ்விழப்பு. எனவே, இழப்பினைத் தன்னுள்ளிருந்து பிய்த்து எடுப்பதும் எடுத்த இடத்தில் பக்கு மேவப் புதுத்தோல் பரவி விரிவதுமே தேவை.

வீரர்களின் குருதியில் தோய்ந்த துணிகள் தீபங்களில் திரியாய் எரிந்துகொண்டிருந்தன. பந்தங்களில் ஒளிவீசிக்கொண்டிருந்தது. எரிந்து மறைதலும். ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்க முடியாது. ஒளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்.

கொற்றவையின் கூத்துக்களம் நோக்கி வழியெங்கும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. எல்லாம் ஒளிவீசும் வீர நினைவுகள். சுடரைத் தொட்டுவணங்கியபடி கூட்டங்கூட்டமாய் மக்கள் கூத்துக்களம் நோக்கி வந்தவண்ணமே இருந்தனர். பறம்பின் அத்தனை ஊர்களிலிருந்தும் சாரிசாரியாய் வந்துகொண்டிருந்தனர். குருதியாட்டு விழா தொடங்குவதுதான் இன்று; முடிவது என்றென யாராலும் கணிக்கமுடியாது. காட்டில் எத்தனை வகைக் கள்ளுண்டோ அத்தனையையும் குடித்து, கறிவகைகளை விடாது கடித்துண்டு, ஆட்டமும் பாட்டுமாய் இவ்விழா பலநாள்கள் நீடிக்கும்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48a_1543310944

பறம்பின் தென்னெல்லையிலிருந்து வடவெல்லைவரை உள்ள ஊர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வந்து திரும்ப முடியாது. எனவே, மக்கள் இரவும் பகலுமாக நாட்கணக்கில் வந்துகொண்டே இருப்பர். உள்ளங்கையில் பிடித்து வைத்திருக்கும் மணல் ஆற்றுநீருக்குள் கரைந்து மறைவதைப் போல விழா மகிழ்வில் கண்ணீர்த்துளி தனது போக்கில் மறையும். அதுவரை குருதியாட்டு விழா தொடரும்.

கொற்றவையின் கூத்துக்களத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள வட்டப்பானையில் நிறைநீர் தளும்பியிருக்கும். ஈன்றெடுத்த குழந்தையை அப்பானை நீரில் மிதக்கவிட்டபடி எள்முனையால் அதன் மார்பினைக் கீறுவர். துளிர்த்து மேலெழும் செங்குருதி நீரில் பரவியபடியிருக்க குழந்தையை வெளியில் எடுத்துவிடுவர். பின்னர், செந்தினையைக் குருதியோடு கலந்துவைப்பர். பிள்ளையை ஈன்றெடுத்த தாய் அக்குருதிச்சோற்றினைப் பிசைந்து கொற்றவைக்குப் படையலிடுவாள். மறுதலைமுறைக்கு மண்ணையும் மக்களையும் காத்தளித்தவளுக்குப் புதிய மனிதர்களின் குருதிகொண்டு செய்யும் நன்றிக்கடன் இது. குருதிச்சோறு ஊட்டப்பட்டவுடன் துணங்கை ஆட்டம் தொடங்கும்.

போர்த்துணங்கை கொற்றவைக்கு உரியது. குரவை ஆட்டம்போல ஆணும் பெண்ணும் தழுவியாடும் ஆட்டமல்ல இது. வெறிகொள் மாந்தர் சினந்தாடும் வெற்றிக்கூத்திது. முழவுதான் துணங்கைக்குரிய இசைக்கருவி. அதனுடன் ஆனைப்பறையை மட்டும் இணைத்துக்கொள்ளலாம். இருளேறிய கணத்தில் எவ்வியூரின் மேற்பாறையிலிருந்து மொந்தைக் குடமுழவம் இசைக்கப்படத் தொடங்கியது. குலநாகினிகள் கூத்துக்களம் நோக்கிப் புறப்பட்டதன் அடையாளம் அது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48f_1543311338

நாகினிகளின் முன்னே வெறிகொள் பாவையர் சுழன்றாடுவர். அவர்கள் அணிந்துள்ள மாலைகளில் உள்ள மலர்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிழும் வரை சுழன்றாடுவர். எதிரிகளின் கபாலமேந்தி சிலர் ஆடிவருவர். கபாலக்கூத்துக்கு மணிமுரசம் முன்செல்லவேண்டும். வெற்றியின் உச்ச ஆட்டம் அது. ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வகையான ஆட்டத்தோடு கூத்துக்களம் நோக்கி வந்துகொண்டிருந்தனர் பெண்கள். காடெங்கும் ஒளிசிந்திக்கொண்டிருந்த முழுநிலவுக்குக் கேட்டுத்திரும்பியது துணங்கைக்கான முழவொலி. நள்ளிரவு வரை வெறியாட்டம் ஆடி வந்துகொண்டே இருந்தனர் மக்கள். மூவேந்தர்களை வென்று முடித்த வெற்றிவிழாவை ஆடித்தீர்க்க இருகால்கள் போதவில்லை.

நாகக்கரட்டின் மேலே பறம்புப்படைகள் தங்கியிருந்தன. ஆனால், அவற்றுக்குப் பின்னால் இரலிமேட்டின் குகைகளில் முதுவேலன் இருந்தான். அதற்கு மேல் காரமலையின் உச்சிமுகட்டுக்குச் சற்றே கீழ்நிலையில் இருந்தபடி போரினை முழுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்கள். கீழே, தட்டியங்காட்டில் போரிடும் பறம்பு வீரர்கள் பொதுப்படையாகத் தெரிவர். தனித்த உருவம் தெரியாது, எந்த ஒருவனையும் அடையாளங்கண்டுவிட முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தனர். தட்டியங்காட்டுத் தாக்குதலின் தன்மையையும், குளவந்திட்டிலிருந்து பாரி உத்தரவு எழுப்புவதையும் நாகக்கரட்டிலிருந்து வாரிக்கையன் ஒலிக்குறிப்புகளை அனுப்புவதையும் அவர்கள் உச்சியிலிருந்து பகலெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இரவானதும் யாராவது ஒருத்தி ஒப்பாரிப் பாடலைப் பாடுவாள். அந்தப்பாடல் பெயர் அடையாளமற்று, உருவ அடையாளமற்று வீரத்தை மட்டுமே உருவகப்படுத்தி இருந்தது. எதிரிகளை கணக்கேயில்லாமல் கொன்றழித்த பறம்புவீரன் குருதிபெருக மண்ணில் மாண்டுவிழுவதைப் பற்றிய பாடலது.  அப்பாடலில் பாடப்படும் வீரன் தன் கணவனாகவோ, மகனாகவோ, காதலனாகவோ, தந்தையாகவோ, உடன்பிறந்தவனாகவோ இருப்பானோ என்ற எண்ணம்வராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் எல்லோரின் மரணத்தையும் மன அளவில் ஒவ்வோர் இரவிலும் சுமந்து கடந்து வெளிவந்து கொண்டிருந்தனர். வீரர்களின் குருதி பெண்களின் கைகளில் இரவெல்லாம் படிந்திருந்தன.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48h_1543311383

எவ்வளவு கொடிய தாக்குதல் நடந்தாலும் யார் இறந்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிக் கீழே போகக்கூடாது. கரியனூர் பெரியாத்தாதான் எல்லைக்காவலாக நின்றிருந்தாள். இளவயதுக்காரிகள் சில நேரங்களில் துக்கம் தாங்காமல் நான் போய்ப் பார்க்கவேண்டும் என்று துடித்துப் புறப்படுவார்கள். அவர்களையெல்லாம் தடுத்தாட்கொள்ள வேண்டும். காரமலையின் மேல்விளிம்பில் பெண்களின் கண்ணீர், உருளமுடியாத பெரும்பாறையாக உருத்திரண்டு நின்றிருந்தது. பால்கட்டிய மார்பென நீர்கட்டி நின்றன விழிகள்.

ஆறாம் நாள் நள்ளிரவு கூவல்குடியினர் எழுப்பிய ஓசை மலையெங்கும் எதிரொலித்தது. ஆறுநாட்களும் இறந்த யாருடைய பெயரும் அறிந்திராத பெண்கள் தேக்கனின் மறைவைக் கூவல்குடியினர் சொல்லக்கேட்டு நடுங்கிப்போயினர். அதுநாள் வரை யாரையும் எல்லைதாண்ட விடாமல் காத்து நின்ற கரியனூர் பெரியாத்தா தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, எல்லைதாண்டி இரலிமேட்டினை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அவளைப் பிடித்து நிறுத்துதல் எளிய செயலன்று. எல்லோரும் எவ்வளவோ முயன்றும் அவளை நிறுத்த முடியவில்லை. நாகினிகள் யாரும் இங்கில்லை. அவர்கள் எல்லோரும் எவ்வியூரில் இருந்தனர். பெரியாத்தாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தேக்கனின் மரணத்தைத் தாங்கிக்கொள்ளும் திடம் பறம்பில் யாரிடமும் இல்லை. இம்மலையின் பேராசான் போர்க்களத்தில் மாண்டான் என்பதை எப்படி நம்புவது? பெண்கள் ஏது செய்வதென்று தெரியாமல் திணறி நின்றனர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48i_1543311433

“இங்குள்ள பெண்கள் எல்லோருக்கும் தாய் நீ. மார்பில் அடித்து நீ கதறுவதை இளம்பிள்ளைகள் எப்படித் தாங்குவார்கள்? தேக்கன் தெய்வத்துக்கு நிகரானவன். அவனது மரணத்தை மனிதர்களான எங்களால் எப்படித் தாங்கமுடியும்? எங்களை ஆற்றுப்படுத்தவேண்டிய நீயே எல்லையைத் தாண்டினால் மற்றவர்களால் என்ன செய்யமுடியும்? துக்கத்தை வாயால் சொல்லித் துடித்தழு. அதை விடுத்து எல்லைதாண்டி முன்னகராதே” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தனர். ஆனால், அவளை யாராலும் தடுக்கமுடியவில்லை.

இறங்கிக்கொண்டிருந்த அவளை நோக்கி இறுதியாக இறங்கிவந்தாள் ஆதினி. என்ன சொல்லிப் பெரியாத்தாளை நிறுத்தப்போகிறாள் என்பதறியாது மற்ற பெண்கள் பார்த்துக்கொண்டி ருந்தபொழுது, அவளருகில் சென்று ஆதினி சொன்னாள். “மயிலாவுக்கு வலி கூடியிருக்கிறது. குழந்தை பிரண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வந்து எடுத்துக்கொடு.”

அதிர்ந்து நின்றவள் கண்ணீரைத் துடைத்தபடி, எல்லோரையும் விலக்கிக்கொண்டு “ஏம்மகளே…!” எனக் கத்தியபடி மயிலாவை நோக்கி ஓடினாள் பெரியாத்தா.

நிலவின் மஞ்சள் ஒளியில் காடே ஒளிர்ந்துகொண்டிருந்தது. கூத்துக்களம் நோக்கித் தன் பிஞ்சுமகவைத் தூக்கிவந்தாள் மயிலா. அவளைச்சுற்றி எண்ணற்ற தோழிகள் இருந்தனர். ஆனாலும் அங்கவைதான் அவளை முன்னடத்தி வந்தாள். ஆதினியும் மற்ற பெண்களும் அவளின் வருகையை எதிர்பார்த்துக் கூத்துக்களத்தில் காத்திருந்தனர்.

ஆண்கள், பெண்களுக்கு அப்பால் நின்றிருந்தனர். விரிபலகையில் நீலன் அமர்ந்தி ருந்தான். காயங்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை. அவனது வலப்புறம் கபிலர் அமர்ந்திருந்தார். இடப்புறம் முடியன் அமர்ந்திருந்தான். அவர்களுக்குப் பின்னால் உதிரனும் விண்டனும் நின்றிருந்தனர். காலம்பன் மற்ற பெரியவர்களுடன் எதிர்த்திசையில் அமர்ந்திருந்தான். முன்னும் பின்னுமாக, பறம்பெங்குமிருந்து வந்த கூட்டம் மொய்த்துக்கிடந்தது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48c_1543311504

கூத்துக்களத்தின் நடுவிலிருந்த வட்டப்பானையில் நிறைநீர் தளும்பிக்கொண்டிருந்தது. அருகில் வந்த மயிலா நீருக்குள் தன் மகவை மெள்ள உள்ளிறக்கினாள். பெண்கள் குலவையிடத் தொடங்கினர். பறம்புக்கு ஆசானான தேக்கன் இல்லாததால் முடியன் எழுந்துவந்தான். விரல் இடுக்கிலிருந்த எள்முனைகொண்டு மகவின் மார்பில் சிறுகீறலை உருவாக்கினான். குழந்தை அவனைப்பார்த்து வீறிட்டபொழுது குருதி நீருக்குள் கலந்திருந்தது. குலவையொலி எங்கும் பெருக மகவை பானையிலிருந்து மேலெடுத்தாள் மயிலா. தோழிகள் செந்தினையைக் கூடையில் கொண்டுவந்தனர். அதனை இருகைகளிலும் அள்ளி, குருதிநீரில் கலந்தாள். குலவையொலி மேலும் கூடியது. போர்க்களத்தில் மாண்டோரின் குருதிகொண்டு பிசையப்படும் பலிச்சோறது. நான்கு முறை கைகளால் அள்ளிப் போட்டவள். ஐந்தாம்முறை தினையை அள்ளும்பொழுது, “வேண்டா. அவ்வளவுதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு, தனது இடம் நோக்கி நகர்ந்தான் முடியன்.

வீரன் ஒவ்வொருவனின் குருதியாலும் ஒவ்வொரு தினையைப் பிசைந்து கொற்றவைக்குப் பலிச்சோறிடும் நிகழ்விது. இறந்த வீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு நான்கு பிடியோடு நிறுத்தினான் முடியன். பிசைந்து முடித்து பலிச்சோற்றினைக் கொற்றவைக்குக் கொடுக்கும் சடங்கு தொடங்கியது. குருதியாட்டு விழா அதன் உச்சத்தை நெருங்கியது. குலவையொலி மேலும் மேலும் கூடியபடியிருக்க மயிலா பலிச்சோற்றினை எடுத்து கொற்றவையின் அடிவாரத்தில் வீசத் தொடங்கினாள்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 29, 2018 7:23 am

வீசிய கணம் போர்த்துணங்கைக்கான முழவின் ஒலி பீறிட்டு எழுந்தது. குலவை ஒலியும் முழவின் ஒலியும் இணைந்து இருட்டையும் காட்டையும் மிரட்டிய வேளையில் பெண்களின் துணங்கை ஆட்டம் தொடங்கியது. போர்த்துணங்கைக்கான ஆட்டத்தில் ஒவ்வொரு பெண்ணாக ஆடத் தொடங்கினர். ஆட்டத்தினூடே பலிச்சோற்றினை அள்ளி, கொற்றவையை நோக்கி வீசினர் பெண்கள். புதுமகவின் குருதியால் கொற்றவைக்கு நன்றிசொல்லல் இது.

மனதின் ஆழத்தில் உறைந்துகிடக்கும் துயரத்தின் வலியைப் பிடுங்கியெறிய வலிமைகொண்டு ஆடினர். நேரமாக ஆக முழவின் ஓசையில் காடு நடுங்கியது. அப்போது ஆனைப்பறை முழங்கத் தொடங்கியது. அணங்குகள் இறங்கத் தொடங்கினர். வெறிகொள் பாவையர் சுழன்றாடினர். துணங்கையாடும் பெண்களிடமிருந்து விலகி நின்று வணங்குதலே மரபு. கூட்டம் முழுமையாக விலகி நிற்கமுடியாமல் திணறிக்கிடந்தது. வந்திருந்த பெண்கள் எல்லோரும் ஆடத் தொடங்கினர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48d_1543311540

அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அணங்கு இறங்கி ஆடத் தொடங்கியது. ஆட்டத்தினூடே குலநாகினிகள் தனித்து எழுப்பும் குலவையொலி மேலெழ, கூட்டம் இடங்கொடுத்து விலகியது. அவ்வொலி கேட்டதிலிருந்து முழவுகளின் ஓசை சிறிதுசிறிதாகக் குறையத் தொடங்கியது. அணங்கிறங்கியவர்களும் தங்களது ஆட்டத்தைக் குறைத்தனர்.

பலகையில் உட்கார்ந்திருந்த கபிலர் என்ன நடக்கிறது என்பதை அறிய எட்டிப்பார்த்தார். குலநாகினிகளின் நடுவே நீராடி மேலெல்லாம் குருதி பூசியபடி வந்துகொண்டிருந்தான் வேள்பாரி. கூட்டத்தின் ஓசை நன்றாகக் குறைந்தது. அவன் வந்து கூத்துக்களத்தின் நடுவே நின்றான். முழவுகளின் ஓசை முழுவதுமாக நின்றது.

உட்கார்ந்திருந்த கபிலருக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. எழுந்து நின்றார். பாரியின் கைகளில் வில் இருந்தது. குருதியாட்டு விழாவுக்கு ஏன் வில்லேந்தி வந்துள்ளான் பாரி என்பது கபிலருக்குப் புரியவில்லை. குலநாகினிகள் அம்பொன்றை அவன் கைகளில் கொடுத்தனர். அதன் முனையில் பூச்சூடி இருந்தது. அதனை வாங்கினான் பாரி. வாங்கிய கணம் அவனது உடல் சிலிர்த்து அடங்கியது. கண்களை ஒரு கணம் மூடினான். அந்த அம்பு தேக்கன் தனக்குள் செலுத்திக்கொண்ட அம்பு.

தேக்கனின் நினைவோடு கண்களைத் திறந்தபொழுது குருதியின் நிறங்கொண்டிருந்தன கண்கள். அவன் அம்பினை நாணில் பூட்டி இழுத்தான். குலநாகினிகள் குலவையொலி எழுப்பினர். பெண்கள் பேராசானை நினைத்து, கைகளை உயர்த்திக் கதறினர். பாரி அம்பினை விடுவித்தான். கொற்றவை குடிகொண்டுள்ள மரக்கூட்டத்துக்குள் அம்பு பாய்ந்து மறைந்தது. ஆசான் தனக்குள் செலுத்திக்கொண்ட அம்பினை மீண்டும் தனக்குள் செலுத்திக்கொண்டது பறம்பு.

எழுந்த குலவையொலியோடு முழவின் ஓசை இணைந்துகொண்டது. குலநாகினிகள் அடுத்து மூவிலைவேலினைப் பாரியிடம் கொடுத்தனர். வேலினை வாங்கினான் பாரி. எழுந்த ஓசை முன்னிலும் பலமடங்கு அதிகரித்தது. பாரியின் உடலில் ஒவ்வொரு நரம்பும் விசையைக்கூட்டியது. கண்கள் கலங்கின. ஒரு மாவீரனைப் போற்றும் கணமிது. அவனது நினைவை நெஞ்சில்  ஏந்தியபடி மூவிலை வேலினைத் திருப்பிப்பிடித்து கூத்துக்களத்தின் முன்னிலத்தில் ஓங்கிக்குத்தி மண்ணுள் இறக்கினான். நிலமிறங்கிய வேலின் கைப்பிடி அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்க, அதற்குப் பூமாலை சூட்டினர் நாகினிகள். இனி காலம் உள்ளவரை நடப்பட்ட மூவிலைவேலின் வழி வணங்கப்படுவான் இரவாதன்.

வேலினை ஊன்றிய கணத்தோடு அவ்விடம் நிற்கமுடியாமல் வெளியேறி கபிலரின் அருகில் வந்தமர்ந்தான் பாரி. துணங்கை ஆட்டம் முன்னிலும் வேகங்கொண்டது. முழவுகள் பேரோசையை எழுப்பின. கூட்டம் கூடிக்கொண்டேயிருந்தது. துணங்காடிய பெண்களைத் தங்களின் இரு கைகளைக்கொண்டு விலக்கித் தள்ளினர் குலநாகினிகள். ஆனால், ஆடும்பெண்கள் எளிதில் நகர்வதாக இல்லை. பேரொலி எழுப்பிய குலநாகினிகள் அவர்களைப் பிடித்துத் தள்ளி இடம் அமைத்துக் கொடுத்தனர்.

அங்கு நடப்பதைப் பார்க்கக் கூட்டம் முண்டியடித்து முன்னேறியது. பாரி வந்ததும் அமர்ந்த கபிலர் மீண்டும் எழுந்து நின்று பார்த்தார். இளம்பெண் ஒருத்தி தனியே ஆடிக்கொண்டிருந்தாள். ஆனால் துணங்கை ஆடும் மற்ற பெண்களைப்போல அவள் ஆவேசங்கொண்டு ஆடவில்லை. தலையை மட்டும் ஆட்டி ஆட்டி மெள்ள ஆடிக்கொண்டி ருந்தாள். அவளுக்கு முன்னால் குலநாகினிகள் கைகுவித்து வேண்டியபடி நின்று கொண்டிருந்தனர்.

பார்த்துக்கொண்டிருந்த கபிலருக்கு எதுவும் புரியவில்லை. சூழ்ந்திருந்த பெண்கள் பேரோசை எழுப்பினர். கூட்டத்தினரின் குலவையொலி மேலும் மேலும் பன்மடங்காகியது. ஆடியவளின் முன்னால் பச்சைமண் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுதுதான் அது வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைப் பார்த்தபடி நின்று அந்தப்பெண் ஆடிக்கொண்டிருந்தாள். குலவையொலி மேலும் கூடியது. எந்நிலையிலும் கண்ணீர் சிந்தாத குலநாகினிகள் கைகுவித்துக் கண்ணீர் மல்க வேண்டி நின்றனர்.

கூட்டதினூடே அங்கு நடப்பது கபிலருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. சற்றே தலையை நிமிர்த்தி எட்டிப்பார்த்தார். குலநாகினிகளின் வேண்டுதலை ஏற்று அப்பெண் மண்சிலைக்கு அருகிலிருந்த எதையோ எடுக்கத் தொடங்கினாள். நாகினிகள் குலவையிடத் தொடங்கினர்.  இதுவரை இல்லாத அளவு வெளிவந்துகொண்டிருந்தது பேரோசை. எடுத்தவள் தன் காதுகளில் அதை அணிந்துகொண்டாள். கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரும் குலவையொலியைப் பன்மடங்காக்கினர்.

அவள் மீண்டும் தலையை மெள்ள ஆட்டத் தொடங்கினாள். பின்புறமிருந்து பார்த்துக்கொண்டிருந்த கபிலருக்கு நீண்டநேரங் கழித்துதான் புரியத் தொடங்கியது. அவள் காதில் அணிந்தது மகரக்குழைக் காதணி. புதிய மண்சிலையில் நினைவினை இறக்கி நடத்தப்பட்ட வழிபாட்டுச்சடங்கு பொற்சுவைக்கானது. அதை உணர்ந்த கணத்தில் கபிலரின் மேலெல்லாம் வியர்த்துப் பொங்கியது. கண்களில் நீர்பெருக, கூட்டத்தை விலக்கிச் சடசடவென உள்ளே நுழைந்தார். பெண்கள் மட்டுமே ஆடும் களத்தில் கபிலர் ஏன் உள்ளே நுழைகிறார் என்று மற்றவர்கள் சிந்தித்து முடிக்கும் முன் கூத்துக்களத்தின் முன்னிலையை அடைந்தார்.

மகரக்குழை இருகாதுமடல்களிலும் தொங்க ஆடிக்கொண்டிருந்தவளின் முகத்தைப் பார்த்தார். குலவையொலியினூடே அவள் கண்களை இறுக மூடியிருந்தாள். தானும் கண்மூடினார் கபிலர். அவரின் கண்களிலிருந்து நீர் பொங்கிவந்தது. மண்டியிட்டு அவளின் காலினைத் தொட்டு வணங்கினார் கபிலர்.

அமர்ந்திருந்த பாரி எழுந்து வேகமாகக் கூட்டத்துக்குள் நுழைந்தான். உயிர்துறக்கும் பொழுது தனது மடியில் கிடந்த பொற்சுவையின் காலடியைத் தொட்டு வணங்கிய கபிலர் அவ்விடம் விட்டு எழமுடியாமல் அப்படியே கிடந்தார். பாரி அவரைக் கைபிடித்துத் தூக்கினான்.

துணங்கை ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முழவுகள் ஒலியெழுப்பத் தொடங்கின. பெண்கள் சுழன்றாடினர். கபிலரை அழைத்துவந்து நீலனின் அருகில் அமரவைத்தான் பாரி. உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்தார் கபிலர். துணங்கை ஆட்டம் உணர்வுநிலையைக் கூட்டிக்கொண்டேயிருந்தது. கூட்டத்திலிருந்த சங்கவை, தந்தையைத்தேடி அருகில் வந்தாள். பாரி அவளைத் தூக்கி, தனக்கும் கபிலருக்கும் நடுவில் உட்காரவைத்துக்கொண்டான். கபிலரின் கைகள் சங்கவையின் தலையைக் கோதிவிட்டன. அவள் இடப்புறமாகத் திரும்பி கபிலரைப் பார்த்துப் புன்முறுவலோடு அவரின் தாடியைச் சட்டென வருடிவிட்டபடி கூத்துக்களத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டாள்.

நீண்டநேரமாக உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்த கபிலரின் முகம் சற்றே மாறத் தொடங்கியது. சங்கவையின் சிறுகுறும்பு அவரின் மனநிலையை மாற்றத் தலைப்பட்டது. சினமாந்தர்கள் ஆடும் போர்த்துணங்கை இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. கபிலருக்கு வாரிக்கையனின் நினைவு வந்தது. அவரை கூத்து தொடங்கியதிலிருந்து பார்க்க வில்லையே என்று சிந்தித்தபடி பாரியிடம் கேட்டார், “வாரிக்கையன் எங்கே?”

“இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவார்.”

“பொழுது நள்ளிரவை நெருங்கப்போகிறது. பறம்புநாடே இங்கிருக்கையில் அவர் மட்டும் எங்கே போயுள்ளார்?”

“அவருடன் முதுவேலனும் சேர்ந்து போயுள்ளார்” என்றான் பாரி.

எங்கு என்று மட்டும் சொல்லாமல் வெளிவந்துகொண்டிருந்தன பாரியின் சொற்கள். வழக்கமாக அதைப் புரிந்துகொள்பவர்தான் கபிலர். ஆனால் இன்றைய உணர்வுநிலையில் சொற்களின் துல்லியத்தின் மீது பயணிக்கும் நிலையில் அவர் இல்லை. “வாரிக்கையன் எங்குதான் போயுள்ளார் பாரி?” எனக் கேட்டார்.

பாரி சொன்னான், “நான்காண்டுக்கு ஒருமுறை ஒளிவாள் இறங்குமல்லவா, ஆதிமலையின் பெருங்கடவு. அங்கே போயுள்ளார்.”

‘அங்கு எதற்கு?’ எனச் சிந்தித்தபடியே கேட்டார், “இதுபோல அங்கேதும் கூத்து நடக்கிறதா?”

“தேக்கனும் இரவாதனும் பொற்சுவையும் நிலைகொள்ளவேண்டிய இடம் இதுதான். ஆனால் திசைவேழர் நிலைகொள்ள வேண்டிய இடம் அதுதானே. அதனால்தான் திசைவேழர் பயன்படுத்திய நாழிகைக்கோலினை எடுத்துக்கொண்டு அங்கு போயுள்ளனர் வாரிக்கையனும் முதுவேலனும்.”

உறைந்த உணர்வு மீண்டும் வெடித்து மேலெழுவது போல இருந்தது. சங்கவையைக் கடந்து பாரியின் தோள்நோக்கிப் போனது கபிலரின் கை.

அக்கையை இறுகப்பிடித்த பாரி சொன்னான், “அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும்.”

சொல்லிமுடிக்கும் பொழுது முழவின் ஒலியோடு மீண்டும் குலவையொலி இணைந்தது. அனைத்துப் பெண்களும் பெருங்குலவையை வெளிப்படுத்தியபடி துணங்கை ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

கள்ளும் ஊனும் சேர பாணர்கூத்து தொடங்கும் நேரம் நெருங்கியது. உணர்வால் இறுக்கப்பட்டிருந்த கபிலர் மீண்டுவர முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். கூத்தர்களும் பாணர்களும் களம்புக ஆயத்தமாயினர்.

முழவினை வெளியேற்றிவிட்டு மற்ற இசைக்கருவிகளை உள்ளெடுத்து வரத் தொடங்கினர். கஞ்சத்தாலான குமுழுவம், கருங்காலியாலான இடக்கை, செங்காலியாலான சல்லியம், வேம்பாலான மத்தளம் ஆகியவற்றைக்கொண்டு இசைவாணர்கள் கூத்துக்களத்தைச் சுற்றி வட்டமிட்டு நின்றனர்.

எண்ணற்ற பாணர் குழுக்கள் வந்து சேர்ந்துள்ளன. துணங்கைக்கூத்து முடிவதற்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர். இப்பொழுது களம்புகுந்தனர். செம்மேழிப் பாணர் கூட்டத்தின் பெயர் சொல்லி உரக்கக் கத்தினான் நீலன். நீலனின் குரல் கேட்ட கணம் கூத்துக்களம் மொத்தமும் அமைதியடைந்தது. என்ன சொல்லப்போகிறான் நீலன் என்பதை அறிய அனைவரும் ஆவலோடு அவனைப் பார்த்தனர். கூட்டத்துக்குள் இருந்த மயிலா குழந்தையோடு மீண்டும் முன்னால் வந்து எட்டிப்பார்த்தாள். அனைவரின் பார்வையும் நீலனின் மீது இருந்தது. அவன் திரும்பி கபிலரைப் பார்த்தான். கலங்கி உறைந்த முகம் அப்படியே இருந்தது.

ஒரு கணத்தில் இம்முகத்தை மலரச்செய்ய என்னால் முடியும் என்பது போல் இருந்தது அவனது பார்வை. கபிலரிடமிருந்து பார்வையை விலக்கி பாணனைப் பார்த்துச் சொன்னான், “பனையன் மகனே பாடலைப் பாடுங்கள்”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48big_1543311471

சொல்லிய கணம் கூட்டத்தின் பேரொலி விண்ணை முட்டியது. கபிலரின் முகம் மறுகணமே மாறத் தொடங்கியது. தான் பறம்புக்குள் நுழைய வேட்டுவன் பாறையில் கால்வைத்த முதல்நாள் நீலன் சொன்னான், “முழுநிலவு நாளில் பனையன் மகனே பாடலைப் பாடினால் பறம்பு நாடே எழுந்து ஆடும்.”

நீலன் அன்று சொன்ன சொற்கள் நினைவுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்தது. குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகச் சிறுபறையைத் தனது இடுப்பில் கட்டியிருந்த முதுபாணன். கூத்துக்களத்தை வட்டமடித்தபடி உள்ளே நுழைந்தான். முழுநிலவு பொழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் ஆரவாரம் பெருகத் தொடங்கியது. பாணர்கள் எல்லோரும் இசையாலும் குரலாலும் இணையத் தொடங்கினர். பாடல் தொடங்கிய கணத்தில் பறம்பே எழுந்து ஆடத் தொடங்கியது.

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நின்

பறம்பு நிலமும் படர்ந்த காடும்
தவழும் காற்றும் தழலும் வானும்
அண்டுவார் தம்மை அணைக்கும் தாய்மடி
அளவிலா அன்பைப் பொழியும் தொல்குடி

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – உனக்கு

கோலு மில்லை குடையு மில்லை
கொடியு மில்லை முரசு மில்லை
நிகர்பகை யில்லை பழியு மில்லை
நின்னை வெல்வோர் யாருமில்லை

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

அழிக்கும் செந்நாய்க்கு ஆளி யாவாய்
அழியாப் பகையை ஏற்ற எதிரிகள்
சூது செய்யினும் சூழ்ந்து தாக்கினும்
ஏது மற்றவராய் இழந்தே செல்வர்

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

வையைக் கழிமுக வைப்பூர் எரித்தாய்
திரையர் குலத்தைத் தீதின்றி மீட்டாய்
எழுவனாற்றில் இறங்கிய படையை
எளிய பூச்சியால் அழித்தே ஒழித்தாய்

சிறுகாது முயலின் குருதி தோய்த்து
பெருவேந்தர்களை நடுக்குறச் செய்தாய்.
வேளிர் குலத்தின் பாழியைக் காத்தாய்
சேரனை வென்று குதிரைகள் சேர்த்தாய்

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

நீயாய்ப் பிறர்மேல் நெல்முனையும் வீசாய்
எல்லை கடந்தவர் ஏறி வந்திடின்
கொற்றவைக் களத்தில் வஞ்சினம் உரைப்பாய்
செருக்களம் வென்று செங்குருதி குளிப்பாய்

வேந்தர் படையை வெல்வா யென்றே
கருங்கிளி நிமித்தம் கழறிய பின்னரும்
போரினை வெறுத்தாய்; பொறுமை காத்தாய்
நீலனை மீட்கவே நெடும்படை ஒறுத்தாய்

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

முருகன் வள்ளி முடிச்சிலொரு கண்ணிநீ
எவ்வி சோமா இணைப்பிலொரு பின்னல்நீ
சூலிவேள் தூதுவை பின்னலின் தொடர்ச்சிநீ
தேக்கனும் பழையனும் விட்டுச்சென்ற வீரம்நீ

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - எம்

பாணர் வந்தால் பாடல் கேட்டும்
கூத்தர் ஆடினால் குளிர்மனம் கொண்டும்
இல்லை எனாது எல்லாம் வழங்கி
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே – நீ
பனைபோல் வாழ்க பனைபோல் வாழ்க.

முற்றும்

சு.வெங்கடேசன்  




வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 18 P48g_1543311571

வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.

www.facebook.com/groups/500337410392609/

www.twitter.com/Vikatanvelpari






புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக