உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
+11
poovizhi
கண்ணன்
சிவா
பிரபாகரன் ஒற்றன்
kram
Dr.S.Soundarapandian
heezulia
T.N.Balasubramanian
aeroboy2000
தமிழ்நேசன்1981
ரா.ரமேஷ்குமார்
15 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
First topic message reminder :
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..

ஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
"வீரயுக நாயகன் வேள் பாரி"
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..





முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
வீரயுக நாயகன் வேள்பாரி - 104
ஆறாம் நாள் போரின் கடைசி நான்கு பொழுதுகள் மீதம் இருந்தன. தட்டியங்காட்டில் இதுவரை இல்லாத வகையில் இருதரப்பும் பதற்றத்தில் நிலைகுலைந்துகொண்டிருந்தன. மையூர்கிழாரால் கருங்கைவாணனை மூஞ்சலை நோக்கி அனுப்ப முடியவில்லை. தேக்கனால் முடியனை இரவாதனை நோக்கி அனுப்ப முடியவில்லை. யார் எங்கு நிலைகொண்டு தாக்குவது என்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தது.

திசைவேழர், பரண்மேல் திணறியபடி நின்றுகொண்டிருந்தார். போர்க்களத்தின் நடுப்பகுதியில் தாக்குதல் வீரியம்கொண்டிருந்தது. அதேநேரம் தட்டியங்காட்டின் இடது விளிம்புக்கு அப்பால் மூஞ்சல் பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதல் நடக்கிறது. நேரமாக ஆக போரின்விதிகள் எல்லா இடங்களிலும் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இருதரப்பிலும் கடும்தாக்குதல் நடக்கிறது. தான் நடுவில் இருக்கும் பரணில் நிற்பதா அல்லது இடதுபக்கக் கடைசிப்பரணில் நின்று மூஞ்சலைக் கவனிப்பதா என முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் நின்றார் திசைவேழர்.
குளவன்திட்டில் நின்றுகொண்டிருக்கும் பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுப்பார்த்தபடி இருந்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்திருப்பதைத் தெளிவாக அறிய முடிந்தது. நாகக்கரட்டின் மேலிருந்து இரவாதனுக்குரிய மறைக்குறிப்புகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுக்கொண்டிருந்தன. கூவல்குடியினரின் ஓசை இடைவெளியின்றி வெளிப்பட்டது. வாரிக்கையனுக்கு வேறு என்ன செய்வது என்பது பிடிபடவில்லை.
போர்க்களத்துக்கு உள்ளே இருப்பவர்களும் களத்தை விட்டு வெளியே நிற்பவர்களுமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பதற்றத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர். நிலைமை என்னவாகும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. சரியும் மஞ்சள் வெளிச்சத்தினூடே களத்தை உற்றுநோக்கிக்கொண்டிருந்த பாரியின் சிந்தனை, முடிவை நோக்கி நகர்ந்தது. இனி தாமதிக்க வேண்டாம் என எண்ணிய கணத்தில், கையை உயர்த்தினான் பாரி. அருகிருந்த கூவல்குடியினர் அதற்கேற்ற ஓசையை வெளிப்படுத்தினர். நாகக்கரட்டில் இருந்தவர்களுக்கான உத்தரவு குளவன்திட்டிலிருந்து வந்தது. போர்க்களம் நோக்கி வெளிப்படுத்தும் ஓசையை உடனடியாக நிறுத்தினான் வாரிக்கையன்.
இரவாதன், மூஞ்சலுக்குள் தனது முழுப்படையுடன் நுழைந்துவிட்டான். இனியும் பின்னோக்கி வரச்சொல்லும் மறைகுறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருப்பது தவறு. உள்ளே நுழைந்தவன் இதுவரை நாகக்கரட்டின் குறிப்புகளைக் கவனித்தறியவில்லை. இனி தற்செயலாகக் கவனித்துவிட்டால் உள்ளே தாக்குதல் தொடுத்து முன்னேறுவதா அல்லது வெளியேறுவதா என்ற குழப்பத்தை அவனுக்கு உருவாக்கும். அந்தத் தடுமாற்றம் தாக்குதலை வலிமையிழக்கச்செய்து ஆபத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கூவல்குடியின் ஓசையை நிறுத்தச் சொன்னான் பாரி. முழுமையான திறனோடு உள்ளே நுழைந்தவனை எந்த விதத்திலும் திசைதிருப்ப வேண்டாம். இதுவரை செய்த முயற்சிகள் சரி; இனி இதைத் தொடரக் கூடாது. வீரத்தின் விடை என்னவோ அதை ஏற்க ஆயத்தமாவோம் என்று நிலைகொண்டான் பாரி.
குழப்பமும் பதற்றமும் நிலவிய இந்த நேரத்தில் பாரி எடுத்த இந்த முடிவு களத்தில் உடனே விளைவை உருவாக்கியது. தேக்கனோடு முரண்பட்டு உரையாடிக்கொண்டிருந்த முடியன் நிம்மதிப்பெருமூச்சு விட்டான். கூவல்குடியினரின் குறிப்பொலி நின்றுவிட்டது. இரவாதன் மூஞ்சலுக்குள் நுழையாமல் நின்றுவிட்டான் என்ற முடிவுக்கு வந்தான். பறம்புத்தளபதிகள் அனைவரும் அவ்வாறே நினைத்தனர். பதற்றத்திலிருந்து பறம்புத்தளபதிகள் வெளிவந்த கணத்தில் தாக்குதலின் வேகம் மேலும் வலிமையடையத் தொடங்கியது.

எதிர்ப்பக்கம் நின்றிருந்த கருங்கைவாணனுக்கும் மையூர்கிழாருக்கும் இந்த ஓசை நிறுத்தப்பட்டதன் காரணம் புரியவில்லை. அவர்களின் குழப்பம் அதிகரித்தது. பறம்பின் தரப்பில் தாக்குதலின் வேகம் அதிகரிக்க, மையூர்கிழாரின் குழப்பம் மேலும் அதிகமாகியது.
முடியனோடு அவ்வளவு நேரம் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்த தேக்கன், தனது பேச்சை நிறுத்திக்கொண்டான். முடியனின் தாக்குதல் தீவிரமாகியது. அவன், கருங்கைவாணனை நோக்கிச் சீற்றத்துடன் முன்னேறினான். தேக்கன் தாக்குதல் களத்தை விட்டு, தனது இடத்துக்குப் பின்நோக்கி நகர்ந்தான். அவனால் நிலைமையை உணர முடிந்தது. இரவாதனின் படை மூஞ்சலுக்குள் முற்றிலும் நுழைந்திருக்கும். இனியும் பின்வாங்கச்சொல்லும் குறிப்பொலிகள் வேண்டாம் எனப் பாரி முடிவெடுத்திருப்பான் எனக் கருதினான்.
நேற்றைக்கு முந்தைய நாள் இரவு மூஞ்சலைப் பற்றி இரவாதன் விளக்கியவை எல்லாம் அவனின் நினைவுக்குள் மேலெழுந்துகொண்டிருந்தன. மூஞ்சலைப் பற்றி அவனுக்கிருந்த தெளிவும் சூளூர் வீரர்களின் தாக்குதல் திறனும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் அதேநேரம், மூவேந்தர்களின் அகப்படையையும் கவசப்படையையும் எளிதாகக் கருதிவிடக் கூடாது. அதுமட்டுமன்று, ஏற்கெனவே முடிவுசெய்ததைப்போல முடியனும் விண்டனும் அங்கு போகவில்லை. இந்நிலையில் தான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய திட்டம் இரவாதனுக்கு இருக்குமா? மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு நீலனை மீட்கும் சிந்தனை மட்டுமே தீவிரம்கொள்ளும். உணர்வின் உந்துதலில் இணையற்ற தாக்குதலை நடத்துவான். அந்தத் தாக்குதல், எதிரியைக் கலங்கடிக்கும். அதேநேரம் மையப்பொறியைத் தாக்கி முன்னேறுபவனுக்குத் தேவையான முழுமைகொண்ட தெளிவு அவனிடம் இருக்குமா? இன்னொரு வகையில் சிந்தித்தால், ஏறித்தாக்குபவனுக்குச் சூழலைப் பற்றி முழுமையும் தெரியாமல் இருத்தல் நல்லது. வீரத்தின் மீது அறியாமை கலந்த குருட்டுத்தனம் படிந்திருந்தால் அது உருவாக்கும் விளைவு எண்ணிப்பார்க்க முடியாததாக இருக்கும்.
இன்றைய போர் இதுநாள் வரை நடந்ததைப் போன்ற நிலையில் முடியப்போவதில்லை. இரவாதன், போரின் போக்கைத் தனது கையில் எடுத்துக்கொண்டான். இனி அவனது வீரமே எல்லாவற்றையும் முடிவுசெய்யும். எண்ணங்கள் மேலெழுந்தபடி இருக்க, படைப்பிரிவின் இறுதிப்பகுதியில் வந்து நிலைகொண்டான் தேக்கன்.
எதிர்த்திசையில் படையின் மூன்றாம்நிலைக்குப் பின்னால் வேந்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். காற்றின் துணைகொண்டு பறம்பு வீரர்கள் அம்பெய்த பிறகு, தங்களின் பாதுகாப்பு முறையை வேந்தர்கள் மாற்றியமைத்துக்கொண்டனர். படைப்பிரிவையொட்டி நிற்காமல் தனித்து நிற்கின்றனர். ஒருவேளை காற்றில் கூரம்புகள் பறந்துவந்தால், கவசவீரர்கள் கணநேரத்தில் பாதுகாப்புக் கூண்டை உருவாக்குவார்கள். அம்புகளும் ஈட்டிகளும் உள்நுழைய முடியாத கவசக்கூண்டாக அது இருக்கும்.
மூஞ்சலுக்குள் எதிரிகளின் படைப்பிரிவு ஒன்று நுழைந்துவிட்ட செய்தி வேந்தர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இது யாரும் எதிர்பாராத ஒன்று. காலையில் மையூர்கிழாரிடம் படையின் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்தத் திட்டத்தை அவர் கூறினார். பறம்புப்படையில் வலிமைமிகுந்தவை விற்படையும் குதிரைப்படையும்தான். விற்படையைச் சூழ்ந்து அழிக்க முந்தையநாள் கருங்கைவாணனால் வகுக்கப்பட்ட திட்டம் முழுத் தோல்வியில் முடிந்தது. இன்று குதிரைப்படையை உள்ளிழுத்துத் தாக்கி அழிக்கும் திட்டத்தை மையூர்கிழார் சொன்னார். பறம்பின் மொத்தப்படையையும் முன்னகரவிடாமல் தாக்கும் அதேநேரம் குதிரைப்படையை மட்டும் முழுமையாக உள்வாங்கினால் சூழ்ந்து தாக்கிக் கடும் அழிவை உருவாக்க முடியும். குதிரைப்படையின் அழிவு பறம்புக்குப் பேரிடியாக அமையும் என்றான். நேற்றிரவு பொற்சுவை சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று தெரியாத குழப்பத்தில் இருந்த குலசேகரபாண்டியன், மையூர்கிழாரின் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்தார். மற்ற இரு வேந்தர்களும் அதே குழப்ப மனநிலையில் இருந்ததால் இந்தத் திட்டம் பற்றிக் கூடுதலாக உரையாடிக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதுவே பேராபத்தாகிவிட்டது. உள்ளிழுத்த குதிரைப்படை நாம் நினைத்ததைவிட வீரியமான தாக்குதலை நடத்தி மூஞ்சலின் அரணை உடைத்து உள்நுழைந்துவிட்டது.

ஆபத்து உச்சக்கட்டத்தை அடைந்தது. ``மூஞ்சலுக்குள் நுழைந்த ஒருவன்கூட உயிரோடு திரும்பக் கூடாது; அனைவரையும் கொன்று புதையுங்கள்” என்று உத்தரவிட்டார் குலசேகரபாண்டியன்.
இணையற்ற தாக்குதல் திறனும் தற்காப்புத் திறனும்கொண்ட கவசப்பெரும்படையோடு உதியஞ்சேரல், சோழவேழன், பொதியவெற்பன் ஆகிய மூவரும் புறப்பட்டனர். வேந்தர்களுக்குரிய இசை வாத்தியங்களை அந்தப் படையின் முன்கள வீரர்கள் முழங்கியதும் குதிரைகளும் தேர்களும் பாயத் தொடங்கின. தட்டியங்காட்டை விட்டு வெளிப்புறத்தில் இந்த நிலம் இருப்பதால் ஈக்கிமணலும் கருமணலும் இங்கு இல்லை. எனவே, குதிரைகள் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தோடு மூஞ்சலை நோக்கி விரைந்தன.
குளவன்திட்டின்மேல் நிற்கும் பாரி, மூன்று நாள்களுக்குப் பிறகு இடதுபுறமாகத் திரும்பி குகையில் இருக்கும் விளக்கைப் பார்த்தான். அருகில் நின்றிருந்த இகுளிக்கிழவனுக்கு, பார்வையின் பொருள் புரிந்தது. ஆனால், விளக்கின் சுடர் அசைவற்று எரிந்தது. கண்கள், மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து செல்லும் வேந்தர்களின் கவசப்படையையே பார்த்துக்கொண்டிருந்தன.
இரவாதனின் தலைமையிலான சூளூர்ப்படை, மூஞ்சலுக்குள் முழு வட்ட அமைப்பை உருவாக்கி முன்னகர்ந்துகொண்டிருந்தது. வட்டவடிவப் பெரும்பாறையொன்று மெள்ள உருள்வதைப்போல அதன் தன்மை இருந்தது. மூஞ்சலின் அகப்படைக்கு, முன்னகர்ந்துவரும் சூளூர்ப்படையை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ஏனெனில், எந்த ஒரு வீரனும் இதில் தனித்து இல்லை. உருளும் பாறையைக் கண்டு விலகும் உயிரினங்கள்போல அகப்படையினர் விலகவேண்டியிருந்தது.
சூளூர்ப்படையினரின் மெய்யுறைச் சட்டை ஆயுதங்களால் துளைக்க முடியாதது. அதேநேரம் மிகக் குறைந்த எடையுடையது. வேந்தர்களின் அகப்படை பெரும் எடைகொண்ட இரும்பாலான கவச உடையைக் கொண்டது. எனவே, வீரர்களால் வேகம்கொண்டு பாய முடியாது. பறம்புப்படையின் ஒவ்வொரு வீரனும் எண்ணற்ற ஆயுதங்களைத் தன் தோளிலும் இடுப்பிலும் தொங்கவிட்டுள்ளான்.
உள்ளே நுழைந்த படை இதுவரை தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை. முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. பிறகு எந்தத் திசை நோக்கி நகரவேண்டுமென முடிவுசெய்தது. சூளூர் வீரன் ஒருவன் கொண்டுவந்த மூங்கில் ஒன்றை வட்டத்தின் நடுவில் நேராக நிமிர்த்தினான். இன்னொரு வீரன் கண்ணிமைக்கும் வேகத்தில் அதன் மேல் ஏறினான். மூஞ்சல் முழுவதும் இருக்கும் கூடாரங்களின் மேற்கூம்பைப் பார்க்கும் உயரத்துக்கு ஏறினான்.
சூளூர் வீரர்களை முன்னின்று தாக்கிக் கொண்டிருந்த அகப்படையினர், திடீரென ஒருவன் எதிரிகளின் வட்டப்படையின் நடுவில் மூங்கிலை நட்டு கிடுகிடுவென மேலேறிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். முதலில், அவர்களுக்கு அது பிடிபடவில்லை. பிறகு அகப்படைத் தளபதி, மேலேறுபவனை நோக்கித் தாக்குதல் தொடுக்க உத்தரவிட்டான். முன்னிலை வீரர்கள் வில்லெடுத்து அம்பெய்தனர். அம்புகள் பாயும் முன்பு மூங்கிலின் மேலேறியவன் ஏறிய வேகத்தில் மூஞ்சல் முழுமையையும் கண்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கீழே குதித்தான். அம்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்த போது அவன் தரையிலே நிலைகொண்டான்.
அவன் சொல்லப்போகும் திசைக்காகத்தான் இரவாதன் காத்திருந்தான். கபிலர் நீலனுக்கு வழங்கிய போர்வை எண்ணற்ற மருத்துவ வேர்களால் பின்னப்பட்டது. அதில் காற்றில் தீயும் வேரொன்று இருக்கிறது. அதிலிருந்து சிறிது சிறிதாகக் கசியும் புகையால் கூடாரத்தின் மேற்பகுதியில் கருநீலம் படிந்திருக்கும். மூங்கிலின் மேலேறியவன் அந்தக் கூடாரத்தைப் பார்த்தவுடன் மேலிருந்து கீழே குதித்தான்.
குதித்தவன் குறிப்பைச் சொன்ன கணத்தில் முன்வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தாக்குதலைத் தொடங்கினான் இரவாதன். அதுவரை முன்னும் பின்னுமாக அசைந்தபடி நின்றுகொண்டிருந்த பாறை, கடகடவென உருளத் தொடங்கியதுபோல் இருந்தது. பறம்பின் தரப்பில் அம்புகளும் ஈட்டிகளும் பீறிட்டபோது அகப்படையினர் முன்னகர முடியாமல் தடுப்பு உத்தியைக் கைக்கொள்ளத் தொடங்கினர்.
வட்டவடிவப் பேருருளை மூன்றாகப் பிளக்கத் தொடங்கியது. கரிணியின் தலைமையிலான வீரர்கள் அகப்படையை எதிர்கொள்ள உருவிய வாளோடு பாய்ந்து முன்னேறினர். அவர்கள் பிரியும் வேகத்திலேயே பிடறிமானின் தலைமையிலான குழுவினர் பொய்க் கூடாரங்களில் உள்ளவர்களை எதிர்கொள்ள, தனித்து முன்னேறினர். இருபெரும் கூராகப் படை பிளவுபட்டபோது நீலனை நோக்கிச் செல்ல ஆயத்தமானது இரவாதன் தலைமையிலான குழு.

வேந்தர்படை வீரர்கள் அனைவரும் வலதுகையில் ஆயுதமும் இடதுகையில் கேடயமும் ஏந்தியிருந்தனர். ஆனால், பறம்புவீரர்கள் யாருடைய கையிலும் கேடயம் இல்லை. எல்லோரும் இரு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி இருந்தனர். உடல் முழுக்க மெய்யுறைக் கவசம் இருக்கிறது; அதுபோதும். இப்போதைய தேவை நீலனை மீட்பது மட்டும்தான். எனவே, ஒவ்வொரு வீரனும் எண்ணிலடங்காத வீரர்களைக் கொன்றுகுவிக்கும் வெறியோடு மூஞ்சலுக்குள் நுழைந்துள்ளனர்.
கரிணியின் தலைமையிலான படை தாக்குதலைத் தொடங்கிய கணமே, அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. தாக்குதலின் ஆற்றலால் வேந்தர்களின் அகப்படை சற்றே பின்வாங்கியது. பிடறிமானின் தலைமையிலான அணி முன்னகரும்போதே படையின் நடுப்பகுதியிலிருந்து மூன்று பெருமூங்கில்களை மேலே உயர்த்தி முக்கோண வடிவில் மூன்றின் முனைகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி நிறுத்தினர். மறுகணமே எண்ணற்ற வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக அதில் ஏறி, கோபுரம் போன்ற அமைப்பை உருவாக்கினர். மூங்கிலின் பிடிமானத்தோடு ஒருவர் தோளில் ஒருவர் ஏறி, கூடாரத்தைவிட அதிக உயரத்தை உருவாக்கிக்கொண்டனர். இவையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் படையின் நடுப்பகுதிக்குள் நடக்கின்றன.
கோபுரத்தில் மேலேறியவர்கள் உச்சியில் இருந்தபடி கூடாரத்தின் மேல் நிலையில் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். பகழி அம்புகள், கூடாரத்தின் மேற்கூரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே இறங்கின. உடலெங்கும் கவசம் அணிந்த வீரர்கள், மேற்கூரையிலிருந்து பாய்ந்துவந்து தலையையும் கழுத்தையும் தாக்கும் அம்புகளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொய்க்கூடாரத்தில் இருந்த வேந்தர்படை வீரர்கள், இடைவிடாது கூரையைப் பிளக்கும் அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி வெளியேறினர். பொய்க்கூடாரம் ஒன்று கலைந்த வேகத்தில் அதன் கூச்சலும் கலவரமும் மற்றவற்றைக் கலைத்தன. அகப்படை சிதறி, பொய்க்கூடாரங்கள் கலையத் தொடங்கும்போது வேந்தர்கள் கவசப்படையோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர்.
இடதுபுறமாக உதியஞ்சேரல் நுழைந்தான். அவன் கண்முன்னே, சிதறும் அகப்படையைக் கொன்றுகுவித்து முன்னகர்ந்துகொண்டிருந்தது சூளூர்ப்படை. எதிர்த்திசையில் அதைவிட வேகமாக இன்னொரு படை போய்க் கொண்டிருந்தது. அப்பக்கமிருந்து உள்ளே நுழைந்தான் சோழவேழன். பிடறிமானின் தாக்குதல் பொய்க்கூடாரங்களைப் புரட்டியது. மூஞ்சலின் கட்டுக்கோப்பு குலைந்துகொண்டிருந்த போது வேந்தர்கள் மூவரும் தங்களின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர்.
மிகக்குறுகிய நேரத்தில் சூறைக்காற்றுபோல தாக்குதல் நடத்திய பறம்புப்படை, மூஞ்சலின் மொத்த இயக்கத்தையும் நிலைகுலையச்செய்தது. தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வேந்தர்களால் நம்ப முடியவில்லை. ஆனாலும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்க அவர்களுக்கு அதிக நேரமாகவில்லை. பல போர்களையும் தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்திய எண்ணற்ற அனுபவம்கொண்டது வேந்தர்களின் சிறப்புப்படை. இதுபோன்ற சூழலை எத்தனையோ முறை கையாண்ட தளபதிகள் அதில் இருந்தனர்.
உதியஞ்சேரலின் படை கரிணியின் தலைமையிலான படையோடு மோதத் தொடங்கியது. அதே நேரத்தில் சோழவேழனின் படை பிடறிமானின் படையை எதிர்கொண்டது. எண்ணிப்பார்க்க முடியாத வலிமையும் தாக்குதல் திறனும்கொண்ட இருதரப்புச் சிறப்புப்படைகளும் ஒன்றையொன்று எதிர்கொண்டன.
இருபக்கச் சிறகுகளிலும் கரிணியும் பிடறிமானும் எண்ணிலடங்காத ஆயுதங்களின் வழியே வேந்தர்படையைத் தாக்கிக்கொண்டிருந்த போது, தனது இரையைக் கவ்வ விண்ணிலிருந்து வெட்டி இறங்கும் கழுகின் வேகத்தில் நீலனின் கூடாரம் நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான் இரவாதன். மூஞ்சலுக்குள் நுழைந்த இடத்திலிருந்து நீலனின் கூடாரம் இருக்கும் இடம் வரை மூன்று தடுப்புநிலைகள் உள்ளன.
வெளிப்புற அரணை உடைத்து முதல் தடுப்புக்கு அருகில் பறம்புப்படை வந்தபோது வேந்தர்கள் மூவரும் வந்துசேர்ந்தனர். ஆனால், அப்போது இரவாதன் இரண்டாவது தடுப்பைத் தாக்கிக்கொண்டிருந்தான். நிலைமையைக் கணிக்கும் நேரம்கூட வேந்தர்களுக்கு வாய்க்க வில்லை. அவன் இரண்டாவது தடுப்பை உடைக்கும்முன் தனது படை அவ்விடம் விரைந்து செல்ல உத்தரவிட்டான் பொதியவெற்பன்.

திசைவேழர், பரண்மேல் திணறியபடி நின்றுகொண்டிருந்தார். போர்க்களத்தின் நடுப்பகுதியில் தாக்குதல் வீரியம்கொண்டிருந்தது. அதேநேரம் தட்டியங்காட்டின் இடது விளிம்புக்கு அப்பால் மூஞ்சல் பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதல் நடக்கிறது. நேரமாக ஆக போரின்விதிகள் எல்லா இடங்களிலும் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இருதரப்பிலும் கடும்தாக்குதல் நடக்கிறது. தான் நடுவில் இருக்கும் பரணில் நிற்பதா அல்லது இடதுபக்கக் கடைசிப்பரணில் நின்று மூஞ்சலைக் கவனிப்பதா என முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் நின்றார் திசைவேழர்.
குளவன்திட்டில் நின்றுகொண்டிருக்கும் பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுப்பார்த்தபடி இருந்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்திருப்பதைத் தெளிவாக அறிய முடிந்தது. நாகக்கரட்டின் மேலிருந்து இரவாதனுக்குரிய மறைக்குறிப்புகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுக்கொண்டிருந்தன. கூவல்குடியினரின் ஓசை இடைவெளியின்றி வெளிப்பட்டது. வாரிக்கையனுக்கு வேறு என்ன செய்வது என்பது பிடிபடவில்லை.
போர்க்களத்துக்கு உள்ளே இருப்பவர்களும் களத்தை விட்டு வெளியே நிற்பவர்களுமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பதற்றத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர். நிலைமை என்னவாகும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. சரியும் மஞ்சள் வெளிச்சத்தினூடே களத்தை உற்றுநோக்கிக்கொண்டிருந்த பாரியின் சிந்தனை, முடிவை நோக்கி நகர்ந்தது. இனி தாமதிக்க வேண்டாம் என எண்ணிய கணத்தில், கையை உயர்த்தினான் பாரி. அருகிருந்த கூவல்குடியினர் அதற்கேற்ற ஓசையை வெளிப்படுத்தினர். நாகக்கரட்டில் இருந்தவர்களுக்கான உத்தரவு குளவன்திட்டிலிருந்து வந்தது. போர்க்களம் நோக்கி வெளிப்படுத்தும் ஓசையை உடனடியாக நிறுத்தினான் வாரிக்கையன்.
இரவாதன், மூஞ்சலுக்குள் தனது முழுப்படையுடன் நுழைந்துவிட்டான். இனியும் பின்னோக்கி வரச்சொல்லும் மறைகுறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருப்பது தவறு. உள்ளே நுழைந்தவன் இதுவரை நாகக்கரட்டின் குறிப்புகளைக் கவனித்தறியவில்லை. இனி தற்செயலாகக் கவனித்துவிட்டால் உள்ளே தாக்குதல் தொடுத்து முன்னேறுவதா அல்லது வெளியேறுவதா என்ற குழப்பத்தை அவனுக்கு உருவாக்கும். அந்தத் தடுமாற்றம் தாக்குதலை வலிமையிழக்கச்செய்து ஆபத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கூவல்குடியின் ஓசையை நிறுத்தச் சொன்னான் பாரி. முழுமையான திறனோடு உள்ளே நுழைந்தவனை எந்த விதத்திலும் திசைதிருப்ப வேண்டாம். இதுவரை செய்த முயற்சிகள் சரி; இனி இதைத் தொடரக் கூடாது. வீரத்தின் விடை என்னவோ அதை ஏற்க ஆயத்தமாவோம் என்று நிலைகொண்டான் பாரி.
குழப்பமும் பதற்றமும் நிலவிய இந்த நேரத்தில் பாரி எடுத்த இந்த முடிவு களத்தில் உடனே விளைவை உருவாக்கியது. தேக்கனோடு முரண்பட்டு உரையாடிக்கொண்டிருந்த முடியன் நிம்மதிப்பெருமூச்சு விட்டான். கூவல்குடியினரின் குறிப்பொலி நின்றுவிட்டது. இரவாதன் மூஞ்சலுக்குள் நுழையாமல் நின்றுவிட்டான் என்ற முடிவுக்கு வந்தான். பறம்புத்தளபதிகள் அனைவரும் அவ்வாறே நினைத்தனர். பதற்றத்திலிருந்து பறம்புத்தளபதிகள் வெளிவந்த கணத்தில் தாக்குதலின் வேகம் மேலும் வலிமையடையத் தொடங்கியது.

எதிர்ப்பக்கம் நின்றிருந்த கருங்கைவாணனுக்கும் மையூர்கிழாருக்கும் இந்த ஓசை நிறுத்தப்பட்டதன் காரணம் புரியவில்லை. அவர்களின் குழப்பம் அதிகரித்தது. பறம்பின் தரப்பில் தாக்குதலின் வேகம் அதிகரிக்க, மையூர்கிழாரின் குழப்பம் மேலும் அதிகமாகியது.
முடியனோடு அவ்வளவு நேரம் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்த தேக்கன், தனது பேச்சை நிறுத்திக்கொண்டான். முடியனின் தாக்குதல் தீவிரமாகியது. அவன், கருங்கைவாணனை நோக்கிச் சீற்றத்துடன் முன்னேறினான். தேக்கன் தாக்குதல் களத்தை விட்டு, தனது இடத்துக்குப் பின்நோக்கி நகர்ந்தான். அவனால் நிலைமையை உணர முடிந்தது. இரவாதனின் படை மூஞ்சலுக்குள் முற்றிலும் நுழைந்திருக்கும். இனியும் பின்வாங்கச்சொல்லும் குறிப்பொலிகள் வேண்டாம் எனப் பாரி முடிவெடுத்திருப்பான் எனக் கருதினான்.
நேற்றைக்கு முந்தைய நாள் இரவு மூஞ்சலைப் பற்றி இரவாதன் விளக்கியவை எல்லாம் அவனின் நினைவுக்குள் மேலெழுந்துகொண்டிருந்தன. மூஞ்சலைப் பற்றி அவனுக்கிருந்த தெளிவும் சூளூர் வீரர்களின் தாக்குதல் திறனும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் அதேநேரம், மூவேந்தர்களின் அகப்படையையும் கவசப்படையையும் எளிதாகக் கருதிவிடக் கூடாது. அதுமட்டுமன்று, ஏற்கெனவே முடிவுசெய்ததைப்போல முடியனும் விண்டனும் அங்கு போகவில்லை. இந்நிலையில் தான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய திட்டம் இரவாதனுக்கு இருக்குமா? மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு நீலனை மீட்கும் சிந்தனை மட்டுமே தீவிரம்கொள்ளும். உணர்வின் உந்துதலில் இணையற்ற தாக்குதலை நடத்துவான். அந்தத் தாக்குதல், எதிரியைக் கலங்கடிக்கும். அதேநேரம் மையப்பொறியைத் தாக்கி முன்னேறுபவனுக்குத் தேவையான முழுமைகொண்ட தெளிவு அவனிடம் இருக்குமா? இன்னொரு வகையில் சிந்தித்தால், ஏறித்தாக்குபவனுக்குச் சூழலைப் பற்றி முழுமையும் தெரியாமல் இருத்தல் நல்லது. வீரத்தின் மீது அறியாமை கலந்த குருட்டுத்தனம் படிந்திருந்தால் அது உருவாக்கும் விளைவு எண்ணிப்பார்க்க முடியாததாக இருக்கும்.
இன்றைய போர் இதுநாள் வரை நடந்ததைப் போன்ற நிலையில் முடியப்போவதில்லை. இரவாதன், போரின் போக்கைத் தனது கையில் எடுத்துக்கொண்டான். இனி அவனது வீரமே எல்லாவற்றையும் முடிவுசெய்யும். எண்ணங்கள் மேலெழுந்தபடி இருக்க, படைப்பிரிவின் இறுதிப்பகுதியில் வந்து நிலைகொண்டான் தேக்கன்.
எதிர்த்திசையில் படையின் மூன்றாம்நிலைக்குப் பின்னால் வேந்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். காற்றின் துணைகொண்டு பறம்பு வீரர்கள் அம்பெய்த பிறகு, தங்களின் பாதுகாப்பு முறையை வேந்தர்கள் மாற்றியமைத்துக்கொண்டனர். படைப்பிரிவையொட்டி நிற்காமல் தனித்து நிற்கின்றனர். ஒருவேளை காற்றில் கூரம்புகள் பறந்துவந்தால், கவசவீரர்கள் கணநேரத்தில் பாதுகாப்புக் கூண்டை உருவாக்குவார்கள். அம்புகளும் ஈட்டிகளும் உள்நுழைய முடியாத கவசக்கூண்டாக அது இருக்கும்.
மூஞ்சலுக்குள் எதிரிகளின் படைப்பிரிவு ஒன்று நுழைந்துவிட்ட செய்தி வேந்தர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இது யாரும் எதிர்பாராத ஒன்று. காலையில் மையூர்கிழாரிடம் படையின் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்தத் திட்டத்தை அவர் கூறினார். பறம்புப்படையில் வலிமைமிகுந்தவை விற்படையும் குதிரைப்படையும்தான். விற்படையைச் சூழ்ந்து அழிக்க முந்தையநாள் கருங்கைவாணனால் வகுக்கப்பட்ட திட்டம் முழுத் தோல்வியில் முடிந்தது. இன்று குதிரைப்படையை உள்ளிழுத்துத் தாக்கி அழிக்கும் திட்டத்தை மையூர்கிழார் சொன்னார். பறம்பின் மொத்தப்படையையும் முன்னகரவிடாமல் தாக்கும் அதேநேரம் குதிரைப்படையை மட்டும் முழுமையாக உள்வாங்கினால் சூழ்ந்து தாக்கிக் கடும் அழிவை உருவாக்க முடியும். குதிரைப்படையின் அழிவு பறம்புக்குப் பேரிடியாக அமையும் என்றான். நேற்றிரவு பொற்சுவை சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று தெரியாத குழப்பத்தில் இருந்த குலசேகரபாண்டியன், மையூர்கிழாரின் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்தார். மற்ற இரு வேந்தர்களும் அதே குழப்ப மனநிலையில் இருந்ததால் இந்தத் திட்டம் பற்றிக் கூடுதலாக உரையாடிக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதுவே பேராபத்தாகிவிட்டது. உள்ளிழுத்த குதிரைப்படை நாம் நினைத்ததைவிட வீரியமான தாக்குதலை நடத்தி மூஞ்சலின் அரணை உடைத்து உள்நுழைந்துவிட்டது.

ஆபத்து உச்சக்கட்டத்தை அடைந்தது. ``மூஞ்சலுக்குள் நுழைந்த ஒருவன்கூட உயிரோடு திரும்பக் கூடாது; அனைவரையும் கொன்று புதையுங்கள்” என்று உத்தரவிட்டார் குலசேகரபாண்டியன்.
இணையற்ற தாக்குதல் திறனும் தற்காப்புத் திறனும்கொண்ட கவசப்பெரும்படையோடு உதியஞ்சேரல், சோழவேழன், பொதியவெற்பன் ஆகிய மூவரும் புறப்பட்டனர். வேந்தர்களுக்குரிய இசை வாத்தியங்களை அந்தப் படையின் முன்கள வீரர்கள் முழங்கியதும் குதிரைகளும் தேர்களும் பாயத் தொடங்கின. தட்டியங்காட்டை விட்டு வெளிப்புறத்தில் இந்த நிலம் இருப்பதால் ஈக்கிமணலும் கருமணலும் இங்கு இல்லை. எனவே, குதிரைகள் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தோடு மூஞ்சலை நோக்கி விரைந்தன.
குளவன்திட்டின்மேல் நிற்கும் பாரி, மூன்று நாள்களுக்குப் பிறகு இடதுபுறமாகத் திரும்பி குகையில் இருக்கும் விளக்கைப் பார்த்தான். அருகில் நின்றிருந்த இகுளிக்கிழவனுக்கு, பார்வையின் பொருள் புரிந்தது. ஆனால், விளக்கின் சுடர் அசைவற்று எரிந்தது. கண்கள், மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து செல்லும் வேந்தர்களின் கவசப்படையையே பார்த்துக்கொண்டிருந்தன.
இரவாதனின் தலைமையிலான சூளூர்ப்படை, மூஞ்சலுக்குள் முழு வட்ட அமைப்பை உருவாக்கி முன்னகர்ந்துகொண்டிருந்தது. வட்டவடிவப் பெரும்பாறையொன்று மெள்ள உருள்வதைப்போல அதன் தன்மை இருந்தது. மூஞ்சலின் அகப்படைக்கு, முன்னகர்ந்துவரும் சூளூர்ப்படையை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ஏனெனில், எந்த ஒரு வீரனும் இதில் தனித்து இல்லை. உருளும் பாறையைக் கண்டு விலகும் உயிரினங்கள்போல அகப்படையினர் விலகவேண்டியிருந்தது.
சூளூர்ப்படையினரின் மெய்யுறைச் சட்டை ஆயுதங்களால் துளைக்க முடியாதது. அதேநேரம் மிகக் குறைந்த எடையுடையது. வேந்தர்களின் அகப்படை பெரும் எடைகொண்ட இரும்பாலான கவச உடையைக் கொண்டது. எனவே, வீரர்களால் வேகம்கொண்டு பாய முடியாது. பறம்புப்படையின் ஒவ்வொரு வீரனும் எண்ணற்ற ஆயுதங்களைத் தன் தோளிலும் இடுப்பிலும் தொங்கவிட்டுள்ளான்.
உள்ளே நுழைந்த படை இதுவரை தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை. முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. பிறகு எந்தத் திசை நோக்கி நகரவேண்டுமென முடிவுசெய்தது. சூளூர் வீரன் ஒருவன் கொண்டுவந்த மூங்கில் ஒன்றை வட்டத்தின் நடுவில் நேராக நிமிர்த்தினான். இன்னொரு வீரன் கண்ணிமைக்கும் வேகத்தில் அதன் மேல் ஏறினான். மூஞ்சல் முழுவதும் இருக்கும் கூடாரங்களின் மேற்கூம்பைப் பார்க்கும் உயரத்துக்கு ஏறினான்.
சூளூர் வீரர்களை முன்னின்று தாக்கிக் கொண்டிருந்த அகப்படையினர், திடீரென ஒருவன் எதிரிகளின் வட்டப்படையின் நடுவில் மூங்கிலை நட்டு கிடுகிடுவென மேலேறிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். முதலில், அவர்களுக்கு அது பிடிபடவில்லை. பிறகு அகப்படைத் தளபதி, மேலேறுபவனை நோக்கித் தாக்குதல் தொடுக்க உத்தரவிட்டான். முன்னிலை வீரர்கள் வில்லெடுத்து அம்பெய்தனர். அம்புகள் பாயும் முன்பு மூங்கிலின் மேலேறியவன் ஏறிய வேகத்தில் மூஞ்சல் முழுமையையும் கண்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கீழே குதித்தான். அம்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்த போது அவன் தரையிலே நிலைகொண்டான்.
அவன் சொல்லப்போகும் திசைக்காகத்தான் இரவாதன் காத்திருந்தான். கபிலர் நீலனுக்கு வழங்கிய போர்வை எண்ணற்ற மருத்துவ வேர்களால் பின்னப்பட்டது. அதில் காற்றில் தீயும் வேரொன்று இருக்கிறது. அதிலிருந்து சிறிது சிறிதாகக் கசியும் புகையால் கூடாரத்தின் மேற்பகுதியில் கருநீலம் படிந்திருக்கும். மூங்கிலின் மேலேறியவன் அந்தக் கூடாரத்தைப் பார்த்தவுடன் மேலிருந்து கீழே குதித்தான்.
குதித்தவன் குறிப்பைச் சொன்ன கணத்தில் முன்வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தாக்குதலைத் தொடங்கினான் இரவாதன். அதுவரை முன்னும் பின்னுமாக அசைந்தபடி நின்றுகொண்டிருந்த பாறை, கடகடவென உருளத் தொடங்கியதுபோல் இருந்தது. பறம்பின் தரப்பில் அம்புகளும் ஈட்டிகளும் பீறிட்டபோது அகப்படையினர் முன்னகர முடியாமல் தடுப்பு உத்தியைக் கைக்கொள்ளத் தொடங்கினர்.
வட்டவடிவப் பேருருளை மூன்றாகப் பிளக்கத் தொடங்கியது. கரிணியின் தலைமையிலான வீரர்கள் அகப்படையை எதிர்கொள்ள உருவிய வாளோடு பாய்ந்து முன்னேறினர். அவர்கள் பிரியும் வேகத்திலேயே பிடறிமானின் தலைமையிலான குழுவினர் பொய்க் கூடாரங்களில் உள்ளவர்களை எதிர்கொள்ள, தனித்து முன்னேறினர். இருபெரும் கூராகப் படை பிளவுபட்டபோது நீலனை நோக்கிச் செல்ல ஆயத்தமானது இரவாதன் தலைமையிலான குழு.

வேந்தர்படை வீரர்கள் அனைவரும் வலதுகையில் ஆயுதமும் இடதுகையில் கேடயமும் ஏந்தியிருந்தனர். ஆனால், பறம்புவீரர்கள் யாருடைய கையிலும் கேடயம் இல்லை. எல்லோரும் இரு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி இருந்தனர். உடல் முழுக்க மெய்யுறைக் கவசம் இருக்கிறது; அதுபோதும். இப்போதைய தேவை நீலனை மீட்பது மட்டும்தான். எனவே, ஒவ்வொரு வீரனும் எண்ணிலடங்காத வீரர்களைக் கொன்றுகுவிக்கும் வெறியோடு மூஞ்சலுக்குள் நுழைந்துள்ளனர்.
கரிணியின் தலைமையிலான படை தாக்குதலைத் தொடங்கிய கணமே, அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. தாக்குதலின் ஆற்றலால் வேந்தர்களின் அகப்படை சற்றே பின்வாங்கியது. பிடறிமானின் தலைமையிலான அணி முன்னகரும்போதே படையின் நடுப்பகுதியிலிருந்து மூன்று பெருமூங்கில்களை மேலே உயர்த்தி முக்கோண வடிவில் மூன்றின் முனைகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி நிறுத்தினர். மறுகணமே எண்ணற்ற வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக அதில் ஏறி, கோபுரம் போன்ற அமைப்பை உருவாக்கினர். மூங்கிலின் பிடிமானத்தோடு ஒருவர் தோளில் ஒருவர் ஏறி, கூடாரத்தைவிட அதிக உயரத்தை உருவாக்கிக்கொண்டனர். இவையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் படையின் நடுப்பகுதிக்குள் நடக்கின்றன.
கோபுரத்தில் மேலேறியவர்கள் உச்சியில் இருந்தபடி கூடாரத்தின் மேல் நிலையில் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். பகழி அம்புகள், கூடாரத்தின் மேற்கூரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே இறங்கின. உடலெங்கும் கவசம் அணிந்த வீரர்கள், மேற்கூரையிலிருந்து பாய்ந்துவந்து தலையையும் கழுத்தையும் தாக்கும் அம்புகளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொய்க்கூடாரத்தில் இருந்த வேந்தர்படை வீரர்கள், இடைவிடாது கூரையைப் பிளக்கும் அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி வெளியேறினர். பொய்க்கூடாரம் ஒன்று கலைந்த வேகத்தில் அதன் கூச்சலும் கலவரமும் மற்றவற்றைக் கலைத்தன. அகப்படை சிதறி, பொய்க்கூடாரங்கள் கலையத் தொடங்கும்போது வேந்தர்கள் கவசப்படையோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர்.
இடதுபுறமாக உதியஞ்சேரல் நுழைந்தான். அவன் கண்முன்னே, சிதறும் அகப்படையைக் கொன்றுகுவித்து முன்னகர்ந்துகொண்டிருந்தது சூளூர்ப்படை. எதிர்த்திசையில் அதைவிட வேகமாக இன்னொரு படை போய்க் கொண்டிருந்தது. அப்பக்கமிருந்து உள்ளே நுழைந்தான் சோழவேழன். பிடறிமானின் தாக்குதல் பொய்க்கூடாரங்களைப் புரட்டியது. மூஞ்சலின் கட்டுக்கோப்பு குலைந்துகொண்டிருந்த போது வேந்தர்கள் மூவரும் தங்களின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர்.
மிகக்குறுகிய நேரத்தில் சூறைக்காற்றுபோல தாக்குதல் நடத்திய பறம்புப்படை, மூஞ்சலின் மொத்த இயக்கத்தையும் நிலைகுலையச்செய்தது. தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வேந்தர்களால் நம்ப முடியவில்லை. ஆனாலும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்க அவர்களுக்கு அதிக நேரமாகவில்லை. பல போர்களையும் தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்திய எண்ணற்ற அனுபவம்கொண்டது வேந்தர்களின் சிறப்புப்படை. இதுபோன்ற சூழலை எத்தனையோ முறை கையாண்ட தளபதிகள் அதில் இருந்தனர்.
உதியஞ்சேரலின் படை கரிணியின் தலைமையிலான படையோடு மோதத் தொடங்கியது. அதே நேரத்தில் சோழவேழனின் படை பிடறிமானின் படையை எதிர்கொண்டது. எண்ணிப்பார்க்க முடியாத வலிமையும் தாக்குதல் திறனும்கொண்ட இருதரப்புச் சிறப்புப்படைகளும் ஒன்றையொன்று எதிர்கொண்டன.
இருபக்கச் சிறகுகளிலும் கரிணியும் பிடறிமானும் எண்ணிலடங்காத ஆயுதங்களின் வழியே வேந்தர்படையைத் தாக்கிக்கொண்டிருந்த போது, தனது இரையைக் கவ்வ விண்ணிலிருந்து வெட்டி இறங்கும் கழுகின் வேகத்தில் நீலனின் கூடாரம் நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான் இரவாதன். மூஞ்சலுக்குள் நுழைந்த இடத்திலிருந்து நீலனின் கூடாரம் இருக்கும் இடம் வரை மூன்று தடுப்புநிலைகள் உள்ளன.
வெளிப்புற அரணை உடைத்து முதல் தடுப்புக்கு அருகில் பறம்புப்படை வந்தபோது வேந்தர்கள் மூவரும் வந்துசேர்ந்தனர். ஆனால், அப்போது இரவாதன் இரண்டாவது தடுப்பைத் தாக்கிக்கொண்டிருந்தான். நிலைமையைக் கணிக்கும் நேரம்கூட வேந்தர்களுக்கு வாய்க்க வில்லை. அவன் இரண்டாவது தடுப்பை உடைக்கும்முன் தனது படை அவ்விடம் விரைந்து செல்ல உத்தரவிட்டான் பொதியவெற்பன்.
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
இரவாதனின் வேகமும் தாக்குதலின் தன்மையும் யாராலும் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு இருந்தன. தென்னோலையைக் கிழித்துக்கொண்டு உள்ளிறங்கும் மூங்கிற்கழிபோல எதிரிகளின் கவசங்களைத் துளைத்து உள்ளிறங்கின பகழி அம்புகள்.

அம்பென்பது மூன்று விசைகள் மையம்கொள்வது. இழுத்து வளைக்கும்போது உள்ளுக்குள் விரியத்துடிக்கும் நரம்பு; பின்னிழுக்கும்போது முன்வாங்கத் துடிக்கும் நாண்; முன்னும் பின்னுமாக வீரனின் இரு கைகளைக்கொண்டு கூட்டப்படும் விசை. இந்த மூன்றின் குவிமையமே விடுபடும் அம்பாய் ஏகிச்செல்லும். இந்த மூன்றும் வேந்தர்படையைவிட மூன்று மடங்கு அதிக ஆற்றலோடு வெளிப்பட்டன சூளூர் வீரர்களிடம். குறுங்காது முயலின் குருதிவாடை காற்றெங்கும் மிதந்துகொண்டிருந்தது.
பொதியவெற்பனின் சிறப்புப்படை இரவாதனின் படையை நோக்கி முன்னேறியது. அப்போது சற்றும் எதிர்பார்க்காமல் சூளூர் வீரர்கள் விசிறி வடிவ உருளிகளான எறிவட்டுகளை வீசத் தொடங்கினர். ஈட்டி என்றால் போர்வீரன் ஒன்றைத்தான் வைத்திருக்க முடியும். ஆனால், ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்ட எறிவட்டுகளை இடுப்பிலே கோத்துவைத்திருந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்த எறிவட்டுகள் அனைத்தும் கவசவீரர்களின் கழுத்துக்குக் குறிவைக்கப்பட்டன.
பாய்ந்துவந்த வேந்தரின் கவசப்படை இரு பனை தொலைவிலேயே நின்று எறிவட்டுகளைக் கவசங்களால் தடுக்கவேண்டிய நிலை வந்தது. அப்போது மூன்றாவது தடுப்பு நோக்கி இரவாதன் முன்னேறிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த பொதியவெற்பன், உலோக வில்லில் தணல் அம்புகளால் இரவாதனை நோக்கிக் கடும்தாக்குதல் நடத்தியபடி ``அவனை நோக்கித் தேரை விரைவுபடுத்து” என்று கத்தினான்.
மூஞ்சலின் வெளிப்புற அரண் மீண்டும் ஒன்றுக்கொன்று செருகி அடைப்பை உருவாக்கியது. ஆனால், உள்ளே நுழைந்த சூளூர் வீரர்கள் தங்களை நோக்கி மொய்க்கும் வேந்தர்படையைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்தனர். கவசங்களின்மேல் வெட்டியிறங்கும் வாளின் ஓசை மூஞ்சலை நடுங்கச்செய்தது, கொற்றவாளும் கணிச்சி எனும் கோடரிவகை ஆயுதமும் சூளூர் வீரர்களின் உடல் உறுப்பைப்போன்றவை. பெருமரத்தையும் கணிச்சிகொண்டு ஒரே வீச்சில் வெட்டிச் சரிக்கும் சூளூர் வீரர்களின் வேகம் கவசங்களைக் கிழித்து இறங்கிக்கொண்டிருந்தது.
இரவாதன் மூன்றாவது தடுப்பை நெருங்கும்போது பொதியவெற்பனின் தேர் விரைந்து அவ்விடம் வந்தது. நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சி வகைத்தேர், கதிரவன் ஒளியில் கண்களைப் பறித்தபடி வீரர்களைப் பிளந்துகொண்டு வந்தது. கவச வீரர்களின் தாக்குதலுக்கிடையே திரும்பி மீளும் கணத்தில் தன்னை நோக்கி வரும் தேரைப் பார்த்தான் இரவாதன். அவனைச் சூழ்ந்திருந்த கவசவீரர்களைத் தாக்கிக்கொண்டிருந்த அதே வேகத்தில் தனது முதுகிலே இருந்த மூவிலை வேலை எடுத்து மின்னலென வீசினான்.
தேரின் இடதுபுறச் சக்கரத்தின் நடு அச்சைப் பிளந்து உள்ளிறங்கியது மூவிலை வேல். என்ன நடந்தது என்பதை வீரர்கள் உணரும்முன் தரையிலே உருண்டுகொண்டிருந்தான் வளவன். அவனைத் தாண்டி வீசப்பட்டான் பொதியவெற்பன். உடைந்த தேரை, கனைப்பொலியோடு வேகம் குறையாமல் இழுத்து முன் சென்றன குதிரைகள். கொடிஞ்சி வகைத் தேரைத் தனியொருவன் உடைக்கவும் முடியும் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
தேரிலிருந்து சரிந்தவனை நோக்கித் தாக்குதலைத் தொடுத்து உயிர் பறிப்பதற்கெல்லாம் இரவாதனுக்கு நேரமில்லை. அவனது வேகத்துக்குக் குறிக்கீட்டாக எது வந்தாலும் இடியெனத் தாக்கி அழித்தபடி நீலனின் கூடாரம் நோக்கி விரைவது மட்டுமே அவன் வேலை. ஏறக்குறைய அவன் நீலனின் கூடாரத்தை நெருங்கினான். அவ்வளவு நேரமும் அவனது வேகத்தைத் தடுக்க அணியணியாய் வந்து அகப்படை வீரர்கள் போரிட்டனர். ஆனால், மூன்றாவது தடுப்பைப் பிளந்து உள்நுழைந்த வேகத்தில் பொதியவெற்பனின் தேரை ஒரே வேலால் நொறுக்கிக் கவிழ்த்ததைப் பார்த்த யாரும் அதன் பிறகு எதிர்கொண்டு நிற்கவில்லை.
விழுந்து எழுந்த வேகத்தில் தனது காப்புப்படையோடு இரவாதனை நோக்கிப் பாய்ந்தான் பொதியவெற்பன். பாண்டிய இளவரசனின் தலைசிறந்த பாதுகாப்புப் படையினர் பதினாறு பேர் இரவாதனைச் சுற்றிவளைத்தனர்.
இடதுகையில் நீள்மழுவும் வலதுகையில் ஈர்வாளும்கொண்டு இரவாதன் தாக்கிய வேகம் பதினாறு பேரையும் நடுங்கச்செய்தது. பறம்பின் சிறப்பு உலோகக் கலவையால் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்ட வாள் அது. வேறெந்த உலோகத்துடனோ, கரும்பாறையிலோ மோதினால்கூட முனை மழுங்காது, அதே நேரம், எதிர்வீசப்படும் வாளை வெட்டிக்கூறாக்கும் வலுவுள்ள ஈர்வாள் அது. இரவாதனின் வலதுகை வேகம் பாரியே வியக்கக்கூடியது. அதனால்தான் அவன் செலுத்தும் அம்பு யானையின் கழுத்தில் ஒரு பகுதியில் தைத்து மறுபகுதியில் எட்டிப்பார்க்கிறது. அதுவும் நீலனின் கூடார வாயிலில் நடக்கும் இந்தத் தாக்குதலில் மரக்குச்சிகளை வெட்டித்தள்ளுவதைப்போல பாண்டிய வீரர்களின் வாள்களைச் சீவித்தள்ளினான். இடதுகை மழுவின் முன் விளிம்பில் கைகளும் தலையுமாக மாட்டிய எதிரிகளின் உறுப்புகள் மீன் செதில்களைப்போலச் சீவப்பட்டு எல்லா திசைகளிலும் பறந்துகொண்டிருந்தன. பீறிடும் நீரூற்றுக்கு இடையே குளித்து நகர்பவனைப்போல் குருதி ஊற்றுக்கு இடையே நகர்ந்துகொண்டிருந்தான் இரவாதன்.
அவனை மறிக்கும் ஆற்றல் அங்கு இருக்கும் யாருக்கும் இல்லை. சினம்கொண்ட வேட்டை விலங்கின் எட்டுப்பற்களையும் தனது முகத்தருகே பார்த்ததைப்போல இரு கைகளாலும் ஆயுதங்களைக் கைக்கொள்ளும் இரவாதனைப் பார்த்து மிரண்டு நின்றான் பொதியவெற்பன்.
நீலனின் கூடாரத்துக்குள் நுழைய சில அடிகளே இருந்தபோது பாய்ந்து முன்சென்று தடுக்கலாமா என நினைத்த பொதியவெற்பன், சட்டென, பின்னால் நிற்கும் போர்ப்பணியாளனுக்கு உத்தரவிட்டான். அவன் உடனடியாக அபாயச் சங்கை ஊதினான். குலசேகரபாண்டியனின் அருகில் இருந்த சிறப்புப்படை வீரர்கள் மூஞ்சலை நோக்கி விரையத் தொடங்கினர்.
குளவன்திட்டிலிருந்து போர்க்களம் முழுவதையும் பார்த்த பாரியால் மூஞ்சலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மூஞ்சல் தட்டியங்காட்டை விட்டு மிகத்தள்ளி இருப்பதாலும் கூடாரங்கள் மறைத்திருப்பதாலும் உள்ளுக்குள் நடக்கும் தாக்குதலைத் துல்லியமாகப் பார்த்தறிய முடியவில்லை. ஆனால், களத்தில் மூன்றாம்நிலையைக் கடந்து நின்றிருந்த குலசேகரபாண்டியனின் படைகள் மீண்டும் மூஞ்சலை நோக்கி விரைவதைப் பார்த்தான் பாரி. கடைசிக்கணத்தில் மூஞ்சல் தன்னைக் காத்துக்கொள்ள முடியாமல் திணறுவதை உணர்ந்தான். இப்போது பறம்புத்தளபதிகளில் யாராவது ஒருவர் மூஞ்சலில் இருக்க வேண்டும் என அவன் மனம் துடித்தது.
கருங்கைவாணன் தலைமையிலான படையை உடனடியாக மூஞ்சலுக்கு வரச்சொல்லி மையூர்கிழாருக்குச் செய்தி வந்தது. மூஞ்சல் பேராபத்தில் சிக்கிக்கொண்டது. தான் சொன்ன நேரத்தில் கருங்கைவாணன் அங்கே போயிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது; தலைமைத் தளபதியாகத் தான் பொறுப்பேற்றதை விரும்பாததால் அவன் தனது கட்டளையை ஏற்க மறுக்கிறான் என்று அவருக்குத் தோன்றியது. மீண்டும் மையூர்கிழார் சொன்னபோது கருகைவாணன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதற்குள் தனது குரலைப் பல மடங்கு உயர்த்தியபடி கத்தினார் மையூர்கிழார்.
அதன் பிறகு கருங்கைவாணன் மறுப்புச் சொல்லவில்லை. `மிக விரிந்த போர்க்களத்தில் வந்துசேரும் செய்திகளை எப்படிக் கையாள்வது என்பது தனித்த கலை; இவனது நாடே இந்தப் போர்க்களத்தைவிடச் சிறியது; இவன் இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?’ என்று எண்ணியபடி தனது தேரைத் திருப்ப உத்தரவிட்டான் கருங்கைவாணன்.
தாக்குதல் உச்சம்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் கருங்கைவாணன் ஏன் விலகிச்செல்கிறான் என்பது அவனது தேர்ப்படைத் தளபதி வெறுகாளனுக்குப் புரியவில்லை. ஆனால், எதிர்த்து நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் முடியனுக்குப் புரிந்தது. கருங்கைவாணனை இந்த இடம் விட்டு நகரவிடக் கூடாது; அதற்கு ஒரே வழி, அவனது பார்வை அகலும் முன் அவனது தளபதியான வெறுகாளனைக் கொன்று வீழ்த்துவது மட்டுமே என முடிவுசெய்தான்.
அவ்வளவு நேரமும் கருங்கைவாணனின் படைப்பிரிவைத் தாக்கிக்கொண்டிருந்த முடியன், தன் வளவனை நோக்கிச் சொன்னான்... ``நேராக வெறுகாளனை நோக்கித் தேரை நிற்காமல் செலுத்து. எக்காரணத்தாலும் வேகத்தைக் குறைக்காதே.” சொல்லி முடிக்கும்போது பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். அம்புகளை எடுத்து நாணேற்றி விடுவிக்கும் நேரம்கூட முடியனுக்கு இல்லை. கருங்கைவாணன் தனது தேரை மூஞ்சல் நோக்கித் திருப்பிவிட்டான். அவனது பார்வை மறைவதற்குள் வெறுகாளன் வீழவேண்டும்.
கருங்கைவாணன் இங்கிருந்து புறப்படும்போது எதிரிப்படைத் தளபதி தன்னை நோக்கி முன்னேறிவருகிறான் என்பதை அறிந்த கணமே அச்சம் மேலேறத் தொடங்கியது. அவன் வழக்கத்தைவிட வேகமாகவே அம்பை வில்லில் பூட்டினான். அப்போது உள்ளங்கை அளவு வண்டுகள் சீறிவருவதுபோல அவனை நோக்கி வந்தன. `என்ன அவை?’ என்று அவன் பார்க்கும்போது மார்பெலும்பிலும் இடதுதொடையிலும் இரண்டு உள்ளிறங்கின. முன்னுதடு முழுக்கப் புலிநகங்களாலான வட்டுடைத் தட்டு அது. காற்றை அறுத்தபடி சீவிச்செல்லும்; தேர்ந்த வீரன் கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னிரண்டு தட்டுகளை எறிவான். பிளிறும் யானை, துதிக்கையைக் கீழிறக்கும் முன் சாய்த்துவிட முடியும். வெறுகாளனால் எப்படி அதை எதிர்கொண்டு நிற்க முடியும்?
தேரைத் திருப்பிய கணத்தில் வெறுகாளன் வீழ்த்தப்பட்டதை அறிந்து. களம் நடுங்கக் கத்தினான் கருங்கைவாணன். மொத்தக் காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்த மையூர் கிழாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முடியன் மீண்டும் தனது தேரைப் பழையநிலைக்குக் கொண்டுவந்தான். வரும்போதே விண்டனை நோக்கிக் குரல்கொடுத்தான் முடியன், ``கணப்பொழுதும் காலம் தாழ்த்தாதே; ஏறித்தாக்கு!”
விண்டன் முன்னிலும் வேகமாக முன்னேறினான். அதைப் பார்த்தபடி கொப்பளிக்கும் ஆவேசத்தோடு தாக்குவதற்காகப் பாய்ந்து வந்தான் கருங்கைவாணன்.
எந்தத் தூண்டிலைப் போட்டால் மூஞ்சலை நோக்கிப் போகவிடாமல் திருப்ப முடியுமோ, அந்தத் தூண்டிலை முடியன் வீசியவுடன் திரும்பினான் கருங்கைவாணன். அவனது தாக்குதல் உத்தி இன்னும் கடுமையாக இருக்கும் என எண்ணும்போது ஆறு பரண்களின் மேலிருந்தும் முரசின் ஓசை மேலெழுந்தது.
யாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. அதிர்ந்து பார்த்தனர் பலரும். நினைவு மீண்டவனைப்போல சட்டெனத் திரும்பிய மையூர்கிழார், ``மூஞ்சலை நோக்கித் தேரை விரட்டு” என்றார்.
அவர் போகத் தொடங்கியதும் அவரைவிட வேகமாக மூஞ்சலை நோக்கி விரைந்தான் கருங்கைவாணன். தட்டியங்காடெங்கும் கடைசி ஐந்து பொழுதுகளில் நினைத்துப்பார்க்க முடியாதபடி தாக்குதல் தொடுத்த வீரர்கள், முரசின் ஓசை கேட்டதும் ஆயுதம் ஏந்திய கைகளைத் தளர்த்தினர். ஆனால், தளபதிகள் முன்னிலும் வேகமாகவும் படபடப்புடனும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர்.
கருங்கைவாணனின் தேரைத் தொடர்ந்து அதே வேகத்தில் முடியன் வந்துகொண்டிருந்தான். மூன்று நாள்களாகக் குதிரை ஏறாத தேக்கன், முடியனை விஞ்சியபடி குதிரையில் பாய்ந்துகொண்டிருந்தான். விலா எலும்பு உள்குத்தி இறங்குவதெல்லாம் தேக்கனின் நினைவிலேயே இல்லை. அவனைத் தொடர்ந்து உதிரன் வந்துகொண்டிருந்தான்.
மூஞ்சலின் வெளிப்புற அரண் அருகே வந்து நின்றது முடியனின் தேர். அவனுக்கு முன்னால், தன் கண்களையே நம்ப முடியாமல் உறைந்து நின்றான் கருங்கைவாணன். அவர்கள் உயிரெனக் காத்த மூஞ்சல், கண் பார்க்கும் எல்லை வரை நொறுக்கப்பட்டுக்கிடந்தது. வெட்டுப்பட்ட வீரர்களின் உடல்கள் மலையெனக் குவிந்திருந்தன. தேரையோ குதிரையையோ உள்ளே கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு எல்லாம் நிலைகுலைந்திருந்தன.
எந்த ஒரு போர்க்களத்திலும் குறுகிய வட்டத்துக்குள் இத்தனை ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கருங்கை வாணன் திகைத்து நின்றபோது முடியனின் கண்கள் துடித்தபடி இருந்தன. மூஞ்சலுக்குள் ஒருசில வீரர்கள் மட்டுமே இங்கும் அங்குமாகத் தென்பட்டனர். கவசப்படையோ, அகப் படையோ, சூளூர்ப்படையோ எந்தப் படையைச் சேர்ந்த வீரர்களும் கண்ணில்படவில்லை. குதிரைகள் கணக்கில்லாமல் குத்திச் சாய்க்கப் பட்டுள்ளன. குவிந்துகிடக்கும் பிணக்குவியலின் மீது மிதித்து நடக்க முடியவில்லை. எல்லோரும் அப்படியே நின்றிருந்தனர்.
தொலைவில் ஒருவன் மட்டும் நடந்துவருவது தெரிந்தது. யாரவன் என்று யாராலும் அடையாளம் காண முடியவில்லை. செந்நிறக் குருதியில் மூழ்கி எழுந்து வந்துகொண்டிருந்தான். கால்களை இழுத்து முன்னகர முடியவில்லை. ஆனாலும் விடாமல் முயன்று வந்தான். உடலில் எங்கெல்லாம் வெட்டுப்பட்டுள்ளது என்பது எதுவும் தெரியவில்லை. குருதி கொட்டியபடி இருந்தது. அவனது உடலமைப்பைப் பார்த்ததும் அவன் இரவாதன் இல்லை என்பது தெரிந்தது.
கையின் வலதுமூட்டின் ஓரச்சதையில் துளைத்திருந்த சிறுவாள் ஒன்று அப்படியே இருந்தது. அதைப் பிடுங்கக்கூடிய வலிமையின்றி நடந்துவந்தான். சற்று அருகில் வந்ததும் முடியன் அடையாளம் கண்டான், அவன் கரிணி என்று.
கண்டுணர்ந்த நேரத்தில் அவனை நோக்கி ஓடினான் முடியன். ஆனால், முன்னால் இருந்த வேந்தர்படை வீரர்கள் ``மூஞ்சலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வாளால் மறித்து நிறுத்தினர்.
துடித்துப்போய் நின்றான் முடியன். தேக்கனும் உதிரனும் அவனருகில் பதற்றத்தோடு வந்து நின்றனர்.
கரிணி மூஞ்சலின் எல்லையை வந்தடைவதற்கு வெகுநேரமானது. உயிரை இழக்காமல் நடந்துவந்தவன், முடியனின் அருகில் வந்ததும் தான் கையில் கொண்டு வந்த வாளை, பறம்பின் குடிமுடியனிடம் ஒப்படைத்தபடி அப்படியே மண்ணில் விழுந்தான்.
முடியன் கையில் வாங்கியது இரவாதனின் ஈர்வாள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன் ஓவியங்கள்: ம.செ.,

அம்பென்பது மூன்று விசைகள் மையம்கொள்வது. இழுத்து வளைக்கும்போது உள்ளுக்குள் விரியத்துடிக்கும் நரம்பு; பின்னிழுக்கும்போது முன்வாங்கத் துடிக்கும் நாண்; முன்னும் பின்னுமாக வீரனின் இரு கைகளைக்கொண்டு கூட்டப்படும் விசை. இந்த மூன்றின் குவிமையமே விடுபடும் அம்பாய் ஏகிச்செல்லும். இந்த மூன்றும் வேந்தர்படையைவிட மூன்று மடங்கு அதிக ஆற்றலோடு வெளிப்பட்டன சூளூர் வீரர்களிடம். குறுங்காது முயலின் குருதிவாடை காற்றெங்கும் மிதந்துகொண்டிருந்தது.
பொதியவெற்பனின் சிறப்புப்படை இரவாதனின் படையை நோக்கி முன்னேறியது. அப்போது சற்றும் எதிர்பார்க்காமல் சூளூர் வீரர்கள் விசிறி வடிவ உருளிகளான எறிவட்டுகளை வீசத் தொடங்கினர். ஈட்டி என்றால் போர்வீரன் ஒன்றைத்தான் வைத்திருக்க முடியும். ஆனால், ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்ட எறிவட்டுகளை இடுப்பிலே கோத்துவைத்திருந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்த எறிவட்டுகள் அனைத்தும் கவசவீரர்களின் கழுத்துக்குக் குறிவைக்கப்பட்டன.
பாய்ந்துவந்த வேந்தரின் கவசப்படை இரு பனை தொலைவிலேயே நின்று எறிவட்டுகளைக் கவசங்களால் தடுக்கவேண்டிய நிலை வந்தது. அப்போது மூன்றாவது தடுப்பு நோக்கி இரவாதன் முன்னேறிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த பொதியவெற்பன், உலோக வில்லில் தணல் அம்புகளால் இரவாதனை நோக்கிக் கடும்தாக்குதல் நடத்தியபடி ``அவனை நோக்கித் தேரை விரைவுபடுத்து” என்று கத்தினான்.
மூஞ்சலின் வெளிப்புற அரண் மீண்டும் ஒன்றுக்கொன்று செருகி அடைப்பை உருவாக்கியது. ஆனால், உள்ளே நுழைந்த சூளூர் வீரர்கள் தங்களை நோக்கி மொய்க்கும் வேந்தர்படையைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்தனர். கவசங்களின்மேல் வெட்டியிறங்கும் வாளின் ஓசை மூஞ்சலை நடுங்கச்செய்தது, கொற்றவாளும் கணிச்சி எனும் கோடரிவகை ஆயுதமும் சூளூர் வீரர்களின் உடல் உறுப்பைப்போன்றவை. பெருமரத்தையும் கணிச்சிகொண்டு ஒரே வீச்சில் வெட்டிச் சரிக்கும் சூளூர் வீரர்களின் வேகம் கவசங்களைக் கிழித்து இறங்கிக்கொண்டிருந்தது.
இரவாதன் மூன்றாவது தடுப்பை நெருங்கும்போது பொதியவெற்பனின் தேர் விரைந்து அவ்விடம் வந்தது. நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சி வகைத்தேர், கதிரவன் ஒளியில் கண்களைப் பறித்தபடி வீரர்களைப் பிளந்துகொண்டு வந்தது. கவச வீரர்களின் தாக்குதலுக்கிடையே திரும்பி மீளும் கணத்தில் தன்னை நோக்கி வரும் தேரைப் பார்த்தான் இரவாதன். அவனைச் சூழ்ந்திருந்த கவசவீரர்களைத் தாக்கிக்கொண்டிருந்த அதே வேகத்தில் தனது முதுகிலே இருந்த மூவிலை வேலை எடுத்து மின்னலென வீசினான்.
தேரின் இடதுபுறச் சக்கரத்தின் நடு அச்சைப் பிளந்து உள்ளிறங்கியது மூவிலை வேல். என்ன நடந்தது என்பதை வீரர்கள் உணரும்முன் தரையிலே உருண்டுகொண்டிருந்தான் வளவன். அவனைத் தாண்டி வீசப்பட்டான் பொதியவெற்பன். உடைந்த தேரை, கனைப்பொலியோடு வேகம் குறையாமல் இழுத்து முன் சென்றன குதிரைகள். கொடிஞ்சி வகைத் தேரைத் தனியொருவன் உடைக்கவும் முடியும் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
தேரிலிருந்து சரிந்தவனை நோக்கித் தாக்குதலைத் தொடுத்து உயிர் பறிப்பதற்கெல்லாம் இரவாதனுக்கு நேரமில்லை. அவனது வேகத்துக்குக் குறிக்கீட்டாக எது வந்தாலும் இடியெனத் தாக்கி அழித்தபடி நீலனின் கூடாரம் நோக்கி விரைவது மட்டுமே அவன் வேலை. ஏறக்குறைய அவன் நீலனின் கூடாரத்தை நெருங்கினான். அவ்வளவு நேரமும் அவனது வேகத்தைத் தடுக்க அணியணியாய் வந்து அகப்படை வீரர்கள் போரிட்டனர். ஆனால், மூன்றாவது தடுப்பைப் பிளந்து உள்நுழைந்த வேகத்தில் பொதியவெற்பனின் தேரை ஒரே வேலால் நொறுக்கிக் கவிழ்த்ததைப் பார்த்த யாரும் அதன் பிறகு எதிர்கொண்டு நிற்கவில்லை.
விழுந்து எழுந்த வேகத்தில் தனது காப்புப்படையோடு இரவாதனை நோக்கிப் பாய்ந்தான் பொதியவெற்பன். பாண்டிய இளவரசனின் தலைசிறந்த பாதுகாப்புப் படையினர் பதினாறு பேர் இரவாதனைச் சுற்றிவளைத்தனர்.
இடதுகையில் நீள்மழுவும் வலதுகையில் ஈர்வாளும்கொண்டு இரவாதன் தாக்கிய வேகம் பதினாறு பேரையும் நடுங்கச்செய்தது. பறம்பின் சிறப்பு உலோகக் கலவையால் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்ட வாள் அது. வேறெந்த உலோகத்துடனோ, கரும்பாறையிலோ மோதினால்கூட முனை மழுங்காது, அதே நேரம், எதிர்வீசப்படும் வாளை வெட்டிக்கூறாக்கும் வலுவுள்ள ஈர்வாள் அது. இரவாதனின் வலதுகை வேகம் பாரியே வியக்கக்கூடியது. அதனால்தான் அவன் செலுத்தும் அம்பு யானையின் கழுத்தில் ஒரு பகுதியில் தைத்து மறுபகுதியில் எட்டிப்பார்க்கிறது. அதுவும் நீலனின் கூடார வாயிலில் நடக்கும் இந்தத் தாக்குதலில் மரக்குச்சிகளை வெட்டித்தள்ளுவதைப்போல பாண்டிய வீரர்களின் வாள்களைச் சீவித்தள்ளினான். இடதுகை மழுவின் முன் விளிம்பில் கைகளும் தலையுமாக மாட்டிய எதிரிகளின் உறுப்புகள் மீன் செதில்களைப்போலச் சீவப்பட்டு எல்லா திசைகளிலும் பறந்துகொண்டிருந்தன. பீறிடும் நீரூற்றுக்கு இடையே குளித்து நகர்பவனைப்போல் குருதி ஊற்றுக்கு இடையே நகர்ந்துகொண்டிருந்தான் இரவாதன்.
அவனை மறிக்கும் ஆற்றல் அங்கு இருக்கும் யாருக்கும் இல்லை. சினம்கொண்ட வேட்டை விலங்கின் எட்டுப்பற்களையும் தனது முகத்தருகே பார்த்ததைப்போல இரு கைகளாலும் ஆயுதங்களைக் கைக்கொள்ளும் இரவாதனைப் பார்த்து மிரண்டு நின்றான் பொதியவெற்பன்.
நீலனின் கூடாரத்துக்குள் நுழைய சில அடிகளே இருந்தபோது பாய்ந்து முன்சென்று தடுக்கலாமா என நினைத்த பொதியவெற்பன், சட்டென, பின்னால் நிற்கும் போர்ப்பணியாளனுக்கு உத்தரவிட்டான். அவன் உடனடியாக அபாயச் சங்கை ஊதினான். குலசேகரபாண்டியனின் அருகில் இருந்த சிறப்புப்படை வீரர்கள் மூஞ்சலை நோக்கி விரையத் தொடங்கினர்.
குளவன்திட்டிலிருந்து போர்க்களம் முழுவதையும் பார்த்த பாரியால் மூஞ்சலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மூஞ்சல் தட்டியங்காட்டை விட்டு மிகத்தள்ளி இருப்பதாலும் கூடாரங்கள் மறைத்திருப்பதாலும் உள்ளுக்குள் நடக்கும் தாக்குதலைத் துல்லியமாகப் பார்த்தறிய முடியவில்லை. ஆனால், களத்தில் மூன்றாம்நிலையைக் கடந்து நின்றிருந்த குலசேகரபாண்டியனின் படைகள் மீண்டும் மூஞ்சலை நோக்கி விரைவதைப் பார்த்தான் பாரி. கடைசிக்கணத்தில் மூஞ்சல் தன்னைக் காத்துக்கொள்ள முடியாமல் திணறுவதை உணர்ந்தான். இப்போது பறம்புத்தளபதிகளில் யாராவது ஒருவர் மூஞ்சலில் இருக்க வேண்டும் என அவன் மனம் துடித்தது.
கருங்கைவாணன் தலைமையிலான படையை உடனடியாக மூஞ்சலுக்கு வரச்சொல்லி மையூர்கிழாருக்குச் செய்தி வந்தது. மூஞ்சல் பேராபத்தில் சிக்கிக்கொண்டது. தான் சொன்ன நேரத்தில் கருங்கைவாணன் அங்கே போயிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது; தலைமைத் தளபதியாகத் தான் பொறுப்பேற்றதை விரும்பாததால் அவன் தனது கட்டளையை ஏற்க மறுக்கிறான் என்று அவருக்குத் தோன்றியது. மீண்டும் மையூர்கிழார் சொன்னபோது கருகைவாணன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதற்குள் தனது குரலைப் பல மடங்கு உயர்த்தியபடி கத்தினார் மையூர்கிழார்.
அதன் பிறகு கருங்கைவாணன் மறுப்புச் சொல்லவில்லை. `மிக விரிந்த போர்க்களத்தில் வந்துசேரும் செய்திகளை எப்படிக் கையாள்வது என்பது தனித்த கலை; இவனது நாடே இந்தப் போர்க்களத்தைவிடச் சிறியது; இவன் இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?’ என்று எண்ணியபடி தனது தேரைத் திருப்ப உத்தரவிட்டான் கருங்கைவாணன்.
தாக்குதல் உச்சம்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் கருங்கைவாணன் ஏன் விலகிச்செல்கிறான் என்பது அவனது தேர்ப்படைத் தளபதி வெறுகாளனுக்குப் புரியவில்லை. ஆனால், எதிர்த்து நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் முடியனுக்குப் புரிந்தது. கருங்கைவாணனை இந்த இடம் விட்டு நகரவிடக் கூடாது; அதற்கு ஒரே வழி, அவனது பார்வை அகலும் முன் அவனது தளபதியான வெறுகாளனைக் கொன்று வீழ்த்துவது மட்டுமே என முடிவுசெய்தான்.
அவ்வளவு நேரமும் கருங்கைவாணனின் படைப்பிரிவைத் தாக்கிக்கொண்டிருந்த முடியன், தன் வளவனை நோக்கிச் சொன்னான்... ``நேராக வெறுகாளனை நோக்கித் தேரை நிற்காமல் செலுத்து. எக்காரணத்தாலும் வேகத்தைக் குறைக்காதே.” சொல்லி முடிக்கும்போது பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். அம்புகளை எடுத்து நாணேற்றி விடுவிக்கும் நேரம்கூட முடியனுக்கு இல்லை. கருங்கைவாணன் தனது தேரை மூஞ்சல் நோக்கித் திருப்பிவிட்டான். அவனது பார்வை மறைவதற்குள் வெறுகாளன் வீழவேண்டும்.
கருங்கைவாணன் இங்கிருந்து புறப்படும்போது எதிரிப்படைத் தளபதி தன்னை நோக்கி முன்னேறிவருகிறான் என்பதை அறிந்த கணமே அச்சம் மேலேறத் தொடங்கியது. அவன் வழக்கத்தைவிட வேகமாகவே அம்பை வில்லில் பூட்டினான். அப்போது உள்ளங்கை அளவு வண்டுகள் சீறிவருவதுபோல அவனை நோக்கி வந்தன. `என்ன அவை?’ என்று அவன் பார்க்கும்போது மார்பெலும்பிலும் இடதுதொடையிலும் இரண்டு உள்ளிறங்கின. முன்னுதடு முழுக்கப் புலிநகங்களாலான வட்டுடைத் தட்டு அது. காற்றை அறுத்தபடி சீவிச்செல்லும்; தேர்ந்த வீரன் கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னிரண்டு தட்டுகளை எறிவான். பிளிறும் யானை, துதிக்கையைக் கீழிறக்கும் முன் சாய்த்துவிட முடியும். வெறுகாளனால் எப்படி அதை எதிர்கொண்டு நிற்க முடியும்?
தேரைத் திருப்பிய கணத்தில் வெறுகாளன் வீழ்த்தப்பட்டதை அறிந்து. களம் நடுங்கக் கத்தினான் கருங்கைவாணன். மொத்தக் காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்த மையூர் கிழாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முடியன் மீண்டும் தனது தேரைப் பழையநிலைக்குக் கொண்டுவந்தான். வரும்போதே விண்டனை நோக்கிக் குரல்கொடுத்தான் முடியன், ``கணப்பொழுதும் காலம் தாழ்த்தாதே; ஏறித்தாக்கு!”
விண்டன் முன்னிலும் வேகமாக முன்னேறினான். அதைப் பார்த்தபடி கொப்பளிக்கும் ஆவேசத்தோடு தாக்குவதற்காகப் பாய்ந்து வந்தான் கருங்கைவாணன்.
எந்தத் தூண்டிலைப் போட்டால் மூஞ்சலை நோக்கிப் போகவிடாமல் திருப்ப முடியுமோ, அந்தத் தூண்டிலை முடியன் வீசியவுடன் திரும்பினான் கருங்கைவாணன். அவனது தாக்குதல் உத்தி இன்னும் கடுமையாக இருக்கும் என எண்ணும்போது ஆறு பரண்களின் மேலிருந்தும் முரசின் ஓசை மேலெழுந்தது.
யாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. அதிர்ந்து பார்த்தனர் பலரும். நினைவு மீண்டவனைப்போல சட்டெனத் திரும்பிய மையூர்கிழார், ``மூஞ்சலை நோக்கித் தேரை விரட்டு” என்றார்.
அவர் போகத் தொடங்கியதும் அவரைவிட வேகமாக மூஞ்சலை நோக்கி விரைந்தான் கருங்கைவாணன். தட்டியங்காடெங்கும் கடைசி ஐந்து பொழுதுகளில் நினைத்துப்பார்க்க முடியாதபடி தாக்குதல் தொடுத்த வீரர்கள், முரசின் ஓசை கேட்டதும் ஆயுதம் ஏந்திய கைகளைத் தளர்த்தினர். ஆனால், தளபதிகள் முன்னிலும் வேகமாகவும் படபடப்புடனும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர்.
கருங்கைவாணனின் தேரைத் தொடர்ந்து அதே வேகத்தில் முடியன் வந்துகொண்டிருந்தான். மூன்று நாள்களாகக் குதிரை ஏறாத தேக்கன், முடியனை விஞ்சியபடி குதிரையில் பாய்ந்துகொண்டிருந்தான். விலா எலும்பு உள்குத்தி இறங்குவதெல்லாம் தேக்கனின் நினைவிலேயே இல்லை. அவனைத் தொடர்ந்து உதிரன் வந்துகொண்டிருந்தான்.
மூஞ்சலின் வெளிப்புற அரண் அருகே வந்து நின்றது முடியனின் தேர். அவனுக்கு முன்னால், தன் கண்களையே நம்ப முடியாமல் உறைந்து நின்றான் கருங்கைவாணன். அவர்கள் உயிரெனக் காத்த மூஞ்சல், கண் பார்க்கும் எல்லை வரை நொறுக்கப்பட்டுக்கிடந்தது. வெட்டுப்பட்ட வீரர்களின் உடல்கள் மலையெனக் குவிந்திருந்தன. தேரையோ குதிரையையோ உள்ளே கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு எல்லாம் நிலைகுலைந்திருந்தன.
எந்த ஒரு போர்க்களத்திலும் குறுகிய வட்டத்துக்குள் இத்தனை ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கருங்கை வாணன் திகைத்து நின்றபோது முடியனின் கண்கள் துடித்தபடி இருந்தன. மூஞ்சலுக்குள் ஒருசில வீரர்கள் மட்டுமே இங்கும் அங்குமாகத் தென்பட்டனர். கவசப்படையோ, அகப் படையோ, சூளூர்ப்படையோ எந்தப் படையைச் சேர்ந்த வீரர்களும் கண்ணில்படவில்லை. குதிரைகள் கணக்கில்லாமல் குத்திச் சாய்க்கப் பட்டுள்ளன. குவிந்துகிடக்கும் பிணக்குவியலின் மீது மிதித்து நடக்க முடியவில்லை. எல்லோரும் அப்படியே நின்றிருந்தனர்.
தொலைவில் ஒருவன் மட்டும் நடந்துவருவது தெரிந்தது. யாரவன் என்று யாராலும் அடையாளம் காண முடியவில்லை. செந்நிறக் குருதியில் மூழ்கி எழுந்து வந்துகொண்டிருந்தான். கால்களை இழுத்து முன்னகர முடியவில்லை. ஆனாலும் விடாமல் முயன்று வந்தான். உடலில் எங்கெல்லாம் வெட்டுப்பட்டுள்ளது என்பது எதுவும் தெரியவில்லை. குருதி கொட்டியபடி இருந்தது. அவனது உடலமைப்பைப் பார்த்ததும் அவன் இரவாதன் இல்லை என்பது தெரிந்தது.
கையின் வலதுமூட்டின் ஓரச்சதையில் துளைத்திருந்த சிறுவாள் ஒன்று அப்படியே இருந்தது. அதைப் பிடுங்கக்கூடிய வலிமையின்றி நடந்துவந்தான். சற்று அருகில் வந்ததும் முடியன் அடையாளம் கண்டான், அவன் கரிணி என்று.
கண்டுணர்ந்த நேரத்தில் அவனை நோக்கி ஓடினான் முடியன். ஆனால், முன்னால் இருந்த வேந்தர்படை வீரர்கள் ``மூஞ்சலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வாளால் மறித்து நிறுத்தினர்.
துடித்துப்போய் நின்றான் முடியன். தேக்கனும் உதிரனும் அவனருகில் பதற்றத்தோடு வந்து நின்றனர்.
கரிணி மூஞ்சலின் எல்லையை வந்தடைவதற்கு வெகுநேரமானது. உயிரை இழக்காமல் நடந்துவந்தவன், முடியனின் அருகில் வந்ததும் தான் கையில் கொண்டு வந்த வாளை, பறம்பின் குடிமுடியனிடம் ஒப்படைத்தபடி அப்படியே மண்ணில் விழுந்தான்.
முடியன் கையில் வாங்கியது இரவாதனின் ஈர்வாள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன் ஓவியங்கள்: ம.செ.,
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
மிகவும் அருமையான போகிறது வேள்பாரியின் வியூகம்
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 281
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 153
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
இன்னும் படிக்காததால் கருத்துக் கூற இயலவில்லை, எனவே லைக் மட்டும் போடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
நல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ... பின்னர் ஏண்டா படித்தோம் என்று ஆகிவிடும் ...
எனக்கு இப்பொழுது அப்படி தான் அண்ணா தோன்றுகிறது ... இந்த தொடரை ஏன் படித்தோம் என ...
எனக்கு இப்பொழுது அப்படி தான் அண்ணா தோன்றுகிறது ... இந்த தொடரை ஏன் படித்தோம் என ...


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
மேற்கோள் செய்த பதிவு: 1281904ரா.ரமேஷ்குமார் wrote:நல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ... பின்னர் ஏண்டா படித்தோம் என்று ஆகிவிடும் ...
எனக்கு இப்பொழுது அப்படி தான் அண்ணா தோன்றுகிறது ... இந்த தொடரை ஏன் படித்தோம் என ...
அதனாலென்ன அடுத்த தொடரை படிக்காமல் இங்கு பதிவிடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
நல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ...
ஹா ஹா ... அதனால் இல்லை அண்ணா .. இந்த தொடர் வந்து 70 வாரங்களுக்கு பின் தான் எனக்கு தெரிந்தது ஒரு வாட்ஸாப் குழுமம் மூலமாக .... படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை ... ஒவ்வொரு வாரமும் தொடர் முடியும் பொழுது அதற்குள் முடிந்து விட்டதே என வருத்தப்படும் வகையில் இருக்கும் .. வியாழக்கிழமை வரை ஒவ்வொரு வாரமும் காத்திருக்க வேண்டும்..
அதனால் தான் இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை எனில் தொடர் முடிந்தவுடன் ஆரம்பியுங்கள் என வில்லத்தனமான கூறினேன் ...



ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
மேற்கோள் செய்த பதிவு: 1281912ரா.ரமேஷ்குமார் wrote:நல்ல முடிவு அண்ணா ... தயவு செய்து படித்துவிடாதீர்கள் இப்போதைக்கு ...
ஹா ஹா ... அதனால் இல்லை அண்ணா .. இந்த தொடர் வந்து 70 வாரங்களுக்கு பின் தான் எனக்கு தெரிந்தது ஒரு வாட்ஸாப் குழுமம் மூலமாக .... படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை ... ஒவ்வொரு வாரமும் தொடர் முடியும் பொழுது அதற்குள் முடிந்து விட்டதே என வருத்தப்படும் வகையில் இருக்கும் .. வியாழக்கிழமை வரை ஒவ்வொரு வாரமும் காத்திருக்க வேண்டும்..
அதனால் தான் இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை எனில் தொடர் முடிந்தவுடன் ஆரம்பியுங்கள் என வில்லத்தனமான கூறினேன் ...
அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டும் தொடரா... அருமை.
முடிந்ததும் முழுதாக படித்துக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
வீரயுக நாயகன் வேள்பாரி - 105
மூஞ்சலிலிருந்து நாகக்கரட்டுக்கு இரவாதனைத் தன் இரு கைகளிலும் ஏந்திவந்தான் தேக்கன். மற்றவர்கள் எத்தனையோ முறை அவனிடமிருந்து வாங்க முயன்றும் அவன் தரவில்லை. பறம்பு ஆசான் மாவீரனுக்குச் செய்யும் மரியாதை இது.

சமதள வேந்தர்கள் படையோடு ஒப்பிட்டால், ஒவ்வொரு பறம்பு வீரனும் மாவீரனே. ஆனால், ஒரு பறம்பு வீரனை மற்ற பறம்பு வீரர்களோடு ஒப்பிட்டால் மாவீரர்கள் என வெகுசிலரே இருப்பர். இரவாதன் அப்படியொரு மாவீரன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், தட்டியங்காட்டுப் போரின் தொடக்கத்திலிருந்து அவன் நடத்திய ஒவ்வொரு தாக்குதலும் இணைசொல்ல முடியாதது.
முன்திட்டப்படி, இன்றைய போரில் மூஞ்சலின் வெளிப்புற அரணை முழுமுற்றாக அழித்தொழிக்கும் பொறுப்பு முடியனுக்கும் விண்டனுக்கும் உரியது. ஆனால், அவர்களால் மூஞ்சலுக்கு அருகில் போகவே முடியவில்லை. அதே வேளையில் தனக்கான பொறுப்பின்படி கடைசி பத்து நாழிகை இருக்கும்போது, எதிரிகளால் வெளிப்புற அரணை உடைத்துக்கொண்டு உள்நுழையவே முடியாது எனக் கருதப்பட்ட மூஞ்சலை, தனது குதிரையின் வேகத்தைக் குறைக்காமலே உடைத்துக்கொண்டு உள்நுழைந்தான் இரவாதன். அகப்படையையும், பொய்க்கூடாரங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படையையும் முற்றிலுமாக அழித்தொழித்தான்.
இந்நிலையில்தான் பொதியவெற்பன், உதியஞ்சேரல், சோழவேழன் ஆகிய மூவரும் தங்களின் சிறப்புப் படைகளோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர். நன்கு திட்டமிட்டிருந்ததால் கரிணியும் பிடறிமானும் இரு பக்கங்களிலும் இணையற்ற தாக்குதலை நடத்த, மூன்றாம் நிலையைக் கடந்து நீலனின் கூடாரம் நோக்கி முன்னேறினான் இரவாதன். அவனது வேகத்தையும் தாக்குதலையும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. சூளூர் வீரர்களின் வாள்வீச்சு வேகம் வேந்தர்படைத் தளபதிகளால் தற்காத்துக்கொள்ளவே முடியாததாக இருந்தது. நிலைமை முற்றிலும் கைமீறிவிட்டதை உணர்ந்த நிலையில்தான் பேரரசர் குலசேகரபாண்டியனின் தனித்த பாதுகாப்புக்கான சிறப்புப் படையை வரவழைத்தான் பொதியவெற்பன்.
தட்டியங்காட்டில் கடுமையாக மோதிக்கொண்டிருந்த இருதரப்புத் தளபதிகளும், போர் முடிவுற்றதுக்கான முரசின் ஓசையைக் கேட்டதும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான பதற்றம் இருந்தது. மையூர்கிழார் தான் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மூஞ்சல் தாக்கப்பட்டுவிட்டதே என்ற பதற்றத்தில் விரைந்தார். இறுதியில் அபாயத்தை உணர்த்தும் ஒலியெழுப்பப் பட்டதால் மூஞ்சல் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கும் என்பதைக் கருங்கைவாணன் உணர்ந்தான். மூஞ்சலின் வலிமைமிகுந்த அமைப்பு வெளிப்புற மூடரண்தான். அதை உடைத்து உள்நுழையும் ஆற்றல்கொண்ட படையால் உள்ளுக்குள் போய் பேரழிவை உருவாக்க முடியும் எனத் தெரியும். ஆனால், அபாய ஒலி எழுப்பும் அளவுக்கு நிலைமை மாறும் என நினைக்கவில்லை. பறம்புப் படையின் முக்கியமான தளபதிகள் தட்டியங் காட்டில் தங்களுடன்தான் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். குதிரைப்படை மட்டுமே அங்கே போயுள்ளது என்பதால் அகப்படை எளிதில் சமாளிக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், நிலைமை ஏன் கைமீறிப்போனது என்பது வெளியில் இருக்கும் யாருக்கும் புரியவில்லை.
முரசின் ஓசை கேட்டதும் முடியன்தான் முதலில் பாய்ந்து போனான். `கடைசி நாழிகையில், மூஞ்சலில் இருந்து இரவாதனின் படை பின்வாங்கிவிட்டது. இடைநிலையில் நின்றுதான் அவன் போரிட்டுக் கொண்டிருப்பான்’ என நினைத்தான் முடியன். ஆனால், `இரவாதன், மூஞ்சலுக்குள் போய்விட்டான்’ என தேக்கன் கணித்திருந்தான். எனவே, அவனது சிந்தனை முழுவதும் மூஞ்சலை நோக்கியே இருந்தது.
எல்லோரும் மூஞ்சலின் அருகில் வந்து நின்றபோதுதான் மூஞ்சல் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிந்தது. அகப்படை, கவசப்படை, வேந்தர்களின் சிறப்புப்படை, பேரரசரின் தனிப்படை அனைத்தையும் கொன்றுகுவித்த சூளூர் வீரர்களின் ஆடுகளம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்த கணம், மையூர்கிழாருக்கும் கருங்கைவாணனுக்கும் குருதியோட்டம் நின்றது. பிணக்குவியல்கள் கணக்கில்லாமல் இருந்தன. குருதி பொங்க மேலெழும் கதறல் பெருகி தட்டியங்காடு முழுவதும் எதிரொலித்தது. சில இடங்களில் யானை உயரத்துக்குக் கிடந்தன கொன்றழிக்கப்பட்ட வீரர்களின் உடல்கள்; பறம்பு வீரர்களின் குதிரைகள் கணக்கில்லாமல் கொன்றழிக்கப் பட்டுள்ளன. தட்டியங்காடெங்கும் முழுநாள் போரிலும் கொல்லப்பட்டவர்களை மொத்தமாகக் குவித்ததைப்போல் இருந்தது.

அந்தத் தாக்குதலில் இரவாதனுடன் சென்ற சூளூர் வீரர்கள் யாரும் மிஞ்சவில்லை. ஆனால், ஒவ்வொருவனும் எண்ணற்றோரை வீழ்த்திய பிறகே வீழ்ந்தான். பொய்க்கூடாரங்களை பிடறிமான் தலைமையிலான வீரர்கள் முழுமுற்றாக அழித்து முடிக்கும்போது, தனது கவசப்படையோடு உள்நுழைந்து தாக்கினான் சோழவேழன். இடைவெளியோடு தொலைவில் நின்று போரிடுவதற்கும் நெருங்கி நின்று போரிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
மூவேந்தர்களும் அவரவரின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர். அப்போது வரை மூஞ்சலின் வெளிப்புற அரண் வீரர்களால் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. மூவேந்தர்களின் சிறப்புப்படை முழுமையாக உள்ளே வந்ததும் ஏறக்குறைய குவியலாக நின்று போரிடும் சூழல் உருவானது. ஒருவருக்கொருவர் வாளையும் ஈட்டியையும் இன்னபிற ஆயுதங்களையும் முழுமையாகச் சுழற்றி வீசவும் வாங்கித் தாக்கவுமான இடைவெளி இல்லாத நிலை இருந்தது. தனக்கு முன்னால் நிற்கும் வீரனோடு போரிட்டுக்கொண்டிருந்தால், முதுகுப்புறத்தில் நிற்பவன் நமது படையைச் சேர்ந்தவனா அல்லது எதிரிப்படை வீரனா என்பது தெரியாத நிலை உருவானது. இந்நிலை, வேந்தர்படைக்குப் பெருஞ்சிக்கலை உருவாக்கியது; ஆனால் சூளூர்ப்படைக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தியது. அடர்கானகத்தில் குழுவாக இயங்கினால் மட்டுமே வாழவும் தப்பிப்பிழைக்கவும் முடியும். எனவே, தன்னுடன் வருகிறவன் யார் என்பதைத் திரும்பிப் பார்க்காமலேயே அறிந்துகொள்ள எண்ணற்ற வழிமுறைகளைப் பறம்பு மக்கள் அறிந்தவர்கள். அவர்களால் அடர் இருட்டில்கூட குழுவாகச் செயல்பட்டு, தாக்குதலை முன்னெடுக்க முடியும்.
மூன்று வேந்தர்களின் சிறப்புப் படைகள், மூன்று சேனைவரையர்களின்கீழ் முப்பத்தாறு சேனை முதலிகளால் தலைமை தாங்கப்படுவதாக இருந்தது. அவர்களுடைய உத்தரவின்கீழ் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தாக்குதலில் இறங்கினர்.
விரிந்து உள்வாங்கும் குந்தமும் பனங்கருக்குப்போல உடலெங்கும் எண்ணிலடங்காத கூரிய முட்களையுடைய கழுமுள் சாட்டையும் சூளூர் வீரர்களின் தனித்த ஆயுதங்கள். வேந்தர்படை வீரர்கள் எண்ணற்றோர் உள்ளே வந்தது சூளூர் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. தங்களின் ஒலிக்குறிப்புகள் மூலம் கண நேரத்துக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். மூன்று வேந்தர்களின் மூன்று வகையான சிறப்புப் படைகளையும் முழுமையாக உள்வாங்கும் வரை வாளால் தாக்குதல் நடத்தினர். நிலைமையைக் கணித்து கூவல்குடி வீரன் ஓசையிட்டதும் கரிணியின் தலைமையிலான படைவீரர்கள் தங்களின் இடுப்புப் பகுதியில் மெய்யுறைச்சட்டைக்குமேல் சுற்றிவைத்திருந்த கழுமுள் சாட்டையைச் சுழற்றத் தொடங்கினர். சாட்டையின் சிறு நுனி பட்டால் போதும், சதை கொத்தாகப் பிய்த்துக்கொண்டு வெளிவரும். ஒருவன் எதிரியின் காலுக்குக் கீழே சாட்டையைச் சுழற்றினால் மற்றொருவன் கழுத்துக்கு மேலே சாட்டையைச் சுழற்றினான். ஒவ்வொரு சாட்டையும் இரு ஆள் நீளமுடையது.
கேடயங்கள், வாளையும் ஈட்டியையும் எதிர்கொள்ளக்கூடியவை. கழுமுள் சாட்டைக்குத் தடுப்பாயுதம் எதுவுமில்லை. இப்படியோர் ஆயுதம் இருப்பதே சமவெளி மக்களுக்குத் தெரியாது. நினைத்துப்பார்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் கழுமுள் சாட்டையை, சூளூர் வீரர்கள் மின்னல் வேகத்தில் வீசத் தொடங்கினர்.
சதை மட்டுமன்று, கால் எலும்புகளையே பிய்த்துக்கொண்டு சென்றன சாட்டைகள். உச்சந்தலை முதல் கால்முட்டி வரை கவசம் அணிந்திருந்த சிறப்புக் கவசப்படையை முதல் தாக்குதலிலேயே அஞ்சிப் பின்வாங்கவைத்தனர். அப்போது பின்னிலையில் நின்ற பிடறிமானின் தலைமையிலான வீரர்கள் குந்தகத்தால் குத்தித் தூக்கத் தொடங்கினர். இருபெரும் பொறிகளில் சிக்கித் சிதையத் தொடங்கியது சிறப்புக் கவசப்படை.
எந்த ஒரு போரிலும் கவசப்படை இவ்வளவு கொடுமையான அழிவுக்கு ஆளானதில்லை. மூஞ்சலுக்குள் தாங்கள் உருவாகிய பொறியில் பறம்பு வீரர்கள் சிக்குவார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், சூளூர் வீரர்களின் பொறிக்குள் முழுமுற்றாக வேந்தர்படை சிக்கியது. அவசரத்தில் மூவேந்தர்களின் மூன்று சிறப்புப் படைகளும் மொத்தமாக உள்ளிறக்கியதால் அவர்களால் போரிடுவதற்குப் போதுமான களத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தாக்குதலின் அளவு எல்லை கடந்ததாக இருந்ததால் வெளிப்புற அரணைக் காத்துக்கொண்டிருந்த வீரர்களையும் உள்முகத் தாக்குதலுக்குப் பயன்படுத்தவேண்டிய சூழல் உருவானது. இவையெல்லாம் சூளூர் வீரர்களுக்கு வாய்ப்பாகவே அமைந்தன.
சூளூர் வீரர்கள் எல்லோரும் இன்றைய நாளின் முடிவை தெளிவாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். தாங்கள் உயிருடன் திரும்பும் வாய்ப்பு மிகமிகக் குறைவே. ஆனால், நீலன் மீட்கப்பட்டே ஆக வேண்டும். அதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தி வேந்தர்படையை முழுமுற்றாக வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் போரிட்டனர். தட்டியங்காட்டில் இதுவரை நிகழாத பேரழிவை அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். எண்ணிக்கையில் இதைவிட அதிகமான வீரர்களை இந்தப் போர்க்களத்தில் பறம்புப்படை கொன்றழித்துள்ளது. ஆனால், அவர்களெல்லாம் பொதுவான படைவீரர்கள். இன்று சூளூர் வீரர்கள் அழித்தொழித்துள்ளதோ மூவேந்தர்களின் மிகச்சிறந்த படைவீரர்களின் தொகுப்பை. இந்த வீரர்களின் ஆற்றலை நம்பித்தான் வேந்தர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வர்.

மூன்று பெருவேந்தர்களின் சிறப்புப் படைகளும் மூன்று வகையான தன்மைகளைக் கொண்டிருந்தன. கவச உடைகளில் தொடங்கி, பயன்படுத்தும் ஆயுதம் வரை நிறைய வேறுபாடுகள் மூன்று படைகளுக்கும் உண்டு. ஆனால், சூளூர் வீரர்களின் தாக்குதலுக்கு முன்னால் எந்தப் படையும் எந்நிலையிலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோரைக்கொண்ட கவசப்படையை சூளூர்ப்படையின் சில நூறு வீரர்கள் முழுமுற்றாக அழித்தொழித்தனர். இந்தத் தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை இதுவரை யாரும் கேள்விப்பட்டதுகூட இல்லை.
மலையெனக் குவிந்து கிடக்கும் வேந்தர்படை வீரர்களின் பிணங்களுக்குள் சூளூர் வீரர்களின் உடல்களைத் தேடி எடுக்கவேண்டி இருந்தது. போர் முடிவுற்ற ஓசை கேட்டதும் வேந்தர்படை வீரர்கள் அனைவரும் பாசறைக்குத் திரும்பினர். இறந்தவர்களை அப்புறப்படுத்துவது, வீரர்களின் வேலையன்று; போர்ப் பணியாளர்களின் வேலை. மூஞ்சலுக்குள் பறம்பு வீரர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் வெளியிலேயே காத்திருந்தனர். வேந்தர்களின் போர்ப் பணியாளர்கள், சூளூர் வீரர்களின் ஒவ்வோர் உடலாகத் தந்து கொண்டிருந்தனர். அதை வாங்கிய பறம்பு வீரர்கள், நாகக்கரடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அனைத்து உடல்களும் எடுக்கப்படும் வரை முடியன் அந்த இடம் விட்டு அகலவில்லை.
இரவாதனின் உடலைத் தேக்கன் தூக்கிச் சென்றான். அவன் பின்னால் பறம்பின் மொத்தப் படையும் வந்துகொண்டிருந்தன. நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அவன் வந்தபோது இருள் முழுமைகொண்டிருந்தது. இரலிமேட்டிலிருந்து தேக்கனை நோக்கி ஓடிவந்தான் பாரி. அவனுக்குப் பின்னால் காலம்பன் உள்ளிட்ட மற்றவர்கள் ஓடோடி வந்தனர். பெருவீரனின் மரணம் மொத்தக் காட்டையும் உறையவைத்திருந்தது. சிறிய ஓசைகூட எழவில்லை. தீப்பந்தத்தோடு சில வீரர்கள் பாரிக்குப் பின்னால் ஓடிவந்துகொண்டிருந்தனர்.
எதிர்வந்த பாரி, தேக்கனுக்கு முன்னால் இரு கை ஏந்தி நின்றான். தேக்கனால் பாரியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. தலை குனிந்தபடி கையில் இருக்கும் இரவாதனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், பாரியின் கைகளுக்கு இரவாதனை மாற்றவில்லை. எதிர்நிலையில் கையேந்தி நிற்கும் பாரி, கைகளைத் தளர்த்தவில்லை. இருவருக்கும் உள்ளோடும் குருதி உறைந்து நின்றுவிட்டதைப் போல் இருந்தது. முன்னும் பின்னுமாக வீரர்கள் சூழ்ந்தனர். தீப்பந்தங்களின் ஒளி இரவாதனின் மேலே படர்ந்தபடி இருந்தது.
பாரி குனிந்து இரவாதனைப் பார்க்கவேயில்லை; நிமிர்ந்தபடி தேக்கனையே பார்த்துக்கொண்டிருந்தான். தேக்கனோ நிமிர்ந்து பாரியைப் பார்க்கவேயில்லை; குனிந்தபடி இரவாதனையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குள்ளும் உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன.
பாரி குனிந்து இரவாதனின் உடலைப் பார்த்தாலோ, தேக்கன் நிமிர்ந்து பாரியின் முகத்தைப் பார்த்தாலோ உடைந்து நொறுங்கிவிடுவர். வீரர்களின் மரணத்தில் கண்ணீர் சிந்தக் கூடாது. அதுவும் பாரியும் தேக்கனும் கலங்கினால் நிலைமை என்னவாகும்? இருவரும் அதைத் தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தனர். மனதின் உறுதியை, கனத்த அமைதி நொறுக்கிக்கொண்டிருந்தது. ஆனால், என்ன செய்வதென்று யாருக்கும் விளங்க வில்லை. நின்ற இடத்தை விட்டு இருவரும் நகரவில்லை.
இந்தச் சூழலை எப்படிக் கையாள்வதென்று உடன் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. வாரிக்கையனும் கபிலரும் செய்தியைக் கேள்விப்பட்டு இடிந்துபோய் இரலிமேட்டின் குகை அடிவாரத்திலேயே உட்கார்ந்துவிட்டனர். பாரியுடன் வந்து நிற்கும் காலம்பன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.
ஒவ்வொரு கணமும் கடக்க முடியாத கணமாக உறைந்து நின்றது. தலை நிமிராமலே இருந்த தேக்கன், ஒரு கணத்தில் சட்டென்று இரவாதனைப் பாரியின் கைகளில் ஒப்படைத்து விட்டு அப்படியே அவன் கால் பற்றிக் கதறினான் ``காட்டின் தலைமகனை இழந்து விட்டோமடா பாரி!’’

மலை உடைந்து சரிவதைப்போல இருந்தது. வெடித்து மேலெழும்பியது வீரர்களின் ஓலம். ஆசானின் கதறல் காட்டையே உலுக்கியது. காரமலையின் முகட்டை முட்டியது தேக்கனின் விம்மல்.
கைகள் இரவாதனை ஏந்தி நிற்க, கால்களைத் தேக்கன் பற்றி நிற்க, கண்ணீரும் குருதியும் மேலெல்லாம் கொட்டியபடி பாறையென நின்றான் பாரி.
மற்ற வீரர்கள் ஆசானைப் பிடித்துத் தூக்க எண்ணினர். ஆனால், யாரும் அருகில் செல்லவில்லை. பறம்புத் தலைவனின் கால் பற்றிக் கதறும் ஆசானின் உச்சந்தலையில் இரவாதனின் குருதி விழுந்துகொண்டே இருந்தது. போர்க்களத்துக்குப் பொறுப்பு, முடியனும் தேக்கனும்தான். ``நாங்கள் மாவீரனைக் காக்கத் தவறிவிட்டோம். அவன் அனைத்துத் தாக்குதலையும் எங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தான். ஆனால், நாங்களோ அவனிடம் கூறிய திட்டப்படி செயல்படத் தவறிவிட்டோம். இந்த மரணம் முடியனும் தேக்கனும் கவனம் தவறியதால் நிகழ்ந்தது’’ எனப் புலம்பி அழத் துடித்தது தேக்கனின் மனம். ஆனால், சொல்லவந்த சொற்கள் எதுவும் மேலெழவில்லை. உடைந்து கதறும் ஆற்றாமையிலிருந்து மீள முடியவில்லை. சற்று நேரத்துக்குப் பிறகே பாரியின் கால்களிலிருந்து கைகளை விலக்கினான் தேக்கன். அந்த விலகுதலில் மனம் ஆழமான நிலையொன்றை எய்தியது.
அவரவர்தானே மீண்டுகொள்ள வேண்டும். அடுத்தவருக்கு ஆறுதல் உரைக்க பறம்பு வீரர்கள் யாரிடமும் சொற்கள் இல்லை. தேக்கன் கைகளை விடுவித்துக்கொண்ட பிறகு பாரி நடக்கத் தொடங்கினான். வீரர்களின் பெருங்கூட்டம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
தேக்கன், அந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. எல்லோரும் தன்னைக் கடந்து போகும் வரை அங்கேயே இருந்தான். அனைவரும் கடந்து சென்றனர். மனம் சற்று நிதானம்கொண்டது.
`ஏன் உடைந்து கதறினோம்? நமது கதறலையும் சேர்த்தல்லவா பாரி சுமந்து செல்கிறான். நாம் கட்டுப்படுத்தியிருந்திருக்க வேண்டும்’ என, எண்ணங்கள் தோன்றியபடி இருந்தன. எல்லோரும் போன பிறகு நான்கைந்து வீரர்கள் மட்டும் உடன் இருந்தனர். அவர்களையும் போகச் சொன்னான். ஆனால், வீரர்களோ தேக்கனுக்கு உதவுவதற்காக அங்கேயே நின்றனர். மீண்டும் சத்தம்போட்டு போகச் சொன்னான். அவர்கள் சென்ற பிறகு கைகளை ஊன்றி மெள்ள எழுந்து நின்று பார்த்தான். தொலைவில் இரலிமேட்டின் முதற்குகையின் அடிவாரத்தில் கூட்டம் கூடி நின்றது. மலையெங்கும் இருக்கும் தீப்பந்தங்கள் அந்த இடம் நோக்கிக் குவிந்தபடி இருந்தன. அந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் நாகக்கரட்டில் இருக்கும் தனது குடிலை நோக்கி மெள்ள நடக்கத் தொடங்கினான்.

சமதள வேந்தர்கள் படையோடு ஒப்பிட்டால், ஒவ்வொரு பறம்பு வீரனும் மாவீரனே. ஆனால், ஒரு பறம்பு வீரனை மற்ற பறம்பு வீரர்களோடு ஒப்பிட்டால் மாவீரர்கள் என வெகுசிலரே இருப்பர். இரவாதன் அப்படியொரு மாவீரன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், தட்டியங்காட்டுப் போரின் தொடக்கத்திலிருந்து அவன் நடத்திய ஒவ்வொரு தாக்குதலும் இணைசொல்ல முடியாதது.
முன்திட்டப்படி, இன்றைய போரில் மூஞ்சலின் வெளிப்புற அரணை முழுமுற்றாக அழித்தொழிக்கும் பொறுப்பு முடியனுக்கும் விண்டனுக்கும் உரியது. ஆனால், அவர்களால் மூஞ்சலுக்கு அருகில் போகவே முடியவில்லை. அதே வேளையில் தனக்கான பொறுப்பின்படி கடைசி பத்து நாழிகை இருக்கும்போது, எதிரிகளால் வெளிப்புற அரணை உடைத்துக்கொண்டு உள்நுழையவே முடியாது எனக் கருதப்பட்ட மூஞ்சலை, தனது குதிரையின் வேகத்தைக் குறைக்காமலே உடைத்துக்கொண்டு உள்நுழைந்தான் இரவாதன். அகப்படையையும், பொய்க்கூடாரங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படையையும் முற்றிலுமாக அழித்தொழித்தான்.
இந்நிலையில்தான் பொதியவெற்பன், உதியஞ்சேரல், சோழவேழன் ஆகிய மூவரும் தங்களின் சிறப்புப் படைகளோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர். நன்கு திட்டமிட்டிருந்ததால் கரிணியும் பிடறிமானும் இரு பக்கங்களிலும் இணையற்ற தாக்குதலை நடத்த, மூன்றாம் நிலையைக் கடந்து நீலனின் கூடாரம் நோக்கி முன்னேறினான் இரவாதன். அவனது வேகத்தையும் தாக்குதலையும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. சூளூர் வீரர்களின் வாள்வீச்சு வேகம் வேந்தர்படைத் தளபதிகளால் தற்காத்துக்கொள்ளவே முடியாததாக இருந்தது. நிலைமை முற்றிலும் கைமீறிவிட்டதை உணர்ந்த நிலையில்தான் பேரரசர் குலசேகரபாண்டியனின் தனித்த பாதுகாப்புக்கான சிறப்புப் படையை வரவழைத்தான் பொதியவெற்பன்.
தட்டியங்காட்டில் கடுமையாக மோதிக்கொண்டிருந்த இருதரப்புத் தளபதிகளும், போர் முடிவுற்றதுக்கான முரசின் ஓசையைக் கேட்டதும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான பதற்றம் இருந்தது. மையூர்கிழார் தான் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மூஞ்சல் தாக்கப்பட்டுவிட்டதே என்ற பதற்றத்தில் விரைந்தார். இறுதியில் அபாயத்தை உணர்த்தும் ஒலியெழுப்பப் பட்டதால் மூஞ்சல் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கும் என்பதைக் கருங்கைவாணன் உணர்ந்தான். மூஞ்சலின் வலிமைமிகுந்த அமைப்பு வெளிப்புற மூடரண்தான். அதை உடைத்து உள்நுழையும் ஆற்றல்கொண்ட படையால் உள்ளுக்குள் போய் பேரழிவை உருவாக்க முடியும் எனத் தெரியும். ஆனால், அபாய ஒலி எழுப்பும் அளவுக்கு நிலைமை மாறும் என நினைக்கவில்லை. பறம்புப் படையின் முக்கியமான தளபதிகள் தட்டியங் காட்டில் தங்களுடன்தான் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். குதிரைப்படை மட்டுமே அங்கே போயுள்ளது என்பதால் அகப்படை எளிதில் சமாளிக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், நிலைமை ஏன் கைமீறிப்போனது என்பது வெளியில் இருக்கும் யாருக்கும் புரியவில்லை.
முரசின் ஓசை கேட்டதும் முடியன்தான் முதலில் பாய்ந்து போனான். `கடைசி நாழிகையில், மூஞ்சலில் இருந்து இரவாதனின் படை பின்வாங்கிவிட்டது. இடைநிலையில் நின்றுதான் அவன் போரிட்டுக் கொண்டிருப்பான்’ என நினைத்தான் முடியன். ஆனால், `இரவாதன், மூஞ்சலுக்குள் போய்விட்டான்’ என தேக்கன் கணித்திருந்தான். எனவே, அவனது சிந்தனை முழுவதும் மூஞ்சலை நோக்கியே இருந்தது.
எல்லோரும் மூஞ்சலின் அருகில் வந்து நின்றபோதுதான் மூஞ்சல் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிந்தது. அகப்படை, கவசப்படை, வேந்தர்களின் சிறப்புப்படை, பேரரசரின் தனிப்படை அனைத்தையும் கொன்றுகுவித்த சூளூர் வீரர்களின் ஆடுகளம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்த கணம், மையூர்கிழாருக்கும் கருங்கைவாணனுக்கும் குருதியோட்டம் நின்றது. பிணக்குவியல்கள் கணக்கில்லாமல் இருந்தன. குருதி பொங்க மேலெழும் கதறல் பெருகி தட்டியங்காடு முழுவதும் எதிரொலித்தது. சில இடங்களில் யானை உயரத்துக்குக் கிடந்தன கொன்றழிக்கப்பட்ட வீரர்களின் உடல்கள்; பறம்பு வீரர்களின் குதிரைகள் கணக்கில்லாமல் கொன்றழிக்கப் பட்டுள்ளன. தட்டியங்காடெங்கும் முழுநாள் போரிலும் கொல்லப்பட்டவர்களை மொத்தமாகக் குவித்ததைப்போல் இருந்தது.

அந்தத் தாக்குதலில் இரவாதனுடன் சென்ற சூளூர் வீரர்கள் யாரும் மிஞ்சவில்லை. ஆனால், ஒவ்வொருவனும் எண்ணற்றோரை வீழ்த்திய பிறகே வீழ்ந்தான். பொய்க்கூடாரங்களை பிடறிமான் தலைமையிலான வீரர்கள் முழுமுற்றாக அழித்து முடிக்கும்போது, தனது கவசப்படையோடு உள்நுழைந்து தாக்கினான் சோழவேழன். இடைவெளியோடு தொலைவில் நின்று போரிடுவதற்கும் நெருங்கி நின்று போரிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
மூவேந்தர்களும் அவரவரின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர். அப்போது வரை மூஞ்சலின் வெளிப்புற அரண் வீரர்களால் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. மூவேந்தர்களின் சிறப்புப்படை முழுமையாக உள்ளே வந்ததும் ஏறக்குறைய குவியலாக நின்று போரிடும் சூழல் உருவானது. ஒருவருக்கொருவர் வாளையும் ஈட்டியையும் இன்னபிற ஆயுதங்களையும் முழுமையாகச் சுழற்றி வீசவும் வாங்கித் தாக்கவுமான இடைவெளி இல்லாத நிலை இருந்தது. தனக்கு முன்னால் நிற்கும் வீரனோடு போரிட்டுக்கொண்டிருந்தால், முதுகுப்புறத்தில் நிற்பவன் நமது படையைச் சேர்ந்தவனா அல்லது எதிரிப்படை வீரனா என்பது தெரியாத நிலை உருவானது. இந்நிலை, வேந்தர்படைக்குப் பெருஞ்சிக்கலை உருவாக்கியது; ஆனால் சூளூர்ப்படைக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தியது. அடர்கானகத்தில் குழுவாக இயங்கினால் மட்டுமே வாழவும் தப்பிப்பிழைக்கவும் முடியும். எனவே, தன்னுடன் வருகிறவன் யார் என்பதைத் திரும்பிப் பார்க்காமலேயே அறிந்துகொள்ள எண்ணற்ற வழிமுறைகளைப் பறம்பு மக்கள் அறிந்தவர்கள். அவர்களால் அடர் இருட்டில்கூட குழுவாகச் செயல்பட்டு, தாக்குதலை முன்னெடுக்க முடியும்.
மூன்று வேந்தர்களின் சிறப்புப் படைகள், மூன்று சேனைவரையர்களின்கீழ் முப்பத்தாறு சேனை முதலிகளால் தலைமை தாங்கப்படுவதாக இருந்தது. அவர்களுடைய உத்தரவின்கீழ் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தாக்குதலில் இறங்கினர்.
விரிந்து உள்வாங்கும் குந்தமும் பனங்கருக்குப்போல உடலெங்கும் எண்ணிலடங்காத கூரிய முட்களையுடைய கழுமுள் சாட்டையும் சூளூர் வீரர்களின் தனித்த ஆயுதங்கள். வேந்தர்படை வீரர்கள் எண்ணற்றோர் உள்ளே வந்தது சூளூர் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. தங்களின் ஒலிக்குறிப்புகள் மூலம் கண நேரத்துக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். மூன்று வேந்தர்களின் மூன்று வகையான சிறப்புப் படைகளையும் முழுமையாக உள்வாங்கும் வரை வாளால் தாக்குதல் நடத்தினர். நிலைமையைக் கணித்து கூவல்குடி வீரன் ஓசையிட்டதும் கரிணியின் தலைமையிலான படைவீரர்கள் தங்களின் இடுப்புப் பகுதியில் மெய்யுறைச்சட்டைக்குமேல் சுற்றிவைத்திருந்த கழுமுள் சாட்டையைச் சுழற்றத் தொடங்கினர். சாட்டையின் சிறு நுனி பட்டால் போதும், சதை கொத்தாகப் பிய்த்துக்கொண்டு வெளிவரும். ஒருவன் எதிரியின் காலுக்குக் கீழே சாட்டையைச் சுழற்றினால் மற்றொருவன் கழுத்துக்கு மேலே சாட்டையைச் சுழற்றினான். ஒவ்வொரு சாட்டையும் இரு ஆள் நீளமுடையது.
கேடயங்கள், வாளையும் ஈட்டியையும் எதிர்கொள்ளக்கூடியவை. கழுமுள் சாட்டைக்குத் தடுப்பாயுதம் எதுவுமில்லை. இப்படியோர் ஆயுதம் இருப்பதே சமவெளி மக்களுக்குத் தெரியாது. நினைத்துப்பார்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் கழுமுள் சாட்டையை, சூளூர் வீரர்கள் மின்னல் வேகத்தில் வீசத் தொடங்கினர்.
சதை மட்டுமன்று, கால் எலும்புகளையே பிய்த்துக்கொண்டு சென்றன சாட்டைகள். உச்சந்தலை முதல் கால்முட்டி வரை கவசம் அணிந்திருந்த சிறப்புக் கவசப்படையை முதல் தாக்குதலிலேயே அஞ்சிப் பின்வாங்கவைத்தனர். அப்போது பின்னிலையில் நின்ற பிடறிமானின் தலைமையிலான வீரர்கள் குந்தகத்தால் குத்தித் தூக்கத் தொடங்கினர். இருபெரும் பொறிகளில் சிக்கித் சிதையத் தொடங்கியது சிறப்புக் கவசப்படை.
எந்த ஒரு போரிலும் கவசப்படை இவ்வளவு கொடுமையான அழிவுக்கு ஆளானதில்லை. மூஞ்சலுக்குள் தாங்கள் உருவாகிய பொறியில் பறம்பு வீரர்கள் சிக்குவார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், சூளூர் வீரர்களின் பொறிக்குள் முழுமுற்றாக வேந்தர்படை சிக்கியது. அவசரத்தில் மூவேந்தர்களின் மூன்று சிறப்புப் படைகளும் மொத்தமாக உள்ளிறக்கியதால் அவர்களால் போரிடுவதற்குப் போதுமான களத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தாக்குதலின் அளவு எல்லை கடந்ததாக இருந்ததால் வெளிப்புற அரணைக் காத்துக்கொண்டிருந்த வீரர்களையும் உள்முகத் தாக்குதலுக்குப் பயன்படுத்தவேண்டிய சூழல் உருவானது. இவையெல்லாம் சூளூர் வீரர்களுக்கு வாய்ப்பாகவே அமைந்தன.
சூளூர் வீரர்கள் எல்லோரும் இன்றைய நாளின் முடிவை தெளிவாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். தாங்கள் உயிருடன் திரும்பும் வாய்ப்பு மிகமிகக் குறைவே. ஆனால், நீலன் மீட்கப்பட்டே ஆக வேண்டும். அதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தி வேந்தர்படையை முழுமுற்றாக வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் போரிட்டனர். தட்டியங்காட்டில் இதுவரை நிகழாத பேரழிவை அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். எண்ணிக்கையில் இதைவிட அதிகமான வீரர்களை இந்தப் போர்க்களத்தில் பறம்புப்படை கொன்றழித்துள்ளது. ஆனால், அவர்களெல்லாம் பொதுவான படைவீரர்கள். இன்று சூளூர் வீரர்கள் அழித்தொழித்துள்ளதோ மூவேந்தர்களின் மிகச்சிறந்த படைவீரர்களின் தொகுப்பை. இந்த வீரர்களின் ஆற்றலை நம்பித்தான் வேந்தர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வர்.

மூன்று பெருவேந்தர்களின் சிறப்புப் படைகளும் மூன்று வகையான தன்மைகளைக் கொண்டிருந்தன. கவச உடைகளில் தொடங்கி, பயன்படுத்தும் ஆயுதம் வரை நிறைய வேறுபாடுகள் மூன்று படைகளுக்கும் உண்டு. ஆனால், சூளூர் வீரர்களின் தாக்குதலுக்கு முன்னால் எந்தப் படையும் எந்நிலையிலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோரைக்கொண்ட கவசப்படையை சூளூர்ப்படையின் சில நூறு வீரர்கள் முழுமுற்றாக அழித்தொழித்தனர். இந்தத் தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை இதுவரை யாரும் கேள்விப்பட்டதுகூட இல்லை.
மலையெனக் குவிந்து கிடக்கும் வேந்தர்படை வீரர்களின் பிணங்களுக்குள் சூளூர் வீரர்களின் உடல்களைத் தேடி எடுக்கவேண்டி இருந்தது. போர் முடிவுற்ற ஓசை கேட்டதும் வேந்தர்படை வீரர்கள் அனைவரும் பாசறைக்குத் திரும்பினர். இறந்தவர்களை அப்புறப்படுத்துவது, வீரர்களின் வேலையன்று; போர்ப் பணியாளர்களின் வேலை. மூஞ்சலுக்குள் பறம்பு வீரர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் வெளியிலேயே காத்திருந்தனர். வேந்தர்களின் போர்ப் பணியாளர்கள், சூளூர் வீரர்களின் ஒவ்வோர் உடலாகத் தந்து கொண்டிருந்தனர். அதை வாங்கிய பறம்பு வீரர்கள், நாகக்கரடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அனைத்து உடல்களும் எடுக்கப்படும் வரை முடியன் அந்த இடம் விட்டு அகலவில்லை.
இரவாதனின் உடலைத் தேக்கன் தூக்கிச் சென்றான். அவன் பின்னால் பறம்பின் மொத்தப் படையும் வந்துகொண்டிருந்தன. நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அவன் வந்தபோது இருள் முழுமைகொண்டிருந்தது. இரலிமேட்டிலிருந்து தேக்கனை நோக்கி ஓடிவந்தான் பாரி. அவனுக்குப் பின்னால் காலம்பன் உள்ளிட்ட மற்றவர்கள் ஓடோடி வந்தனர். பெருவீரனின் மரணம் மொத்தக் காட்டையும் உறையவைத்திருந்தது. சிறிய ஓசைகூட எழவில்லை. தீப்பந்தத்தோடு சில வீரர்கள் பாரிக்குப் பின்னால் ஓடிவந்துகொண்டிருந்தனர்.
எதிர்வந்த பாரி, தேக்கனுக்கு முன்னால் இரு கை ஏந்தி நின்றான். தேக்கனால் பாரியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. தலை குனிந்தபடி கையில் இருக்கும் இரவாதனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், பாரியின் கைகளுக்கு இரவாதனை மாற்றவில்லை. எதிர்நிலையில் கையேந்தி நிற்கும் பாரி, கைகளைத் தளர்த்தவில்லை. இருவருக்கும் உள்ளோடும் குருதி உறைந்து நின்றுவிட்டதைப் போல் இருந்தது. முன்னும் பின்னுமாக வீரர்கள் சூழ்ந்தனர். தீப்பந்தங்களின் ஒளி இரவாதனின் மேலே படர்ந்தபடி இருந்தது.
பாரி குனிந்து இரவாதனைப் பார்க்கவேயில்லை; நிமிர்ந்தபடி தேக்கனையே பார்த்துக்கொண்டிருந்தான். தேக்கனோ நிமிர்ந்து பாரியைப் பார்க்கவேயில்லை; குனிந்தபடி இரவாதனையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குள்ளும் உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன.
பாரி குனிந்து இரவாதனின் உடலைப் பார்த்தாலோ, தேக்கன் நிமிர்ந்து பாரியின் முகத்தைப் பார்த்தாலோ உடைந்து நொறுங்கிவிடுவர். வீரர்களின் மரணத்தில் கண்ணீர் சிந்தக் கூடாது. அதுவும் பாரியும் தேக்கனும் கலங்கினால் நிலைமை என்னவாகும்? இருவரும் அதைத் தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தனர். மனதின் உறுதியை, கனத்த அமைதி நொறுக்கிக்கொண்டிருந்தது. ஆனால், என்ன செய்வதென்று யாருக்கும் விளங்க வில்லை. நின்ற இடத்தை விட்டு இருவரும் நகரவில்லை.
இந்தச் சூழலை எப்படிக் கையாள்வதென்று உடன் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. வாரிக்கையனும் கபிலரும் செய்தியைக் கேள்விப்பட்டு இடிந்துபோய் இரலிமேட்டின் குகை அடிவாரத்திலேயே உட்கார்ந்துவிட்டனர். பாரியுடன் வந்து நிற்கும் காலம்பன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.
ஒவ்வொரு கணமும் கடக்க முடியாத கணமாக உறைந்து நின்றது. தலை நிமிராமலே இருந்த தேக்கன், ஒரு கணத்தில் சட்டென்று இரவாதனைப் பாரியின் கைகளில் ஒப்படைத்து விட்டு அப்படியே அவன் கால் பற்றிக் கதறினான் ``காட்டின் தலைமகனை இழந்து விட்டோமடா பாரி!’’

மலை உடைந்து சரிவதைப்போல இருந்தது. வெடித்து மேலெழும்பியது வீரர்களின் ஓலம். ஆசானின் கதறல் காட்டையே உலுக்கியது. காரமலையின் முகட்டை முட்டியது தேக்கனின் விம்மல்.
கைகள் இரவாதனை ஏந்தி நிற்க, கால்களைத் தேக்கன் பற்றி நிற்க, கண்ணீரும் குருதியும் மேலெல்லாம் கொட்டியபடி பாறையென நின்றான் பாரி.
மற்ற வீரர்கள் ஆசானைப் பிடித்துத் தூக்க எண்ணினர். ஆனால், யாரும் அருகில் செல்லவில்லை. பறம்புத் தலைவனின் கால் பற்றிக் கதறும் ஆசானின் உச்சந்தலையில் இரவாதனின் குருதி விழுந்துகொண்டே இருந்தது. போர்க்களத்துக்குப் பொறுப்பு, முடியனும் தேக்கனும்தான். ``நாங்கள் மாவீரனைக் காக்கத் தவறிவிட்டோம். அவன் அனைத்துத் தாக்குதலையும் எங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தான். ஆனால், நாங்களோ அவனிடம் கூறிய திட்டப்படி செயல்படத் தவறிவிட்டோம். இந்த மரணம் முடியனும் தேக்கனும் கவனம் தவறியதால் நிகழ்ந்தது’’ எனப் புலம்பி அழத் துடித்தது தேக்கனின் மனம். ஆனால், சொல்லவந்த சொற்கள் எதுவும் மேலெழவில்லை. உடைந்து கதறும் ஆற்றாமையிலிருந்து மீள முடியவில்லை. சற்று நேரத்துக்குப் பிறகே பாரியின் கால்களிலிருந்து கைகளை விலக்கினான் தேக்கன். அந்த விலகுதலில் மனம் ஆழமான நிலையொன்றை எய்தியது.
அவரவர்தானே மீண்டுகொள்ள வேண்டும். அடுத்தவருக்கு ஆறுதல் உரைக்க பறம்பு வீரர்கள் யாரிடமும் சொற்கள் இல்லை. தேக்கன் கைகளை விடுவித்துக்கொண்ட பிறகு பாரி நடக்கத் தொடங்கினான். வீரர்களின் பெருங்கூட்டம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
தேக்கன், அந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. எல்லோரும் தன்னைக் கடந்து போகும் வரை அங்கேயே இருந்தான். அனைவரும் கடந்து சென்றனர். மனம் சற்று நிதானம்கொண்டது.
`ஏன் உடைந்து கதறினோம்? நமது கதறலையும் சேர்த்தல்லவா பாரி சுமந்து செல்கிறான். நாம் கட்டுப்படுத்தியிருந்திருக்க வேண்டும்’ என, எண்ணங்கள் தோன்றியபடி இருந்தன. எல்லோரும் போன பிறகு நான்கைந்து வீரர்கள் மட்டும் உடன் இருந்தனர். அவர்களையும் போகச் சொன்னான். ஆனால், வீரர்களோ தேக்கனுக்கு உதவுவதற்காக அங்கேயே நின்றனர். மீண்டும் சத்தம்போட்டு போகச் சொன்னான். அவர்கள் சென்ற பிறகு கைகளை ஊன்றி மெள்ள எழுந்து நின்று பார்த்தான். தொலைவில் இரலிமேட்டின் முதற்குகையின் அடிவாரத்தில் கூட்டம் கூடி நின்றது. மலையெங்கும் இருக்கும் தீப்பந்தங்கள் அந்த இடம் நோக்கிக் குவிந்தபடி இருந்தன. அந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் நாகக்கரட்டில் இருக்கும் தனது குடிலை நோக்கி மெள்ள நடக்கத் தொடங்கினான்.


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
வீரயுக நாயகன் வேள் பாரி - 105
குகை அடிவாரத்தில் வைக்கப்பட்ட இரவாதனின் உடலைப் பார்க்கும் ஆற்றலின்றி பாறை மறைப்பொன்றிலே ஒடுங்கிக்கிடந்தார் கபிலர். நேற்றிரவு பொற்சுவையின் மரணம் அவர் மடியில்தான் நிகழ்ந்தது. இன்றிரவோ இரவாதனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. ஏது செய்வதென்று தெரியவில்லை. பாரியின் முகத்தைப் பார்க்கவோ, அவனிடம் பேசவோ மனதுக்கு வலுவில்லை. கையூன்றி உட்காரக்கூட வலுவின்றி, பாறையோடு பாறையாக சாய்ந்தே கிடந்தார். மூஞ்சலிலிருந்து சூளூர் வீரர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருந்தன. துயரத்தின் பேரலை காரமலை முழுவதும் பெருகிக்கொண்டிருந்தது.
அப்போது கூட்டத்துக்குள் யாரோ ஒருவன் வந்து, ``கபிலர் எங்கே?’’ என்று விசாரித்தான். வீரன் ஒருவன் பாறையின் அடிவாரத்தில் சாய்ந்து கிடக்கும் கபிலரைக் கைகாட்டிக் குறிப்பு சொன்னான். வந்துள்ளவன், திசைவேழரின் மாணவன். ஏற்கெனவே இருமுறை வந்தவன்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு நிலையில் கபிலரைக் காண்கிறான்.
இப்போது நிலைகுலைந்து கிடக்கும் கபிலரிடம் வந்து ``திசைவேழர், உங்களை அழைத்துவரச் சொன்னார்’’ என்றான்.
அதைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் கபிலர் இல்லை.
வந்தவன் மீண்டும் சத்தம் போட்டுச் சொன்னான்.
சற்றே கவனம்கொண்ட கபிலர், அவனை உற்றுப்பார்த்தபடி மறுத்துத் தலையை ஆட்டினார்.
அவனோ மீண்டும் வலியுறுத்தினான்.
பேசுவதற்குச் சொற்கள் மேலெழவில்லை. ஆனாலும் முயன்று சொன்னார் ``நான் வரும் நிலையில் இல்லை என்பதை திசைவேழரிடம் சொல்லிவிடு.’’

வந்த மாணவனுக்கு வேறென்ன செய்வதெனத் தெரியவில்லை. பெரும் புலவரிடம் இதற்குமேல் வலியுறுத்த முடியாது எனச் சிந்தித்தபடி எழுந்து நடக்க முற்பட்டான்.
இதைக் கவனித்தபடி இருந்த வாரிக்கையன், வந்தவனைக் கைகாட்டி நிறுத்தியபடி கபிலரிடம் வந்து, ``திசைவேழரிடம் போய் என்னவென்று கேட்டு வாருங்கள்’’ என்றார்.
``நான் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. என்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார் கபிலர்.
வாரிக்கையன் இங்குமங்குமாகப் பார்த்தார். அவரின் கண்கள் தேக்கனைத் தேடின. அவர் குடிலுக்குப் போய்விட்டதாக வீரன் ஒருவன் சொன்னான். கபிலரை நாம்தான் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டு மீண்டும் கபிலரிடம் வந்தார்.
அவரோ வாரிக்கையன் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை. ஆனாலும் வாரிக்கையன் விடவில்லை. ``நீங்கள்தான் பறம்பின் கோல்சொல்லி. எதிரிப்படையின் கோல்கொல்லி அழைக்கும்போது போகவில்லையென்றால், நமது தரப்புக் கருத்து கேட்கப்படாமலேயே போய்விடும் ஆபத்துள்ளது. எனவே, துயரத்தை விழுங்கி, கடமையை ஆற்றுங்கள்’’ என்றார்.
கபிலரோ கண்களை உருட்டி, பரிதாபமாகப் பார்த்தார். ``எனது உடலியக்கம் செத்துக்கிடக்கிறது. என்னால் எழுந்திருக்கவே முடியாது. பிறகு எப்படி..?’’ என்று சொல்லியபோதே கண்களில் நீர் கொட்டியது.
வாரிக்கையனால் கபிலரைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், வேறு வழியேதுமில்லை. அவர் போய்த்தான் ஆகவேண்டும் என எண்ணியபடி சொன்னார், ``யாராலும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனாலும் பொழுது விடிந்தால் நம் வீரர்கள் தட்டியங்காட்டில் போரிட்டுத்தானே ஆகவேண்டும்.’’
கபிலர் வாரிக்கையனைக் கவனித்தார்.
``மனம் நொறுங்கிக் கிடந்தாலும் எண்ணம் கைகூடினால் எழுந்து நிற்க முடியும் என்பதை ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறான். உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையா கபிலரே?’’
``புரிகிறது. ஆனால், நான் அதற்கான ஆள் இல்லையே. என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே காற்றில் கேட்ட கதறல் குரலோடு சேர்ந்து வாய்விட்டுக் கதறினார் கபிலர். கைகள் இரண்டையும் கூப்பி, கண்ணீர் பெருக வேண்டினார்.
கபிலரின் நிலை புரிகிறது. ஆனால், அப்படியே விட்டுவிட முடியாது என முடிவுக்கு வந்த வாரிக்கையன் சொன்னார், ``முடியனை நினைத்துப்பார்த்தீர்களா? சூளூர் வீரர்கள் எல்லோரின் உடலும் எடுக்கப்படும் வரை அவன் மூஞ்சல் விட்டு அகலாமல் அங்கேயே இருக்கிறான். பாரியை நினைத்துப்பார்த்தீர்களா? தேக்கனே காலைப் பிடித்து அழுத பிறகும் கலங்காமல் நிற்கிறான். அவர்களெல்லாம் இரவாதனைத் தங்களின் தோளில் போட்டு வளர்த்தவர்கள். வீரனின் மரணத்துக்குக் கைம்மாறு உண்டு. அதைச் செய்வதுதான் அவனுக்கு நாம் செலுத்தும் மரியாதை. இப்போது நீங்கள் பாடல் புனையும் புலவன் மட்டுமல்ல, பறம்பின் கோல்சொல்லி. எழுந்து நடங்கள். இரவாதனின் குருதி, மூக்கில் ஏறி உச்சந்தலையைச் சூடாக்கிக்கொண்டிருக்கிறது. எப்படி உங்களால் உட்கார்ந்துகொண்டு அழ முடிகிறது?’’ என்று குரல் உயர்த்தியவர், வந்திருந்த மாணவனைப் பார்த்து, ``அவரை அழைத்துக்கொண்டு போ’’ என்று ஆணையிட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டார்.
எங்கும் இருக்கும் வீரர்கள் வந்து மொய்த்துக்கொண்டிருந்தனர். குகை அடிவாரச் சரிவில் முண்டி உள்ளே போவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் தடுமாறி உள்ளே நுழைந்த வாரிக்கையன் நீண்டநேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தார் பாறையடிவாரத்தில் கபிலர் இல்லை.
நாகக்கரட்டிலிருந்து தட்டியங்காட்டை நோக்கி இறங்கும்போது அடர் இருள் அப்பிக்கிடந்தது. வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி முன் நடந்தனர். வழக்கம்போல் போர்க்களத்தின் நடுவில் இருக்கும் பரணில்தான் திசைவேழர் நிற்பார். அங்குதான் இருமுறையும் அழைத்துவரச் சொல்லிப் பேசியுள்ளார். இப்போதும் அங்கிருந்துதான் அழைத்துவரச் சொல்லியுள்ளார் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர். ஆனால் மாணவனோ, தட்டியங்காட்டின் நடுப்புறம் செல்லாமல் இடதுபுறம் சென்றான்.
``ஏன் இந்தப் பக்கம் செல்கிறாய்?’’ எனக் கேட்டார் கபிலர்.
அதற்கு அந்த மாணவன், ``இடதுபுறம் கடைசியாக இருக்கும் பரண்மீதுதான் திழைவேழர் நிற்கிறார். அங்குதான் அழைத்துவரச் சொன்னார்’’ என்றான்.
அதற்குமேல் கேட்கும் நிலையில் அவர் இல்லை. அவன் பின்னே நடந்து சென்றார்.
பரணின் அடிவாரத்துக்குக் கபிலர் வந்தபோது, மூவேந்தர்களும் வேந்தர்படைத் தளபதிகளும் நின்றிருந்தனர். திசைவேழர் பரண்மீது நின்றிருந்தார். ஏன் அனைவரையும் வரச் சொன்னார் என்பது யாருக்கும் தெரியவில்லை. வேந்தர்கள் மீண்டும் மீண்டும் கேட்டும் தளபதிகளிடம் விடை இல்லை. குலசேகரபாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர் குடும்பத்தினர் ஐவரும் வந்து நின்றிருந்தனர். மையூர்கிழார், கருங்கைவாணன் உள்ளிட்ட தளபதிகள் அணிவகுத்திருந்தனர். பறம்பின் தரப்பு கோல்சொல்லி வந்த பிறகே பேச முடியும் என்று திசைவேழர் சொல்லிவிட்டதால், யாரும் எதுவும் பேசாமல் அமைதிகாத்திருந்தனர்.
கபிலர் வந்ததும் அவரை பரண் மீது ஏறி வரச் சொன்னார். கபிலருக்கு, சற்றே ஐயம் உருவானது. பறம்பு வீரர்கள் ஓங்கலத்தைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியபோது விசாரணைக்கு அழைத்திருந்தார். திசைவேழர், அப்போது பரண்விட்டு கீழேதான் அமர்ந்திருந்தார். மறுநாள் போர்க்களத்தின் தன்மையைப் பற்றியும் தனக்கு உண்டான மன அழுத்தத்தைப் பற்றியும் விவாதிக்க வரச் சொன்னார். அப்போதும் கீழேதான் இருந்தார். அந்த இரு நிகழ்வுகளின்போதும் வேந்தர்கள் யாரும் இல்லை. ஆனால், இன்று வேந்தர்கள் அனைவரும் வந்து நிற்கின்றனர். திசைவேழரோ பரண் மேலிருந்தபடி தன்னையும் ஏன் மேலேறி வரச் சொல்கிறார் என எண்ணியபடியே பரண்மீது ஏறினார் கபிலர். முன்னும் பின்னுமாக இரு மாணவர்கள் அவர் ஏறிச் செல்ல உதவிசெய்தனர்.
பரணின் மேல்தளத்தில் நான்கு மூலைகளிலும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் சிறிய இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார் திசைவேழர். மேலேறிச் சென்ற கபிலர், திசைவேழரை வணங்க முயன்றபோது அவரின் முகத்தைப் பார்த்ததும் சற்றே அதிர்ச்சிக்குள்ளானார்.

முகம், கடுத்து உறைந்துபோய் இருந்தது. கண்கள் ஆற்றாமையால் கனன்றுகொண்டிருந்தன. வந்து நிற்கும் கபிலரை ஏறிட்டுப்பார்த்தார் திசைவேழர். துயரத்தின் பெருவலி கபிலரின் முகத்திலும் நிரம்பியிருந்தது.
கபிலரின் வரவுக்காகவே காத்திருந்த திசைவேழர் மெள்ள எழுந்து பரணின் முன்பகுதிக்கு வந்தார். கீழே எண்ணிலடங்காத பெரும்பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, தேர்களின் மீது பேரரசர்கள் அமர்ந்திருந்தனர்.
திசைவேழர் பேச முன்வருவது அறிந்து மாணவன் ஒருவன் முரசின் ஓசையை மெள்ள எழுப்பினான். கீழே இருந்தவர்கள் மேலே பார்த்தபடி கவனம்கொண்டனர். முன்வந்து தடுப்புக்கட்டையைப் பிடித்தபடி திசைவேழர் கூறினார், ``இன்றைய போரில் நமது படை விதிகளை மீறிவிட்டது.’’
எல்லோரும் சற்று அதிர்ச்சியானார்கள். `விதியை மீறியவர் யார்?’ என்று ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். மையூர்கிழார் கருங்கைவாணனிடம் பார்வையாலே கேள்வியை எழுப்பினார்.
கருங்கைவாணனோ, ``அப்படி யாரும் நமது தரப்பில் விதிகளை மீறவில்லை’’ என்றான்.
தலைமைத்தளபதி என்ற முறையில் மையூர்கிழார்தான் இப்போது பேசவேண்டும். அவரோ கருங்கைவாணனின் மீது சற்றே ஐயம்கொண்டிருந்தார். அவனிடம் நன்றாக விளக்கம் கேட்டறிந்த பிறகுதான் பேசத் தொடங்கினார், ``நிலைமான் கோல்சொல்லியை வணங்குகிறேன். வேந்தர்படையில் யாரும் விதி மீறவில்லையே.’’
``போர்விதி மீறப்பட்டதை நானே கண்டேன்.’’
``அப்படியென்றால், யார் விதி மீறினார் என்பதைக் கூறுங்கள் திசைவேழரே’’ என்று பணிந்து கேட்டார் மையூர்கிழார்.
எல்லோரும் பரண்மீது உற்றுப்பார்த்தபடி இருந்தனர். திசைவேழர் சொன்னார், ``பொதியவெற்பனும் சோழவேழனும்.’’
அதிர்ந்து நின்றனர் அனைவரும்.
திசைவேழரின் குற்றச்சாட்டு, வேந்தர்களின் தரப்பிலிருந்த ஒவ்வொருவரையும் நடுங்கவைத்தது. அவரின் கூற்றுக்கு என்ன பதில் உரைப்பது, யார் பதில் உரைப்பது என்று யாராலும் முடிவுசெய்ய முடியவில்லை. குற்றம்சாட்டுவது எதிரிப்படை கோல்சொல்லி அல்ல; நமது படை கோல்சொல்லி. பக்கத்தில் பறம்புப்படை கோல்சொல்லி கபிலர் நின்று கொண்டிருக்கிறார். எனவே, இதை எந்தச் சொல்கொண்டு மறுப்பது?
சோழவேழன்மீதான குற்றச்சாட்டை மறுக்க, சோழனின் அமைச்சன் வளவன்காரி முன்வர ஆயத்தமானான். ஆனால், செங்கனச் சோழன் கண்களால் குறிப்பு கொடுத்த பிறகு, சற்றே ஒதுங்கி நின்றுகொண்டான். திசைவேழர் பாண்டியப் பேரரசரால் நியமிக்கப்பட்டவர். எனவே, அவர்களே இந்தப் பிரச்னையைத் தீர்க்கட்டும் என நினைத்தான்.
குலசேகரபாண்டியனோ அதிர்ச்சியுற்ற கண்களோடு அண்ணாந்து திசைவேழரையே பார்த்துக்கொண்டிருந்தார். `அவரது கூற்றை மறுத்து வாதாடுதல் எளிதல்ல. அமைச்சர் முசுகுந்தர் இருந்திருந்தால்கூட இந்தப் பிரச்னையை ஓரளவு தெளிவாகக் கையாள்வார். ஆனால், ஆதிநந்தியை நம்பி எப்படி முன்னெடுப்பது? அமைச்சனை நிறுத்திவிட்டு தளபதிகளைப் பேசவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும்’ என்று நினைத்தபடி இருந்தார்.
குற்றச்சாட்டைக் கூறிய திசைவேழர், மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. தட்டியங் காட்டை விரிந்த கண்களோடு பார்த்தபடி சொன்னார், ``விதி மீறிய இருவரும் இக்கணமே இந்தப் போர்க்களம் விட்டு நீங்க வேண்டும். இனி, வாழ்வு முழுவதும் அவர்கள் ஆயுதங்களைக் கைக்கொள்ளக் கூடாது.’’
இடி விழுவதுபோல் இருந்தன திசைவேழரின் சொற்கள். உறைந்து நின்றனர் அனைவரும். குலசேகரபாண்டியனின் கண்கள் துடித்தன. பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சன் ஆதிநந்தி உரத்தகுரலில் கத்திச்சொன்னான், ``நீங்கள் அறம் தவறிப் பேசுகிறீர் திசைவேழரே!’’
இடைவெளியின்றிச் சட்டெனச் சொன்னார், ``ஆம். நான் அறம் பிறழ்ந்தே பேசுகிறேன். அரண்மனையின் நம்பிக்கைக்கு உரியமுறையில் நடந்துகொள்வதை முற்றிலுமாக எனது ஆழ்மனம் துறந்துவிடவில்லை. அதனால்தான் எனது சொற்கள் இப்படி வந்துள்ளன. இல்லையெனில், அவர்கள் இருவருக்கும் மரணத்தையே தீர்ப்பாக வழங்கியிருப்பேன்.’’
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன் ||ஓவியங்கள்: ம.செ.,
அப்போது கூட்டத்துக்குள் யாரோ ஒருவன் வந்து, ``கபிலர் எங்கே?’’ என்று விசாரித்தான். வீரன் ஒருவன் பாறையின் அடிவாரத்தில் சாய்ந்து கிடக்கும் கபிலரைக் கைகாட்டிக் குறிப்பு சொன்னான். வந்துள்ளவன், திசைவேழரின் மாணவன். ஏற்கெனவே இருமுறை வந்தவன்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு நிலையில் கபிலரைக் காண்கிறான்.
இப்போது நிலைகுலைந்து கிடக்கும் கபிலரிடம் வந்து ``திசைவேழர், உங்களை அழைத்துவரச் சொன்னார்’’ என்றான்.
அதைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் கபிலர் இல்லை.
வந்தவன் மீண்டும் சத்தம் போட்டுச் சொன்னான்.
சற்றே கவனம்கொண்ட கபிலர், அவனை உற்றுப்பார்த்தபடி மறுத்துத் தலையை ஆட்டினார்.
அவனோ மீண்டும் வலியுறுத்தினான்.
பேசுவதற்குச் சொற்கள் மேலெழவில்லை. ஆனாலும் முயன்று சொன்னார் ``நான் வரும் நிலையில் இல்லை என்பதை திசைவேழரிடம் சொல்லிவிடு.’’

வந்த மாணவனுக்கு வேறென்ன செய்வதெனத் தெரியவில்லை. பெரும் புலவரிடம் இதற்குமேல் வலியுறுத்த முடியாது எனச் சிந்தித்தபடி எழுந்து நடக்க முற்பட்டான்.
இதைக் கவனித்தபடி இருந்த வாரிக்கையன், வந்தவனைக் கைகாட்டி நிறுத்தியபடி கபிலரிடம் வந்து, ``திசைவேழரிடம் போய் என்னவென்று கேட்டு வாருங்கள்’’ என்றார்.
``நான் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. என்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார் கபிலர்.
வாரிக்கையன் இங்குமங்குமாகப் பார்த்தார். அவரின் கண்கள் தேக்கனைத் தேடின. அவர் குடிலுக்குப் போய்விட்டதாக வீரன் ஒருவன் சொன்னான். கபிலரை நாம்தான் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டு மீண்டும் கபிலரிடம் வந்தார்.
அவரோ வாரிக்கையன் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை. ஆனாலும் வாரிக்கையன் விடவில்லை. ``நீங்கள்தான் பறம்பின் கோல்சொல்லி. எதிரிப்படையின் கோல்கொல்லி அழைக்கும்போது போகவில்லையென்றால், நமது தரப்புக் கருத்து கேட்கப்படாமலேயே போய்விடும் ஆபத்துள்ளது. எனவே, துயரத்தை விழுங்கி, கடமையை ஆற்றுங்கள்’’ என்றார்.
கபிலரோ கண்களை உருட்டி, பரிதாபமாகப் பார்த்தார். ``எனது உடலியக்கம் செத்துக்கிடக்கிறது. என்னால் எழுந்திருக்கவே முடியாது. பிறகு எப்படி..?’’ என்று சொல்லியபோதே கண்களில் நீர் கொட்டியது.
வாரிக்கையனால் கபிலரைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், வேறு வழியேதுமில்லை. அவர் போய்த்தான் ஆகவேண்டும் என எண்ணியபடி சொன்னார், ``யாராலும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனாலும் பொழுது விடிந்தால் நம் வீரர்கள் தட்டியங்காட்டில் போரிட்டுத்தானே ஆகவேண்டும்.’’
கபிலர் வாரிக்கையனைக் கவனித்தார்.
``மனம் நொறுங்கிக் கிடந்தாலும் எண்ணம் கைகூடினால் எழுந்து நிற்க முடியும் என்பதை ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறான். உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையா கபிலரே?’’
``புரிகிறது. ஆனால், நான் அதற்கான ஆள் இல்லையே. என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே காற்றில் கேட்ட கதறல் குரலோடு சேர்ந்து வாய்விட்டுக் கதறினார் கபிலர். கைகள் இரண்டையும் கூப்பி, கண்ணீர் பெருக வேண்டினார்.
கபிலரின் நிலை புரிகிறது. ஆனால், அப்படியே விட்டுவிட முடியாது என முடிவுக்கு வந்த வாரிக்கையன் சொன்னார், ``முடியனை நினைத்துப்பார்த்தீர்களா? சூளூர் வீரர்கள் எல்லோரின் உடலும் எடுக்கப்படும் வரை அவன் மூஞ்சல் விட்டு அகலாமல் அங்கேயே இருக்கிறான். பாரியை நினைத்துப்பார்த்தீர்களா? தேக்கனே காலைப் பிடித்து அழுத பிறகும் கலங்காமல் நிற்கிறான். அவர்களெல்லாம் இரவாதனைத் தங்களின் தோளில் போட்டு வளர்த்தவர்கள். வீரனின் மரணத்துக்குக் கைம்மாறு உண்டு. அதைச் செய்வதுதான் அவனுக்கு நாம் செலுத்தும் மரியாதை. இப்போது நீங்கள் பாடல் புனையும் புலவன் மட்டுமல்ல, பறம்பின் கோல்சொல்லி. எழுந்து நடங்கள். இரவாதனின் குருதி, மூக்கில் ஏறி உச்சந்தலையைச் சூடாக்கிக்கொண்டிருக்கிறது. எப்படி உங்களால் உட்கார்ந்துகொண்டு அழ முடிகிறது?’’ என்று குரல் உயர்த்தியவர், வந்திருந்த மாணவனைப் பார்த்து, ``அவரை அழைத்துக்கொண்டு போ’’ என்று ஆணையிட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டார்.
எங்கும் இருக்கும் வீரர்கள் வந்து மொய்த்துக்கொண்டிருந்தனர். குகை அடிவாரச் சரிவில் முண்டி உள்ளே போவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் தடுமாறி உள்ளே நுழைந்த வாரிக்கையன் நீண்டநேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தார் பாறையடிவாரத்தில் கபிலர் இல்லை.
நாகக்கரட்டிலிருந்து தட்டியங்காட்டை நோக்கி இறங்கும்போது அடர் இருள் அப்பிக்கிடந்தது. வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி முன் நடந்தனர். வழக்கம்போல் போர்க்களத்தின் நடுவில் இருக்கும் பரணில்தான் திசைவேழர் நிற்பார். அங்குதான் இருமுறையும் அழைத்துவரச் சொல்லிப் பேசியுள்ளார். இப்போதும் அங்கிருந்துதான் அழைத்துவரச் சொல்லியுள்ளார் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர். ஆனால் மாணவனோ, தட்டியங்காட்டின் நடுப்புறம் செல்லாமல் இடதுபுறம் சென்றான்.
``ஏன் இந்தப் பக்கம் செல்கிறாய்?’’ எனக் கேட்டார் கபிலர்.
அதற்கு அந்த மாணவன், ``இடதுபுறம் கடைசியாக இருக்கும் பரண்மீதுதான் திழைவேழர் நிற்கிறார். அங்குதான் அழைத்துவரச் சொன்னார்’’ என்றான்.
அதற்குமேல் கேட்கும் நிலையில் அவர் இல்லை. அவன் பின்னே நடந்து சென்றார்.
பரணின் அடிவாரத்துக்குக் கபிலர் வந்தபோது, மூவேந்தர்களும் வேந்தர்படைத் தளபதிகளும் நின்றிருந்தனர். திசைவேழர் பரண்மீது நின்றிருந்தார். ஏன் அனைவரையும் வரச் சொன்னார் என்பது யாருக்கும் தெரியவில்லை. வேந்தர்கள் மீண்டும் மீண்டும் கேட்டும் தளபதிகளிடம் விடை இல்லை. குலசேகரபாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர் குடும்பத்தினர் ஐவரும் வந்து நின்றிருந்தனர். மையூர்கிழார், கருங்கைவாணன் உள்ளிட்ட தளபதிகள் அணிவகுத்திருந்தனர். பறம்பின் தரப்பு கோல்சொல்லி வந்த பிறகே பேச முடியும் என்று திசைவேழர் சொல்லிவிட்டதால், யாரும் எதுவும் பேசாமல் அமைதிகாத்திருந்தனர்.
கபிலர் வந்ததும் அவரை பரண் மீது ஏறி வரச் சொன்னார். கபிலருக்கு, சற்றே ஐயம் உருவானது. பறம்பு வீரர்கள் ஓங்கலத்தைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியபோது விசாரணைக்கு அழைத்திருந்தார். திசைவேழர், அப்போது பரண்விட்டு கீழேதான் அமர்ந்திருந்தார். மறுநாள் போர்க்களத்தின் தன்மையைப் பற்றியும் தனக்கு உண்டான மன அழுத்தத்தைப் பற்றியும் விவாதிக்க வரச் சொன்னார். அப்போதும் கீழேதான் இருந்தார். அந்த இரு நிகழ்வுகளின்போதும் வேந்தர்கள் யாரும் இல்லை. ஆனால், இன்று வேந்தர்கள் அனைவரும் வந்து நிற்கின்றனர். திசைவேழரோ பரண் மேலிருந்தபடி தன்னையும் ஏன் மேலேறி வரச் சொல்கிறார் என எண்ணியபடியே பரண்மீது ஏறினார் கபிலர். முன்னும் பின்னுமாக இரு மாணவர்கள் அவர் ஏறிச் செல்ல உதவிசெய்தனர்.
பரணின் மேல்தளத்தில் நான்கு மூலைகளிலும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் சிறிய இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார் திசைவேழர். மேலேறிச் சென்ற கபிலர், திசைவேழரை வணங்க முயன்றபோது அவரின் முகத்தைப் பார்த்ததும் சற்றே அதிர்ச்சிக்குள்ளானார்.

முகம், கடுத்து உறைந்துபோய் இருந்தது. கண்கள் ஆற்றாமையால் கனன்றுகொண்டிருந்தன. வந்து நிற்கும் கபிலரை ஏறிட்டுப்பார்த்தார் திசைவேழர். துயரத்தின் பெருவலி கபிலரின் முகத்திலும் நிரம்பியிருந்தது.
கபிலரின் வரவுக்காகவே காத்திருந்த திசைவேழர் மெள்ள எழுந்து பரணின் முன்பகுதிக்கு வந்தார். கீழே எண்ணிலடங்காத பெரும்பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, தேர்களின் மீது பேரரசர்கள் அமர்ந்திருந்தனர்.
திசைவேழர் பேச முன்வருவது அறிந்து மாணவன் ஒருவன் முரசின் ஓசையை மெள்ள எழுப்பினான். கீழே இருந்தவர்கள் மேலே பார்த்தபடி கவனம்கொண்டனர். முன்வந்து தடுப்புக்கட்டையைப் பிடித்தபடி திசைவேழர் கூறினார், ``இன்றைய போரில் நமது படை விதிகளை மீறிவிட்டது.’’
எல்லோரும் சற்று அதிர்ச்சியானார்கள். `விதியை மீறியவர் யார்?’ என்று ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். மையூர்கிழார் கருங்கைவாணனிடம் பார்வையாலே கேள்வியை எழுப்பினார்.
கருங்கைவாணனோ, ``அப்படி யாரும் நமது தரப்பில் விதிகளை மீறவில்லை’’ என்றான்.
தலைமைத்தளபதி என்ற முறையில் மையூர்கிழார்தான் இப்போது பேசவேண்டும். அவரோ கருங்கைவாணனின் மீது சற்றே ஐயம்கொண்டிருந்தார். அவனிடம் நன்றாக விளக்கம் கேட்டறிந்த பிறகுதான் பேசத் தொடங்கினார், ``நிலைமான் கோல்சொல்லியை வணங்குகிறேன். வேந்தர்படையில் யாரும் விதி மீறவில்லையே.’’
``போர்விதி மீறப்பட்டதை நானே கண்டேன்.’’
``அப்படியென்றால், யார் விதி மீறினார் என்பதைக் கூறுங்கள் திசைவேழரே’’ என்று பணிந்து கேட்டார் மையூர்கிழார்.
எல்லோரும் பரண்மீது உற்றுப்பார்த்தபடி இருந்தனர். திசைவேழர் சொன்னார், ``பொதியவெற்பனும் சோழவேழனும்.’’
அதிர்ந்து நின்றனர் அனைவரும்.
திசைவேழரின் குற்றச்சாட்டு, வேந்தர்களின் தரப்பிலிருந்த ஒவ்வொருவரையும் நடுங்கவைத்தது. அவரின் கூற்றுக்கு என்ன பதில் உரைப்பது, யார் பதில் உரைப்பது என்று யாராலும் முடிவுசெய்ய முடியவில்லை. குற்றம்சாட்டுவது எதிரிப்படை கோல்சொல்லி அல்ல; நமது படை கோல்சொல்லி. பக்கத்தில் பறம்புப்படை கோல்சொல்லி கபிலர் நின்று கொண்டிருக்கிறார். எனவே, இதை எந்தச் சொல்கொண்டு மறுப்பது?
சோழவேழன்மீதான குற்றச்சாட்டை மறுக்க, சோழனின் அமைச்சன் வளவன்காரி முன்வர ஆயத்தமானான். ஆனால், செங்கனச் சோழன் கண்களால் குறிப்பு கொடுத்த பிறகு, சற்றே ஒதுங்கி நின்றுகொண்டான். திசைவேழர் பாண்டியப் பேரரசரால் நியமிக்கப்பட்டவர். எனவே, அவர்களே இந்தப் பிரச்னையைத் தீர்க்கட்டும் என நினைத்தான்.
குலசேகரபாண்டியனோ அதிர்ச்சியுற்ற கண்களோடு அண்ணாந்து திசைவேழரையே பார்த்துக்கொண்டிருந்தார். `அவரது கூற்றை மறுத்து வாதாடுதல் எளிதல்ல. அமைச்சர் முசுகுந்தர் இருந்திருந்தால்கூட இந்தப் பிரச்னையை ஓரளவு தெளிவாகக் கையாள்வார். ஆனால், ஆதிநந்தியை நம்பி எப்படி முன்னெடுப்பது? அமைச்சனை நிறுத்திவிட்டு தளபதிகளைப் பேசவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும்’ என்று நினைத்தபடி இருந்தார்.
குற்றச்சாட்டைக் கூறிய திசைவேழர், மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. தட்டியங் காட்டை விரிந்த கண்களோடு பார்த்தபடி சொன்னார், ``விதி மீறிய இருவரும் இக்கணமே இந்தப் போர்க்களம் விட்டு நீங்க வேண்டும். இனி, வாழ்வு முழுவதும் அவர்கள் ஆயுதங்களைக் கைக்கொள்ளக் கூடாது.’’
இடி விழுவதுபோல் இருந்தன திசைவேழரின் சொற்கள். உறைந்து நின்றனர் அனைவரும். குலசேகரபாண்டியனின் கண்கள் துடித்தன. பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சன் ஆதிநந்தி உரத்தகுரலில் கத்திச்சொன்னான், ``நீங்கள் அறம் தவறிப் பேசுகிறீர் திசைவேழரே!’’
இடைவெளியின்றிச் சட்டெனச் சொன்னார், ``ஆம். நான் அறம் பிறழ்ந்தே பேசுகிறேன். அரண்மனையின் நம்பிக்கைக்கு உரியமுறையில் நடந்துகொள்வதை முற்றிலுமாக எனது ஆழ்மனம் துறந்துவிடவில்லை. அதனால்தான் எனது சொற்கள் இப்படி வந்துள்ளன. இல்லையெனில், அவர்கள் இருவருக்கும் மரணத்தையே தீர்ப்பாக வழங்கியிருப்பேன்.’’
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன் ||ஓவியங்கள்: ம.செ.,


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 281
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 153
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
நாளை காலை 6 மணி வரை காத்திருக்க வேண்டும் நண்பரே ... காத்திருப்பும் ஒரு சுகம் தான் வேள்பாரிக்கு...
வசீகரிக்கும் ஒரு வரலாற்று தொடர்...#வேள்பாரி
வசீகரிக்கும் ஒரு வரலாற்று தொடர்...#வேள்பாரி


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
வீரயுக நாயகன் வேள்பாரி - 106
சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,
வேந்தர் தரப்பினர் நடுங்கி நின்றனர். திசைவேழரின் கூற்று யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அதை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், எதிர்கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் திணறினர்.
அமைச்சன் ஆதிநந்தி பேச முன்வந்தபோது, குலசேகரபாண்டியன் தனது கையசைவில் அதை நிறுத்தினார். அவரது கண் பார்வை மையூர்கிழாரை நோக்கிப் போனது. அவர் எந்த அவையிலும் வலிமையான உரையாடலை முன்வைக்கக்கூடியவர். இப்போது அவர் தளபதியாக இருந்தாலும் திசைவேழரை எதிர்கொள்ள அவரே பொருத்தமானவர் என்று குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது.

பேரரசரின் கண்ணசைவில் உத்தரவைப் புரிந்துகொண்டார் மையூர்கிழார். இருக்கும் இடத்திலிருந்து சற்று முன்வந்து பெருங்குரலெடுத்துக் கூறினார், ``திசைவேழரை வணங்குகிறேன். எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்?”
``போரின் விதி மீறப்பட்டதாக நிலைமான் கோல்சொல்லி கூறிவிட்டால் தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். அதுதான் விதி.”
``நான் விதியை மீறவில்லை. விளக்கம்தான் கேட்கிறேன்.”
``என்ன விளக்கம் வேண்டும் உனக்கு?”
``அவர்கள் இருவரும் விதியை மீறியதாக நீங்கள் சொல்வதற்கான விளக்கம்?”
``போர் முடிவுறும் முரசின் ஓசை கேட்கும்போது பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கூடாரத்தினுள் இருந்த நீலனை வெளியில் அழைத்துவந்துவிட்டான். ஆனால், முரசின் ஓசை கேட்டதும் தனது ஆயுதங்களைத் தாழ்த்தி அப்படியே நின்றான். மூஞ்சலை விட்டு வெளியேறாத நிலை என்பதால், நீலனை மீண்டும் கூடாரத்துக்குள் அனுப்பினான். போர் முடிவுற்ற பிறகு மூஞ்சலை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதால் அப்படிச் செய்தான்.

நீலன் கூடாரத்துக்குள் நுழைவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த இரவாதனை, பின்புறமிருந்து பொதியவெற்பனும் சோழவேழனும் சரமாரியாக அம்பெய்தித் தாக்கினர். அவர்களுடன் படையணியினரும் சேர்ந்து தாக்கினர். போர் முடிவுற்ற பிறகு ஆயுதங்களைத் தாழ்த்தி நின்றுகொண்டிருந்தவனை விதிகளை மீறிக் கொலைசெய்தனர் இருவரும்.”
சொல்லி முடிக்கும் முன் சினம்கொண்டு கத்தினான் சோழவேழன், ``நாங்கள் அதற்கு முன்பே அம்பெய்திவிட்டோம்.”
``நாங்கள் அம்பெய்திய பிறகுதான் உங்களின் முரசின் ஓசை கேட்டது” என்று உரக்கக் குரல்கொடுத்தான் பொதியவெற்பன்.
திசைவேழரின் உடல் நடுங்கியது. தனது கூற்றை மறுத்து மேலெழும் சொற்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடைவெளியின்றி மையூர்கிழாரின் குரலும் மேலெழுந்து வந்தது, ``அரசப்பெருமக்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதா திசைவேழரே?”
மேலேறிய சினத்தைக் கட்டுப்படுத்தியபடி சொன்னார், ``நிலைமான் கோல்சொல்லி ஒரு பொய்யின் மீது விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடவில்லை.”
மையூர்கிழார் சற்றே அதிர்ச்சியானார். திசைவேழரைக் கைக்கொள்வது எளிதன்று என்பது தெரியும். ஆனாலும் அவரின் குணமறிந்து உரையாடலை வேறு திசைக்குத் திருப்புவதே இப்போதிருக்கும் ஒரே வழி எனத் தோன்றியது. ``நான் பொய்யின் மீது விளக்கம் கேட்கவில்லை திசைவேழரே! அவர்களின் கூற்றுக்குப் பிறகு உங்களின் குற்றச்சாட்டின் மீதான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.”
``நான் சொல்வது குற்றச்சாட்டன்று, தீர்ப்பு.”
எந்தச் சொல்லாலும் தான் அதிர்ச்சிக்குள்ளாக வில்லை என்பதைக் காட்டிக்கொள்ள இடைவெளியின்றி மையூர்கிழார் சொன்னார், ``உண்மைதான் திசைவேழரே. நீங்கள் சொல்வது தீர்ப்புதான். நான் கேட்பது அந்தத் தீர்ப்பின் மீதான சிறிய விளக்கம் மட்டுமே.”
``இன்னும் என்ன விளக்கம் தேவை?”
``முரசின் ஓசைக்கு முன்பே அவர்கள் அம்பெய்திவிட்டதாகக் கூறுகின்றனரே?’’
``அவர்கள் இருவரும் இரவாதனின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றிருந்தனர். கடைசி நாழிகையில் நீண்டநேரம் அவர்கள் அம்பெய்யவில்லை. முரசின் ஓசை கேட்ட பிறகு, இரவாதன் ஆயுதங்களைத் தாழ்த்தி உள்நுழையும் நீலனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பின்னாலிருந்து அம்பெய்தனர். அதாவது, போரிட்டுக்கொண்டி ருக்கையில் இரவாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முரசின் ஓசை கேட்டு அவன் ஆயுதங்களைத் தாழ்த்திய பிறகு கோழைகளைப்போல, பின்னாலிருந்து தாக்கினர்.”

``என் தந்தையை `கோழை’ என்றா சொல்கிறீர்?” எனத் துடித்தெழுந்தான் செங்கனச்சோழன். பாண்டிய இளவரசனை இகழ்வதற்கு எதிராகக் கருங்கைவாணனின் குரல் அதைவிட மேலேறிவந்தது.
எதிர்த் தாக்குதலைப்போல மற்றவர்களை உரத்துக் குரல்கொடுக்க இடம் தந்துவிட்டு, அதே நேரத்தில் தான் பணிந்து கேட்பதைப் போன்ற குரலில் மையூர்கிழார் கேட்டார், ``எம் தரப்பு நிலைமான் கோல்சொல்லி நீங்கள். உங்களிடமிருந்து நான் தெளிவு பெறவே விரும்புகிறேன். எனவே, தவறாகக் கருதவேண்டாம். நீங்கள் நின்றிருக்கும் இந்தப் பரணிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது மூஞ்சல். அங்கு போர் நடந்துகொண்டிருந்தது. அம்பெய்தது முரசின் ஓசைக்கு முன்பா... பின்பா... என்பதை இங்கிருந்து கணிப்பது எளிதல்லவே!”
``இங்கிருந்து மூஞ்சல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
``இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.”
``அதோ அந்த விண்மீன் கூட்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
வானத்தில் ஒளிரும் விண்மீன்களைக் காட்டி திசைவேழர் கேட்டதும் சற்றே அதிர்ந்து நின்றார் மையூர்கிழார். சட்டென விடை சொல்லவில்லை. இதற்கு விடை சொன்னால் திசைவேழர் அடுத்து என்ன சொல்வார் என்பதை உணர முடிந்தது. தலைநிமிர்ந்து விரிந்த கண்களால் வானத்தைப் பார்த்தார் மையூர்கிழார்.
இரலிமேட்டின் குகையடிவாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட சூளூர் வீரர்களின் உடல்கள், வரிசையாக வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இன்னும் சில வீரர்களின் உடல்களே வரவேண்டியிருந்தன. அனைவரையும் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.
போர்க்காலத்தில் இறுதிச்சடங்குகளை விரைவில் முடித்தாகவேண்டும். அப்போதுதான் அந்தத் தாக்கத்திலிருந்து மற்ற வீரர்கள் வேகமாக வெளிவருவர். அதன்பிறகு அவர்கள் தூங்கியெழுந்து மறுநாள் போருக்கு ஆயத்தமாக வேண்டும். உடல்நிலையும் மனநிலையும் போர்க்களத்துக்கான முழுத் தகுதிகொண்டிருக்க வேண்டும். எனவே, மரணத்தை ஒரு வாள்வீச்சுபோல கணப்பொழுதில் கடந்தாக வேண்டும். அதுதான் போர்க்களத்தின் விதி. வீசிச் சென்ற வாள், காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை. அதேபோல்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக் கூடாது. எல்லாம் உடனடியாக அகற்றப்பட்டாக வேண்டும்.
ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை மாவீரர்களின் உடல்கள். அதனால்தான் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு வீரரும் அவர்களின் குருதியை எடுத்து மார்பெங்கும் பூசி வஞ்சினம் உரைத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைத் தனதாக்கத் துடித்தனர். அவர்களின் வீரம் தங்களின் உடலெங்கும் நிலைகொள்ள வேண்டும் என வேண்டினர். சூளூர் வீரர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, காடு அதிரக் கத்தினர். ஆவேச உணர்வு எங்கும் பீறிட்டுக்கொண்டிருந்தது. காரமலையெங்கும் குரலின் வழியே சினத்தை நிறுத்தினர்.
தனித்திருக்கும் கரும்பாறைப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது இரவாதனின் உடல். அவன் தலைக்கு மேல் பெருந்தீப்பந்தம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தச்சுடரின் செந்நிற வெளிச்சம் குருதியைப் பீச்சிக்கொண்டிருந்தது. சுடரும் குருதியின் பேரொளி தனது உடலின் மேல் விழ ஒவ்வொரு வீரனும் முண்டியடித்து உள்நுழைந்து கொண்டிருந்தான். நிலைமை இப்படியே போனால் இரவு முழுமையும் கழிந்துவிடும். தூக்கமே இன்றித்தான் நாளை பறம்பு வீரர்கள் போர்க்களத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சிந்தித்த வாரிக்கையன், தேக்கனை அழைத்துவந்து விரைவாக இறுதி நிகழ்வை முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டான்.
தேக்கனை உடனே அழைத்துவரச் சொல்லி அவனது குடில் நோக்கி வீரன் ஒருவனை அனுப்பிவைத்தான்.
பள்ளத்தாக்கில் இரவாதனைப் பாரியிடம் ஒப்படைத்த தேக்கன், தனது குடிலுக்கு வந்துசேர்ந்தான். அவனது எண்ண ஓட்டங்கள் நிலைகொள்ளாமலிருந்தன. எவ்வளவு பெரிய நெருக்கடியிலும் இடரிலும் கலங்காது முடிவெடுக்கும் ஆற்றலைப் பறம்புநாட்டுத் தேக்கன்கள் இழப்பதில்லை. ஆனால், தன்னால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லையே என்ற பதற்றம் முதன்முறையாகத் தேக்கனுக்கு ஏற்பட்டது.
போர்க்களத்தை, அதன் போக்கை, வேந்தர்படையின் தாக்குதல் உத்திகளை, பறம்புப்படையின் வலிமையை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்த்தபடியே இருந்தான். பறம்புநாட்டுத் தேக்கனாக, தான் இந்தக் கணம் எடுக்கவேண்டிய முடிவென்ன என்ற கேள்வியை எழுப்பி வெவ்வேறு விடைகளை அதற்குப் பொருத்திப் பார்த்தான். ஒவ்வொரு விடைக்கும் ஒவ்வொரு விளைவு இருந்தது. எந்த முடிவு என்ன விளைவை உருவாக்கும் என்பதை ஓரளவு தெளிவாக உணர முடிந்தது. ஆனால், போர்க்களத்தில் எல்லாவற்றையும் துல்லியமாக முன்னுணரவும் முன்திட்டமிடவும் முடியாது. எனவே, கேள்விகளை எல்லாவிதமான வாய்ப்புகளின் வழியேயும் மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்தான்.
குடிலின் படல் திறந்து உள்நுழைந்தான். வெளியில் எரிந்துகொண்டிருந்த பந்தத்திலிருந்து விளக்கை ஏற்றிக் குடிலுக்குள் கொண்டுவந்து வைத்தான். வழக்கமாக தேக்கனுக்குப் பணிவிடை செய்ய அங்கு இருக்கும் வீரர்கள் எல்லோரும் இரலிமேட்டுக்குப் போய்விட்டனர். யாரும் அங்கு இல்லை.

தனது இருக்கையில் அமர்ந்தான். `போர்க்களத்தில் போரிடத் தகுதியின்றி பறம்பு ஆசான் நிற்பது எவ்வளவு பெரிய இழப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நான் முழு ஆற்றலோடு இன்று களத்தில் நின்றிருந்தால் முடியனோ, நானோ மூஞ்சலை அடைந்திருப்போம். இரவாதனை இழந்திருக்க மாட்டோம். ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத எனது இருப்பு, பறம்பு வீரர்களுக்கான மரண வழித்தடமாக மாறி நிற்கிறது.
நான் இருக்கும் வரை, பாரி பறம்பின் எல்லையை விட்டு வெளிவந்து களமிறங்க முடியாது. பாரி களம் இறங்காதவரை இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க முடியாது. பறம்புநாட்டு மாவீரர்களையும் இணையற்ற போராளிகளையும் இனியும் நாம் போர்க்களத்தில் பலிகொடுக்கக் கூடாது. அதற்கு இருக்கும் ஒரே வழி, பாரி களம் இறங்க நான் வழிவிடுதல் மட்டுமே’ - எண்ணங்களை ஒருங்கிணைத்து முடிவுக்கு வந்தான். இதைவிடச் சிறந்த முடிவெதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. எனவே, முடிவைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கினான்.
கடந்த சில நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்த அவனது வில், குடிலின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. எழுந்து போய் அதை எடுத்து வந்தான். இருக்கையில் உட்கார்ந்தபடியே நாணை இறுக்கிக் கட்டினான். அம்பறாத்தூணியைக் கண்கள் தேடின. மேல்மூங்கிலில் அது தொங்கிக்கொண்டிருந்தது.
மீண்டும் எழுந்து போய் அதை எடுக்கவேண்டியிருந்தது. விலாவெலும்பு குத்தி உள்ளிறங்கிக்கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த அம்பை எடுக்க வழக்கம்போல் அவனது கைகள் விரைந்து சென்றன.
போரின் போக்கறிந்து, கடைசி ஐந்து நாழிகை இருக்கும்போது திசைவேழர் இடதுபுறம் இருக்கும் மூன்றாம் பரணுக்கு வந்துசேர்ந்திருந்தார். நடந்தது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அறிந்திருந்தார். அவர் சொல்லும் சான்றுகளை மையூர்கிழாரால் மறுக்க முடியவில்லை. சொற்களால் அவருடைய எண்ணங்களைத் திசைதிருப்ப முடியுமா என்று செய்துபார்த்த முயற்சிகளால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. உரையாடலை இதற்கு மேலும் நீட்டிக்க முடியாத நிலை உருவானது.
அடுத்து என்ன செய்யலாம் என மையூர்கிழார் யோசித்தபடி நின்றிருந்தபோது பாண்டியநாட்டு அமைச்சன் ஆதிநந்தி சொன்னான், ``திசைவேழரை மீண்டும் வணங்குகிறேன். நீங்கள் சொல்லியபடி அவர்கள் முரசின் ஓசை கேட்ட பிறகே அம்பெய்தனர் என வைத்துக்கொள்வோம். போரின் விதிகள் தட்டியங்காட்டுக்குத்தானே பொருந்தும். மூஞ்சல், தட்டியங்காட்டை விட்டு வெளியில்தானே இருக்கிறது.”
திசைவேழரின் சினம் உச்சத்தைத் தொட்டது. கண்களை இறுக மூடி நஞ்சை விழுங்குவதைப்போலக் கேள்வியை விழுங்கினார். ஆனாலும் தனது கடமையிலிருந்து நழுவக் கூடாது என எண்ணியபடி சொன்னார், ``பறம்பு வீரர்கள் நள்ளிரவில் வந்து மூஞ்சலைத் தாக்கியிருந்தால், அவர்கள் போர்விதிகளை மீறிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்களா? போர்விதிகள் என்பவை, போரிடும் காலம் முழுவதும் போரிடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள். அவை இடத்தோடும் பொழுதோடும் தொடர்புடையவை அல்ல. அந்த நெறிகளைக் கடைப்பிடிக்கும் மனநிலையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் வீரத்தின் மீது உங்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.”
சொல்லின் தாக்குதலால் நிலைகுலைந்து நின்றனர் வேந்தர்கள். திசைவேழர் அதே குரலில் தொடர்ந்தார், ``எனது தண்டனையை ஏற்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறேன். பொதியவெற்பனும் சோழவேழனும் இக்கணமே ஆயுதங்களைத் துறந்து போர்க்களம் விட்டு வெளியேறுங்கள்.”
அமைதி அப்படியே நீடித்தது. வேந்தர்களின் முகங்கள் இறுக்கம்கொண்டன. ``கிழவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் பொதியவெற்பன். உதியஞ்சேரல் ஏதோ சொல்லவந்தான். அப்போது திசைவேழரின் குரல் முன்னிலும் உரத்து வெளிப்பட்டது.
``போர் விதிமுறைகளை ஏற்று முரசின் ஓசை கேட்டதும் ஆயுதங்களைத் தாழ்த்திய இரவாதனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். விதிமுறைகளை மதிக்கத் தெரியாத வேந்தர்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்த நான் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்று எனக்கு தண்டனை வழங்கிக்கொள்கிறேன்.
வேந்தர் தரப்பினர் நடுங்கி நின்றனர். திசைவேழரின் கூற்று யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அதை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், எதிர்கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் திணறினர்.
அமைச்சன் ஆதிநந்தி பேச முன்வந்தபோது, குலசேகரபாண்டியன் தனது கையசைவில் அதை நிறுத்தினார். அவரது கண் பார்வை மையூர்கிழாரை நோக்கிப் போனது. அவர் எந்த அவையிலும் வலிமையான உரையாடலை முன்வைக்கக்கூடியவர். இப்போது அவர் தளபதியாக இருந்தாலும் திசைவேழரை எதிர்கொள்ள அவரே பொருத்தமானவர் என்று குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது.

பேரரசரின் கண்ணசைவில் உத்தரவைப் புரிந்துகொண்டார் மையூர்கிழார். இருக்கும் இடத்திலிருந்து சற்று முன்வந்து பெருங்குரலெடுத்துக் கூறினார், ``திசைவேழரை வணங்குகிறேன். எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்?”
``போரின் விதி மீறப்பட்டதாக நிலைமான் கோல்சொல்லி கூறிவிட்டால் தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். அதுதான் விதி.”
``நான் விதியை மீறவில்லை. விளக்கம்தான் கேட்கிறேன்.”
``என்ன விளக்கம் வேண்டும் உனக்கு?”
``அவர்கள் இருவரும் விதியை மீறியதாக நீங்கள் சொல்வதற்கான விளக்கம்?”
``போர் முடிவுறும் முரசின் ஓசை கேட்கும்போது பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கூடாரத்தினுள் இருந்த நீலனை வெளியில் அழைத்துவந்துவிட்டான். ஆனால், முரசின் ஓசை கேட்டதும் தனது ஆயுதங்களைத் தாழ்த்தி அப்படியே நின்றான். மூஞ்சலை விட்டு வெளியேறாத நிலை என்பதால், நீலனை மீண்டும் கூடாரத்துக்குள் அனுப்பினான். போர் முடிவுற்ற பிறகு மூஞ்சலை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதால் அப்படிச் செய்தான்.

நீலன் கூடாரத்துக்குள் நுழைவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த இரவாதனை, பின்புறமிருந்து பொதியவெற்பனும் சோழவேழனும் சரமாரியாக அம்பெய்தித் தாக்கினர். அவர்களுடன் படையணியினரும் சேர்ந்து தாக்கினர். போர் முடிவுற்ற பிறகு ஆயுதங்களைத் தாழ்த்தி நின்றுகொண்டிருந்தவனை விதிகளை மீறிக் கொலைசெய்தனர் இருவரும்.”
சொல்லி முடிக்கும் முன் சினம்கொண்டு கத்தினான் சோழவேழன், ``நாங்கள் அதற்கு முன்பே அம்பெய்திவிட்டோம்.”
``நாங்கள் அம்பெய்திய பிறகுதான் உங்களின் முரசின் ஓசை கேட்டது” என்று உரக்கக் குரல்கொடுத்தான் பொதியவெற்பன்.
திசைவேழரின் உடல் நடுங்கியது. தனது கூற்றை மறுத்து மேலெழும் சொற்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடைவெளியின்றி மையூர்கிழாரின் குரலும் மேலெழுந்து வந்தது, ``அரசப்பெருமக்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதா திசைவேழரே?”
மேலேறிய சினத்தைக் கட்டுப்படுத்தியபடி சொன்னார், ``நிலைமான் கோல்சொல்லி ஒரு பொய்யின் மீது விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடவில்லை.”
மையூர்கிழார் சற்றே அதிர்ச்சியானார். திசைவேழரைக் கைக்கொள்வது எளிதன்று என்பது தெரியும். ஆனாலும் அவரின் குணமறிந்து உரையாடலை வேறு திசைக்குத் திருப்புவதே இப்போதிருக்கும் ஒரே வழி எனத் தோன்றியது. ``நான் பொய்யின் மீது விளக்கம் கேட்கவில்லை திசைவேழரே! அவர்களின் கூற்றுக்குப் பிறகு உங்களின் குற்றச்சாட்டின் மீதான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.”
``நான் சொல்வது குற்றச்சாட்டன்று, தீர்ப்பு.”
எந்தச் சொல்லாலும் தான் அதிர்ச்சிக்குள்ளாக வில்லை என்பதைக் காட்டிக்கொள்ள இடைவெளியின்றி மையூர்கிழார் சொன்னார், ``உண்மைதான் திசைவேழரே. நீங்கள் சொல்வது தீர்ப்புதான். நான் கேட்பது அந்தத் தீர்ப்பின் மீதான சிறிய விளக்கம் மட்டுமே.”
``இன்னும் என்ன விளக்கம் தேவை?”
``முரசின் ஓசைக்கு முன்பே அவர்கள் அம்பெய்திவிட்டதாகக் கூறுகின்றனரே?’’
``அவர்கள் இருவரும் இரவாதனின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றிருந்தனர். கடைசி நாழிகையில் நீண்டநேரம் அவர்கள் அம்பெய்யவில்லை. முரசின் ஓசை கேட்ட பிறகு, இரவாதன் ஆயுதங்களைத் தாழ்த்தி உள்நுழையும் நீலனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பின்னாலிருந்து அம்பெய்தனர். அதாவது, போரிட்டுக்கொண்டி ருக்கையில் இரவாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முரசின் ஓசை கேட்டு அவன் ஆயுதங்களைத் தாழ்த்திய பிறகு கோழைகளைப்போல, பின்னாலிருந்து தாக்கினர்.”

``என் தந்தையை `கோழை’ என்றா சொல்கிறீர்?” எனத் துடித்தெழுந்தான் செங்கனச்சோழன். பாண்டிய இளவரசனை இகழ்வதற்கு எதிராகக் கருங்கைவாணனின் குரல் அதைவிட மேலேறிவந்தது.
எதிர்த் தாக்குதலைப்போல மற்றவர்களை உரத்துக் குரல்கொடுக்க இடம் தந்துவிட்டு, அதே நேரத்தில் தான் பணிந்து கேட்பதைப் போன்ற குரலில் மையூர்கிழார் கேட்டார், ``எம் தரப்பு நிலைமான் கோல்சொல்லி நீங்கள். உங்களிடமிருந்து நான் தெளிவு பெறவே விரும்புகிறேன். எனவே, தவறாகக் கருதவேண்டாம். நீங்கள் நின்றிருக்கும் இந்தப் பரணிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது மூஞ்சல். அங்கு போர் நடந்துகொண்டிருந்தது. அம்பெய்தது முரசின் ஓசைக்கு முன்பா... பின்பா... என்பதை இங்கிருந்து கணிப்பது எளிதல்லவே!”
``இங்கிருந்து மூஞ்சல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
``இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.”
``அதோ அந்த விண்மீன் கூட்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
வானத்தில் ஒளிரும் விண்மீன்களைக் காட்டி திசைவேழர் கேட்டதும் சற்றே அதிர்ந்து நின்றார் மையூர்கிழார். சட்டென விடை சொல்லவில்லை. இதற்கு விடை சொன்னால் திசைவேழர் அடுத்து என்ன சொல்வார் என்பதை உணர முடிந்தது. தலைநிமிர்ந்து விரிந்த கண்களால் வானத்தைப் பார்த்தார் மையூர்கிழார்.
இரலிமேட்டின் குகையடிவாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட சூளூர் வீரர்களின் உடல்கள், வரிசையாக வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இன்னும் சில வீரர்களின் உடல்களே வரவேண்டியிருந்தன. அனைவரையும் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.
போர்க்காலத்தில் இறுதிச்சடங்குகளை விரைவில் முடித்தாகவேண்டும். அப்போதுதான் அந்தத் தாக்கத்திலிருந்து மற்ற வீரர்கள் வேகமாக வெளிவருவர். அதன்பிறகு அவர்கள் தூங்கியெழுந்து மறுநாள் போருக்கு ஆயத்தமாக வேண்டும். உடல்நிலையும் மனநிலையும் போர்க்களத்துக்கான முழுத் தகுதிகொண்டிருக்க வேண்டும். எனவே, மரணத்தை ஒரு வாள்வீச்சுபோல கணப்பொழுதில் கடந்தாக வேண்டும். அதுதான் போர்க்களத்தின் விதி. வீசிச் சென்ற வாள், காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை. அதேபோல்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக் கூடாது. எல்லாம் உடனடியாக அகற்றப்பட்டாக வேண்டும்.
ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை மாவீரர்களின் உடல்கள். அதனால்தான் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு வீரரும் அவர்களின் குருதியை எடுத்து மார்பெங்கும் பூசி வஞ்சினம் உரைத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைத் தனதாக்கத் துடித்தனர். அவர்களின் வீரம் தங்களின் உடலெங்கும் நிலைகொள்ள வேண்டும் என வேண்டினர். சூளூர் வீரர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, காடு அதிரக் கத்தினர். ஆவேச உணர்வு எங்கும் பீறிட்டுக்கொண்டிருந்தது. காரமலையெங்கும் குரலின் வழியே சினத்தை நிறுத்தினர்.
தனித்திருக்கும் கரும்பாறைப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது இரவாதனின் உடல். அவன் தலைக்கு மேல் பெருந்தீப்பந்தம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தச்சுடரின் செந்நிற வெளிச்சம் குருதியைப் பீச்சிக்கொண்டிருந்தது. சுடரும் குருதியின் பேரொளி தனது உடலின் மேல் விழ ஒவ்வொரு வீரனும் முண்டியடித்து உள்நுழைந்து கொண்டிருந்தான். நிலைமை இப்படியே போனால் இரவு முழுமையும் கழிந்துவிடும். தூக்கமே இன்றித்தான் நாளை பறம்பு வீரர்கள் போர்க்களத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சிந்தித்த வாரிக்கையன், தேக்கனை அழைத்துவந்து விரைவாக இறுதி நிகழ்வை முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டான்.
தேக்கனை உடனே அழைத்துவரச் சொல்லி அவனது குடில் நோக்கி வீரன் ஒருவனை அனுப்பிவைத்தான்.
பள்ளத்தாக்கில் இரவாதனைப் பாரியிடம் ஒப்படைத்த தேக்கன், தனது குடிலுக்கு வந்துசேர்ந்தான். அவனது எண்ண ஓட்டங்கள் நிலைகொள்ளாமலிருந்தன. எவ்வளவு பெரிய நெருக்கடியிலும் இடரிலும் கலங்காது முடிவெடுக்கும் ஆற்றலைப் பறம்புநாட்டுத் தேக்கன்கள் இழப்பதில்லை. ஆனால், தன்னால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லையே என்ற பதற்றம் முதன்முறையாகத் தேக்கனுக்கு ஏற்பட்டது.
போர்க்களத்தை, அதன் போக்கை, வேந்தர்படையின் தாக்குதல் உத்திகளை, பறம்புப்படையின் வலிமையை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்த்தபடியே இருந்தான். பறம்புநாட்டுத் தேக்கனாக, தான் இந்தக் கணம் எடுக்கவேண்டிய முடிவென்ன என்ற கேள்வியை எழுப்பி வெவ்வேறு விடைகளை அதற்குப் பொருத்திப் பார்த்தான். ஒவ்வொரு விடைக்கும் ஒவ்வொரு விளைவு இருந்தது. எந்த முடிவு என்ன விளைவை உருவாக்கும் என்பதை ஓரளவு தெளிவாக உணர முடிந்தது. ஆனால், போர்க்களத்தில் எல்லாவற்றையும் துல்லியமாக முன்னுணரவும் முன்திட்டமிடவும் முடியாது. எனவே, கேள்விகளை எல்லாவிதமான வாய்ப்புகளின் வழியேயும் மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்தான்.
குடிலின் படல் திறந்து உள்நுழைந்தான். வெளியில் எரிந்துகொண்டிருந்த பந்தத்திலிருந்து விளக்கை ஏற்றிக் குடிலுக்குள் கொண்டுவந்து வைத்தான். வழக்கமாக தேக்கனுக்குப் பணிவிடை செய்ய அங்கு இருக்கும் வீரர்கள் எல்லோரும் இரலிமேட்டுக்குப் போய்விட்டனர். யாரும் அங்கு இல்லை.

தனது இருக்கையில் அமர்ந்தான். `போர்க்களத்தில் போரிடத் தகுதியின்றி பறம்பு ஆசான் நிற்பது எவ்வளவு பெரிய இழப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நான் முழு ஆற்றலோடு இன்று களத்தில் நின்றிருந்தால் முடியனோ, நானோ மூஞ்சலை அடைந்திருப்போம். இரவாதனை இழந்திருக்க மாட்டோம். ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத எனது இருப்பு, பறம்பு வீரர்களுக்கான மரண வழித்தடமாக மாறி நிற்கிறது.
நான் இருக்கும் வரை, பாரி பறம்பின் எல்லையை விட்டு வெளிவந்து களமிறங்க முடியாது. பாரி களம் இறங்காதவரை இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க முடியாது. பறம்புநாட்டு மாவீரர்களையும் இணையற்ற போராளிகளையும் இனியும் நாம் போர்க்களத்தில் பலிகொடுக்கக் கூடாது. அதற்கு இருக்கும் ஒரே வழி, பாரி களம் இறங்க நான் வழிவிடுதல் மட்டுமே’ - எண்ணங்களை ஒருங்கிணைத்து முடிவுக்கு வந்தான். இதைவிடச் சிறந்த முடிவெதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. எனவே, முடிவைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கினான்.
கடந்த சில நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்த அவனது வில், குடிலின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. எழுந்து போய் அதை எடுத்து வந்தான். இருக்கையில் உட்கார்ந்தபடியே நாணை இறுக்கிக் கட்டினான். அம்பறாத்தூணியைக் கண்கள் தேடின. மேல்மூங்கிலில் அது தொங்கிக்கொண்டிருந்தது.
மீண்டும் எழுந்து போய் அதை எடுக்கவேண்டியிருந்தது. விலாவெலும்பு குத்தி உள்ளிறங்கிக்கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த அம்பை எடுக்க வழக்கம்போல் அவனது கைகள் விரைந்து சென்றன.
போரின் போக்கறிந்து, கடைசி ஐந்து நாழிகை இருக்கும்போது திசைவேழர் இடதுபுறம் இருக்கும் மூன்றாம் பரணுக்கு வந்துசேர்ந்திருந்தார். நடந்தது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அறிந்திருந்தார். அவர் சொல்லும் சான்றுகளை மையூர்கிழாரால் மறுக்க முடியவில்லை. சொற்களால் அவருடைய எண்ணங்களைத் திசைதிருப்ப முடியுமா என்று செய்துபார்த்த முயற்சிகளால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. உரையாடலை இதற்கு மேலும் நீட்டிக்க முடியாத நிலை உருவானது.
அடுத்து என்ன செய்யலாம் என மையூர்கிழார் யோசித்தபடி நின்றிருந்தபோது பாண்டியநாட்டு அமைச்சன் ஆதிநந்தி சொன்னான், ``திசைவேழரை மீண்டும் வணங்குகிறேன். நீங்கள் சொல்லியபடி அவர்கள் முரசின் ஓசை கேட்ட பிறகே அம்பெய்தனர் என வைத்துக்கொள்வோம். போரின் விதிகள் தட்டியங்காட்டுக்குத்தானே பொருந்தும். மூஞ்சல், தட்டியங்காட்டை விட்டு வெளியில்தானே இருக்கிறது.”
திசைவேழரின் சினம் உச்சத்தைத் தொட்டது. கண்களை இறுக மூடி நஞ்சை விழுங்குவதைப்போலக் கேள்வியை விழுங்கினார். ஆனாலும் தனது கடமையிலிருந்து நழுவக் கூடாது என எண்ணியபடி சொன்னார், ``பறம்பு வீரர்கள் நள்ளிரவில் வந்து மூஞ்சலைத் தாக்கியிருந்தால், அவர்கள் போர்விதிகளை மீறிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்களா? போர்விதிகள் என்பவை, போரிடும் காலம் முழுவதும் போரிடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள். அவை இடத்தோடும் பொழுதோடும் தொடர்புடையவை அல்ல. அந்த நெறிகளைக் கடைப்பிடிக்கும் மனநிலையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் வீரத்தின் மீது உங்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.”
சொல்லின் தாக்குதலால் நிலைகுலைந்து நின்றனர் வேந்தர்கள். திசைவேழர் அதே குரலில் தொடர்ந்தார், ``எனது தண்டனையை ஏற்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறேன். பொதியவெற்பனும் சோழவேழனும் இக்கணமே ஆயுதங்களைத் துறந்து போர்க்களம் விட்டு வெளியேறுங்கள்.”
அமைதி அப்படியே நீடித்தது. வேந்தர்களின் முகங்கள் இறுக்கம்கொண்டன. ``கிழவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் பொதியவெற்பன். உதியஞ்சேரல் ஏதோ சொல்லவந்தான். அப்போது திசைவேழரின் குரல் முன்னிலும் உரத்து வெளிப்பட்டது.
``போர் விதிமுறைகளை ஏற்று முரசின் ஓசை கேட்டதும் ஆயுதங்களைத் தாழ்த்திய இரவாதனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். விதிமுறைகளை மதிக்கத் தெரியாத வேந்தர்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்த நான் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்று எனக்கு தண்டனை வழங்கிக்கொள்கிறேன்.


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
வீரயுக நாயகன் வேள் பாரி - 106 - தொடர்ச்சி

இதோ, எனது கண்களுக்கு முன்னால் ஒளிவீசும் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனதுக்குள் போரொளியாகச் சுடர்விடுவது மூஞ்சலுக்குள் நீ வெளிப்படுத்திய வீரமே. உன்னைப்போன்ற நெறி பிறழாத மாவீரர்கள் என்றென்றும் போற்றப்படுவீர்கள். நீ இரவாப்புகழுடன் வாழ்வாய்! இரவாதன் மரணமற்றவன் என்பதைக் காலம் உணர்த்தும். தட்டியங்காட்டுப் போரின் நினைவிருக்கும் வரை உனது புகழ் இருக்கும்!”
சொல்லியபடி பரணின் முன்புறமிருந்த கம்பங்களை விட்டு, பின்புறமாக வந்து தனது சிற்றிருக்கையில் அமர்ந்தார். உடலெங்கும் இருந்த நடுக்கம் வடிந்து அமைதிகொண்டது.
`என்ன செய்யப்போகிறார் திசைவேழர்?’ என்று பதற்றம்கொண்டார் கபிலர்.
திசைவேழரோ, இருக்கையில் அமர்ந்ததும் தனக்கு எதிரே நாழிகை வட்டிலில் இருந்த நாழிகைக்கோல் இரண்டையும் தன் இரு கைகளிலும் எடுத்து மேலேந்தினார்.
கால்விரல்களால் நாணை அழுத்திக்கொண்டு வலதுகையால் வில்லை இழுத்து மேலே தூக்கினான் தேக்கன். கால்விரல்கள் இரண்டும் அம்பைக் கவ்விப்பிடித்திருந்தன. அம்பின் முனை நடுவயிற்றின் விலாவெலும்புக் குழியில் இருந்தது. கால்விரல்களை அழுத்திக்கொண்டு வலதுகையால் வில்லை மேல்நோக்கி நன்றாக இழுத்து விசையைக் கூட்டினான்.
அண்ணாந்து மேலே பார்த்தார் திசைவேழர். வானில் உள்ள அனைத்து விண்மீன்களும் அவருடைய கண்களையே பார்த்துக்கொண்டி ருந்தன. கருவிழிகள் முழுச் சுற்றுச் சுற்றி வட்டமடித்தன. இரு கைகளிலும் ஏந்திய கூர்முனைகொண்ட நாழிகைக்கோல்களை, தனது குரல்வளையை நோக்கி இறுக உட்செலுத்தினார்.
கால்விரல்கள் விடுவித்த கணத்தில் விசைகொண்ட அம்பின் முனை, விலாவெலும்புக் குழிக்குள் புகுந்து பின்புறமாக எகிறியது.
இரு கைகளாலும் இழுத்துக் குத்தப்பட்ட நாழிகைக்கோல்கள் நெஞ்சுக்குழிக்குள் கீழிறங்கின. குருதி கொப்பளித்து மேல்வர, தேக்கனும் திசைவேழரும் மெள்ள சாய்ந்தனர். கண்களின் ஒளி எளிதில் மங்கிவிடுவதில்லை. நினைவுகள் கடைசியாகச் சுழன்றடித்து மேலேறின.
எவ்வியூர் நாகப்பச்சை வேலியின் மணமே தேக்கனின் நினைவெங்கும் படர்ந்தது. பகரியை வேட்டையாடி, அதன் ஈரலைத் தின்றுவந்த அந்த நாள் நினைவில் மேலெழுந்தது. கொற்றவையின் கூத்துக்களம் நினைவுக்கு வந்தது. அலவனின் கண்களில் நீல வளையம் பூத்து அடங்கியது. திரையர்களை விரட்டிக்கொண்டு இரவு பகலாக ஓடிய ஓட்டம் அறுந்து அறுந்து மேலெழுந்தது. இறுதியில் காலம்பனின் கதை கேட்டு, பாரி கதறி அழுததும், பாரியை அறிந்தவுடன் காலம்பன் கதறி அழுததும் தோன்றிய கணத்தில் கீதானியின் முகம் தோன்றி மறைந்தது.
மலைவேம்பின் ஆறாம் இலை காடெங்கும் நிரம்பியிருக்க, எங்கும் குலநாகினிகளின் குரவையொலி கேட்டபடி இருந்தது. கருவிழிகள் துடித்தபடி இருக்க, இமைகள் மெள்ள கவியத் தொடங்கின.
பொதிகைமலையின் உச்சிப்பாறையில் நின்று அடர்சிவப்பு நிறம்கொண்ட செவ்வாய்க்கோளைப் பார்த்துக்கொண்டிருந்தார் திசைவேழர். தனது நாடியை மேல்நோக்கி நிமிர்த்தி, வானின் ஒளியைக் கைநீட்டிச் சொல்லிக்கொண்டிருந்தார் அவர் தந்தை. குதிரைத்தலைபோல் இருக்கும் ஆறு புரவிகளும் பொற்கால் கட்டில்போல் இருக்கும் கணையும் மனக்கண்ணில் ஒளிவீசியபடி இருந்தன. சிறுபுலியின் கண்போல் அறுவை இருமீன்கள் அவரை உற்றுநோக்கின.
இமைக்கும் தன்மைகொண்ட விண்மீன்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது வாழ்வின் பேரானந்தம். மனம், இக்கணத்தில் விண்மீன்களை எண்ணிப்பார்க்க நினைத்தது. ஆனால், சட்டென முடத்திருக்கண்ணனின் முகம் நினைவுக்கு வந்தது. தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த நிலம் என்று அவர் சொன்ன சொல், அவரை நோக்கித் திரும்பியது. பக்கத்தில் அந்துவன் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
காடறிய அழைத்துச் செல்வதன் குறியீடான சாமப்பூவின் மணத்தை மோந்தபடி தேக்கனின் நினைவு அறுந்தது.
கார்த்திகையின் ஆறாம் ஒளியைச் சுற்றி இளநீல வட்டம் இருப்பதைப் பார்த்தபடியே கண்ணொளி மங்கி அணைந்தது திசைவேழருக்கு.
தேக்கனைப் பார்த்துவர அனுப்பப்பட்ட வீரன், குடிலுக்குள் நுழையும்போது தேக்கன் குருதிவெள்ளத்தில் கிடந்தான். உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த வீரன் தனது இரு கைகளிலும் பறம்பு ஆசானைத் தூக்கிக்கொண்டு இரலிமேடு நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவன் கூவல்குடிக்காரன். தேக்கனைத் தூக்கிக்கொண்டு புறப்படும்போதே கூவலாய்க் கதறத் தொடங்கினான். அவனது கூவல்குரல் மலையெங்கும் எதிரொலிக்கக்கூடியது. கண்ணீரைக் காரமலையெங்கும் தூவினான். பறம்பு ஆசானின் மரணம் பச்சைமலையின் ஒவ்வோர் உயிருக்கும் சொல்லப்படவேண்டியது. கூவல்குடி வீரன் அத்தனை ஒலிகளிலும் தேக்கனின் மரணத்தைக் கூவினான்.
ஒவ்வோர் ஒலிக்குறிப்பும் ஒவ்வோர் உயிரினத்தினுடையது. குரலின் தன்மையைக்கொண்டு பறவைகளைப் பத்து இனங்களாகப் பிரித்திருந்தது கூவல்குடி. பத்து இனங்களின் குரல்களுக்கு ஏற்ப தேக்கனின் துயர்மிகு மரணத்தைக் கூவினான். மணி ஒலிக்கும் குறிப்பில் சொன்னான். அது மண்ணுக்குள்ளிருக்கும் உயிரினங்களுக்கு உரியது. உணவைக் கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் என ஐவகையிலும் உண்ணும் விலங்குகள் நிலத்துக்கு அடியில் உண்டு. அனைத்து விலங்குகளின் செவிகளிலும் மணியோசை ஒலிக்குறிப்பே சென்று சேரும். மிகநீண்ட நேரம் தேக்கனின் மரணத்தை மணியோசைக் குறிப்பின் மூலம் சொன்னான். எலி வலையின் அடியாழத்தில் இருக்கக்கூடியது கருங்கற்தலையன். அதன் செவியிலும் விழுந்தது தேக்கனின் மரணம்.
பிறகு குழலொலியில் சொன்னான். மேகத்தின் ஒலியில் சொல்லத் தொடங்கியபோது எங்கும் பாறை உருள்வதுபோல் இருந்தது. பெருவிலங்குகளுக்கான ஓசை அது. தும்பிகளுக்கான ஒலியில் சொல்லியபோது துயரத்தின் பேரலை இருளெங்கும் படர்ந்தது. தூக்கி வந்தவன் கண்ணீரின் வலுத்தாங்காமல் மண்டியிட்டு அமர்ந்தான். ஆனால், எதிரில் இருந்த காரமலை, ``என் மகனை என்னிடம் தா” என்று கைநீட்டி அழைத்தது. மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினான். நாகக்கரட்டிலிருந்து பள்ளத்தாக்கில் இறங்கியபோது பேராந்தையின் குரலெடுத்துக் கூவினான். காட்டையே நடுங்கச்செய்யும் குரல் அது. கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோட, விலங்குகளுக்கும், மரம் செடி கொடிகளுக்கும், எண்ணிலடங்காத உயிரினங்களுக்கும் சொல்லிக்கொண்டே ஓடினான்.
அவனது நாக்கு பாம்பைப்போன்று சுழன்று சுழன்று வளைந்து ஒலி எழுப்பியது. உதடுகள் விதவிதமாய்க் குவிந்து விரிந்து கூர்மைகொண்டு கூவின. ஒருகட்டத்தில் அவனது குரல் கேட்டு எங்கெங்கும் இருக்கும் கூவல்குடியினர் ஒன்றுசேர்ந்து ஓசை எழுப்பத் தொடங்கினர். நாகக்கரடு, இரலிமேடு, காரமலை என இருளெங்கும் நிறைந்தது தேக்கனின் மரணம்.
மூஞ்சலில் சூளூர் வீரர்களின் உடல்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட பிறகு அங்கிருந்து முடியன் புறப்படும்போது மூன்றாம் பரணின் அடிவாரத்தில் பெருங்கூட்டம் இருப்பதையும், எண்ணற்ற பந்தங்கள் எரிந்துகொண்டி ருப்பதையும் பார்த்தான். அந்த இடம் நோக்கி அவன் போனபோது எல்லாம் முடிந்திருந்தன.
பரண் மீதிருந்து தடுமாறிக் கீழிறங்கிய கபிலரை, தொலைவில் கும்மிருட்டுக்குள் இருந்தபடியே பார்த்துக்கொண்டு நின்றான் முடியன். கபிலர் எப்போது அங்கு வந்தார், அங்கு என்ன நடந்தது என அவனுக்குப் புரியவில்லை. ஆனால், எல்லாவிதத்திலும் தளர்ந்துபோய் இருக்கும் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என எண்ணியபடி நின்றுகொண்டே இருந்தான்.
பரண்விட்டு இறங்கிய கபிலரின் அருகில் சென்ற மையூர்கிழார் கை குவித்தபடி எதையோ கூறினார். ஆனால், குவித்த அவன் கைகளைத் தட்டிவிட்டபடி அந்த இடம்விட்டு வேகமாக அகல முயன்றார் கபிலர். இதைப் பார்த்த முடியன், தன்னுடன் இருந்த வீரர்களை உடனடியாகக் கபிலரிடம் அனுப்பினான்.
பத்துக்கும் மேற்பட்ட குதிரைவீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்துவந்து நின்றனர். பறம்பு வீரர்கள் வந்ததறிந்த கபிலர், உடனடியாக ஒரு குதிரையின் மீது ஏறினார். பரண் அடிவாரத்தில் இருந்த வேந்தர்படைக் கூட்டத்தினர் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அத்தனை குதிரைகளும் இருளுக்குள் மறைந்தன.
குருதி படிந்திருந்த திசைவேழரின் மேல்துணியைக் கைகளில் எடுத்துவந்தார் கபிலர். அது என்னவென்று யாருக்கும் தெரியாது. முடியன், கபிலர் எல்லோரும் நாகக்கரட்டை நெருங்கியபோது கூவல்குடியினரின் ஓசை மலையெங்கும் எதிரொலிப்பதைக் கேட்டனர். நள்ளிரவில் மலையெங்கும் இப்படி ஓசை எழுப்பவேண்டிய தேவை என்ன என்று கபிலருக்கு விளங்கவில்லை. உடன் இருந்த கூவல்குடி வீரன், கண்ணீரோடு ஆசானின் மரணத்தைச் சொன்னான்.
குதிரைகள், இரலிமேட்டுக்கு வந்து சேர்ந்தன. வீரர்களை விலக்கியபடி முடியனும் கபிலரும் மற்ற வீரர்களும் மேலேறி வந்தனர்.
தேக்கனின் உடலருகே வாரிக்கையன் உட்கார்ந்திருந்தார்.
முடியன் நேராக தேக்கனின் உடலருகே வந்து அவரது கால்களைத் தொட்டுத் தூக்கி, தனது நெஞ்சிலே வைத்து இறுகப் பற்றிக்கொண்டான். நெஞ்சம் முழுவதும் அடங்காத சினம் உருத்திரண்டு நின்றது. ஆசான் தேக்கனையும் மகன் இரவாதனையும் ஒருசேர இழந்தாலும் பறம்புநாட்டு முடியனாய் கலங்கிடாது எதிர்கொண்டான்.
முடியன் இதைச் செய்துகொண்டிருக்கும்போது கபிலர், இரவாதனின் அருகில் போய் நின்றார். அவன்மீது திசைவேழரின் குருதி படிந்த மேலாடையைப் போர்த்தினார். பரண் மீதிருந்து எடுத்துவரப்பட்ட மேலாடையை ஏன் இரவாதனின் மீது போர்த்துகிறார் என யாருக்கும் புரியவில்லை.
இரவாதனின் காலருகே வந்து உட்கார்ந்து அவனுடைய பாத அடிகளை எடுத்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு அந்த மாவீரனின் இறுதிக்கணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் கபிலர். திசைவேழரின் குருதி இரவாதனின் காலுக்கு அடியில் தேங்கியது.
வேந்தர்கள், அடுத்து செய்யவேண்டியது என்ன என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். மூஞ்சலில் இருந்து வீரர்களின் உடல்கள் இன்னும் அகற்றி முடிந்தபாடில்லை. எனவே, அங்கு அமர்ந்து பேசும் சூழல் இல்லை. பரணை விட்டு அகன்று போர்க்களத்தின் தனித்ததோர் இடத்தில் பந்தங்கள் ஏற்றப்பட, அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினர்.

மூஞ்சல், முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. பேரரசர் குலசேகரபாண்டியனின் கூடாரத்தையும் நீலன் இருக்கும் கூடாரத்தையும் தவிர மற்ற கூடாரங்கள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் தமது போர் நடவடிக்கைகளை எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய பேச்சு நீண்டது.
யாராலும் முழுக்கவனத்தோடு கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. ஏனெனில், அழிந்தது மூஞ்சல் மட்டுமல்ல; மூவேந்தர்களின் சிறப்புப்படைகளில் பெரும்பகுதி. இப்போதும் மூவேந்தர்களின் படையில் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் படைத்தொகுப்பில் இடம்பெறக்கூடிய வீரர்கள்தாம். நிலைப்படை வீரர்கள் எண்ணிக்கை மிகக்குறைவே. அதுமட்டுமல்ல, திசைவேழரின் மரணம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெருங்கேள்வியாக இருந்தது.
தளபதிகளின் கருத்துகள் முதலில் கேட்கப்பட்டன. அவர்களோ இன்றைய போரில் பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கொல்லப்பட்டதையும், பறம்பின் குதிரைகள் பெருமளவு கொல்லப்பட்டதையும் வியந்து ஓதினர். தமது படையில் வலிமையான எண்ணிக்கையில் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, வழக்கம்போல் முழுத்திறனோடு மறுநாளைய போரை எதிர்கொள்வோம் என்றனர்.
அமைதியாக நின்றிருந்த கருங்கைவாணனைப் பார்த்தார் குலசேகரபாண்டியன். சற்றுத் தயக்கத்துக்குப் பிறகு அவன் கூறினான், ``மூஞ்சல் அழிக்கப்பட்டதைவிட மிகவும் கவலைக்குரியது, நாம் பாதுகாத்து வைத்திருந்த நஞ்சுகளும் அவை இருந்த கூடாரமும் முழுமையாக அழிந்ததுதான். இந்தப் போரில் இணையற்ற ஆயுதத்தை இன்று நாம் இழந்துவிட்டோம். அதற்கு நிகரானது எதுவுமில்லை” என்றான்.
கருங்கைவாணன் சொல்லியபோதுதான் உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் நிலைமையைக் கவனம்கொள்ளத் தொடங்கினர். மூவேந்தர்களுக்கும் நேற்றிரவு பாரியைக் கொல்ல நடத்தப்பட்ட திட்டங்களின் முடிவு முழுமையாக வந்து சேரவில்லை. அந்தக் குழப்பத்திலேயே இன்றைய நாளின் பெரும்பகுதி களத்தில் நின்றனர். களத்தின் கடைசி ஐந்து நாழிகையில் ஏற்பட்ட கடும் தாக்குதலுக்குப் பிறகுதான் மூஞ்சலைக் காக்கப் பெருமுயற்சி செய்தனர். அந்த முயற்சியின் இறுதியில் இரவாதனைக் கொல்ல முடிந்ததே தவிர, மூஞ்சலின் அழிவைத் தடுக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக திசைவேழரின் குற்றச்சாட்டும் மரணமும் எல்லோரையும் நிலைகுலையவைத்துள்ளன. போர்க்களத்தில் எந்தக் கணத்திலும் தனது இயலாமை வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய குலசேகரபாண்டியன், நாள்தோறும் நிகழும் எண்ணற்ற மரணத்தைப்போலவே திசைவேழரின் மரணத்தையும் கையாண்டார்.
கருங்கைவாணன் தனது பேச்சைத் தொடர இருந்தான். அதற்கு அடுத்தபடியாக மையூர்கிழார் புதிய திட்டங்களைப் பற்றிக் கூற ஆயத்தமாக இருந்தார். இந்நிலையில் சேரநாட்டின் அமைச்சன் வளவன்காரி எழுந்து சொன்னான், ``பெரும் தளபதிகள் பேசும்முன் அமைச்சனாகிய நான் எனது கருத்தைக் கூற, வேந்தர்களின் அவை இடம் தருமா?”
திடீரென சேர அமைச்சன் ஏன் பேச நினைக்கிறான் என்று யாருக்கும் விளங்கவில்லை. குலசேகரபாண்டியன் சரியெனக் கையசைத்தார்.
அவன் சொன்னான், ``இப்போரில் நமக்கான பெரும்பாதுகாப்பு அரண், திசைவேழரும் அவரால் காக்கப்பட்ட போர்விதிகளும்தான். அவற்றை நாம் இழந்துவிட்டோம். நடந்தது அனைத்தையும் கபிலர், பாரியிடம் தெரிவிப்பார். இனி பறம்பின் தாக்குதல் போர்விதிகளுக்கு உட்பட்டு இருக்காது. அவர்களின் இயல்புமுறைகளின்படி தாக்குதலைத் தொடுத்தால் நம்மால் எதிர்கொள்ள முடியாது.”
சொல்லி முடிக்கும்முன் ``ஏன் முடியாது?” என மேலேறி வந்தது மையூர்கிழாரின் குரல். ``திசைவேழரின் மரணம் மிகச்சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்துவதே அறிவுடைமை.”
``என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.
சொல்ல முன்வந்தார் மையூர்கிழார்.
போர்நெறிகளைக் காக்க திசைவேழர் உயிர்துறந்தது, தேக்கன் உயிரை ஈந்து சொல்லிச்சென்ற செய்தி அனைத்தும் இரலிமேடெங்கும் நிரம்பின. பொழுது நள்ளிரவைத் தொட்டது. இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது என நினைத்த வாரிக்கையன், ``சரி, அடக்கத்துக்கான பணியைத் தொடங்குவோம்” என்றான்.
இறுதி வேலைகளைச் செய்ய, பெரியவர்கள் எழுந்தபோது, ``எதுவொன்றும் செய்ய வேண்டாம்” என்றது பாரியின் குரல்.
குரல் கேட்ட திசை நோக்கி எல்லோரும் திரும்பினர். கருந்திட்டுப் பாறையிலிருந்து எழுந்து வந்த பாரி, அடுக்கிவைக்கப்பட்டுள்ள வீரர்களின் முன் நின்றபடி சொன்னான், ``தட்டியங்காடெங்கும் குவிந்து கிடக்கும் எதிரிகளை வென்று, நீலனை மீட்டுவந்த பிறகு இறுதிச்சடங்கை நடத்துவோம். அதுவே இந்த மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
வீரயுக நாயகன் வேள்பாரி - 107
இரவின் பத்தாம் நாழிகை தொடங்கியது. மையூர்கிழார், தனது திட்டத்தை முழுமையாக விளக்கினார். ``கிழக்குப் பக்கம் காட்டாற்றைக் கடந்தால் செவ்வரிமேடு உண்டு. அங்கு புதிய மூஞ்சலை அமைக்க, தளபதிகளுக்கு உடனடியாக உத்தரவிடுங்கள். செவ்வரிமேட்டை விட்டு இன்னும் பின்னால் சில காதத் தொலைவில் எங்களது பழைய கோட்டை ஒன்று உள்ளது. அளவில் மிகச் சிறியது. அந்தக் கோட்டைக்குள் நீலனைச் சிறைவைத்துவிடுவோம்.”

மையூர்கிழார் கூறுகின்ற நிலப்பகுதிகளைத் தளபதிகளும் அறிவர். எனவே, அவர் சொல்வதை உற்றுக்கவனித்தனர். மையூர்கிழார் தொடர்ந்தார். ``உறுமன்கொடியின் தலைமையிலான படை இப்போதிருக்கும் மூஞ்சல் பகுதியில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். இவற்றிலிருந்து ஒரு காதத் தொலைவில் துடும்பனின் தலைமையிலான படை நிலைகொள்ளட்டும். அதற்கடுத்து காட்டாற்றைக் கடந்து செவ்வரிமேடு இருக்கிறது. மேட்டில் கருங்கைவாணனும் நானும் நமது படையின் வலிமைகொண்ட பகுதியில் நிற்கிறோம். பறம்புப்படை இங்கிருந்து தாக்குதலைத் தொடங்கும்போது, நமது முன்களத் தளபதிகள் சரியான நேரத்தில் பின்வாங்கி, காட்டாற்றை நோக்கி அவர்களை இழுத்துவர வேண்டும். அவர்கள் நீலனை மீட்க, நமது திசை நோக்கி வந்துதான் ஆகவேண்டும். மிகவும் பள்ளமான நிலப்பகுதியில் ஓடும் காட்டாற்றைக் கடந்து அவர்கள் மேலேறும்போது, நாம் மேட்டு நிலத்திலிருந்து அவர்களின் மீது வலிமையான தாக்குதலை நடத்தி அழித்தொழிக்கலாம்.”
பொதியவெற்பன் உற்சாகமடைந்து கூறினான், ``நாம் முன்னரே திட்டமிட்டபடி மலையை விட்டு நன்கு தள்ளிக் களம் அமைத்துக்கொண்டால், நாகக்கரட்டின் மேலிருந்து வழிகாட்ட முடியாது. அவர்கள் பெருமளவுக்குக் குதிரைகளை இழந்துவிட்டனர். இனி, அவர்களின் தொடர்புகள் முற்றிலும் அறுந்துவிடும். இன்றைய போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்துள்ள அவர்களை முழுமையாகக் கொன்றழிக்க இது நல்ல திட்டம்.”
மையூர்கிழார் சொல்லத் தொடங்கும்போதே காரமலையின் உச்சியில் ஒரு சிறு புள்ளியின் அளவுக்கு நெருப்பின் சுடர் தெரிந்தது. பந்தங்களை ஏந்தி ஓரிருவர் நடமாடுகின்றனர் என எண்ணினார். சிறிது நேரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னல் வெட்டத் தொடங்கியது. ``மழை வரும் அறிகுறியாதலால் பேசி முடித்து, செயலில் வேகமாக இறங்க வேண்டும்’’ என்றார் சோழவேழன்.
தளபதி உறுமன்கொடி கேட்டான், ``நீலனைச் சிறை வைக்கப்போகும் பழைய கோட்டைக்கான பாதுகாப்பு என்ன?”
``அந்தக் கோட்டை மிகவும் வலிமையானது. அங்கு, எமது வெங்கல்நாட்டின் தேர்ந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள். அதற்குமேல் வேறெதுவும் தேவையில்லை” என்றார்.
இதைச் சொல்லியபோது அவரின் கண்களுக்கு, காரமலையில் வேறு சில திசைகளிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பந்தங்கள் சிறு புள்ளிகளாய்க் கீழிறங்கி வருவது தெரிந்தது. `என்ன இது?’ என்று இப்போது சற்றுக் கூர்மையுடன் கவனித்தார்.
அதுவரை பேசாமல் இருந்த கருங்கைவாணன் சொன்னான், ``நீங்கள் சொல்லும் திட்டத்தில் காட்டாற்றுப் பகுதி தாக்குதலே மிக முக்கியமானது. அவர்களைக் கீழ்நிலையில் நிறுத்தி நாம் மேல்நிலையில் நின்று தாக்குதல் தொடுக்க ஏதுவான இடம். மிகப் பொருத்தமான ஆலோசனை” என்று சொன்னவன், சற்று சிந்தித்தபடி தொடர்ந்தான், ``காட்டெருமை களின் தாக்குதலின்போது நமது யானைப்படையின் பின்புறத்தில் நின்றிருந்த ஒரு பகுதி யானைகள், பாதுகாப்பாய்த் திரும்பியுள்ளன. அந்த யானைகள் அனைத்தையும் நீலனைச் சிறைவைக்கும் கோட்டையைச் சுற்றி நிறுத்தலாம்” என்றான்.
குலசேகரபாண்டியன் அதை ஏற்றுக்கொண்டார். அப்போது சோழவேழன் சொன்னார், ``படைவீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இப்போது அதிகம் இருப்பது சோழப்படையில்தான். ஏழு சேனைவரையன்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளும், சுமார் பத்தாயிரம் வீரர்களுக்குமேல் எமது பாசறையில் இரவுணவு அருந்தியுள்ளனர்.”
இதைச் சொல்லும்போது செருக்கின் ஒலி இயல்பாய் மேலெழுந்தது. இந்த எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணமில்லாமலில்லை. ஆனால், காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சோழவேழன் தொடர்ந்தார், ``நீங்கள் சொன்னபடி உறுமன்கொடியின் தலைமையில் பாண்டியப்படையின் ஒரு பகுதி மூஞ்சலில் நிற்கட்டும். துடும்பனின் தலைமையில் சேரர்படையின் ஒரு பகுதி இரண்டாம் நிலையில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். எமது முழுப்படையையும் செவ்வரிமேட்டின் மேற்பகுதியில் ஏற்றி நிறுத்துகிறேன். இதுபோக, மற்ற இரு படைகளின் பகுதிகளும் செவ்வரிமேட்டில் நிற்கட்டும்” என்றார்.

``இதுவரை விற்படை, வாட்படை, தேர்ப்படை என்று படைத் தொகுப்புகளுக்குள் மூவேந்தர்களின் வீரர்களும் இணைந்திருந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், முதன்முறையாக மூவேந்தர்களின் படைகளும் தனித்தனியாக அணிவகுத்து நிற்போம்” என வலிமையான குரலில் சொன்னார் சோழவேழன். அதற்குக் காரணம், இன்று மூஞ்சலின் மீது நடந்த தாக்குதலில் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட பேரிழப்புதான். குறிப்பாக, பொதியவெற்பனின் உத்தரவுகள் மற்ற படையணிகளுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. எனவே, அதிக எண்ணிக்கையைக்கொண்ட வீரர்களின் படையணியான தனது அணியை, தேவையில்லாமல் இழப்புக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்ற சிந்தனையோடு சோழவேழன் இதைச் சொன்னார்.
இதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இதே காரணம் ஏற்கெனவே குலசேகர பாண்டியனுக்கும் சொல்லப்பட்டுவிட்டது. மூஞ்சலுக்குள் மூன்று சிறப்புப் படைகளையும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய ஆணையிட்டதால், தாக்குதலில் ஒருங்கிணைப்பு துளியும் இல்லாமற்போனதை அவர் அறிவார். எனவே, இதை மறுத்து உரையாட அவரோ, மற்ற யாருமோ ஆயத்தமாக இல்லை.
எல்லோரும் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மழை சடசடவென இறங்கத் தொடங்கியது. இடியோசை காரமலையெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் தேர்கள் விரைந்து மூஞ்சலை நோக்கிச் சென்றன. இறந்த வீரர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் வேலை முடிந்தபாடில்லை. ஆனால், மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் தங்குவதற்கு அருகில் வேறு இடம் எதுவும் இல்லை. எனவே, பாதிப்படையாமல் இருக்கும் குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் ஐவரும் நுழைந்தனர். தளபதிகளோ பேசப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக வேலையைத் தொடங்கினர்.
இரும்புச் சட்டகத்தால் ஆன கூட்டுவண்டியில் நீலனை ஏற்றினர். வாள்படைத் தளபதி மாகனகனின் தலைமையிலான படை அவனை செவ்வரிமேட்டுக்கு அப்பால் இருக்கும் பழைய கோட்டைக்குக் கொண்டுசென்றது. தொடங்கும்போதே மழையின் வேகம் யாவரையும் மிரட்டியது. காரமலையில் மின்னலும் இடியும் விடாது இறங்கின. நீலனை வெளியேற்றிய பிறகு அவன் இருந்த கூடாரத்துக்குள் தளபதிகள் அனைவரும் வந்து நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும் உள்ளே நுழைந்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூடாரங்களின் ஆட்டமும் அதிகமாக இருந்தது. உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் கருங்கைவாணன் கேட்டான். ``நீலன் இந்தக் கூடாரத்தில்தான் இருந்தான் என்பதை இரவாதனின் படையினர் எப்படிக் கண்டறிந்தனர்?”
யாரிடமும் பதில் இல்லை. மையூர்கிழார், கூடாரத்தின் வாசல்வழியே வெளியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். தான் கேட்பது, மழையின் ஓசையால் அவரின் காதில் விழவில்லையோ என எண்ணிய கருங்கைவாணன், அவரின் தோள் தொட்டு மீண்டும் கேட்க முற்பட்டபோது மையூர்கிழார் கையை வெளியில் நீட்டி எதையோ காட்டினார்.
எதைக் காட்டுகிறார் என, தலையை நீட்டி எட்டிப்பார்த்தான் கருங்கைவாணன். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ``எதைக் காட்டுகிறீர்கள்?” எனக் கேட்டான்.
``அங்கே பாருங்கள். தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு சிலர் மலையை விட்டுக் கீழிறங்கி வந்துகொண்டிருக்கின்றனர்.”
``கொட்டும் மழையில் தீப்பந்தங்களை எப்படி ஏந்தி வர முடியும்?” எனக் கேட்டான்.
``எனக்கும் விளங்கவில்லை. ஆனால், பந்தங்கள் முன்னோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றன” என்று சொன்னவர், ``வாருங்கள், பரண்மீது ஏறி நின்று பார்ப்போம்” என்று கூறி உடனடியாக கூடாரத்தை விட்டு வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் வெளியேறினான். இருவரும் குதிரைகளில் ஏறிப் பாய்ந்து சென்றனர். மற்ற தளபதிகளுக்குத் தலைமைத் தளபதிகளைத் தொடர்வதா அல்லது கூடாரத்துக்குள்ளே இருப்பதா எனத் தெரியவில்லை. `சரி, நாமும் போவோம்’ என உறுமன்கொடியும் துடும்பனும் அவர்களைத் தொடர்ந்தனர். அமைச்சர்கள் மட்டும் கூடாரத்திலேயே இருந்தனர்.
பாண்டிய அமைச்சன் ஆதிநந்திக்கு, கருங்கைவாணன் எழுப்பியது மிக முக்கியமான கேள்வி என்றும், அதைக் கண்டறியவில்லை என்றால் நீலன் இருக்கப்போகும் செவ்வரிமேட்டின் பழைய கோட்டையையும் பறம்பினர் கண்டறிந்துவிடுவர் என்றும் தோன்றியது. ஆனால், இதைப் பற்றி உரையாடத் தளபதிகள் யாரும் இல்லை. எல்லோரும் வெளியில் போய்விட்டனர்.
தளபதிகள், பரண் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். காற்றோடு மழை பெய்வதால் பரண் ஆடியபடி இருந்தது. மேலே ஏறுவது பாதுகாப்பானதா என ஒரு கணம் சிந்தித்தார். மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய பேய்க்காற்றையே தாங்கிய பரண், இந்தக் காற்றுக்கு ஒன்றுமாகிவிடாது எனச் சிந்தித்தபடியே வேகவேகமாக மேலேறினார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணன் மேலேறினான். மற்ற இரு தளபதிகளையும் கீழேயே நிற்கச் சொன்னார் மையூர்கிழார்.
பரண்மேல் நாழிகைவட்டில் கவிழ்ந்து கிடந்தது. திசைவேழரின் குருதி முழுவதையும் மாமழை கழுவித் தீர்த்தது. தளபதிகள் மேலேறியபோது அவர்களின் கால்களில் மிதிபட குருதியின் உலர்ந்த தடம்கூட பரண்கட்டைகளில் இல்லை. மேலேறிய இருவரும் மேற்குப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபடி நின்றனர்.
கருங்கைவாணனின் கண்களுக்கு முதலில் எதுவும் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்தது. மையூர்கிழார் கை நீட்டிக் கத்திச் சொன்னார். ஆனாலும் அவனுக்குப் புலப்படவில்லை. இடதுபுறமிருந்து வாள் வீசுவதுபோல மின்னல் ஒன்று நாகக்கரட்டை வெட்டி இறங்கியது. வெளிச்சத்தில் தட்டியங்காடு முழுக்க ஒளியால் பளிச்சிட்டு மறைந்தது. அந்தக் கணத்தில்தான் கருங்கைவாணன் பார்த்தான், நாகக்கரட்டின் மேலிருந்து குதிரைப்படை ஒன்று தட்டியங்காட்டின் வலதுபுறம் நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தது.
பரண், இதுவரை இல்லாத அளவுக்கு ஆடியது. கீழே நின்றிருந்த உறுமன்கொடியும் துடும்பனும் வீரர்களை அழைத்து பரணின் கால்களை இறுகப் பற்றிக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், மேலே நின்றிருந்த இருவரும் பரண் ஆடுவதையோ, இடியோசையோடு மழை முன்னிலும் அதிகமாகப் பொழிவதையோ கவனம்கொள்ளவில்லை. அவர்களின் கவனமெல்லாம் கொட்டும் பேய்மழையில் தீப்பந்தம் எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான். `வருவது மிகச்சிறிய படைதான். அதனால் பெரிய தாக்குதலை நடத்திவிட முடியாது. ஆனால், ஏன் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்? எல்லோர் கைகளிலும் பந்தம் இருக்கிறது. எதை எரியூட்ட வருகிறார்கள்?’ எனச் சிந்தித்தபடி நின்றனர்.

நள்ளிரவு பதினைந்தாம் நாழிகை முடிவுறும் நேரம். எதிரிகளின் செயல்களை உற்றுப்பார்த்தபடி நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தனர். மனத்துக்குள் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருந்தது. சோழப்படையின் பாசறைதான் அந்தத் திசையில் முதலாவதாக இருக்கிறது. நாகக்கரட்டிலிருந்து கீழிறங்கிய வீரர்கள் நேராக அந்தப் பாசறைகளை நோக்கிப் போகின்றனர். இவ்வளவு சிறிய படையினர், பத்தாயிரம் வீரர்கள் இருக்கும் சோழர்களின் பாசறையைத் தாக்கப்போகிறார்களா? கேள்வியை எழுப்பியபடி நிலைமையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
கருங்கைவாணனோ மலைமேலிருந்து கீழிறங்கியுள்ள அந்தச் சிறிய படையைத் தாக்கி அழிக்க உத்தரவிடவேண்டும் எனத் துடித்தான். ``சற்றுப் பொறுப்போம். என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்வோம்” என்றார் மையூர்கிழார்.
அவருக்குச் சுலுந்துக்கம்பின் நினைவு வந்தது. கருங்கைவாணனிடம் சொன்னார், ``காட்டுக்குள் அரியவகையான சுலுந்துக்கம்பு இருக்கிறது. அதைக் கூராக வெட்டித் தீப்பற்றவைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். காற்றாலும் மழையாலும் அதை அணைக்க முடியாது. குச்சியைக் கீழே போட்டு மண் அள்ளி அதன் மேல் கொட்டினால் மட்டுமே அணைக்க முடியும்” என்றார்.
கீழிறங்கிய பறம்புநாட்டுக் குதிரைவீரர்கள், பாசறையை நெருங்கிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பாசறையின் இரு பக்கங்களிலும் சுற்றுவதை பந்தச்சுடர்கள் நகரும் வழிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
சோழப்படையின் பெரும்பாசறை அதுதான். அங்கு காவல்வீரர்கள் இருப்பர். ஆனாலும் மழை கொட்டும் இந்த நள்ளிரவில் விழிப்போடு இருப்பார்களா என்பது ஐயமே, ``நாம் முரசொலி எழுப்பிக் கவனப்படுத்துவோமா?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
``இந்த மழையில் முரசினோசையோ கொம்போசையோ அவ்வளவு தொலைவுக்குக் கேட்காது” என்றார் மையூர்கிழார்.
காற்றின் வேகத்தால் பரண் கடுமையாக ஆடியது. ``கவனமாக இறுகப்பிடித்து நில்லுங்கள்” என்று சொன்ன கருங்கைவாணன், இடதுபுறமாக இருக்கும் கம்பத்தை நன்றாகப் பிடித்து நின்றான். அப்போது வடகோடியில் மின்னல் வெட்டி இறங்கியது. அதை உற்றுப்பார்த்தபடி அப்படியே நின்றான். சிறிது நேரம் இருவரிடமும் பேச்சு ஏதும் இல்லை. பிறகு மையூர்கிழார் கேட்டார், ``அந்தத் தீப்பந்தங்கள் அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. கவனித்தீர்களா?”
கருங்கைவாணன் இடதுபுறம் இருக்கும் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் கேட்பது காதில் விழவில்லை. மையூர்கிழார் மீண்டும் உரத்துக் குரல்கொடுத்தபோதுதான் கருங்கைவாணன் திரும்பினான்.
``என்ன?”
``அவர்கள் ஈட்டியின் மேல்முனையில் பந்தங்களைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவற்றை வீசியெறிந்துள்ளனர். ஈட்டி குத்தி நிற்கும் இடமெல்லாம் பந்தங்கள் நின்று எரிகின்றன” என்றார்.
``வந்தவர்கள் எங்கே?”
``அவர்கள் நாகக்கரட்டுக்குத் திரும்புகின்றனர். மின்னல் ஒளியில் பார்த்தேன்.”
``நானும் பார்த்தேன், நாகக்கரட்டிலிருந்து பலர் கீழிறங்குகின்றனர்” என்றான் கருங்கைவாணன்.
``எந்தப் பக்கம்?” எனக் கேட்டார் மையூர்கிழார்.
இடதுபுறமாகக் கை நீட்டிக் காட்டினான் கருங்கைவாணன்.
இருவருக்கும் எதுவும் புரிபடவில்லை. வலதுபுறக் கடைசியில் தீப்பந்தங்களை எறிந்து நட்டுவைத்துவிட்டு ஏன் மலையேற வேண்டும்? இடதுபுறம் தட்டியங்காட்டுப் பக்கமாக மலையை விட்டு ஏன் கீழிறங்கி வரவேண்டும் என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தனர். மழையின் சீற்றம் மேலும் கூடியது.
மையூர்கிழார் ஏதேதோ எண்ணியபடி இருந்தார். முதன்முதலில் காரமலையின் உச்சியில் தீப்பந்தம் எந்த இடத்தில் தெரியத் தொடங்கியது என நினைவுகூர்ந்தார். மனதில் ஐயம் ஒன்று மேலெழும்பியது. அதன் பிறகு அவரிடமிருந்து பேச்சேதும் வெளிவரவில்லை.
`ஏன் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்?’ எனக் கருங்கைவாணனுக்குப் புரியவில்லை.
உள்ளுக்குள் பரவிய நடுக்கம் அவரை எளிதில் பேச அனுமதிக்கவில்லை. சற்று நேரம் கழித்துச் சொன்னார், ``அவர்கள் அணலி இருக்கும் குகைகளில் இருந்து நெருப்பை ஏந்தி வந்திருப்பார்களோ என அஞ்சுகிறேன்.”
``அணலி என்றால்?” கேட்டான் கருங்கைவாணன்.

மையூர்கிழார் கூறுகின்ற நிலப்பகுதிகளைத் தளபதிகளும் அறிவர். எனவே, அவர் சொல்வதை உற்றுக்கவனித்தனர். மையூர்கிழார் தொடர்ந்தார். ``உறுமன்கொடியின் தலைமையிலான படை இப்போதிருக்கும் மூஞ்சல் பகுதியில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். இவற்றிலிருந்து ஒரு காதத் தொலைவில் துடும்பனின் தலைமையிலான படை நிலைகொள்ளட்டும். அதற்கடுத்து காட்டாற்றைக் கடந்து செவ்வரிமேடு இருக்கிறது. மேட்டில் கருங்கைவாணனும் நானும் நமது படையின் வலிமைகொண்ட பகுதியில் நிற்கிறோம். பறம்புப்படை இங்கிருந்து தாக்குதலைத் தொடங்கும்போது, நமது முன்களத் தளபதிகள் சரியான நேரத்தில் பின்வாங்கி, காட்டாற்றை நோக்கி அவர்களை இழுத்துவர வேண்டும். அவர்கள் நீலனை மீட்க, நமது திசை நோக்கி வந்துதான் ஆகவேண்டும். மிகவும் பள்ளமான நிலப்பகுதியில் ஓடும் காட்டாற்றைக் கடந்து அவர்கள் மேலேறும்போது, நாம் மேட்டு நிலத்திலிருந்து அவர்களின் மீது வலிமையான தாக்குதலை நடத்தி அழித்தொழிக்கலாம்.”
பொதியவெற்பன் உற்சாகமடைந்து கூறினான், ``நாம் முன்னரே திட்டமிட்டபடி மலையை விட்டு நன்கு தள்ளிக் களம் அமைத்துக்கொண்டால், நாகக்கரட்டின் மேலிருந்து வழிகாட்ட முடியாது. அவர்கள் பெருமளவுக்குக் குதிரைகளை இழந்துவிட்டனர். இனி, அவர்களின் தொடர்புகள் முற்றிலும் அறுந்துவிடும். இன்றைய போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்துள்ள அவர்களை முழுமையாகக் கொன்றழிக்க இது நல்ல திட்டம்.”
மையூர்கிழார் சொல்லத் தொடங்கும்போதே காரமலையின் உச்சியில் ஒரு சிறு புள்ளியின் அளவுக்கு நெருப்பின் சுடர் தெரிந்தது. பந்தங்களை ஏந்தி ஓரிருவர் நடமாடுகின்றனர் என எண்ணினார். சிறிது நேரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னல் வெட்டத் தொடங்கியது. ``மழை வரும் அறிகுறியாதலால் பேசி முடித்து, செயலில் வேகமாக இறங்க வேண்டும்’’ என்றார் சோழவேழன்.
தளபதி உறுமன்கொடி கேட்டான், ``நீலனைச் சிறை வைக்கப்போகும் பழைய கோட்டைக்கான பாதுகாப்பு என்ன?”
``அந்தக் கோட்டை மிகவும் வலிமையானது. அங்கு, எமது வெங்கல்நாட்டின் தேர்ந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள். அதற்குமேல் வேறெதுவும் தேவையில்லை” என்றார்.
இதைச் சொல்லியபோது அவரின் கண்களுக்கு, காரமலையில் வேறு சில திசைகளிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பந்தங்கள் சிறு புள்ளிகளாய்க் கீழிறங்கி வருவது தெரிந்தது. `என்ன இது?’ என்று இப்போது சற்றுக் கூர்மையுடன் கவனித்தார்.
அதுவரை பேசாமல் இருந்த கருங்கைவாணன் சொன்னான், ``நீங்கள் சொல்லும் திட்டத்தில் காட்டாற்றுப் பகுதி தாக்குதலே மிக முக்கியமானது. அவர்களைக் கீழ்நிலையில் நிறுத்தி நாம் மேல்நிலையில் நின்று தாக்குதல் தொடுக்க ஏதுவான இடம். மிகப் பொருத்தமான ஆலோசனை” என்று சொன்னவன், சற்று சிந்தித்தபடி தொடர்ந்தான், ``காட்டெருமை களின் தாக்குதலின்போது நமது யானைப்படையின் பின்புறத்தில் நின்றிருந்த ஒரு பகுதி யானைகள், பாதுகாப்பாய்த் திரும்பியுள்ளன. அந்த யானைகள் அனைத்தையும் நீலனைச் சிறைவைக்கும் கோட்டையைச் சுற்றி நிறுத்தலாம்” என்றான்.
குலசேகரபாண்டியன் அதை ஏற்றுக்கொண்டார். அப்போது சோழவேழன் சொன்னார், ``படைவீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இப்போது அதிகம் இருப்பது சோழப்படையில்தான். ஏழு சேனைவரையன்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளும், சுமார் பத்தாயிரம் வீரர்களுக்குமேல் எமது பாசறையில் இரவுணவு அருந்தியுள்ளனர்.”
இதைச் சொல்லும்போது செருக்கின் ஒலி இயல்பாய் மேலெழுந்தது. இந்த எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணமில்லாமலில்லை. ஆனால், காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சோழவேழன் தொடர்ந்தார், ``நீங்கள் சொன்னபடி உறுமன்கொடியின் தலைமையில் பாண்டியப்படையின் ஒரு பகுதி மூஞ்சலில் நிற்கட்டும். துடும்பனின் தலைமையில் சேரர்படையின் ஒரு பகுதி இரண்டாம் நிலையில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். எமது முழுப்படையையும் செவ்வரிமேட்டின் மேற்பகுதியில் ஏற்றி நிறுத்துகிறேன். இதுபோக, மற்ற இரு படைகளின் பகுதிகளும் செவ்வரிமேட்டில் நிற்கட்டும்” என்றார்.

``இதுவரை விற்படை, வாட்படை, தேர்ப்படை என்று படைத் தொகுப்புகளுக்குள் மூவேந்தர்களின் வீரர்களும் இணைந்திருந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், முதன்முறையாக மூவேந்தர்களின் படைகளும் தனித்தனியாக அணிவகுத்து நிற்போம்” என வலிமையான குரலில் சொன்னார் சோழவேழன். அதற்குக் காரணம், இன்று மூஞ்சலின் மீது நடந்த தாக்குதலில் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட பேரிழப்புதான். குறிப்பாக, பொதியவெற்பனின் உத்தரவுகள் மற்ற படையணிகளுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. எனவே, அதிக எண்ணிக்கையைக்கொண்ட வீரர்களின் படையணியான தனது அணியை, தேவையில்லாமல் இழப்புக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்ற சிந்தனையோடு சோழவேழன் இதைச் சொன்னார்.
இதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இதே காரணம் ஏற்கெனவே குலசேகர பாண்டியனுக்கும் சொல்லப்பட்டுவிட்டது. மூஞ்சலுக்குள் மூன்று சிறப்புப் படைகளையும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய ஆணையிட்டதால், தாக்குதலில் ஒருங்கிணைப்பு துளியும் இல்லாமற்போனதை அவர் அறிவார். எனவே, இதை மறுத்து உரையாட அவரோ, மற்ற யாருமோ ஆயத்தமாக இல்லை.
எல்லோரும் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மழை சடசடவென இறங்கத் தொடங்கியது. இடியோசை காரமலையெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் தேர்கள் விரைந்து மூஞ்சலை நோக்கிச் சென்றன. இறந்த வீரர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் வேலை முடிந்தபாடில்லை. ஆனால், மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் தங்குவதற்கு அருகில் வேறு இடம் எதுவும் இல்லை. எனவே, பாதிப்படையாமல் இருக்கும் குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் ஐவரும் நுழைந்தனர். தளபதிகளோ பேசப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக வேலையைத் தொடங்கினர்.
இரும்புச் சட்டகத்தால் ஆன கூட்டுவண்டியில் நீலனை ஏற்றினர். வாள்படைத் தளபதி மாகனகனின் தலைமையிலான படை அவனை செவ்வரிமேட்டுக்கு அப்பால் இருக்கும் பழைய கோட்டைக்குக் கொண்டுசென்றது. தொடங்கும்போதே மழையின் வேகம் யாவரையும் மிரட்டியது. காரமலையில் மின்னலும் இடியும் விடாது இறங்கின. நீலனை வெளியேற்றிய பிறகு அவன் இருந்த கூடாரத்துக்குள் தளபதிகள் அனைவரும் வந்து நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும் உள்ளே நுழைந்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூடாரங்களின் ஆட்டமும் அதிகமாக இருந்தது. உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் கருங்கைவாணன் கேட்டான். ``நீலன் இந்தக் கூடாரத்தில்தான் இருந்தான் என்பதை இரவாதனின் படையினர் எப்படிக் கண்டறிந்தனர்?”
யாரிடமும் பதில் இல்லை. மையூர்கிழார், கூடாரத்தின் வாசல்வழியே வெளியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். தான் கேட்பது, மழையின் ஓசையால் அவரின் காதில் விழவில்லையோ என எண்ணிய கருங்கைவாணன், அவரின் தோள் தொட்டு மீண்டும் கேட்க முற்பட்டபோது மையூர்கிழார் கையை வெளியில் நீட்டி எதையோ காட்டினார்.
எதைக் காட்டுகிறார் என, தலையை நீட்டி எட்டிப்பார்த்தான் கருங்கைவாணன். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ``எதைக் காட்டுகிறீர்கள்?” எனக் கேட்டான்.
``அங்கே பாருங்கள். தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு சிலர் மலையை விட்டுக் கீழிறங்கி வந்துகொண்டிருக்கின்றனர்.”
``கொட்டும் மழையில் தீப்பந்தங்களை எப்படி ஏந்தி வர முடியும்?” எனக் கேட்டான்.
``எனக்கும் விளங்கவில்லை. ஆனால், பந்தங்கள் முன்னோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றன” என்று சொன்னவர், ``வாருங்கள், பரண்மீது ஏறி நின்று பார்ப்போம்” என்று கூறி உடனடியாக கூடாரத்தை விட்டு வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் வெளியேறினான். இருவரும் குதிரைகளில் ஏறிப் பாய்ந்து சென்றனர். மற்ற தளபதிகளுக்குத் தலைமைத் தளபதிகளைத் தொடர்வதா அல்லது கூடாரத்துக்குள்ளே இருப்பதா எனத் தெரியவில்லை. `சரி, நாமும் போவோம்’ என உறுமன்கொடியும் துடும்பனும் அவர்களைத் தொடர்ந்தனர். அமைச்சர்கள் மட்டும் கூடாரத்திலேயே இருந்தனர்.
பாண்டிய அமைச்சன் ஆதிநந்திக்கு, கருங்கைவாணன் எழுப்பியது மிக முக்கியமான கேள்வி என்றும், அதைக் கண்டறியவில்லை என்றால் நீலன் இருக்கப்போகும் செவ்வரிமேட்டின் பழைய கோட்டையையும் பறம்பினர் கண்டறிந்துவிடுவர் என்றும் தோன்றியது. ஆனால், இதைப் பற்றி உரையாடத் தளபதிகள் யாரும் இல்லை. எல்லோரும் வெளியில் போய்விட்டனர்.
தளபதிகள், பரண் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். காற்றோடு மழை பெய்வதால் பரண் ஆடியபடி இருந்தது. மேலே ஏறுவது பாதுகாப்பானதா என ஒரு கணம் சிந்தித்தார். மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய பேய்க்காற்றையே தாங்கிய பரண், இந்தக் காற்றுக்கு ஒன்றுமாகிவிடாது எனச் சிந்தித்தபடியே வேகவேகமாக மேலேறினார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணன் மேலேறினான். மற்ற இரு தளபதிகளையும் கீழேயே நிற்கச் சொன்னார் மையூர்கிழார்.
பரண்மேல் நாழிகைவட்டில் கவிழ்ந்து கிடந்தது. திசைவேழரின் குருதி முழுவதையும் மாமழை கழுவித் தீர்த்தது. தளபதிகள் மேலேறியபோது அவர்களின் கால்களில் மிதிபட குருதியின் உலர்ந்த தடம்கூட பரண்கட்டைகளில் இல்லை. மேலேறிய இருவரும் மேற்குப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபடி நின்றனர்.
கருங்கைவாணனின் கண்களுக்கு முதலில் எதுவும் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்தது. மையூர்கிழார் கை நீட்டிக் கத்திச் சொன்னார். ஆனாலும் அவனுக்குப் புலப்படவில்லை. இடதுபுறமிருந்து வாள் வீசுவதுபோல மின்னல் ஒன்று நாகக்கரட்டை வெட்டி இறங்கியது. வெளிச்சத்தில் தட்டியங்காடு முழுக்க ஒளியால் பளிச்சிட்டு மறைந்தது. அந்தக் கணத்தில்தான் கருங்கைவாணன் பார்த்தான், நாகக்கரட்டின் மேலிருந்து குதிரைப்படை ஒன்று தட்டியங்காட்டின் வலதுபுறம் நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தது.
பரண், இதுவரை இல்லாத அளவுக்கு ஆடியது. கீழே நின்றிருந்த உறுமன்கொடியும் துடும்பனும் வீரர்களை அழைத்து பரணின் கால்களை இறுகப் பற்றிக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், மேலே நின்றிருந்த இருவரும் பரண் ஆடுவதையோ, இடியோசையோடு மழை முன்னிலும் அதிகமாகப் பொழிவதையோ கவனம்கொள்ளவில்லை. அவர்களின் கவனமெல்லாம் கொட்டும் பேய்மழையில் தீப்பந்தம் எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான். `வருவது மிகச்சிறிய படைதான். அதனால் பெரிய தாக்குதலை நடத்திவிட முடியாது. ஆனால், ஏன் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்? எல்லோர் கைகளிலும் பந்தம் இருக்கிறது. எதை எரியூட்ட வருகிறார்கள்?’ எனச் சிந்தித்தபடி நின்றனர்.

நள்ளிரவு பதினைந்தாம் நாழிகை முடிவுறும் நேரம். எதிரிகளின் செயல்களை உற்றுப்பார்த்தபடி நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தனர். மனத்துக்குள் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருந்தது. சோழப்படையின் பாசறைதான் அந்தத் திசையில் முதலாவதாக இருக்கிறது. நாகக்கரட்டிலிருந்து கீழிறங்கிய வீரர்கள் நேராக அந்தப் பாசறைகளை நோக்கிப் போகின்றனர். இவ்வளவு சிறிய படையினர், பத்தாயிரம் வீரர்கள் இருக்கும் சோழர்களின் பாசறையைத் தாக்கப்போகிறார்களா? கேள்வியை எழுப்பியபடி நிலைமையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
கருங்கைவாணனோ மலைமேலிருந்து கீழிறங்கியுள்ள அந்தச் சிறிய படையைத் தாக்கி அழிக்க உத்தரவிடவேண்டும் எனத் துடித்தான். ``சற்றுப் பொறுப்போம். என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்வோம்” என்றார் மையூர்கிழார்.
அவருக்குச் சுலுந்துக்கம்பின் நினைவு வந்தது. கருங்கைவாணனிடம் சொன்னார், ``காட்டுக்குள் அரியவகையான சுலுந்துக்கம்பு இருக்கிறது. அதைக் கூராக வெட்டித் தீப்பற்றவைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். காற்றாலும் மழையாலும் அதை அணைக்க முடியாது. குச்சியைக் கீழே போட்டு மண் அள்ளி அதன் மேல் கொட்டினால் மட்டுமே அணைக்க முடியும்” என்றார்.
கீழிறங்கிய பறம்புநாட்டுக் குதிரைவீரர்கள், பாசறையை நெருங்கிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பாசறையின் இரு பக்கங்களிலும் சுற்றுவதை பந்தச்சுடர்கள் நகரும் வழிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
சோழப்படையின் பெரும்பாசறை அதுதான். அங்கு காவல்வீரர்கள் இருப்பர். ஆனாலும் மழை கொட்டும் இந்த நள்ளிரவில் விழிப்போடு இருப்பார்களா என்பது ஐயமே, ``நாம் முரசொலி எழுப்பிக் கவனப்படுத்துவோமா?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
``இந்த மழையில் முரசினோசையோ கொம்போசையோ அவ்வளவு தொலைவுக்குக் கேட்காது” என்றார் மையூர்கிழார்.
காற்றின் வேகத்தால் பரண் கடுமையாக ஆடியது. ``கவனமாக இறுகப்பிடித்து நில்லுங்கள்” என்று சொன்ன கருங்கைவாணன், இடதுபுறமாக இருக்கும் கம்பத்தை நன்றாகப் பிடித்து நின்றான். அப்போது வடகோடியில் மின்னல் வெட்டி இறங்கியது. அதை உற்றுப்பார்த்தபடி அப்படியே நின்றான். சிறிது நேரம் இருவரிடமும் பேச்சு ஏதும் இல்லை. பிறகு மையூர்கிழார் கேட்டார், ``அந்தத் தீப்பந்தங்கள் அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. கவனித்தீர்களா?”
கருங்கைவாணன் இடதுபுறம் இருக்கும் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் கேட்பது காதில் விழவில்லை. மையூர்கிழார் மீண்டும் உரத்துக் குரல்கொடுத்தபோதுதான் கருங்கைவாணன் திரும்பினான்.
``என்ன?”
``அவர்கள் ஈட்டியின் மேல்முனையில் பந்தங்களைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவற்றை வீசியெறிந்துள்ளனர். ஈட்டி குத்தி நிற்கும் இடமெல்லாம் பந்தங்கள் நின்று எரிகின்றன” என்றார்.
``வந்தவர்கள் எங்கே?”
``அவர்கள் நாகக்கரட்டுக்குத் திரும்புகின்றனர். மின்னல் ஒளியில் பார்த்தேன்.”
``நானும் பார்த்தேன், நாகக்கரட்டிலிருந்து பலர் கீழிறங்குகின்றனர்” என்றான் கருங்கைவாணன்.
``எந்தப் பக்கம்?” எனக் கேட்டார் மையூர்கிழார்.
இடதுபுறமாகக் கை நீட்டிக் காட்டினான் கருங்கைவாணன்.
இருவருக்கும் எதுவும் புரிபடவில்லை. வலதுபுறக் கடைசியில் தீப்பந்தங்களை எறிந்து நட்டுவைத்துவிட்டு ஏன் மலையேற வேண்டும்? இடதுபுறம் தட்டியங்காட்டுப் பக்கமாக மலையை விட்டு ஏன் கீழிறங்கி வரவேண்டும் என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தனர். மழையின் சீற்றம் மேலும் கூடியது.
மையூர்கிழார் ஏதேதோ எண்ணியபடி இருந்தார். முதன்முதலில் காரமலையின் உச்சியில் தீப்பந்தம் எந்த இடத்தில் தெரியத் தொடங்கியது என நினைவுகூர்ந்தார். மனதில் ஐயம் ஒன்று மேலெழும்பியது. அதன் பிறகு அவரிடமிருந்து பேச்சேதும் வெளிவரவில்லை.
`ஏன் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்?’ எனக் கருங்கைவாணனுக்குப் புரியவில்லை.
உள்ளுக்குள் பரவிய நடுக்கம் அவரை எளிதில் பேச அனுமதிக்கவில்லை. சற்று நேரம் கழித்துச் சொன்னார், ``அவர்கள் அணலி இருக்கும் குகைகளில் இருந்து நெருப்பை ஏந்தி வந்திருப்பார்களோ என அஞ்சுகிறேன்.”
``அணலி என்றால்?” கேட்டான் கருங்கைவாணன்.


ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
|
|