புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
30 Posts - 88%
heezulia
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 09, 2018 1:34 pm

புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.

மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.

அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------

மாலை மலர்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 09, 2018 2:07 pm

ayyasamy ram wrote:

‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------

மாலை மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1265589


வழ வழா , குழ குழா என்று வார்த்தைகள் .  ஸ்கீம் என்பது பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாதாம் .மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்த பின்பு முடிவு செய்வார்களாம் ! அதாவது கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் வரையில் , ஸ்கீம் என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்ல மாட்டார்கள் . தேர்தல் முடிந்தவுடனே " ஸ்கீம் " என்ற வார்த்தை " காவேரி மேலாண்மை வாரியத்தைக் " குறிக்காது என்று சொல்லப் போகிறார்கள் . இதுதான் நடக்கும் . தமிழகத்தில் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய முயற்சி செய்கிறார்கள் .

ஒரே வரியில் தீர்ப்பு சொல்லியிருக்கலாம் . ஸ்கீம் என்பது " காவேரி மேலாண்மை வாரியம் " தான் . அதை இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்த உங்களுக்கு வக்கில்லை என்றால் எங்களிடம் விட்டுவிடுங்கள் . உச்சநீதிமன்றமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் " என்று சொல்லியிருக்கலாம் .

நாணல்போல வளைவதுதான் சட்டமாகுமா ? - அதை
வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 09, 2018 2:45 pm

M.Jagadeesan wrote:
நாணல்போல வளைவதுதான் சட்டமாகுமா ? - அதை
வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?

நீதிபதி பட்டம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 09, 2018 4:49 pm

சொந்த நலம் கருதி மே 13 க்கு பிறகே வாரியம் அமைக்கும் பணி
எடுத்துக்கொள்ளப்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2018 8:12 pm

வார்த்தைகள் அசிங்கமா வருது அவை மரியாதையை கருதி தட்டச்சவில்லை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 09, 2018 8:27 pm

தமிழ்நாட்டுக்குத் தண்ணி காட்டவேண்டும் என்பதற்காகவே SCHEME என்ற வார்த்தையை , தீர்ப்பில் புகுத்தியிருக்கிறார்கள் !

மெத்தப் படித்த நீதிபதிகளே !

SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .

" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "

என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .

என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !

உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 09, 2018 8:50 pm

நீதிமன்றத்த தீர்ப்பை ஆறு வாரங்களாக படித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்,வெளி நாட்டுடனான ஒப்பந்தங்களை எப்படிப் புரிந்து கைச்சாத்திடுகிறார்கள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 10, 2018 6:10 am

எல்லாமே நாடகம் ! பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்கள் .

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?

Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Tue Apr 10, 2018 7:45 am

அரசியல் வியாதிகள் சேவை செய்ய வரவில்லை.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.

இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 10, 2018 4:07 pm

எதற்கு வரைவு திட்டம் ? CMB ஐ அமல்படுத்துங்கள் என்று உத்தரவு போடவேண்டியதுதானே ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக