புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காடும் காடர்களும்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
First topic message reminder :
தோழமைக்கு வணக்கம்.
தோழமைக்கு வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு என் எழுத்தைப் பதிவிட வந்துள்ளேன். பணி மாறுதல் மற்றும் அதுசார்ந்த பல்வேறு பணிகளில் என் கட்டுரையைத் தொடர முடியவில்லை. தற்பொழுது என் எழுத்தைத் தொடரும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்ல புதிய தொடர் ஒன்றையும் எழுதும் சூழல் வாய்த்திருக்கின்றது.
நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு எளிமையாக இருந்தது. அவரிடம் அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப் பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.
ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.
திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.
இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.
அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது. குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.
தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..
நன்றி. வணக்கம்.
நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு எளிமையாக இருந்தது. அவரிடம் அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப் பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.
ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.
திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.
இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.
அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது. குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.
தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..
நன்றி. வணக்கம்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
கதையின் தொடர்ச்சி..
படையும் தேடி வர்ற
(வர்ற - வருகிறேன்)
குட்டாங் குடுங்கல் மனிதனாக உருப் பெற்ற நேரம் முதல் மூதாட்டியின் வீட்டில் குடிகொண்டிருந்த வறுமை மறைந்து போயின. அந்தக் குட்டாங் குடுங்கல் தனக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுக்குமாறு அந்த மூதாட்டியிடம் முறையிட்டான். கிழவியும் அதற்கு இசைந்தாள். மறுநாள் காலையில் மூதாட்டி குட்டாங் குடுங்கல்லுக்குப் பெண்பார்க்க கிளம்பினாள். நெடுந்தூரம் காட்டுப் பாதையில் பயணித்தாள். அவள் ஒரு கிராமத்தை அடைந்தாள். அந்தக் கிராமத்தில் தலைவலி தீராத ஒரு பெண்ணும் மற்றொரு அழகியும் இருந்தனர்.
கிராமத் தலைவரின் மகள்தான் அந்த அழகி அவள் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றால் வானும் மண்ணும் நீர், மரம், செடி, கொடி என அனைத்தும் அவள் மேனி வண்ணத்தைக் கண்டு சிவந்துபோய்விடுமாம். அப்படிப்பட்ட மேனியை உடையவளாக அந்தப் பெண் இருந்தாள். மூதாட்டி கிராமத்தில் இருந்த எல்லா வீடுகளுக்கும்போய்
நான் குட்டாங் குடுங்கல்க்கு குடியும்படையும் தேடி வர்ற
(வர்ற - வருகிறேன்)
நான் குட்டாங் குடுங்கலுக்கு மனைவியைத் தேடி வருகிறேன் என்றாள். ஆனால் அந்தக் கிராமத்தில் ஒருவரும் பெண் கொடுக்கவில்லை. கடைசியாக ஊர்த் தலைவரின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே அந்த அழகியை ஓலாம்போயை என்னும் ஒரு பெரிய புறையினுள் அமரவைத்து இருந்தனர். மூதாட்டி அவள் வீட்டிற்குச் சென்றபோது அந்த அழகி மூதாட்டியைப் பார்க்க வேண்டுமென அடம்பிடித்தாள். அழகியின் தந்தையோ தன் நண்பர்களுடன் தேன் எடுக்கப் போய் இருந்தார்.
தொடரும்...- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
கதையின் தொடர்ச்சி...
அன்று இரவு மூதாட்டி அழகியின் வீட்டிலேயே தங்கினாள். தான் அந்தக் கிராமத்திற்கு வந்த காரணத்தையும் அவர்களிடம் கூறினாள். மறுநாள் காலையில் மூதாட்டி தன் வீட்டுக்குப் புறப்பட்டாள். உடனே அழகியும் மூதாட்டியுடன் செல்ல வேண்டும் என்றாள். அழகியின் தாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அழகியின் தந்தை வந்து தன் மகளைக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் என்று மூதாட்டியிடம் கூறினாள். ஆனால் அழகியோ மூதாட்டியுடன் போய் தான் ஆகவேண்டும் என்றாள். வேறு வழியில்லாமல் அழகியை மூதாட்டியுடன் அனுப்பினாள் அழகியின் தாய்.
நடக்கும் வழியில் காலில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்க இலைகளைப் பறித்துப் போடுமாறு அழகியின் தாய் கூறினாள் .மேலும் சேறும் சகதியும் உள்ள இடங்களில் கற்களைப் பதிக்குமாறு கூறினாள். அழகியின் தாய் சொன்னபடியே மூதாட்டியும் அவளை அழைத்துச் சென்றாள். மூதாட்டியின் வீட்டிற்குப் போனவுடன் தன் பேரனை அழைத்தாள். உடனே அவன் கீழே இறங்கி வந்து நின்றான். அவனுடைய அழகு முகத்தைக் கண்ட அந்தப் பெண் மயங்கி கீழே விழுந்தாள். உடனே அவன் ஓடி வந்து அவளைத் தாங்கி முகத்தில் நீர் தெளித்து எழுப்பி விட்டான். இருவரும் அந்த நாளில் இருந்து கணவன் மனைவியாக சிலகாலம் அந்தக் காட்டில் வாழ்ந்தனர்.
தொடரும்....நடக்கும் வழியில் காலில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்க இலைகளைப் பறித்துப் போடுமாறு அழகியின் தாய் கூறினாள் .மேலும் சேறும் சகதியும் உள்ள இடங்களில் கற்களைப் பதிக்குமாறு கூறினாள். அழகியின் தாய் சொன்னபடியே மூதாட்டியும் அவளை அழைத்துச் சென்றாள். மூதாட்டியின் வீட்டிற்குப் போனவுடன் தன் பேரனை அழைத்தாள். உடனே அவன் கீழே இறங்கி வந்து நின்றான். அவனுடைய அழகு முகத்தைக் கண்ட அந்தப் பெண் மயங்கி கீழே விழுந்தாள். உடனே அவன் ஓடி வந்து அவளைத் தாங்கி முகத்தில் நீர் தெளித்து எழுப்பி விட்டான். இருவரும் அந்த நாளில் இருந்து கணவன் மனைவியாக சிலகாலம் அந்தக் காட்டில் வாழ்ந்தனர்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
கதையின் தொடர்ச்சி...
நான்காம் கதை ஆரியமலா (ஆரியமலை) அடுத்த பகுதியில் தொடரும்....
ஒரு நாள் அந்த வாலிபன் தன் மனைவியின் பெற்றோரைக் காணவேண்டுமென விரும்பினான். தன் பாட்டியையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கிராமத்திற்குச் சென்றான்.தன் மனைவியின் குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் ஒரு புறையில் போட்டுக் கொண்டு அதைத் தன் சுண்டுவிரலினால் தூக்கிக் கொண்டு நடந்தான். அந்தக் கிராமத்தை நெருங்கியவுடன் ஒரு மரத்தின் அடியில் அந்தப் புறையை வைத்தான். பின்பு வெறும் கையுடன் தன் மனைவியின் பெற்றோரை நோக்கி நடந்தான். போகும் வழியில் அந்தத் தீராத தலைவலியை உடைய பெண்ணின் வீட்டைக் கடந்தபோது அவன் ஒரு மரத்தின் வேரில் கால் இடறினான்.
(தங்களைக் காண வந்திருக்கும் ) மருமகனைக் கண்டு அந்த அழகியின் வீட்டில் அனைவரும் வியந்தனர். வீட்டில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது குட்டாங் குடுங்கல் தான் கொண்டு வந்து வைத்த புறையை யாரேனும் எடுத்து வருமாறு பணித்தான். முதலில் அழகியின் மூத்த சகோதரன் போய் அந்தப் புறையைத் தூக்கினான். ஆனால் அவனால் தூக்க இயலவில்லை. முடிந்த அளவு முயன்றான். ஆனாலும் முடியவில்லை. அவன் வீட்டிற்கு வெறுங்கையுடனே திரும்பினான். பின்னர் இரண்டாவது சகோதரன் சென்றான். அவனுக்கும் எடுத்துவர இயலவில்லை. இறுதியாக அழகியின் தந்தையே சென்று முயன்றார். ஆனாலும் அந்தப் புறையை எவராலும் எடுத்துவர முடியவில்லை. எனவே குட்டாங் குடுங்கலே தன்னுடைய புறையைப்போய் எடுத்து வந்தான். அந்தப் புறையிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க புதிதாய் ஒரு கூரையை வேயும்படி கூறினான்.
அழகியின் சகோதரர்கள் வேகவேகமாக ஒரு கூரையை வேய்ந்தனர். புறையிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அந்தக் கூரையில் குவித்து வைத்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த அனைவருக்கும் தேவையான அளவு பொருட்களைக் குட்டாங் குடுங்கலின் புறையிலிருந்து எடுத்தனர். பின் அந்தத் தலைவலி தீராத பெண்ணின் தாய் குட்டாங் குடுங்கலிடம் வந்து ஏதாவது மருந்து தெரிந்தால் கூறு என்றாள். உடனே குட்டாங் குடுங்கலின் பாட்டி அவனிடம் குட்டாங் குடுங்கல் வந்த வழியில் அவன் காலை இடறிவிட்ட மரத்தின் பட்டையை அவளுடைய நெற்றியில் அரைத்துத் தேய்க்குமாறு கூறினாள். அப்பெண்ணின் தாய் அவ்வாறே செய்தாள். உடனே அவளுடைய தலைவலி தீர்ந்து போய்விட்டது. குட்டாங்குடுங்கலை அந்தக் கிராமத்து மக்கள் இறைவனை மதிப்பது போல போற்றினர். பின்னர் அனைவரும் அந்தக் கிராமத்தில் குட்டாங் குடுங்கலுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
மூன்றாம் கதை குட்டாங் குடுங்கல் முற்றும்..(தங்களைக் காண வந்திருக்கும் ) மருமகனைக் கண்டு அந்த அழகியின் வீட்டில் அனைவரும் வியந்தனர். வீட்டில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது குட்டாங் குடுங்கல் தான் கொண்டு வந்து வைத்த புறையை யாரேனும் எடுத்து வருமாறு பணித்தான். முதலில் அழகியின் மூத்த சகோதரன் போய் அந்தப் புறையைத் தூக்கினான். ஆனால் அவனால் தூக்க இயலவில்லை. முடிந்த அளவு முயன்றான். ஆனாலும் முடியவில்லை. அவன் வீட்டிற்கு வெறுங்கையுடனே திரும்பினான். பின்னர் இரண்டாவது சகோதரன் சென்றான். அவனுக்கும் எடுத்துவர இயலவில்லை. இறுதியாக அழகியின் தந்தையே சென்று முயன்றார். ஆனாலும் அந்தப் புறையை எவராலும் எடுத்துவர முடியவில்லை. எனவே குட்டாங் குடுங்கலே தன்னுடைய புறையைப்போய் எடுத்து வந்தான். அந்தப் புறையிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க புதிதாய் ஒரு கூரையை வேயும்படி கூறினான்.
அழகியின் சகோதரர்கள் வேகவேகமாக ஒரு கூரையை வேய்ந்தனர். புறையிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அந்தக் கூரையில் குவித்து வைத்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த அனைவருக்கும் தேவையான அளவு பொருட்களைக் குட்டாங் குடுங்கலின் புறையிலிருந்து எடுத்தனர். பின் அந்தத் தலைவலி தீராத பெண்ணின் தாய் குட்டாங் குடுங்கலிடம் வந்து ஏதாவது மருந்து தெரிந்தால் கூறு என்றாள். உடனே குட்டாங் குடுங்கலின் பாட்டி அவனிடம் குட்டாங் குடுங்கல் வந்த வழியில் அவன் காலை இடறிவிட்ட மரத்தின் பட்டையை அவளுடைய நெற்றியில் அரைத்துத் தேய்க்குமாறு கூறினாள். அப்பெண்ணின் தாய் அவ்வாறே செய்தாள். உடனே அவளுடைய தலைவலி தீர்ந்து போய்விட்டது. குட்டாங்குடுங்கலை அந்தக் கிராமத்து மக்கள் இறைவனை மதிப்பது போல போற்றினர். பின்னர் அனைவரும் அந்தக் கிராமத்தில் குட்டாங் குடுங்கலுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
நான்காம் கதை ஆரியமலா (ஆரியமலை) அடுத்த பகுதியில் தொடரும்....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சகோதரிஅவர்களே உங்கள் எழுத்தை அல்ல
உங்கள் கருத்தை பதிவிடுங்கள் அருமை>>>
உங்கள் கருத்தை பதிவிடுங்கள் அருமை>>>
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
ஐயா வணக்கம்.
இக்கதைகள் இதுவரை பதிவுசெய்யப்படாதவை. முதன்முறையாக நம் பகுதியில் பதிவிடுகிறேன். ஆதலின் முதலில் கதைகளைப் பதிவிட்டுவிட்டு பின்னர். அது குறித்த என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். நன்றி.
இக்கதைகள் இதுவரை பதிவுசெய்யப்படாதவை. முதன்முறையாக நம் பகுதியில் பதிவிடுகிறேன். ஆதலின் முதலில் கதைகளைப் பதிவிட்டுவிட்டு பின்னர். அது குறித்த என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். நன்றி.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கதை என்று ஏன் பெயர் வைத்தனர்.
என்ன கதை அளக்கிரயா? என்றுகூட
கூறுகிறார்கள். எதனால் >>>>>>>>>>
என்ன கதை அளக்கிரயா? என்றுகூட
கூறுகிறார்கள். எதனால் >>>>>>>>>>
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
கதை - 4
ஆரியமலா (ஆரியமலை)
(ஆரியமாலை எனும் பெயர் கதையில் ஆரியமலா என்று வருகின்றது)
(ஆரியமாலை எனும் பெயர் கதையில் ஆரியமலா என்று வருகின்றது)
ஒரு காட்டில் ராஜாவும் ஒரு ராணியும் தனித்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. நாள்தோறும் ராஜா வேட்டைக்குச் செல்வது வழக்கம். அந்த ராஜா வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் மட்டுமே வேட்டைக்குச் சென்று வந்தான். ஒரு நாள் கிழக்குத் திசைக்கு வேட்டையாடச் சென்றான் அப்போது அங்கே ஓர் அதிசயத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தான்.
அன்றிலிருந்து அந்த இராஜா தான் கிழக்கு திசைக்குச் சென்றபோது கண்ட காட்சியை நினைத்து கொண்டே இருந்தான். ஊண் உறக்கமின்றி அந்த இராஜா சாகும் தருவாய்க்குத் தள்ளப்பட்டான். அந்நிலையில் தன் மனைவியிடம் இராஜா தன் மகன் வேட்டைக்குச் செல்லும் பொழுது தெற்கு , மேற்கு, வடக்கு என மூன்று திசைகளில் மட்டுமே வேட்டைக்கு அனுப்பு கிழக்குத் திசைக்கு மட்டும் அனுப்பாதே எனக் கூறி இறந்தான்.
இராஜாவின் மறைவுக்குப் பிறகு ராணியும் அவளுடைய மகனும் தனித்தே அந்தக் காட்டில் வாழ்ந்தனர். இராணியின் மகன் வளர்ந்து ஆளானான். அவன் வேட்டைக்குச் செல்ல ஆரம்பித்தான். அவனுடைய தாய் கிழக்குத் திசைக்கு மட்டும் வேட்டைக்குச் செல்லாதே என எச்சரித்தாள். மகனும் தன் தாய் கூறியபடியே சில மாதங்கள் கிழக்குத் திசைக்கு வேட்டைக்குப் போகாமல் இருந்தான். ஒரு நாள் காலையில் வேட்டைக்குச் சென்றபோது அவன் கிழக்குத் திசையை நோக்கி சென்றால் என்ன? அத்திசையில் என்னதான் இருக்கிறது சென்று பார்க்கலாம் என எண்ணினான். அவனுடைய குதிரையை கிழக்குத் திசையை நோக்கி கூட்டிச் சென்றான். அங்கே சிறிது தூரம் சென்றவுடன் அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று மாலை அவன் வீட்டிற்கு வந்தான். ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்தபடியே இருந்தான்.
தொடரும்..அன்றிலிருந்து அந்த இராஜா தான் கிழக்கு திசைக்குச் சென்றபோது கண்ட காட்சியை நினைத்து கொண்டே இருந்தான். ஊண் உறக்கமின்றி அந்த இராஜா சாகும் தருவாய்க்குத் தள்ளப்பட்டான். அந்நிலையில் தன் மனைவியிடம் இராஜா தன் மகன் வேட்டைக்குச் செல்லும் பொழுது தெற்கு , மேற்கு, வடக்கு என மூன்று திசைகளில் மட்டுமே வேட்டைக்கு அனுப்பு கிழக்குத் திசைக்கு மட்டும் அனுப்பாதே எனக் கூறி இறந்தான்.
இராஜாவின் மறைவுக்குப் பிறகு ராணியும் அவளுடைய மகனும் தனித்தே அந்தக் காட்டில் வாழ்ந்தனர். இராணியின் மகன் வளர்ந்து ஆளானான். அவன் வேட்டைக்குச் செல்ல ஆரம்பித்தான். அவனுடைய தாய் கிழக்குத் திசைக்கு மட்டும் வேட்டைக்குச் செல்லாதே என எச்சரித்தாள். மகனும் தன் தாய் கூறியபடியே சில மாதங்கள் கிழக்குத் திசைக்கு வேட்டைக்குப் போகாமல் இருந்தான். ஒரு நாள் காலையில் வேட்டைக்குச் சென்றபோது அவன் கிழக்குத் திசையை நோக்கி சென்றால் என்ன? அத்திசையில் என்னதான் இருக்கிறது சென்று பார்க்கலாம் என எண்ணினான். அவனுடைய குதிரையை கிழக்குத் திசையை நோக்கி கூட்டிச் சென்றான். அங்கே சிறிது தூரம் சென்றவுடன் அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று மாலை அவன் வீட்டிற்கு வந்தான். ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்தபடியே இருந்தான்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர்ச்சி..
பால் பழம் உங்கவேணும் மகனே உங்கவேணும்
(உங்க வேணும் - சாப்பிட வேண்டும் )
- உங்க மாட்டேன்
பாய்போட்டா தூக்கமில்லே படுக்க விரிச்சா
- நித்திரையில்லே
ஆரியமலையைக் கண்டுவந்த நாள்முதலா எனக்கு
-கண்ணுறக்கமில்லை
தாயே கண்ணுறக்கமில்லே
அவனுடைய தாய் அவனிடம் மகனே என்ன நடந்தது. ஏன் ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்கிறாய்? என்றாள். அதற்கு அவன் ஒன்றும் இல்லை எனப் பதிலுரைத்தபடி தன்னுடைய மெத்தையில் சாய்ந்தான். தன்னுடைய மகன் பசியோடு இருப்பதை அறிந்த தாய் அவனுக்குப் பாலும் பழமும் இனிப்பும் எடுத்து வந்து உண்ணுமாறு கூறினாள்.
தாய் பால் பழம் உங்கவேணும் மகனே உங்கவேணும்
(உங்க வேணும் - சாப்பிட வேண்டும் )
எனக் கூறினாள். இதைக் கேட்ட மகன் தனக்கு உணவு உண்ண விருப்பம் இல்லாத காரணத்தைத் தன் தாயிடம் தெரிவித்தான்.
பால் பழம் உங்க மாட்டேன் தாயே - உங்க மாட்டேன்
பாய்போட்டா தூக்கமில்லே படுக்க விரிச்சா
- நித்திரையில்லே
ஆரியமலையைக் கண்டுவந்த நாள்முதலா எனக்கு
-கண்ணுறக்கமில்லை
தாயே கண்ணுறக்கமில்லே
என்று தான் ஆரியமலா என்ற தேவ கன்னியைக் கிழக்குத் திசையில் இருந்த கோட்டையில் கண்டதாக அவன் கூறுகிறான். இதைக் கேட்ட தாய் தன் மகன் கிழக்குத் திசையில் வேட்டைக்குச் சென்று வந்திருக்கிறான் என்பதை உணர்ந்தாள். தான் எச்சரித்துக் கூறியும் கிழக்குத் திசைக்கு வேட்டைக்குச் சென்ற மகனை அவள் கடிந்து கொண்டாள். இருப்பினும் அவன் அந்த தேவகன்னி ஆரியமலையைச் சென்று பார்க்க வேண்டுமென துடித்தான்.
தொடரும்.. - முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர்ச்சி..
பறந்தோடி நான் போய்வருவேன் தாயே -போய் வருவேன்.
புள்ளிமான் வேசம் கொண்டு போகாதடா என் மகனே
எத்தனையோ இகையாளி பகையாளி
உங்குமடா மகனே உங்குமடா
பறந்தோடிப் போய்வருவேன்
ஆரியமலை இருக்கும் கோட்டையோ பத்து சுற்றுக் கோட்டை பாம்பு கூடி நுழைய முடியாத மண்டபம். இருப்பினும் அவன்,
புள்ளிமான் வேசம் கொண்டல்லவோ தாயே பறந்தோடி நான் போய்வருவேன் தாயே -போய் வருவேன்.
புள்ளிமான் வேடமணிந்து ஆரியமலையைப் போய் கண்டு வருவேன் என்று கூறுகிறான். அதற்கு அவனுடைய தாய்
போகாதடா என்மகனே போகாதடாபுள்ளிமான் வேசம் கொண்டு போகாதடா என் மகனே
எத்தனையோ இகையாளி பகையாளி
உங்குமடா மகனே உங்குமடா
என்றாள். புள்ளிமான் வேடமணிந்து சென்றால் மானுக்கு எதிரிகளான புலி, சிங்கம் உன்னை உண்ணுமடா என அவள் கூறினாள். இதைக் கேட்ட மகன் மீண்டும் தாயை நோக்கி
பக்ஷி வேசங்கொண்டல்லவோ தாயே நான்பறந்தோடிப் போய்வருவேன்
எனப் பறவை வேடமணிந்து நான் ஆரியமலையைப் போய் கண்டு வருவேன் என்கிறான்.
தொடரும்..- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|