புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_m10ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள்:


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 18, 2009 5:20 pm


ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை என்பதை நாடே அறியும்: ஆற்காடுவீராச்சாமி


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மின்வெட்டு பிரச்சனை, முதல்வர் கருணாநிதி அறிக்கைகள், வக்கீல்கள் பிரச்சனை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திமுக அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,


‘’ஜெயலலிதாவின் 14-3-09 தேதிய அறிக்கையில் “மின் வெட்டு” பற்றி கேட்டதற்கு கலைஞர் பதிலளிக்கவில்லை என்கிறார்.

மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜெயலலிதா எழுதாத நாள் இல்லை. அமைச்சர் என்ற நிலையில் பலமுறை அதற்கெல்லாம் நான் விளக்க மளித்துவிட்டேன். அதையெல்லாம் படிக்காமல் பதில் அளிக்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இதோ விளக்கமான பதில்.

ஜெயலலிதா அறிக்கையில் மின்சார உற்பத்தியை பெருக்க கழக அரசு எதுவும் செய்யவில்லை என்றும், மின்துறை அமைச்சர், முதல் -அமைச்சர் கலைஞருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தனக்கே உரிய அரசியல் நாகரீகத்தோடு சொல்லியிருக்கிறார்.

1. தி.மு.க. 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தான் செய்யூரில் 4000 மெகாவாட் சூப்பர் தெர்மல் ஸ்டேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன் மூலம் அமைப்பதற்கு மின்துறை அமைச்சரான நான் முழு முயற்சி செய்து, இப்போது நில ஆர்ஜிதம் முடியும் தருவாயில் உள்ளது.

2. வடசென்னையில் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 2-7-07 அன்று முதல்-அமைச்சர் கலைஞர் அடிக்கல் நாட்டி, பாரதமிகு மின் நிறுவனத்திற்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டு, கட்டமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. முதல் பிரிவு 600 மெகாவாட், 2010 அக்டோபரிலும், இரண்டாவது பிரிவு 2011ஆம் ஆண்டு மே திங்களில் மின்உற்பத்தி தொடங்கும்.

3. மேட்டூரில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் 2-7-07 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011 மே திங்களில் மின்உற்பத்தி தொடங்கும்.

4. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலம் 1600 மெகாவாட் அளவில் மின்உற்பத்தி செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் மின்துறை முயற்சி எடுத்து அதிலும் நில ஆர்ஜிதம் முடியும் அளவில் உள்ளது.

5. தமிழ்நாடு மின்சார வாரியமும், என்.டி.பி.சி. நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக 1000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க 5-9-07 அன்று என் தலைமையில் மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டி, கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2010 ஆம் ஆண்டு அக்டோபரில் மின்உற்பத்தி துவங்கும்.

6. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் இணைந்து 1000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்க தூத்துக்குடியில் 26-2-09 அன்று என் தலைமையில் மத்திய வெளிஉறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 2012ல் உற்பத்தி தொடங்கும்.

7. தமிழ்நாடு மின்சார வாரியமும், பி.எச்.ஈ.எல். நிறுவனமும் இணைந்து உடன்குடியில் 1600 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 22-2-09 அன்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் தமிழக மின்துறை அமைச்சரான நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மார்ச் 2013இல் மின் உற்பத்தி தொடங்கும்.


8. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் அருகே 600 மெகாவாட் மின்சாரம்உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆக்கப்பணிகள் தொடங்கவுள்ளன.

9. நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீரேற்று புனல் மின்திட்டம் 500 மெகாவாட்- தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படவுள்ளது.

எனவே மின் உற்பத்தியைப் பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்பதை இந்தப்புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்கியிருப்பாரே யானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்கவே வந்திருக்காது. எனவே இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 18, 2009 5:21 pm

ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் மின்உற்பத்தி பணிகளைக் கவனிக்காமல், முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார்.

தனது 85 வயது வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதுபெரும் தலைவருக்கு ஜெயலலிதா கூறியிருப்பதைக் போல நான் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், அதனை நான் என் வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

ஆனால் கலைஞரைப் பொறுத்தவரை அவரே தான் தன் வேலைகளை செய்து கொள்வாரே தவிர, தனக்கு யாரும் எடுபிடி வேலை பார்ப்பதை அவரே விரும்பமாட்டார். நான் மின்துறை பணிகளை முறையாகச் செய்து வருகிறேன் என்பதற்கான பட்டியலை மேலே குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் என்னை எடுபிடி என்று கூறியுள்ள ஜெயலலிதா இன்று யாருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார்? யாரோ ஒரு உடன் பிறவா சகோதரிக்கும், அவருடைய கும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் எடுபிடி வேலை செய்து கொண்டி ருக்கின்ற நிலையில் - கண்ணாடி வீட்டிலே இருந்து கொண்டு என் மீது கல்வீசிட முற்படலாமா?

தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறியிருக்கிறார்.

2001 முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மூன்று முறை உயர்த்தியும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைத் தான் சந்தித்தது.

ஆனால் இந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட மின் கட்டணத்தை உயர்த்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் மின்சார வாரியத்தில் தற்போது நஷ்டம் ஏற்படுகிறதே தவிர, ஜெயலலிதா ஆட்சியில் ஆண்டுக்கொரு முறை உயர்த்தியதைப் போல மின் கட்டணத்தை உயர்த்திருயிருந்தால் நட்டம் ஏற்பட்டி ருக்காது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001-2002-ல் ரூ.2202 கோடி நட்டம், 2002-2003-ல் ரூ.1800 கோடி நட்டம், 2003-2004-ல் ரூ.1110 கோடி நட்டம், 2004-2005-ல் ரூ.1177 கோடி நட்டம், 2005- 2006-ல் ரூ.1329 கோடி நட்டம். அந்த நட்டங்கள் தான் இப்போது பெருகியுள்ளதே தவிர, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தான் நட்டம் வந்ததாகச் சொல்ல முடியாது.

ஜெயலலிதா அறிக்கையில் முதலமைச்சர் பதில் கூறவில்லை என்று சொல்லியிருப்பது விலைவாசி உயர்வு. எந்த ஆட்சிக் காலத்திலும் சொல்லப்படும் குற்றச்சாற்றுகளில் ஒன்று தான் இது.

விலைவாசி உயர்வை குறைக்க வேண்டு மென்பதற்காகத்தான் தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து நடை முறைப்படுத்தி வருகிறோம். மளிகைப் பொருள்கள் ஏழையெளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப் பதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் செய்துள் ளார். எனவே விலைவாசி யைக் குறைக்க இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டிலும் உண்மையில்லை.

அடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் பற்றி ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்தப் பிரச்சினை தற்போது நீதிமன்ற விசாரணையிலே உள்ளது. அதன் முடிவு தெரிந்த பிறகுதான் அரசாங்கம் எதுவும் செய்ய முடியும். கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் அரசு சார்பில் பதிலளிக்கவில்லை என்றும் ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் மீது இப்போது ஜெயலலிதாவிற்கு எவ்வளவு பாசம்? அவரது ஆட்சிக்காலத்தில் வழக்கறிஞர்கள் விஜயனும், சண்முகசுந்தரமும் தாக்கப்பட்டதையும், நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டதையும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மறந்தா போய் விட்டார்கள்?

காவல் துறையினருக்கு தாக்க உத்தரவிட்டது யார் என்று ஜெயலலிதா இன்று கேட்கும் கேள்வியை உச்சநீதி மன்றம் கேட்ட போதே, தமிழ கக்காவல் துறையின் சார்பில் விளக்கம்அளிக்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதாவிற்கு இதிலே மேலும் ஏதாவது விளக்கம் வேண்டுமேயானால், உச்சநீதி மன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் இடைக்கால அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிப்படித்தால் நன்றாக விளக்கங்கள் கிடைக்கும்.

இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால்-அ.தி. மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு பணிக்குத் திரும்ப வேண்டுமென்று அறிக்கை விடலாமே! பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதைப்போல அறிக்கை விடுவதால் மக்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.

மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். சட்டக்கல்லூரி ஆறு மாதமாக மூடிக்கிடக்கிறது என்றார். அதுவும் தவறான விவரம் என்று புள்ளி விவரத்தோடு முதல்-அமைச்சர் கருணாநிதி தேதிவாரியாக பதில் அளித்தார்.

அதன் பின்னர், அதைப்பற்றி ஜெயலலிதா வாய்திறக்கவில்லை. அதையெல்லாம் விட்டு விட்டு, முதல்- அமைச்சர் கருணாநிதி வசைமாரி பொழிகிறார் என்று ஜெயலலிதா குறை கூறிய காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டி, ஜெயலலிதா எந்தெந்த தேதியில் எந்தெந்த வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தார் என்பதை முதல்-அமைச்சர் தேதிவாரியாக பட்டியலிட்டுக் காட்டி, யார் வசைமாரி பொழிகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளட்டும் என்று எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகும் ஜெயலலிதா-தன்னைத் திருத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ முன்வராமல், முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கைகளிலே எழுதாத வார்த்தைகளையெல்லாம் அவர் எழுதியதாக பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

மூக்கறுந்து போன மூளி- அலங்காரி-நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி-மலம்- வேஷக்காரி-தெருப்பொறுக்கி-நாய்க்கொழுப்பு- பூதகி-நாய்-திமிங்கலம் என்ற வார்த்தைகளால் முதல்- அமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதாவை வசைமாரி பொழிந்ததாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களே அன்றாடம் முதல்-அமைச்சரின் அறிக்கைகளைப் படித்து வரும் பத்திரிகையாளர்களே-முதல்வரின் அறிக்கைகளிலே அந்த அம்மை யாரைஇப்படிப்பட்ட வார்த்தைகளால் எப்போதாவது வர்ணித்திருக்கிறாரா என்பதை நீங்களே கூறுங்கள்.

ஜெயலலிதா எழுதியுள்ள அறிக்கையில் அவரைப்பற்றி முதல்-அமைச்சர் கூறாத ஆனால் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை என்பதை நாமல்ல, நாடே அறியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக