புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_c10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_m10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_c10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_m10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_c10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_m10பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 6:02 pm

Chennai:
இரவு அழகு. இரவில் மதுரை பேரழகு. பகல்போலவே இரவிலும் பரபரப்பாகவே இயங்கும் இந்தத் தூங்கா நகரின் பரபர இரவைக் காண லந்தாகக் கிளம்பினோம். டிராஃபிக் நெருக்கடி, அலுவலக பரபரப்பு, கலர்ஃபுல் கல்லூரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் எனப் பகலில் இயங்கும் மதுரைக்கு பல ஃபேன்டஸி முகங்கள் எனில், இரவில் இயங்கும் மதுரையை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். ரம்மியம்! பகல் நேரத்தை ஓய்வுக்காகவும், இரவினை உழைப்புக்காகவும் அர்ப்பணித்திருக்கும் இந்த முகங்களின் வாழ்க்கைமுறையே வித்தியாசமானது. இவர்களின் உழைப்பு அந்த இரவிலும் அவ்வளவு 'பிரகாசமாக' இருந்தது.


[You must be registered and logged in to see this image.]

சிம்மக்கல்லில் பழ மார்க்கெட், மாட்டுத்தாவணி காய்கறி, பூ மார்க்கெட், பரவை காய்கறி மார்க்கெட், தெற்கு வாசல் மீன் மார்க்கெட் என ஒவ்வோர் இடமாகச் சென்று அவர்களின் தொழில், வாழ்க்கைமுறையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு டவுட். பகலில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பசிக்கிறதே, இரவில் இவ்வளவு நேரம் உழைக்கும் இவர்களுக்குப் பசித்தால் என்ன செய்வார்கள்...? யோசித்துக் கொண்டிருக்கும்போதே பசிக்கத் தொடங்கியது. `லைட்டா பசிக்குற மாதிரி இருக்குல' என நண்பன் சொல்ல, வயிற்றுக்குள் ஓ.டி.பி மெசேஜ் ஒலித்து, பசியைக் கன்ஃபார்ம் செய்தது. `எங்க சாப்பிடலாம்...?’ என யோசித்துக்கொண்டிருக்கும்போதே `இந்நேரத்துல ஹோட்டல் கடை எல்லாம் மூடிருப்பாய்ங்க தம்பிகளா...' என குண்டைத் தூக்கிப் போட்டார் லோடுமேன் அண்ணன்.
`அண்ணே... இந்நேரத்துல பசிச்சா நீங்க சாப்பாட்டுக்கு என்னண்ணே பண்ணுவிங்க' என அவரிடமே சரணடைந்தோம்.
உற்சாகமான அவர், மதுரையின் இரவு நேர சிற்றுண்டிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன சிற்றுண்டிகளின் லிஸ்டில் `பழசு கடை’ என்ற பெயர் எங்களை ஈர்த்தது. தனித்துவத்தின் மீது ஈர்ப்பு வருவது இயல்புதானே! அவர் சொன்ன மற்ற சிற்றுண்டிகளை ஏறக்கட்டிவிட்டு, ``பழசு கடைனா என்னண்ணே..?'’ என ஆர்வமானோம்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 6:04 pm

அதுவா... ஹோட்டல்களில் மிஞ்சும் சாப்பாட்டை வாங்கி விக்குற கடைங்கப்பா. பெரியார், ஆரப்பாளையம், மேலவாசல் ஏரியா எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பழசு கடைகள் இருக்கு" என்று அவர் சொல்லி முடித்ததும், நேராக பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வண்டியை விட்டோம். பெரியார் அருகே தள்ளுவண்டிக் கடையில் பரபரப்பாக வியாபாரம் செய்துகொண்டிருந்த `பழசு கடை’ ஓனர் கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தோம்.


[size=31][You must be registered and logged in to see this image.]
[/size]
``16 வயசிலிருந்து இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றேன். இப்போ வயசு 46. இந்தத் தொழிலுக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல ஆச்சு. பகல்ல பெரிய ஹோட்டல்ல வேலை பார்ப்பேன். வேலை முடிஞ்சதும் தினமும் நைட், எச்சில்படாத, கெட்டுப் போகாத சாப்பாட்டை தருவாங்க. கிட்டத்தட்ட இதுதான் எங்களுக்குச் சம்பளம். அதை எடுத்துட்டு வந்து நைட்டு இங்கே விக்கிறேன். ஆட்டோ டிரைவர், கூலித்தொழிலாளிங்கதான் எங்க ரெகுலர் கஸ்டமர். ஊத்தாப்பம், புரோட்டா, சப்பாத்தி, சாம்பார், குருமான்னு எல்லாமே சைவம்தான். ஹோட்டல் கடையில ஒரு தோசை 40 ரூபா. ஜி.எஸ்.டி வரியைச் சேர்த்தா 48 ரூபா. ஏழை பாழைங்க 45 ரூபா கொடுத்து ஒரு தோசை சாப்பிட முடியுமா? பெரிய கடைகளை வெளியே இருந்து வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். உள்ளே போய் சாப்பிட முடியாது. இங்கே அதே தோசையை பத்து ரூபாய்க்குக் கொடுக்குறோம்" என மீண்டும் வியாபாரத்தில் பிஸியானார் கண்ணன்.
`பழசு கடை‛ பற்றி அதன் கஸ்டமர்களிடம் கேட்டபோது, ``இதுவும் மதுரையோட ஸ்பெஷல்தான். எங்கள மாதிரி ஆளுகளுக்கு நைட் சாப்பாடே இந்தக் கடையை நம்பித்தான் இருக்கு. டெய்லி நைட் இங்கதான் சாப்பிடுறோம். நைட் பசிக்குமேன்ற கவலையே இல்லை. 12 மணியில இருந்து 2 மணி வரைக்கும் இந்தக் கடைங்க இருக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்தக் கடை ரொம்ப உதவியா இருக்கும். ஆட்டோ டிரைவர், ட்ரை சைக்கிள் ஓட்டுறவங்க, மார்க்கெட்டுக்கு வேலைக்குப் போறவங்கன்னு எல்லாரும் இங்க சாப்பிட்டுட்டுதான் வேலைக்குப் போவாங்க. வெறும் 10 ரூபாய்க்கு மனசும் வயிரும் நிறைஞ்சிடும்" என்றனர் திருப்தியுடன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 6:05 pm

[You must be registered and logged in to see this image.]

அன்-டைமில் கடை நடத்துவதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து கண்ணனிடம் கேட்டதும், ``மற்ற கடைகள் எல்லாம் 12 மணிக்கு மூடிருவாங்க. நான் 12 மணிக்கு மேல்தான் கடையைத் திறப்பேன். ஒருநாள் எல்லாரையும் போல ஒரு திருடனும் வந்து சாப்பிட்டுப் போயிட்டான் போல. உடனே போலீஸ் வந்து, `நீ திருட்டுப் பசங்களுக்காக கடை நடத்துறியா’ன்னு சொல்லி காலை உடைச்சுட்டாங்க. பசியில வர்றவன் திருடனா,கொலைகாரனான்னு எனக்கு எப்படி தம்பி தெரியும்?
போலீஸுக்கு பயந்தே இடத்தை மாத்திட்டே இருக்கேன். `மதுரை இப்போ ஸ்மார்ட் சிட்டி ஆயிடுச்சு. நீங்க தொழிலை மாத்திருங்க’னு போலீஸ் ஈஸியா சொல்லியிட்டுப் போயிடுறாங்க. `சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்தத் தொழிலைத் தவிர வேற எதுவும் தெரியாது ஐயா’னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்க. ஸ்மார்ட் சிட்டியாவே இருக்கட்டும். அதுக்காக கம்ப்யூட்டரா வந்து சோறு போடப்போகுது?’’ என இரவுநேரத்தில் கடை நடத்துவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, பத்து ரூபாயை நீட்டிய ஆட்டோ டிரைவருக்கு புரோட்டா, நாண், ஊத்தாப்பம், குருமா, சாம்பார் அடங்கிய காம்போவைப் பரிமாறினார் கண்ணன். `பேருதான் பழசு கடை. ஆனா, கிடைக்குறது எல்லாமே ஃப்ரஷ்" என பழசு கடைக்கான ஸ்லோகனை கூறி வியாபாரத்தை தொடர்ந்தார். கொஞ்ச நேரத்தில் அனைத்து உணவுகளும் விற்றுவிட, தள்ளுவண்டியை அங்கிருந்து நகர்த்திச் சென்றார். அவர் சென்ற பாதை அந்த இரவிலும் அவ்வளவு பிரகாசமாகக் காட்சியளித்தது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 11, 2018 7:34 pm

பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! 103459460
-
அவரது சேவை தொடர வாழ்த்துகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 7:24 pm

ayyasamy ram wrote:பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! 103459460
-
அவரது சேவை தொடர வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this link.]
நன்றி
ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 13, 2018 5:03 pm

பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! 3838410834 பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! 3838410834



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 17, 2018 3:20 am

அதிர்ச்சியாக உள்ளது , இவர்களின் சேவை தொடரவேண்டுமென்றும் மனது வேண்டுகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 17, 2018 7:13 am

சேவை தொடர வாழ்த்துகள்.
ஹோட்டல் சாப்பாடு 10 ரூபாயில்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 17, 2018 7:20 am

SK wrote:பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! 3838410834 பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை! 3838410834
[You must be registered and logged in to see this link.]
நன்றி நண்பா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 17, 2018 7:22 am

T.N.Balasubramanian wrote:சேவை தொடர வாழ்த்துகள்.
ஹோட்டல் சாப்பாடு 10 ரூபாயில்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக