புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10கண்ணாடி செய்யும் மாயம் Poll_m10கண்ணாடி செய்யும் மாயம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி செய்யும் மாயம்


   
   
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Jan 23, 2018 10:25 pm

கண்ணாடி செய்யும் மாயம்



வீட்டின் வரவேற்பறையில் கண்ணாடி வைத்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு இருப்பவர்கள் உண்டு. கண்ணாடி முன் கண் விழித்தால் நல்லது எனும் நம்பிக்கையோடு தூங்கி எழுந்தவுடன் காலையில் கண்ணாடி பார்ப்பவர்கள் உண்டு. இவை அல்லாது நம்மை நாமே பார்த்து ரசித்து, அலங்கரித்துக் கொள்வதற்கு அனைவரும் கண்ணாடியைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் நம் வீட்டை அலங்கரிக்கும் பொருள்களில் ஒன்றாகக் கண்ணாடி பயன்படும் என இதுவரை யோசித்ததுண்டா? நவீன வீட்டு அலங்கார வடிவங்களில் கண்ணாடி முக்கிய இடம்பிடிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட சுவர்க் கண்ணாடிகள் மற்றும் அழகிய கண்ணாடிச் சட்டகங்கள் கொண்டு உங்கள் வீட்டுக்குப் புதுப்புது அர்த்தங்கள் தரலாம்.

சிறிய அறையில் பெரிய கண்ணாடி

அறையின் சுற்றளவுக்கு ஏற்ற மாதிரிதானே இதுவரை கண்ணாடி பொருத்தியிருப்பீர்கள், இனித் தலைகீழாக யோசியுங்கள் என்கின்றனர் நவீன வடிவமைப்பாளர்கள். சிறிய அறையில் பெரிய கண்ணாடியைப் பொருத்தும்போது அந்த அறையே பரந்து விரிந்து பிரம்மாண்டமாக இருப்பது போன்ற மாயை ஏற்படும்.

வரவேற்பறைச் சுவரில் ஓவியம் மாட்டி வைத்திருந்தால் அதற்கு எதிர்ப்புறத்தில் பெரிய கண்ணாடி பதிக்கும்போது அந்த அறை முழுவதும் சித்திரத்தின் அழகு பிரதிபலிக்கும். விதவிதமான வடிவங்களில் உள்ள கண்ணாடிகளைச் சுவரில் மாட்டும்போது உங்கள் பழைய வீட்டுக்கு நவீனத் தோற்றம் தர முடியும்.

வீட்டு உபயோகப் பொருள்களில் கண்ணாடி

கண்ணாடி பதிக்கப்பட்ட உணவு மேஜை, இழுப்பறை கொண்ட அலமாரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு விதத்தில் உங்கள் வீட்டின் அழகை இவை தூக்கி நிறுத்தும். உதாரணத்துக்கு, உங்கள் வரவேற்பறையில் ஒரு பகுதியை உணவு அறையாக நீங்கள் மாற்றியிருக்கலாம்.

ஆனால் வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் அறையின் மையத்தில் ஒரு பெரிய உணவு மேஜை இருப்பது அறையில் அழகைக் குலைப்பது போலத் தோன்றலாம். இதற்கு மிக எளிமையான தீர்வு உங்கள் உணவு மேஜையின் மேற்பரப்பின் சுற்றளவுக்கு ஏற்ற கண்ணாடியைப் பொருத்துவதுதான். அதன்பின் மேஜையானது கண்கட்டு வித்தைப் போல மறைந்துவிடும். சிறிய அறையில் கண்ணாடி பதிக்கப்பட்ட இழுப்பறை அலமாரிகளை வைத்தால் அது தரையைப் பிரதிபலிக்கும். இப்படியாக அந்த அறையின் பரப்பளவு பெரிதாகக் காட்சியளிக்கும்.

எதைப் பிரதிபலிக்கிறது?

சில வீடுகளில் வாஷ் பேசின், பீரோ, குளியலறை, சமையலறை, படுக்கை அறை, வரவேற்பறை இப்படி எங்குப் பார்த்தாலும் கண்ணாடிகள் மாட்டப்பட்டிருக்கும். இவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் நம்மை மட்டுமல்ல எதிரே இருக்கும் அத்தனை விஷயங்களையும் பிரதிபலிக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

படுக்கை அறையில் துணிமணிகள் சிதறிக் கிடக்கலாம், வரவேற்பறையில் ஒரு ஓரத்தில் பழைய கிழிந்துபோன சோபா செட் இருக்கலாம், அலமாரிகளில் காகிதக் குவியல் இருக்கலாம் இப்படி நீங்கள் வெளிக்காட்ட விரும்பாத எத்தனையோ விஷயங்களை ஆங்காங்கே உள்ள கண்ணாடி பிரதிபலித்துக் கொண்டிருக்கும். எப்படியோ கண்ணாடிகள் வீட்டின் அழகை மேம்படுத்தக்கூடியவை.

ஒரு விதத்தில் அதன் பிரதிபலிக்கும் தன்மை வீட்டை ஒளிமையமானதாக மாற்றும். கண்ணாடிகள் இல்லாத உலகம் இன்றைக்குச் சாத்தியமே இல்லை. அந்தளவுக்குக் கண்ணாடிகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அதைக்கொண்டு வீட்டை அலங்கரிப்போம்.

ம.சுசித்ரா

நன்றி - தமிழ் இந்து

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Jan 23, 2018 10:33 pm

தொழில் ரகசியம்: தவறுகளை குறைக்கும் கண்ணாடி!


பிடிக்கிறதோ இல்லையோ தினம் நம் முகத்தை நாமே பார்க்க வேண்டியிருக்கிறது. கடனே என்று சிலர் பார்க்க, காதலியை பார்ப்பது போல் சிலர் கண்ணாடியே கதி என்று கிடக்கிறோம். கண்ணாடி நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நாம் எப்பேற்பட்டவர், நம்மை மற்றவர்களுக்கு எப்படி காட்ட விரும்புகிறோம் என்பதைக் கூட கண்ணாடி கூறுமாம். முகம் பார்க்கும் கண்ணாடியில் மனம் பார்க்கும் விதம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.

சமூக உளவியலாளர் `ஆர்தர் பீமென்’ மற்றும் அவர் சகாக்கள் அமெரிக்க ஹாலோவீன் பண்டிகையின்போது செய்த ஆய்விலிருந்து துவங்குவோம். அந்த ஆய்வு பற்றி கூறும் முன் ஹாலோவீன் பற்றி கூற வேண்டியிருக்கிறது. ஹாலோவீன் இறந்தவர்களை நினைத்து பார்க்கும் வித்தியாசமான அமெரிக்க பண்டிகை. அன்றைய தினம் குழந்தைகள் பேய், பிசாசு போல் உடையணிந்து அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று ‘ட்ரிக் ஆர் ட்ரீட்?’ என்று கேட்பார்கள். ‘சாக்லெட் தரியா இல்லை உன்னை பயமுறுத்தட்டுமா’ என்று அர்த்தம். வீட்டிலுள்ளவர்கள் ஹாலோவீன் அன்று வரும் குழந்தைகளுக்கு தருவதற்கென்றே சாக்லெட்டை ரெடியாய் வைத்திருப்பார்கள்.

ஒரு ஹாலோவீன் தினத்தில் பல வீடுகளை தேர்ந்தெடுத்தனர் ஆய்வாளர்கள். கதவை தட்டி `ட்ரிக் ஆர் ட்ரீட்’ என்று கேட்ட குழந்தையை வீட்டுக்காரர் வரவேற்று `டேபிளில் சாக்லெட் வைத்திருக்கிறேன், அதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொள் எனக்கு வேலை இருக்கிறது’ என்று கூறி வீட்டிற்குள் செல்லுமாறு கூறப்பட்டனர். இது குழந்தைகளுக்கு ட்ரீட் என்றாலும் அவர்களுக்கு தெரியாமல் அதில் ஒரு ட்ரிக் இருந்தது. உள்ளே நுழைந்த குழந்தை சொன்னது போல் ஒரு சாக்லெட் தான் எடுக்கிறதா இல்லை அதிகம் எடுக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் மறைந்திருந்து கண்காணித்தனர். குழந்தைகள் ஒரு சாக்லெட் தான் எடுத்தார்களா?

யாரும் அருகிலில்லை என்ற தைரியத்தில் 33% குழந்தைகள் ஒன்றுக்கு மேல் சாக்லெட் எடுத்தனர். என்ன தான் ஹாலோவீன், குழந்தை, சாக்லெட் என்றாலும் திருட்டு திருட்டு தானே. இதை தடுக்க முடியுமா என்று பார்க்க அடுத்த கட்டமாக சாக்லெட் வைக்கப்பட்டிருந்த டேபிளுக்கு எதிரே முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தனர். சாக்லெட் எடுக்க வரும் குழந்தை அக்கண்ணாடியில் தன்னை பார்த்துவிட்டு தான் சாக்லெட் எடுக்க முடியும் என்னும்படியாக கண்ணாடியை வைத்தனர் ஆய்வாளர்கள். முன்னாடி இருந்த கண்ணாடி பின்னாடி எதாவது செய்ததா?

பேஷாக. இம்முறை ஒன்றுக்கு மேல் சாக்லெட் எடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8% ஆக குறைந்தது. இது ஏதோ ஒரு குழந்தை, அல்லது இரண்டு குழந்தைகள் செய்வதைப் பார்த்து பெறப்பட்ட முடிவு அல்ல. 1,300 குழந்தைகளை கண்காணித்து பெறப்பட்ட முடிவு என்பதை நினைவில் கொள்க. கவனம் நம் மீது விழும் போது நாம் சமூக பார்வைக்கு ஏற்ப சரியாய் நடந்துகொள்ள முயல்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தங்கள் ஆய்வு முடிவுகளை `Journal of Personality and Social Psychology’யில் ‘Self-awareness and transgression in children’ என்ற ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டனர்.

கண்ணாடியை வைத்து குழந்தைகளை வேண்டுமானால் பயமுறுத்த முடியும், பெரியவர்களிடம் இந்த பாச்சா பலிக்காது என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நடத்தப்பட்ட சில ஆய்வுகளை விளக்குகிறேன்.

அப்படி ஒரு ஆய்வு கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆய்விற்காக ஒரு அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கையில் ஜெல் போன்ற ஒன்றை தடவி அவர்கள் இதயத் துடிப்பை கணக்கிடும் ஆய்வு என்று அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அதுவல்ல ஆய்வு. அவர்கள் வெளியேறும் போது தான் ஆய்வு செய்யப்படப்போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு தெரியாது. கையில் ஜெல் தடவி இதய துடிப்பு கணக்கிடப்படுவது போன்ற பாவ்லா முடிந்தவுடன் அவர்கள் கையை துடைத்துக்கொள்ள பேப்பர் டிஷ்யூ தரப்பட்டு அவர்கள் கிளம்பிச் செல்லலாம் என்று கூறப்பட்டது. கையை துடைத்தவாரே கதவை திறந்து வெளியே சென்றவர்களில் சுமார் 46% பேர் டிஷ்யூவை கதவோரம் தரையில் போட்டுச் சென்றனர்.

ஆய்வின் அடுத்த கட்டமாக கதவுக்கு முன் ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது. வெளியே செல்பவர்கள் தங்கள் உருவத்தை பார்துவிட்டுத்தான் செல்லமுடியும் என்பது போன்ற ஏற்பாடு. இப்பொழுது கையை துடைத்துக்கொண்டே டிஷ்யூவை கதவோரம் அப்படியே தரையில் போட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 24% மட்டுமே. கண்ணாடியில் தங்களை பார்க்காத போது தரையை குப்பை ஆக்கியவர்கள் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவர் என்றால் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துவிட்டு தரையை குப்பையாக்கியவர்கள் நான்கில் ஒருவர் மட்டுமே.

நம்மை நாமே கண்ணாடியில் பார்க்கும்போது நாம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அது போல் இருக்கவேண்டும் என்ற பிரக்ஞை அதிகரிக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். கண்ணாடி முன்னால் நிற்கும்போது நாம் ஏன் நகம் கடிப்பதில்லை, அசிங்கமாக சொரிந்து கொள்வதில்லை என்பது புரிகிறதா!

அல்ப கண்ணாடி கொண்டு பல விதங்களில் மக்களை திருத்த முடியும், திருட்டுகள் நடக்காமல் கூட தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஒரு கம்பெனி கோடவுனில் சாமான் தொலைந்து கொண்டே இருந்தது. வெளியிலிருந்து திருடன் வரவில்லை, கம்பெனியில் வேலை செய்பவர்கள் தான் திருடுகிறார்கள் என்பதை உணர்ந்தார் மானேஜர். வீடியோ கேமிராக்கள் நிறுவலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள். ஒன்று, அவருடைய கம்பெனி ஏகத்திற்கும் பெரிசு. எல்லா இடங்களிலும் கேமிரா பொருத்த அதிகம் செலவு ஆகும். மேலும் கம்பெனி முழுவதும் கேமிரா பொருத்தினால் நாணயமான ஊழியர்கள் ‘கம்பெனிக்கு மாடாய் உழைக்கும் என்னை திருடனைப் போல் பார்க்கிறார்களே’ என்று வருத்தப்படுவதோடு வேலை செய்யும் ஆர்வம் குறையுமே என்கிற பயம்.

பார்த்தார் மானேஜர். கம்பெனியில் எங்கெல்லாம் திருட்டு அதிகம் நடக்கிறதோ அங்கெல்லாம் முகம் பார்க்கும் கண்ணாடிகளை பொருத்தினார். திருடுபவன் தன் முகத்தை பார்க்காமல் திருட முடியாதபடி கண்ணாடிகளை வைத்தார். இதனால் பெருமளவுக்கு திருட்டு குறைந்தது!

நம்மூர் அலுவலகங்கள் பலவற்றின் படிக்கட்டுகளில் வெற்றிலை துப்பி நாறடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அது போன்ற இடங்களில் எல்லாம் கண்ணாடி வைத்து பார்க்கலாம். தன் முகத்தை பார்த்துக்கொண்டே எவன் துப்புகிறான் என்று. சில தெருக்கள் அல்பசங்கை கழிப்பதற்கென்றே பிரத்யேகமாக கட்டப்பட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு பலர் அவைகளை பாத்ரூமாக பயன்படுத்துகின்றனர். அங்கெல்லாம் கண்ணாடியை வைத்து ‘எங்கே, உன் முகத்தை பார்த்துக்கொண்டே ஸிப்பை கழட்டு பார்க்கலாம்’ என்று சவால் விடலாம்!

கண்ணாடிகளைக் கொண்டு வாடிக்கையாளர் சேவையை கூட்டும் வழிகளையும் ஆராயலாம். எங்கெல்லாம் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதம் அதிகம் செய்யும் சூழ்நிலைகள் இருக்கிறதோ அந்த இடங்களில் கண்ணாடி வைக்கலாம். தங்கள் முகத்தைப் பார்த்துவிட்டு மரியாதை குறைவாக பேசுவர் எண்ணிக்கை குறையும். அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் குறையும். ஆபீஸிற்கு வருபவர்கள் ஒழுங்கு மரியாதையாய் ஷேவ் செய்து, டீக்காக டிப்டாப்பாய் உடையணிந்து வரும் வகையாக ஆபீஸ் எங்கும் கண்ணாடிகளை பொருத்தலாம்.

தவறு செய்பவர்களிடம் ‘அது எப்படி தப்பு செஞ்சுட்டு உன் முகத்தை கண்ணாடியில் பார்க்க முடியுது’ என்று சிலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். தவறு செய்த பின் பார்க்கிறார்களோ என்னவோ தவறு செய்யும்போது தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தினால் அவர்கள் தவறு செய்வதை குறைக்கலாம் என்பது மட்டும் கண்ணாடி போல் நிதர்சனம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
நன்றி - தமிழ் இந்து


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Jan 24, 2018 9:32 am

கண்ணாடி.. முன்னாடி.. பின்னாடி!


கண்ணாடி எதுக்கு போடுறோம்? கண்ணுல என்னமோ கோளாறு இருக்குறனால தான! ஆனா இப்ப எல்லாம் யாரைப் பாத்தாலும் கண்ணாடி போட ஆரம்பிச்சுட்டாங்க. உண்மையிலேயே கண்ணுல பிரச்சினையா இல்ல ஸ்டைலுக்காக போட்டுருக்காங்களானு தெரியல..

முன்ன எல்லாம், டாக்டர் கண்ணாடி போடனும் சொன்னாலும், நம்ம மொகற அழகு குறைஞ்சுரும்னு கண்ணாடி போடாம அரை கண் பார்வையோட சுத்திகிட்டிருப்பாங்க.. ஆனா இப்ப கண்ணாடி போடுறதே ஸ்டைலா மாறும் அவங்க நினைச்சு கூட பாத்துருக்க மாட்டாங்க

கண்ணாடி போட்டுக்கறதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு, “அட, ஏண்டா இந்த கருமத்த போட்டோம்”னு நானே யோசிச்சு இருக்கேன்.

”ஓய்.. கண்ணாடி.. வா முன்னாடி” ”ஹே சோடாபுட்டி”, ”நாலுகண்ணி”ன்னு கண்ணாடி பார்ட்டீஸை கிண்டல் பண்றதுக்கு லிஸ்ட் பெரிசா தான் போய்கிட்டு இருக்கு. இப்படி இருந்தா எப்படி கண்ணாடி போடத் தோணும்?

கண்ணு நல்லா தெரிஞ்சாலும், சும்மாவாச்சும் - கண்ணாடி போட்டா ஜீனியஸ் மாறி இருக்கும்னு வெத்துக்கு கண்ணாடி போடுற கெத்து பார்ட்டிகளும் இருக்காங்க. டாக்டர் எவ்ளோ சொல்லியும் 'நான் எல்லாம் கண்ணாடியே போட மாட்டேன்'னு ஒத்த கண்ணுல நிக்கற.. சாரி.. ஒத்த கால்ல நிக்கிற மாயக் 'கண்'ணன்களும் இருக்காங்க..

எல்லா விஷயத்துலயும் சினிமாவை இழுப்போம்.. இதுல மட்டும் ஏன் விட்டுவைக்கணும்?

தமிழ் சினிமால எப்பவுமே டீச்சர்னா கண்ணாடி போட்டு இருக்கனும் (டீச்சருக்கும் கண்ணாடிக்கும் அப்படி என்ன சம்பந்தத்த பாத்தாங்கனு தெரியல) டாக்டர்னா கண்ணாடி போட்டு இருக்கனும். அதுவும் ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து டாக்டர் வெளிய வந்து கண்ணாடிய கழட்டி “ஐ யம் சாரி” சொல்லுவாரு.. கண்ணாடி இல்லாட்டி அவர் என்ன பண்ணுவார் பாவம்! அதே மாதிரி சினிமால இந்த சயிண்டிஸ்ட், ப்ரொஃபஸர் எல்லாரும் கண்ணாடி போட்டு இருப்பாங்க

ஆனா மக்களே.. கண்ணாடிக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைனு பாவம் அந்த காலத்துல எந்த அறிவாளிக்கும் தெரியல போல.

கண்ணாடிய வெச்சு பெரிய கம்பெனிகாரங்க வியாபாரம் பண்ணலாம்னு முடிவு எடுத்தவுடனே எல்லாம் மாறிப் போச்சு.. கண்ணாடி போடறதை ஃபேஷன், ட்ரெண்ட் ஆக்கி புதுப்புது மாடல்ல கண்ணாடி வந்துடுச்சு.

நம்மாளுங்களுக்கு நாம சொன்னா புரியாது.. விளம்பரத்துல வெளிநாட்டுக்காரியோ, வடநாட்டுக்காரரோ சொல்லிட்டாங்கன்னா போதும்... வாங்கி போட்டுகிட்டு தான் மறுவேலை!

சும்மா போற நாயை, சால்னா போட்டு கூப்டா மாதிரி, பக்கம்பக்கமா விளம்பரத்தை போட்டு இழுத்ததுல, பல பேரோட பர்ஸ் பழுத்துடுச்சு!

கல்யாண சமையல் மெனு மாதிரி, ஏகப்பட்ட வெரைட்டி.. ஆட்டோ கூல், செமி கூல், ஃப்ரேம்லெஸ்னு விதவிதமா வித்தியாசமா பெயரை வெச்சு கண்ணாடிய விற்க ஆரம்பிச்சுட்டாங்க, 'காதல் கொண்டேன்' 'விஐபி' படத்துல தனுஷ் போட்ட மாதிரி எல்லாம் கூட கண்ணாடி வாங்கி போடறாங்க.

சினிமாவை பாத்து முன்ன எல்லாம் புடவை, வளையல் தானே வாங்கினாங்க.. இப்போ எல்லாம் கண்ணாடியும் அந்த லிஸ்ட்ல சேர்ந்திடுச்சு.

கண்ணாடி போட கூச்சப்படுறவங்களுக்காக வந்தது காம்பேக்ட் லென்ஸ். கண்ணாடி போட சங்கோஜப்படறவங்க இப்போ லென்ஸ் தான் யூஸ் பண்றாங்க. அந்த லென்ஸ்லயும் சிவப்பு, நீலம்,பச்சைனு பஞ்சவர்ணமும் வர ஆரம்பிச்சுடுச்சு. பத்தாக்குறைக்கு நிறைய டிசைன்ஸ் வேற.

ஆனா, ரொம்ப வருஷமா கண்ணாடி போடுறவங்களால லென்ஸ்க்கு மாற முடியல. ஏன்னா, அவங்களைப் பொறுத்தவரை கண்ணு,மூக்கு, காது மாதிரி கண்ணாடியும் அவங்க முகத்துல ஒரு உறுப்பு!

கண்ணாடி போடறது உசத்தியும் இல்லை தாழ்த்தியும் இல்லை. அது கண்களை பாதுக்காக்க பயன்படுத்துற ஒரு கவசம், ஒரு கருவி. அவ்ளோ தான். தேவைப்படுறவங்க தேவைப்படுற நேரத்தில் பயன்படுத்திக்கட்டும்.

கண்ணாடி போட்டா லுக் வருதோ இல்லையோ தெரியாது. கண்ணாடி போடாட்டி எனக்கு தலைவலி வருது. ஆகவே கண்ணாடி போடாத சிறியோர்களே, நண்பர்களே.. நீங்க கண்ணாடி போடாதது எப்படி உங்க சௌகர்யமோ, அதே மாதிரி கண்ணாடி போடறது என்னிஷ்டம். கண்ணாடி போட்டவங்களை கிண்டல் பண்ணாதீங்க.

ஏன்னா, நீங்க முன்னாடி கண்ணாடி போடாட்டியும், பின்னாடி கண்ணாடி போட வேண்டி வரலாம்!

தேன்மொழி .எஸ்.பி

நன்றி - தமிழ் இந்து




எல்லாம் சரி உறவுகளே
கண்ணாடி போட வேண்டிய கட்டாயம் வந்தால்
சாதா கண்ணாடிகளை தேர்ந்தெடுக்கவும்

ரிப்ளெக்டிவ்
வாட்டர் ப்ரூஃப்
புராக்ரேசிவ்


இது எல்லாம் ஆப்டிகல் கடை காரனை பணக்காரனாக மாற்றும் விலையில் உள்ளவை ...

கண்கள் பழக நாளாகும்
சைட் பிரச்சினைகள் ஏராளம்
விவரம் வேண்டுவோர்  தனி மடல் இடவும்

என்றும் அன்புடன்
கே எல் என்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 24, 2018 2:53 pm

கண்ணாடியின் முன் நின்று அரூபியோ ரூபியோ
தன் முகத்தை பார்த்து  ரசிக்கமுடியாமல் இருக்கமுடியாது.

ஒரு பெரிய அலுவலகத்தில்,வேலை செய்பவர்கள் மேனேஜ்மேன்டிடம்
புகார் ஒன்றை கூறினார்கள். அதாவது lift boy உடனுக்குடன் வருவதில்லை.
ஒவ்வொரு தளத்தில் அவசியம் இருக்கிறதோ இல்லையோ நின்று மெதுவாக
கதவை சாற்றி தாமதமாக வருகிறான் என்பதே.( அந்த காலத்து கதை .தற்காலம்
போல் self operating இல்லை). மேலாளரும் இவர்கள்  சொல்வதில் ஆதாரம் இருக்கின்றதா
என்று பார்த்தார். lift boy நேர்மையாகவே வேலை செய்வதையும் அறிந்தார்.
இதற்கொரு வழி கண்டறிந்து ,வேலை செய்பவர்கள் குறையையும் நீக்கினார்.
ஒவ்வொரு தளத்திலும் lift இற்கு எதிர் புறம் ஆளுயர கண்ணாடியை வைத்தார்.

அவ்வளவுதான் . சக்கஸ்.

(அந்த காலத்து கதை --lift இன் உள்ளும் புறமும் க்ரில் கேட்)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 24, 2018 3:10 pm

அருமையான தொகுப்பு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக