புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 
11 Posts - 50%
heezulia
 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 
53 Posts - 60%
heezulia
 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்பாவில் நாட்டு நடப்பு "


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 9:51 pm

ரமணியன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க , " குறட்பாவில் நாட்டு நடப்பு " என்ற இந்தத் திரியைத் தொடங்குகிறேன் . நாட்டிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறட்பாவில் வடிப்பதே இந்தத் திரியின் நோக்கமாகும் . அதே சமயத்தில் குறட்பாவை எவ்வாறு எழுதுவது என்றும் தெரிந்து கொள்ளலாம் .

குறட்பா , வெண்பாவின் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த ஈரடிச் செய்யுளாகும் . இதைக் கற்றுக்கொண்டால் வெண்பா எழுதுவது மிகவும் எளிது . அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் அவா ! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம் !

தற்காலத்தில் , கவிதைகள் என்ற பெயரில் ,வருவன எல்லாம் கவிதைகள் அல்ல ! அவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே தவிர வேறல்ல ! சினிமாக் கவிதைகள் போன்று அவையெல்லாம் , காலப்போக்கில் மறைந்துவிடும் .மரபுக் கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் ; நிலையான இன்பத்தைத் தரும் .

சரி , இப்போது ஒரு குறட்பாவைப் பார்ப்போமா !

நாட்டிலுள்ள வெற்றிடத்தை நானே நிரப்பிடவே
ஓட்டளிப்பீர் என்றும் எனக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 11, 2018 6:35 am

பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .

திருக்குறளின் இலக்கணம் கற்க

திரு . பழ.மு.ரா . அவர்களின் " திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம் " என்ற திரியையும் , என்னுடைய " புள்ளி இல்லாத வெண்பா " என்ற திரியையும் நோக்கவும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 7:30 am

நடு என்று நவிலும் இடவலது
நமக்கிடர் என்றே நவில்.

இதனை தயவு கூர்ந்து நல்ல இலக்கண வடிவம் கொடுங்கள் ஐயா.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 7:34 am

நடு என்று நவிலும் இடவலதும்
நமக்கிடர் என்றே நவில்.


என்றெழுதியிருக்கவேண்டும் என தோன்றுகிறது பொருள் கொண்டு மட்டும். இலக்கணம் எனக்கு இன்னும் தெரியவில்லை.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 9:00 am

நடுவென்று நாட்டும் இடவலதும் ஒன்றாய்
நமக்கிடர் என்றே நவில்

விக்கி துணையுடன் எந்திருத்தம் இது. ஐயா தயவு செய்து சரி பார்க்கவும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 11, 2018 9:03 am

krishnanramadurai wrote:நடு என்று நவிலும் இடவலது
நமக்கிடர் என்றே நவில்.

இதனை தயவு கூர்ந்து நல்ல இலக்கண வடிவம் கொடுங்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1261942

முதலில் தாங்கள் கூறவந்த பொருள் என்னவென்று சொல்லவும் . பிறகு இலக்கணவடிவம் கொடுக்கிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 9:44 am

வலதுசாரி, இடதுசாரி அரசியல் இரண்டும் மக்களுக்கான நடுநிலை வாதிகள் என்று சொன்னாலும் அவை நம் வளர்ச்சிக்கு இடைஊராக உள்ளன.

நடுவென்று நாட்டும் இடவலதும் ஒன்றாய்
நமக்கிடர் என்றே நவில்

விக்கி துணையுடன் என் திருத்தம் இது. ஐயா தயவு செய்து சரி பார்க்கவும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 11, 2018 9:55 am

இடதும் வலதும் இடும்பை தருமே
நடுநிலை யல்ல அது .

முதல் சீரும் , மூன்றாம் சீரும் " இ " என்னும் எழுத்தில் தொடங்கி மோனை இன்பம் தருகிறது .
முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ( ட , டு ) ஒன்றி எதுகையின்பம் தருகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 10:06 am

மிக்க நன்றி ஐயா.
தங்கள் வெண்பா அளவிற்கு சற்றேனும் அருகில் வர எனது கிறுக்கலை திருத்தவும், விமர்சிக்கவும் வேண்டுகிறேன்.

இதை நான் பயன்படுத்தலாமா? நன்றி விக்கிபீடியா.
வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்
யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:

சீர்களுக்கான நெறிகள்
வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்
வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்பா செப்பலோசை பெற்று வரும்.

வெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:

<வெண்பா> → <அடி><ஈற்றடி>
<அடி> → <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி> → <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்> → <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்> → <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை> → <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> → <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
<தேமா> → <நேர்> <நேர்>
<புளிமா> → <நிரை> <நேர்>
<கருவிளம்> → <நிரை> <நிரை>
<கூவிளம்> → <நேர்> <நிரை>
<தேமாங்காய்> → <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> → <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> → <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> → <கூவிளம்> <நேர்>
<நாள்> → <நேர்>
<மலர்> → <நிரை>
<காசு> → <நேர்> <நேர்>
<பிறப்பு> → <நிரை> <நேர்>
<நேர்> → <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> → <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்> → {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> → {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று> → {மெய்யெழுத்து}
தளைகளுக்கான இலக்கண நெறிகள்:

இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)
<வெண்பா>   → |
       → <தேமா>
       → <கூவிளம்>
       → <புளிமா>
       → <கருவிளம்>
       → <நாள்> | <காசு>
       → <மலர்> | <பிறப்பு>

வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
       → <தேமாங்காய்>
       → <கூவிளங்காய்>
       → <புளிமாங்காய்>
       → <கருவிளங்காய்>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 11, 2018 10:46 am

வெண்பாவுக்கான இலக்கணம் தந்தமைக்கு நன்றி !

தங்களின் கிறுக்கலை ஓரளவுக்குச் செம்மை செய்துள்ளேன் .

நடுவென்று நாட்டும் இடவல தென்றும்
இடும்பை தருமே இயம்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக