புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
42 Posts - 63%
heezulia
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்சிறை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jan 09, 2018 8:24 pm



கற்சிறை 4qfKrLxcTNGGkgncXlP3+dam
ஏதோ அணைக்கட்டுகள் கட்டும் திறன் அந்நியர் மூலமே
நமக்குத் தெரியவந்தது என பெரும்பாலோர் நினைக்கிறார்கள் ஆனால் பண்டைத்தமிழர் நீர்மேலாண்மையில் எத்தனை வல்லுனராக இருந்தனர் எனும் செய்திகள் வியப்பை அளிக்கிறது .
கரிகாலன் கட்டிய கல்லணை இன்னமும் தமிழர் நிபுணத்துவத்தை நினைவுபடுத்தி வந்தாலும் , நமது இலக்கியங்களிலும் இத்தகைய செய்திகள்
நிரம்பிக் கிடக்கிறது .

வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்
-தொல்காப்பியம், பொருள்அதிகாரம் :65.

விசையோடு விரைந்து வரும் நீரை ஒரு கற்சிறை(அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள்.
சுமார் கி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு போன்றது ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, நீரைக் கட்டுப்படுத்தி பாசனத்துக்குப் பயன்படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தய தொல்காப்பியம் இந்த செய்தியைக் குறிப்பிட்டாலும் , அவர் காலத்திற்கு முன்பே
இத்தகைய கற்சிறை எனும் அணை கட்டும் வழக்கம் இருந்திருக்கவேண்டும் .பொதுவாகவே மக்கள் மத்தியில்
மிகத் தெரிந்த ஒன்றையே உதாரணமாக புலவர் காட்டி , சொல்ல வந்த பொருளை விளக்குவர் .எனவே கற்சிறை
எனும் அணைக்கட்டுகள் மக்கள் மத்தியில் மிகுதியாக புழங்கிய சொல்லாகவே இருந்திருத்தல் வேண்டும் .

தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு.
, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கலுங்கு கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே, பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது.
ஆனால் தற்போதைய நிலை அந்நியர் நகையாடும் நிலையிலேயே உள்ளது .

சங்ககாலப் புலவர்கள் அன்றைய ஆட்சியாளர்களிடம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைஅதிகம் ஏற்படுத்தச் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்
நீர்ப்பாசனத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் எல்லா வெற்றிக்கும் மூலகாரணம் என்பதை எடுத்துரைத்தார்கள். ஆட்சியாளர்களும் அதனை ஏற்று செயல்படுத்தினார்கள்.
கி.மு 2ம் நுற்றாண்டில் வாழ்ந்த குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம்,

....யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே: (புறம்-18) என்கிறார்.

உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள்.ஆவார்கள் உடல் நிலைபெற உணவே காரணம்.
உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது.
ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள்.இதுவே இது கூறும் பொருள் எத்தகைய தெளிவாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள் !
இத்தகைய பலப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன
தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர்.
ஆயினும் இன்றைய தமிழகத்தின் நிலை எண்ணும் போதே
வேதனையே மிஞ்சுகிறது .
எங்கேப் போயின அத்துணை வல்லமை ?
எப்போது இழந்தோம் இத்தகைய அறிவினை ?
சிந்திக்கும் தருணம் இது !
அண்ணாமலை சுகுமாரன்
9/1/18

படம் இணையத்தில் இருந்துப்பெறப்பட்டது


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 09, 2018 9:14 pm

கற்சிறை 3838410834 கற்சிறை 103459460 கற்சிறை 1571444738 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 10, 2018 9:54 am

தமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு மண்வளம் இல்லை என்று முதல்வரே அறிக்கை கொடுத்துவிட்டார் நாம் என்ன செய்ய
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக