புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_m10ஒரு வீடும், சில மனிதர்களும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீடும், சில மனிதர்களும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 4:06 pm

ஒரு வீடும், சில மனிதர்களும்!



''பால்காரரே... இன்னியிலிருந்து ஒரு மாசத்துக்கு, ரெண்டு லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க...'' என்ற கோகிலாவின் முகத்தில், அப்படியொரு சந்தோஷம்!

''என்ன கோகிலாம்மா... பையனும், பொண்ணும் குடும்பத்தோட வெளிநாட்டிலிருந்து வந்துருக்காங்க போல...'' என்றார், பாலை ஊற்றியபடி, பால்காரர். 


''மூணு வருஷம் கழிச்சு, அண்ணனும், தங்கச்சியும் ஒண்ணா லீவு போட்டு வந்திருக்காங்க... உங்களுக்குத் தான் தெரியுமே... கல்யாணமானதும், என் மக, மாப்பிள்ளையோட ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டாங்கிறது... என் மகன் சிவசு இருக்கிறதோ அமெரிக்காவுல... இந்த வருஷம் தான், ரெண்டு பேரும் சொல்லி வெச்சு, லீவு வாங்கி, அம்மாவ பாக்க வந்திருக்காங்க...''


''அவங்களப் பத்திதான் எனக்கு நல்லா தெரியுமே... நான் பால் ஊத்தி வளர்ந்த பசங்களாச்சே...உங்க பேரப் புள்ளைங்கள பத்தி சொல்லுங்க...''
பேரக் குழந்தை என்று சொன்னவுடன், கோகிலாம்மா முகத்தில், தனி சோபை வந்து உட்கார்ந்து கொண்டது.


''அதை ஏன் கேக்கறீங்க பால்காரரே... அப்படியே உங்க வாத்தியாரய்யாவ உரிச்சு வெச்சுருக்கான், சிவசுவோட மகன். அவன் பொண்ணு ரொம்ப அமைதி; நம்ம மீராவோட மகன் இருக்கானே ரெட்டை வாலு... அதுகளுக்குள்ள இங்கிலீஸ்ல தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசிக்குது; அப்பப்ப, தமிழும் திக்கித் திக்கி பேசுதுக...'' என்றாள்.


''ஆமாம்... உங்க அமெரிக்க மருமகப் பொண்ணு எப்படி இருக்காங்க...''


''அவளோட பூர்வீகம் தமிழ்நாடு தானே... அமெரிக்காவுல பிறந்து வளர்ந்த ஐயர் வீட்டு பொண்ணு... நல்ல பாந்தம்... 'கூட வேலை செய்யுது; பிடிச்சுருக்கு'ன்னு சொன்னான்; அவன் சந்தோஷம் தானே முக்கியம்... யாரை கல்யாணம் செஞ்சா என்ன... கடைசி வரை நிம்மதியா இருந்தா சரின்னு சம்மதம் சொல்லிட்டேன்; அதுகளும், ரெண்டு புள்ளைகளை பெத்து சந்தோஷமா இருக்குதுக...'' என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டிற்குள் இருந்து மகள் மீரா கூப்பிடுவது கேட்டது. ''சரிங்க பால்காரரே... பிள்ளைங்க எழுதுருச்சுட்டாங்க... போய் காபி போடணும்...'' என்றபடி வீட்டிற்குள் சென்றாள். 


''என்ன மீரா... அதுக்குள்ள எழுந்திருச்சுட்டே...'' என்றவளிடம், ''அம்மா, இங்க வந்து என் புள்ளையோட கை, காலப் பாரேன்... அம்மை போட்ட மாதிரி தடிச்சிருக்கு...'' என்றாள்.


''என்னடி சொல்றே...'' என்று பேரனின் அருகில் சென்று உற்றுப் பார்த்தவள், ''நேத்து கூட நல்லாத்தானே இருந்தான்... உடம்பெல்லாம் முத்து முத்தா இருக்கே... போய் சிவசுவ கூப்பிட்டு வா...'' என்றாள்.


''அண்ணா... துாங்கினது போதும், எழுந்து கொஞ்சம் வாயேன்...'' என்று அறைவாசலில் நின்று சத்தமாக குரல் கொடுத்தாள், மீரா.


துாக்கம் கலைந்து எழுந்து வந்த சிவசுவின் முகத்தில், மருத்துவருக்கே உரிய தோரணையும், கம்பீரமும் இருந்தது.


''என்ன ஆச்சு மீரா...'' என்று கேட்டவனிடம், கோகிலாம்மாள், ''சிவசு... இங்க பாரு புள்ளைய... கை, காலெல்லாம் கொப்புளம்... என்னாச்சுன்னு தெரியல...'' பதறினாள். 


மருமகனை உற்றுப் பார்த்தவன், ''இது, கொசுக்கடிம்மா... அவனுக்கு கொசுக்கடி புதுசுங்கறதால அலர்ஜியாயிருக்கு... மீராவ பத்தி தெரியாதா... எறும்பு கடிச்சாலே தேள் கொட்டின மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் செய்வா... நீதான், எல்லாத்துக்கும் மஞ்சள அரைச்சுப் பூசுவியே... அதுமாதிரி இதுக்கும் பூசு... சரியாப் போயிடும்...'' என்றவன், தன் தங்கையிடம், ''ஏண்டி வந்தவுடன் ஆரம்பிச்சிட்டியா... உங்கூட, எப்படித்தான், 40 நாள் இருக்கப் போறேனோ தெரியலயே...'' என்றான்.


''போடா, உனக்கென்ன... புள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா அந்த மனுஷன் எம்மேலதான் பாய்வாரு...''


அப்போது, தன், 'பாய் கட்' வெட்டப்பட்ட தலைமுடியை சிலுப்பியபடி, சிணுங்கலுடன் வந்தாள், சிவசுவின்
எட்டு வயது மகள். 


''என்னடி செல்லம்... என்ன ஆச்சு,'' என்று கேட்டாள், மீரா.
''ஆன்ட்டி, எனக்கு, 'டாய்லெட்' போகணும்.''
''அதுக்கென்ன போ...''


''எனக்கு இங்க இருக்கிற, 'டாய்லெட்' பழக்கம் இல்ல; அதுக்குள்ள விழுந்துருவேனோன்னு பயமா இருக்கு,'' என்றாள், சிறுமி.
இப்படி ஒரு பிரச்னையை யாரும் எதிர்பார்க்கவில்லை.


'இதை நான் யோசிக்கவே இல்லயே... பாவம் குழந்தைகள், அதுங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லியே... பாட்டிய பாக்க வந்து கஷ்டப்படுதுக...' கோகிலாம்மாளின் முகம் வாடியது.
''அதனால தான் அப்பவே சொன்னேன், வீட்ட இடிச்சுட்டு, மாத்தி கட்டலாம்ன்னு... நீதான் அப்பா கட்டின வீடு... ஒரு செங்கலக் கூட தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அடம் புடிக்கிற... காலத்தோட மாறப் பழகிக்கணும்மா...'' என்றான், சிவசு.


''இத்தன வருஷம் சொல்லியும் அம்மா கேக்கல... இப்ப சொன்னா மட்டும் கேக்கப் போறாங்களா... இப்ப, இவளோட பிரச்னைக்கு வழியச் சொல்லுண்ணா...'' 


''அம்மா... இவளுக்கு இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணையும், ஒரு வாழப்பழமும் குடு... அப்புறம் எங்க போகச் சொன்னாலும் போவா...'' என்றான், சிவசு.


''சிவசு... மேஸ்திரியக் கூப்பிட்டு பாத்ரூம மாத்தி, உங்க வசதிக்கு கட்டிக்கலாம்; நான் போய் அவர் கிட்ட சொல்லிட்டு வரேன்,'' என்றாள், கோகிலாம்மாள்.


''இரும்மா என்ன அவசரம்... பசங்க எல்லாரும் எந்திரிக்கட்டும்... என்ன டிபன் பண்ணியிருக்க...'' என்று கேட்டான்.


''இட்லிக்கு புதினா சட்னி கேட்டா மீரா. உனக்கு அடை பிடிக்குமே... வெல்லமும், வெண்ணெயும் கூட இருக்கு,'' என்றவள், அப்போது தான் எழுந்து வந்த மருமகளை நோக்கி, ''உனக்கு என்னம்மா வேணும்...'' என்று கேட்டாள்.


''எனக்கு எதுவா இருந்தாலும் ஓ.கே., ஆன்ட்டி. நான் பசிக்கு சாப்பிடறவ; ருசிக்கு இல்ல. உங்க புள்ளைக்குதான் நாக்கு நீளம். நான் எது செஞ்சாலும் எங்கம்மா சமையல் மாதிரி இல்லம்பார்; ஆனாலும் இப்படி வளர்த்திருக்க கூடாது; இப்ப நான்னா சிரமப்படறேன்,'' என்றாள்.


இதற்குள் பொடிசுகள் எல்லாம் எழுந்து விட, அதுகளின் அமளி துமளி ஆரம்பித்து விட்டது. தினமும் நெட்டில், 'சாட்' செய்தாலும், நேரில் பார்த்து பேசுவது போல் ஆகுமா!
கொண்டு வந்திருந்த பொம்மைகள், புத்தகங்களை எல்லாம் இறைத்து வைத்து, அததுகள் கதைகளை நெல்லிக்காய் மூட்டையாய், அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். 


ஒரு வழியாக, டிபன் முடிய, ''அம்மா, உனக்கும் வயசாயிடுச்சு... ஒண்ணு எங்க கூட அமெரிக்கா வந்திடு; இல்ல, மீரா கூட ஆஸ்திரேலியா போ... இங்க, உன்னை தனியா விட்டுட்டு போக எங்களுக்கு மனசே வரல. அப்படி என்னதான் இருக்கு இந்த வீட்டில. 



இத விட்டு வரமாட்டேங்கிறே... உதிர்ந்து போன காரையும், கல்லுமா, பழைய காலத்து கட்டு வீடு. இடிச்சுட்டு கொஞ்சம் வசதியாவாவது கட்டித் தர்றேன்னு சொன்னா, அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கிற...'' என்றான், சிவசு. 

''இங்க பாரும்மா... கதவு நெலயெல்லாம் உளுக்க ஆரம்பிச்சிட்டுது...'' என்றாள், மீரா.
கோகிலாம்மாள் மெல்ல எழுந்து கதவின் அருகே போய் நிலைப்படியை தடவினாள்.
''இந்த நெல வைக்கும்போது, மீரா மூணு வயசு குழந்த; எங்களுக்கு தெரியாம, பாத்ரூம் கழுவ வெச்சிருந்த பினாயில் பாட்டில எடுத்து, தண்ணி குடிக்கிற மாதிரி குடிச்சுட்டா. 



புள்ள செத்துட்டான்னே நினைச்சோம். என் மாமியாரு சிவன் கோவில்ல, 'எம் பேத்தி பிழைச்ச சேதி வந்தாத்தான் வீட்டுக்கு போவேன்'னு, மூணு நாளு பழியாக கிடந்தாங்க. அவங்க வேண்டுதல்ல தான் மீரா பிழைச்சது...'' கோகிலாம்மாவின் கண்கள், பழைய கால நினைவுகளில் ஒளிர ஆரம்பித்தது.

''ரியலி பாட்டி... '' என்று கேட்டாள், சிவசுவின் மகள். 



தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 4:08 pm

''ஆமாண்டி செல்லம்... உன் அப்பன் மாத்திரம் சாதாரணப் பட்டவன் இல்ல; இந்த வீடு கட்ட பூஜை செஞ்சப்ப, தேங்கா உடைச்சோம். அப்ப, 'நான் தான் தேங்காய உடைப்பேன்'னு ஒரே அழுகை. 


தேங்கா சரியா உடையணுமே... அப்புறம் ஒரு வழியா மேஸ்திரியும், அவனும் சேர்ந்து தேங்கா உடைச்சாங்க. தேங்காவுல பூ விழுந்திருக்க, உங்க தாத்தா முகத்தில அவ்வளவு சந்தோஷம்... 'எம் பிள்ள ராசிக்காரன்'னு தலையில துாக்கி வெச்சு ஆடினார். 


அப்பவும் விட்டானா... 'தேங்காத் தண்ணி தனக்குத்தான் வேணும்; மண்ணுல தெளிக்கக் கூடாது'ன்னு புரண்டு புரண்டு அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுதது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு...'' என்றாள்.

''டாடி நீங்களா இப்படியெல்லாம் செய்தீங்க... வெரி இன்ட்ரஸ்டிங்; பாட்டி... வேறென்ன எங்கப்பாவ பத்தின கதை இருக்கு; சொல்லுங்க...'' அதீத ஆர்வத்துடன் கேட்டாள், சிவசுவின் மகள். 


''பின்புறம் தோட்டத்தில் தெரியுதே ரெண்டு தென்னை மரம்... அது ஒண்ணு, சிவசு வெச்சது; இன்னொன்னு மீரா வெச்சது. இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு தண்ணி ஊத்துவாங்க. சிவசு கீழே விழுந்த தன்னோட பல் எல்லாத்தையும் அந்த மரத்துக்கு கீழ தான் புதைச்சு வெச்சிருக்கான்,'' என்றாள்.


''அய்யே... ஷேம் - ஷேம்... பல் விழுந்தா அத, டூத் பேரி கிட்டத்தான் குடுக்கணும்,'' என்றான், மீராவின் மகன். 


''நான் அந்த இடத்த பாக்கப் போறேன்... வாங்க... அந்த மரத்துக்கு கீழே தோண்டி, பல்ல பூரா எடுக்கலாம்...'' என்று சிவசுவின் மகள் கூற, அவளைத் தொடர்ந்து, வீட்டிற்கு பின்புறம் இருந்த தோட்டத்திற்கு ஓடினர், வாண்டுகள்.


பெரியவர்களும் மெதுவாக தோட்டத்திற்கு வர, ''அம்மா, இதுதான் உங்க தென்ன மரமா... லவ்லி...'' என்றான், மீராவின் மகன். உடனே, கோகிலாம்மாள், ''உங்க அம்மாவுக்கு தென்ன மரத்தை விட, அதோ, அந்த மா மரம் தான் ரொம்ப பிடிக்கும். 



பாவாடையை வழிச்சு கட்டிட்டு ஏறுவா பாரு... பசங்க தோத்தாங்க... ஒருநாள் அப்படித்தான் மாங்கா பறிக்க மரமேறி, மரத்து மேல இருந்த பச்சோந்திய பார்த்து பயந்து, கீழே விழுந்தா. மோவாய் கட்டையில நாலு தையல் போட்டோம்; அதோட, மரம் ஏறுறதை நிறுத்திட்டா...'' என்றாள்.

அழகாய் சிரித்தாள், மீரா. ''இந்த வேப்ப மரத்துக்கு கீழ தான் சைக்கிள நிறுத்துவான், சிவசு. தினமும் ஏதாவது ஒரு காக்கா, சைக்கிள் சீட்டு மேல, கழிஞ்சு வைக்கும். காக்காவை திட்டிட்டுதான் சைக்கிள் எடுப்பான். காக்காக்கு சோறு வைக்காதேன்னு கலாட்டா பண்ணுவான்...'' என்ற போது, சிவசு முகம் மலர்ந்தது. 


''இந்த இடத்துல தான் மீராவும், எதிர்த்த வீட்டுல இருந்த அவ தோழியும் எப்பப் பாத்தாலும், பாண்டி விளையாடுவாங்க. மீரா ஓரக்கண்ணால் பாத்துட்டே, 'ரைட்டா... ராங்கா'ன்னு அழுகுணி ஆட்டம் ஆடுவா...'' என்றாள், கோகிலாம்மாள். 


''அம்மா அழுகுணியா... ஐய்யே ஷேம் ஆப் யூ மாம்...'' என்றான், மீராவின் மகன்.
''இது என்ன பாட்டி... இவ்வளவு பெரிய கன்டெய்னர்...'' என்று கேட்டான், சிவசுவின் மகன். 
''இதுதான் தண்ணி தொட்டி; இதிலதான் நெறைய தண்ணிய புடிச்சு வெப்போம். 



சிவசு குழந்தையா இருந்தப்ப, இதுல டயர் கட்டி நீச்சல் அடிப்பான். டாக்டருக்கு படிக்கும்போது, துாக்கம் வந்தா, நடு ராத்திரி தலையில தண்ணிய ஊத்திட்டு ஈரத் தலையோட படிப்பான். 


'ஏண்டா இப்படி ஈரத் தலையோட உட்காந்து படிக்கிறேன்'னு கேட்டா, 'உள்ளே, டாக்டர் ஆகணும்ன்னு ஒரு தீ இருக்கும்மா... இந்த பச்ச தண்ணி தான் அந்த தீக்கு பெட்ரோல்'ன்னு எனக்கு புரியாத மாதிரி பேசுவான். இந்த புள்ள நல்லாயிருக்கணும்னு எனக்குள்ளே ஓயாம பிரார்த்தனை இருக்கும்...''

சிவசு அந்தக்கால நினைவுகளுக்கு போய் விட்டதை, அவன் மவுனம் காட்டிக் கொடுத்தது.
''ஆன்ட்டி, இது துவைக்கிற கல் தானே... இதுலயா இன்னும் துவைக்கிறீங்க... ஆத்துல மிஷின் இருக்கே...'' என்றாள், சிவசுவின் மனைவி.


''மிஷின்ல தான் போடுறேன்; குனிஞ்சு துவைக்க முடியறது இல்ல. இது, மீராவோட கல்லு; துக்கமோ, சந்தோஷமோ எது வந்தாலும், இந்த கல்லு மேலதான் வந்து உக்காந்துக்குவா. 



லீவு நாட்கள்ல, ஒரு கையில டீ டம்ளரும், மறு கையில புத்தகமும் வச்சுகிட்டு உட்காந்துருவா... அதப் பாத்து சிவசு, 'மீரான்னு உனக்கு சரியா தான் பேரு வெச்சிருக்காங்க; எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமா உக்காந்துட்டு... தம்புராவுக்கு பதிலாத் தான் இந்த டீ கிளாசா'ன்னு அவள கிண்டல் பண்ணுவான்...''

''ஆன்ட்டி... இது என்ன பச்சை கலர்ல பூவு... நல்ல மணமா இருக்கே...'' அருகில் இருந்த செடியில் இருந்து ஒரு பூவை பறித்தபடி கேட்டாள், சிவசுவின் மனைவி. 


''இது, மனோரஞ்சிதம் பூ... சிவசுவுக்கு இந்த வாசம் ரொம்ப பிடிக்கும்; பக்கத்துல இருக்கிறது, ஜாதி மல்லி. அப்ப, மீராவுக்கு நல்ல முடி. நெகு நெகுன்னு நாக பாம்பு மாதிரி... சிக்கெடுத்து பின்னல் போடறதுக்குள்ள கை கடைஞ்சு போயிரும். 



ஜாதி மல்லி அவ பின்னலுக்குன்னே பூத்த மாதிரி இருக்கும். தலை குளிக்கறதுன்னா அவ்வளவுதான்... சீயக்காய் தேய்ச்சு குளிச்சு, காயவெச்சு அப்படியே விரிச்சுப் போட்டுட்டு ஊஞ்சல்ல படுத்து துாங்கிடுவா... எந்திருக்கும்போது தலைவலி வராம என்ன செய்யும்... ஈரத் தலையோட படுக்காதேன்னா கேப்பாளா... சாம்பிராணி போட்டு முடிக்கும் வரை கூட பொறுமையா இருக்க மாட்டா... கண்ணு சொக்கி விழுவா... இப்ப பாரு, அத்தனை முடியையும் கன்னா பின்னான்னு வெட்டி வெச்சுருக்கா... 

''முடிதானே பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொன்னா, சுருக்குன்னு கோபம் வருது. அவ, முடிய வெட்டி எறிஞ்ச மாதிரி என்னால இந்த ஞாபகங்களை வெட்டி எறிய முடிஞ்சா, எப்பவோ இந்த வீட்ட இடிக்க ஒத்துருப்பேன்...'' என்றவள், தன் பேரன், பேத்திகளை நோக்கி, ''வீட்டுக்கு முன் வராந்தா இருக்கே... அதுலதான் உங்க தாத்தா கடைசியா படுத்திருந்தார். ஸ்கூலுக்கு பொறப்படும்போதே, நெஞ்சுல சுருக்குன்னு இருக்கு... இனிமே வாழைக்கா சமைக்காதன்னு சொன்னார். 



போகும்போது மீராவுக்கும், சிவசுவுக்கும் ஏதாவது வேணுமான்னு கேட்டார். திரும்பி வரும்போது, மாலையும், கழுத்துமா தான் வந்தார். சிரிச்ச மாதிரியே உயிர் போயிருந்தது; மாரடைப்பு. இந்த வராண்டால தான் உக்காந்து பொழுதன்னைக்கும் எழுதுவார்; பேப்பர் படிப்பார்... குயில் கத்துச்சுன்னா பதிலுக்கு விசிலடிப்பார்... அதுவும், இவருக்கு பதில் குடுக்கற மாதிரி திரும்பக் கூவும்.''

கோகிலாம்மாளின் கண்களிலிருந்து முத்து போல உருண்டு வந்த கண்ணீர் துளி சிவசு, அவன் மனைவி மற்றும் மீராவின் உள்ளத்தையும் சேர்த்து நனைத்தது. 


''இப்ப, நீங்க எல்லாம் துார தேசத்துல இருக்கீங்க... உங்க ஞாபகங்களோட வாழ்ந்துட்டு இருக்கற நான், இனி, என் பேரப் புள்ளைங்க விட்டுட்டு போன செருப்பும், அழுக்கு துணியும், வீடு பூரா கேட்ட பேச்சு சத்தமும், உடைச்சு போட்ட சாமான்களும், பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும்... பிள்ளைகள் என்னை கேட்ட கேள்விகளும், அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிர்ப்போடு வைச்சுருக்கும்,'' என்றாள். 


சிறிது நேரம், அங்கே, கனத்த அமைதி. வெறும் காற்று வீசும் சத்தமும், குயில் கூவும் சத்தமும் மட்டுமே கேட்டது. 


''பாட்டி... அடுத்த முறை நான் வரும்போது, 'பார்பி கேர்ள்' மாதிரி நிறைய முடி வளத்துட்டு வர்றேன்; எனக்கு தலை பின்னி அந்த வொயிட் கலர் பூவ வெச்சு விடுவீங்களா?'' என்று ஆர்வமாக கேட்டாள், சிவசுவின் மகள். 

த.வேல்முருகன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 12:57 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக