புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
32 Posts - 52%
heezulia
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
32 Posts - 52%
heezulia
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_m10உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 31, 2017 1:18 pm



ஒத்தடம்… இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கியமான, எளிமையான, இயற்கையான ஒரு வைத்திய முறை. இது உடலில் ஏற்படும் அதிக வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம், கடுகுப் பசை ஒத்தடம், மூலிகை இலை ஒத்தடம், உப்பு ஒத்தடம், மணல் ஒத்தடம், கரி ஒத்தடம்… என்று இதில் பல வகைகள் உள்ளன. ஒத்தடம் கொடுப்பது எப்படி? எந்தெந்தப் பொருள்களைப்

பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்? விரிவாக விளக்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மணவாளன்.

ஒத்தடம் கொடுப்பது எப்படி?
ஹாட் வாட்டர் பேக்கில் வெந்நீரை நிரப்பி ஒத்தடம் கொடுக்கலாம். ஹாட் வாட்டர் பேக் இல்லாதபட்சத்தில் ஏதாவது ஒரு துணியின் நுனிப்பகுதியைச் சுடு நீரில் லேசாக நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இல்லையென்றால் வாட்டர் கேனில் வெந்நீரை நிரப்பி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஐஸ் பேக்கில் தேவையான ஐஸ் க்யூப்களைப் போட்டு, ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் பேக் இல்லாதவர்கள், ஐஸ் க்யூப்களைத் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதுதவிர உப்பைச் சூடுபடுத்தி துணியில் வைத்துக்கட்டி, உப்பு ஒத்தடம் கொடுக்கலாம். மணலை வறுத்து, துணியில் கட்டி மணல் ஒத்தடம் கொடுக்கலாம். வாதநாராயணன் இலை, நொச்சி இலை, மஞ்சணத்தி இலை ஆகிய மூலிகைகளைச் சூடுபடுத்தி மூலிகை ஒத்தடம் கொடுக்கலாம்.
எப்போது வெந்நீர் ஒத்தடம்?
நீர்ச் சிகிச்சை முறையில் மிகவும் முக்கியமான ஒன்று வெந்நீர் ஒத்தடம். இந்த ஒத்தடம் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கை, கால்களில் வெந்நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம்பட்ட இடத்துக்கு ஒத்தடம் கொடுக்க நினைத்து, புதிய காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
முதுகிலோ, கழுத்திலோ ஒத்தடம் கொடுக்கும்போது, முதலில் அந்த இடத்தில் ஓர் ஈரத்துணியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மீதுதான் ஹாட்பேக்கை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். நேரடியாகச் சருமத்தின்மீது கொடுக்கக் கூடாது. நேரடியாகக் கொடுத்தால், அந்த இடம் பொசுங்கி (Burn) புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
குறிப்பாக, சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், சூட்டை உணர முடியாதென்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்துமா, இரைப்பு (Wheezing) போன்ற மூச்சு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முதுகுத்தண்டின் மேற்பகுதியில், கழுத்துப் பகுதியில் ஒரு துணியை வைத்து அதன் மேல் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் மூச்சுக்குழல் விரிவடைந்து, சுவாசம் சீராகும்.
கழுத்துவலி, இடுப்புவலி, மூட்டுவலி, தசைவலி, நாள்பட்ட வீக்கம் மற்றும் நாள்பட்ட வலிகளுக்கு (Chronic pain) வெந்நீர் ஒத்தடம் மிகச்சிறந்த நிவாரணி. ஓர் இடத்தில் அடிபட்டால், உடனே சுடு நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது. காயம்பட்ட இடம் ஏற்கெனவே சூடாகவும் கடுமையான வீக்கத்துடனும் (Acute Inflammation) இருக்கும். அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால், சூடு அதிகமாகி ரத்தக்கசிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேறு சில ஒத்தடங்கள்!
மூட்டுவலிக்குக் கடுகை நன்றாக அரைத்து, பசைபோல் ஆக்கிப் பூசி வந்தால் சரியாகும். இதுவும் ஒத்தடத்தில் ஒரு வகையே. மூலிகையை நன்றாக வதக்கித் துணியில் வைத்தும் ஒத்தடம் கொடுக்கலாம். மணல் அதிகநேரம் சூட்டைத் தாக்குப்பிடிக்கும் என்பதால், மணலைச் சூடுபடுத்தியும் ஒத்தடம் கொடுக்கலாம்.
மேற்கண்ட அனைத்து ஒத்தடங்களிலும் முக்கியம் சூடுதான். வெப்பத்தின் காரணமாகத்தான் பல வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், நாம் கவனமாக இருக்கவேண்டிய இடமும் அதுவே. நிவாரணம் பெற இவ்வளவு வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்ற எந்த அளவுகோலும் (Standard temperature) இல்லை. ஆனால், ஒருவரால் எந்த அளவுக்குச் சூட்டைத் தாங்க முடியுமோ அந்த அளவுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். நிவாரணம் பெற அதுவே போதுமானது.
யார் யாருக்கு ஒத்தடம் கொடுக்கலாம்?
5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒத்தடம் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் அறிவுரையுடனே ஒத்தடம் கொடுக்கப்பட வேண்டும்.

நன்மைகள்
* தசைகளைத் தளர்த்தும்.
* ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
* நுண் ரத்த நாளங்களை மேம்படுத்தும்.
* காயம் ஏற்பட்ட இடத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கிடைக்கச்செய்யும். அதனால், காயம் விரைவாக ஆறும்.

ஐஸ் ஒத்தடம் எப்போது?
ஓர் இடத்தில் அடிபட்டால், அடிபட்ட 48 மணி நேரம் வரை ஐஸ் ஒத்தடம் மட்டுமே கொடுக்கலாம். அடிபட்ட இடத்தில் வீக்கம் இருந்தால், இந்த ஒத்தடம் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடும்.
தீராத வலி என்கிற நிலையில் இந்த ஒத்தடம் நல்ல பலன் தரும். உதாரணமாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியின்போது (Acute Pain ) ஐஸ் ஒத்தடம் நிவாரணம் தரும். ஐஸ் இல்லையென்றால், அவசரத்துக்கு வீட்டில் ஃப்ரிட்ஜில் இருக்கும் பால் பாக்கெட்டைக்கூட ஒத்தடத்துக்குப் பயன்படுத்தலாம். இது, மருத்துவரிடம் செல்லும்வரை வலியைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். பல் வலி உள்ளவர்கள், தீராத வலியால் அவதிப்படும்போது, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் அந்த இடம் மரத்துப்போய் வலி தெரியாது. அதிகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவர் களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தால், அது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவும். நேரடியாக ஐஸை வைக்காமல், பஞ்சு அல்லது துணியில் தொட்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் வந்தவர்களுக்கு, மருத்துவரிடம் போவதற்கு முன்னால் ஐஸ் க்யூப்களைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது, மூளையில் கசியும் ரத்தத்தைத் தடுக்கும்.
ஐஸ் ஒத்தடம், ரத்தக்கசிவைத் தடுக்கவும் (Hemostasis), வலியைக் குறைக்கவும் (Analgesic), ஓர் இடத்தை மரத்துப்போகச் செய்யவும் (anesthetic) உதவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக