புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:24 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -307

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று .


தெளிவுரை
நிலத்தில் கையை அறைந்தவன் துன்பப்படுதல் போன்று தன் வலிமையைக்
காட்ட சினத்தைக் கருவியாகக் கொண்டவன் கஷ்டப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சினத்/தைப்------பொரு/ளென்/று-----கொண்/டவன்----கே/டு
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----------கூவிளம்-------------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் - ----------- இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை-------வெண்டளை


நிலத்/தறைந்/தான்-----கை/பிழை/யா------ தற்/று .
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்----நேர்/பு
கருவிளங்காய்------------கூவிளங்காய்--------காசு
வெண்சீர் ----------------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-
மோனை- சினத்தைப் –கேடு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:36 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -308

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று


தெளிவுரை
நெருப்பால் சுடுவது போன்ற துன்பங்களை ஒருவன் செய்தானாயினும்
அவனிடத்தில் சினம் கொள்ளாதிருத்தல் நல்லது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இணர்/எரி--------- தோய்/வன்/ன----- இன்/னா------------ செயி/னும்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்---------தேமா------------------புளிமா
இயற்சீர் -------------வெண்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை-----வெண்டளை


புண/ரின்----------- வெகு/ளா/மை------ நன்/று
நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/பு
புளிமா----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ர்எரி- புரின் , இன்னா- நன்று
மோனை- ணர்எரி -ன்னா




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:44 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -309

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்


தெளிவுரை
ஒருவன் சினத்தை நினைக்காமலே இருப்பானானால் ,
அவனுக்கு நினைத்தவையெல்லாம் கைகூடும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளிய------------ தெல்/லாம்------- உட/னெய்/தும்--------- உள்/ளத்/தால்
நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்
கூவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்------------தேமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -----------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை


உள்/ளான்------- வெகு/ளி------- எனின்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை
தேமா------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ள்ளிய- உள்ளத்தால்- உள்ளான் –எனின்
மோனை- ள்ளிய- ள்ளத்தால்- ள்ளான்- டனெய்தும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 10:45 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -310

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை


தெளிவுரை
சினம் மிக்கவர் , உயிருடையராயினும் செத்தவருக்கு ஒப்பாவர் .
சினத்தை ஒழித்தவர் துறவியவர்க்கு இணையாவர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இறந்/தார்---------- இறந்/தார்------- அனை/யர்--------- சினத்/தைத்
நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமா----------------புளிமா-------------புளிமா----------------புளிமா
இயற்சீர் -------------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை

துறந்/தார்---------- துறந்/தார்------ துணை
நிரை/நேர்----------நிரை/நேர்------நிரை
புளிமா----------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மாமுன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ந்தார் –இந்தார் , அனையர்- சித்தைத் ,துந்தார் –துந்தார்
மோனை- றந்தார் –றந்தார் , துறந்தார் –துறந்தார்- துணை

குறிப்பு
அனைத்து சீர்களும் மா சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 10:53 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்


தெளிவுரை
பிறர்க்குத் துன்பம் செய்து சிறந்த செல்வத்தைப் பெறலாமாயினும் , அவ்வாறு செய்யாமையே மனத்தூய்மை உடையவரின் கொள்கையாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிறப்/புஈ/னும்------- செல்/வம்-------- பெறி/னும்--------பிறர்க்/குஇன்/னா
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமா----------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் --------------இயற்சீர் - ---------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


செய்/யா/மை -------மா/சற்/றார்------ கோள்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்------நாள்
வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கோள்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- சிப்புஈனும்- பிர்க்குஇன்னா
மோனை- செல்வம்- செய்யாமை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:04 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -312

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்


தெளிவுரை
ஒருவன் தன்மீது பகை கொண்டு துன்பம் செய்தவிடத்தும் அவனுக்குத்
துன்பம் செய்யாமை நல்லவரின் கொள்கையாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கறுத்/துஇன்/னா-----செய்/தவக்/------கண்/ணும்------- மறுத்/துஇன்/னா
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - --------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை

செய்/யா/மை ------மா/சற்/றார்------ கோள்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்--------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கோள்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-றுத்துஇன்னா- மறுத்துஇன்னா
மோனை- செய்தவக் - செய்யாமை , றுத்துஇன்னா – மாசற்றார்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:13 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -313

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்


தெளிவுரை
துன்பம் செய்யாதிருந்தபோது தன்மீது பகைகொண்டு தனக்குத் துன்பம் செய்தவர்க்குத் தான் எதிர்த்துன்பம் செய்தால் அது தனக்கே பிழைத்தற்கரிய துன்பத்தைக் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செய்/யா/மல்-------- செற்/றார்க்/கும்----இன்/னா/த-------- செய்/தபின்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்---------தேமாங்காய்---------தேமாங்காய்--------கூவிளம்
வெண்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------வெண்டளை


உய்/யா------- விழு/மம்------- தரும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா-------------புளிமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

௧. காய் முன் நேர் ௨.காய் முன் நேர் ௩.காய் முன் நேர் ௪.விளம் முன் நேர்
௫.மா முன் நிரை ௬.மா முன் நிரை

எதுகை- செய்யாமல் – செய்தபின் – உய்யா
மோனை- செய்யாமல் – செய்தபின்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -314

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்


தெளிவுரை
தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது , அவரே
நாணும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து விடுதலாகும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா/செய்-------தா/ரை--------------- ஒறுத்/தல்---------- அவர்/நா/ண
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


நன்/னயம்----------- செய்/து -------விடல்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னாசெய் – நன்னயம் ,



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:28 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -315

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை


தெளிவுரை
பிற உயிருக்கு வரும் துன்பத்தை தமக்கு வந்த துன்பமாகக் கருதி
அவ்வுயிரைக் காப்பாற்றாவிட்டால் பெற்ற அறிவினால் பயன் உள்ளதோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வினான்------ஆ/குவ-------------- துண்/டோ -------பிறி/தின்/நோய்
நிரை/நிரை--------நேர்/நிரை------------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்---------------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை

தன்/நோய்/போல்---போற்/றாக்---கடை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-றிவினான் –பிறிதின்நோய்
மோனை- றிவினான் -குவ


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 9:41 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -316

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இன்னா எனத்தான உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்


தெளிவுரை
எது துன்பம் தருவன என்று அறிந்து அவற்றைப்
பிறரிடத்தில் தான் செய்யாதிருக்க வேண்டும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா------------எனத் /தா------- உணர்ந்/தவை------துன்/னா/மை
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா--------------கருவிளம்-------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - --------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை

வேண்/டும்--------- பிறன்/கண்-----செயல்
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ன்னா – எத்தான - துன்னாமை , உர்ந்தவை -வேண்டும்
மோனை-ன்னா - எத்தான


Sponsored content

PostSponsored content



Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக