புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
20 Posts - 3%
prajai
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_m10ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.டி. ஊழியர்களைப் பாதிக்கும் ஹைபர்சோம்னியா! அலர்ட் ரிப்போர்ட்!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun 24 Dec 2017 - 15:23



தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் விழித்திருப்பவர்களின் அவஸ்தை ஒரு ரகம். இரவில் இடையிடையே கண்விழித்த பின் மீண்டும் தூக்கத்துக்காக காத்துக்கிடப்பவர்களின் பாடு மற்றொரு ரகம். இப்படி தூக்கமின்மை பற்றியும் அதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றியும் அதிகளவில் பேசத் தொடங்கிவிட்டோம் என்பது ஆரோக்கியமான விஷயம். அதுவே மறுபுறம், அதிகளவில் தூங்குவதால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றிப் பேசுவதும் அவசியமாகிறது.

குறைந்த அளவு தூக்கம் உண்டாக்கும் பாதிப்புகளைப் போலவே, அதிகளவு தூக்கமும் நிச்சயம் பாதிப்புகளை உண்டாக்கும். சில நோய்நிலைகள் காரணமாக உண்டாகும் அதிஉறக்கத்தை ஒரு பிரிவாகவும், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக உண்டாகும் அதிஉறக்கத்தை மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தலாம்.

உடல் நோயை அறிவிக்கும் அதிஉறக்கம்:

என்றாவது ஒரு நாள் அதிகமாக உறங்குவது தவறில்லை. ஆனால், தொடர்ந்து நீண்ட நாள்கள் அதிக நேரம் உறங்குபவர்கள், உடலை ஒரு முறை சோதித்துக்கொள்வது நல்லது. ஏதாவது நோயின் அறிகுறியாகவோ அல்லது வரவிருக்கும் நோய்களுக்கு முன் அறிவிப்பாகவோ ’அதி உறக்கம்’ எனும் பிரச்னை இருக்கலாம். தோராயமாக, ஏழு முதல் ஒன்பது மணி நேரம், வயதுக்கு ஏற்ப இரவில் தூக்கம் அவசியம் என சித்த மருத்துவமும், நவீன அறிவியலும் வலியுறுத்துகின்றன. இதற்கு குறைவாகவோ அதிகமாகவோ உறங்குவது உடலுக்கு உகந்ததல்ல.

ஹைபர்சோம்னியா (Hypersomnia)

தினமும் இரவில் ஒன்பது அல்லது பத்து மணி நேரத்துக்கு அதிகமாக உறங்கியும், மறுநாள் முழுவதும் சோம்பிக் கிடந்தால், மருத்துவரின் ஆலோசனை தேவை. குறைந்தது மூன்று மாதங்களுக்கு அதிஉறக்கத்தின் அறிகுறிகள் தோன்றினால் ஹைபர்சோம்னியா எனும் நோயாக வரையறுக்கிறது மருத்துவ உலகம்.

அதிஉறக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் நன்றாகவே உறங்கியிருப்பார்கள். இருப்பினும் மறுநாள் பகல் நேரம் முழுவதும் தூக்கத்துக்காக அவர்களின் உடலும் மனமும் ஏங்கும். ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ அல்லது எதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போதோ, தன்னையறியாமல் தூங்கிவிடுவார்கள். சோர்வு எப்போதுமே அவர்களை சூழ்ந்திருக்கும். விபத்துகளுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

காரணங்கள்:

மூளை உறையில் உண்டாகும் கட்டிகள், விபத்தின் காரணமாக தலையில் ஏற்படும் காயங்கள், சில அதிர்ச்சியான செய்திகளால் ஏற்படும் பாதிப்புகள், சில வகையான மருந்துகள், மதுப்பழக்கம், மரபு போன்றவை அதிக உறக்கம் உண்டாக்குவதற்கு முக்கியமான காரணங்கள். அதிகமாக உறங்குபவர்களின் பின்னணியில் ஏதாவது மனம் சார்ந்த தொந்தரவுகளும் இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு எதன் காரணமாக அதி உறக்கநோய் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொண்டு மருத்துவம் செய்வது அவசியம். அதாவது இவையனைத்தும் மருத்துவ ரீதியாக அதிஉறக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள். இவை தவிர்த்து வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக உறக்கம் சார்ந்து உடல்நிலையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள்தான் இப்போதைய பேசுபொருள்.

அதி உறக்கமும் … குறை உறக்கமும்:

’தூங்குவதற்கே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்… பிறகு எங்கே அதிகமாக தூங்குவது’ என்று சொல்பவர்கள் தான் இன்றைய அசுரவேக உலகத்தில் அதிகம். ஆனால், உண்மை என்னவென்றால், ’நேரம் இல்லாமல் தூக்கத்துக்காக ஏங்கிக்கிடப்பவர்கள்தான், வாய்ப்பு கிடைக்கும்போது, அதிக நேரம் உறங்கி பாதிக்கப்படுகிறார்கள்’ என்கிறது உறக்கம் தொடர்பான ஆராய்ச்சி. அதாவது சில நாள்கள் குறைவாக உறங்கிவிட்டு, அடுத்த பல நாள்கள் அதிகமாக உறங்குவது என வரைமுறையில்லாமல் உறங்கி, உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்கின்றனர் என்கிறது அந்த ஆய்வுச் செய்தி. உதாரணத்துக்கு… பெருநகரங்களில் உள்ள சில மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், வார நாள்களில் வேலைப்பளு காரணமாக, குறைவாக தூங்குவார்கள். வார இறுதி நாள்களில் ஓய்வு கிடைப்பதால் மிகவும் அதிக நேரம் உறங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு குறைவான உறக்கத்தினால் உண்டாகும் பாதிப்புகளோடு சேர்த்து, அதிக உறக்கத்தால் உண்டாகும் பாதிப்புகளும் சேர்ந்துகொள்ளும்.

நோய்களின் வருகை:

’தினமும் தேவையான அளவு உறங்கினால், வாழ்நாள் நீடிப்பதோடு, பல நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்க முடியும்’ என பல்வேறு இனம் மற்றும் நாட்டு மக்களிடம் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்நிலைகள் எதுவுமின்றி அளவுக்கு அதிகமாக உறங்கினால், ஆயுள் குறைவதோடு, எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் குழாய் சார்ந்த நோய்கள் (Blood Vessel diseases), மன ரீதியான நோய்கள், உடற்பருமன் ஆகியவை வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் அதிகம் என்கின்றன அதே வகையான ஆய்வுகள். அதிக நேரம் உறங்கும் பெண்களுக்கு, ஹார்மோன் கோளாறுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகமாக உறங்கியவர்களின் ரத்தத்தில் சி- ரீயாக்டிவ் புரோட்டின் (C-Reactive protein) அதிகளவில் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. சி- ரீயாக்டிவ் புரோட்டின் என்பது, கிருமித் தொற்று, முடக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது கல்லீரலின் மூலம் உடனடியாக ரத்தத்தில் கலக்கும் புரதம்.

மூளை… அறிவாற்றல்… மனச்சோர்வு:

அதிகமான உறக்கம் அல்லது குறைவான உறக்கம் இரண்டுமே, மூளையின் நுண்ணிய செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்குமாம். கணிப்பொறியின் ஆற்றலைவிட, பலமடங்கு திறன் வாய்ந்த நமது மூளையின் தகவல் பரிமாற்றங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது தற்போதைய செய்தி. ஞாபக மறதி ஏற்படுவதோடு, அறிவாற்றல் திறனும் குறைந்துவிடும் (Cognitive impairment). எதிர்காலத்தில் அல்சீமர் நோய் (Alzheimer’s disease) வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதிகளவில் உறங்குவதால், மரபணு ரீதியில் மாற்றம் ஏற்பட்டு மனச்சோர்வு (Depression) நோய், அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகின்றன. பொதுவாகவே மனச்சோர்வு நோயாளர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள் அல்லது அதிக நேரம் உறங்குவார்கள்.

சித்த மருத்துவம் சொல்வது என்ன…

நவீன மருத்துவம் சொல்லும் அதி உறக்கத்தின் ஆபத்துகளைப் பற்றி சித்த மருத்துவம் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக உறங்கினால் வீக்கம், மயக்கம், தலைவலி, ரத்தக் குழாய்களில் அடைப்பு, பசியின்மை போன்றவை உண்டாகும் எனவும், உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு வாழ்நாள் குறையும் எனவும் சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, ஆவிப் பிடித்தல், நசியம் என பல சிகிச்சை முறைகளையும் சித்த மருத்துவம் கூறுகிறது.

வயதுக்கு ஏற்ப ஏழு முதல் ஒன்பது மணி நேரம் நிம்மதியாக உறங்கி, அதிகாலையில் கண்விழிக்கும்போது, அந்த நாள் முழுவதும் உண்டாகும் உற்சாகத்தை நாம் உணர்ந்திருப்போம். அதுவே, இரவில் அளவுக்கு அதிகமாக உறங்கிவிட்டு, மறுநாள் உறக்கத்துக்காகவும் ஓய்வுக்காகவும் ஏங்கிக்கிடப்பதையும் நாம் அறிந்திருப்போம். அதிஉறக்கத்துக்கு நோய் நிலை காரணமாக இருப்பின், அதற்கேற்ப மருத்துவம் மேற்கொள்வது அவசியம். நோய்நிலை ஏதும் இல்லையெனில் வாழ்வியலை சீர்செய்வதன் மூலம், தூக்கத்தை முறைப்படுத்தி, வரவிருக்கும் பல நோய்களைத் தடுப்பது முக்கியம்!… அதற்காக எப்போதாவது உடல் சோர்வின் காரணமாக அதிகமாக உறங்கினால், நமக்கு பல நோய்கள் வந்துவிடுமா என்ற பயம் வேண்டாம். தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு அளவு மீறும்போது தான் பிரச்னை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக