புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம் !
சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே!
உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவ மாணவிகளே! கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே! பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.
உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
மேஷம் !
சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே!
உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவ மாணவிகளே! கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே! பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.
உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம் !
ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.
நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே! பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே! கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.
பரிகாரம்:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.
நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே! பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே! கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.
பரிகாரம்:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம் !
எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.
கணவன் - மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.
வியாபாரிகளே! முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.
மாணவ - மாணவிகளே! படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்' நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.
25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
பரிகாரம்:திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.
எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.
கணவன் - மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.
வியாபாரிகளே! முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.
மாணவ - மாணவிகளே! படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்' நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.
25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
பரிகாரம்:திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|