புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10 
30 Posts - 83%
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க


   
   

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 11:57 am

26.02.2018

தியேட்டர்ல அத்.............தன பேர் இருக்கும்போது, அந்த பொண்ணு, அம்மா, பாட்டிதான்[எத்........தன வயசிருக்கும்?] முதல் ரசிகைனு எப்டீ தெரிஞ்சிருக்கும்? 

அபூர்வ ராகங்கள் படத்தின் முதல் காட்சியில் சந்தித்தாரா? படத்தோட முதல் காட்சியா, இல்ல........... ரஜினியின் முதல் காட்சியா? 

அவர் பேர கேக்குறதுக்குள்ள அவள் போயிட்டாள். ரெண்டு பேரும் பக்கத்ல பக்கத்ல உக்காந்திருந்தாங்களா?

இல்ல அவள் இவர்ட்ட வந்து பேசினாளா? 

இவர் அந்தப் படம் பார்க்க வந்தது அவளுக்கு எப்படி தெரியும்? 

ரஜினிய எந்த தியேட்டர்ல உள்ள விடல? 

ஞானம் உங்க ஆரம்பகால நண்பரா, ரஜினியோட ஆரம்பகால நண்பரா? 

ரஜினியின் நண்பர்னா உங்களுக்கு ரஜினியும் நண்பரா? 

அப்டீன்னா சினிமாக்காரங்க உங்களுக்கு தெரீமா?

இத்தன கேள்விதான் என்னால கேக்க முடிஞ்சுது. வேற கேள்வி, நீங்க இதுக்கு பதில் எழுதுறத பொருத்.........து இருக்கு.

இனிமே எங்கிட்ட கேள்வி கேப்பீங்க? கே............ளுங்க கேளுங்க, கேட்டுத்தான் பா................ருங்க. 

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 1:00 pm

அய்யய்யோ இத்தனை கேள்வியா ?இனிமேல் கேள்வியே கேட்க மாடடேன். அவர் சொன்னது அப்படியே...........................
..........
ரஜினி என்னையும் அழைத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குச் சென்றார்.

அங்கே நின்று கொண்டு இருந்தவர்களுக்கு, நாமும் இதைப் போல் மேனேஜர் அறைக்கு வழிகேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கலாமே என்ற நினைப்பு.

’’சார்….’’

மேனேஜர் அறைக்குள் நுழைந்த ரஜினி, ;அவர் எதிரில் நின்று மெல்ல அழைத்தார்.

‘’என்ன விஷயம்?’’

மேனேஜர் வேண்டா வெறுப்பாகக் கேட்டார்.’

’நான் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன். உங்க தியேட்டரில் படம் பார்க்கணும்னு ஆசை. இரண்டு டிக்கெட் கொடுக்கச் சொன்னால் போதும்.!’’ – ரஜினி ஆர்வத்தோடு கேட்டார்.

‘’சரிதான்,போங்க சார்! உங்களுக்கு எப்படியாவது படம் பார்க்கணும். அதுக்காக எதை வேணும்னாலும் சொல்வீங்க. டிக்கெட் வேணும்னா, போய் க்யூ விலே நின்னு வாங்கிக்குங்க. இதுக்கு போயி ஏன் பொய் சொல்றீங்க?’’ என்று கடுமையாக் கேட்டார் மேனேஜர்.

’’பொய்யில்லை சார். உண்மையிலேயே நான் நடிச்சிருக்கேன்,,சார்! ப்ளீஸ்..இரண்டு டிக்கெட் குடுங்க’’ – மீண்டும் கேட்டார் ரஜினி.

‘’உங்களை மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்துட்டோம். ஒரு தடவை சொன்னா கேளுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு!’’ மேனேஜர் விரட்டாத குறையாகச் சொன்னார்.

நம்பிக்கையோடு உள்ளே நுழைந்த ரஜினிக்கு ஏமாற்றம் தாங்க முடியவில்லை. விருட்டென்று தனக்கே உரிய மின்வெட்டு போன்ற நடையோடு, தியேட்டரை விட்டு வெளியே சென்றார்.

அவருடன் நானும் ஓடினேன்.

பிரபல இயக்குநர் (கே.பாலசந்தர்) உருவாக்கிய படம் என்பதால் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் கவுண்டரில் அலை மோதியது.

ரஜினி எப்படியாவது டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என துடித்தார். பாலசந்தர் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று எண்ணற்ற புதுமுகங்கள் துடித்துக்கொண்டிருந்த அந்த நாளில், அப்படி வாய்ப்பு கிடைத்து நடித்த படத்தை, முதல் நாள் மக்களுடன் சேர்ந்து பார்பதற்கு வந்து விட்டு, பார்க்காமல் வீட்டுக்குத் திரும்பிப்போக ரஜினிக்கு எப்படி மனம் வரும்.

எனக்கு முன்னால் ஓடிப்போய் ,எப்படியோ ஒரு வழியாக இரண்டு டிக்கெட் வாங்கி விட்டார். அவர் முகமெல்லாம் பூரிப்பு!

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து தொப்பையாகி விட்டிருந்தது. அவசரம் அவசரமாக சரிசெய்து கொண்டார்.

தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். அவர் நடித்த காட்சி வந்தது. ரசிகர்கள் எல்லோரும் திரையைப் பார்த்தார்கள் ரஜினியோ ரசிகர்களின் முகங்களை, அவர்களது ரீ ஆக்‌ஷனையே கவனித்துக் கொண்டிருந்தார்.

யாரும் இவரைக் கவனிக்கவில்லை, படம் முடிந்து வெளியில் வந்து தியேட்டர் வாசலில் நின்றார். ஒருவேரும் இவரை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவர் முகத்தில் சற்றே ஏமாற்றம் தலைகாட்டியது.

‘அப்போது ஒரு பெண் குரல்…

’’சார்…’’

ரஜினி திரும்பினார். அங்கு ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள்.

’’நீங்கதானே இந்த படத்திலே நடிச்சிருக்கிங்க?’’

அவ்வளவுதான் பேசினாள்.

ரஜினி முகத்தில் தனி ஒளி!அவர் கண்கள் பணித்தன. அவள் குரல் அவர் காதில் ஆலய மணியோசை போல் ஒலித்திருக்க வேண்டும்.

‘’’ஆமாம்…’’என்று புன்சிரிப்போடு சொன்னார் ரஜினி. அந்தப் பெண் தன் தந்தையை அழைத்து, ‘’அப்பா! இவர்தான் இந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவின் ஹஸ்பெண்டாக நடித்தவர்….’’ என்று ரஜினியை அறிமுகப்படுத்தினார்.

“ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க சார்…’’என்று மீண்டும் சொன்னாள் அந்தப் பெண்.

ரஜினி, ‘’தேங்க் யூ’’என்றார். அவளும் அவள் தந்தையும் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டார்கள்.

அதன் பிறகு அந்தப் பெண்ணை மீண்டும் ரஜினி சந்தித்ததில்லை

(ரஜினியின் ஆரம்பகால நண்பரான ஞானம் என்றழைக்கப்படும் திருஞானம்.)

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 26, 2018 1:39 pm

26.02.2018
அவர் சொன்னது அப்படியே"
இவ்.............ளத்தையும் எழுதினீங்களே.................. அந்த ஞானம் என்கிற திருஞானம் உங்ககிட்ட வந்து சொன்னாரா, இல்ல, அவர் சொன்னத நீங்க பேப்பர்ல படிச்சீங்களா? 

இதப்பத்தி எதுவுமே எழுதலியே!!!

மூர்த்தி, கேள்வி கேக்க மட்டும் மறந்துறாதீங்க, என்ன?
கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே.......... இருங்க.

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 12:10 am

03.03.2018

பணக்கா..............ர வீடு. அம்மா, அப்பா, மகள்  பேசிட்டு இருக்காங்க. மகள் பயந்துட்டு நிக்கிறா. கையில ரெண்டு மூணு புத்தகங்கள்.

அப்பா : மேடைல நான் உக்காந்த்ருக்கேன், எனக்கு முன்னால நீ பாட்னா என்ன அர்த்தம்? பாக்றவங்க என்ன பத்தி என்ன நெனப்பாங்க? 

மகள் : நான் பொதுவாத்தான பாட்னேன்.

அப்பா : அறிவிருக்கா ஒனக்கு? மொதலாளி தொழிலாளிக்குள்ள ஆ.....யிரம் பிரச்ன இருக்கும். அதெல்லாம் ஒனக்கு தெரீமா?

மகள் : தெரியாது?

அப்பா :   அப்ப ஏன் விழாவில கலந்துகிட்ட?

மகள் :    கூப்ட்டாங்க போனேன்.

அப்பா : என்ன கேட்டியா? 


அம்மா :   என்னங்க நீங்க, அவ என்ன சின்ன கொழந்தயா? எதுக்கு உங்க  அளவுக்கு தேவ, எதுக்கு தேவயில்லேன்னு அவளுக்கு தெரியாதா?  

அப்பா : தெரியாதனால்தாண்டி சொல்றேன். இப்டித்தான் சம்பந்தமில்லாத விஷயத்தில தலையிட்றது, அப்பறம் அத சமாளிக்க, ஏம்பேர சொல்லி ஊரெல்லாம் கடன் வாங்றது.   

மகள் :   நான் கடன் வாங்னேனா?    

அப்பா :  எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா? எனக்கு தெரியாம துணிக்கட, நஹக்கட, பாத்ரக்கட எல்லாத்லயும் நீ வாங்கி தர்மம் பண்ணியிருக்றது, அஞ்......சு லட்ச ருவாய்க்கு மேல போய்ருக்கு. அதுக்கென்ன சொல்ல போற?    

மகள் கைல வச்சிருந்த புத்தகத்த சொரண்டிட்டு நிக்கிறா. திருட்டு முழி முழிச்சுட்டு, தலைய குனிஞ்சு, அப்பாவ பாக்குறா.

அப்பா : ஒன்னால என்ன சொல்ல முடியும்? [மனைவி பக்கத்தில போய்] பாத்தியாடி மல மாரி நிக்கிறத.

மனைவியும் பேசா.............ம நிக்கிறா.

அப்பா : நீ என்னத்த சொல்ல போற. இதுவே ஒரு ஆம்பள புள்ளயா இருந்திருந்து, இப்டி ஒரு காரியத்த செஞ்சிருந்தா வீட்ட விட்டு அடிச் தொரத்திருப்பேன். பொட்டச்சியா போய் தொலச்சிர்ச்சு.

மகள் குறுக்கிட்டு :அப்பா, அநாஹரிஹமா பேசாதிங்க.

அப்பா : பல்லல்லாம் ஒடச்சிர்வேன் படவா.  

அம்மா குறுக்கிட்டு :  என்னங்க நீங்க.   

அப்பா கோபமா : யூ ஷடப். நீ குடுத்த எடந்தாண்டி அவ எல்ல மீறி போய்ட்டா. [மகள்ட்ட] இனிமே இந்த வீட்ல ஒனக்கு எந்...........த உரிமயும் கெடயாது. கார் கெடயாது, பணம் கெடயாது. என்.......ன கேக்கா...ம ஒனக்கு யா........ரும்  எதயும் குடுக்க கூடாதுன்னு, எல்லாருக்கும் phone பண்ணிட்டேன்.   

அந்த இடத்தை விட்டு போறார்.

மகள் அழுறா : இதைவிட எனக்கு என்ன அவமானம் வேணும்?

அப்பா : ஐ டோண்ட் கேர். ஒழுங்கா அடங்கி ஒடுங்கி நடந்துகிட்டேன்னா, பசிக்கு சோறு போடுவேன். 

மகள் அழுதுட்டே : அப்டீன்னா, இந்த வீட்ல இருக்கிற நாய்ஹளுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

அப்பா : ஒரு வித்யாசமும் இல்லேன்னு வச்சுக்க. 

மகள் : கேவலம், வெறும் சாப்பாட்டுக்காக இந்த வீட்ல இருக்கிறத விட, வேற எங்யாவது போயி........... [அழுகை]

அப்பா குறுக்கிட்டு : போய் என்ன செய்ய போற? இந்த ஒலஹத்ல பணமில்லாம ஒன்னால என்ன பண்ண முடியும்?

மகள் கத்துறா : பணம் பணம் பணம், அந்த பணத்த கட்டிக்கிட்டு நீங்களே அழுங்க.

கைல இருந்த பத்தகங்களை வீசிட்டு மாடி ஏறி போறா. ரெண்டு படியேறி, உக்கார்றா, முட்டில முகத்த வச்சு அழுறா. 

அம்மா : சாரு, நீயாவது பேசாம  இருக்க மாட்ட?

அப்பா கோபமா. இல்ல, அப்பாவும் மகளும் கோபாமாத்தான் கத்தி பேசிட்டு இருக்காங்க. 

அப்பா : இருக்க மாட்டா. இப்டி ஒரு அடங்காபிடாரிய வீட்ல வக்கறது, எனக்தான் அவமானம். எக்.....கேடாவது கெட்டு போஹட்டும், எங்கயாவது தொலயட்டும். 

அப்பாவும் மாடி ஏறுறார். மகள் படீலே இருந்து எந்திரிக்கிறா. 

மகள் : போறேம்ப்பா, போறேன். இப்டி ஒரு பெண்ண பெத்ததுக்காஹ பெரும படறேன்னு, உங்க வாயால்யே சொல்ல வக்கிறேன். அதுவரக்கும் நான் உங்க முஹத்ல முழிக்கமாட்டேன்.

அப்பா : கெட் ஔட்.

அப்பா மாடியேறி போய்ட்டார். மகள் அழுதுட்டே வீட்டை விட்டு வெளிய போறா. அம்மா என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு நிக்கிறா.  அவளால யாருக்குத்தான் சப்போர்ட் பண்ண முடியும்? மகள் போறத பாக்குறா.

அம்மா : சாரு, சாரு, சாரு

போற மகளை தடுத்து நிறுத்தி, தன் பக்கம் திருப்புறா.

அம்மா : என்னம்மா இது? அப்பா அப்டி ஏதோ கோபத்ல பேசிட்டாரு.

மகளின் கண்ணீரை தொடக்கிறா.

மகள் : இல்லம்மா, சின்ன வைஸ்ல இருந்தே நானும் பழஹ்றேன். அப்பாவுக்கு என்ன கண்டாலே பிடிக்றதில்ல. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு உரிம போராட்டம் நடந்துகிட்டே இருக்கு. அதுக்கு ஒரு முடிவ் வரணும்னா, நான் இந்த வீட்ட விட்டு போய்த்தான் ஆஹணும்.  

மகள் அழுறது அம்மாவுக்கு தாங்கல. 

அம்மா : அப்டி சொல்லாதேம்மா.

மகள் : அம்மா, உம்மனசு எனக்கு தெரியும். எங்குணம் உனக்கு புரியும். என்ன தடுக்காதம்மா. 

மகள் ஏங்கி அழுறா.

அம்மா : அப்டிப்பட்ட அப்பாவுக்கும், இப்டிப்பட்ட மஹளுக்கும் நடுவ்ல, என்னமாதிரி ஒரு தாய், பாலமா இருக்க விரும்புவாளே தவிர, பாரமா இருக்கமாட்டா. தாயி, ஒனக்கு ஒண்ணு சொல்றேம்மா. இந்த ஒலஹத்ல இருக்ற  ஒவ்வொரு ஆம்ப்ளங்களுக்கும், அக்கா, தங்க, அம்மா, அண்ணின்னு, யாராவது ஒர்த்தர் இல்லாம இல்ல. இருந்தாலும், ஒரு பெண்ண தனியா வா...ழ விடமாட்டாங்க. அப்படிப்பட்ட கேவலமான சமுதாயத்லதான் நீ இருக்கேங்றத மட்டும் மறந்த்றாதம்மா.

மகளின் அழுகை ஓரளவுக்கு நிக்கிது.

மகள் : புரையோடி போன இந்த சமுதாயத்துக்கு, அறுவ சிஹிச்ச செய்யணும்னு ஆசபட்றேம்மா. நல்லவங்களுக்கு நான் நாணல். கெட்டவங்களுக்கு தேக்கு. 

அம்மா : என்னுடைய பாசத்தினால ஓம்பிடிவாதத்த ஜெய்க்க முடியாதுன்னு எனக்கு நல்......ல தெரியும்மா. [வேண்டா வெறுப்பா] ஒன் இஷ்டப்படியே செய். இருந்தாலும், ஒங்க அப்பாவுடைய கோபமும், உன்னுடைய ஆத்ரமும் தீர்ற வரைக்கும், நீ உன் அக்கா வீட்ல போய் இருந்தேன்னா, ஒனக்கும் பாதுகாப்பு, எனக்கும் நிம்மதி.
 
மகள் தயங்கி நிக்கிறா. அம்மாவுக்கு கோவம் வருது.

அம்மா கோவமாவும், பாசத்தோடும் : இதையாவது நான் சொற்படி செய்யகூடாதா?

மகள் அழுதுட்டே அம்மாவின் தோள்ல சாயுறா.

மகள் : ஆகட்டும்மா.

அம்மா சிரிச்சுட்டே : சரி.

மகள் முதுகுல தட்டிகொடுக்குறா. உள்ளே கூட்டிட்டு போறா. 

எந்த படம்னு கண்டுபுடிச்சிட்டீங்களா? யார் யார் பேசியிருக்காங்கன்னு தெரீமா? மூணே................. பேர்தானே, கண்டுபுடிச்சிருப்பீங்க. 

Heezulia  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 03, 2018 11:29 pm

03.03.2018

இது என்ன படம்னு யாருக்கும் தெரியலியா? சரி clue  கொடுக்கிறேன். 


மகளாக நடிச்சது KR விஜயா.  இப்ப தெரியுதா யோசிங்க!

Heezulia   மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 05, 2018 1:55 pm

heezulia wrote:03.03.2018
இது என்ன படம்னு யாருக்கும் தெரியலியா? சரி clue  கொடுக்கிறேன். மகளாக நடிச்சது KR விஜயா.  இப்ப தெரியுதா யோசிங்க!
Heezulia   மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1261179

05.03.2018

படம் : நாடகமே உலகம் 1979 
வசனம் பேசினவங்க : KR விஜயா, MN ராஜம் & மேஜர் சுந்தரராஜன் 
திரைக்கதை & வசனம் : ஆரூர்தாஸ் 
பாட்டுக்கள் : கண்ணதாசன் & வாலி 
ம்யூசிக் : V குமார் 
டைரக் ஷன் : கிருஷ்ணன் பஞ்சு  



Heezulia மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 1:40 pm

சூப்பருங்க சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 19, 2018 9:32 pm

19.03.2018

பேசியவங்க : மீனா & ராஜு

ஒரு ஆஃபிஸ். Phone பெல் அடிக்குது. தன் ஸீட்ல இருந்து எந்திரிச்சு, phone  அடிக்கிற இடத்துக்கு வந்து ஃபோனை எடுக்கிறான் ராஜு.


ராஜு : ஹலோ.......

அடுத்த முனையில் ஒரு பெண்.

மீனா : மீனா பேசுறேன்.

ராஜு : மீனாவா? வணக்கங்க.

மீனா : உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆஃபிஸ் முடிஞ்சதும் கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா? ஸ்ரமம் ஒண்ணுல்லியே.

ராஜு : ஸ்ரமமா? எனக்கா? ஹ்ஹ, அப்டி ஒண்ணுல்லீங்க. நிச்சயமா வர்றேன். கண்டிப்பா வர்றேங்க. அதவிட எனக்கென்ன வேல, அ? சரி, நன்றி.

ராஜு வர்றேன்னு சொல்லிட்ட சந்தோஷத்தில, படுக்கையில சந்தோ...........ஷமா புரள்றா. ராஜு தன் ஸீட்ல உக்காந்து யோசிக்கிறான். “ம்ம், எதுக்காக இருக்கும்?”

ராஜு உக்காந்திருந்தது ரோலிங் சேர். சேர்ல ஆடிட்டே யோசனை.

“ஒரு வேள வேலுவ பத்தி இருக்குமா? ப்ச்”

எந்திருச்சு போறான்.

அடுத்த ஸீன்.

மீனா வீட்ல, அலங்காரம் செஞ்சு, ட்ரெஸ்ஸ மாத்திட்டு, வெக்கப்பட்டு சிரிக்கிறா. ட்ரெஸ்ஸிங் டேபிள்லே இருந்து எந்திரிச்சு, மறுபடியும் படுக்கையில் விழுந்து தலவாணியை பிடிச்சு, அங்கயும் ஒரு வெக்கம்.

மீனா வீட்டு முன்னால கார் வந்து நிக்கிது. ராஜு இறங்கி வீட்டுக்குள்ள வர்றான். ஒரு ரூமுகுள்ள வர்றான். அங்க மீனா வீணை வாசிச்சிட்டிருக்கா. அவன் ரசிச்சிட்டு நிக்கிறான். வீணையிசை முடிஞ்சுது. கை தட்டுறான்.


ராஜு : சபாஷ் சபாஷ்

மீனா : [மூஞ்சி நிறைய சிரிப்போட, பல்லெல்லாம் வாயாக] வாங்க, முந்தியே வந்திட்டீங்களா?

வீணையை எடுத்து வச்சுட்டு, எந்திரிச்சு வர்றா.

பின்னே என்ன, வீணையை தூக்கிட்டா வருவா?

ராஜு : அந்த அதிர்ஷ்ட்டம் எனக்கு கெடக்கல.

மீனா : அப்டீன்னா?

ராஜு : உங்க விரல் அந்த வீணைல ஏத்தின நாதத்த, என்னால முழுஸ்ஸா கேட்டு ரசிக்க முடியல. அ....., நான் வந்ததுல.......... உங்க வாசிப்பு தட பட்ருக்கும்ன்னு நெனக்கிறேன்.

மீனா : இல்ல இல்ல, உங்க வருகைய வீணாக்க கூடாதுன்னு, நாந்தான் வீணையை நிறுத்திட்டேன். நிக்கிறீங்களே, வாங்க வாங்க, வாங்க. உக்காருங்க.

ராஜு : தாங்க்ஸ்.

chairல உக்கார்றான். மீனா உள்ள போயி, தன் அலங்காரத்தை ஒரு தடவை சரி செஞ்சுட்டு, ஏற்கனவே ட்ரேல எடுத்து வச்சிருந்த பலகாரங்களை கொண்டு வர்றா. ராஜு முன்னால அந்த ட்ரேயை வைக்கும்போது, முந்தானை நழுவி விழுது. அவன் தலை குனியிறான். அவள் முந்தானையை சரி செஞ்சுட்டு, “சாப்புடுங்க” ன்னு சொல்றா.

ராஜு : இவ்வளயுமா?

மீனா : அப்பா ஊருக்கு போனதுக்கப்றம், இந்தப் பக்கமே ஒங்கள காணமே.


ராஜு : ஆஃபிஸ்ல வேல நெறைய இருந்துது. அதனால வரமுடியல. அ, அத பத்தி நீங்க கவலபட வேண்டாம்.

மீனா : எத பத்தி?

ராஜு : அ...,டிஸ்மிஸ் செய்யப்பட்ட வேலு விஷயமா பேசத்தானே வரசொன்னீங்க?

மீனா : இல்லியே, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது கம்பெனி விஷயமில்ல. அதிர்கட்டும், அப்பா ஊர்க்கு போம்போது, ஏதாவது சொந்த விஷயமா சொன்னாங்களா?

ராஜு : ஓஹோ, ஆமா, அ... ஒங்க சம்பந்தமா அப்பா சொல்லிட்டு போய்ருக்காரு.

அவள் வெக்கப்பட்டு : ஓ, சொல்லிட்டாங்களா.....? பாத்தீங்களா, இந்த விஷயம் நம்ள தவ்ற வேற யாருக்கும் தெரியக்கூடாதுன்னு என்கிட்டே சொல்லிட்டு, உங்ககிட்ட சொல்லிர்காரு. ஆமா, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

ராஜு : நான் என்ன சொல்றது? மொதலாளி உத்ரவ தட்ட முடியுமா? ஆகட்டும்னு சொன்னேன்.

மீனா : தேதிய பத்தி எதாவது அப்பா சொன்னாங்களா?

ராஜு : சொன்னாங்க, கல்கத்தாவிலேருந்து பொறப்பட்றதுக்கு முந்தி, தேதிய தெரிவிக்றேன்னு சொன்னாங்க.

மீனா : ஒங்க ட்ரெஸ்ஸ பத்தி, நீங்க கவலபடவே..... கூடாது. எல்லாம் நாந்தான் செலக்ட் பண்ணுவேன்.

ராஜு : [ஆச்சரியம் & அதிர்ச்சி] ட்ரெஸ்ஸா, செலக் ஷனா? என்ன சொல்றீங்க?

மீனா கொஞ்சலா : வெளையாட்டு போதும்.

ராஜு : உண்மயாத்தான் சொல்றேன். நீங்க பேஸ்றது எனக்கு வெளங்கல. தயவுசெய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

மீனா : சர்தாம்போங்க. நம்ம கல்யாண விஷயத்த பத்தி, அப்பா ஏதாவது ஒங்ககிட்ட சொன்னாங்களான்னுதான் கேட்டேன். நீங்ககூட ஆமான்னு சொன்னீங்களே.

அவன் எந்திரிக்கிறான்.

ராஜு : இல்லியே, ஒங்கள பத்திரமா பாத்துக்கும்படி மொதலாளி சொல்லிட்டு போனாரு. அதத்தான் சொன்னேன். நீங்கதான் தவறா புரிஞ்சிரிக்கீங்க.

மீனா : என்ன, தவறா? நான் உங்கள கல்யாணம் செய்துக்க நெனச்சுது தவறா?

ராஜு : மிகப்பெரிய தவறு. நான் ஏற்கனவே காதலிச்சவன், காதலிக்கப்பட்டவன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்த மாதிரி, காதல மாத்திக்க முடியாது மீனா. மாத்திக்க முடியாது.

மீனா : அப்படி சொல்லாதீங்க. ஒங்கள வச்சு, நான் கட்டிருக்கிற காதல் கோட்டையை நீங்களே இடிச்சிறாதீங்க.

அவன் ரூமை விட்டு வெளிய வர்றான்.

மீனா : ராஜு

வெளிய வந்துட்டான். அவள், அவன் பின்னாலேயே ஓடி வர்றா.

மீனா : ராஜு, ராஜு. ராஜு.

ஓடி ஓடி வந்து ராஜுவுக்கு முன்னால வந்து நிக்கிறா.

மீனா : ராஜு, உங்களுக்காக நான் எதயும் செய்ய தயாரா இருக்கேன். நீங்கதான் எனக்கு பெருசு.

ராஜு : எனக்கு என் காதல் பெருசு. இத எதுக்காகவும், யாருக்காகவும் அத விட்டு கொடுக்க முடியாது.

அவன் மாடியிலிருந்து கீழ எறங்கி வரான். மீனா அழுதுட்டே நிக்கிறா. அப்புறமா அவன் பின்னாலேயே “ராஜு, ராஜு” ன்னு ஓடி வந்து, அவன் முன்னால வந்து நிக்கிறா.


மீனா : ராஜு, ஏன்நெலம தெரியாம என்னென்னமோ பேசுறீங்களே. நீங்க இல்லேன்னா எனக்கு வாழ்வே கெடயாது. நீங்க வெறுத்துட்டா, நான் சாஹ்றத தவிர வேற வழியே இல்ல ராஜு, வழியே இல்ல.

ராஜு [அமைதியாக] : மீனா, உங்க நெலமக்காக நான் ரோம்.......ப அனுதாபபட்றேன். மத்தவங்க விருப்பத்த தெரிஞ்சிக்காம தானே ஒரு முடிவுக்கு வர்றது, அதுக்காக போராட்றது, பிறர பலவந்தப்படுத்றது, பிறகு பலியாஹ்றது. ச்சு, ச்சு, ச்சு, ச்சு, இது எப்படி ஞாயமா இருக்கு முடியும்?

ராஜு இப்டி சொல்லிட்டு வீட்டுக்கு வெளியே போறான். மீனா “ராஜு, ராஜு" ன்னு சொல்லிட்டே அவளும் பின்னால போறா. ராஜு வாசல் வரைக்கும் போயி, திரும்பி அவளை பார்க்கிறான்.

ராஜு : மீனா, உங்கள வேண்டி கேட்டுக்கிறேன். தயவுசெய்..........து என்ன மறந்துர்ங்க.

மீனா சிலையாய் நிற்க, ராஜு போய்ட்டான்.

இப்ப சொல்லுங்க. மீனாவும், ராஜுவும் யாரு யாரு? எந்த படத்தில இந்த வசனங்கள்? பதில் வருமா, வராதா? 

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 21, 2018 12:37 am

வழமை போல் சூப்பரோ சூப்பர். ஆனால் என்ன, படங்களே பார்க்க முடியவில்லை இதில் பழைய படங்கள் பற்றிக் கேட்டால்? துப்புக் கொடுக்கலாமே.

பதில் வரும் ஆனா வராது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 10:05 am

இந்த காட்சி சமீபத்தில் சன் லைப் சானலில் பார்த்த நியாபகம் அனால் நடிகர்கள் படம் நினைவில் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக