புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 28, 2017 7:22 pm

எனது யூகம் என்றுதானே சொல்லி இருந்தேன் .
நான் ஒரு படத்தை சொன்னேன் . நீங்கள் 2 /3 படம் சொல்லி இருக்கிறீர்கள்.
அப்போ கடைசியில் நடித்த படத்தில் ஏற்பட்டு இருக்குமோ ?
கேட்டு சொல்லலாம் என்றால் இப்போது இருவருமே உயிருடன் இல்லை.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 7:47 pm

28 .12 .2017 

அது சரி, அவங்க இருந்தாமட்டும், நீங்க போயி கேட்டு வந்து சொல்லீருவீங்களாக்கும். சினிமாக்காரங்கள்ல்லாம் ரொம் ....................... ப பழக்கமோ? 

Heezulia

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 28, 2017 8:21 pm

ரொம்ப பழக்கமா இல்லையா என்பதற்கான பதில் நான் கூறாமல் இருப்பதே
நல்லது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 10:09 pm

28 .12 .2017 


அப்ப கொஞ்சூண்டு பழக்கமா?


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 10:28 pm

28 .12 .2017 

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 2rynekk
டைரக்டர் திருலோகசந்தருக்கு ஒரு யோசனை வந்துச்சு. தண்ணிக்கு நடுவில ஒரு தாமரைப்பூ இருக்கணும். அத சுத்தி 24 தாமரை இலைங்க. தாமரைப் பூவில ஹீரோயினும், இலைங்கள்ல டான்சர்ஸும் நின்னு டான்ஸ் ஆடினா பாட்டு ஸீன் வித்தியாசமா நல்லா இருக்கும்னு யோசனை வந்துச்சாம். செட்டியாரிடம் சொல்லியிருக்கார். இதை எப்படி எக்ஸக்யூட் செய்றது? அவர் ஆர்ட் டைரக்டர்ட்ட சொன்னா, அதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சொல்லிட்டு போய்ட்டார். ஆனா இந்த conceptஐ எப்படியாவது படத்தில போட்றணும்னு முடிவு பண்ணிட்டார், செட்டியார்.

அங்க உதவி இயக்குனரா இருந்த SP முத்துராமன்ட்ட, ஆறுமுக ஆசாரி என்பவரை கூப்ட்டு வர சொன்னார், செட்டியார். அவரும் வந்தார். அவர்ட்ட விஷயத்தை சொல்லி, அப்படி செய்ய முடியுமான்னு கேட்டார். ஆசாரி, “அதென்ன பிரமாதம், இப்டின்றதுக்குள்ள முடிச்சிறலாம்”னு ஈ ............. ஸியா சொல்லிட்டார். செட்டியாருக்கு ஒரே ஆச்சரியம். “நீங்க என்ன இப்டி சொல்றீங்க. இங்க கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டாங்களே”ன்னு செட்டியார் சொல்லியிருக்கார். “அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல அப்புச்சி. நாங்க இங்க திருவிழாவில தெப்பம் விடுவோம்ல, அத மாதிரி செஞ்சுரலாம். உங்க டைரக்டர் கேட்ட படி தாமரைப் பூவும், தாமரை இலைகளும் வந்துட்டு போவுது” சொன்னதுதான், செட்டியாருக்கு தலை கால் புரியல. ஆசாரியை  பாராட்டிட்டு, “ரொம்ப சந்தோஷம் ஆசாரி, ஆரம்பிச்சுருங்க”ன்னு சொன்னார்.

சரி இது முடிஞ்சிருச்சு. தாமரைக் குளம் அமைக்க, மொதல்ல குளம் வேணுமே. செட்டியாரே நீர் நிலையை தேடி அலஞ்ஜாராம். சென்னைல தொரப்பாக்கம் backwater ஏரியாவாமே. அந்த இடத்தை செலெக்ட் செஞ்சாராம். ஆசாரி தாமரைக் குளத்தை உண்டாக்கிட்டார். 


இப்போ ஷூட்டிங் நடத்தணும். எப்படி .............. ? ஆசாரிட்ட சொல்லி, குளத்தை ஷூட் செய்ய உயரமான பரண் போட்டு கொடுக்க சொன்னாராம். ஆசாரியும் 30, 60, 80 அடி உயரத்தில மூணு பரண் வச்சு கொடுத்தாராம். ஏன்னா இப்போ இருக்கிற மாதிரி கிரேன் வசதில்லாம் அப்போ இல்ல. பாட்டு நல்லா வந்துச்சுல்ல. என்ன பாட்டுன்னு கண்டு  புடிச்சிருப்பீங்களே.  ஆமாங்க. வீரத்திருமகன் படத்தில “நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் பொட்டும் வைத்து” பாட்டுதான்.

- ஹிந்து பத்திரிகை 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 10:39 pm

28 .12 .2017 

BR பந்துலு சில படங்களை எடுத்து நஷ்டமாச்சு. அந்த சமயத்தில ஏதாவது ஒரு லோ baட்ஜெட் படம் எடுக்கலாம்னு அவர் முடிவு செஞ்சாராம். அவர் குழுவுடன் diஸ்க்கஸ் செஞ்சார். சரி, யாரை ஹீரோவா போடலாம்? விஜயன் or ஜெய்சங்கர், யாரை செலெக்ட் செய்றது? விஜயன் யார் தெரியுமோ? ‘பாதை தெரியுது பார்’ படத்தில ஹீரோவா அறிமுகமாகி, பிற்காலத்தில K விஜயன்ட்டு டைரக்டரானவர். சரி, இவங்க ரெண்டு பேர்ல யாரையாவது வச்சு படம் எடுக்கலாம்னு முடிவாச்சு.

கதை வேணும். Piratesனு ஒரு இங்லிஷ் நாவலாம். இதை படமா எடுக்கலாம்னு திரைக்கதையை ரெடி பண்ணினாங்க. எழுதியவர் RK சண்முகம். 


படம் எடுக்க பணம் வேணுமே. யார்ட்ட கேக்கலாம்? வீனஸ் பிக்சர்ஸ். இவங்க பட்ஜெட் படங்களுக்கு ஃபைனான்ஸ் செஞ்சுட்டு இருந்தாங்களாம். இவங்க பந்துலுவுக்கும் பணம் கொடுக்க முன் வந்தாங்க. 

அவங்ககிட்ட கதையை சொன்னார். இந்தப் படத்துக்கு ஹீரோ யார்ன்னு வீனஸ் கேட்டாங்களாம். பந்துலு, விஜயன் இல்ல ஜெய்சங்கர்னு சொல்லியிருக்கார். “இல்ல இல்ல, இந்தக் கதையை நீங்க சொல்ற பட்ஜெட்ல எடுக்க முடியாது. இதுக்கு MGRதான் சரியா இருக்கும். நீங்க போட்ற பணமும், நான் தர்ற பணமும் நமக்கு திரும்ப கிடைக்கணும்னா அவரை நடிக்க வச்சாதான் முடியும். என்ன சொல்றீங்க. OK ன்னா சொல்லுங்க”ன்னு வீனஸ் சொல்லிட்டாங்களாம். பந்துலு யோசிக்காமையே “OK, MGRரே நடிக்கட்டும். நீங்களே அவர்ட்ட பேசி முடிச்சுருங்களேன்”ன்னு வீனஸாரிடம் சொல்லிட்டாராம், பந்துலு. 

சிவாஜியை வச்சு படங்களை எடுத்துட்டு இருந்த பந்துலு, வீனஸ் பிக்சர்ஸ் மூலம், தன்னை வச்சு படம் எடுக்கப் போறார்னு MGR கேள்விப்பட்டார். பந்துலுவை அவர் குழுவோடு கூப்ட்டனுப்பி பேசி சம்மதம் சொல்லிட்டாராம். கதையை MGRட்ட சொன்னாங்க. அவர் அந்தக் கதையை அங்கங்க கொஞ்சம் மாத்தினாராம். வந்தவங்களும் ஒத்துகிட்டாங்க.

படத்துக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ன்னு பேர் வச்சாங்க. கோவாவில ஷூட்டிங். பாட்டு ஸீன் எல்லாம் எடுத்து முடிச்சாச்சாம். 


அப்...........புறமா வாலியை “ஏன் என்ற கேள்வி” பாட்டை எழுத சொல்லி, கடசீ ................ ல படமாக்கி சேத்தாங்களாம். JJ & MGR ஜோடியின் முதல் படம். பந்துலுவுக்கு ரெண்டு பங்கு லாபமாம். அவருடைய எல்லா கஷ்டங்களையும் போக்கிய படமாம்.

2014ல இந்தப் படம் re-entry ஆச்சு. அப்பவும் வெள்ளிவிழா கொண்டாடியது.

- Oneindia

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 11:08 pm

28 .12 .2017 

ஒரு சர்வாதிகாரி ராஜா கொடுங்கோல் ஆட்சி நடத்துறான். மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறாங்க. அப்போ ஒரு பெண் அந்த ஊர்ல பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, டென்ஷன்ல இருக்கிற அந்த ஊர் ஜனங்களை சந்தோஷப்படுத்துறா. அவளுடைய பாட்டு அந்த ஊர் ஜனங்களுக்கு மான அவமான உணர்ச்சிகளை தட்டி எழுப்புது. இது அந்த ராஜாவுக்கு தெரிஞ்சு, அவளை விரட்ட வீரர்களை அனுப்புறான். அவளும் ஊரை விட்டு போற சமயத்தில, கதாநாயகன் வர்றான். அவளுக்கு தைரியம் சொல்லி, சுதந்திரத்தை பற்றி ஜனங்களுக்கு பாடி உணர்த்துறான்.

இதுதான் K சங்கர் வாலியிடம் சொன்ன situation. வாலியும் "உலகத்ல இறைவன் கட்டளையை தவிர, வேற யார் கட்டளையும் செல்லுபடி ஆகாது" என்கிற அர்த்தத்ல "ஆண்டவன் கட்டளை முன்னால உன் அரசகட்டளை என்னாகும்" ன்னு அந்த ராஜாவை பார்த்து பாட்ற மாதிரி எழுதியிருந்தார். இதை பார்த்த சங்கர் மூஞ்சியும், பக்கத்தில இருந்த அசிஸ்டண்ட் டைரக்டர்கள் மூஞ்சியும் மாறிருச்சு. MGR உம் அந்த வரிகளை பார்த்துட்டு, வாலியை முறச்சாராம். வாலிக்கு குழப்பம். "என்ன, யார் முகத்திலும் ஈயாடலியே. என்ன காரணம்னும் தெரியலியே" னு பயந்து முழிச்சாராம். 

MGR எப்பவுமே வாலியை "ஆண்டவனே "ன்னுதான் கூப்டுவாராம். அந்த சமயத்தில "என்னங்க வாலி" னு கூப்ட்டாராம். அம்புட்டுதான், வாலி வெலவெலத்து போனாராம். "இவர் என்ன செல்லப்போறாரோ தெரியலியே" னு பயந்து பக்கத்தில போனாராம். 

MGR : இப்படி என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளா நெனச்சுட்டு இருந்தீங்க? நேரடியாவே சொல்லியிருக்கலாமே. இப்படி பாட்டு எழுதியிருக்கீங்களே.

வாலி : [கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு]என்னண்ணே இப்டி சொல்லிட்டீங்க. நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணும் இந்தப் பாட்ல நான் உங்களை அவமானப் படுத்துற மாதிரி எழுதலியே. எனக்கு புரியலியேண்ணே.

MGR [கோபம் அதிகமாகி] : என்னது புரியலையா? அந்த வரிகளை படிங்க.

வாலி : [அந்த வரிகளை படிச்சு காட்டினார்] இதுல என்னண்ணே தப்பு இருக்கு?

MGR : நான் இந்தப் படத்துக்கு வச்ச பேர் என்னானு தெரியுமா? 

வாலி : அதான் தெரியுமே, அரசகட்டளை. 

MGR : தெரிஞ்சுமா இப்படி எழுதினீங்க? ஆண்டவன் கட்டளை சிவாஜி நடிச்ச படம். அரசகட்டளை நான் இப்ப நடிக்கிற படம். யோசிச்சு பாருங்க. சிவாஜி படத்துக்கு முன்னால் உன் படம் என்னாகும்னு கேக்குற மாதிரி இல்ல? 

MGR படபடன்னு கோவத்துல கடுகு மாதிரி வெடித்தார். 

வாலி : அந்த அர்த்தத்ல நான் எழுதலேண்ணே. Situationக்கு ஏத்த மாதிரிதான் எழுதியிருக்கேன். சத்தியமா நான் தப்பா நெனச்சு எழுதலேண்ணே. 

வாலி எல்லா தெய்வங்கள் மேலேயும் சத்தியம் செஞ்சுகூட, MGR ஓரளவுக்குதான் சமாதானமானராம். அடுத்த நாள் முத்துக்கூத்தன் கவிஞரை கூப்ட்டு அந்த situationக்கு ஏற்ற பாட்டை எழுத சொன்னாராம். அவரும் எழுதினார்.

"ஆடப் பிறந்தவளே ஆடிவா" 

- வாலி எழுதிய 'எனக்குள் MGR' தொடரில் இருந்து. 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 11:59 pm

28 .12 .2017 

29.12.2017ல இருந்து 31.12.2017  வரைக்கும் நான் லீவு. 

தேன்நிலவு 

இதப்பத்தி நான் படிச்சத சொல்றேன். அச்சச்சோ ................என்னா கற்பனை கன்னாபின்னான்னு போவுதா? ஸ்டாப்..................ஸ்டாப். நான் அந்த படத்த பத்திதான் சொல்ல போறேங்க. என்ன மனசு சோர்ந்து போச்சோ. இத படிங்க சரியா போகும். 

இந்த படத்த காஷ்மீர்ல 52 நாள்ல எடுத்தாங்களாம். இப்போல்லாம் எடுத்து முடிச்ச சீன்ஸ போட்டு பார்த்து, ஏதாவது காட்சி பிடிக்கலேன்னா, சரியா வரலேன்னா மறுபடியும் எடுத்துக்குவாங்கல்ல. அப்போ இதமாதிரி வசதீல்லாம் இல்லியாம். ஷூட்டிங் குழுவினர் தங்கி இருந்த இடம் ஒரு கிராமமாம். அங்கே ஒரே ஒரு தியேட்டர்தானாம். அம்புட்டு குக்...................கிராமம். 


இப்டி ஒரு கிராமத்திலே இருந்துகிட்டு, காஷ்மீர்ல, அதுவும் அந்த குளிரில, கஷ்...............................டப்பட்டு எடுத்த படத்த எப்டி போட்டு பார்க்க முடியும்னு சொல்லுங்க பார்ப்போம்! சரி, எடுத்த படத்த சென்னைக்கு கொண்டு போயி, அங்க பிலிம டெவலப் செஞ்சு, படத்த பாத்துட்டு, திருப்தியில்லாத காட்சிய எல்லாம் மறுபடியும் காஷ்மீருக்கு வந்து.................................... ஹ்ம்...................................அந்த காட்சிய எல்லாம் எடுக்கணும்னா.........................................இதெல்லாம் முடியுற காரியமா? 

அதனால காஷ்மீர்ல இருக்கும்போதே படத்த போட்டு பாத்துற வேண்டியதுதான், சரியா வராத காட்சிய எல்லாம் மறுபடியும் எடுத்துரலாம்னு முடிவு செஞ்சாங்களாம். காஷ்மீர்ல பிலிம் கழுவி பிரிண்ட் போட எல்லாம் வசதி இல்லியாம். 

அப்போ எப்டி? 

பிலிம் ரோல்கள எல்லாம் சென்னைக்கு அனுப்பிதான் பிரிண்ட் போட்டுவரணும். 

அந்த காலகட்டத்தில, வாரம் ரெண்டு தடவ மட்டும் 'டகோட்டா' விமானமாமே. அது காஷ்மீர்லே இருந்து டெல்லிக்கு போகுமாம். அதிலே சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் இன்னொருத்தர் பிலிம் ரோல்களோட டெல்லிக்கு போய், 


அங்கேயிருந்து சென்னைக்கு போய், 

அங்கே விஜயா லேபுக்கு போய், 

அவ்வளவு தூரம் போய் போய், 

பிலிம் ரோல்கள எல்லாம் பிரிண்ட் போட்டு காஷ்மீருக்கு போய் சேர்வாங்களாம். டெல்லி வழியாத்தான். சரி பிரிண்ட் போட்டு வந்தாச்சு. அத திரையில போட்டு பார்க்கணுமே. அதுக்கு இன்னா செய்றது?

அவங்க தங்கி இருந்த கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர்தான் இருந்துச்சாம். ஆமாங்க அந்த தியேட்டருக்கு பிரிண்ட் போட்ட பிலிமை எடுத்துகிட்டு போய், அந்த தியேட்டர்ல ராத்திரி காட்சி முடிஞ்சபின்னால, ஒரு மணிக்கு மேலே படத்தை திரையிலிட்டு பாத்தாங்களாம். யார் யாருன்னு தெரியுமா? 


ஸ்ரீதர், கோபு, ஜெமினி, வைஜயந்திமாலா, நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் இவங்க எல்லாரும் உக்காந்து பாத்தாங்களாம். 

பின்னே என்ன, நின்னா பாப்பாங்கன்னு ஒரு க்ராஸ் கொஸ்ட்டின் கேட்டுராதீங்க. 

அதுல நல்ல வந்த காட்சிய எல்லாம் வச்சுகிட்டு, திருப்தி இல்லாதத மறுபடியும் எடுத்திருக்காங்களாம். அப்டி இப்டீன்னு காலை மூணு மணி ஆயிருமாம். அதுக்கப்புறமா போய் தூங்கிட்டு மறுபடியும் ஆறு மணிக்கெல்லாம் ஜாலியா ஷூட்டிங்குக்கு கெளம்பிருவாங்களாம். 

மொதல் மொதலா தேன் நிலவு படம் எங்கே ரிலீசாச்சுன்னு தெரியுமா? அந்த குக்கிராமாத்திலுள்ள தியேட்டர்லதானே, அப்படியும் வச்சுக்கலாம்ல. 


காஷ்மீர்லதான் இந்தப் படம் முதல்ல ரிலீசாச்சுன்னு சொல்லணும்னு ஸ்ரீதரே சொன்னாராம். 

இதுல இன்னொரு விஷயம் என்னான்னா, அந்த தியேட்டருக்கு போகணும்னா கொஞ்ச தூரம் நடந்துதான் போகணுமாம். லக்கேஜ் இல்லேன்னா பரவாயில்ல. பிலிம் பொட்டியையும் கொண்டு போகணுமே. 

எப்டீ? 

நம்ம வில்லன் நடிகர்தான். நாமதான் பெரீ............................ய வில்லன் நடிகராச்சேன்னு ஒரு பிரிஸ்டிஜ் பார்க்காம அந்த பொட்டிகள தன்னோட தலைலேயும், தோளிலேயும் சுமந்து போனாராம். அத ஸ்ரீதர் நன்றியோட நெனச்சு பாத்துக்குவாராம். 

தேன் நிலவுல யார் வில்லன்னுதான் தெரியுமே. 

நம்பியார்தான் அந்த வெயிட்ட தூக்கிட்டு போனாராம். இம்புட்டு தூரம் எல்லாரும் பட்ட கஷ்டமெல்லாம், அந்த படம் ரிலீசானவுடனே போயிருச்சுல்ல!!! படம் கன்னாபின்னான்னுல ஒடுச்சு. 


Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 5:41 pm

தேன் நிலவு காட்சிகள் அருமை

ஸ்டாப்..................ஸ்டாப். நான் அந்த படத்த பத்திதான் சொன்னேன்
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 12:41 am

03.01.2018 

ஒரு சர்வாதிகாரி ராஜா கொடுங்கோல் ஆட்சி நடத்துறான். 
மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறாங்க. அப்போ ஒரு பெண்
அந்த ஊர்ல பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, டென்ஷன்ல இருக்கிற அந்த ஊர் ஜனங்களை சந்தோஷப்படுத்துறா. அவளுடைய 
பாட்டு அந்த ஊர் ஜனங்களுக்கு மான அவமான 
உணர்ச்சிகளை தட்டி எழுப்புது. 

இது அந்த ராஜாவுக்கு தெரிஞ்சு, அவளை விரட்ட வீரர்களை 
அனுப்புறான்.  அவளும் ஊரை விட்டு போற சமயத்தில, 
கதாநாயகன் வர்றான். அவளுக்கு தைரியம் சொல்லி, 
சுதந்திரத்தை  பற்றி  ஜனங்களுக்கு பாடி உணர்த்துறான். 

இதுதான் K சங்கர் வாலியிடம் சொன்ன situation. வாலியும் 

"உலகத்ல இறைவன் கட்டளையை தவிர, வேற யார் 
கட்டளையும் செல்லுபடி ஆகாது"  

என்கிற அர்த்தத்ல 

"ஆண்டவன் கட்டளை முன்னால உன் அரச கட்டளை 
என்னாகும்"ன்னு 

அந்த ராஜாவை பார்த்து பாட்ற மாதிரி எழுதியிருந்தார். இதை பார்த்த சங்கர் மூஞ்சியும், பக்கத்தில இருந்த அசிஸ்டண்ட் 
டைரக்டர்கள் மூஞ்சியும்  மாறிருச்சு. 

MGR உம் அந்த வரிகளை பார்த்துட்டு, வாலியை முறச்சாராம். 

வாலிக்கு குழப்பம். 

"என்ன, யார் முகத்திலும் ஈயாடலியே. என்ன காரணம்னும் 
தெரியலியே" னு 

பயந்து  முழிச்சாராம்.
 
MGR எப்பவுமே வாலியை "ஆண்டவனே "ன்னுதான் 
கூப்டுவாராம். 

அந்த சமயத்தில "என்னங்க வாலி" னு கூப்ட்டாராம். 

அம்புட்டுதான், வாலி வெலவெலத்து போனாராம். 

"இவர் என்ன செல்லப்போறாரோ தெரியலியே" னு பயந்து 
பக்கத்தில போனாராம்.
 
MGR : இப்படி என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை 
நாளா நெனச்சுட்டு இருந்தீங்க? நேரடியாவே 
சொல்லியிருக்கலாமே. இப்படி பாட்டு எழுதியிருக்கீங்களே.

வாலி : [கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு] என்னண்ணே 
இப்டி சொல்லிட்டீங்க. நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணும் 
இந்தப் பாட்ல நான் உங்களை அவமானப் படுத்துற மாதிரி 
எழுதலியே. எனக்கு புரியலியேண்ணே.

MGR [கோபம் அதிகமாகி] : என்னது புரியலையா? அந்த 
வரிகளை படிங்க.

வாலி : [அந்த வரிகளை படிச்சு காட்டினார்] இதுல என்னண்ணே தப்பு இருக்கு?

MGR : நான் இந்தப் படத்துக்கு வச்ச பேர் என்னானு தெரியுமா?
 
வாலி : அதான் தெரியுமே, அரசகட்டளை. 
 
MGR : தெரிஞ்சுமா இப்படி எழுதினீங்க?  ஆண்டவன் கட்டளை சிவாஜி நடிச்ச படம். அரசகட்டளை நான் இப்ப நடிக்கிற படம். யோசிச்சு பாருங்க. சிவாஜி படத்துக்கு முன்னால் உன் படம் 
என்னாகும்னு கேக்குற மாதிரி இல்ல? 

MGR படபடன்னு கோவத்துல கடுகு மாதிரி வெடித்தார்.

வாலி : அந்த அர்த்தத்ல நான் எழுதலேண்ணே. Situationக்கு ஏத்த மாதிரிதான் எழுதியிருக்கேன். சத்தியமா  நான் தப்பா நெனச்சு எழுதலேண்ணே.  

வாலி எல்லா தெய்வங்கள் மேலேயும் சத்தியம் செஞ்சுகூட, MGRஓரளவுக்குதான் சமாதானமானராம். அடுத்த நாள் 
முத்துக்கூத்தன் கவிஞரை கூப்ட்டு அந்த situationக்கு ஏற்ற 
பாட்டை எழுத சொன்னாராம். அவரும் எழுதினார்.

"ஆடப் பிறந்தவளே ஆடிவா" 
 
வாலி எழுதிய 'எனக்குள் MGR'  தொடரில் இருந்து.
 
Heezulia 

Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக