புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 24 of 29 •
Page 24 of 29 • 1 ... 13 ... 23, 24, 25 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017
24.03.2018
பாஞ்சாலின்னு ஒரு நாடகம். இதுல வசந்தா நடிச்சதை MGR பார்த்தார். வசந்தாவின் தமிழ் உச்சரிப்பு அவருக்கு புடிச்சிருந்துச்சு. உடனே அவர் நடிச்ச ‘கணவன்’ படத்தில, தனக்கு தங்கையாக நடிக்க வச்சார். படப்பிடிப்புக்கு வசந்தா மேக்கப் போட்டுட்டு, சத்யா ஸ்டூடியோவில காத்துகிட்டு இருந்தார்.
அங்க இன்னொரு ஸீனியர் நடிகை மேக்கப்போடு காத்துகிட்டு இருந்தார். விசாரிச்சபோ, ரெண்டு பேருமே ‘கணவன்’ படத்துக்கு, MGR இன் தங்கை ரோலுக்காக வெயிட்டிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சுது. MGR காதுக்கு இந்த விஷயம் போச்சு.
கணவன் படத்தின் கதை & இயக்குனர், சொர்ணம். MGR அவரை கூப்ட்டனுப்பினார். மேக்கப் போட்டு உக்காந்திருந்த ரெண்டு பெண்களுக்கும் ஏத்த மாதிரி, கதையை மாத்த சொல்லிட்டார். ரெண்டு பேரும் ஏமாந்துறகூடாதுங்க்றதுக்காக சொர்ணம் கதைய, MGR சொன்னபடி மாத்திட்டார். MGR இப்படி செஞ்சதுல, ஆச்..................சரியமே இல்லன்னு நினைக்கிறேன். அதுதான் MGR.
- ரமணி
Heezulia
பாஞ்சாலின்னு ஒரு நாடகம். இதுல வசந்தா நடிச்சதை MGR பார்த்தார். வசந்தாவின் தமிழ் உச்சரிப்பு அவருக்கு புடிச்சிருந்துச்சு. உடனே அவர் நடிச்ச ‘கணவன்’ படத்தில, தனக்கு தங்கையாக நடிக்க வச்சார். படப்பிடிப்புக்கு வசந்தா மேக்கப் போட்டுட்டு, சத்யா ஸ்டூடியோவில காத்துகிட்டு இருந்தார்.
அங்க இன்னொரு ஸீனியர் நடிகை மேக்கப்போடு காத்துகிட்டு இருந்தார். விசாரிச்சபோ, ரெண்டு பேருமே ‘கணவன்’ படத்துக்கு, MGR இன் தங்கை ரோலுக்காக வெயிட்டிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சுது. MGR காதுக்கு இந்த விஷயம் போச்சு.
கணவன் படத்தின் கதை & இயக்குனர், சொர்ணம். MGR அவரை கூப்ட்டனுப்பினார். மேக்கப் போட்டு உக்காந்திருந்த ரெண்டு பெண்களுக்கும் ஏத்த மாதிரி, கதையை மாத்த சொல்லிட்டார். ரெண்டு பேரும் ஏமாந்துறகூடாதுங்க்றதுக்காக சொர்ணம் கதைய, MGR சொன்னபடி மாத்திட்டார். MGR இப்படி செஞ்சதுல, ஆச்..................சரியமே இல்லன்னு நினைக்கிறேன். அதுதான் MGR.
- ரமணி
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017
06.04.2018
ஒருத்தன் ஒருத்திய காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிறான். திடீர்னு அவள் காணாம போயிட்டா. அவள் செத்து போயிட்டான்னு நெனச்சு, வேண்டா.................. வெறுப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிறான். இந்த பொண்ணு, அவனை வளர்த்து ஆளாக்கியவரின் பொண்ணு. நன்றிக்கடனுக்காக கல்யாணம் செஞ்சுகிறானே தவிர, விருப்பமில்லாத ஒரு வாழ்க்கை. அவன்தான் ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட முதல் மனைவியையே நெனச்சுட்டு இருக்கானே. பின்னே எங்கேருந்து இப்போ சந்தோஷமா வாழ்றது?
இதுக்கிடைல என்ன ஆச்சுன்னா, ரெண்டாவது மனைவி கூட நடந்த ஒரு சின்ன சண்டைல, அவன் கண்ணுரெண்டும் குருடாகுது. சந்தர்ப்ப சூழ்நிலை, முதல் மனைவி அவனுக்கு நர்ஸ்ஸா வர்றா. இவதான் முதல் மனைவீன்னு, ரெண்டாவது மனைவிக்கு தெரியாது.
நம்பர் ட்டூகூட சந்தோஷமா வாழ்க்கை நடத்தலேன்னு, நம்பர் ஒண்ணுக்கு தெரிய வருது. அவனை எப்படியாவது நம்பர் ட்டூகூட சேத்து வச்சிறணும்னு நம்பர் ஒன் நினைக்கிறா. அவனை வீட்டுக்கு வெளியே வாக்கிங் கூட்டி போறா. பாட்டு பாடி அவன் மனசை மாத்த பாக்குறா.
பீம்சிங் ஒரே................... மூச்சில சொல்லி முடிச்சுட்டு, “இத்தாம்ப்பா situation. ட்யூன் போடுப்பா.” MSVட்ட சொல்றார். பல்லவிக்காக மட்டும் மூணு ட்யூன் போட்டார் MSV. அதுல ஒண்ணை பீம்சிங் செலக்ட் செஞ்சார். அந்த ட்யூனுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதணும். பீம்சிங் அவர் மூஞ்சியை பார்க்கிறார். கண்ணதாசன் யோசிச்சார். அப்போ அவர் அசிஸ்டெண்ட் பஞ்சு.
“டேய் பஞ்சு, கார்ல என் ஃபைல் இருக்குல்ல, அதை போய் எடுத்துட்டு வா”
பஞ்சு எடுத்துட்டு வந்தார். கண்ணதாசன் அதிலே இருந்து ஒரு பேப்பரை எடுத்து, “இந்த வரிகளை பாருங்க. இது நான் கண்ணனுக்காக எழுதினது. அதுல ‘அவன்’னு வர்ற இடத்தில ‘அவள்’ போட்டு படிச்சு பாருங்க. விசு போட்ட சந்தத்துக்கும், உங்க situationக்கும் சரியா வரும்னு நினைக்கிறேன்.” பீம்சிங் வாங்கி பாத்தார்.
“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்.
நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவன் தந்த மொழியல்லவா.”
இதுதான் கண்ணதாசன் கண்ணனை பற்றி எழுதி வச்சிருந்த பாட்டு. MSV, பல்லவிக்கு போட்டு வச்சிருந்த ட்யூனோடு, “அவன்” வந்த இடத்தில “அவள்” போட்டு பாடி பாத்தார். கன கன கனக் கச்.......................சிதம். “இது எப்படி கவிஞரையா?” MSV ஆச்.................சரியப்பட்டு போய் கேட்டார். அதுக்கப்புறமா பாக்..................கணுமே, கவிஞர் பாட்டு வரிகளை எடுத்து விட்டார்.
“என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா
சருகான மலர் மீண்டும் மலராதையா” – இப்டியே..........................
பாட்டு ரெடி. அடுத்த நாள் ரெக்கார்டிங். MSV – TKR க்ரூப் வந்தாச்சு. சுசீலாம்மா வந்து, அவங்க பாட வேண்டியதை பாடி பாத்துட்டு இருக்காங்க. ஆனா TMSஐ காணோமே. அவர் ஃphoneதான் வந்துச்சு. பீம்சிங் எடுத்தார்,
“என்ன சௌந்தரராஜன், குரல் ஒரு மா..................திரியா இருக்கு?
“அதுக்குத்தான் ஃphone செஞ்சேன். நேத்து ராத்ரிலயிருந்து ஜலதோஷமா இருக்கு. ரெக்கார்டிங்கை ரெண்டு நாளைக்கு அப்புறமா வச்சுக்கலாமே.”
“உங்களுக்கு ஜலதோஷம் மட்டும்தானா, இல்ல காச்சல் கீச்சல் ஏதாவது இருக்கா?”
“இல்லேங்க, ஜலதோஷம் மட்டும்தான்”
“சரி சரி, இப்ப ரெக்கார்டிங் பண்ண போற பாட்டுக்கு இந்த மாதிரி குரல்தான் வேணும். சரியா வரும். உடனே கெளம்பி வாங்க சௌந்தரராஜன்.”
TMS வந்தார். “என்னண்ணே சொல்றீங்க? எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்குன்னு சொல்றேன். இப்போ பாட்டு ரெக்கார்டிங் பண்றது சரிப்பட்டு வருமா?”
இப்டி TMS கேட்டதும், பீம்சிங் சொன்னார், “இந்த ஸீன்ல, சிவாஜிக்கு உடம்பு சரியில்ல. சரோஜாதேவி அவரை வாக்கிங் கூட்டி போறார். வெளில பனி. தவிர இது ஒரு சோக பாட்டு. அதனால உங்க ஜலதோஷம் பிடிச்ச குரல் சரியா இருக்கும்னு சொன்னேன்.”
TMS ரெடியாயிட்டார். MSV TMS க்கு ஒரு கண்டிஷன் போட்டார். “அண்ணே, மூக்கை உறிஞ்சணும்னாலும், தும்மல் போடணும்னாலும் மொதல்லேயே செஞ்சிருங்க. ரெக்கார்டிங் டயத்தில வந்தா கஷ்டமா போயிரும்.”
என்னங்க இது, மூக்கு ஒழுகுறது, தும்மல் வர்றதுல்லாம் நம்ம கைலயா இருக்கு?
ஆனா பீம்சிங் என்ன சொன்னார் தெரியும்ல? “பரவாயில்ல சௌந்தரராஜன், தும்மல் வந்தா தும்மிகோங்க. படத்ல சிவாஜி சாரையும் தும்ம வச்சுர்லாம்.” இதை கேட்டு அங்கிருந்த எல்லாரும் சிரிச்சுட்டாங்க.
நல்.......................லவேள, பாடி முடிக்கிற வரைக்கும், TMSக்கு தும்மலே வரல.
இப்ப தெரியுதா, அந்த பாட்டு எப்டி அவ்ளோ அருமையாக வந்துச்சூன்னு?
- நவிலன்
Heezulia
ஒருத்தன் ஒருத்திய காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிறான். திடீர்னு அவள் காணாம போயிட்டா. அவள் செத்து போயிட்டான்னு நெனச்சு, வேண்டா.................. வெறுப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிறான். இந்த பொண்ணு, அவனை வளர்த்து ஆளாக்கியவரின் பொண்ணு. நன்றிக்கடனுக்காக கல்யாணம் செஞ்சுகிறானே தவிர, விருப்பமில்லாத ஒரு வாழ்க்கை. அவன்தான் ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட முதல் மனைவியையே நெனச்சுட்டு இருக்கானே. பின்னே எங்கேருந்து இப்போ சந்தோஷமா வாழ்றது?
இதுக்கிடைல என்ன ஆச்சுன்னா, ரெண்டாவது மனைவி கூட நடந்த ஒரு சின்ன சண்டைல, அவன் கண்ணுரெண்டும் குருடாகுது. சந்தர்ப்ப சூழ்நிலை, முதல் மனைவி அவனுக்கு நர்ஸ்ஸா வர்றா. இவதான் முதல் மனைவீன்னு, ரெண்டாவது மனைவிக்கு தெரியாது.
நம்பர் ட்டூகூட சந்தோஷமா வாழ்க்கை நடத்தலேன்னு, நம்பர் ஒண்ணுக்கு தெரிய வருது. அவனை எப்படியாவது நம்பர் ட்டூகூட சேத்து வச்சிறணும்னு நம்பர் ஒன் நினைக்கிறா. அவனை வீட்டுக்கு வெளியே வாக்கிங் கூட்டி போறா. பாட்டு பாடி அவன் மனசை மாத்த பாக்குறா.
பீம்சிங் ஒரே................... மூச்சில சொல்லி முடிச்சுட்டு, “இத்தாம்ப்பா situation. ட்யூன் போடுப்பா.” MSVட்ட சொல்றார். பல்லவிக்காக மட்டும் மூணு ட்யூன் போட்டார் MSV. அதுல ஒண்ணை பீம்சிங் செலக்ட் செஞ்சார். அந்த ட்யூனுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதணும். பீம்சிங் அவர் மூஞ்சியை பார்க்கிறார். கண்ணதாசன் யோசிச்சார். அப்போ அவர் அசிஸ்டெண்ட் பஞ்சு.
“டேய் பஞ்சு, கார்ல என் ஃபைல் இருக்குல்ல, அதை போய் எடுத்துட்டு வா”
பஞ்சு எடுத்துட்டு வந்தார். கண்ணதாசன் அதிலே இருந்து ஒரு பேப்பரை எடுத்து, “இந்த வரிகளை பாருங்க. இது நான் கண்ணனுக்காக எழுதினது. அதுல ‘அவன்’னு வர்ற இடத்தில ‘அவள்’ போட்டு படிச்சு பாருங்க. விசு போட்ட சந்தத்துக்கும், உங்க situationக்கும் சரியா வரும்னு நினைக்கிறேன்.” பீம்சிங் வாங்கி பாத்தார்.
“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்.
நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவன் தந்த மொழியல்லவா.”
இதுதான் கண்ணதாசன் கண்ணனை பற்றி எழுதி வச்சிருந்த பாட்டு. MSV, பல்லவிக்கு போட்டு வச்சிருந்த ட்யூனோடு, “அவன்” வந்த இடத்தில “அவள்” போட்டு பாடி பாத்தார். கன கன கனக் கச்.......................சிதம். “இது எப்படி கவிஞரையா?” MSV ஆச்.................சரியப்பட்டு போய் கேட்டார். அதுக்கப்புறமா பாக்..................கணுமே, கவிஞர் பாட்டு வரிகளை எடுத்து விட்டார்.
“என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா
சருகான மலர் மீண்டும் மலராதையா” – இப்டியே..........................
பாட்டு ரெடி. அடுத்த நாள் ரெக்கார்டிங். MSV – TKR க்ரூப் வந்தாச்சு. சுசீலாம்மா வந்து, அவங்க பாட வேண்டியதை பாடி பாத்துட்டு இருக்காங்க. ஆனா TMSஐ காணோமே. அவர் ஃphoneதான் வந்துச்சு. பீம்சிங் எடுத்தார்,
“என்ன சௌந்தரராஜன், குரல் ஒரு மா..................திரியா இருக்கு?
“அதுக்குத்தான் ஃphone செஞ்சேன். நேத்து ராத்ரிலயிருந்து ஜலதோஷமா இருக்கு. ரெக்கார்டிங்கை ரெண்டு நாளைக்கு அப்புறமா வச்சுக்கலாமே.”
“உங்களுக்கு ஜலதோஷம் மட்டும்தானா, இல்ல காச்சல் கீச்சல் ஏதாவது இருக்கா?”
“இல்லேங்க, ஜலதோஷம் மட்டும்தான்”
“சரி சரி, இப்ப ரெக்கார்டிங் பண்ண போற பாட்டுக்கு இந்த மாதிரி குரல்தான் வேணும். சரியா வரும். உடனே கெளம்பி வாங்க சௌந்தரராஜன்.”
TMS வந்தார். “என்னண்ணே சொல்றீங்க? எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்குன்னு சொல்றேன். இப்போ பாட்டு ரெக்கார்டிங் பண்றது சரிப்பட்டு வருமா?”
இப்டி TMS கேட்டதும், பீம்சிங் சொன்னார், “இந்த ஸீன்ல, சிவாஜிக்கு உடம்பு சரியில்ல. சரோஜாதேவி அவரை வாக்கிங் கூட்டி போறார். வெளில பனி. தவிர இது ஒரு சோக பாட்டு. அதனால உங்க ஜலதோஷம் பிடிச்ச குரல் சரியா இருக்கும்னு சொன்னேன்.”
TMS ரெடியாயிட்டார். MSV TMS க்கு ஒரு கண்டிஷன் போட்டார். “அண்ணே, மூக்கை உறிஞ்சணும்னாலும், தும்மல் போடணும்னாலும் மொதல்லேயே செஞ்சிருங்க. ரெக்கார்டிங் டயத்தில வந்தா கஷ்டமா போயிரும்.”
என்னங்க இது, மூக்கு ஒழுகுறது, தும்மல் வர்றதுல்லாம் நம்ம கைலயா இருக்கு?
ஆனா பீம்சிங் என்ன சொன்னார் தெரியும்ல? “பரவாயில்ல சௌந்தரராஜன், தும்மல் வந்தா தும்மிகோங்க. படத்ல சிவாஜி சாரையும் தும்ம வச்சுர்லாம்.” இதை கேட்டு அங்கிருந்த எல்லாரும் சிரிச்சுட்டாங்க.
நல்.......................லவேள, பாடி முடிக்கிற வரைக்கும், TMSக்கு தும்மலே வரல.
இப்ப தெரியுதா, அந்த பாட்டு எப்டி அவ்ளோ அருமையாக வந்துச்சூன்னு?
- நவிலன்
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அருமையான பாடல் அருமையான
காட்சி அமைப்பு சிவாஜி நடிப்பு சரோஜா தேவி துடிப்பு பாலும் பழமும்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017
23.04.2018
எம்.ஜி.ஆர். நடிச்ச நம் நாடு படத்துக்கு ஜம்புலிங்கம் எப்படி டைரக்டக்கர் ஆனார் தெரியுமோ?
எங்க வீட்டு பிள்ளை படத்தை கொஞ்ச நாள்ல எடுத்து முடிச்சுட்டாங்க. 1965 பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்யணும்னு தீவிரமா வேல செஞ்சுட்டு இருந்தாங்க. ஆனாகூட, படம் ரிலீஸாக நாளாகும்போல தெரிஞ்சுது. அந்த சமயத்தில, டைரக்டக்கர் ஜம்புலிங்கம்தான், படத்தின் எடிட்டிங்ல, கூடமாட உதவி செஞ்சு, படத்தை சீக்கிரம் ரிலீஸ் ஆக காரணமா இருந்தாராம். அதான் எம்.ஜி.ஆர். நம் நாடு படத்தை டைரக்ட் செய்ய ஜம்புவுக்கு வாய்ப்பு கொடுத்தார். தெரிஞ்சுதோ? நானும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.
**************
SunLife சேனல்ல சிவாஜி கணேசன் நடிச்ச உத்தமபுத்திரன் படத்தை பார்த்தேன். அப்பப்போ இந்த தகவல்களின் ஸ்ட்டில் போட்டாங்க.
சிவாஜி கணேசன் நடிச்சு உத்தமபுத்திரன் ரிலீஸ் ஆன நேரத்ல, ‘எம்.ஜி.ஆர். நடிச்ச உத்தமபுத்திரன்’னு ஒரு வால்போஸ்ட் ஒட்டப்பட்டிருந்துச்சு. அப்புறமா ‘எம்.ஜி.ஆர். நடிச்ச நாடோடி மன்னன்’னு பேர மாத்தி வால்போஸ்ட் ஒட்டப்பட்டுச்சாமே.
உத்தமபுத்திரன் படத்லதான் முதல் முதலா zoom கேமரா உபயோகப்படுத்தினாங்களாம்.
முதல் முதலா உத்தமபுத்திரன் படத்லதான் ராக் & ரோல் ஸ்டைல்ல டான்ஸ் ஆடினாங்களாம்.
Heezulia
எம்.ஜி.ஆர். நடிச்ச நம் நாடு படத்துக்கு ஜம்புலிங்கம் எப்படி டைரக்டக்கர் ஆனார் தெரியுமோ?
எங்க வீட்டு பிள்ளை படத்தை கொஞ்ச நாள்ல எடுத்து முடிச்சுட்டாங்க. 1965 பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்யணும்னு தீவிரமா வேல செஞ்சுட்டு இருந்தாங்க. ஆனாகூட, படம் ரிலீஸாக நாளாகும்போல தெரிஞ்சுது. அந்த சமயத்தில, டைரக்டக்கர் ஜம்புலிங்கம்தான், படத்தின் எடிட்டிங்ல, கூடமாட உதவி செஞ்சு, படத்தை சீக்கிரம் ரிலீஸ் ஆக காரணமா இருந்தாராம். அதான் எம்.ஜி.ஆர். நம் நாடு படத்தை டைரக்ட் செய்ய ஜம்புவுக்கு வாய்ப்பு கொடுத்தார். தெரிஞ்சுதோ? நானும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.
**************
SunLife சேனல்ல சிவாஜி கணேசன் நடிச்ச உத்தமபுத்திரன் படத்தை பார்த்தேன். அப்பப்போ இந்த தகவல்களின் ஸ்ட்டில் போட்டாங்க.
சிவாஜி கணேசன் நடிச்சு உத்தமபுத்திரன் ரிலீஸ் ஆன நேரத்ல, ‘எம்.ஜி.ஆர். நடிச்ச உத்தமபுத்திரன்’னு ஒரு வால்போஸ்ட் ஒட்டப்பட்டிருந்துச்சு. அப்புறமா ‘எம்.ஜி.ஆர். நடிச்ச நாடோடி மன்னன்’னு பேர மாத்தி வால்போஸ்ட் ஒட்டப்பட்டுச்சாமே.
உத்தமபுத்திரன் படத்லதான் முதல் முதலா zoom கேமரா உபயோகப்படுத்தினாங்களாம்.
முதல் முதலா உத்தமபுத்திரன் படத்லதான் ராக் & ரோல் ஸ்டைல்ல டான்ஸ் ஆடினாங்களாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017
23 .04 .2018
ராமு 1966
நல்ல விஷயங்கள் செய்றதுக்கு நல்ல நேரம் பாக்குறாங்கல்ல. சினிமா மட்டும் என்ன விதிவிலக்கா? அதுக்கும் நாள், கெழமல்லாம் பாக்குற பழக்கம் இருக்குது. எதுக்கு, படம் ஆரம்பிக்குதுக்கு முன்னால பூஜை செய்வாங்க. அதுக்குத்தான் அதெல்லாம் பாக்குறாங்க. அதுக்கு முக்கியமான ஒருத்தர் இருக்கிறாரே. ஜோஸியர், அவரே.............தான். அவர கூப்டுவாங்க. இது மட்டுமா? எதைல்லாம் தேடி போறாங்க பாருங்க. வெற்றி பெற்ற ஹீரோ, டைரக்டர், நிறைய படங்கள் நிறைய நாள் ஓடின தியேட்டர் இதைல்லாம் கூட தேடி அலைவாங்க. இப்படி ஒரு கண்மூடித்தனமான செண்ட்..............................................டிமெண்ட்.
ஆனா இப்படி சென்ட்டிமென்ட் பாக்காம எடுக்கப்பட்ட படம் ராமு.
குழந்தையும் தெய்வமும் படம் ஹிந்தியில உருவாயிட்டிருந்த சமயம். ஷூட்டிங் பம்பாய்ல. ஏ.வி.எம். நிறுவன குழு பாம்பாய்க்கு கார்ல போயிட்டிருந்தாங்க.
பின்னே என்ன நடந்தா போவாங்க?
அது யாரு நடுவால. சும்மா இருங்கப்பா, flow போயிரும்.
பம்பாய்க்கு கார்ல போனாங்களா? ஆமா போனாங்க. போன வழியில சொவத்ல ஒட்டியிருந்த வால்போஸ்ட்டையெல்லாம் பாத்துட்டே............................. போனாங்க. சினிமாகாரங்களாச்சே. பழக்கதோஷம். டக்குன்னு ஒரு சினிமா போஸ்ட்டர் ஏ.வி.எம். சரவணன் கண்ணுல பட்டுச்சு. அந்த போஸ்ட்டர்ல, கிஷோர் குமார் படமும், ஒரு சின்ன பையன் படமும் இருந்துச்சு. அவங்க காரை பம்பாய் டிரைவர் யஷ்வந்த் ஓட்டிட்டு வந்தார் போல. அந்த போஸ்ட்டரை பத்தி, அந்த ட்ரைவர்ட்ட விசாரிச்சார் சரவணன்.
“இது என்ன படம்? நல்லா ஓடுதா?”
“இந்த படத்தோட பேர் ‘Dhoor Gagan Ki Chaao Mein’. கிஷோர் குமார் ஹீரோ. இது ஒரு கூங்கா படம் சார். படம் ஃபிளாப்.”
“அதென்னப்பா கூங்கா?”
“கூங்கான்னா செவிட்டு ஊமை சார். இந்த படத்ல வர்ற அந்த சின்ன பையன் செவிட்டு ஊமை பையன். இப்டீல்லாம் படம் எடுத்தா ஓடாது சார்.”
ஆனா சரவணனுக்கு அந்த போஸ்ட்டர் மேல பயங்கரமான ஒரு இதுவாயிருச்சு. அவருக்கு பம்பாய்ல ஒரு கிளை அலுவலகம் இருக்குல்ல?
“எங்களுக்கு எப்டி தெரியும்?”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்? இப்பதானே தெரியும். எடைல பேசாதீங்க. நான் சொல்றத மட்டும் கேட்டுட்டே....................... இருங்க”
“சரி சொல்லு சொல்லு.”
பம்பாய்ல இருக்கிற கிளை ஆபீஸ் நிர்வாகிய கூப்ட்டார்.
“இந்த படத்தை தமிழ்ல்ல தயாரிக்கலாம்னு இருக்கேன். ரைட்ஸ் கெடைக்குமான்னு விசாரிச்சு பாருங்களேன்” ன்னு சரவணன் நிர்வாகிட்ட சொன்னார். நிர்வாகி நேரடியாவே ஹிந்தி பட கம்பெனிக்கு போய்ட்டார்.
“ஏ.வி.எம் நிறுவனத்தார் இந்த படத்தை தமிழ்ல எடுக்கணுமாம். ரைட்ஸ் குடுப்பீங்களா?”
“அடடா, இப்ப வந்து கேக்குறீங்களே. ஏற்கனவே வீனஸ் பிக்ச்சர்ஸ் மேனேஜர் சுப்பிரமணியம் இந்தப் படத்தோட உரிமைய வாங்கிட்டு போயிட்டாரே.”
சரவணன் விட்.............டலியே. ஹிந்தி குழந்தையும் தெய்வமும் படம் ஷூட்டிங் முடிஞ்சுது. எல்லாரும் சென்னைக்கு வந்துட்டாங்க. சரவணன் தன் ப்ரொடக் ஷன் மேனேஜரை கூப்ட்டார். வீனஸ் பிக்ச்சர்ஸ்ட்ட பேச சொல்லி அனுப்பினார். அவரும் போய் பேசிட்டு வந்தார்.
“வீனஸ் பிக்ச்சர்ஸ் சுப்பிரமணியம்தான் இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கார். ஆனா வீனஸ் பிக்ச்சர்ஸ் அவருக்கு ஃபைனான்ஸ் கொடுக்க மறுத்துட்டாங்களாம். தவிர, இந்த படம் ஓடாதுன்னு சொன்னாங்களாம். அதனால சுப்பிரமணியம் அந்த படத்த தமிழ்ல எடுக்கலியாம். அப்புறம் என்ன, நமக்கு ரைட்ஸ் கொடுப்பதா சொல்லிட்டார். ஆனா என்ன, அவர் பத்தாயிரத்துக்கு வாங்கின படத்துக்கு, கூட ஐயாயிரம் கேக்குறார், அம்புட்டுதான்” இப்டி அந்த நிர்வாகி சொல்லி முடிச்சார்.
சரவணன் எப்படியாவது அந்த படத்தை தமிழ்ல எடுக்கணும்னு முடிவு செஞ்சுட்டார். அதனால பதினஞ்சாயிரம் அவருக்கு பெரிய விஷயமா தெரியல. சுப்பிரமணித்துட்ட இருந்து ரைட்ஸ் வாங்கிட்டார்.
ஏ.வி.எம். செட்டியார், குமரன், முருகன், கிருஷ்ணன், பஞ்சு, திருலோகசந்தர், ஜாவர் சீதாராமன் இம்புட்டு பேரும் ஹிந்தி படத்த தியேட்டர்ல போட்டு பாத்திருக்காங்க.
கிருஷ்ணன், பஞ்சு : படம் வேஸ்ட்.
ஜாவர் : அந்த பையன் பிறவியிலேயே ஊமை. இத வச்சு எப்டி இன்ட்ரஸ்ட்டிங்கா திரைக்கதை எழுதுறது?
சரவணன் : ஏன், நம்ம கதைய இன்ட்ரஸ்ட்டிங்கா மாத்தறது. பையன் பிறவியிலேயே ஊமை, இல்ல. இடையில ஒரு விபத்துல ஊமை ஆயிட்டான்னு சொல்லி, அந்த விபத்து என்னான்னு ஒரு ஃப்ளாஷ்பேக் கதைய வச்சுருங்க.
ஜாவர் : அட, இப்டி நான் யோசிக்கவே இல்லியே. ஆமா, நீங்க சொல்றமாதிரி திரைக்கதை எழுதினா, படம் நல்ல வரும். படத்தை பார்ப்பவங்களுக்கு, என்ன நடந்துச்சூன்னு தெரிய ஆசை வரும்.
அம்புட்டுதான், படத்தை தமிழ்ல எடுக்கிற வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. ஜெமினி கணேசன்ட்ட ஒப்பந்தம் போட்டு, சம்பளத்தை பேசினாங்க. பேரம் பேசி முடிஞ்சுது.
சரவணன் : இன்னிக்கி செவ்வாகிழம. பணத்தை வெளியே தரகூடாது. அதுவும் இப்போ ராகுகாலம். எங்களுக்கு பிரச்ன இல்ல. உங்களுக்கு எப்படி?
ஜெமினி கணேசன் : நீங்க வந்த இந்த நாள் நல்ல நாள்தான். எனக்கு பணம் கொடுக்கிற நேரம் நல்ல நேரம்தான். அட்வான்ஸ் கொடுங்க வாங்கிக்கிறேன்.
ஜெமினி கணேசன் மூணு மாசமா எந்த படமும் இல்லாம, வீட்ல சும்மா இருந்திருக்கார். அதனாலதான் எந்த சென்ட்டிமென்ட்டும் பாக்காம பணத்தை வாங்கிகிட்டாரோ?
படத்துக்கு ராமுன்னு பேர் வச்சாச்சு. சிலர் இந்த பேர் சரியில்லேன்னு சொன்னாங்க. ஆனாலும் பேரை மாத்தல.
செவ்வாகெழம, அதுவும் ராகுகாலம், பண பரிமாற்றம் ஆயிருச்சு. ஜெமினி கணேசனுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு. ராமு படத்துக்கப்புறம் அவருக்கு எ................ட்டு படம் book ஆச்சு.
படத்ல எல்லா................... பாட்டும் இனிமை. எம்.எஸ்.வி. ம்யூஸிகாச்சே. இனிமையான ட்யூன்களை கேட்டு வாங்கியவர் ஏ.வி.எம்.குமரன்.
ஊமை பையனாக அருமையாக நடிச்சு பேர் வாங்கிய சுட்டி பையன் ராஜ்குமார். படம் ஓஹோன்னு ஓடி, சிறந்த மாநில படத்திற்கான தேசிய விருது கெடச்சுது. பணத்தையும் அள்........................ளி கொடுத்துச்சு. ஏ.வி.எம். சரவணன், குமரன், முருகன் மூணு பேரும் சேந்து தயாரிச்சாங்க.
மூடநம்பிக்கைல மூழ்கி இருந்த சினிமாக்காரங்களுக்கு இடைல, இந்தப் படம் அதையெல்லாம் ஒடச்சுட்டு சாதனை படச்ச படம், ராமு.
- Oneindia Tamil
Heezulia
ராமு 1966
நல்ல விஷயங்கள் செய்றதுக்கு நல்ல நேரம் பாக்குறாங்கல்ல. சினிமா மட்டும் என்ன விதிவிலக்கா? அதுக்கும் நாள், கெழமல்லாம் பாக்குற பழக்கம் இருக்குது. எதுக்கு, படம் ஆரம்பிக்குதுக்கு முன்னால பூஜை செய்வாங்க. அதுக்குத்தான் அதெல்லாம் பாக்குறாங்க. அதுக்கு முக்கியமான ஒருத்தர் இருக்கிறாரே. ஜோஸியர், அவரே.............தான். அவர கூப்டுவாங்க. இது மட்டுமா? எதைல்லாம் தேடி போறாங்க பாருங்க. வெற்றி பெற்ற ஹீரோ, டைரக்டர், நிறைய படங்கள் நிறைய நாள் ஓடின தியேட்டர் இதைல்லாம் கூட தேடி அலைவாங்க. இப்படி ஒரு கண்மூடித்தனமான செண்ட்..............................................டிமெண்ட்.
ஆனா இப்படி சென்ட்டிமென்ட் பாக்காம எடுக்கப்பட்ட படம் ராமு.
குழந்தையும் தெய்வமும் படம் ஹிந்தியில உருவாயிட்டிருந்த சமயம். ஷூட்டிங் பம்பாய்ல. ஏ.வி.எம். நிறுவன குழு பாம்பாய்க்கு கார்ல போயிட்டிருந்தாங்க.
பின்னே என்ன நடந்தா போவாங்க?
அது யாரு நடுவால. சும்மா இருங்கப்பா, flow போயிரும்.
பம்பாய்க்கு கார்ல போனாங்களா? ஆமா போனாங்க. போன வழியில சொவத்ல ஒட்டியிருந்த வால்போஸ்ட்டையெல்லாம் பாத்துட்டே............................. போனாங்க. சினிமாகாரங்களாச்சே. பழக்கதோஷம். டக்குன்னு ஒரு சினிமா போஸ்ட்டர் ஏ.வி.எம். சரவணன் கண்ணுல பட்டுச்சு. அந்த போஸ்ட்டர்ல, கிஷோர் குமார் படமும், ஒரு சின்ன பையன் படமும் இருந்துச்சு. அவங்க காரை பம்பாய் டிரைவர் யஷ்வந்த் ஓட்டிட்டு வந்தார் போல. அந்த போஸ்ட்டரை பத்தி, அந்த ட்ரைவர்ட்ட விசாரிச்சார் சரவணன்.
“இது என்ன படம்? நல்லா ஓடுதா?”
“இந்த படத்தோட பேர் ‘Dhoor Gagan Ki Chaao Mein’. கிஷோர் குமார் ஹீரோ. இது ஒரு கூங்கா படம் சார். படம் ஃபிளாப்.”
“அதென்னப்பா கூங்கா?”
“கூங்கான்னா செவிட்டு ஊமை சார். இந்த படத்ல வர்ற அந்த சின்ன பையன் செவிட்டு ஊமை பையன். இப்டீல்லாம் படம் எடுத்தா ஓடாது சார்.”
ஆனா சரவணனுக்கு அந்த போஸ்ட்டர் மேல பயங்கரமான ஒரு இதுவாயிருச்சு. அவருக்கு பம்பாய்ல ஒரு கிளை அலுவலகம் இருக்குல்ல?
“எங்களுக்கு எப்டி தெரியும்?”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்? இப்பதானே தெரியும். எடைல பேசாதீங்க. நான் சொல்றத மட்டும் கேட்டுட்டே....................... இருங்க”
“சரி சொல்லு சொல்லு.”
பம்பாய்ல இருக்கிற கிளை ஆபீஸ் நிர்வாகிய கூப்ட்டார்.
“இந்த படத்தை தமிழ்ல்ல தயாரிக்கலாம்னு இருக்கேன். ரைட்ஸ் கெடைக்குமான்னு விசாரிச்சு பாருங்களேன்” ன்னு சரவணன் நிர்வாகிட்ட சொன்னார். நிர்வாகி நேரடியாவே ஹிந்தி பட கம்பெனிக்கு போய்ட்டார்.
“ஏ.வி.எம் நிறுவனத்தார் இந்த படத்தை தமிழ்ல எடுக்கணுமாம். ரைட்ஸ் குடுப்பீங்களா?”
“அடடா, இப்ப வந்து கேக்குறீங்களே. ஏற்கனவே வீனஸ் பிக்ச்சர்ஸ் மேனேஜர் சுப்பிரமணியம் இந்தப் படத்தோட உரிமைய வாங்கிட்டு போயிட்டாரே.”
சரவணன் விட்.............டலியே. ஹிந்தி குழந்தையும் தெய்வமும் படம் ஷூட்டிங் முடிஞ்சுது. எல்லாரும் சென்னைக்கு வந்துட்டாங்க. சரவணன் தன் ப்ரொடக் ஷன் மேனேஜரை கூப்ட்டார். வீனஸ் பிக்ச்சர்ஸ்ட்ட பேச சொல்லி அனுப்பினார். அவரும் போய் பேசிட்டு வந்தார்.
“வீனஸ் பிக்ச்சர்ஸ் சுப்பிரமணியம்தான் இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கார். ஆனா வீனஸ் பிக்ச்சர்ஸ் அவருக்கு ஃபைனான்ஸ் கொடுக்க மறுத்துட்டாங்களாம். தவிர, இந்த படம் ஓடாதுன்னு சொன்னாங்களாம். அதனால சுப்பிரமணியம் அந்த படத்த தமிழ்ல எடுக்கலியாம். அப்புறம் என்ன, நமக்கு ரைட்ஸ் கொடுப்பதா சொல்லிட்டார். ஆனா என்ன, அவர் பத்தாயிரத்துக்கு வாங்கின படத்துக்கு, கூட ஐயாயிரம் கேக்குறார், அம்புட்டுதான்” இப்டி அந்த நிர்வாகி சொல்லி முடிச்சார்.
சரவணன் எப்படியாவது அந்த படத்தை தமிழ்ல எடுக்கணும்னு முடிவு செஞ்சுட்டார். அதனால பதினஞ்சாயிரம் அவருக்கு பெரிய விஷயமா தெரியல. சுப்பிரமணித்துட்ட இருந்து ரைட்ஸ் வாங்கிட்டார்.
ஏ.வி.எம். செட்டியார், குமரன், முருகன், கிருஷ்ணன், பஞ்சு, திருலோகசந்தர், ஜாவர் சீதாராமன் இம்புட்டு பேரும் ஹிந்தி படத்த தியேட்டர்ல போட்டு பாத்திருக்காங்க.
கிருஷ்ணன், பஞ்சு : படம் வேஸ்ட்.
ஜாவர் : அந்த பையன் பிறவியிலேயே ஊமை. இத வச்சு எப்டி இன்ட்ரஸ்ட்டிங்கா திரைக்கதை எழுதுறது?
சரவணன் : ஏன், நம்ம கதைய இன்ட்ரஸ்ட்டிங்கா மாத்தறது. பையன் பிறவியிலேயே ஊமை, இல்ல. இடையில ஒரு விபத்துல ஊமை ஆயிட்டான்னு சொல்லி, அந்த விபத்து என்னான்னு ஒரு ஃப்ளாஷ்பேக் கதைய வச்சுருங்க.
ஜாவர் : அட, இப்டி நான் யோசிக்கவே இல்லியே. ஆமா, நீங்க சொல்றமாதிரி திரைக்கதை எழுதினா, படம் நல்ல வரும். படத்தை பார்ப்பவங்களுக்கு, என்ன நடந்துச்சூன்னு தெரிய ஆசை வரும்.
அம்புட்டுதான், படத்தை தமிழ்ல எடுக்கிற வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. ஜெமினி கணேசன்ட்ட ஒப்பந்தம் போட்டு, சம்பளத்தை பேசினாங்க. பேரம் பேசி முடிஞ்சுது.
சரவணன் : இன்னிக்கி செவ்வாகிழம. பணத்தை வெளியே தரகூடாது. அதுவும் இப்போ ராகுகாலம். எங்களுக்கு பிரச்ன இல்ல. உங்களுக்கு எப்படி?
ஜெமினி கணேசன் : நீங்க வந்த இந்த நாள் நல்ல நாள்தான். எனக்கு பணம் கொடுக்கிற நேரம் நல்ல நேரம்தான். அட்வான்ஸ் கொடுங்க வாங்கிக்கிறேன்.
ஜெமினி கணேசன் மூணு மாசமா எந்த படமும் இல்லாம, வீட்ல சும்மா இருந்திருக்கார். அதனாலதான் எந்த சென்ட்டிமென்ட்டும் பாக்காம பணத்தை வாங்கிகிட்டாரோ?
படத்துக்கு ராமுன்னு பேர் வச்சாச்சு. சிலர் இந்த பேர் சரியில்லேன்னு சொன்னாங்க. ஆனாலும் பேரை மாத்தல.
செவ்வாகெழம, அதுவும் ராகுகாலம், பண பரிமாற்றம் ஆயிருச்சு. ஜெமினி கணேசனுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு. ராமு படத்துக்கப்புறம் அவருக்கு எ................ட்டு படம் book ஆச்சு.
படத்ல எல்லா................... பாட்டும் இனிமை. எம்.எஸ்.வி. ம்யூஸிகாச்சே. இனிமையான ட்யூன்களை கேட்டு வாங்கியவர் ஏ.வி.எம்.குமரன்.
ஊமை பையனாக அருமையாக நடிச்சு பேர் வாங்கிய சுட்டி பையன் ராஜ்குமார். படம் ஓஹோன்னு ஓடி, சிறந்த மாநில படத்திற்கான தேசிய விருது கெடச்சுது. பணத்தையும் அள்........................ளி கொடுத்துச்சு. ஏ.வி.எம். சரவணன், குமரன், முருகன் மூணு பேரும் சேந்து தயாரிச்சாங்க.
மூடநம்பிக்கைல மூழ்கி இருந்த சினிமாக்காரங்களுக்கு இடைல, இந்தப் படம் அதையெல்லாம் ஒடச்சுட்டு சாதனை படச்ச படம், ராமு.
- Oneindia Tamil
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017
23.04.2018
ஒட்..............................டனே பதில் வந்தாலே நீங்க மட்டும்தான்னு தெரியும்.
நன்றி செந்தில்.
Heezulia
ஒட்..............................டனே பதில் வந்தாலே நீங்க மட்டும்தான்னு தெரியும்.
நன்றி செந்தில்.
Heezulia
- Sponsored content
Page 24 of 29 • 1 ... 13 ... 23, 24, 25 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 29
|
|