புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
bala_t
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
6 Posts - 1%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 18 of 29 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 29, 2018 11:42 pm

29.01.2018

ஓஹோன்னு ஓடிய படம்.  

படத்தின் பேரை வைக்கும்போது எட்டு எழுத்து வராம பாத்துக்குவாங்களாம்.  இலக்கணப்படி 'தங்கச் சுரங்கம்' னு வரணும்.  ஒன்பது எழுத்து வரும்.  

ஆனா இந்தப் படத்துக்கு எட்டு எழுத்து வருது, 'தங்கசுரங்கம்'னு. ஒற்றெழுத்து மிஸ்ஸிங்.  எல்லாப் படங்களின் பேரையும் இலக்கணப்படிதான் வைக்கிறாங்களா? 

ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நயாகரா நீர்வீழ்ச்சி எல்லாம் தேவையில்லியாம். பத்தடிக்குப் பத்தடீல ஒரு இடத்தைக் கொடுத்துட்டா போதுமாம். அட்............டகா..........சமா படமாக்கி தந்துடுவாராம்.

குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டி, ['வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'], 
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் கார், ['போதுமோ இந்த இடம்'], 
மூன்றெழுத்தில் சின்ன பொட்டி ['பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி'] பாட்டுக்களை சூப்பரா தந்த இயக்குனர் ராமண்ணா, 

தங்கசுரங்கம் படத்திலும் இப்படி சேட்டை செஞ்சிருக்கார்.
ஆமாங்க. 

"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"
பாடல் முழுசுமா கிணத்துக்குள்ளேயே எடுத்திருப்பாராம். 

இன்னொரு விஷயமாம். பாரதி, சிவாஜிக்கு ஹீரோயினாவும், வில்லனுக்கு OAK தேவரும் சூட் ஆகலேன்னு ஜனங்க பேசிக்கிட்டாங்களாம்.  பாரதிக்குப் பதிலா ஜெயலலிதாவும், வில்லனுக்கு நம்பியாரும் போட்டிருந்தா படத்தின் ரேஞ்சே ................................. வேறேன்னு பேசிக்கிட்டாங்களாம்.  

அந்தக் காலத்தில சென்னை, மலேசியா, சிங்கப்பூர் இந்த ஊருங்களுக்கு இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' னு பேசஞ்சர் கப்பல் ஒண்ணு போயிட்டு வந்துட்டு இருந்துச்சாம்.  அது சென்னை துறைமுகத்திலே நிக்கும்போது தான் இந்தப் படத்தின் fight ஸீனை எடுத்தாங்களாம். 

இந்தப் படத்தில்தான் சிவாஜி CBI அதிகாரியா நடிச்சார். ஹீரோயிஸமாக, சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை, முதல் முதலாக வந்தது இந்தப் படத்தில்தானாம். 

MGR ஃபார்முலால்லாம் சிவாஜிக்கு சரிப்பட்டு வராதூன்னு நெனச்சாங்களாம். அந்த நெனப்பு தப்புன்னு, சிவாஜி அசா..............ல்ட்டா  சாதிச்ச படம். 


Heezulia  மீண்டும் சந்திப்போம்  

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 12:04 am

29.01.2018
 
சிவாஜியும், பாலாஜியும் சேர்ந்து நடிச்ச படங்களிலே இந்தப் படமும் ஒண்ணு.  இந்தப் படத்தில "இனிமே திருட மாட்டேன்"னு கேண்டில் நெருப்பு மேலே கைய வச்சு சிவாஜி சத்தியம் செய்ற மாதிரி ஒரு ஸீன் வருமாம். டைரக்டர் திருலோகசந்தர். என்ன படம், என்................ன படம்? திருடன் 1969.

டைரக்டர் : கையில நெருப்பு படாமேயே சீன் எடுத்துரலாமே சார்.

சிவாஜி : சேச்சே, அப்டீல்லாம் வேண்டாம்.  நெருப்பில கைய வச்சு நடிச்சாத்தான் தத்ரூபமா இருக்கும்.

டைரக்டர் : சரி சார், பாத்துரலாம்.

கேமரா ஓட ஆரம்பிச்சுருச்சாம்.   சிவாஜியும் நெருப்பின் மேலே கையை வச்சாராம். 

சிவாஜி : ஆ....................  ச்சே.................................ச்சு ச்சு
அலறிட்டாராம் சிவாஜி.  

உடனே என்ன நடந்சுன்னு நெனக்கிறீங்க. 
 
டைரக்டர் : Pack up.

சிவாஜி : அதெல்லாம் வேண்டாம். இதோ பாருங்க சின்ன காயம்தான்.

டைரடக்கர் பேக்கப்பே செஞ்சுட்டாராம்.  அதுமட்டுமாங்க.  எல்லாரும் பதறி போய்ட்டாங்களாம்.  சிவாஜியின் குடும்ப டாக்டர், பாலகிருஷ்ணன். அவரே தகவலரிஞ்சு வந்துட்டார்னா பாத்துக்கோங்களேன்.  அவர் வந்து காயத்துக்கு மருந்து போட்டாராம்.  புண் ஆற ரெண்...........டு நாளாச்சாம்.  அதுக்கப்புறமா அந்த ஸீன் எடுத்தாங்களாம்.  சரியா ...................... போச்சு போங்க.

Heezulia  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 12:49 am

30.01.2018

சாரதாவுக்கு முதன் முதலா 'ஊர்வசி' தேசிய விருது கெடச்ச படம்.  அவர் தமது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடிக்க சான்ஸ் கெடச்சது இந்தப் படத்தில் தானாம். ஆனா தமிழ் படமில்ல. அப்போ? மலையாளத்துல. 

இவர்கிட்ட  சில ப்ளஸ்கள் இருந்துச்சாம்.  அதுல ரெண்டு - ஓவர் ஆக்டிங் இல்ல, ஹோம்லி லுக். இந்த ரெண்டும்தானாம். அவர் என்னவோ தெலுங்கு பெண்ணாம்.  ஆனா ...................... பிரபலமடஞ்சது மலையாள படங்களிலே தானாம்.  மலையாளத்தில 1968ல  ஒரு படம் அவருக்கு 'ஊர்வசி' பட்டம் வாங்கி கொடுத்துச்சாம், துலாபாரம்.  

அந்தக் காலத்தில கிளாமரா நடிக்கிற நடிகைங்களுக்குத்தான் சான்ஸ் கெடைக்குமாம்.  அந்த நேரத்தில் மூணு பிள்ளைங்களுக்கு அம்மாவா, அதுவும் வறுமையில வாடும் பெண்ணாக நடிச்சிருந்தாராம்.  

டைரக்டர் வின்சென்ட் சாரதாட்ட வந்து "நீங்க மூணு பிள்ளைங்களுக்குத் தாய்,  ஏழ்மைல  இருக்கிற ஒரு பெண்.  சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம வறுமைல வாடும் ஒரு குடும்பம்.  அதுக்கேத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கோங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்.  

அதைப் புரிஞ்சு, உணர்ச்சி பூர்வமா நடிச்சு, எல்லார்கிட்டேயும் பாராட்டைப் பெற்றாராம்.  இந்த மலையாளப் படத்தை அவரது 22 வயசுல நடிச்சிருந்தாராம். 
 
சாரதா சொன்னாராம், "நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருந்தாலும் என்னால் மறக்க முடியாத படம் துலாபாரம்தான்". 

இந்தப் படத்த தமிழில எடுக்க ராமண்ணா யோசிச்சாராம்.  சாரதாவைத் தவிர வேற யாரையும் அந்தப் படத்தில நடிக்க வைக்க அவருக்கு இஷடமில்லியாம்.  மலையாளம் படத்தை இயக்கிய வின்சென்ட் ஒரு ஒளிப்பதிவாளராம்.  அவரும் சாரதாவையே தமிழில நடிக்க வைக்க ஒத்துக்கிட்டாராம்.  'துலாபாரம்' னே பேர் வச்சாங்களாம்.  

தெலுங்கில 'மனசுலு மாறாலி' பேர்லயும், இந்தியில 'சமாஜ் கோ பதல் டாலோ' [समाज को बदल डालो] பேர்லயும்  உருவாச்சாம்.  இந்திப் படத்தை வாசன் தயாரிச்சாராம்.  

இதுல முக்கியமான விஷயம் என்னான்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எல்லா மொழிலேயும் சாரதாவே................. நடிச்சிருந்தாராம். நா....................லு மொழிகளிலேயும் வெற்றிகரமா ஓடிய படமாம். 



ஹீஸுலை  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 1:54 am

30.01.2018

ஆஸ்கார் விருதுக்கு முதல் முதலா செலெக்ட் செய்யப்பட்ட தமிழ் திரைப்படமாம்.

இந்தப் படத்தில சிவாஜி அவலட்சணமான முகம் இருப்பதாக நடிச்சிருப்பார்ல?  அதுக்கு முகத்தில முட்டை, அரக்கு போன்ற ஏதேதோ பொருள்களை யூஸ் செஞ்சு அவருக்கு மேக்கப் போட்டாங்களாம்.  மேக்கப் போட்ட பின்னால,  முகத்தை இறுக்கும் அளவுக்கு வலி இருந்துச்சாம்.  அந்த வலியையும் பொறுத்துகிட்டு சிவாஜி நடிச்சார்னு திருலோகச்சந்தர் சொன்னாராம்.  அந்தச் சமயத்தில டைரக்டரே சிவாஜிகிட்டே பேச பயப்படுவாராம்.  இப்படி கஷ்டப்பட்டு நடிச்ச படம் நூறு நாட்களுக்கு மேலேயே ஒடுச்சாம்ல.  அதுதாங்க, தெய்வமகன் 1969.

இதுல சிவாஜிக்கு ஒரு பெருமையான விஷயம் ஒண்ணு இருக்கே.  

ஆஸ்கார் விருதுக்காக இந்தப் படம் செலெக்ட் ஆச்சுல்ல?  

அப்படீன்னா இது வெளிநாடுகளிலே திரையிடுவாங்கல்ல ?  

அதை வெளிநாட்டவங்க பாப்பாங்கல்ல?  

அப்படி பாத்தப்போ, அதுல சிவாஜி நடிச்ச மூணு வேஷங்களையும், தனித்தனியா மூணு பேரு நடிச்சிருக்காங்கன்னு நெனச்சுட்டாங்களாம்.  மூணு பேரும் ஒரே ஆள்தான்னு சொன்னப்போ நம்ப மறுத்துட்டாங்களாம்.  எப்படி இருக்கு பாருங்க.  அந்த அளவுக்கு சிவாஜியின் நடிப்பு இருந்திருக்குல்ல!!


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 2:17 am

30.01.2018

இந்தப் படம் ஒரு வங்கத் திரைப் படத்தின் தழுவலாம்.  வங்கத்திலே இருந்து இந்திக்குப் போயி, அங்கே இருந்து தமிழுக்கு வந்சுச்சாம்.  அந்த சமயத்திலே இந்தியிலே இருந்து தமிழுக்கு படங்கள் வந்தா, இந்திப் படங்களிலே கவாலி மாதிரி பாட்டு இருக்கும்ல, அது தமிழிலும் இருக்குமாம்.  

(உ-ம்) வந்தவர்கள் வாழ்க - எங்கிருந்தோ வந்தாள், மாப்பிள்ளையைப் பாத்துக்கோடி மைனாக்குட்டி - நீதி.  

ஜெமினிக்கு இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது தமிழ்நாட்டிலே இருந்து கெடச்சுதாமே. 


டைரக்டர்கள் இருக்காங்களே, அவங்க ஹீரோவோடுதான் ஒரு ஒப்பந்தம் வச்சுக்குவாங்களாம்.  ஆனா, பாலச்சந்தர் இருக்காகளே, அவக ஹீரோயின் கூட கூட்டணி வச்சு ஒரு சில படங்களை எடுத்தாராம்.  

எந்த ஹீரோயின்னு கண்டு பிடிச்சிருப்பீங்களே!  

கரீட்டுதான். சௌகார் ஜானகியாம்.  

சௌகார் ஜானகிக்கும் ஒரு ஆசை வந்திருச்சாம்.  அது இன்னாது?  அதுதான் படத்தைத் தயாரிப்பது.  டைரக் ஷனுக்கு யாரைச் செலக்ட் செஞ்சாராம்?  பாலச்சந்தரைத்தான்.   

சௌகார் என்ன செஞ்சார்?  செல்வி பிலிம்ஸ் னு ஒரு படக் கம்பெனியை ஆரம்பிச்சாராம்.  பெங்காலியிலேயும்,  இந்தியிலேயும் உருவான ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவு செஞ்சாங்களாம்.  அதுதான் 'காவியத் தலைவி 1970'.  இந்தப் படம் சௌகாரை கைவிட்டுருச்சு.  

இதிலே பேபி டாலி நடிச்சிருக்காங்களே, இவங்க யாராம்?  சுலட்சனாவாமே. பாலச்சந்தர் டைரக் ஷன்ல குட்டியா நடிச்சுட்டு, அப்புறமா அவர் டைரக் ஷன்லயே  சிந்து பைரவி படத்தில நடிச்சார்ல.  

காவியத்தலைவி படத்தில அந்த பேபி டாலி நடிச்ச ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்களேன்.  சுலட்சனாவைப் பார்க்கணுமே.  


Heezulia  மீண்டும் சந்திப்போம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 6:33 am

தெய்வமகன்,தங்கசுரங்கம் சிவாஜிக்கு கிரீடம் தரித்த படங்கள் தெய்வமகனில் கடைசியானின் சுட்டிதனம், அந்த இடுப்பை ஒடித்த நடை அபாரம்.

சௌகார்ஜானகி அவர்கள் காவியத்தலைவில் அவரின் மிடுக்கான தோற்றம் நடிப்பு அபாரம்.
அதில் கலெக்டர் தோற்றம் என்று நினைக்கிறேன் அவர் கணவர் ஜெமினி இவரில்
கீழ் பணியாற்றுவார் ஒரே பாசபோராட்டம்.

துலாபாரம் ஏவிஎம் ராஜன் சாரதாவின் காதல் சோகத்தின் உச்சம்
ஒரே அழுகை தான் படம் முழுக்க.

நன்றி பேபி அரிய நல்ல கிடைக்கா பதிவுகள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 11:48 am

30.01.2018 

நன்றி முத்து சார். 

சௌகார் ஜானகியின் அந்த மிடுக்கான கலெக்டர் தோற்றம், காவியத்தலைவில இல்ல சார். இரு கோடுகள். ரெண்டுமே பாலசந்தரோடதுதான். ரெண்டிலேயும் ஜெமினி கணேசன். 

இரு கோடுகள் ரெண்டு பொண்டாட்டி கதை. சௌகார் ஜானகி & ஜெயந்தி.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 KojDbdxPQEiAknDSu6O2+irukodugal

காவியத் தலைவில தப்பான புருஷன்காரன்ட்ட தப்பி, பாடகி & டான்ஸராக  வாழறா.
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Q5HqHslQBKigQj3ndvcz+kaviyathalaivi 

இப்போ ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

Heezulia

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:33 pm

heezulia wrote:30.01.2018 

நன்றி முத்து சார். 

சௌகார் ஜானகியின் அந்த மிடுக்கான கலெக்டர் தோற்றம், காவியத்தலைவில இல்ல சார். இரு கோடுகள். ரெண்டுமே பாலசந்தரோடதுதான். ரெண்டிலேயும் ஜெமினி கணேசன். 

இரு கோடுகள் ரெண்டு பொண்டாட்டி கதை. சௌகார் ஜானகி & ஜெயந்தி.

காவியத் தலைவில தப்பான புருஷன்காரன்ட்ட தப்பி, பாடகி & டான்ஸராக  வாழறா.

இப்போ ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1258315
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி பேபி
இரண்டு படங்களும் குழப்பிக்கொண்டேன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 06, 2018 1:07 am

06.02.2018

இந்தப் படம் எடுக்கும்போது, கண்ணதாசன் ஒடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரீல இருந்தாராம். இந்தப் படத்துக்கு ஏற்கனவே கவிஞர் ரெண்டு பாட்டு எழுதிட்டாராம். இன்னும் ரெண்டு பாட்டு வேணுமேன்னு நெனச்சு, அவர் எப்போ ஆஸ்பத்திரில இருந்து வருவார்னு எல்லாரும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம். 

ஆனா, கவிஞர் பாட்டு எழுதுற நிலைல இல்லையாம். ஏற்கனவே கம்பெனி சரியா ஓடாம, நஷ்டம் அடைற நிலையில இருந்துச்சாம். பாலசந்தர் வைரமுத்துவை கூப்பிட்டாராம், இந்தப் படத்துக்கு பாட்டெழுத. ஆனா இது MSV க்கு பிடிக்கலியாம். 

பாலசந்தர் வைரமுத்துட்ட இந்தப் பாட்டுக்கான சூழ்நிலையை சொன்னாராம். உள்ளூர் இளைஞர்கள் தண்ணீர் பஞ்சம் உள்ள அவங்க ஊர்ல, மலையிலிருந்து வருகின்ற  மழைத்தண்ணீரை கொண்டு வர்றாங்க. இந்த சமயத்தில ஒரு அசரீரி பாட்டு வரணும். இந்த மூணு நிமிஷ பாட்டுல, வாய்க்கால் வெட்டி முடிக்கணும். அந்த அளவுக்கும், ஸ்பீட்  & feelings வேணும் இந்தப் பாட்டுல. 

"சரி, ஒரு ட்யூன் போட்டு கொடுப்போம், அவர் பாட்டு எழுதுறாரான்னு பார்ப்போம்னு" ன்னு MSV சொன்னாராம். அவர் ட்யூனை கொடுத்துட்டு, வைரமுத்துவை திரும்பி பார்த்தார். ட்யூனை ரசித்தார் வைரமுத்து. "இன்னொரு தடவை வாசிங்க" இது வைரமுத்து. 

MSV care பண்ணலியாம். அரை மணி நேரமா வேற  என்னத்தையோ பேசிட்டு இருந்தார். அப்புறமா, சவால் படத்துக்கு ம்யூசிக் போட வேண்டியதிருக்கு. ஒரு வாரம் கழிச்சு பார்க்கலாம் ன்னு கெளம்பிட்டாராம். 

பாலசந்தர் விடல. "இப்ப எனக்கு பாட்டு வேணுமே. ஷூட்டிங் போகணும்".


MSV : கவிஞர் வந்து பாட்டு எழுதணுமே. 

இப்படி சொல்லிட்டு அவர் ஆர்மோனியத்தை மூடப் போனாராம்.

வைரமுத்து : நான் வேணும்னா பல்லவி சொல்லட்டுமா. உங்களை மாதிரி பாட வராது. நான் பாடறேனே. 

வைரமுத்து பாடி காட்டியிருக்கார். அடுத்தநாள் அந்தப்  பாட்டு ரெகார்ட் ஆகிருச்சு. 

தண்ணீர் தண்ணீர் படத்தில "ஒன்றுபட்ட மக்களுண்டு, இன்று என்ன சிக்கலுண்டு" பாடல்.

 
இதை வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில பேசினதில ஒரு பகுதி. 

இந்தப் படத்தில எனக்கு பிடிச்ச வசனங்கள் :

ரெண்டு பேர் பேசிட்டு போறாங்க. A  & B ன்னு வச்சுக்குவோமே.


A : தண்ணிக்கு இந்த ஊர்ல இவ்ள பஞ்சம்னா, நீங்க அரசாங்கத்துக்கு எழுதி போட்டிருக்கலாமே. 


B : போடாம என்ன, கோவில்பட்டிக்கு போயி மந்திரிய நேரவே பாத்து மகசர் கொடுத்தோம். அவர் அத வாங்கி PAட்ட குடுத்தாஹ. PA, அத கலெக்டர்ட்ட குடுத்தாஹ. கெலெக்டர் அத ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸருக்கு அனுப்புனாஹ.  ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸர் அத க்ராம சேவகத்துக்கு அனுப்பினாஹ.

A : க்ராம  சேவக் என்ன செய்தாரு?

B : க்ராம சேவக் இந்த ஊருக்கு வந்து பாத்துபுட்டு, 

"வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸருக்கு எழுதி போட்டாஹ.

ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸரும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு கலெக்டருக்கு எழுதி போட்டாஹ. 

கலெக்டரும், "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு PA வுக்கு எழுதி போட்டாஹ. 

PA யும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு மந்திரீக்கு நோட்டு எழுதி வச்சாஹ. 

மந்திரீயும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு சட்டசபேல ஒத்துக்கிட்டாஹ.

கொஞ்சம் மௌனம். அப்புறமா,  


A : இந்த உண்மய கண்டுபிடிக்க அவுகளுக்கு அஞ்...........சு வருஷமாச்சு. 

B சத்தம் போ.........ட்டு சிரிச்சுட்டு : அந்த கோவத்திலதான் இந்த எலக் ஷன பாய்காட் பண்ணிட்டீங்களா?

A :[தலைய தடவிட்டே] எங்களால முடிஞ்சுது அவ்ளதான். 


Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 06, 2018 11:59 am

அணைத்து பதிவுகளும் படித்தேன் ரசித்தேன்



Sponsored content

PostSponsored content



Page 18 of 29 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக