புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_c10இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_m10இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_c10இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_m10இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_c10 
2 Posts - 6%
heezulia
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_c10இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_m10இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 6:28 am

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Sz6kCLh5To60qooO3pTi+0354eeb39628e9a6bfc1d76145a47601
சென்னை : இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளரை மனைவி, 2 மகள்களுடன் போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லரி நகை கடையின் மேல் தளத்தில் ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டம், ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த நாதுராம் (28) மற்றும் ஜோத்பூர் மாவட்டம் பிலாரா கிராமத்தை சேர்ந்த தினேஷ் சவுத்ரி (20) ஆகிய 2 பேர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அவர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் 5 ேபர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் ெசன்றது. அப்போது பாலி மாவட்டம் ஜெய்தரன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்புரா கலான் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, கடந்த 12ம் தேதி நள்ளிரவு நாதுராமை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் ஏற்பட்ட மோதலில் நாதுராம் மற்றும் அவரது உறவினர்கள் தனிப்படையினரை தாக்கினர். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் முனிேசகர் துப்பாக்கியை எடுத்த நாதுராம் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவானான். இதுகுறித்து பாலி மாவட்ட ஜெய்தரன் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நாதுராம் மனைவி மஞ்சு, காதலி திவ்யா உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாதுராமை பிடிக்க எஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுணா, ராஜல் ஆகியோரை ஜெய்தரன் போலீசார் பிகைது ெசய்தனர்
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 6:29 am

இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கடந்த 13ம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது, ‘‘நாதுராம் என்னை தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி என்னை பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை சுட்டு விட்டதாகவும், இதனால் நீ வெளியே வராமல் தலைமறைவாக இருக்கும்படி கூறினார். மற்ற எதுவும் நாதுராம் என்னிடம் பேசவில்லை. சென்னையில் கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் நாதுராமிடம்தான் உள்ளது. நான் அவனிடம் வேலை செய்கிறேன். கொள்ளையடிக்கப்பட்ட மதிப்பை பொறுத்து எனக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தருவார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று தனிப்படை போலீசாரிடம் திணேஷ் சவுத்ரி வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும் கொள்ளை சம்பவத்தில் இரண்டாவது முக்கிய குற்றவாளி என்பதால் தினேஷ் சவுத்ரிக்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்ட இடம் தெரியும் என்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தினேஷ் சவுத்ரியை நாதுராம் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொள்ளை கும்பலுடன் தொடர்பு
தனிப்படை போலீசார் கூறியதாவது: தலைமறைவாக உள்ள நாதுராம் தனக்கு தேவையான உதவிகளை பெற 7 முதல் 8 சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், நாதுராம் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிப்பதில் கில்லாடி என்பதால் அவனுக்கு நாடு முழுவதும் உள்ள கொள்ளை கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் அவனை பிடிப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவனை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் நாதுராம் ராஜஸ்தான் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவனை பிடிக்க வெளி மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாதுராமை பிடித்து விடுவோம். மோதல் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி மற்றும் குற்றவாளி நாதுராம் சுட்ட முனிசேகரின் துப்பாக்கி என 2 துப்பாக்கிகளும் தடயவியல் துறைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகே துப்பாக்கி சூட்டின் போது நடந்தது குறித்து தெரியவரும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 16, 2017 5:12 pm

அவன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 8:23 pm

SK wrote:அவன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1253469
அங்கு இந்த திருட்டு கும்பலுக்கு ஊரே சேர்ந்து உதவி உள்ளது
நன்றி
நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக