புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
56 Posts - 43%
heezulia
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
3 Posts - 2%
jairam
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
2 Posts - 2%
Poomagi
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
1 Post - 1%
சிவா
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
1 Post - 1%
Manimegala
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
16 Posts - 4%
prajai
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
7 Posts - 2%
jairam
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_m10முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Wed Dec 06, 2017 12:57 pm



முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி!

தடுப்பூசி என்றாலே அது குழந்தைகள் சமாச்சாரம் என்றே, பலரும் நினைக்கின்றனர். தடுப்பூசி அட்டவணையில்கூட, பத்து வயதுக்குள் போடப்பட வேண்டிய தடுப்பூசி விவரங்கள் மட்டுமே தரப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு, உங்கள் விருப்பத்தின்பேரில் போட்டுக்கொள்ளலாம் என்று, ஒரு தனிப் பிரிவில் சில தடுப்பூசிகளின் பெயர்கள் மட்டும் தரப்பட்டிருக்கும். நடைமுறையில், இளம் வயதினருக்கும் முதியவர்களுக்கும் பல தடுப்பூசிகள் இருக்கின்றன. இவற்றைப் போட்டுக்கொள்வது அவர்களின் உயிரையே காப்பாற்றும். ஆனால், இது தொடர்பான விழிப்புஉணர்வு மக்களிடம் மிகவும் குறைவாகவே உள்ளது.

முதுமையில் தடுப்பூசி ஏன் தேவை?
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் கிருமித்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றைத் தவிர்க்க, குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டியது அவசியம். குழந்தை வளர வளர, நோய் எதிர்ப்பு மண்டலமும் வளர்ச்சி பெற்றுவருவதால், அப்போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிடும். ஆனால், வயதாக ஆக இந்த எதிர்ப்புச் சக்தி குறைய ஆரம்பிக்கிறது. அதிலும், முதுமைப் பருவத்தில் இது மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றினால், உடல்நலம் பாதிப்பதுடன், உயிர் இழப்பும் ஏற்படலாம். முதியவர்கள் சில தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம், தீவிர நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.
முத்தடுப்பூசி:
இந்தியாவில் போலியோவை ஒழித்ததுபோல், டெட்டனஸ், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமலை இன்னமும் ஒழிக்க முடியவில்லை. எனவே, இவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு நாம் செய்யவேண்டியது, குழந்தைப் பருவத்தில் முத்தடுப்பு ஊசியைப் போட்டிருந்தாலும், பத்து வயதுக்கு மேலுள்ள இளம் வயதினரும் முதியவர்களும் மீண்டும் ஒருமுறை ‘டி.ஏ.டி.பி’ (Tadp) எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டிடி’ (Td) எனும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இப்படிப் போட்டுக்கொள்வதால், இரண்டுவித நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று, இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. அடுத்து, உடலில் லேசான காயம் ஏற்படும்போது, போடப்படுகிற ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம்இல்லை.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி:
பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது, கர்ப்பப்பைப் வாய் புற்றுநோய் (Uterine Cervical Cancer). இந்த நோயைத் தடுக்க, 10 வயது முடிந்த பெண்கள் ஹெச்பிவி (HPV vaccine) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தியாவில், இந்த வயதில் 10 சதவிகிதப் பெண்கள்கூட இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது இல்லை. 10 வயதில் போட்டுக்கொள்ளவில்லை எனில், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். முதலில், ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு அல்லது நான்கு மாதங்கள் இடைவெளியில், மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
நிமோனியா தடுப்பூசி:
முதுமையில் பெரும்பாலானோரைப் பாதிப்பது நிமோனியா. இது நுரையீரலைத் தாக்கும்போது, கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி எனப் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி, உயிர் இழப்பு வரை ்கொண்டுசெல்லும். இதைத் தவிர்க்க, ‘பிபிஎஸ்வி23 நிமோகாக்கல் தடுப்பூசி’யைப் (PPSV23 – Pneumococcal vaccine) போட்டுக்கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. காரணம், இவர்களுக்கு மற்றவர்களைவிட நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். ஐந்து வருடங்கள் இடைவெளியில், இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஃபுளு காய்ச்சல் தடுப்பூசி:
இன்ஃபுளுயென்சா வைரஸ் (Influenza virus) இந்த நோயை ஏற்படுத்துகிறது. இதற்கு வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். வட மாநிலங்களில் வசிப்போர், மே மாதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தடுப்பூசி போட்டு, ஒரு மாதத்துக்குப் பிறகுதான், இந்தக் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
சின்னம்மைத் தடுப்பூசி:
‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற சின்னம்மையைத் தடுக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணை போட்டுக்கொள்வது நல்லது. இதைப் போட்டுக்கொள்பவர்களுக்கு ‘அக்கி, அம்மை’ (Herpes zoster அல்லது Shingles) வருவதும் தடுக்கப்படும்.

மூன்று அம்மைத் தடுப்பூசி:
மணல்வாரி அம்மை, அம்மைக்கட்டு, ருபெல்லா எனும் மூன்று நோய்களைத் தடுக்கின்ற எம்எம்ஆர் (MMR Vaccine) தடுப்பூசியை, சிறு வயதில் போடாமல் விட்டிருந்தால், முதுமையில் போட்டுக்கொள்ளலாம். நான்கு முதல் எட்டு வாரங்கள் இடைவெளியில், இரண்டு தவணைகளாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
மஞ்சள்காமாலைத் தடுப்பூசிகள்:
உயிர்க்கொல்லி மஞ்சள் காமாலையைத் தடுக்கின்ற ‘ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி’யை, மொத்தம் மூன்று தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஊசியைப் போட்டுக்கொண்டு, முறையே ஒரு மாதம், ஆறு மாதங்கள் இடைவெளியில் மற்ற இரண்டு தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ‘ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசி’யை ஆறு மாதங்கள் இடைவெளியில், இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவை தவிர, டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி, மூளை உறை அழற்சிக் காய்ச்சல் மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளவது நல்லது.
முதுமையில் உடல் நலக்குறைவு ஏற்படுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது, பணச் செலவு, போன்றவை இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் தடுக்கப்படுகின்றன. மேலும், குடும்பத்தினருக்குத் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதும் தவிர்க்கப்படும்.

________________________________________
முதியோர் தடுப்பாற்றல் நிலவரம்
தேசிய குடும்ப ஆரோக்கியக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey) இந்தியாவில் குழந்தைப் பருவத்தில் போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் எல்லாவற்றையும், சரியாகவும் முறையாகவும் போட்டுக்கொள்கிறவர்கள் 100க்கு 42 பேர் மட்டுமே. மற்றவர்களில் பலர், ஒரு சில தடுப்பூசிகளை மட்டுமே போட்டுக் கொண்டவர்களாக உள்ளனர். இதனால், இவர்கள் தடுப்பூசிகளால் தடுக்கப்படும் பல நோய்களுக்கு, தடுப்பாற்றல் இல்லாதவர்களாகவே வளர்கிறார்கள். இவர்களுக்கு அந்தத் தொற்று நோய்கள் ஏற்படும்போது, அவற்றை மற்றவர்களுக்கும் பரப்பிவிடுகிறார்கள். இது தேசிய நலனுக்கு ஆபத்தைக் கொடுக்கும். எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை இளம் வயதிலும் முதுமையிலும் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
தடுப்பூசி ரகசியங்கள் – 25 தடுப்பூசி அட்டவணை

அந்தக் காலத்தில் குணப்படுத்த முடியாத கொடிய நோயான பெரியம்மை (Small pox), ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருந்தது. பெரியம்மை நோயை உண்டாக்கும் ‘வெரியோலா’ என்ற வைரஸை, தோலில் செலுத்தி, நோய்த் தடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் ‘இனாகுலேஷன்’ என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்புமுறை அப்போது பிரபலம். ஆனால், இதில் பல ஆபத்தான பக்கவிளைவுகளும் இருந்தன. எனவே, இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஜென்னர், பெரியம்மையைத் தடுக்கும் வைரஸைச் செலுத்துவதற்குப் பதிலாக, பசுக்களுக்கு அம்மை நோயை ஏற்படுத்துகிற ‘கௌ பாக்ஸ்’ வைரஸைச் செலுத்தி, புது மாதிரியான தடுப்பு முறையைக் கண்டுபிடித்தார். இந்த தடுப்பு முறைக்கு ‘வேக்சினேஷன்’ என்று பெயரிட்டார். உலக அளவில் முறையான தடுப்பு மருத்துவத்தின் தொடக்கம் இதுதான்.


1796-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெரியம்மைத் தடுப்பூசியின் பலனால், 1979-ம் ஆண்டு பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் அதன் பயன்பாட்டிலும் கிடைத்த முதல் வெற்றி இது. இதைத் தொடர்ந்து பல தரப்பட்ட நோய்களுக்குத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, தடுப்பூசிகளைப் பற்றிப் பேசும்போது 1979ம் ஆண்டையும், ‘தடுப்பு மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் எட்வர்ட் ஜென்னரையும் நினைவு கூராமல் இருக்க முடியாது.
தடுப்பூசிகளின் பலன்கள்
இன்றைய நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, மிகவும் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அவ்வளவாக இல்லாத தடுப்பூசிகள் இப்போது தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் பலனாக, போலியோ நோய் கூடியவிரைவில் உலகிலிருந்து விடைபெறப்போகிறது. தட்டம்மை, ருபெல்லா, பிளேக், காலரா போன்றவை கொள்ளை நோயாகப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால், 27 வகை நோய்களைத் தடுக்க முடிகிறது. இதனால், மக்களின் ஆயுட்காலமும் அதிகரித்து உள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக