புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
72 Posts - 46%
heezulia
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
5 Posts - 3%
prajai
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%
Jenila
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%
jairam
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
1 Post - 1%
M. Priya
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
9 Posts - 4%
prajai
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
6 Posts - 3%
Jenila
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
4 Posts - 2%
Rutu
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%
jairam
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_m10நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி?? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 11 Dec 2009 - 6:58

[You must be registered and logged in to see this image.]



“சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார் . பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் நான் முடிவெடுப்பேன் “


அப்படியா, சின்ன விஷயங்கள் என்றால், என்னென்ன?”


“எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும், மாதச் செலவுகள், இதெல்லாம் சின்ன விஷயங்கள். இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள். நான் ஒன்றுமே சொல்வதில்லை”


“அப்படியா, பெரிய விஷயங்களென்றால், என்னென்ன?”


“அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா, பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, இலங்கைப் பிரச்சசைக்கு என்ன செய்யவேண்டும், H1N1தடுப்பூசி போட வேண்டுமா? … என்பதெல்லாம் பெரிய விஷயங்கள். இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்”



[You must be registered and logged in to see this image.]



காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும் மனைவியும் வேலைக்கு ஓடும் யுகம் இது. நின்று பிரேக் பாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லை. இரவு உணவு பதினொரு மணிக்கோ பன்னிரண்டு மணிக்கோ ! ஒரு வகையில் இந்த பரபரப்பு தான் குடும்ப உறவுகளுக்கு எமனாய் வந்து முடிந்திருக்கிறது. முக்கால் வாசி நேரம் வீட்டுக்கு வெளியே வேலை. அப்பாடா என எப்போதாச்சும் நேரம் கிடைத்தால் டிவியில் உப்பு சப்பில்லாத ஏதோ ஒரு ஷோ. ஒரே வீட்டில் இருந்தாலும் மனம் விட்டுப் பேசி எவ்வளவு நாளாச்சு என கணக்குப் போட்டுப் பாருங்கள். அங்கே தான் இருக்கிறது குடும்ப வாழ்வின் சிக்கல்.



[You must be registered and logged in to see this image.]



கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப்படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ரினாடா பாரிஸ் எனும் குடும்ப ஆலோசகர்.

முதல் வகை தம்பதியினர் “அமைதி தம்பதியர்”. அமைதி என்றதும் உம்மணாமூச்சியாய் இருப்பார்கள் என நினைத்து விடாதீர்கள். நிறைய பேசுவார்கள். “கந்தசாமில விக்ரம் பிச்சு உதறிட்டாரு இல்ல ? நாலு நாளா வெயில் மண்டையைப் பொளக்குதுப்பா., அமெரிக்காவில இந்த நேரம் ஸ்னோ. என்னவோ தெரியல ஈரான் வேற அணுகுண்டு தயாரிக்கப் போவுதாம்.”





இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு பேசிக் கொள்வார்கள். ஆனால் தங்களைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள். சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். “என்ன சோகமா இருக்கே ஏதாவது பிரச்சினையா” என அக்கறையாய் விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும் “ஒண்ணுமில்லையே” ன்னு சொல்லி விட்டால் ஓகே என விட்டு விடுவார்கள். ஒரு வீட்டில் இருக்கிறார்களே தவிர இவர்கள் இரண்டு வாழ்க்கை வாழ்பவர்கள். இரயில் தண்டவாளங்கள் போல. வாழ்க்கை சந்தோசமாகத் தான் போகும். பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் என்ன ? ஆத்மார்த்த புரிதலோ அன்போ இருக்காது. வீட்டுக்கு போனா ஒரு துணை உண்டு என சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான்.



[You must be registered and logged in to see this image.]



“சண்டையைத் தவிர்க்கும்” தம்பதியர் இரண்டாவது வகை. “சரி விடும்மா .. நீ சொல்றது தான் சரி” என்பது இந்த வகை தம்பதியினரின் உரையாடல். நம்ம ஊர் கிராமத்து பெண்களை இந்த கூட்டத்தில் கன கட்சிதமாய் பொருத்தலாம். “தேவையில்லாம எதுக்கு சண்டை” என அடுத்தவர் சொல்வதை ஒத்துக் கொள்வது. இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் சைலண்டாகி விடுவது. இது தான் இவர்களுடைய வழக்கம். அன்னியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள் திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலண்டாகிவிடுவார்.



“எப்போதும் சண்டை” மூன்றாவது வகை தம்பதியர். “ சாப்பாட்டுல ஏதோ குறையுதே ..” என்று எதார்த்தமாய்ச் சொன்னாலே “ ஆமா உங்க அம்மா சமைச்சா மட்டும் தான் உங்களுக்குப் புடிக்கும்” என்பது இந்த ரகம். அடுத்தவர் செய்வதிலுள்ள குற்றத்தை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பது இங்கே சகஜம். இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். பெரும்பாலும் உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். இந்த தம்பதியரிர் நிம்மதியின்றி பெரும்பாலும் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.



“நட்புத் தம்பதியர்” நான்காவது வகையினர். நல்ல நட்புடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷுவல் கப்பிள் என்று சொல்லலாம். தாம்பத்ய நெருக்கம் இருக்காது. வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது. இவர்கள் பேச்சில் குறை வைக்க மாட்டார்கள். ஒபாமாவின் ஹெல்த் பிளான் முதல் ஒசாமாவின் அட்டாக் பிளான் வரை பேசுவார்கள். அலுவலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசுவார்கள். ஆனால் ஒரு அழுத்தமான குடும்ப உறவு அவர்களுக்கிடையே இருக்காது.



[You must be registered and logged in to see this image.]



“நெருக்கமான தம்பதியர்” ஐந்தாவது வகை. “இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்” என்பது வரை வெளிப்படையாய் பேசுவார்கள். எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். ஆனாலும் ஆழமான குடும்ப உறவும் புரிதலும் இருக்கும். இப்படி வாழ்வது வெகு கடினம். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும் தான் இதில் ஹைலைட். ரொம்ப ரொம்ப கொஞ்சம் தம்பதியர் தான் இந்த நிலையில் வருவார்கள். உண்மையில் பல தம்பதியர் இதை விரும்புவதே இல்லை.

கணவன் மனைவியரிடையே மனம் விட்டு பேசிக்கிற பழக்கம் இருந்தா போதும், மத்ததெல்லாம் தானா அமைந்து விடும். உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம் மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்பது. தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நினைச்சீங்கன்னா, நோ யூஸ்.







அதேமாதிரி கொஞ்சம் பொறுமை வேணும். பேசறவங்களைப் பேச விடணும். முழுதாகப் பேசி முடிக்கும் முன் “முடிவு சொல்கிறேன் பேர்வழி” என குதிக்கக் கூடாது. கிளைமேக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா. உரையாடலை முழுமையாய் கேளுங்கள், பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.



நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இன்னொரு தடவை கேக்கிறதிலும் தப்பில்லை. ஈகோவை தூக்கி தூர எறியுங்கள். கோ…கோ.. ஈகோ ன்னு சொல்லுங்க. தோல்விகள் கூட காதலில் வெற்றிகளே என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்.

அடிக்கடி பேசுங்கள். சும்மா ஹாய், பை பேச்சுகளெல்லாம் குடும்ப வாழ்க்கைல உதவாது. தினமும் பேசுங்கள். மனம் விட்டு பேசும் தம்பதிகள் டைவர்ஸ் கேட்டு ஓட மாட்டாங்க.



ஒரு முக்கியமான விஷயம். பேசறதுக்கு முன்னாடி நிலைமையை கொஞ்சம் பாத்துக்கோங்க. பார்ட்டி டென்ஷனாய் இருந்தால் கொஞ்சம் அமைதியா போறது உசிதம். எதேச்சையா சொல்ற சமாச்சாரம் கூட குத்தலா தோணும். மௌனம் கூட உணர்வுகளின் உரையாடல் தான்.



“கல்யாணம் ஆன புதுசில அடிக்கடி வெளியே போவோம்.. இப்பல்லாம் எங்க …” என்கின்ற நிலமை வரக் கூடாதுங்க ! அப்பப்போ வெளியே போயிட்டு வாங்க. பழைய சமாச்சாரங்களை சுவாரஸ்யமா பேசுங்க. காதல் வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும்.



இன்னொரு விஷயம். உங்களுக்குள்ளே பேசிட்டிருக்கும்போ தேவையில்லாம மூன்றாவது நபரை குத்தம் சொல்லாதீங்க. அது சுத்திச் சுத்தி பிரச்சினையில கொண்டு விடும். வேலில போறதை எதுக்கு… வேணாம் விட்டுடுங்க.



கணவன் மனைவிக்கு கொஞ்சம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம் தப்பில்லை. குறிப்பா சில நம்பிக்கைகள் உங்க துணைக்கு இருக்கலாம். சாமி போட்டோல முழிக்கிறது மாதிரி. அதை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணாதீங்க.



உரையாடல் எப்பவும் ஸ்மூத்தா இருக்காது. ஏதாச்சும் பிராப்ளம் இருந்தா திறந்த மனதோட யோசிங்க. “நீ சொல்றது தான் தப்புன்னு” சட்டுன்னு குற்றம் சுமத்தாதீங்க. குற்றங்கறது அனுமர் வால் போல நீண்டுகிட்டே இருக்கும் !

பேசும்போ மனசார உண்மையைப் பேசுங்க. நீங்க பேசறது பொய்யின்னு தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க, அப்புறம் எப்பவுமே உரையாடல் ஹெல்தியா இருக்காது.



திடீர் திடீர்ன்னு கொஞ்சம் சர்ப்ரைஸ் குடுங்க. சின்னச் சின்ன பரிசுகள், சின்னச் சின்ன வாழ்த்துகள், சின்னச் சின்ன பாராட்டுகள் இவையெல்லாம் ரொம்ப முக்கியம். அதேமாதிரி என்ன முடிவு எடுத்தாலும் இரண்டு பேருமாப் பேசி முடிவெடுங்க.



உங்க ஆளு பேசறதை கவனிங்க. சிம்பிளா கேட்டுட்டு போயிடாதீங்க. நிறைய பேரு பேசறதைக் கேட்பாங்க. ஆனா கவனிக்க மாட்டாங்க. அதென்ன வித்தியாசம் ?



வீட்டுக்குள்ள கிரைண்டர் ஓடுது. அந்த சத்தத்தை நாம கேட்கிறோம் ஆனா, கவனிக்கிறதில்லை. ஆனா நம்ம பார்ட்னர் பேசறதை நாம கவனிக்கணும். என்ன சொல்கிறார் ? என்ன மனநிலையில் சொல்கிறார் ? என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் ? என்பதெல்லாம் கவனிச்சா தான் புரியும். உங்க வாழ்க்கைத் துணையை எந்த அளவுக்கு நேசிக்கிறீங்க என்பதை இந்த கவனிப்பு காட்டிக் கொடுக்கும் ! அதிகம் கவனித்தால், அதிகம் நெருக்கமாயிடுவீங்க. குடும்ப வாழ்க்கை வலுவடையும். அடுத்தவரைப் பாராட்டும் மனநிலை உருவாகும்.

இதையெல்லாம் மனசுல வெச்சிருந்தா இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்துலயும் உங்க குடும்ப வாழ்க்கையை யாரும் அசைக்க முடியாது.



[You must be registered and logged in to see this image.]

நன்றி : அவள் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக