புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
20 Posts - 3%
prajai
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_m10மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Nov 30, 2017 4:18 pm

‘மஞ்சள் காமாலைக்கு நாட்டுமருந்துதான் பெஸ்ட். அலோபதியில் மருந்தே இல்லையாம்’ என, பத்தியச் சாப்பாட்டையும் கீழாநெல்லியையும் எடுத்துக்கொள்பவர்கள்தான் பெரும்பாலானோர். ஆங்கில மருத்துவம் மஞ்சள் காமாலையை ஒரு நோயாகவே கருதுவது இல்லை, ‘நோயின் அறிகுறி’ என்கிறது. எதன் காரணமாக மஞ்சள் காமாலை வருகிறது எனக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுப்பதன் மூலம், மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த முடியும்.

மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதே. இதற்கு முக்கியமாக ஏழு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன, மஞ்சள் காமாலையிலிருந்து எப்படி விடுபட, வராமல் தடுப்பது எப்படி…

பிளிருபின் (Bilirubin)

நம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் சுமார் 120 நாட்கள். அதன் ஆயுள் முடியும்போது மண்ணீரலில் சிதைக்கப்படும். அப்போது சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீமில் உள்ள இரும்புச் சத்து உடலுக்குள்ளே மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள கழிவு (பிளிருபின்)வெளியேற வேண்டும்.

மண்ணீரலில் இருந்து இந்த பிளிருபின் கல்லீரலுக்கு செல்லும். இந்த பிளிருபின் நீரில் கரையாத தன்மையில் (Unconjugated/ Indirect) இருக்கும். இதை கல்லீரல் உள்வாங்கி, கரையும் (Conjugated) தன்மையுள்ளதாக மாற்றி, பித்தநீர் வழியாக பித்தப்பையில் சேகரிக்கும். உணவு செரிமானத்தின்போது, பித்தப்பையில் இருந்து, பித்தநீரோடு பிளிருபின் சிறுகுடல் வழியாக வெளியே சென்றுவிடும்.

பிளிருபின் ஓர் கழிவு மட்டுமே என்பதால், அது மலம் வழியாக வெளியேறும். சிறிதளவு பிளிருபின் உறிஞ்சப்பட்டு மறுசுழற்சியில் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்.

பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது , அது நம் உடலில் தேங்கிவிடும், பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், நம் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது..

சுகாதாரச் சீர்கேடு

சுகாதாரமற்ற உணவுகளைச் உட்கொள்ளும்போது, ஹெபடைட்டிஸ் ஏ, இ போன்ற வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.

ஃபீகல் (Fecal) ஓரல் வைரஸ் மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பரவும். ஒருவர் மலம் கழித்துவிட்டு, கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக இந்த வைரஸ் பரவும்.

பொதுவாக, சுகாதாரமற்ற இடத்தில் சாப்பிடுபவர்களுக்கு இந்த வகை மஞ்சள் காமாலை வரும் வாய்ப்பு அதிகம்.

ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது. ஹெபடைட்டிஸ் இ-க்கு தடுப்பூசி இல்லை.

ஹெபடைட்டிஸ் ஏ, இ வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை வருபவர்களுக்கு, பசி குறையும், உணவைப் பார்த்தாலே வெறுப்பு ஏற்பட்டு, குமட்டல் வரும். கண்கள் மஞ்சளாக இருக்கும், சிறுநீர் மஞ்சளாகப் பிரியும், ரத்தப் பரிசோதனை செய்தால் எந்த வைரஸ் தொற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

சூடு வைப்பது, பச்சிலைவைத்துக் கட்டுவது போன்றவற்றால் நோய் சரியாகிவிடும் எனும் தவறான நம்பிக்கைகள் உள்ளன. இதனால், நோயின் வீரியம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதே தவிர, குணமாகாது.

மஞ்சள் காமாலை நான்கைந்து நாட்கள் முதல் ஓரிரு வாரம் உடலில் இருந்துவிட்டு பின்னர் போய்விடும். இவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் போதும், குணமாகிவிடும்.

ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ்

ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் ரத்தம் மூலமாகப் பரவும். சுகாதாரமற்ற ஊசிகளைக்கொண்டு பச்சை குத்துதல், காதுகுத்துதல், ஒருவர் பயன்படுத்திய ஊசி, பிரஷ், ஷேவிங் பிளேடு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவும்.ஹெபடைட்டிஸ் பி-யைத் தடுக்க இப்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், சி வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை நவீன உயர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

மருந்து

நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து என அனைத்தும் செரிமானம் ஆகி, கிரகிக்கப்பட்டு கல்லீரலுக்குத்தான் செல்லும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமையாக இருக்கும்.

சாதாரணமாக, சளிக்குச் சாப்பிடும் மருந்துகள் முதல் உயர் சிகிச்சை மருந்துகள், உணவுகள், மூலிகைகள் என எதன் காரணமாக வேண்டுமானாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்படலாம். புதிதாய் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்ட பின்னர், மஞ்சள் காமாலை வந்தால், எந்த உணவு அல்லது மருந்து என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்தினாலே, மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.

குறிப்பிட்ட மருந்து சாப்பிட்டே ஆகவேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்தை மாற்றிக்கொள்ளலாம்.

ஆல்கஹால்

மதுவின் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரியாது. கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே தெரியும். கல்லீரல் சுருக்க நோய் வந்த பின்னர் பிளிருபின் சரியாக வெளியேற்றப்படாமல் மஞ்சள் காமாலை வந்தால், காப்பாற்றுவது கடினம். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தீர்வு என்றாலும்கூட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான செலவு, அதன்பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் பக்கவிளைவு மிக அதிகம். எனவே, மதுவை அறவே நிறுத்துவதுதான் ஒரே சிறந்த தீர்வு.

கில்பர்ட் சிண்ட்ரோம்

வீடுகளில் குப்பையைத் தினந்தோறும் அகற்றிவிடுவோம். ஒரு சிலர், நான்கைந்து நாட்கள் சேர்த்துவைத்து, பின்னர் வெளியேற்றுவார்கள். அதுபோல வெகுசிலருக்கு கல்லீரல் சோம்பலாகச் செயல்படுவதைத்தான் ‘கில்பர்ட் சிண்ட்ரோம்’ என்கிறோம். நம் நாட்டில் ஆண்களில் 100-ல் 3 பேருக்கும், பெண்களில் இரண்டு பேருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களுக்கு ரத்தத்தில் பிளிருபின் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், கல்லீரல் பரிசோதனை செய்யும்போது கரையும் பிளிருபின் வகை குறைவாகவும், கரையாத பிளிருபின் வகை அதிகமாகவும் இருக்கும்.

சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும் மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.

கில்பர்ட் சிண்ட்ரோம் இருப்பின் மஞ்சள் காமாலையால் உடல் பாதிக்கப்படுமோ என அஞ்ச வேண்டாம். இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் தேவைப்படாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பித்தக்குழாய் அடைப்பு (Obstructive Jaundice)

பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிலநேரம் உருண்டு இறங்கி பித்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தினால், மஞ்சள் காமாலை ஏற்படும்.இவர்களுக்குக் குளிர் காய்ச்சல் வரும், வாந்தி வரும், வயிறு வலிக்கும். ரத்தத்தில் பிளிருபின் அளவு மிக அதிகமாக இருக்கும். சிறப்பு எண்டோஸ்கோப்பி (E.R.C.P) சிகிச்சை மூலம் பித்தக்குழாயில் இருக்கும் கற்களை அகற்றினால், மஞ்சள் காமாலை மறைந்துவிடும்.

பித்தக்குழாய் சிறுகுடலில் சேரும் இடத்தில் கணையம் இருக்கிறது. கணையத்தின் தலைப்பகுதியில் அழற்சி, கட்டிகள் உருவானாலும் பித்தக்குழாயில் இருந்து பிளிருபின் வெளியேற்றம் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரும்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது, உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். உடனடியாகக் கல்லீரல் பரிசோதனை செய்து கணைய நோயைக் கவனித்து, பித்த நாளத்தை பைபாஸ் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

அதீத சிவப்பணு அழிவு (Increased Hemolysis)

ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட அளவு சிவப்பணுக்கள் மட்டுமே உடைய வேண்டும். மாறாக, அளவுக்கு மீறி சிவப்பணுக்கள் உடைந்தால், ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகரித்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரக்கூடும். இந்த பிளிருபின் கரையாத வகையாகும். ரத்த சோகை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை கொடுத்தால் தானாகவே மஞ்சள் காமாலை போய்விடும்.

இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis) உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

என்ன பரிசோதனை?

சிலர், பிளிருபின் பரிசோதனை மட்டும் செய்துகொண்டு சுய சிகிச்சை எடுக்கிறார்கள். இது தவறு. கல்லீரல் செயல்பாட்டுக்கான முழுப் பரிசோதனை (LFT) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும்போது, கல்லீரல் முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதனால், பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

மஞ்சள் காமாலை வந்தால் மரணமா?

மஞ்சள் காமாலை வந்தால் மரணம்தான் என முடிவுகட்ட வேண்டியது இல்லை. எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால், கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை, முறையான பரிசோதனை, முழுமையான சிகிச்சை இவை மூன்றும் இருந்தால், மஞ்சள் காமாலை நோயை விரட்ட முடியும்.

அறிகுறிகள்

மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது. கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா. பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

கண்ணில் மஞ்சள் காமாலை வந்திருப்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவரை இயற்கை வெளிச்சத்தில் வைத்துப் பரிசோதிப்பதே சிறந்த முறை. செயற்கை விளக்கொளியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படும்.

நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும். பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.

பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.

மஞ்சள் காமாலையைத் தடுக்க ஈஸி டிப்ஸ்

மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.

சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.

கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.

கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.

நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.

நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய பிரஷ், ஷேவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஊசியையே பயன்படுத்த வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக