புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_m10இந்த ‘நெல்’ பெருகும்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ‘நெல்’ பெருகும்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:48 pm

இந்த ‘நெல்’ பெருகும்!  PblMHTHQIaBfjRdkKXlr+25CHVANNelKrishnamurthyjpg


“நிலத்துக்கு உயிர் இருக்கு. அது மூச்சு விடணும். ஆனால், அதை மூச்சு விடச் செய்யாம, தொடர்ந்து மூன்று போகமும் தண்ணீரைக் கட்டி, நெல்லு நட்டுக்கிட்டே இருக்கோம். அப்புறம் எப்படி நிலம் உயிரோடு இருக்கும்?” என்று தான் செல்லும் இடமெல்லாம் சொல்லி வந்த ஐயா ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி, கடந்த 15-ம் தேதி இயற்கையுடன் கலந்தார். அவரைப் பற்றி, அவரது சகோதரர் புருஷோத்தமன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:


எங்களது குடும்பம் கூட்டுக் குடும்பம். காலம் காலமாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம். ஆரம்பத்தில் எங்கள் தந்தை மட்டுமே விவசாயத்தைக் கவனித்துவந்தார். அவருக்குத் துணையாக எனது அண்ணன்கள் இருவரும் இருந்தனர். எனது தந்தை குதிரைவால் சம்பா, ஐ.ஆர். 20, பொன்மணி, கார் அரிசி, சென் (மோட்டா ரகம்) போன்ற நெல் ரகங்களைப் பயிர் செய்துவந்தார்.

எங்கள் உணவுக்குக் குதிரைவால் சம்பா மற்றும் ஐ.ஆர். 20 ரக நெல்லையே பயன்படுத்தினோம். குதிரைவால் சம்பாவைச் சாதத்துக்கும், ஐ.ஆர்.20 ரகத்தைப் பலகாரத்துக்கும் பயன்படுத்தினோம். அன்றைய நாட்களில் நாங்கள் பயிர் செய்த எந்த ஒன்றுக்கும் பூச்சிக்கொல்லியைத் தெளித்ததில்லை. கொஞ்சம் செயற்கை உரம் மட்டும் இடுவோம்.
விவசாயமே வேலை

அப்பாவின் காலத்துக்குப் பிறகு, அண்ணன் நெல் கிருஷ்ணமூர்த்தி, மிக நுணுக்கமான முறையில் விவசாயத்தைச் செய்ய முயன்றார். ஆனால், எங்களின் இன்னொரு அண்ணனுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவருக்கு செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாத விவசாயத்தின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. எனவே, இரண்டு அண்ணன்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெரிய அண்ணன் விவசாயத்திலிருந்து விலகினார்.

1971-ம் ஆண்டு பி.யூ.சி. முடித்த கிருஷ்ணமூர்த்தி, பின்னர் தட்டச்சு கற்றுக்கொண்டார். அவருடன் படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்குச் சென்ற நிலையில், இவர் விவசாயம் பார்க்கவந்தார். அதனால் ஏளனம், அவமானத்தை எதிர்கொண்டார்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:51 pm

இந்த ‘நெல்’ பெருகும்!  LTuVo4dDSvC4iLcpclie+25chnvknel3jpg
நம்மாழ்வார் அறிமுகம்

இப்படிப் போய்க்கொண்டிருந்த அவர் வாழ்க்கையில், 2007-ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஆண்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாகூருக்கு வந்தார். அவரது உரையைக் கேட்பதற்கு கிருஷ்ணமூர்த்தியை அவரது நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றார்.

அந்தக் கூட்டத்துக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து அவரின் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தார். பின்னர், நம்மாழ்வார் நடத்திவந்த ‘வானக’த்துக்குச் சென்று பயிற்சி பெற்றும், இயற்கை வேளாண்மை செய்யும் பலரின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்றும் தனது பட்டறிவை வளர்த்துக்கொண்டார்.

குடும்பத்துக்கும் பயிற்சி

2008-ம் ஆண்டு முதல் தான் பெற்ற அனுபவங்களைக்கொண்டு, முழு வீச்சில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கினார். எங்கள் நிலத்தில் நெல் ரகங்கள் நன்றாக விளையும் என்பதால், முதலில் மாப்பிள்ளை சம்பா நெல்லை இயற்கை வேளாண் முறையில் வளர்த்துப் பார்த்தார். அது மிக அழகாக, உயரமாக வளர்ந்து, சாயாமல் நின்று நல்ல விளைச்சலைத் தந்தது.

சாகுபடியான நெல், விதை நெல் ஆகியவற்றை அண்ணன் விற்க முயன்றபோது, அவருக்கு நெல் ஜெயராமன் போன்றோரின் நட்பு கிடைத்தது. அவர் மூலம், மேலும் சில இயற்கை விவசாயிகளின் தொடர்புகள் அவருக்குக் கிடைத்தன. அவர்கள் ஒருவருக்கு மற்றொருவர், விதைகளைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர். நாட்கள் செல்லச் செல்ல, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்காகவும் கிருஷ்ணமூர்த்தி உழைக்க ஆரம்பித்தார். ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி என்கிற அடைமொழி அப்படித்தான் அவருக்கு வந்தது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:52 pm

இந்த ‘நெல்’ பெருகும்!  RtNCPcKpTdqdjCpoK0sD+25chnvknel1jpg
இயற்கை வேளாண்மையை நாங்களும் ஏற்க வேண்டும் என்பதற்காக, வீட்டில் உள்ளவர்களை எல்லாம் நம்மாழ்வாரின் பயிற்சிக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். குடும்பத்தை நிலத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சியும் அளிப்பார். அந்தப் பயிற்சி முகாம்களுக்குச் சென்ற நானும் இப்போது அண்ணனின் வழியைப் பின்பற்றிவருகிறேன்.

பயின்றார்… பயிற்றுவித்தார்…

இவ்வாறு அவரது பயணம் தொடர்ந்தது. அரசு நடத்தும் விவசாயக் கருத்தரங்கங்கள், கண்காட்சிகள், இயற்கை வேளாண் அமைப்புகள் நடத்தும் நெல் திருவிழாக்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்வார் கிருஷ்ணமூர்த்தி. அதனால் அவரது தொடர்புகளும் அனுபவங்களும் மேலும் விசாலமடைந்தன. ஒரு கட்டத்துக்குப் பிறகு, இதர விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிலைக்கு அவர் வளர்ந்தார்.

இந்த விஷயங்களை எல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், இயற்கை வேளாண்மை செய்ய அவர் முற்பட்டபோது, நிலத்தைப் பண்படுத்த அவர் படாதபாடு பட்டார். முதல் முறை நல்ல விளைச்சல் வந்தால், அடுத்த முறை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. அதற்கு அடுத்த முறை, மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப் போகும். அப்போது நஷ்டப்படுவார். இப்படி பல்வேறு இக்கட்டுகளைத் தாண்டி, இயற்கையுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டே இருந்தார்.
இயற்கை வேளாண்மையின் மீதிருந்த தீவிர நம்பிக்கையால், அவரால் தொடர்ந்து வெற்றி பெற முடிந்தது. அந்த நம்பிக்கை, இன்றைக்கு இயற்கை வேளாண்மை செய்யத் தொடங்கும் அனைவருக்கும் வரவேண்டும் என்பதுதான் அவரின் விருப்பமும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக